FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, November 7, 2014

எனக்கு பிடித்த ஒரு சின்ன கற்பனை.....

ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.
பரிசு என்னவென்றால் -
ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.
3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.
இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்
இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?
உண்மையில் இது ஆட்டமில்லை 

- நிதர்சனமான உண்மை

ஆம்

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை. அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம். 
ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் 
போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 
86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை. அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான். நேற்றைய பொழுது போனது போனது தான். ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள். எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா? 
இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் 
ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க 
மாட்டோமா?
காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும். 
எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் 
சந்தோஷமாக இருங்கள்
சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்...... 

வாய்ப்புகள் மட்டுமே வாழ்க்கையை வளமாக்குவதில்லை,

வாய்ப்புகள் மட்டுமே வாழ்க்கையை வளமாக்குவதில்லை, அதற்க்கேற்ப்ப மாறத்தயாராக இருந்தால் மட்டுமே,.......அப்போதும்  வாய்ப்புகள்- வளமான வாழ்க்கைக்குரிய வழியைமட்டுமே காட்டும். http://youtu.be/uyNrqgjBaQQ

" வெளிநாட்டு மதங்கள எவ்வள்வு தொகை கொடுத்தாலும் மாறத்தயாராக இல்லை!!! " http://youtu.be/OiAD_5iGSOA
ஏட்டில் எழுதிவைத்தேன் எழுதியதை சொல்லிவைத்தேன்- "உலகளவில், பல எழுத்தாளர்களின் நிலை இன்னமும் வறுமைக்கோட்டின் கீழ்தான் உள்ளது - தினகரன் வசந்தம்"  

வாசகர்கள் அதிகரித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்..... வாழ்க வாசகர் மன்றங்கள், வாசகர் வட்டங்கள், வாசகர் பேரவைகள் ....http://youtu.be/arPkgsUyjR0 

"எனது மே- தின வானொலி தொகுப்பிலிருந்து ஒரு பகுதி"

"எனது மே- தின வானொலி தொகுப்பிலிருந்து ஒரு பகுதி" ஹெர்குலஸ்  என்பவர், கிரேக்க கதைகளில் வரும்,நம்ம ஊர் பீமன் மாதிரி. மிகுந்த பலசாலி. இவர் ஒரு முறை உலகத்தின் கோடிக்கு யாத்திரை செல்கிறார்.அப்போது அட்லஸ் என்பவர் தான், உலகத்தை தன் தோளில் சுமந்து கொண்டிருந்ததாய் புராணம். ரொம்ப நாளா தூக்கி வச்சிருந்ததாலே,அவருக்கு தோள் நோவு கண்டுடுச்சு. இந்த சுமையை தூக்க கூடிய ஆள் யாரும், அந்த நாளிலே இல்லை. ஹெர்குலசை பார்த்தவுடன், அட்லஸ் ரொம்ப சந்தோஷப் பட்டார்.கிட்ட வந்தவுடன் "அப்பா என் சுமையை கொஞ்சம் தாங்கிக்கோ", இயற்கை உபாதையை முடிச்சிட்டு வர்றேன்னார். ஹெர்குலஸ் உலகத்தை தூக்கிக் கொள்ள அட்லஸ் "ஜூட்", விட்டார். அட்லாசின் நோக்கம் விளங்கிக் கொண்ட ஹெர்குலஸ், "அண்ணே, ஒரு நிமிடம், "இங்கே வாங்க" அப்படின்னு கூப்பிட்டார். "என்ன ?" என்று, எட்டியே நின்று கேட்ட அட்லாசிடம், "முண்டாசை சரியாகக் கட்டிகிட்டேன்னா, எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் என்னாலே தூக்க முடியும், நீங்க பொறுமையா திரும்பி வரலாம்", இன்னு சொல்ல, அட்லசும் உடனே, உலகத்தை மீண்டும் தோளில் சுமக்க. ஹெர்குலஸ் "எஸ்கேப்", ஆயிட்டார்.

எதுக்கு இந்த கதையின்னா "உலகத்தில் யாரும் சுமையை தூக்க விரும்பறதில்லே. எப்போடா இறக்கி வைப்போம்", என்பது தான் யதார்த்தம். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கோ, முதலாளிக்கோ வேலைப் பளுக்கள், நிறைய பொறுப்புகள். இந்த பொறுப்புகளை எடுத்துக் கொள்ள, நாம் தயாரானால், குறிப்பு அறிந்து முன் கூட்டியே செயல்பட்டால்,உங்கள் முன்னேற்றத்தின் எல்லாப் படிகளிலும் உறு துணையாய் இருப்பார்", ஆகவே சுமை தாங்கியாக நீங்கள் ஒருவருடைய பளுவை பகிர்ந்தால்,அவர் மற்ற வேலைகளை முடிக்க, அவருக்கு அவகாசம் கிடைக்கும் அதன்மூலம் நீங்களும் பயன்பெறலாம். அதோடு 
"நாணயம், நம்பிக்கை இரண்டையும் பயன் படுத்தி இன்னமும் முன்னேறலாம்", "சுமைதாங்கி சாய்ந்தால்..."  http://youtu.be/NqIwYf-gbV8

நீ ஆஸ்திகனா? அல்லது நாஸ்திகனா?

நீ ஆஸ்திகனா? அல்லது நாஸ்திகனா? என்று கேட்டால், என்ன சொல்வது?  "கடவுள் என்ற ஒன்றை நாம் நம் அனுபவத்தில் உணர்கிறோமோ  அல்லது நேரடியாக உணர்கிறோமோ அன்றுதானே நாம் உண்மையில் நம்மை ஆஸ்திகர் என்று சொல்லிக்கொள்ள முடியும். அதுவரையில் நாத்திகம்தானே" சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதானே உண்மை. 

"திருநின்றவூரில் சிவ பக்தர் "பூசலார் நாயனார்". 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் கி.பி. 7–ம் நூற்றாண்டில் ஈசனுக்கு தன் இருதயத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ததுபற்றிய, பல்லவ மன்னன் ராச நரசிம்மர் காலத்து குறிப்புகள் நினைவிற்கு  வருகிறது" 

சந்திராஷ்டம தோஷம் நீங்க வேண்டுமானால் சங்கடஹர சதுர்த்தி அன்று .....

நம்பிக்கை துரோகம், மற்றும், ஜீவராசிகளுக்கும்,மனித நேயத்திற்கும் தீங்கு விளைவிப்பவர்கள் அவர்களின் அடுத்த பிறவியின் ஜனன ஜாதகத்தில் சந்திராஷ்டம தோஷம் இருக்கும் ( அதாலால் அவர்களின் பிறந்த நட்சத்திரப்படி சந்திராஷ்டம  நாட்களில் படாத பாடு படும்படி நேரும்) சந்திராஷ்டம தோஷம் நீங்க வேண்டுமானால் சங்கடஹர சதுர்த்தி அன்று ஸ்ரீ கணேஷ்- பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகச்சிறந்த வழியாகும். ஸ்ரீ கணேஷ் என்றாலே சந்திரனுக்கு பயமாம், ஆகவே அவரின் பெயரைக்கேட்டமாத்திரத்திலேயே மறைந்துகொண்டு தலை மறைவாக இருப்பாராம். அறிவியல் முறைப்படி  சூரியனிலிருந்து சந்திரன் விலகிநிற்கும் எட்டாம் ராசிமானத்தில் (216*-228*) பாகை அளவில்தான் சங்கடஹர சதுர்த்தி வரும்.  இந்த காலம் சந்திராஷ்டமன காலத்தின் முடுவு காலமாகும். இந்த  பாகைக்குப்பின் சந்திரன் தேய் பிறையாகவும் மறைவு நிலையிலும் இருக்கும்.  

உத்தி + யோகம் = உத்யோகம். [Strategy + Yogam =Profession....The Yogam is not Luck and it is your Performance]

குறிப்பு :- இது நான் எழுதிய, எனது வானொலி நிகழ்ச்சியிலிருந்து ஒரு பகுதி "உத்தி  + யோகம் = உத்யோகம்". ["Strategy + Yogam =Profession"....The Yogam is not Luck and it is your Performance]   (தூய தமிழில் "புரிந்துணர்வு செயல்திறன் + கைவசமாவது") இங்கு யோகம் என்பது அதிர்ஷ்டம் அல்ல அது "கர்ம வினை" அல்லது, சாமர்த்தியம் அல்லது, சாதுர்யம்.... அதாவது சாமர்த்தியமாக சம்பாதிப்பது..... அட கர்மமே !!! என கூறுவது,.. அட யோகமே!! என்பதுதான் சரியான பொருள் ... கர்மம் என்றால் செய்யும் செயல்கள்... நாம் செய்யும் செயல்கள்தான் யோகமாக நம்மை வந்தடைகிறது அது நல்ல யோகமா அல்லது கேட்ட யோகமா என்பது நாம் செய்யும் செயல்களைப்பொருத்து அமைகிறது. 

" நீ எதை தூக்கியெரிகிராயொ  அது திரும்ப உன்னிடம் வந்தடையும் - மகாபாரதம்" 

ஒரு தந்தையும் அவனது பத்து வயது மகனும் காட்டுப் பாதை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தனர்.
மகனுக்குத் திடீரெனக் காலில் ஏதோ குத்தியது. வலி பொறுக்க முடியாமல் "ஆ" என்று கத்தினான். காட்டிலிருந்து இன்னொரு "ஆ" என்று திரும்பக் கத்தியது. கோபங்கொண்ட அவன் "நீ யார்?" என்று குரல் கொடுத்தான். "நீ யார்?" சுவரில் எறிந்த பந்தாக அது திருப்பி வந்தது. "நீ ஒரு முட்டாள்" என்றான். அதே வாசகம் திரும்ப வந்தது.
வருத்தமுற்ற அவன் தந்தையிடம் கேட்டான். "இங்கே என்ன நடக்கிறது அப்பா?"
"பேசாமல் என்னைக் கவனி பின்பு புரியும்" என்று மெதுவாகச் சொன்ன தந்தை
"நீ ரொம்ப நல்லவன்" நன்றாகக் கத்தியபடி சொன்னார்.
"நீ ரொம்ப நல்லவன்" எனப் பதில் வந்தது.
"நீ அழகாக இருக்கிறாய்" அதே வார்த்தைகள் திரும்பக் கிடைத்தன.
தந்தை மெதுவான குரலில் அவனிடம் பேச ஆரம்பித்தார்.
"உலகில் எல்லோரும் இதை எதிரொலி எனக் கூறுவார்கள். ஆனால் நான் சொல்வேன், இது தான் வாழ்க்கை என்று."
"வாழ்வின் உண்மையான தத்துவம் என்ன என்பது உனக்குச் சொல்லட்டுமா?" என்றவர் தொடர்ந்தார்.
"நீ எதைக் கொடுக்கிறாயோ அதுவே உனக்குத் திரும்பக் கிடைக்கும். மதிப்பைக் கொடு. மதிப்பு திரும்பக் கிடைக்கும். நன்கு புரிதலைக் கொடு, அது அப்படியே கிடைக்கும். "மாறாக வெறுப்பை உமிழ்ந்தால் வெறுப்பு உனக்குத் திரும்ப வரும். கசப்பைக் காட்டினால் அதுவே உன்னை வந்தடையும்."
எனவே எதை அடுத்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறாயோ அதையே அடுத்தவர்களுக்குக் கொடு. அது உனக்கு அப்படியே கிடைக்கும். நல்லதையே கொடு அல்லாததை ஒரு போதும் அளிக்காதே" என்றார்.
"நன்றி அப்பா! நல்ல பாடத்தைக் கற்றேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.
"ஆ ஜாலி" என்று கத்தினான். "ஆ ஜாலி" என்றது குரல்.
நமது வாழ்வு என்பது தற்செயலாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல. அது நமது செய்கைகளின் அப்பட்டமான பிரதிபலிப்பு.
நாம் எதைக் கொடுக்கிறோமோ அதுவே நம்மை வந்து அடையும். நமது வாழ்வின் ஒவ்வொரு கோணத்திலும் இது பொருந்தும்.
அதுவே வாழ்வின் தத்துவம். ....நன்றிகளுடன் கோகி. 

அன்னையர்த்தினத்தன்று எனது சர்வதேச பண்பலை மற்றும் இனைய வழி வானொலி நிகழ்ச்சி ஒன்றை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.


எனது நிகழ்ச்சி தயாரிப்பில் பல மேடை நிகழ்சிகள் மற்றும் பொது கண்காட்சி நிகழ்சிகள் (சர்வதேச கண்காட்சி நிகழ்சிகளும்), கல்வி நிகழ்சிகள், பொதுக்கூட்ட நிகழ்சிகள் மற்றும் கோவில் -சமய அறநிலையத்துறை நிகழ்சிகள் என பல்வேறு நிகழ்சிகள் செய்திருந்தாலும் சர்வதேச வானொலிக்காக செய்த சில  சிறு சிறு  நிகழ்சிகள் பல மனதிற்கு மகிழ்ச்சிதருவதாக இருந்தது, உதாரணமாக எனது வானொலி நிகழ்ச்சிகளிலிருந்து ஒரு சில பகுதிகளை இங்கு பகிர்ந்துள்ளேன்.

பொதுவாக சிறு சிறு நிகழ்சிகள் என்றால் அன்னையர்தினம், உழைப்பாளர் தினம்(மேதினம்), மற்றும் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் இதுபோன்ற பண்டிகை தின குறிப்புக்களுடன் அது சம்பந்தப்பட்ட  பாடல்களின் தொகுப்புகளை, ஒரு அரைமணிநேர அல்லது ஒருமணிநேர விளம்பரதாரர் நிகழ்சிகளாக தொகுத்து தருவதாகும்.... உதரனத்திற்க்கு (சிங்கை, மலேசிய, லண்டன், கனடா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா  போன்ற 7-சர்வதேச வெவ்வேறு சர்வதேச பண்பலை மற்றும் இனைய வழி வானொலியிலும் ஒளிபரப்பப்பட்ட)  எனது அன்னையர் தின நிகழ்ச்சி ஒன்றை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.  


நன்றியுரை:- திரு பொன் சிவா வரதராஜன் அவர்கள்13-05-2012அன்று  வாசித்து வழங்கிய  எனது நிகழ்ச்சித்தொகுப்பான அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி, மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ் வொரு வரியையும் மிகத்தெளிவாக வாசித்து வழங்கிய விதம் மிகவும் அருமை. உலக தமிழ் நேயர்கள் அவர்களது தாய்க்கு அவர்களே வழங்கிய நிகழ்ச்சியை போல் இருந்தது.  எனது இந்த நிகிழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும்போது நான் மலேசியாவில் என்னுடைய நண்பர்களுடன் கேட்டு மகிழ்தோம், கனடாவின்-A9 வானொலிக்கு இப்போது மேலும் நிறைய மலேசியா ரசிகர்கள் விரும்பி கேட்டுக்கொண்டிருக்கிரர்கள். என்னுடைய இந்த நிகழ்ச்சியை வழங்கிய  கனடாவின் A9 சர்வதேச தமிழ் வானொலி நிலையத்திற்கும்  எனது நன்றிகளுடன் சிங்கை-கோகி. 

(குறிப்பு:-அன்னையர்த்தினத்தன்று எனது இதே நிகழ்ச்சி சிறிது மாறுபட்ட வடிவில், மேலும் 7 சர்வதேச பண்பலை மற்றும் இனைய வழி வானொலியிலும் ஒளிபரப்பானது . )
இந்த நிகழ்ச்சியை இணையதளத்தில் WWW.A9RADIO.COM  எப்போதுவேண்டுமானாலும்,  இனைய முகவரியை சொடுக்கி கேட்குமாறு  இணைக்கப்பட்டுள்ளது.

13-05-2012-அன்னையர் தின சிறப்பு நிகிழ்ச்சி -WWW.A9RADIO.COM 
உலகிலே புனிதமான பாசம் தனது தாயின் பாசம்!
தாய் – நமது ஆரம்பம், அவ்வை- தமிழின் ஆரம்பம், சரஸ்வதி – இசையின் ஆரம்பம் என மகளிர் சக்தி எங்கும் எதிலும் உண்டு. ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்று உரைச்சொல்லும் உண்டு. இச்சக்திகள் ஒன்றிணைந்து முன்னே வந்தால் வெற்றி, மிகப் பெரும் வெற்றியாக மாறும்.
I LOVE YOU AMMA...GOD PLEASE GIVE LONG LIFE TO AMMA.... TO LIVE MORE AND MORE 100 YEARS....
கருவில் தாங்கி உருவினில் உயிர் பெற உழைத்தவள் அம்மா, உயிர் எழுத்தின் உண்மை பெயர் அம்மா, பிரியாமல் இருப்பதற்காய் பிரிவை வரமாய் கேட்கிறேன்... பிரிவால் கூட முடியாதம்மா என்னிடம் இருந்து உன்னை பிரிப்பதற்கு....
பாசம் மிகுந்த ரசிக நெஞ்சங்களே ..அன்னையர் தினம்னா ஒருநாள் மட்டும் தானான்னு... கேட்டீர்கள் என்றால், இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன்... இருந்தும் அம்மாவுக்கு இப்படி ஒரு மகிழ்ச்சியான, எதிர்பாரத, இன்ப அதிர்ச்சி தரும் கொன்ன்டாட்டமான நாளை அன்பளிப்பாக தந்தாள் அது இப்படித்தான் இருக்கும்...(முக்கியமாக ஒரு விவரம் தெரிந்துகொள்ளவேண்டும் திடீர் என்று அம்மாவுக்கு பரிசு தந்தாள் அது வேறுவிதமாக மாரிவிட்டக்கூடும் "மகனே நீ என்னிடம் எதாவது எதிர்பார்கிறாயா " என அம்மா நம்மை கேட்க நேரிடும் ஆகவேதான் எதிர்பாரத, இன்ப அதிர்ச்சி தரும் கொன்ன்டாட்டமான நாளை அன்பளிப்பாக தரலாம்...... XXXXXXXXX) 

இந்தநாள் தாய்க்குலத்திற்கு மற்றுமல்லாது நமக்கும் மகிழ்ச்சியான நாள்தானே ...இந்த படத்திலும் அப்படியே ...எதிர்பார்போடு இருந்த அம்மாவுக்கு எதிர்பாராமல் தந்த பரிசு எப்படி இருக்கும்.... வாங்க இந்த படத்தின் பாட்டை கேட்டாலே புரியும்...இப்ப இந்த பாட்டை கேட்போமா #Neeye Neeye song - M Kumaran S/O Mahalakshmi , நீயே நீயே, நானே நீயே ... நெஞ்சம் பாடும் வுயர் தீயே தீயே.

அம்மா பாட்டு என்றாலே MGR, SHIVAJI, RAJINI, KAMAL பாட்டுதான், முதலில் நமக்கு ஞபகம் வரும் ..சூப்பர் STAR அவர்களுக்கு அமைந்த அம்மா பாடல்களில் இது தான் டாப், அதோடு இசை ஞானி இளையராஜா அவர்களுக்கும் அம்மாவுக்காக பாடிய பாடலில் இதுதான் டாப், இந்த பாட்டை கேட்டால் நாம் மேழுகுவத்திபோல உருகி போய்விடுவோம்...(இந்த பாடலில் இளையராஜா அவர்களும், KJ யேசுதாஸ் அவர்களும் கூட அன்னையின் பாசத்தில் உருக உருக இசைத்து பாடிய ஒரு சாதனை பாடல் இது. வாங்க நாமும் அவர்களுடன் மெழுகுவர்த்தியாக உருகி இந்த பாடலை கேட்போமா ?
#அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே Amma Endru Azhaikadha Movie - Mannan
Music Director - இளையராஜா, Director - P வாசு, Singer - KJ யேசுதாஸ் ...


இதுவும் சூப்பர் ஸ்டார் அம்மாவுக்காக உருக்கமான பாடல் #SUPER STAR RAJINI'S Amma Amma Enthan Aaruyire, அம்மா, அம்மா, என் ஆருயிரே .....

அட நம்ம பத்மஸ்ரீ கமலஹாசன் எப்பிடின்னு பார்கலாமா ..அவரு குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அம்மா பாட்டைத்தான் பாடி "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே.. அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயேநு தனது திரை உலகத்தில் காலடி எடுத்துவைத்தார், அவருக்காக அமைந்த அம்மா பாடல்களில் இது தான் டாப்.. வாங்க பாடலை கேட்போம்
#கமலின் அம்மா பாட்டு :- SONG:- NANAGA NANILLAI THAYE(படம் THUNGATHEY தம்பி THUNGATHEY) நானாக நான் இல்லை தாயே நல்வாழ்க்கை தந்தாயே நீயே.

#மக்கள்திலகம் எம் ஜி ராமச்சந்திரன் MGR-.... அப்பப்பா ...அம்மா என்கிற தாய்க்குலத்திர்க்காக இவருக்கு அமைந்த பாடல்களுக்கு கணக்கே இல்லை...எராளமான பாடல்கள் ..."தாய் மேல் ஆணை தமிழ்மேல் ஆனைன்னு ஆரம்பித்தால் ....எராளமான அம்மா பாடல்கள்... இவருக்கு அம்மான்னா உயிர்,... அப்படி ஓர் "அம்மா பாசம்". அவ்வளவு ஏன் இவர் ஓர் அம்மா பயித்தியம்னுகூட சொல்லலாம், இவர் பார்வையில் தாய்குலம் அனைவரும் "அன்னையின் உருவம்"... அம்மா பிள்ளையான MRG... அவருக்கு இணை அவரே... இப்ப அவரின் தாய்ப்பாசத்தில் அவருக்கு அமைந்த பாடல்களில் இது தான் சூப்பர் ஹிட் டாப் 1-முதல் இடம் ...என்ன பாடல் அது ....
#தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறப்பதில்லை எனக்கொருதாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள் -TMS அவர்களின் குரலில் என்ன இனிமையான பாடல் ...(ஜீவா நதியாய் வருவாள், என் தாகம் தீர்த்து மகிழ்வாள் ..தவறினை பொறுப்பாள் தர்மத்தை வளர்ப்பால், தரணியிலே வளம் சேர்த்திடுவாள்- அந்த தாய் இல்லாமல் நான் இல்லை) (ஆதி அந்தமும் அவள்தான், நமை ஆளும் நீதியும் அவள்தான், அகந்தையை அழிப்பாள் ...ஆற்றலை கொடுப்பாள் , அவள்தான் அன்னை மகாசக்தி -அந்த தாய் இல்லாமல் நான் இல்லை ...)
#அடுத்த அம்மாவுக்கான MGR அவர்களின் வெற்றிப்பாட்டு இது, படம் -தேடிவந்த மாப்பிள்ளை :- பாடல் :-வெற்றிமீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும் (தாயே )
#அடுத்தது இந்த பாடலில் MGR அவர்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள், என்று பாடி நம்முடைய தேசப்பற்றை ஒரு தாய்க்கு சமமாக அந்த தேசத் தாய்மைக்கு மிக உயர்ந்த நிலையான "இமயமலையின் உச்சிக்கு உயர்த்தி" பாடும்படி அமைந்த பாடல் இது .. வாங்க நமது தேசத் தாய்க்காக ஒரு பாடல் கேட்போம் .
# ஒருதாய் மக்கள் நாம் என்போம் ..ஒன்றே எங்கள் குலம் என்போம்.. Oru Thai Makkal from the 1963 movie "Ananda Jothi" starring MGR / M.G. Ramachandran, Devika, M.R. Radha, S.A. Asokan, S.V. Sahasranamam, P.S. Veerappa, Manorama, Master Kamal Haasan & Javar Sitaraman.
அப்பாவும் பிள்ளையும் (மக்கள்திலகம் சிவாஜிகணேசன் , இளையதிலகம் பிரபு ) இருவருக்கும் அமைந்த அம்மா பாட்டு, அந்த வரிசையில் மக்கள்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு அமைந்த அம்மா பாட்டு.. எண்ணி பார்க்கமுடியாத பாடல்கள் உள்ளது அதில் இதுதான் மிகவும் உயர்ந்த ஒன்று. இந்த பாடலை கேட்டாலே அன்னையை விட்டு விலகி இருப்பவர் அனைவரும் ஓடி சென்று அன்னையின் காலில் விழுந்து ..அன்னையை ஆசையாக அரவணைத்து இருப்பர் .. "One of the greatest songs dedicated to mothers worldwide.என்ன பாட்டு அது வாங்க கேட்போம்
#அன்னையை போலொரு தெய்வமில்லை அவள் அடி தொழமறுப்பவர் மனிதரில்லை,மண்ணில் மனிதரில்லை!!
அப்பாவைவிட பிள்ளை ஒரு படி மேலே என மக்கள்திலகம் சிவாஜிகணேசன் பிள்ளை இளைய திலகம் பிரபு அவர்களுக்கு அமைந்த அம்மா பாட்டு இது வாங்க பட்டை கேட்போம் :-
#AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU -அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்! எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேக்கிற பாக்கியம்!
#SOLLI SOLLI VANTHATHILLAI(SENTHAMIL PAATTU)PRABU -
இசை புயல் AR ரகுமான் மற்றும் வைரமுத்து அவர்களும் இந்த பாடலில் தாய்க்காக உருகி உருகி பாடலை அமைத்திருக்கும் விதத்திலிருந்தே அவர்களுக்கு தாய்மேல் உள்ள பாசம் நன்கு தெரியும்... இந்த பாடலை கேளுங்களேன் மனம் இலகிப்போகும்.Song உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே… உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே.....! [உன்னிகிருஷ்ணன் அவர்களின் இனிமையான குரலில் உயிரும் நீயே என்ற அம்மாப் பாடல் ] - Movi-Pavithra, Singer: Unni Krishnan, Music: AR ரஹ்மான்.
#காதல் மன்னன் ஜெமினிகணேசன் அவர்கள் நடித்த படத்தில் (கணவனே கண் கண்ட தெய்வம் ) கண்டசாலாவின் அருமையான அம்மா பாடல் இது( "அம்மா நீ கலங்காதே" ..நீ அல்லவோ பெண் தெய்வம் ..பாரத நாட்டிற்கு பெருமை அளித்திடும் அணிகலன் பெண்குலம் )
# நடிகர் சிவகுமார் மற்றும் நடிகை சுஜாதா அவர்களுக்கு அமைந்த பாடல் :- தாலாட்டு மாறிப்போனதே...என் கண்ணில் தூக்கம் போனதே பெண்பூவே வந்தாடு :- S.Janaki-Isai-Ilayaraja-Movi "UNNAI NAAN SANTHITHEN"
#நடிகர் சூர்யா அவருக்கு அமைந்த அம்மா பாட்டு "காலையில் தினமும் கண் விழித்தெழுந்தால் அம்மா -உன்னிக்ருஷ்ணன் குரலில் நியூ பட பாடல் இது ...அடுத்து "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா ?"
# இந்த பாடல் கொஞ்சம் கவனித்து கேட்டீர்கள் என்றால் (இது ஒரு தாய்க்கு மகன்/மகள் பாடுவதுபோலவும் .. ஒரு தாய், மகள் /மகனுக்காக பாடுவதுபோலவும் இருக்கும் )
#Nenjil Jil - Kannathil Muthamittal ... ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
#இந்த பாடல் ஒரு டிஸ்கோ பாடல் அதுவும் அம்மாக்காக ஒரு டிஸ்கோ பாடல் :-song:- அன்னை என்னும் ஆலயம் , அன்பில் வந்த காவியம், கண்ணில் வந்த ஓவியம் -Movi-Aboorva Sagotharigal- by Janaki Music-Bappilahari.
#இப்ப நாம நம்ம தமிழ் தாய் கடவுளுக்கு ஒரு பாட்டு கேட்கலாமா
ஆத்தி சூடி தந்த அவ்வை சொல்லியது அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்
பால்... தமிழ் பால் , என்னும் நினைப்பால் , இதழ் துடிப்பால், அதன் பிடிப்பாள் , சுவை அறிந்தென்........அதுவல்லவோ நமக்கு தாய்ப்பால் ..முதன் முதலில் நமக்கு உட்டிய தமிழ் பால் அல்லவா அது
#அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை (டீச்சரம்மா படத்தில் KR விஜயா அவர்களுக்கு அமைந்த பாடல்)
# அடிமைப்பெண் படத்தில் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்காக அமைந்த திரைப்பட பாடல் இது . "அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி ...அவர்களே இவ் உலகின் தெய்வம்"
# தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை....
# Thiyagaraja bhagavathar - Movi-HARIDAS- அன்னையும் தந்தையும் தானே, பாரில் அண்ட சராசரங்கள்
# கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ - Song from Annai வேளாங்கண்ணி
# எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரிமாதா "படம் -மிஸ்ஸிஅம்மா"
# நீலக் கடலின் ஓரத்தில் - Neelakadalin - Song from அன்னை வேளாங்கண்ணி
தமிழுக்கு அது (RAHI தேவையில்ல போலிருக்கிறது
சோகமான "அம்மா" பாட்டுக்கள் :-sentimental song about a mother

# நடிகர் கார்த்திக் அவர்களுக்கு அமைந்த பாடல் :- அம்மான்னா சும்மா இல்லைட .. அவ இல்லேன்னா யாரும் இல்லே டா - hero karthik ,music Ilayaraja
# Movie:-Raam. ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நி கண்ணுறங்கு …(அம்மா என்னும் மந்திரமே அகிலுலகம் வாழ்கிறதே )
#அரண்மனை கிளியில்- இளையராஜாவின் இசையில், ராஜ்கிரண் அவர்களுக்கு அமைந்த பாடல் "உன்னை போல ஆத்த என்னை பெத்து போட்டா, என்ன பெத்த ஆத்தா கண்ணீர்தான் பாத்தா..."
#என் தாயின் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே ..என் வாயும் வயிறும் போற்றிவலத்திட்ட (ARANMANAI KILI MOVIE)RAJKIRAN.............
#சிவாஜி -ஆரரிரோ படியதரோ , தூங்கிபோனதரோ …Movi-Thaiku Oru Thalattu-
நம்ம இளைய தளபதி "விஜய் அவர்களுக்கு அமைந்த இந்த பாடல் :-Song:- தெய்வத்துக்கே மாருவேசமா,படம் -சிவகாசி.
ரஜினி அவர்களுக்கு அமைந்த சோகமான அம்மா பாட்டு "அம்மா உன் பிள்ளை நான் "-படம் தளபதி .
நல்ல பொன்னால் இதுபோலே வருமா இனிமேலே
இனிய ரசிக நெஞ்சங்களே, இந்த நிகழ்ச்சியைப்பற்றிய   உங்களது மேலான விமர்சனங்களை அள்ளித்தெளியுங்கள் ..
A9 வானொலியின் FACEBOOK-முகநூல் வாயிலாகவும் தெரிவிக்கலாம்
A9 வானொலியின் வலைத்தளத்திலும், அல்லது  மின் அஞ்சல் (E-MAIL )வழியாகவும் தெரிவிக்கலாம்  
A9 வானொலியின் "SKYPE" -என்கிற "வான்முகவின்" வழியிலும் தெரிவிக்கலாம்
 #AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU -அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்! எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேக்கிற பாக்கியம்!
# நடிகர் கார்த்திக் அவர்களுக்கு அமைந்த பாடல் :- அம்மான்னா சும்மா இல்லைட .. அவ இல்லேன்னா யாரும் இல்லே டா - hero karthik ,music Ilayaraja
#அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை (டீச்சரம்மா படத்தில் KR விஜயா அவர்களுக்கு அமைந்த பாடல்)
# அடிமைப்பெண் படத்தில் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்காக அமைந்த திரைப்பட பாடல் இது . "அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி ...அவர்களே இவ் உலகின் தெய்வம்"
# ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா ?"
#Thiyagaraja bhagavathar - Movi-HARIDAS- அன்னையும் தந்தையும் தானே, பாரில் அண்ட சராசரங்கள்

மருத்துவக்குறிப்பு சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என ஏன் அப்படி எழுதினர்???"......


மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு  சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என ஏன் அப்படி எழுதினர்???"......

வேலை, வேலை என்று, நேரம் காலம் இல்லாமல் உழைப்பதாகக் கூறிக்கொண்டு, எந்த நேரமும் அலுவலக, தொழில் கூட்டாளிகளோடு, காலத்தைச் செலவழித்துக் கொண்டு, பணம் ஈட்டுவதில் மட்டும் சிலர் குறியாக இருக்கிறார்கள். இதில் பலர் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாது... அவர்கள் இந்த உலகத்தில் பிறந்ததே, தங்கள் தொழில் மற்றும் அலுவலக பணிகளை மேற்கொள்ளத்தான் என்று வாழ்க்கை நடத்துவார்கள். பல பேர் இரவு நேரங்களிலும் விடுமுறை நாள்களிலும்கூட அலுவலகப் பணிக்காகவே நேரம் செலவிடுவார்கள். மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்று வீட்டு நினைவுகள் எதுவும் இருக்காது....வேலை.... அது மட்டும்தான் குறிக்கோள். அது மட்டும்தான் முக்கியம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்..  அப்போதும் அவர் கூறுவது என்னவென்றால் "நான் இல்லை என்றால் எனது நிறுவனம் இல்லை" ஆகவே உடனே எனது உடல்நிலையை சரிசெய்து அலுவலகம் செல்வதற்கு உதவுமாறு மருத்தவரிடம் மன்றாடுவார்கள்...... 

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு  சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என ஏன் அப்படி எழுதினர்??????????".......

"நான் இல்லை என்றால் எனது நிறுவனம் இல்லை" என்று கூறிய பலர், தனது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரையிழந்து இடுகாட்டுக் கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிரார்கள்... அப்போதும் அவர்களின் நிறுவனம் சிறப்பான நிலையில் இன்னமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது... என்று தெரிந்துகொள்ள,அது ஒரு வாய்ப்பாக அமையட்டும் என்று மருத்துவர் மருந்துச் சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என எழுதியிருந்தால்,அதற்காகஆச்சர்யப்படவேண்டிய அவசியமில்லை.

வாழ்த்துக்களுடன், உங்களோடு உறுதுணையாக  ..
ஆலோசகர்-கோகி-ரேடியோ மார்கோனி- புது தில்லியிலிருந்து.

Thursday, November 6, 2014

கதாநாயகி பாடும்போது "கால்" போடாமலும், கதாநாயகன் பாடும்போது "கால்" போட்டு பாடும்படி பாடலை அமைத்திருப்பார்

பாடலில் கவிஞ்சரின் கைவண்ணம்:- "கதாநாயகி பாடும்போது  "கால்" போடாமலும், கதாநாயகன் பாடும்போது  "கால்" போட்டு பாடும்படி பாடலை அமைத்திருப்பார்" 

கதாநாயகி (பெண் குரல்) பாடும்போது "கால்" போடாமல் பாடுவார் அதாவது...."முத்துக்களே" பெண்கள்.. "தித்திப்பதே" கன்னம்
கதாநாயகன் (ஆன் குரல்) பாடும்போது "கால்" போட்டு பாடுவார் "முத்துக்களோ" கண்கள் "தித்திப்பதோ" கன்னம்
.... படம்: நெஞ்சிருக்கும் வரை

முத்துக்களே பெண்கள்.. தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
(முத்துக்களோ கண்கள்)

படித்த பாடம் என்ன
உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப்பூவை சூடத் துடிப்பதென்ன
(முத்துக்களே பெண்கள்)

கன்னிப்பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலில் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன
(முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன
உன் கைகள் மாலையாவதென்ன
வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன
(முத்துக்களே)

படம்: நெஞ்சிருக்கும் வரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா
http://www.youtube.com/watch?v=0wBsn4F__A4&feature=share&list=PL86A6B8FDD708251D

மந்திரச் சொற்கள்" ... வாழ்க்கை"யில் அவற்றை உபயோகித்தால்

மந்திரச் சொற்கள்" ... வாழ்க்கை"யில் அவற்றை  உபயோகித்தால் ஆனந்தத்தின் எல்லை வரை சென்று வரலாம்....படிப்படியாக முன்னேறி,  வாழ்க்கையில் வெற்றி பெற,  நமக்குத்தேவை "நம்பிக்கையும்,  உத்வேகமும்" மிக முக்கியமானவை.  தடையில்லா உத்வேகத்தை,  சாதகமாக அமைத்துக்கொண்டு முன்னேற   "மந்திரச் சொற்கள்" நமக்கு பெரும் உதவியாக உள்ளன...    அப்படி என்ன சொற்கள் அவை? எப்படி, எந்தச் சொற்கள், மந்திரச்சொர்க்களாக மாறுகின்றன? அந்த சொற்களை எப்படி, எங்கு, எவ்வாறு தெரிந்துகொண்டு உபயோகப்படுத்தமுடியும்?

மறைமொழி அல்லது மந்திரச்சொற்கள் என்பது காட்டும் தன்மை உடையதே அன்றி உரைக்கும் தன்மை உடையது அல்ல..... அதாவது புத்தகத்தில் இருக்கும் சொற்கள் எடுத்துரைப்பவை என்றும், உயிர் வாய் வழி சொற்கள் "சுட்டிக் காட்டும்" தன்மையுடையது எனலாம்..... மேலும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் "வாய் வழி சொற்கள்" வழிகாட்டும் தன்மையுடையது எனலாம்.... அப்படிப்பட்ட வாய்வழி மந்திரச்சொற்கள் காட்டும் வழியை மனதில் கெட்டியாக பிடித்துக்கொண்டால் மட்டுமே முன்னேறமுடியும்..... 

1."அழகு"என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

......முதலில் உங்களின் முகத்தை "சிரித்த முகமாக" வைத்துக்கொள்ளுங்கள் பிறகு உங்களின் அலுவலகத்தில் உங்களோடு பணியாற்றும், உங்களின் மேலதிகாரியை பார்த்து வழக்கமாக சொல்லும் "வணக்கம்" சொல்லியபிறகு, இன்று நீங்கள் அணிந்திருக்கும் சட்டை புதியதா? "அழகாகவும்" பொருத்தமாகவும் உள்ளது என்று கூறுங்கள்... பிறகு பாருங்கள் நீங்கள் பேசிய அனைத்தும் மந்திரங்களாக மாறி வேலை செய்யும், உங்களின் மேலதிகாரிக்கு உங்களின்மீது ஒரு தனி மதிப்பும் மரியாதையும் ஏற்ப்படும் அதை நீங்கள் உங்களின் முன்னேற்றத்திற்க்காக  பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது, உங்களை ஒரு படி முன்னேற்றிக்கொள்ள உதவியாக இருக்கும்.   இப்படியே மேலும் மேலும் பல மந்திர சொற்களை பயன்படுத்தி மேலும் மேலும் முன்னேறுங்கள்.  (முக்கிய குறிப்பு:- மந்திர சொற்க்களை சரியான முறையில் சரியான நேரத்தில் பயன்படுத்தினால்தான் பலன் தரும். ஒருஇடத்தில் ஒருமுறை பயன்படுத்திய மந்திரச்சொல்லை திரும்ப திரும்ப அதே இடத்தில் பயன்படுத்தினால் மந்திரம் பயனற்றதாகிவிடும்) ....

விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி. 

2.""சிக்கனம்"  "என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

விலைவாசி என்றைக்கும் ஏறுமுகமாகத்தான் உள்ளது, கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளில் எந்த ஒரு பொருளும் "விலை குறைந்ததுவிட்டது"  என்கிற பேச்சுக்குகூட இடமில்லாமல் போனது.  இப்படிப்பட்ட சூழலில் "சிக்கனம்" என்பது வெறும் சொல்லாக மட்டுமே பார்க்கும்  சூழ்நிலை உள்ளது.    
அலுவலகங்களில் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பது செலவுகளை குறைப்பது என்பதைவிட, செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதுதான் சிறந்த நிர்வாகத்திரமையாகும். விரயங்களைக் குறைப்பதன் மூலமாகவே செலவினங்களைக் குறைக்க முடியும். அதாவது விரயமாகும் நேரங்களும், தேவையில்லாத செயல்பாடுகளும் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டாலே, சிக்கனமும் சேமிப்பும் கிடைத்துவிடும்.  அதாவது 100 ரூபாய் சிலவு செய்யவேண்டிய இடத்தில் 80 ரூபாயில் அந்த பணியை திறம்பட செய்து முடிப்பதுதான் " சிக்கனத்தின்" இலக்கணம். 

உங்களின் அலுவலக மேலதிகாரியிடம் சென்ற வருட செலவுகளில் 20%சதவிகிதம் குறைத்து மீதமுள்ள 80%சதவிகிதத்துக்குள் இந்த வருட செலவுகளை கட்டுக்குள் வைப்பேன் என்று சொல்லுவதோடு செயலிலும் செய்து காட்டுங்கள். பிறகு பாருங்கள் "சிக்கனம்" என்கிற சொல் மற்றும் செயலின் மந்திர சக்தியை நீங்களும் உணருவீர்கள்.  நூற்றுக் கணக்கில் செய்யப்பட்ட சின்னச் சின்ன திருத்தங்கள், இலட்சக்கணக்கான செலவுகளை மிச்சம் செய்ய வழி வகுத்தது. எனவே, தொலைநோக்குடன் திட்டமிட்டு, உரிய மாற்றங்கள் செய்யும் வாய்ப்பு வசதிகளோடும் உங்கள் நிதியாண்டுத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துங்கள். அதன் வழியாக மிகச் சிறந்த மாற்றங்களைக் கண்கூடாகக் காணமுடியும்.

விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி.

3. "முன்னேற்றம்"  "ஒரு அடி முன்னே" என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

"நாம் ஒரு அடி முன்னே எடுத்துவைத்தால் உலகம் நம் அருகில் வந்து நிற்கும் என்று மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கம் கொடுத்தேன்". சொன்னவர் "நம்பிக்கை வாசல்" என்ற அறக்கட்டளையின் நிறுவனர், 28 விருதுகளை பெற்ற மாற்றுத் திரனாளியான   "ஏகலைவன்" என்பவர். 

நம்மால் முடியுமா?  என்கிற சந்தேக யோசனையில் இருக்கும் எந்த ஒரு செயலும் நிறைவு பெற்றதாக சரித்திரமில்லை. நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில் நாம் "ஒரு அடி முன்னே" சென்று செயலாற்றும்போது அந்த செயல் படிப்படியாக சிறப்பான முறையில் நடப்பதோடு நமக்கு  வெற்றியையும் தேடித்தரும்.  ஆகவே எந்த ஒரு செயலாக இருந்தாலும் என்னால் இதை திறம்பட செய்ய முடியும் என்கிற நம்பிக்கையோடு ஒரு அடி முன்வைத்து ஆரம்பித்துவிடுங்கள். பிறகு பாருங்கள் எந்த செயலையும் என்னால் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையூட்டும் நிலையை நீங்கள் அடையமுடியும். ஆகவே  எப்பொழுதும் "ஒரு படி முன்னே" என்பது உங்களின் தாரக மந்திரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். 

விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி. 

4. "நிதானம்", (நிதானமே பிரதானம்)  என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

இந்த மந்திரம் உங்களுக்காக, நீங்கள் நினைவில் வைத்து சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல்லாகும். 

"நிதானம் என்பது வேகத்தோடு சம்மந்தப்பட்ட சொல்லாக இருந்தாலும், நான் இங்கு குறிப்பிட வந்தது உடல் நலம், அது சிறப்பாக இருந்தால் எதையும் நம்மால் சாதிக்க முடியும். 

அதாவது ஒவ்வொரு முறையும் நாம், நமது உணவை உட்கொள்ளும்போது நமக்கு நாமே நினைவில் நிறுத்தி சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல் இது. 

இந்த அவசர யுகத்தில் அவசர அவசரமாக சரியாக மென்று தின்று விழுங்காத உணவுப்பழக்கத்தினால் செரிமானம் கேட்டு, உடல் நலத்தோடு மனநலமும் கெட்டுப்போவதால் ஏற்ப்படும் விளைவுகளுக்கு ஒரு அளவு என்பது இல்லை. அது எப்படிப்பட்ட இழப்புக்களை உருவாக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.  ஆகவே ஒவொரு முறையும் உங்களின் உணவை நீங்கள் உட்கொள்ள ஆரம்பிப்பதிலிருந்து உணவை உண்டு முடிக்கும்வரை இந்த "நிதானம்"....(நிதானமாக உணவை நன்கு மென்று விழுங்கவேண்டும்)  என்கிற மந்திரத்தை நினைவில் நிறுத்தி செயல்படவேண்டிய கட்டாய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த மந்திரத்தின் தன்மையையும் அதன் சக்தியையும் நீங்கள் உணர்வீர்கள் என்றால், நீங்கள்  மிகப்பெரிய பயனை பெற்றவராவீர். 

விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி.

5. "வெற்றி" (எதிலும் வெற்றி)  என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

வெற்றியைக் கரம்பற்ற நாம் மூன்று படிகளில் ஏறினால் போதும். அந்த மூன்று படிகள்… ‘ஆசைப்படு-ஆசைப்படுவதை அடையமுடியும் என்று நம்பு – அந்த நம்பிக்கை நிறைவேறும் வரை இடையறாது செயற்படு’. இதுதான் வெற்றிக்கான மூலமந்திரம். இந்த சூத்திரத்தின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால் போதும். வெற்றித் தேவதையின் கைகளில் இருக்கும் மாலை ஒரு நாள் உங்கள் கழுத்தை அலங்கரிக்கும்..

வெற்றி என்கிற கனவு காணுங்கள். தீவிரமாகக் காணும் கனவுகள், எண்ணங்களாக மாறி ஒருநாள் நிச்சயம் நனவாகும். உந்துதலோடு செயர்ப்படுவதர்க்கு  ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு தேவை’ என்கிறார், அறிவியல் விஞ்ஞானி திரு.அப்துல் கலாம் அவர்கள்... ......அதே நேரத்தில் வெற்றிக்கு வழி என்ன?’ என்ற தேடலிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடலாகாது. அதோடு  வெற்றி என்பது சிலருக்கு மட்டுமே ஆண்டவன் விசேஷமாய் வழங்கும் ஆசீர்வாதமில்லை. ஆகவே வெற்றி என்பதை எப்போதும் தாரக மந்திரமாக நினைத்து உச்சரிப்பதொடு அதன் பாதையில் தொடர்ந்து  பயணிக்கவேண்டும்.

விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி.

Thursday, April 25, 2013

பாட்டியும் பேத்தியும்

மசித்து பிசைந்த "மம்மு" சாதம்
எடுத்து ஊட்ட ஒரு தேக்கரண்டி போதும்
கட்டில் அருகே வந்து,
கண்டிப்பும் கட்டளையும் ஊட்டிவிட,
கண்களில் கண்ணீர் வரக்கண்டு...
காரம்தான் உரைத்ததோ என்று
ஒரு குவளை தண்ணீர் பருகத்தந்து
"சொன்ன பேச்சை கேட்கவேண்டும்
சமுத்தாக சாப்பிடவேண்டும்...என்ன? "
என அதிகார பரிமாறல்களோடு
பழுத்த பழத்திற்கு ஊட்டிவிடும் பிஞ்சுக் கைகள்
பாட்டியும் பேத்தியும்....... (கோகி)

Saturday, April 20, 2013

"கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்"

"கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" இது பழமொழி, தமிழ் திரைப்பட வரலாற்றில் கழுதையை மையமாக வைத்து " அக்ரஹாரத்தில் கழுதை மற்றும் பஞ்ச கல்யாணி என இரண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு எதிர்பார்த்த யோகம் கிடைக்காமல் போனது, கழுதைகளுள் பல வகைகள் உண்டு. அதில் அபூர்வ வகையைச் சார்ந்த கழுதைதான் வெள்ளை மூக்கு கானகக் கழுதை. இந்த வகை "வெள்ளை மூக்கு கானக கழுதைகள்" மிக விரைவாக ஓடிச்செல்லும் விலங்குகளில் இதுவும் ஒன்று. இந்த கழுதையின் சிறப்பம்சமே இதன் வேகம் தான். மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடையது. இவை எச்சரிக்கை உணர்வும், புத்திசாலித்தனமும் மிகுந்தவை. 

பதினொன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வசித்த சித்தர் ஒருவர் இவ்வகை கழுதைகளை ஆராய்ந்தார், "எப்படி இந்த வகை கழுதைகளுக்கு அத்தனை சக்தி கிடைக்கிறது என்று அந்த வகை கழுதைகள் மேயும் இடங்களுக்கு சென்று அவைகள் உண்ணும் தாவர புல் வகை மூலிகைகளை சேகரித்து அதன் மூலம் பல பலசாலிகளான வீரர்களை உருவாக்கியதாக ஒரு செய்தி உண்டு. அவர் கூறியதாக பிறரால் எழுதிய குறிப்புகளில் அப்படி அவர் காட்டில் தேடியபோது "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" என்கிற கூற்று பிறகு பழமொழியாக திரித்து பேசப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. கானக கழுதையில் பல வகைகள் உள்ளன. லடாக் பகுதியில் காணப்படும் வகை, கட்ச் பகுதியில் உள்ளதைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். அவ்வாறே காஷ்மீரில் காண்பது பிரிதொருவகை. இன்று இவ்வினம் ரான் பகுதியில் சுமார் ஐயாயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான ஒரு சரணாலயத்தில் மட்டுமே காணப்படுகிறது. நமது பொதி சுமக்கும் கழுதையின் மூதாதையர் இனம் தான் இந்த ஒயில்ட் ஆஸ் என்னும் கானக கழுதை. குறிப்பாக இந்த வகை வெள்ளை மூக்கு கானகக் கழுதை உருவத்தில் சற்று பெரியது. பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் உண்டு. முற்காலத்தில் நமது உள்ளூர் கழுதைகள் துணி மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் போதே இந்த கானகக் கழுதைகள் வடமேற்கு இந்தியப் பகுதியில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன என்று கூறப்பட்டுகிறது.

" எல்லாம் சரிங்க கடவுள் கழுதைக்கு ஏன் தலையில் கொம்பை படைக்கவில்லை?" 

அதற்க்கு மாறாகத்தான் கடவுள் கழுதைக்கு காலில் பலத்தைக் கொடுத்திருக்கிறார்,..... உதய் வாங்கியவர்களை கேட்டுப்பாருங்கள் அதன் பலம் என்ன வென்று தெரியும்.

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து....

சிங்கப்பூரில் தமிழில் சூப்பர் ஹிட் தீபாவளிப்பாடல் இது

{சிங்கப்பூரில் தமிழில் சூப்பர் ஹிட் தீபாவளிப்பாடல் இது}
தீபாவளி வந்தது ....
தோம் தோம் தனன தோம், தனன தோம்
தோம் தோம் தனன தோம், தனன தோம்
தீபாவளி வந்தது ....
...மனதினில் பொங்கும் புது உணர்ச்சி
எங்கும் நிறைந்தின்பம் தரும் மகிழ்ச்சி....
நன்றி...மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்களுடன்.. கோகி. http://youtu.be/OjM3JiIHwUg

செய்துவிடு இல்லையென்றால் இயலாமல் செத்துவிடுவாய் .......

செய்துவிடு இல்லையென்றால் இயலாமல் செத்துவிடுவாய் .......
Solomon Grundy,
Born on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
மனிதனே உன்னுடைய இறுதிக்காலம் அது மிக மிக குறுகியது ஒரு விழாழக்கிழமை அவனது உடல் நிலை சரியில்லாமல் போனது அதற்க்கு அடுத்தநாளே வெள்ளிக்கிழமை மிகவும் மோசமானதால், அடுத்த நாள் சனிக்கிழமை அன்று செத்துப்போனான் அதற்க்கு அடுத்தநாள் ஞாயிறு அன்றே புதைத்துவிட்டார்கள் ஆனால் மனிதனின் இளமைக்காலம் அந்த ஒரு திங்களில் பிறந்தான், அதன் அடுத்த வந்த வருடத்தின் ஒரு செவ்வாய்க்கிழமையில் பெயர் வைக்கப்பட்டு, நீண்ட பல வருடங்களுக்குப்பிறகு ஒரு புதன் கிழமை அவனுக்கு திருமணமானது ஆகா மனிதனே உன்னுடைய இளமைக்காலம் அது நீண்டது அப்போதே உன்னுடைய கடமைகளை செய்துவிடு ....இல்லையென்றால் இயலாமல் செத்துவிடுவாய் .......http://youtu.be/OHEKwGe1Xqg 

இயந்திரக்கோளாறு காரணமாக அந்த வானூர்தி நடுக்கடலில் விழுந்தது.....

தமிழகத்தில் அவள் ஒரு தமிழ் பேராசிரியையாக பணியாற்றியபோதும், அவளது படைப்புக்கள் அவளது பெயரை பறைசாற்றிக்கொண்டிருந்தன. அவளது பெயர் தமிழ் பத்திரிக்கைகளிலும், தமிழ் அவை/சபை மற்றும் தமிழ் மன்றங்களிலும், அரசிதழ்களிலும் (அரசின் மொழிபெயர்ப்பாளர்) சிறந்த மொழிப்பற்றுடயவர் என்று குறிப்பிட்டிருந்தது குறித்து அவளுக்கு மிகுந்த பெருமிதமும்கூட.

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் மற்றொரு நாட்டிலிருந்து வந்த அன்பு அழைப்பினை ஏற்று அங்கு உரையாட வான்வழிப்பயணம் மேற்க்கொண்டிருந்தபோதுதான் அந்த துயர சம்பவம் நடந்தேறியது. இயந்திரக்கோளாறு காரணமாக அந்த வானூர்தி நடுக்கடலில் விழுந்தது.....


மீட்பு நடவடிக்கயிளிருந்து விடுபட்டு தனது உற்றார் உறவினர்களின் வட்டத்திற்குள் இருந்த அவள் மௌனமாகவே இருந்தால், மிடுக்காக தோற்றமளிக்கும் அவள் அப்போது மிகவும் சோர்வுடன் காணப்பட்டால், அந்த முப்பது நாட்கள் அவளின் மனதில் மிகப்பெரிய மாற்றங்களை எர்ப்படுத்தியிருந்தது. சுற்றியிருந்த பத்திரிக்கை கூட்டமும் அவர்களின் புகைப்பட கருவிகள் கண்சிமிட்டியபடி இருந்தது. வாய்திறந்தால் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அவள் அன்று மௌனமாகவே இருந்தால், அந்த மௌனமான மொழிதான் தன்னைக் காப்பாற்றியது என்பது இவர்களுக்கு தெரிந்திருந்தால் இப்படி கேள்வி கேட்க்கமாட்டார்கள்.
வாழ்க்கைப்பயனத்திர்க்கு மொழி அவசியம் என்றாலும் மொழிதான் வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். இனி இதை உரியமுறையில் அனைவர்க்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற என்னாத்தில் தனது சுற்றமும் நட்பும் சூழ, இல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.

Friday, April 19, 2013

“வயோதிகம்" உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா

“வயோதிகம்" உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை” இந்த வரிகளை கேட்கும்போது தெம்பாகத்தான் இருக்கிறது ஆனால் யதார்த்தம் என்ன? முதியவர்களுக்குரிய தேவைகள் சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா? இயந்திரமயமாகிய வாழ்க்கை ஓட்டத்தில் இளையவர்கள் சிக்கியதால் முதியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரமாக இருக்காதே...http://youtu.be/vvfLzYCmfug

ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை.

உதவி பெற்றதற்கு நன்றி செலுத்துவது ஒரு சிறந்த கடமை. (முகநூளில் ரசித்த பகுதிக்கு ஒரு "LIKE-லைக்" போட்டு விருப்பம் தெரிவிப்பது போல)..... ஒரு சிறு புல்லைக் கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு, இத்தனை உணவும், உடையும் மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை. இவ்வாறு நன்றி கூறும் அடையாளமாகவே, நாம் உண்பதை அவனுக்கு முன் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். அவனுக்குக் காட்டி விட்டுப் பிறகு நாம் தான் உண்ணப் போகிறோம். நாம் பலவிதமான ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு அருள் செய்யும் ஆண்டவனுக்குத் திருவாபரணங்களையும், வஸ்திரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எல்லாருமே இவ்விதம் வீட்டில் பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக கோயில்கள் எழுந்தன. ஆதியில் மகரிஷிகள் மந்திர சக்தியால் எங்கும் நிறைந்த பரம்பொருளை சில விக்ரஹங்களில் விசேஷ சாந்நித்தியம் கொள்ளச்செய்தனர். அப்படிப்பட்ட மூர்த்திகளைச் சுற்றிக் கோயில்கள் எழுப்பப் பட்டுள்ளன. வீட்டில் பூஜை செய்கிறவர் உள்பட அனைவரும் கோயிலுக்குப் போவது என்று கட்டுப்பாடாகப் பழக்கம் வைத்துக் கொண்டால் தான் அங்கு பூஜைகள் குறைவின்றி நடக்கும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் புண்ணிய மொழி வழங்கும் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் கோயில் வழிபாடு நடக்கச் செய்ய வேண்டும். இதுதான் நம் முதல் கடமை. -நன்றி தினமலர் ஆன்மீக வகுப்பறை.
ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும், நம்பினோர்க்கு அருளும் முருகா... நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்.... அதை நான் கண்டு மகிழவேண்டும்....
பாடலை கண்ணதாசன் அவர்கள் எழுத கே. வி. மகாதேவன் அவர்கள் இசை அமைத்த "தேவரின் - துணைவன்" படத்திற்காக... http://youtu.be/zPsC1dtyGe

நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க

இன்று பிறந்தநாள், பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்.....HAPPY BIRTH DAY 2 U.... Wish you many happy returns of the day ... மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று நீங்களும், உங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்ப நபர்களும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... "நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே, நூறாண்டு காலம் வாழ்க "... http://youtu.be/i-jlk4dEFLY
பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்யும் போது, நூறாண்டு காலம் வாழ்க! என்று சொல்லி வாழ்த்துவர். இதற்குள் பெரிய அர்த்தம் புதைந்து கிடக்கிறது. மனிதர்களின் சராசரி வாழ்க்கையில் மனைவி, மக்களின் முன்னேற்றத்திலேயே 60 வயது வாழ்க்கை கழிந்து விடுகிறது. இந்த வயதில், உலக பந்தத்தில் இருந்து விடுபட்டு விட வேண்டும். எனவே இச்சமயத்தில், சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்துகிறார்கள். இதன்பிறகு கணவன், மனைவி இருவரும் பொறுப்புகளை தங்களுக்கு அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். எண்பது வயதுக்குள் இவர்கள் பக்குவமுதிர்ச்சியும் பெற்று விடுவார்கள். இதன் பிறகு நற்கதி அடைய கடவுள் இவர்களுக்கு வழிகாட்டுவார். எனவே சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். தொண்ணூறு வயது வரை வாழ்ந்தால் அவர்களைப் பிடித்த நவக்கிரக தோஷங்கள் அகன்று விடும் என்பார்கள். நூறு வயது வரை வாழும் வாய்ப்பு கிடைத்தால், கடவுளுடன் மனிதன் ஒன்றிப் போவான். சாப்பிடுவது, உறங்குவது, உணர்வது, பார்ப்பது, நடப்பது எல்லாமே இறைவனுக்குள் ஒடுங்கிப் போகும். அதாவது இவற்றை செய்யும் ஐம்புலன்களும் அடங்கிப் போகும். இப்படி இறைவனுக்குள் அடங்கிப் போகிறவர்கள் மீண்டும் பிறவியெடுக்கமாட்டார்கள் என்பது ஐதீகம். இதன் அடிப்படையில் தான் நூறாண்டு காலம் வாழ்க! என்று சொல்லி வாழ்த்துகிறார்கள் -நன்றி தினமலர் ஆன்மீக வகுப்பறை.

தை பூசம் அன்று பெங்களூர் ரமணி அம்மாள்

தை பூசம் அன்று பெங்களூர் ரமணி அம்மாள் அவர்களின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது, அதைக்கேட்ட ஒரு குழந்தை பாடுபவர் ஒளவை பாட்டி போன்று இருப்பவர்தானே என்று கேட்டனர். நான் அவரில்லை என்று கூறியதும்.... அவர் எப்படி இருப்பார் என்று கேட்டனர், உடனே இந்த திரைப் பாடல் ஞாபகம் வரவே, எனது கைப்பேசியில் இந்த பாடலை ஓடவிட்டு இதோ பாடிக்கொண்டிருப்பவர்தான் பெங்களூர் ரமணி அம்மாள் என்றேன்."பாடல் -குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்"  எதிர் வரும் சந்ததியினருக்கு சில திரைப்பாடல்கள் சரித்திர சான்றாக உள்ளது மகிழ்ச்சியான செய்தி. http://youtu.be/Vrv0Gv463Uw

குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள்

உங்களின் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள். காரணம் உயர் கல்வி படிப்பிற்கு தேவையான தொகை கிடைக்காதபோது நீண்ட நாட்கள் வங்கி கணக்கை வைத்திருந்த தகுதியின் அடிப்படையில் உங்களின் மகள்/மகனுக்கு அதே வங்கியில் உடனே கல்விக்கடன் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது 18 வயதிற்கு பிறகு உங்களின் மகள்/மகன் படிப்பு செலவுக்கு உங்களை சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை, அவர்களாகவே கல்விக்கடன் பெற்று அவர்களின் விருப்பப்படி படிக்க முடியும். அவர்களின் காலில் அவர்களே நிலைத்து நிற்கும் பொறுப்புள்ளவர்களாக உங்கள் பிள்ளைகளும் இப்படிப்பாடுவார்கள் "எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே". http://youtu.be/geYyN5_QYKg

குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெரும் கல்வி


#கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... மேல்நிலை படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்கவைகலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத்தொடங்கிவிடுகின்றனர். தற்போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவுகள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு

தீர்கமான முடிவோ சிந்தனை இல்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழலில்தான்..தற்போதைய கல்விக் கண்காட்சியிலும, மற்றும் பல நிறுவனங்களின் [Campus interview] கல்லூரியில் நேர்காணலின்போதும் அனைத்து மாணவர்களுக்கும் இதை எதிர்கொள்வது எப்படி என்பதை கூறிவருகிறேன். குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெரும் கல்வியாக கீழ்வரும் 5 பாடப்பிரிவுகள் உள்ளது குறிப்பிடத்தக...்கது.

1. வணிகவியல் (Commerce) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது-மேற்கொண்டு வேலையில் சம்பாதித்துக்கொண்டே படித்துக்கொள்ளலாம்) 5years course of BCOM-BL, or FICA, BCS...போன்றவை....

2. மருத்துவ செவிலியர் (Nursing) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது அல்லது பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும்)

3. கணினிக்கல்வி (Computer) (பல்வேறு விதமான கணினி சார்ந்த பட்டய மற்றும் உயர் பட்டப் படிப்புகள் )

4. ஆசிரியர் பயிற்சி.(Teachers Training)

5. சட்டக்கல்வி (Law) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் 5 ஆண்டு சட்டக் கல்வி அல்லது ஒரு சிறு சட்டம் சார்ந்த பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும், தனியார் பணியிடங்களில் அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்திருக்கும் கல்வி இது)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு http://youtu.be/qvCDPf1_Qeg

"EXCHANGE OFFER -ஒரு உண்மை உயிர்த்தெழுகிறது"

"EXCHANGE OFFER -ஒரு உண்மை உயிர்த்தெழுகிறது" பொறியியல் கவுன்சிலிங் முடித்து தான் ஆசைப்பட்ட கல்லூரியை தேர்வு செய்த திருப்தியுடன் வெளியே வந்தாள் கஸ்தூரி. ஆட்டோ ஓட்டி தன் மகளை பொறியியல் கல்லூரி வரைக்கும் கொண்...டு வந்த திருப்தியுடன் கந்தசாமியும் இருந்தார். ஆனாலும் இன்னும் நான்கு வருடங்களுக்கு செலவு செய்ய வேண்டிய தொகை ரொம்பவே பயமுறுத்தத்தான் செய்தது. கவுன்சிலிங் நடந்த ஹாலை விட்டு வெளியே நடந்து வந்து கொண்டிருந்த போது "எக்ஸ்கியூஸ்மீ" என்ற குரல் கேட்க இருவரும் திரும்பினர். அழைத்தது ஒரு பெண். "உங்களிடம் கொஞ்சம் பேசலாமா" என்று கேட்டுக்கொண்டே அருகிலிருந்த காருக்கு அருகில் அழைத்தாள். கந்தசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கஸ்தூரியை அழைத்துக் கொண்டு அருகில் சென்றார். தன்னை மதுமதி என்று அறிமுகம் செய்து கொண்ட அந்த பெண்மணி கந்தசாமியின் முழு பயொடேட்டாவையும் இவரிடமே சொல்ல இவருக்கு தூக்கி வாரிப் போட்டது.... ஆனாலும் அந்த பெண்மணி சொன்ன டீல் கந்தசாமிக்கு கொஞ்சம் கிறங்கடிக்கத்தான் செய்தது. கஸ்தூரி தேர்வு செய்திருந்த முதல் தர வரிசை கல்லூரியின் பிரதிநிதியான அந்த பெண்மணி சொன்ன டீல் என்ன தெரியுமா? தங்களுக்கு சொந்தமான புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த இன்னொரு கல்லூரியில் சேரும்படியும் அதற்கு பிரதிபலனாக நான்கு வருடங்களுக்கான மொத்த கல்விக் கட்டணத்தையும் கல்லூரியே ஏற்றுக் கொள்வதுடன் ஒரு கணிசமான தொகையும் கையில் தருவதாக சொன்னார்.

இங்கே விஷயத்துக்கு வருவோம். கஸ்தூரி முதலில் தேர்வு செய்த கல்லூரியில் அவள் தேர்வு செய்த பிரிவின் விலை சுமார் 12 லட்சம். அதனை அவள் சேராமல் விட்டு விட்டால் அந்த இடம் கல்லூரி கோட்டாவுக்கே போய் சேர்ந்து விடும். பின் அவர்கள் அதனை கவுன்சிலிங் முடிந்தவுடன் காலி இடமாக காட்டி இன்னும் அதிக விலைக்கு விற்று விடுவார்கள். ஆனால் இந்த நான்கு வருடங்களில் கஸ்தூரிக்கு அவர்கள் கட்டும் கட்டணம் சுமார் 4 லட்சம் என்றும் கையில் கொடுத்த தொகை 2லட்சம் என்றே வைத்துக் கொண்டாலும் கல்லூரி முதலாளிக்கு கிடைத்த லாபம் 7லட்சம் மற்றும் அதற்கு மேல். கஸ்தூரியும் ஒரு வழியாக எந்த செலவும் இல்லாமல் இந்த ஆண்டு இறுதியாண்டினை படித்துக்கொண்டிருக்கிறாள். பல்கலைக் கழக அளவில் தரவரிசையிலும் இடம் பிடித்திருக்கிறாள். இந்த EXCHANGE OFFER சூப்பரா இருக்கில்ல...........சட்டம் போட்டு தடுக்குர கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது......திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது........

நீங்கள் 6அடுக்கு அல்லது அதற்கும் மேற்ப்பட்ட, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் என்றால்

நீங்கள் 6அடுக்கு அல்லது அதற்கும் மேற்ப்பட்ட, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் என்றால் இது உங்களுக்கு மிகவும் பயன்படும். திடீரென்று அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவருக்கு மருத்துவ மற்றும் வேறுவித அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் மின் தூக்கியை பயன்படுத்தும்போது இடையில் பல இடங்கள் நின்று போகுமாறு ஏற்க்கனவே மின்தூக்கி விசைப்பலகையில் (LIFT SWITCH) சமிக்கைகள் தரப்பட்டிருந்தால் அவற்றை நீக்க, விசைப்பலகையின் ஏதாவது இரண்டு பொத்தான்களை உதாரணத்திற்கு என் 4 மற்றும் 6 ஆகிய பொத்தான்களை அழுத்திக்கொண்டு மூன்றாவதாக வேறு ஒரு என்னை, 2 அழுத்தினால் ரீசெட்(RESET) என்கிற முறையில் அனைத்து தளங்களிலும் நிற்கவேண்டிய சமிக்கைகள் நீக்கப்பட்டுவிடும். உடனே நீங்கள் செல்லவேண்டிய மாடி-குடியிருப்பு தளத்தின் என்னை மட்டும் அழுத்தினால் அந்த இடத்திற்கு மட்டும் மின்தூக்கி இயங்கும் . இதை அவசர கால உதவிக்குமட்டும் பயன்படுத்துங்கள் ....

அரசர் மெச்சிய பரிசு!


அரசர் மெச்சிய பரிசு!

அரசருக்கு பிறந்தநாள் என்பதால் மக்களிடையே பெரும் சந்தோஷம் நிரம்பியிருந்தது. அரசர் அளித்த அறுசுவை உணவை வயிறார உண்டு, அரசரை வாழ்த்த மக்கள் காத்திருந் தார்கள். அரசருக்குப் பரிசளிக்க தங்களால் இயன்ற பொருட்களை கொண்டு வந்திருந்தார்கள்.
அங்கு அரசர் வந்தார்...

... ஒவ்வொருவராக பரிசுகளை அளித்து வணங்கிச் சென்றனர். பிறகு அரசர் அவர்கள் அளித்த பரிசு பொருட்களை கண்ட பிறகு, மக்களைப் பார்த்து... "நீங்கள் அன்புடன் எனக்கு பரிசுகளை அளித்து கௌரவித்தீர்கள். நன்றி... அவற்றில் மிக மிகச் சிறந்த பரிசு ஒன்றைக் கண்டேன்" என்று நிறுத்தினார். இதைக் கேட்ட மக்களுக்கு ஆவலாக இருந்தது. ‘அந்த உயர்ந்த பரிசு எது? யார் அளித்திருப்பார்கள்?’ தங்களுக்குள் முணுமுணுத்தார்கள்.

"நான் கொடுத்த மாணிக்கக்கல்லாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் உலகில் அதைப்போல் வேறொன்றைக் காணமுடியாது" என்றான் மாணிக்க வியாபாரி.

இதைக் கேட்ட வைர வணிகரோ,"உலகின் தலைசிறந்த வைரம். அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. எனவே என்னுடையதுதான் சிறந்த பரிசாக இருக்க முடியும்" என்று கூறினார்.

அதற்கு நெசவாளி... "நான் அரும்பாடுபட்டு நெய்து அளித்த பட்டாடைகள் மேலை நாடுகளில் கூட கிடைக்காது. அதைத்தான் மன்னர் சொல்லி இருப்பார்" என்றார். இவர்கள் பேசுவதைக் கேட்ட பூக்காரி... "ஆடையோ, ஆபரணங்களோ அரசரைக் கவர்ந்திருக்க முடியாது. நான் புத்தம் புதிய மலர்களை வண்ணமிகு மாலையாக்கி அரசருக்கு அளித்தேன். வாசம் மிகுந்த மென்மையான மலர் மாலையை விடவும் சிறந்தது உண்டோ? இதைத்தான் அவர் குறிப்பிட்டிருக் கிறார்" என்றாள்.

இப்படி ஒருவருக்கொருவர் தாங்கள் அளித்த பரிசைத்தான் அரசர் மெச்சியிருக்கிறார் என்று பேசிக்கொண்டனர். இந்த சலசலப்பைக் கேட்ட பிறகு அரசரே பதில் கூற ஆரம்பித்தார். "எல்லா பரிசுகளும் சிறந்தவையே. இதில் என்னை மிகவும் கவர்ந்த பரிசு, காலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடியது. எல்லோருக்கும் பலன் தரக்கூடியது. அதுதான் இது..."என்று ஒரு சிறிய மரக் கன்றைக் காட்டினார்.

"பொன்னையும் பொருளையும் சேமிப்பதைவிட உயிருள்ள மரங்களையும் செடிகளையும் சேமிப்பதே புத்திசாலித்தனம்" என்று கூறி மரக்கன்றை பரிசளித்த விவசா யியை மெச்சி, அரசர் பரிசளித்துப் பாராட்டினார்.

"மாணவர்களுக்கு தன்நம்பிக்கையையும் சேர்த்து கற்ப்பிக்கும் சிறப்பான கல்வி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்"


"மாணவர்களுக்கு தன்நம்பிக்கையையும் சேர்த்து கற்ப்பிக்கும் சிறப்பான கல்வி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்" இன்றைய பார்வை.....சிங்கப்பூரிலிருந்து கோகி ....உலகளாவிய தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவிற்கு, ஏப்பரல் மாதம் முழுதும் சிங்கப்பூரில் தமிழ் மாதமாக கொண்டாடப்படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல... தினமும் பல தமிழ் மொழி இலக்கியம் சார்ந்த நிகழ்சிகள்...மாதம் முழுவதும் கொண்டாடப்படுவது ஒவொரு தமிழரும் பெருமைப்படக்கூடிய ஒன்று, நேற்றைய நிகச்சி ஒன்றில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, வலர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், தங்கமீன் வாசகர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் திரு ஞாநி அவர்களின் "திரைக்கதைப் பயிலரங்கப் பயிற்சி ஒன்றை சிங்கப்பூர் தமிழர்களுக்காக மிக மிகச்சிறப்பாக சிங்கப்பூரில் முன் எப்போதும் இல்லாத அளவில் நடைபெற்றது. ஆச்சரியம் என்னவென்றால் !!! இந்தப்பயிலரங்...கில் பள்ளிக்கூட மாணவ மாணவிகள் பெருமளவு பங்கேற்றது குறிப்பிடத்தகுந்த ஒன்று, உலகில் வேறெங்கும் காணாத ஒரு அதிசய ஆனந்தத்தை நான் அங்கே கண்டேன், பயிலரக்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்கள் வந்திருந்ததுடன் அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவருக்காக பயிலரங்கில் கலந்துகொண்டது, கற்பனைக்கும் எட்டாத ஒரு நிகழ்ச்சியாக எனக்கு தோன்றியது. சிங்கப்பூரில் ஆசிரியர்களும் ஒவ் ஒரு மாணவரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் தந்து அவர்களை ஊக்குவிப்பதைப்பார்க்கும்போது, சிங்கப்பூரின் கல்விக்கொள்கைகளையும், அங்கு பயிலும் மாணவர்களையும், தன்னலமற்ற ஆசிரியர்களையும் நினைத்துப்பார்க்கையில்... ஒவொரு தமிழரும் பாராட்டி பெருமைப்படக்கூடிய ஒன்றாக எனக்கு தோன்றுகிறது. http://youtu.be/VMmNLG7IvEE

என் வீட்டு தோட்டத்தில் காய்த்த ஒரே ஒரு வேண்டைக்காயாக இருந்தாலும் அதில் செய்யும் சாம்பாரின் மனமும் சுவையும் வேறு எந்த சாம்பாரிலும் கிடைப்பதில்லை,

இன்றைய பார்வை:- உலகளாவிய தாவரவியல் பூங்காவில், சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவும் "சிறந்த தாவரவியல் பூங்கா" என்கிற சிறப்பு மதிப்பை பெறுகிறது. இதை மேலும் சிறப்படயசெய்வது சிங்கப்பூரின் ஒவொரு குடிமக்களின் கடமையாகும். என்னுடைய தாத்தா (அப்பப்பா).... காலம் சென்ற திரு எஸ் .கிருஷ்ணா சுவாமி ஐயர் அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவின் உயர் அதிகாரியாக
Ooty (Nilgiri hills) Botanical garden superintendent இருந்தபோது (1925) பிரிடிஷ் அரசாங்க உதவியுடன் மலர் கண்காட்சியை மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டு உலக அளவில் பேசப்பட்டது. இன்றளவும் ஒவொரு ஆண்டும் நடக்கும் மலர் கண்காட்சிக்கு எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கென்று சிறப்பு அழைப்பு வருகிறது. என்னுடைய பாட்டி (அப்பம்மா) 1979 வரை தாத்தாவின் அரசாங்க ஓய்வூதியத்தைப் பெற்றுவந்தார். இயற்கையை நேசிக்க நாம் ஒவொரு நாளும் ஒரு சில மணி நேரமாவது ஒதுக்க வேண்டும், என் வீட்டு தோட்டத்தில் காய்த்த ஒரே ஒரு வேண்டைக்காயாக இருந்தாலும் அதில் செய்யும் சாம்பாரின் மனமும் சுவையும் வேறு எந்த சாம்பாரிலும் கிடைப்பதில்லை, தாவரங்களை நேசிக்க பழகுங்கள். தாவரங்கள் நமது அன்பை புரிந்துகொண்டு நம்மிடம் பேசும், அந்த உன்னதமான ஸ்பரிசத்தை உங்களாலும் உணரமுடியும். முயற்சி செய்யுங்கள் அதனால் கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காத சிறந்த மகிழ்ச்சி அது, அதை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும். http://youtu.be/cu-2yxYL06w

காக்கா பாட்டியிடமிருந்து வடையை திருடவில்லை. பாட்டிதான் தினமும் முதல் வடையை காக்கைக்கு வைப்பது வழக்கம்

காக்கா பாட்டியிடமிருந்து வடையை திருடவில்லை. பாட்டிதான் தினமும் முதல் வடையை காக்கைக்கு வைப்பது வழக்கம் ஆகவே அந்த கதையில் திருட்டு என்பது இல்லை ஆனால் தந்திர நரிதான் ஏமாற்றுகிறது என்றும்....எனவே ஏமாறுவதுதான் தவறு என்று கதை கருத்து கூறுகிறது...... http://youtu.be/sKvIu_iS3y0

25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி

திருமண வா‌ழ்‌க்கையை எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் 25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ந்த ஊ‌ர் செ‌ய்‌தியாள‌ர் ஒருவ‌ர், அவர்களைப் பே‌ட்டி‌க் க‌ண்டு ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ல் ‌பிரசு‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர்.

... நேராக அ‌ந்த த‌ம்ப‌திக‌ளிட‌ம் செ‌ன்று, 25ஆ‌ம் ‌திருமண நாளை‌ ஒ‌ற்றுமையாக‌க் கொ‌ண்டாடுவது எ‌ன்பது பெ‌ரிய ‌விஷய‌ம். இது உ‌ங்களா‌ல் எ‌ப்படி முடி‌ந்தது. உ‌ங்களது ‌திருமண வா‌ழ்‌‌வி‌ன் வெ‌ற்‌றி ரக‌சிய‌ம் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்டா‌ர்.

இ‌ந்த கே‌ள்‌வியை கே‌ட்டது‌ம், அ‌ந்த கணவ‌ரு‌க்கு தனது பழைய தே‌னிலவு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நினைவு‌க்கு வ‌ந்தது. "நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தே‌னிலவு‌க்காக ‌ஒரு ரம்மியமான மலைப்பகுதிக்கு செ‌‌ன்றோ‌ம். அ‌ங்கு எ‌ங்களது பயண‌ம் ‌சிற‌ப்பாக அமை‌ந்தது. அ‌ப்பகு‌தியை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்க நா‌ங்க‌ள் கு‌திரை ஏ‌ற்ற‌ம் செ‌ல்வது எ‌ன்று ‌தீ‌ர...்மா‌னி‌த்தோ‌ம். அத‌ற்காக இர‌ண்டு கு‌திரைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து, இருவரு‌ம் ஒ‌வ்வொரு கு‌‌திரை‌யி‌ல் ஏ‌றி‌க் கொ‌ண்டோ‌ம். எ‌னது கு‌திரை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. ஆனா‌ல் எ‌ன் மனை‌வி செ‌ன்ற கு‌திரை ‌மிகவு‌ம் குறு‌ம்பு‌த்தனமானதாக இரு‌ந்தது. ‌திடீரென ஒரு து‌ள்ள‌லி‌ல் எ‌ன் மனை‌வியை ‌அது கீழே‌த் த‌ள்‌ளியது. அவ‌ள் ‌‌கீழே இரு‌ந்து எழு‌ந்து சுதா‌ரி‌த்து‌க் கொ‌ண்டு அ‌ந்த கு‌திரை‌யி‌ன் ‌மீது ‌மீ‌ண்டு‌ம் ஏ‌றி அம‌ர்‌ந்து கொ‌ண்டு, "இதுதா‌ன் உன‌க்கு முத‌ல் முறை" எ‌ன்று அமை‌தியாக‌க் கூ‌றினா‌ள்.‌ சி‌றிது தூர‌ம் செ‌ன்றது‌ம் ‌மீ‌ண்டு‌ம் அ‌ந்த கு‌திரை அ‌வ்வாறே செ‌ய்தது. அ‌ப்போது‌ம் எ‌ன் மனை‌வி ‌மிக அமை‌தியாக எழு‌ந்து கு‌திரை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து கொ‌ண்டு "இதுதா‌ன் உன‌க்கு இர‌ண்டா‌ம் முறை" எ‌ன்று கூ‌றியவாறு பய‌ணி‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ள்.

மூ‌ன்றா‌ம் முறையு‌ம் கு‌திரை அ‌வ்வாறு செ‌ய்தது‌ம், அவ‌ள் வேகமாக அவளது கை‌த்து‌ப்பா‌க்‌கியை எடு‌த்து அ‌ந்த கு‌திரையை சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டா‌ள்!!!

இதை‌க் க‌ண்டு அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த என‌க்கு ‌மிகவு‌‌ம் கோப‌ம் வ‌ந்து‌வி‌ட்டது. நா‌ன் அவளை ‌தி‌ட்டினே‌ன். "ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்தா‌ய்? ‌நீ எ‌ன்ன மு‌ட்டாளா? ஒரு ‌வில‌ங்கை‌க் கொ‌ன்று‌வி‌ட்டாயே? அ‌றி‌வி‌ல்லையா?" எ‌ன்று கே‌ட்டே‌ன்.

அவ‌ள் ‌மிகவு‌ம் அமைதியாக எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்து, "இதுதா‌ன் உ‌ங்களு‌க்கு முத‌ல் முறை" எ‌ன்றா‌ள். அ‌வ்வளவுதா‌ன். அத‌ன்‌பிறகு எ‌ங்களது வா‌ழ்‌க்கை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ர் கணவ‌ர். !!!

புவியின் மேற்பகுதி அதன் சுழற்சியோடு கிழக்கு நோக்கி நகர்கிறது

இன்றைய பார்வையில்(18-4-2013)-புவியின் மேற்பகுதி அதன் சுழற்சியோடு கிழக்கு நோக்கி நகர்கிறது:- பூமியின் மேற்ப்பரப்பில் அமைந்துள்ள பாரைத்தட்டுகள் நகர்கின்றன என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்ற இரண்டு வாரங்களாக உலகின் பல பகுதிகளில் நடந்த பூமி அதிர்வுகள் மேலும் அதை உறுதிபடுத்தும்படி அமைந்துள்ளது. ஆசிய கண்டத்தின் பூமத்தியரேகைக்கு மேற்பகுதி மற்றும் கீழ் பகுதி என பல பாறை அடுக்குகளால் ஆனது என்றும், இதில் எந்த ஒரு பாறை தட்டும் நகரும்போது அதனால் ஏற்ப்படும் இடைவெளியை மற்றொரு பாறை தட்டு நகர்ந்து சரிசெய்யும் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் நில அதிர்வு உணரப்பட்டதும் அடுத்த சில வாரங்களில் ஆசிய பாறைத் தட்டுகளின் கிழக்கு பகுதியான இந்தோனேசியா அல்லது மேற்கு முனையான ஆப்கனிஸ்தான் மற்றும் வளைகுடா பாரைத்தட்டுகள் பகுதியில் எதிரொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, நேற்றைய ஈரான் பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட கடுமையான நில அதிர்வும் இன்று விடியற்காலையில் ஏற்ப்பட்ட இந்தோனேசியா நில அதிர்வும் அதை உறுதிப்படுத்தின.
"உலகே மாயம் வாழ்வே மாயம்" http://youtu.be/skjJMsSCosQ

Biscuit என்கிற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அகராதியில் "பிஸ்கோத்து"

Biscuit என்கிற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அகராதியில் "பிஸ்கோத்து" என்றிருந்தது... பிஸ்கோத்து. பள்ளிகூட நாட்களில் மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ்-தின்பண்ட வகையில் Britannia little hearts biscuit முதல் பத்து இடங்களுக்குள் வந்துவிடும். என் பாட்டி கதை சொல்லும்போது அந்தக்காலத்தில் (1890) பள்ளிக்கூடத்தில் "கண்ணன் தின்னும் பண்டம் எது? என்று கேட்க அதற்க்கு மாணவர்கள் "மிட்டாய்" , மம்மு-சாதம், வடை என பதில் சொல்ல அதற்க்கு ஆசிரியர், கண்ணன் தின்னும் பண்டம் "வெண்ணை" என சொல்லிக்கொடுப்பாரம்... இதைகேட்ட குழந்தையாக இருந்த எனக்கே சிரிப்பு வந்ததென்றால், வரும்காலத்து அதாவது பேரக் குழந்தைகள் கேட்கவே வேண்டாம்... "இதுகூட தெரியாதா" என நிச்சயம் கிண்டலடிப்பார்கள். http://www.youtube.com/watch?v=jDddCYusDRg&feature=share&list=SPF2514C5A53D7D360

“Double the volume of Business-Award -2002”

எனக்குமட்டும் யோசிக்க இன்னும் சிறிது நேரம் தாருங்கள், மேலும் சிறப்பாக செய்யமுடியும் என்றேன் "அதை சரியாக புறிந்துகொள்ளாத நிறுவனத்தின் உரிமையாளர் "வேலையை விட்டுவிட்டு உன் வீட்டிற்கு சென்று உட்கார்ந்து யோசி என்றார்" எனக்கு வந்த கோபத்தை செயலில் காட்டினேன்... அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு புரியும் படி ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 32மணிநேர உற்பத்தியாக்கி -லாபத்தை செயலில் செய்து காட்டியபோது அசந்த்துபோனார்கள்" நான் அவர்களிடம் சொன்னது நிறுவனம் எனக்கு சம்பளம் தரவில்லை நான்தான் நிறுவனத்திற்கு தருகிறேன் என்றேன், அதோடு நான்மட்டுமில்லாமல் என்னுடைய குழுவினரும் கூட அப்படித்தான் என்றேன் . "நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்" கோகி.... “Double the volume of Business-Award -2002” GoKi.

ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படுமாறு அமைந்தது மகிழ்ச்சியான ஒன்று.

அது 2004 பிப்ரவரி மாதம் எனது மகள்,மகன் இருவரும் ஒரே மாதத்தில் பிறந்தநாள் வரும், 4நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள் (24 & 28 பிப்)ஆகவே இருவருக்கும் சேர்ந்து ஒரே நாளில் (24 அல்லது 28 இல் ) பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பது வழக்கம். இரண்டு வாரத்திற்கு முன்பிருந்தே அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நான் என் மகளிடம் உனக்கு பரிசுப்பொருட்கள் வரும் பொது மகிழ்ச்சிதானே என்று கேட்க அவளும் ஆமாம் என்றால. இந்த வருடம் அதை சற்று மாற்றி நீ மற்றவருக்கு பரிசு தந்தாள் எப்படி, என்று கூற... நன்றாக இருக்கிறதே என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், இடையில் புகுந்த நான் நிறைய பேனா பென்சில் நோட்டு புத்தகம் போன்ற பொருட்களை வாங்கி எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரசு ஆரம்ப பள்ளிக்கு சென்று ஏழை மாணவ மாணவியருக்கு அந்த பொருட்களை தந்தாள் எப்படி என்று கேட்க, அதுவே சரி என்று முடிவானது. எனது மகளும் மகனும் அன்றிலிருந்தே சிறுக சிறுக பொருட்களை வாங்கி சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள், அருகே இருந்த பள்ளியைப்பற்றி விசாரித்தபோது 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் படிப்பதாக தெரிந்தது, எங்கே நம்முடைய பரிசுப்பொருட்கள் மிகவும் குறைவாக போதுமான அளவில் இருக்காதோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது நண்பர்களிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன் சரியாக இரண்டு நாட்கள் இருந்தபோது ஒரு லாரி நிறைய பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களுடன் புத்தகப்பை உட்பட வீட்டின் முப்பு வந்திறங்கியதைப் பார்த்ததும் எங்கள் அனைவருக்கும் ஆச்சிரியமாகிவிட்டது. இரண்டு முன்னணி வர்த்தக நிறுவனத்திலிருந்து வந்திருந்த அந்த பரிசுப் பொருட்களுடன் ஒரு கடிதமும் இருந்தது. அந்தக்கடிதத்தில் உங்கள் குழந்தைகள் அவர்களின் பிறந்தநாளை கொடாட வகுத்த திட்டங்கள் எங்களின் நிறுவனத்தை மிகவும் கவர்ந்தது, ஆவகே எண்களின் நிறுவனம் அவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு, அவர்கள் செய்யும் சேவையில் இந்த பரிசுப்பொருட்களையும் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது. அதற்க்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டு நிறுவனம் என்பது மாறி 4,5 என நிறுவனக்கள் போட்டி போட்டுக்கொண்டு அவகளின் விளம்பரத்திர்க்காவவும் பரிசுகளை குவிக்கத்தொடகினார்கள். எது எப்படியோ சிறு துளி பேரு வெள்ளம் போல ஒரு சிறிய எண்ணம் மிகப்பிரிய வரவேற்ப்பை பெற்றதோடு ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படுமாறு அமைந்தது மகிழ்ச்சியான ஒன்று.

உலக வர்த்தக வரலாற்றில், இரண்டே வாரங்களில் 25% அசுரவளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிற

இன்றைய பார்வையில், இது ஒரு ஆராய்ச்சியின் குட்டி (கொசுறு) உங்களுக்காக:- உலக வர்த்தக வரலாற்றில், இரண்டே வாரங்களில் 25% அசுரவளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிற (Mar-2013)ஜப்பானிய நாணய "என்" பல வர்த்தக ஆராய்ச்சி வல்லுனர்களின் கவனத்தை கவர்ந்திழுத்திருக்கிறது. ஜப்பானின் மிக அருகே இருக்கும் வடகொரியாவில் வன்மம் எந்தநேரமும் வெடிக்கலாம் (அங்கு இன்னும் இரண்டு நாளில் பிறந்தநாள் கொண்டாட்டம் வேறு பல விளைவுகளுக்கு அடிபோட்டுக்கொண்டிருக்கிறது) இப்படிப்பட்ட ஒரு கவலையான சூழ்நிலையில் மேலும் பல நாடுகளில் உலக வர்த்தகம் சரிந்திருக்கிற இந்த நேரத்தில், இப்படி ஒரு அபரிவிதமான ஜப்பான் பங்கு வர்த்தக வளர்ச்சி பலருக்கு மேலும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது. இன்னும் சில ஜோதிடம் சாஸ்திர வல்லுனர்கள், சூரியன் உதிக்கும்-சூரிய நாடான ஜப்பானுக்கு, சூரியன் தன்னாட்சி பெரும் சித்திரை மாதப்பிரப்பின் விளைவு இது என்கிறார்கள். இதைப்போலவே ஐரோப்பாவின் "யுரோ" நாணயத்தின் அசுர வளர்ச்சியையும், அங்கு ஏற்ப்பட்ட பொருளாதார சீர்கேட்டையும் பெற்ற வர்த்தக வரலாறு இப்போது இதையும் தனது வரலாற்றுப் பதிவில் பாதிக்கின்றது.."காசேதான் கடவுளப்பா" .. http://youtu.be/qHkjZ_ceV-c

இன்றைய உலகளாவிய பார்வையில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளித்திரை,

இன்றைய உலகளாவிய பார்வையில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளித்திரை, வளைகுடா நாடுகளில் வெள்ளிக்கிழமையும், மற்ற நாடுகளில் சனி ஞாயிறு வார விடுமுறைநாட்கள் என்பதால், சர்வதேச அளவில் திரை அரங்குகளும், சின்னத்திரை நிகழிச்யிலும், வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு திரைப்பட காட்சி என்பது தற்ப்போது நிச்சயமாகிவிட்ட ஒன்று. சில நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத ஆங்கில திரைப்படம் ஒன்றிற்கு வடகொரிய அரசு அனுமதி அளித்துள்ளது இன்று அங்கு அந்த திரைப்படம் திரையிடப்படுகிறது. ஒரு சிறந்த திரைப்படம் சமுதாயத்தை சீரடயச்செயும் என்றாலும் சில திரைப்படம் சமுதாயத்திற்கு சீர்கீடாகவும் உள்ளது. நான் சந்தித்த ஒரு பிரபல திரையரங்கு நிறுவனத்தின் மேலாளர் ஒருவரது திறமையும் பாராட்டவேண்டிய ஒன்று, அவர் ஒரு தமிழர் அல்ல, தமிழில் அவருக்கு வெறும் நான்கு சொற்களே (வணக்கம், வாருங்கள், சாப்பிட்டீர்களா, நன்றி) தெரியும் இருந்தும் அவருக்கு ஏராளமான தமிழ் பேசும் நபர்கள் இருக்கிறார்கள், தமிழ் பேசத்தெரியாத அவர் பல தமிழ் இலக்கிய கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மேலும் அவரிடம் ஆயிரக்கணக்கிலான ரசிகர்களின் மினஞ்சல் மற்றும் கைத்தொலைபேசி விவரங்களின் தொகுப்பை உருவாக்கி அதை சிறப்பாக பயன்படுத்திவருகிறார். ஒவ் ஒரு வார இறுதி விடுமுறை நாட்களுக்கு அவர் பணிபுரியும் திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படம் குறித்த விவரங்கள் மற்றும் அந்த திரையரங்கில் கூட்டமில்லாத நாட்களில் வழங்கப்படும் நுழைவுச்சீட்டின் தள்ளுபடி விவரங்களையும் தவறாமல் அனைவருக்கும் தெரிவித்துவருகிறார். நன்கு பிழைக்கத் தெரிந்தவர்....... தமிழர்கள் மற்ற மொழி, நாடு, இனத்தவர்களிடம் நட்புடன் நல்ல பெயர் பெற்றாலும், ஒரு தமிழனுக்கு மற்றொரு தமிழன்தான் எதிரி என்கிற அளவில் தமிழருக்கிடயில்தான் நட்புமுறை சிறப்பாக இல்லை என்று தோன்றுகிறது. http://youtu.be/HYVmsb7q7zc

"மிட்டாய் கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன், திறந்திருந்தால் வாங்கித்தரமாட்டேன்".....

"மிட்டாய் கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன், திறந்திருந்தால் வாங்கித்தரமாட்டேன்"......... 2003ல் நடந்த சம்பவம் இது. எப்போதும் என் மனைவி குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார், எனவே என் மகன், மகள் இருவரும் "அப்பா" செல்லம். அன்று வழக்கம்போல அலுவலகத்திலிருந்து வீடு வந்ததும் குழந்தைகள் இருவரும் ஓடிவந்து, அப்பா இன்று சின்னத்திரையின் விளம்பரத்தில் புதியதாக அறிமுகமான "லாலி பாப்" மிட்டாய் பற்றி கூறி..... அப்பா, அப்பா, (பிளீஸ்)தயவுசெய்து வாங்கித்தாருங்கள் என்றனர். கண்டதையும் வாங்கித்தந்து குழந்தைகளின் உடல் நலனை கெடுக்காதீர்கள் என்று மனைவி கோபித்துக்கொண்டார். ஆகவே இதற்க்கு ஒரு தீர்வு காண, குழந்தகளிருவரிடமும், நான் சொல்லப்போவதை கவனமாக கவனியுங்கள் "மிட்டாய் கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன், திறந்திருந்தால் வாங்கித்தரமாட்டேன்" என்றேன். அப்பா நீங்க எங்களை ஏமாத்தறீங்க என்று சிணுங்கிய குழந்தைகள், சிறிது நேரம் சென்றதும் இரு குழந்தைகளும் வேகமாக ஓடிவந்து அப்பா, அப்பா, கடை மூடி இருக்கிறது வாருங்கள் எங்களுக்கு மிட்டாய் வாங்கித்தாருங்கள் என்றனர்.
எனக்கு ஆச்சரியம், மூடியிருக்கும் கடையில் எப்படி வாங்குவது, இதை குழந்தைகளுக்கு பேசி புரியவைப்பதை விட, எதற்கும் நேரில் சென்று மூடிய கடையில் எதுவும் வாங்கமுடியாது என்று சொல்லி தப்பித்துக்கொள்ளவேண்டியதுதான், என நினைத்து அவர்களுடன் கடைக்கு சென்றேன். குழந்தைகள் ஒரு திறந்திருந்த மிட்டாய் கடையை காட்டி வாங்கித்தாருங்கள் என்றனர், ... நான் குழந்தைகளைப்பார்த்து "கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன்" என்றல்லாவா கூறியிருந்தேன். இங்கோ கடை திறந்திருப்பதால் வாங்கித்தரமுடியாது என்றேன். அதற்க்கு குழந்தைகள் அருகிலிருந்த மற்றொரு மூடிய கடையை காட்டி, கடை மூடியிருப்பதால் வாங்கித்தாருங்கள் என்று கூறினார். எனக்கு குழந்தைகளின் சாமர்த்தியத்தை நினைத்து வியந்து சிரித்துவிட்டேன். அகவே குழந்தைகள் சாமர்த்தியமாக, அவர்கள் நினைத்ததை சாதித்துக்கொண்டார்கள்.
பெரும்பாலும் பெற்ற பிள்ளைகள், பெற்றோர்களிடம் போட்டியிட்டு வெற்றிபெறும் "குழந்தைகளாகத்தான்" இருக்கிறார்கள். அதாவது சில காதலர்களும் அப்படித்தான் பெற்றவர்களை எதிர்த்து வெற்றிபெற்றதாக நினைக்கும் "குழந்தைகளாகத்தான்" இருக்கிறார்கள்.
ஒரு உண்மை சம்பவம் கதையானது என்பதைவிட, பல கதைகள் பல உண்மையை போதிக்கின்றன என்பதை புரிந்துகொள்வது சிறந்ததல்லாவா???????...... உறவுகள் தொடர்கதைஉணர்வுகள் சிறுகதை. ஒரு கதை இங்கு முடியலாம், முடிவிலும் ஒன்று தொடரலாம். இனி எல்லாம் சுகமே.... http://youtu.be/52lDnAYzCUk
.......நன்றிகளுடன் கோகி.

FREE JOBS EARN FROM HOME