FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, May 27, 2017

குழந்தைகளின் சொட்டைத்தலை "வழுக்கை" ஏற்படக் காரணமாகும் "சில்வர்ஃபிஷ்"

குழந்தைகளின் சொட்டைத்தலை "வழுக்கை" ஏற்படக் காரணமாகும் "சில்வர்ஃபிஷ்" என்னும் புத்தக அரிப்பான் பூச்சி:- இறக்கை இல்லாத சிறிய பூச்சி வகை, படுக்கையறை மெத்தைகள், அவற்றின் கட்டில்/தொட்டில் அடித்தளங்கள், சமையல் அறை மற்றும் புத்தக அலமாரி போன்ற இடங்களில் காணப்படும். இந்த பூச்சியின் விஞ்ஞான பெயர் "லெப்பிஸ்மா சக்காரினா" ஆகும். மீனை போல் வழுக்கும் தன்மையும், வெள்ளி அல்லது வெளிர்நீலம் கலந்த வண்ணத்தில் இவை காணப்படுவதால் "சில்வர்ஃபிஷ்" என்று பெயர் பெற்ற இந்த பூச்சி, சர்க்கரையில் காணப்படும் "கார்போஹைட்ரேட்டை" உணவாக அருந்தும்.

பால் மனம் கமழும் குழந்தைகளையும், சக்கரை வியாதி இருப்பவர்களையும் இரவில் வேர்க்கும்போது அவர்களைக் கடிக்கக்கூடிய பூச்சி. இது மனிதனைக் கடிக்கும் இடத்தில் தனது உடலின் மீது சுரக்கும் வெள்ளியைப் போன்ற பொருளை தேய்க்கும் அதனால் கடிபட்டவருக்கு நீண்டநேரம் கடித்த இடத்தில் வீக்கமும், விஷத்தன்மையால் வின் வின் என்று ஒரு நமச்சல் வலி அவரது உடலின் எதிர்ப்பு சக்தியைப்பொறுத்து நீண்ட நேரம் தொடரும். இப்பூச்சிகள் குழந்தைகளின் தலையில் தனது சுரப்பிகளை தேய்த்தால் அவற்றின் விஷத்தன்மையால் தலை முடி வேர்கள்வரை பாதிக்கப்பட்டு சொட்டைத்தலை ஏற்பட காணமாகிறது. மேலும் இந்த பூச்சியின் உடல்சுரப்பியால் பருத்தி, பட்டு, "ஸின்தெட்டிக்" துணிகளையும், புத்தகங்களையும் இவை அரித்துவிடும் தன்மை கொண்டவை. இவ்வாறு வீட்டின் பொருள்களையும், உணவுகளையும் கபளீகரம் செய்வதால் "சில்வர்ஃபிஷ்" இல்லங்களில் கேடு விளைவிக்கும் பூச்சி வகையாக கருதப்படுகின்றன. 

"சில்வர்ஃபிஷ்ஷை" ஒழிக்க சில வழிகள்:-

1) இவைகள் ஈரப்பதத்தில் வாழ்வதால், வீட்டை சுத்தமாக, ஈரமின்றி வைத்திருப்பது மிகவும் நல்லது.

2) பசைத்தன்மையுள்ள உணவு வகைகளை, நன்கு மூடி வைத்திருங்கள்.

3) "சில்வர்ஃபிஷ்" புத்தகங்களை தாக்கும் அபாயம் இருந்தால், புத்தக அலமாரியில், சிறிது "டையாட்டம் மண்" தடவி வைய்யுங்கள். இவ்வாறு செய்தால், அங்கு ஈரப்பதம் இராது.

4) சிறிய மரப்பொறி செய்து, அதன் மீது "ப்லாஸ்டிக் டேப்பை" கொண்டு மூடி பாதிக்கபட்ட இடத்தில் நிறுவி விடுங்கள். எலிபாஷாணஙள் மற்றும் பூச்சிமருந்துகளுக்கு பதிலாக வைக்கப்படும் இவ்வகை மரப்பொறிகள் கரப்பான், "சில்வர்ஃபிஷ்" மற்றும் இதர பூச்சிகளிருந்து உங்கள் வீட்டை பாதுகாக்கும்.

5) இரவில் மரப்பொறியை சுற்றி சிறிது "டால்கம்" பவுடரை தூவி, காலையில் பூச்சிகளின் சுவடுகளை காணலாம். இவ்வாறு செய்வதால், பூச்சிகள் வீட்டில் நுழையும் வழித்தடம் அறிந்து, அவைகளை அடைத்து விட ஏதுவாக இருக்கும்.

6) வீட்டை அவ்வபோது நன்கு கழுவி துடைத்து, உங்கள் குளியல் அறையையும் உலர்வாக வைத்திருங்கள். முடிந்தால், பூச்சிமருந்து தூவி வைக்கவும்.

7) துணி அலமாரிகள் மற்றும் "சிங்க்கில்" பாச்சாய் உருண்டை வைத்துவிட்டால், பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.

8) விரிசல்கள், ஓட்டைகள் போன்ற பூச்சிகள் வரும் வாய்ப்புள்ள இடங்களை நன்கு அடைத்து வைக்கவும்.

இது போன்ற வழிகளை பின்பற்றினால் பூச்சிகள் தொல்லையிலுருந்து நிரந்தரமாக விடுபடலாம்.....

Thursday, May 18, 2017

"திரிகிடஜம்" பற்றி உங்களுக்குத் தெரியுமா?

"திரிகிடஜம்" பற்றி உங்களுக்குத் தெரியுமா?


இந்தக்காலத்தில் நிறுத்தி நிதானமாக சமையல் செய்ய யாருக்கும் நேரமிருப்பதில்லை. காலையில் எழுந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக ஓர் இயந்திரம் போன்று சமையல் வேலைகளை செய்யவேண்டும். அப்படி இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது ரெடிமேட் பலநாட்களுக்கு முன்பாக செய்யப்பட்ட குளிரூட்டுப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவை சற்று சூடாக்கி சாப்பிடவேண்டியதுதான். 

உப்புமா செய்வதே ஒரு சோம்பேறித்தனமான திடீர் சமையல், இதில் தற்போது திடீர் உப்புமா என்று... சிறிது நொடிகள் அப்படியே பாலீதீன் பாக்கெட்டை மைக்கிரோ ஓவனில் வைத்து, வெளியே எடுத்து பாக்கெட்டை திறந்து சுடச் சுட சாப்பிடவேண்டியதுதான். அதோடு தண்ணீர் விட்டு கலந்துகொள்ளுமாறு திடீர் சட்டினிவேறு இலவசமாம். வெறும் தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் 2-3 டேபிள் ஸ்பூன் திடீர் சாம்பார் போடி போட்டு ஒரு கலக்கு கலக்கினால் சாம்பார் தயார் அதுவும் முருங்கைக்காய், வெண்டைக்காய், வெங்காய திடீர் சாம்பார் என விதவிதமாக ரெடிமேட் திடீர் சாம்பார் போடி தற்போது எல்லா மால்களிலும்,  கடைகளிலும்  கிடைக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் மன்னராட்சி காலத்தில் உருவான இந்த சுவையான "திரிகிடஜம்" விருந்து சாப்பாடு பற்றி உங்களுக்கு தெரியுமா? 

அந்தக்காலங்களில் அதாவது மன்னராட்சிக் காலங்களில் நாட்டை ஆளும் மன்னர்கள் தனது நாட்டிலிருந்து வெகு தொலைவுக்கு காடு மலை என்று சுற்றிவிட்டு திரும்புவார்கள். அப்படி ஒருநாள் அந்த மன்னர் தனது பரிவாரங்களுடன் ஆர்வமிகுதியால் வெகுதூரம் காடு மலைகளை சுற்றித் திரிந்தால் தனது அரண்மனைட்க்குத் திரும்ப நேரமாகிவிட்டது. ஆகவே வழியில் எங்காவது ஒரு சத்திரத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து அருகே ஏதாவது தாங்கும் விடுதி உள்ளதா என்று வழியெங்கும் தேடியபடி வந்தனர் இப்படியே தேடித் தேடி இரவு 12 மணி ஆகிவிட்டது அப்போது வெகுதொலைவில் ஒரு கிராமத்து கோவில் சத்திரம் ஒன்று தெரிய அனைவரும் அந்த சத்திரத்துக்கு வந்து சேருகிறார்கள்.

மன்னர் மற்றும் அவரது ஆட்களை பார்த்த அந்த சத்திரத்தை பொறுப்பேற்றுப் பராமரிப்பவர் ஆடிப்போகிறார். மன்னருக்கு கடுமையான பசி, இன்றிரவு இங்கேயே தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்துதாருங்கள் என்று கூறிவிட்டு,  தங்களது கடுமையான பசிக்கு உணவிடுமாறும் கட்டளையிடுகிறார். 

சத்திர பொறுப்பாளருக்கு பதற்றம் தொற்றிக்கொள்கிறது, அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்தால் அங்கு அடுப்பு நெருப்பும் அணைக்கப்பட்டு சமையல் பாத்திரங்கள் எல்லாம் சாம்பல் புளி போட்டு தேய்ப்பதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தது. 


இந்த நிலையில் சத்திர பொறுப்பாளர் சமையல்காரர்களை அழைத்து மன்னர் வந்திருப்பதை கூறி கட்டளை பிறப்பித்தார்..... அனைத்துப் பாத்திரங்களிலும் மிச்சம் மீதி (தேய்ப்பதற்கு போட்டிருந்த சாம்பல் புளி போன்றவற்றையும் சேர்த்து) பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பவைகளையெல்லாம் வழித்து ஒன்றாக சேர்த்து ஒரு கடாய் பாத்திரத்தில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு கடுகு தக்காளி வெங்காயம் என சில காய்களையும் போட்டு தாளித்து, அத்துடன் உப்பு காரம் போன்றவைகளையும் சேர்த்து ஒருவழியாக ஒரு கிச்சடி போன்ற உணவை தயார்செய்து மன்னருக்கும் அவருடன் வந்த மன்னர் படை ஆட்களுக்கும் பரிமாறினார். 

மன்னருக்கிருந்த கடுமையான பசியால் அங்கு பரிமாறப்பட்ட உணவு தேவாமிர்தம் போல மிகவும் சுவையாக  இருந்ததால்,  "இப்படி ஒரு சுவையான "ஜம்மென்று" பிரமாதமான ஒரு உணவை நான் இதுவரை உண்டதேயில்லை"  இந்த சமையல் பண்டத்தின் பெயர் என்ன என்று கேட்டுவிட... அவ்வளவுதான்  திரும்பவும் சத்திர பொறுப்பாளர் சற்று அதிர்ந்து ஆடிப்போகிறார்.

மன்னரிடம் நடந்தவைகளை சொன்னால் நாம் உயிர் பிழைப்பது கடினம் எனவே, மன்னரை பார்த்ததால் திடீர் திக் என்று, மன்னர் வேறு அந்த உணவை "ஜம்மென்று" பிரமாதமாக உள்ளது என்று சொன்னதால், இந்த உணவின் பெயர் "திரிக்கிடஜம்" என்று அந்த இக்கட்டிலிருந்து சமாளித்து அந்த உணவிற்கு ஒரு புதுப் பெயரை சூட்டினார்.     

அந்தப் புதுவித உணவின் "திரிகிடஜம்" என்ற பெயரைக்கேட்டதும் மன்னர் வயறு நிறைய உண்டு, மகிழ்ந்து, அந்த சத்திரத்தின் பொறுப்பாளருக்கு தாம் அணிந்திருந்த தங்க, வைர, முத்து மாலைகளை பரிசாக தந்து, நாளைமுதல் நீங்களும் உங்களது சமையல் குழுவினர்களும் எனது அரண்மனையில் சிறப்பு சமையல் செய்பவர்களாக தினமும் இந்த "திரிக்கிடஜம்" உணவை சமைத்து பரிமாறவேண்டும் என கட்டளையிட்டார். 

இரவு 2மணி, அந்த சாத்திரத்தின் சமையல் அறையில் சத்திர பொறுப்பாளரோடு சேர்ந்து அனைத்து சமையல் காரர்களும் இந்த விவரங்களைக் கேட்டு வயிறுகுலுங்க சிரித்துக்கொண்டிருந்தார்கள். இனிமேல் நாம் கூட "திரிகிடஜம்" சாப்பிடவேண்டியிருக்கும் ....என்று கூறி அனைவரது சிரிப்பலைகள் தொடர்ந்தது .  அங்கு ஒலித்துக்கொண்டிருந்தது.....   


ஆகவே மிகவும் கவனமாக செய்யும் சமையல் அத்தனை சுவையாக இருப்பதில்லை, எதோ காமா சோமா என  எதையாவது அள்ளித்தெளித்து செய்யும் சமையல்தான் ஜம்மென்று பிரமாதமாக உள்ளது.

இப்போதெல்லாம் ஆண்கள் செய்யும் சமையல்தான் மிகவும் ஜம்மென்று, பிரமாதமாக, சுவையாக இருக்கிறது என்று பெண்கள் கூறுகிறார்கள். ஆகவே வெகு சீக்கிரத்தில் ஆண்கள் இல்லத்தரசர்களாகவும் பெண்கள் அலுவலகம் சென்று சம்பாத்தியம் செய்வது பெண்களின் லட்சணம் என்று கூறும் காலம் வரப்போகிறது.  

இதைப்போலவே:-
@ இரயில் நிலையத்தில் "மஞ்சக்குருவி" கதை 
@ சென்னை கிண்டியில் "கமான் பாட்டி" கதை 
@ மடி ஆச்சாரத்தோடு மாமிகள் போட்ட "ஆவக்காய் ஊறுகாய்" கதை
@ முப்பத்தி ஒன்றாம்  நூற்றாண்டில் "சென்னைத் தீவு" கதை 
 @  "மூக்கு பிழிந்த -சீமந்தப் புத்திரி" கதை
இப்படி பாட்டி சொன்ன பல சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த, கதைகள் பலவற்றை ஒவ்வொன்றாக தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.   

"சீடன்" திரைப்படத்தில் உள்ள "சரவணா சமையல்" என்ற பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது,  பாடலின் இசை: தினா,  பாடகர்: ஹரிஹரன்.

மீண்டும் எனது அடுத்தப்பதிவில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்....  

நன்றி வணக்கம் கோகி -ரேடியோ மார்கோனி. 





Monday, May 15, 2017

என்ன படிக்கலாம்?:- குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் கல்வி

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு...
மேல்நிலை +2 தேர்வு முடிவுகள் வெளிவந்ததும், அடுத்தது பட்டப் படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்கவைகலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத் தொடங்கி விடுகின்றனர். தற்போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவுகள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு தீர்கமான முடிவோ சிந்தனை இல்லை என்பதுதான் உண்மை.

இப்படிப்பட்ட சூழலில்தான்..தற்போதைய கல்விக் கண்காட்சியிலும, மற்றும் பல நிறுவனங்களின் [Campus interview] கல்லூரியில் நேர்காணலின்போதும் அனைத்து மாணவர்களுக்கும் இதை எதிர்கொள்வது எப்படி என்பதை கூறிவருகிறேன்.

குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் கல்வியாக கீழ்வரும் பாடப்பிரிவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1. வணிகவியல் (Commerce) இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது-மேற்கொண்டு வேலையில் சம்பாதித்துக்கொண்டே படித்துக்கொள்ளலாம் B.Com, BBA, FICA, BCS(Corporate Secretary)... போன்றவை....

2.மருத்துவ செவிலியர் (Nursing) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது அல்லது பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும்) சிறப்பான வேலைவாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

3. கணினிக்கல்வி (Computer Diploma in ITES & Softwares) BCS, BSc-CS B.Tech-IT போன்ற பல்வேறு விதமான கணினி சார்ந்த பட்டய மற்றும் உயர் பட்டப் படிப்புகள் ) பெரிய நிறுவனங்களில் சுலபமாக ITபணியில் சேரலாம் அல்லது சுயமாக சம்பாதிக்கவும் கணினி கல்வி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

4.ஆசிரியர் பயிற்சி. (Teachers-Training) இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும்  2 ஆண்டுகள் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு நிறைந்திருக்கும் கல்வியாக கருதப்படுகிறது.

5. சட்டக்கல்வி (Law) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் 5 ஆண்டு பட்டப் படிப்புடன் கூடிய சட்டக் கல்வி BA-LLB, BBA-LLB, B.Com-LLB அல்லது ஒரு சிறு சட்டம் சார்ந்த பட்டயப்படிப்பை(Diploma in Law) படித்தாலும் போதும், தனியார் பணியிடங்களில் அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்திருக்கும் கல்வி இது)

6. பொறியியல் பட்டய (Diploma டிப்ளமோ) மற்றும் (Graduate degree courses) பட்டப்படிப்பு:- எந்தவித நுழைவுத்தேர்வும் எழுதாமல் 10ம் வகுப்பிற்குப் பிறகு 6வருடம் படிக்கும் பட்டய (டிப்ளமோ) மற்றும் (Graduate degree courses) பட்டப்படிப்பு DCE&BTech (Civil) கட்டிடக் கட்டுமான பொறியியல் படிப்பிற்கு தற்போது மிகுந்த வேலைவாய்ப்புகள் உள்ளது UPSC என்னும் அரசு தேர்வை எழுதி (Chartered Engineer licence) அரசின் பட்டய பொறியாளர் உரிமம் பெற்று சுயமாகவும், அரசின் திட்டப்பணிகளை பெற்றும், அனைத்து கட்டிட கான்ட்ராக்டர்களுக்கு பொறியாளர் உரிமம் பெற்றவரே சான்றளிக்கவேண்டும் என்பதால் கட்டிட பொறியியல் ஆலோசகராகவும் பணம் சம்பாதிக்கலாம்.

இப்படி பல எளிய படிப்புக்களை தவிர்த்து, புதுப்புது படிப்புகள் என்று பலர் வீசும் மாயவலையில், கடன்வாங்கி வெளிநாட்டிற்கு சென்று படிக்கவேண்டும் என விட்டில் பூச்சிகளாக சென்று விழுந்து பாழாகுவதைவிட, சுயமாக சிந்த்தித்து அதிக செலவு இல்லாத சில எளிய படிப்புக்களை தேர்வு செய்து படிப்பதே சிறந்தது. 

கல்விக்கண்காட்சி என்று கூறி அங்கு வரும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களின் மனதையும் மாற்றி தனியார் கல்லூரியில் சேர்க்க வலைவீசப்பட்டு, அந்த மாய வலையில் விழுந்த பல பெற்றோர்களின் பரிதாப நிலைமையை இன்றளவும் பார்க்கமுடிகிறது. 

கலந்தாய்வு என்று வரும்போது மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் தனக்குப் பிடித்த பாடத்தையே படிக்க விருப்பம் என்பதில் பிடிவாதமாக இருந்து வெற்றிபெறும் முனைப்போடு இருக்கவேண்டும். இல்லையென்றால் பேச்சாலே உங்களை மயக்கி தனியார் கல்லூரியின் காலி இடங்களை நம் தலையில் கட்டிவிட்டு அதற்குண்டான கமிஷன் தொகையை பெற்றுக்கொள்ள பல வழியிலும் பல அதிகாரிகள் முனைப்புடன் ஆதாயத்திற்காக செயல்படுகிறார்கள். 

மேல்நிலை +2 அதிக மதிப்பெண் எடுத்த எனது மகளை நான் சேர்த்த சட்டக் கல்லூரியில் (BBA-LLB) 20% விழுக்காடு கல்விக்கட்டணத்தில் தள்ளுபடி என்கிறார்கள்.  பிறகுதான் தெரிந்தது அது வெறும் முதல் ஆண்டிற்கு மட்டும்தானாம். இப்படி இன்னும் பலவழிகளில் பல தனியார் கல்விநிறுவனங்கள் அவர்களின் கல்லூரிக்கு ஆள் பிடிப்பவர்களுக்கு தாராளமாக பணம் தர முன்வருகிறார்கள் அதனால் தற்போது சில அரசு அதிகாரிகளும் அதற்க்கு விலைபோவதை பார்க்கமுடிகிறது.  எனது மகன் படிக்கும் பொறியியல் கல்லூரியில் (6-Years DCE+B.Tech-Civil) எனக்கு 25% கட்டண சலுகை தருவதாகவும் மேலும் 5 மாணவர்களை அந்தக்கல்லூரிக்கு அழைத்துவந்து பொறியியல் வகுப்பில் சேருங்கள் என்கிறார்கள் எனக்கு அதில் உடன்பாடில்லை என்று கூறிவிட்டேன். அப்படிப்பட்ட கல்லூரியில் ஏன் எனது பிள்ளைகளை சேர்த்தோம் என்றால் பெண்பிள்ளைகளுக்கு வீட்டிற்கு அருகில் இருக்கும் அந்த கல்லூரியில் சேர்ப்பது பாதுகாப்பு என்கிற ஒரு நோக்கமும் காரணம்.  


மாணவர்கள் நன்றாக சிந்தித்து செயல்படவேண்டும். தற்காலத்தில் வெகு விரைவில் வேலைவாய்ப்பை தரும், எளிமையான செலவுகளில் இருக்கும் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதே மிகச் சிறந்தது கடன்வாங்கி படிக்கவேண்டும் என்று அகலக்கால் வைத்து பிறகு வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தமுடியாதுபோனால் அந்த மாணவனின் எதிர்காலமே "கடனை செலுத்தாதவர்" என்கிற அவப்பெயரால் வாழ்நாள் முழுவதும் அனைத்துவங்கியிலும் அவரின் பெயர் கெட்டுப்போகும் நிலைக்குத் தள்ளப்படுவர். 

தற்போதைய சூழலில் திடீர் திடீர் என்று நிறுவனம் மூடுவிழா அல்லது நிறுவனத்தில் ஆட்குறைப்பு என்று பல வழிகளிலும் கிடைத்த வேலையையும் தக்கவைத்துக்கொள்ளமுடியாத சூழல் உள்ளது. அப்படி திடீரென்று வேலைபோகும்போது, மாற்று வேலை கிடைக்கும்வரை கடன் வாங்கி குடும்பச்செலவுகளை தாக்குபிடிக்கமுடியாமல் பலர் தற்கொலை என்கிற தவறான முடிவுக்கும் தள்ளப்படுவதை தாராளமாக பார்க்கமுடிகிறது. ஆகவே எந்தப் படிப்பாக இருந்தாலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சுயமாக தனது சொந்தக்காலில் நின்று சம்பாத்திக்கும் திறன்வாய்ந்த ஒரு கல்வியை தேர்வுசெய்து படிப்பது என்பது உங்களின் ஒளிமயமான வாழ்க்கைக்கு நீங்கள் செய்யும் முதலீடு என்று கருதவேண்டும்.

வாழ்க்கையில் எந்தத்தருணத்திலும் "முடிவெடுப்பது" என்பது மிக முக்கியமான ஒரு தருணம், அப்படிப்பட்ட உரிய நேரத்தில் சரியாக முடிவெடுக்கும் திறனில் உங்களுக்கு தெளிவான ஒரு சிந்தனை தேவை. அப்படிப்பட்ட தெளிவான ஒரு சிந்தனையை பெற நீங்கள்தான் உங்களை மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும் அதற்கான பயிற்சியைமும் முயற்சியையும் தொடர்ந்து கடைபிடியுங்கள். 

"கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக." என்கிற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க 

கற்கவேண்டிய பாடங்களை சிறப்பாக பிழை இல்லாமல் கற்று, பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க. என உங்களது கல்வியால் நீங்கள் சிறப்படைய வாழ்த்துக்களைக் கூறி விடைபெறுகிறேன் .

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு http://youtu.be/qvCDPf1_Qeg

நன்றி கோகி-ரேடியோ மார்கோனி.   



Thursday, May 11, 2017

மாணவர்கள்-"தற்கொலை", கட்டாயக் கல்விச் செலவு செய்யவேண்டிய சுமை.

'தற்கால மாணவர்களின் கல்வியின் தரத்தினை உயர்த்துகிறார்களோ இல்லையோ, வருடா வருடம் கல்வி நிறுவனங்கள் கல்விக்காக வாங்கும் கட்டணங்களை உயர்த்தி விடுகிறார்கள்'..... 


6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளும், ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள், பாட புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை) குழந்தைகளின் ஆரம்பக் கல்வி ஒன்றாம் வகுப்பு  முதல்  8ம் வகுப்பு பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்??. என்கிறது  இந்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009. அந்த விதிப்படி, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களைத் தண்டிக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று, ஆகவே அரசின் இலவச ஆரம்ப கல்வியை பெற்றோர்கள் பயன்படுத்திக்கொண்டாலும், 10ம் வகுப்பு வரையிலான உயர்கல்வி மற்றும் 12ம் வகுப்புகளான மேல்நிலைக்கல்வி மற்றும்,  பட்டய அல்லது பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு என ஓரளவு ஒரு பட்டப்படிப்புவரை படிப்பை படித்துமுடித்தால் மட்டுமே மாணவர்கள் தனது வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களது வாழ்க்கையை வாழமுடியும் என்கிற நிலையில், இந்த படிப்பிற்காக பெற்றோர்கள் செய்யும் கட்டாய கல்விச் செலவு என்பது தற்காலத்தில்  மூச்சு முட்டி, விழி பிதுங்கும் நிலைக்கு மாணவர்களும் பெற்றவர்களும் தள்ளப்படுகிறார்கள் என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது.   

"இரட்டைச் சம்பளம் வந்தாலும் போதாது என" ....ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாய் புற்றீசல் போல.....  "அதை" வாங்கிவரவேண்டும், "இதை" வாங்கி வரவேண்டும்,.... என பல் புதிய செலவுகளையும் அள்ளித்தெறிக்கிறார்கள். கல்விக்கட்டணம் என்கிற பெயரில் கல்விக்கான கட்டாய செலவுகளை கட்டாயம் செய்தாகவேண்டும், இல்லையென்றால் பெற்றவர்களுக்கு மனதளவில் "உதை"விழும் என கட்டாயக் கல்விச் செலவு செய்யவேண்டிய கல்விச் சுமை உள்ளது. 

மாணவர்களுக்கோ அவர்களின் பாடங்களை படிப்பதற்க்கே நேரமில்லை, இந்நிலையில் அவர்களது கல்விக்கட்டண சுமைக்காக, வங்கிக்கடன் பெறுவதற்கு அங்கும் இங்கும் அலைவதற்கு நேரம் எங்கே இருக்கிறது? பெற்றவர்களுக்கு இப்படிப்பட்ட அதீத கல்விச் செலவு செய்ய கட்டாயப்படுத்த மனமில்லாமல், அவர்களையும் கல்விக் கடன் கேட்டு அலையவிடுவதற்கு மனமில்லாமல், மாணவர்கள் தாங்களாகவே "தற்கொலை" என்கிற தவறான முடிவுக்குப் போகிவிடுவார்களோ?... என்கிற புதிய அச்சம் ஒன்று தற்ப்போதைய நாளேடு செய்திகளால் பெற்றவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது ...... 



கடந்த மாதம் 9ம் தேதி அன்று புதுச்சேரி அருகே, தற்கொலை செய்து கொண்ட மாணவன், மணிகண்டன் மற்றும், தற்கொலை செய்துகொண்ட ராஜஸ்தான் மாணவி பூஜாவின் தந்தை காய்கறி விற்பனை செய்பவர். அவரால் தன மகளின் கல்விச்செலவை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த பூஜா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கட்டாய இலவசக் கல்வி என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமையாக்கப்பட்டிருப்பினும் இன்று இந்தியாவில் கிட்டத்த்தட்ட 70% மாணவர்கள் கட்டணம் செலுத்தித் தனியார் பள்ளிகளில்தான் பயின்றுவருகின்றனர் எனும் செய்தி சட்டத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைப் படம்பிடித்துக்காட்டுகிறது. தற்போதைய சட்டத்தின் குறைபாடுகள் நீக்கப்படும்வரை தனியார் சுயநிதிப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏழைகளுக்கு இலவச இடங்கள் ஒதுக்கீடு என்பது வெறும் கானல்நீரே!

அன்புடன் ரேடியோ-கோகி. புது தில்லி 

Thursday, May 4, 2017

திடீரென்று "ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது'?????

திடீரென்று வேற்றுக்கிரக உயிரினமான ராட்சஸ ஏலியன்கள் நமது உலகில் புகுந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்???

"ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது' புரிந்துணர்வு கொண்ட மனிதர்களுக்காக ஒரு பார்வை:- இது எறும்புகளின் உலகம்...இந்த எறும்பு உலகத்தின், ஏலியன்கல்தான் மனிதர்கள் என்கிற கோணத்தில், உலக மக்கள்தொகை ஒன்று என்றால் அதற்க்கு சமமாக ஆயிரம் எறும்புகள் உள்ளது என கணக்கிட்டால் அதிக எண்ணிக்கை கொண்ட எறும்புகளின் உலகமாகவும் அதில் வாழும் சிறுபான்மையின மனிதன் என்று பார்க்கும்போது, பெரும்பான்மையான உயிரின எண்ணிக்கைகளைக் கொண்ட எறும்புகளுக்கு, அவைகளின் உலகத்தில் வாழும் மனிதன் என்கிற ஏலியனால் தொந்தரவு ஏற்ப்பட்டும், எறும்புகள் சிறுபான்மையின மனித ஏலியன்களை ஒழிக்க முர்ப்படவில்லை என்பதும், அதற்காக சிறிதளவும் முயற்சி கூட செய்யவில்லை என்பதும் நன்கு தெரிகிறது....

இந்த பூ உலகத்தை போலவே இன்னும் பல வெவ்வேறுவகையான உலகம் உள்ளது என்பது அறிவியல் கூற்று. ஒரு மனிதன் மற்றும் ஒரு எறும்பு இருவரும் 1000 அடி உயரத்திலிருந்து கிழே விழுவதாகக்கொண்டால் மனிதன் தரையை அடைந்ததும் சிதறி உயிர் இழக்கிறான், எறும்பு தரையை அடைந்ததும் அதன் இனத்தையும் உணவையும் தேடி ஓடுகிறது..... 

இதைப்போலவே மனிதன் எறும்பைப்போல மிக இலகுவான (எடை)கணத்துடன், பெரிய இராட்சத ஏலியன்கள் நிறைந்த மற்றொரு, வாழத்தகுந்த உலகம் ஒன்று, நிச்சயம் எங்காவது இருக்கும்.  அங்கு நீங்கள் பிறப்பதற்கு எறும்புகளின் சாபத்திற்கு உள்ளாகாதீர்கள்.

நாம் சாலையில் நடந்துசெல்லும்போது நமது பார்வையை சற்று கீழே நடைபாதை வழியை கவனித்து நடந்துசெல்லுமாறு,  எறும்பு போன்ற சிறு உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் வாழ பழகுவோம். 


இறைவன் படைத்த உலகை எல்லாம்...மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்....இறைவன் வாழுகின்றான்
திரைப்படம்: வா ராஜா வா, இயற்றியவர்: நெல்லை அருள்மணி, இசை: குன்னக்குடி வைத்தியநாதன், பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்... http://youtu.be/M2vE0KQ4MMU

FREE JOBS EARN FROM HOME