FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, December 22, 2022

கண்களின்_மொழி பாடல்

👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது,*

*👁️கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது,*

*🎶பாடல்:- கண்களின் வார்த்தைகள் புரியாதா... காத்திருப்பேன் என்று தெரியாதா..🎶*


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது + ஆசைப்படுகிறது,*

*👁️கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது,*

*🎶பாடல்:- உன் கண் உன்னை ஏமாற்றினால்.. என்மேல் கோவம் உண்டாவதேன்...🎶*


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை காட்டுகிறது,*

*👁️கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது,*


*🎶பாடல்:-கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ.. இன்பக் காதலிசை பாடியதும் நீயேயன்றோ*🎶


*👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் அது பதட்டத்தில் உள்ளது,*

*👁️கண்கள் படபடத்தால் அதிகமாக விரும்புகிறது, அதாவது வெட்கப்படுகிறது,*


*🎶பாடல்:-.


கண்ணென்ன கண்ணென்ன கலங்குது.. பொன்னென்ன பொன்னென்ன மயங்குது.. என்னென்ன என்னென்ன நினைக்குது எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது.🎶*


*👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் மூக்கைப்பார்த்தால் அது கோபப்படுகிறது,(ஓ அதானா மூக்குமெல கோபம்)*

*👁️கண்கள் எதை திரும்ப திரும்ப பார்க்கிறதோ அதை நேசிக்கிறது.*

*🎶பாடல்:- காத்திருந்த கண்களே..  கதையலந்த நெஞ்சமே.. ஆசையெண்ணும் வெள்ளமே பொங்கி பெருகும் நெஞ்சமே...🎶*


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் அது காமம் கொள்ள நினைக்கிறது,*

*👁️கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் அவரை காதலிக்க துடிக்கிறது,*

*🎶பாடல்:- கண் மூடும் வேளையிலும்.. கலை என்ன கலையே.. கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே...🎶*


*👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால்  எதையோ பயந்து தேடுகிறது,*

*👁️கண்கள் உயர்ந்து கண் சொக்கிப்போனால். தூக்கம் அல்லது மது மயக்கம் எனலாம்.*

*🎶பாடல்:- உன்னை.. கண் தேடுதே.உன் எழில் காணவே.. உள்ளம் நாடுதே...*🎶


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது,*

*👁️கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை நினைக்கிறது,*

*🎶பாடல்:- உன்னை காணாத கண்ணும் கண்ணால்ல.. உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சள்ள...*


*👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் முழிக்கிறது,*

*👁️கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது,*

*🎶பாடல்:- கண்களே கண்களே.. காதல் செய்வதை விட்டுவிடுங்கள்.. பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழவிடுங்கள்...🎶*


*👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் உங்களை மட்டுமே விரும்புகிறது,*

*👁️கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் எதையோ தேடுகிறது,*

*🎶பாடல்:- மூடித்திறந்த விழி இரண்டும் பார் பார் என்றது...*🎶


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்களை கைகள் கொண்டு மறைத்தால் அது வெட்கப்படுகிறது,*

*👁️கண்களை கைகள் கசக்கினால் அது ஆதரவு கேட்கிறது,*

*🎶பாடல்:- கண்ணிலே என்ன உண்டு கங்கள்தானரியும், கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்.. என்மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத்தெரியும்..*🎶


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் அது உங்கள் மீது கோபம் கொள்கிறது,*

*👁️ஒரு கண் திறந்து ஒரு கண் மூடினால் அது உங்களிடம் சேட்டை குறும்புத்தனம் செய்கிறது,*

*🎶பாடல்:-கண்ணாலே பேசி பேசி கொல்லாதே..🎶*


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️இரண்டு கண்களும் மூடி இருந்தால் அது சற்றே ஓய்வெடுக்கிறது அதாவது  தூக்கம் வருகிறது,*

*🎶பாடல்:- தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே.. அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே... அந்த தூக்கமும் அமைதியும் நான் ஆனால்.. உன்னை தொடர்ந்ந்திருப்பேன் என்றும் துனையிருப்பேன்...*


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் நீண்ட நேரமாகியும் விழிக்கவில்லை எனில் "அய்யோ பாவம்" அது இறந்துவிட்டது, மரணத்தை தேடிக்கொண்டது.*

* பாடல் கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு*

சித்தார் பின்னணியிசையாக கொண்ட பாடல்களை கேட்டு மகிழலாம்

சித்தார் பின்னணியிசையாக கொண்ட பாடல்களை கேட்டு மகிழலாம்

*🎶வீணைக்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. வீணையில் மெட்டுகள் மெழுகின் மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள்.🎶*

🎻🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🎻


*🎶இன்றய நிகழ்ச்சியில் நாம் ரசிக்கவிருக்கும் பாடல்களில். சித்தார் பின்னணியிசையாக கொண்ட பாடல்களை கேட்டு மகிழலாம்...🎶*

*🙏சிவா விஷ்ணு தரிசனம்🙏*

*🎶சித்தார் இசைக்கருவியை சிவ ரூபத்தைப்போல நேராக மேல் நிறுத்தி வாசிப்பவர்கள், அதுவே வீணை என்றால் பள்ளிகொண்ட பெருமாள் போன்று படுத்தநிலையில் வைத்து வாசிப்பதையும் பார்த்து பரவசமடையலாம்*🎶

*🎶நரம்பு வாத்தியங்கள், கம்பி வாத்தியங்கள் என்று சொல்லப்படும் தந்தி வாத்தியங்களை மூன்றாகப் பிரிக்கின்றனர்.🎶*

*வில் போட்டு வாசிக்கும் வாத்தியங்கள் - வயலின், சாரங்கி,*


*மீட்டி வாசிக்கப்படும் வாத்தியங்கள் - வீணை, சித்தார்,  கிட்டார், தம்புரா*


*தந்திகளைக் குச்சிகளாலோ அல்லது மரக்கட்டையாலோ தட்டி நாதத்தை உண்டாக்கும் வாத்தியங்கள் - கொட்டு வாத்தியம்.*

🎻🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🎻

*சித்தார் வாத்திய உலகத்தின் முடிசூடா மன்னர், பண்டிட் ரவி சங்கர் (Ravi Shankar, மேற்கு வங்காள மாகாணத்தை சேர்ந்தவர்:  7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012), பல விருதுகளை பெற்ற உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார். ஒரு இசை நிகழ்ச்சியில் இசையோடு கலந்து காலமாகிப்போனாலும் இன்னும் பலரது இசை நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்..*

🎻🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:-சிவசங்கரி ..சிவசங்கரி..சிவானந்தலாகரி.. சந்திரகளாதரி ஈஸ்வரி...*

*அருமையான பாடல், பாடலின் இறுதியில் முழுமையாக சித்தார் இசையை மட்டும் தனியே தபேலா மற்றும் மிருதங்க இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:- சொன்னது நீதானா...சொல் சொல்..சொல்.. என் உயிரே...*

*அருமையான பாடல், பாடலின் காட்சியிலும் பாடல் முழுவதிலும் சித்தார் இசை பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.. பாடலில் சித்தார் இசையை மட்டும் தனியே வயலின், தபேலா இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:-


கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...*

*பக்திமயமான பாடல், பாடலின் காட்சியிலும் பாடல் முழுவதிலும் சித்தார் இசை பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.. பாடலில் சித்தார் + புல்லாங்குழல் +வயலின்+, தபேலா இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:-


பாடும் வானம்பாடி ஹா....மார்கழி மாதமோ.. பார்வைகள்.. ஈரமோ.*

*இனிமையான பாடல், பாடலின் இடையிசையில் சித்தார் இசை +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.. பாடலில் சித்தார் + புல்லாங்குழல் +வயலின்+, தபேலா இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:- ஒரு ஜீவன் அழைத்தது, ஒரு ஜீவன் துடித்தது.. இனி எனக்காக அழவேண்டாம்...*

*இனிமையான பாடல், பாடலின் முதல் இடையிசையில் சித்தார் மட்டும் தனியாக இசைக்க இளையராஜா இசையப்புக்கு ஒரு தனி ஓ..ஓ..போடலாம் சித்தார் இசை உடன் கிட்டார் குழு வயலின் +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:- இசை கேட்டால் புவி அசைந்தாடும்...*

*இனிமையான பாடல், பாடலின் முதல் வரியிலிருந்தே சித்தார் மட்டும் தனியாக இசைக்க சித்தார் இசை உடன் கிட்டார் குழு வயலின் +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா+மிருந்தங்கம் தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:- அம்மா என்றழைக்காத உயிரில்லையே...அம்மாவை வணங்காது உயர்வில்லையே..*

*இசை கோர்வை கொண்ட இனிமையான பாடல், பாடலின் முதல் நிலையிலேயே சித்தார் மட்டும் தனியாக இசைக்க சித்தார் இசை பாடல் முழுது இடையிடையே வருவது சிறப்பு பாடலில்  கேரளா செண்டை மேளம்+ கிட்டார் +குழு வயலின் +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா+மிருந்தங்கம் தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:- முத்த சம்பா பச்சநெல்லு  குத்ததான் வேணும்...முத்து முத்தா பச்சரிசி அல்லத்தான்வேனும்*(பாடலின் இறுதி இசையை அவசியம் கேளுங்கள் இளையராஜாவுக்கு ஒரு ஜே போடலாம்)


*சிறந்த பாடல், பாடலின் இறுதியில்.. இது நம்ம வீட்டு கல்யாணம்.. என்று பாடல் முடியும்போது சித்தார் இசை மட்டும் தனியாக சிணுங்குவது உண்மையிலேயே ரசிக்கவேண்டிய இடம்...பாடலில் இடையிடையே சித்தார் சிணுங்குவது அற்புதம்.பாடலில் கிட்டார் குழு வயலின் +புல்லாங்குழல்+ஷெனாய் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*சித்தார் இசையில் ஹிந்தி பாடல்கள் நிறைய உண்டு... தமிழில் 32பழைய பாடல்கள், 50+(இளையராஜா) இடைக்கால பாடல்கள் 45+புதியபாடல்கள் தொகுப்பு உள்ளது. நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன். நன்றி கோகி ரேடியோ மார்கோனி, புது தில்லி.🎶🙏*

சிதார் இசையில் மற்றுமொரு பாடல் 

பாடல்:-


இது குழந்தை பாடும் தாலாட்டு .ஒருதலைராகம்.


சிதார் இசையில் மெல்லிசை மன்னரின் பாடல்கள் சில..🎼🎼 "கன்னிப் பெண் " திரைப்படத்தில் வரும்

"பாடல்:-பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்.."



என்ற பாடலின் ஓபனிங் சிதார் இசையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை..


"உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் வரும் "அவள் ஒரு நவரச நாடகம்" பாடலின் bgm இல் சரணம் தொடங்கும் முன் வரும் மயக்கும் சிதார் இசை..


"அண்ணன் ஒரு கோயில்" திரைக் காவியத்தில் இடம்பெற்ற "


அண்ணன் ஒரு கோயில்" பாடல்.
.


Wednesday, December 21, 2022

ஸ்ருதி பிசகாமல் ஜால்ரா தட்டுபவர்களால் கச்சேரி களைகட்டும். ஆனாலும்... ஜால்ராக்காரர்கள் ஒரு போதும் வித்வான்கள் ஆவதில்லை..

*💖🎶இன்றைய நிகழ்ச்சி தொகுப்பில் ஜால்ரா பாடல்கள்..💖🎶* 


*🎶ஸ்ருதி பிசகாமல் ஜால்ரா தட்டுபவர்களால் கச்சேரி களைகட்டும். ஆனாலும்... ஜால்ராக்காரர்கள் ஒரு போதும் வித்வான்கள் ஆவதில்லை..🎶*🤣

செம்பு மற்றும் வெள்ளீயக் கலவையால் தாளம் செய்கிறார்கள். வெண்கலம், ஐம்பொன்னால் செய்யும் மரபும் இருந்தது. நாதஸ்வரத்துக்கு நரசிங்கம்பேட்டை போல தாளத்துக்கு நாச்சியார்கோவில். உலோகத்தை நீராக உருக்கி அதை வார்க்க வேண்டும். தாளம் வார்க்க வண்டல் மண் அவசியம். இந்த நாச்சியார் கோவில் பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்த வண்டல் மண்ணைச் சலித்து சாக்கில் கட்டி விற்பனைச் செய்கிறார்கள். அந்த மண்ணை வாங்கி மரச்சட்ட அச்சில் தாளத்தின் வடிவத்தை வைத்து அந்த மண்ணால் நிரப்பி தட்டிக் கெட்டிப்படுத்த அச்சு தயார். பின்பு  அடுப்பில் கொதிக்கும் உலோகத்தைக் கரண்டியில் அள்ளி ஊற்றி ஆர வைக்கிறார்கள். 10 நிமிடம் கழித்து மண்ணைக் கொட்டினால் கொத்தாக வந்துவிடுகிறது தாளம். பிறகு ஓரத்தைத் தட்டி கடைசல் பட்டறையில் கடைந்து பாலிஷ் போட தாளம் தயார். 40 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை போகிறது.

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*💖🎶இன்றைய நிகழ்ச்சி தொகுப்பில் ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🤣🤣சின்ன வயதில்.. மார்கழி மாத பஜனைக்கு தாத்தா வாங்கி வாசித்த மிருதங்கம் .. தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கோவிலுக்கு போய் ரெண்டு தட்டு தட்டினால் கூடுதலாய் கொஞ்சம் பொங்கல் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால்.. கைவலி ரெண்டு அமிர்தாஞ்சன் பாட்டில் காலி. இந்தக் கூத்தெல்லாம் அடிக்க முடியாதென்று திரும்பவும் ஜால்ரா மாஸ்டரானேன்.  கொஞ்சம் ஆள் வளர வளர .. கவனம் வேறு திசையில் போக ஆரம்பித்தது. கோவிலில் மொத்தம் பத்து செப்பு ஜால்ராக்கள் தான் வைத்து இருப்பார்கள். தாளம் தெரிந்தவர்கள் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி.  ஜால்ராக்கள் வைத்து இருப்பவர்கள் எல்லாரும் விஷயம் தெரிந்தவர்கள் மாதிரி பந்தா விட்டுக்கொள்வார்கள்...*🎶🤣*

*🎶ஆடாத மனமும் உண்டோ.. நடை அலங்காரமும்.. அழகு சிங்காரமும் கண்டு.. ஆடாத மனமும் உண்டோ..🎶*

Movie Name:-Mannadhi Mannan (1960) (மன்னாதி மன்னன்), Music:- Viswanathan Ramamoorthy, Singers:- T. M. Soundararajan, M.L.Vasanthakumari, Lyrics:- A. Maruthakasi

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶கரையாத மனமும் உண்டோ... தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு... கரையாத மனமும் உண்டோ.... ஆ……கரையாத மனமும் உண்டோ…....🎶*

Movie: Varusham(16) Padhinaaru,(1989), Music by : Ilayaraaja, Singers : K. J. Yesudas and K. S. Chithra, Lyricist: Vaali.

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*💖🎶இன்றைய நிகழ்ச்சி தொகுப்பில் ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🎶....மிருதங்கத்தை தூக்கிக்கொண்டு உலா வரமுடியவில்லை என்றதும் அப்பா ஒரு கஞ்சிரா வாங்கித் தந்தார்(சினிமாவிலெல்லாம் ஒரு ஏழை தாத்தா தாடி வைத்துக்கொண்டு நட்ட நடு ராத்திரியில் தத்துவப் பாடலெல்லாம் பாடிக்கொண்டு கையில் வைத்துக் கொண்டு வாசிப்பாரே அது மாதிரி இருக்கும் கஞ்சிரா)*

*எனக்கு ரொம்ப ஆச்சரியம்... "என் திறமையை பார்த்துட்டு கை காசெல்லாம் போட்டு அப்பா வாங்கி குடுத்திருக்காராக்கும்" என்று பக்கதிலிருந்தவனிடம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தேன்.*

*"திறமையைப் பார்த்துட்டு ஒன்னுமில்ல... ஏற்கனவே பஜனைக்கு கூட்டம் குறைந்து கொண்டிருக்கே... நீ இதத் தட்டினாலாவது அதக் கேட்டு நாலு பேர் வந்து கூட்டம் கூடாதான்னு தான்" - சமயம் பார்த்து குட்டை உடைத்து மானத்தை வாங்கினார் ....🎶*🤣

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶தேனே தென்பாண்டி மீனே... இசைத் தேனே இசைத் தேனே... மானே இள மானே.. நீதான் செந்தாமாரை ஆரீராரோ... நெற்றி மூன்றாம்பிறை... தாலேலலோ…....🎶*

Movie Name : Udhaya Geetham 1985, Singer : SP Balasubrahmanyam, Music Composed by : Ilayaraja

Lyrics written by : Vaali

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*💖🎶 ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🎶..........பஜனை எப்ப முடியும் ???  பிரசாதம் வாங்க பெரிய வரிசைவேற ..  நேக்கு... நாக்குல... இச் ..இச்.. சீக்கரமா பிரசாதம் கிடைக்காதா ????  அது என்னமோ வீட்டிலே வெங்களப் பானை நிறைய பொங்கல் செய்தாலும் சாப்பிட பிடிக்காது... ஆனா ஒரு கையளவு.... சுட சுட.... பொங்கல் பிரசாதம் ... ஆஹா என்ன அருமை ... "ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கும்"*

*"டேய் சுண்டல் குடுத்தாங்கன்னா இதுல வாங்கு, சர்கரைப் பொங்கல் குடுத்தா இதுல...ரெண்டும் குடுத்தா இதுல சுண்டல் இதுல சர்கரைப் பொங்கல்" .*

*ஒரு நாள் அதிசயமாக சுண்டல், சர்கரைப் பொங்கலுடன் பஞ்சாமிர்தம் வேறு குடுத்தார்கள். இரண்டு பாத்திரம் குடுத்தவர்களுக்கு சர்கரைப் பொங்கலும் பஞ்சாமிர்தமும் ஒரே பாத்திரத்தில் வாங்கினேன். "ஏன்டா பிரக்ஸ்பதி..... ரெண்டையும் குழப்பிட்டையேடா...ஒரு ஆல இலைய நடுவில போட தெரியாது?" ....கோவில் என்று கூட பார்க்காம இலவசமா "பல்பு" கொடுக்கறாங்க.... பல்பு ...பீஸ்.. போயே... போயிடுச்சு IT'S GONE .....🎶*🤣

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶ஆஹா ஆஆ ஆஆஆ ததரினா னா ஆஆஆஆஆ... தேவி ஸ்ரீதேவி... தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா.. பாவி அப்பாவி.. உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா…....🎶*

Movie Name : Movie: Vazhvey Maayam 1982, Singer : S.P. Balasubrahmanyam and Vani Jayaram, Music Composed by : Gangai Amaran,

Lyrics written by : Vaali

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*💖🎶 ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🎶......அந்த கோவிலில் கொஞ்சம் கொஞ்சமாகப் பதவிகளும் பொறுப்புகளும்(?!) வர ஆரம்பித்தன. பழம் (பிரசாதங்க) கொடுப்பதிலிருந்து சுண்டல், சர்கரைப் பொங்கல் கொடுக்கும் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டியில் மெம்பரானேன்...*🤣 

*🤣அங்கிருந்து பார்த்த போது தான் அதுவும் நாய்ப் பொழப்புத் தான் என்று புரிய ஆரம்பித்தது. சில கட்டளைதாரர்கள் (அதாங்க சுண்டல் ஸ்பான்சர்) சில சமயம் சின்ன பாத்திரத்தில் கொஞ்சமாகக் கொடுப்பார்கள்.அன்றைக்குத் தான் இங்கே கூட்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும். அன்றைக்கு அனுபவஸ்தர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு சாமர்த்தியமாக சமாளிப்பார்கள். கடைசியில் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டி மெம்பர்கள் சட்டியில் மணடையை விட்டு மோப்பம் மட்டுமே பிடிக்கமுடியும்....🤣🌶️*

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶சுக ராகமே சுக போகமே.. சுக ராகமே என் சுக போகம் நீயே... கண்ணே கலை மானே.. கதை பேச வருவாயோ …....🎶*

Movie Name: Kanni Rasi 1985, Singer : Vani Jayaram and Malaysia Vasudevan

Music Composed by : Ilayaraja, Lyrics written by : Kuruvikkarambai Shanmugam

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*💖🎶ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🤣🤣ஒரு முறை இந்த மாதிரி ஒரு சந்தர்பத்தில் நானும் நண்பனும் தெரியாத்தனமாக கோவில் சுண்டல், பொங்கல் விநியோக பொறுப்பை எடுத்துக் கொண்டோம்.  எனக்கு தெரிந்த (எனது பக்கத்துவீட்டு) எனதுவகுப்பில்கூட படிக்கும்  பெண்ணுக்கு கொஞ்சம் கூடவும், பின்னால் வந்த பாட்டிக்கு ரெண்டு சுண்டல் குறைவாகவும் கொடுத்து விட்டேன்... அவ்வளவேதான் ....🤣🌶️ "ஏன்டா என்னை என்னனு நினைச்ச..உங்க அப்பனே என்ன பார்த்தா பயப்புடுவான், நீ சுண்டைக்கா பய... முன்னால் வந்த செவத்த குட்டிக்கு பல்ல இளிச்சுண்டு குடுக்ற நான் வந்தோடன பஞ்சப் பாட்டு பாடறியா..."* 

*ஹி...ஹி...ஹி...ஹி...... (அசடு வழிய)...."பாட்டி உங்களுக்கில்லாமலா??  எவ்வளவு வேணுமோ அவ்வளவு தருகிறோம்.......  மைண்ட்வாய்ஸ் ...."அடேய் மானம் போறது இந்த பாட்டிக்கு சீக்கிரம் பிரசாதம் குடுத்து அனுப்பிவை". ...அடியேன் கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி புது தில்லி ...*🎶🤣*

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶அலைபாயுதே கண்ணா… என்மனம் அலைபாயுதே… உன் ஆனந்தமோகன வேணுகானமதில்… அலைபாயுதே கண்ணா.. ஆ… ஆ…....🎶*

Movie Name : Alaipayuthey (2000)., Singer : பாடியவர்: ஹரிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலக்ஷ்மி

Music Composed by :A. R. Rahman,  Song Lyrics penned by Oothukkadu Venkatasubba Iyer.  

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

‘‘ஒரு காலத்தில் 500&க்கும் அதிகமானோர் தாளக்கருவி உற்பத்தி செய்தார்கள். இப்போது எல்லோரும் குத்துவிளக்கு, பாத்திரத் தயாரிப்புக்கு மாறிவிட்டார்கள். எப்போதாவது ஓரிருவர் வந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார் நாச்சியார் கோவிலைச் சேர்ந்த குமரேசன். விற்பனை இன்மை, அங்கீகாரம் இன்மை காரணமாக இசைக்கருவிகள் செய்து வந்த பலர் இப்பொழுது வேறு தொழில் நாடிச் சென்று விட்டார்கள். இப்போது தொழில் செய்யும் பலரும் அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிக்க விரும்பவில்லை. தமிழர்களின் கலாச்சாரத்தை சார்ந்த தொழில்கள் அழிய விடாமல் காக்க வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது. ஆனால் தமிழக அரசாங்கம் இதைப் பற்றி எல்லாம் என்றுமே கலவலைப்படாது.


THANKS FOR WATCHING MY WEB BLOGS GOKI-RADIO MARCONI

ALL FREE SERVICE VISIT "NEW DELHI MANGALYAM GROUP"
FOR JOB OPPORTUNITY, BUSINESS OPPORTUNITY DO THE FREE SALT THERAPY 

உடனடடி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு, வாழ்க்கையில் மேலும் உயர்வு பெற இலவச உப்பு சிகிச்சை பரிகாரம் முழு விவரங்களுக்கு +91-9717236514

























*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


*🎶பாடல்:-உடுக்கையில் பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே...🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


*🎶பாடல்:- ஆத்தாடி மாறியம்மா..சோறு ஆக்கிவச்சேன் வாடியம்மா...🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


*🎶பாடல்:-மாயி மக மாயி மணி மந்திர சேகரியே... எங்க ஆயி உமையானவளே..ஆத்தாடி மாரிமுத்து...🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


*🎶பாடல்:-ஒரு தாலி வரம் கேட்டுவந்தேன் தாயம்மா..கண்திறந்து பாரம்மா..வேறுதுணை.. ஏதம்மா.🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


*🎶பாடல்:- ஸ்ரீ ரங்கா நாதருக்கு தங்கச்சியம்மா நான் தங்கச்சியம்மா...அந்த மாநகர் மதுரையில் மீனாட்சியம்மா..காஞ்சி காமாட்சியம்மா..🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


*🎶பாடல்:-மாயி திரிசூலி..ஆதிபரமேஸ்வரியே.. தாயி..மகமாயி.. தங்க முத்து மாறியளே...🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*



*🎶பாடல்:-மருத மலைக்கு நீங்க வந்துபாருங்க.. ஈசன் மகனோடு மனம்விட்டு பேசிப்பாருங்க... "பாம்பாட்டி சித்தர்".. என்கிற வரியில்..உடுக்கை சப்தம்.🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


🪘🪘🪘🪘🪘🪘🪘🪘🪘🪘🪘

ALL FREE SERVICE VISIT NEW DELHI MANGALYAM GROUP. 

FOR JOB OPPORTUNITY, BUSINESS OPPORTUNITY DO THE FREE SALT THERAPY  "SALT THERAPY" 
SALT THERAPY-VISIT


ஜலதரங்கம் பின்னணி இசையாக கொண்ட பாடல்கள்

ஜலதரங்கம் பின்னணி இசையாக கொண்ட பாடல்கள்



*🎶ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார்..*🎶

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- அடி பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை..*

*பாடலின் ஆரம்பைசையில் தபேலா இசையோடு ஜலந்தரங்கள் இசைவர.. பாடலின் இடையிசையில் மற்றும் பாடலின் பின்னணியில் மெல்ல சிணுங்கல்களோடு வரும் ஜலந்தரங்கள் இசை...*


🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- இதழ் மொட்டு விரிந்திட..*


*பாடலின் அதிகமாக தொடர்ந்துவரும்    ஜலந்தரங்கம். இசை பாடல் முழுதும் ஒவ்வொரு சரணத்திலும் வியாபித்திருக்கும்  பாடலின் இடையிசையில் அவ்வப்போது வரும் ஜலந்தரங்கம் இசையும், பாடலில் இறுதியிலும் தொடர்ந்து வரும்  ஜலந்தரங்கள் இசை...*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை   - பணத்தோட்டம் 1963 - பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி*

*ஜலதரங்கம் , வயலின் முன் இசையுடன் ஆரம்பிக்கும் இந்த இனிமையான பாடல் மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த மிகச் சிறந்த பாடல் என்று சொல்லலாம்.அனாயாசமான நுண்சங்கதிகள் கொண்ட இந்த பாடல் இதமான வளைவுகளையும் ,இனிய மென் சுழிப்புகளையும் சுமந்து செல்கின்ற பாடலாகும்.*

*பாடலின் பல்லவியின் பின்னணியில் மின்னி மின்னி மறைந்து ஜாலம் காட்டும் ஜலதரங்க ஒலியும் , பல்லவி முடிவில் மேண்டலின் இசையுடன் கைகோர்த்துவரும் ஜலதாங்கமும், அதை அள்ளிச் சென்று அரவணைத்து வரும் வயலின் சேர்ந்திசையும் ,அதை ஆற்றுப்படுத்தி இனிமை சேர்க்கும் குழலிசையும் , மீண்டும் ஒருமுறை மேண்டலின் குழைந்து வர வயலின் அதை உயரே எடுத்து நெஞ்சை அள்ள ,சாரங்கின் மதுரநாதம் குளிர்ந்த காற்றாய் நுளைந்து மனத்தைக்   கனிய வைக்க அனுபல்லவி [ திரு நாள் கூடி ….என்ற வரிகள் ] ஆரம்பிக்கிறது.அனு பல்லவி முடிந்து வர நறுமணம் பரவுவது போல சாரங்கியின் இனிய இசை படர்கிறது.அதை தொடர்ந்து " இரவில் உலவும் திருடன் அவன் என்றான் " வரிகளில் பாடலின் இனிமை உச்சம் வருகிறது.*

*பாடிய முறையும் ,இசையமைப்பும் , பாடல் வரிகளும் , வாத்தியங்களும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன.*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே ... .*

*பாடலின் ஆரம்பத்தில் தொடர்ந்து வருவதோடு.. பாடல் முழுதும் பின்னிசையாக அதிகமாக தொடர்ந்துவரும்    ஜலந்தரங்கம். இசை பாடல் முழுதும் வியாபித்திருக்கும் ..*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- ஒரே பாடல் ஒன்று.. ராகம் ஒன்று..*


*பாடலின் ஆரம்பத்தில் ஆ..ஆ.பிறகு வரும்     ஜலந்தரங்கம் இசை, ஒவ்வொரு பல்லவியிலும் ஆரம்பத்தில்  வியாபித்திருக்கும் ஜலதரங்கம் இசை பாடலின் இடையிசையில் ஷெனாய் இசையோடு கூடி வருவதும் சிறப்பு......*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- மாஞ்சோலை கிளித்தானோ மான்தானோ ... .*

*பாடலின் ஆரம்பத்தில் தபேலாவும் மிருதங்கமும் போட்டி போட  தொடர்ந்து ஜலதரங்கம் வருவதோடு.. பாடல் முழுதும் பின்னிசையாக அதிகமாக தொடர்ந்துவரும் இசை...  பாடல் முழுதும் அங்கங்கே சிறு சிறு இடைவெளியில் ஜலதரங்க இசை வியாபித்திருக்கும் ..*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶இப்போதெல்லாம், பல இசைக்கருவிகள் காணக் கிடைப்பதில்லை. இந்திய இசைக் கருவிகளுள் இனிமையான ஒலி எழுப்பக்கூடிய ஒன்று, ஜலதரங்கம் எனப்படும் கருவி. 'ணிங்கி ணங்கி…' என்று அது எழுப்பும் இசை, ஒரு தந்தி வாத்தியத்தின் ஒலியைப் போலவே கேட்கும். இதை வைத்து, முழுப் பாடலை வாசித்துக் காட்டும், கச்சேரி செய்த வித்வான்களும் இருந்தார்கள்.*🎶
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

*குளிர்க் காற்றை ஊடுருவிச் செல்லும் கூர்மையான குரலில் எஸ்.பி. ஷைலஜா பாடிய பாடல்களில் ‘ராசாவே உன்ன நான் எண்ணித்தான்’ பாடலும் ஒன்று. பாடலின் தொடக்கத் தில் ஜலதரங்கமும் புல்லாங்குழலும் இணைந்த இசைக் கலவையைக் கரும் பாறையில் பட்டுத் தெறிக்கும் சாரலாக ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மழை ஈரம் படிந்த குன்றின் மீது வரிசையாக வைக்கப்பட்ட விளக்குகளின் காட்சியை மனதுக்குள் எழுப்பும் இசை இப்பாடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்...*

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*இசைச்சக்கரவர்த்தி என்றும் நாதஸ்வர மேதை என்றும் போற்றப்பட்ட டி.என்.ராஜரத்தினம்பிள்ளையிடம் வானொலி பேட்டி ஒன்றில் வாத்திய இசை பெரிதா ? பாடுவது பெரிதா ? என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு " வாத்தியம் என்பது உயிரற்ற ஜடம் , மனிதரின் குரல் என்பது உயிர் உள்ளது ; மனிதக்குரலே சிறப்பானது. வாத்தியம் போல பாடினார் என்றால் பெருமையில்லை, பாடுவது போலே வாசித்தார் என்று சொல்வதே பெருமை " என்ற கருத்து வெளிப்படும் வண்ணம் கூறியிருந்தார்.*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛


QUICK AND EARLY MARRIAGE OPPORTUNITY.. VISIT NEW DELHI MANGALYAM 

FOR JOB OPPORTUNITY, BUSINESS OPPORTUNITY DO THE FREE SALT THERAPY 


Monday, February 14, 2022

*🎶 இந்த "4" 'நாலு' க்கு என்னதாங்க ஸ்பெஷல்?????*🎶 🤣🤣🤣🤣🤣🤣

 🤣444444444444444444🤣

*🎶 இந்த "4" 'நாலு' க்கு  என்னதாங்க ஸ்பெஷல்?????*🎶

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*1. 'நாலு' பேரு 'நாலு' விதமா பேசுவாங்க.*

*🎶பாடல்:-பேசு மனமே பேசு பேதை மனமே பேசு நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு*🎶

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை

கடக்க வேண்டிய நிலைகளும் நான்கு.

பிரம்மசர்யம் , கிருஹஸ்தாச்ரமம்  வானப்ரஸ்தம், சந்யாசம்

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*2. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.*


*🎶பாடல்:- நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி... தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்.. தோள் கொடுத்து தூக்கி செல்லும்.. நாலு பேருக்கு நன்றி..*🎶


" செத்தாலும், 

நல்லதுக்கும்,

கெட்டதுக்கும் நான்கு பேர் வேண்டும்"

"நாலு பேரை போல வாழ்வில் நல்லா இருக்கனும்.."

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*3. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல??*


*🎶பாடல்;-நாலு வகை பூவில் மலர்க்கோட்டை.. அதில் ராணி ஆகிறாய்.. நாலு புறம் வீசும்.. மலர் வாசம் .. அதில் நீ..யே ஆள்கிறாய்...*🎶


*ஏன் இந்த 'நாலு' மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்...*


சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்,பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு,நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு,பிரபந்தத்தில் நாலாயிரம்  என  நான்கு வரும்.

நாலடியார், நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது,இனியவை நாற்பது

அக நானூறு,புற நானூறு,நாலாயிர திவ்ய பிரபந்தம் ..

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*4. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்* 

திசைகள் நான்கு

*🎶பாடல்:-நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும்.. படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது... நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும் தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ..*🎶


ஹரித்வார், அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்), நாசிக், உஜ்ஜையினி என நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*5. அவரு 'நாலு'ம் தெரிஞ்சவரு,  'நாலு'ம் புரிஞ்சவரு.*


*🎶பாடல்:-இரண்டு கைகள் நான்கானால்.. இருவருக்கேதான் எதிர் காலம்... பகைவர்களே ஓடுங்கள்.. புலிகளிரண்டு வருகின்றன..🎶*


நான்கு வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.


வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் ,அவற்றை  நாலு ரிஷிக்களிடம்  பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்.அவர்கள்

ருக் – பைலர், யஜூர் — ஜைமினி, சாம — வைசம்பாயன, — அதர்வண — சுமந்து.

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*6. 'நாலு' வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.*

*🎶பாடல்:- அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு.. அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு.. மணக்க மணக்க மயக்க மயக்க..இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க.. அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே.*🎶


அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு..பெண்டிரின் நால்வகை குணங்கள்


"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்"

ஔவையின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*7.நாலு விஷயம் சொல்றேன் கேளுங்க*

*🎶பாடல்:- நாலு பக்கம் கடலு... அது நடுவுல நான் படகு....படகுல குத்தமில்ல படைச்சவன் சுத்தமில்ல.. மனக்குற மல்லி முள்ள மனசுல வச்சேன் புள்ள...🎶*


நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி...இதில் நாலு என்பது.. நாலடியார்..


சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் நான்கு பேர்.

அப்பர்,சம்பந்தர்,சுந்தரர்,மாணிக்க வாசகர்.இவர்களை நால்வர் என அழைக்கிறோம்.


தசரதனுக்கு நான்கு பிள்ளைகள்.

நான்கு புருஷார்த்தங்கள்..அவை

தர்ம, அர்த்த, காம, மோட்சம்.

பிரம்மாவுக்கு நான்கு தலைகள்.சதுர்முகன் என்ற பெயர் பிரம்மாவுக்கு.

ஆதிசங்கரர் பாரத நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மடங்கள் நிறுவி,நான்கு சீடர்களை நியமித்தார்.

அக்னிக்கு கம்பீரா,யமலா,மஹதி,பஞ்சமி என நான்கு வடிவங்கள்.

ரத, கஜ, துரக, பதாதி (தேர், யானை, குதிரை, காலாட் படைகள்..என நால் வகைப் படைகள்.

யுகங்களும்..கிரதம், திரேதம், துவாபரம், கலி என நான்கு

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*நான்கு என்ற எண், பல சிறப்புக்கள் கொண்டிருந்தாலும்..* 


*🤣4 பத்தி எழுதினத ஒரு நாலு பேராவது படிச்சா சரி... இதைப்பற்றி ஓர் 4 வார்த்தை சொல்லுங்க😂..*


*🎶பாடல்:- நாலு வார்த்த பேசலையே... நான் புடிச்ச பச்சைக்கிளி.. தேடிப்போனேன் பார்க்கலையே.. மாலையிட்ட மச்சி கிளி..*🎶

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶




FREE JOBS EARN FROM HOME