FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, December 30, 2021

விநாயகர் சதுர்த்தி தொடர்

 [06/09, 6:41 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥காக்கும் கடவுள் கணேசனை நினை.. கவலைகள் அகல அவன் அருளே துணை... காக்கும் கடவுள் கணேசனை நினை..🥥*

[06/09, 6:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-1🥥*

*விநாயகருக்கு அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*பார்வதியும் சிவனும் தாயம் விளையாடிய போது நடுவராக இருந்த நந்தி சிவனுக்கு ஆதரவாக கூறியதால் கோபம் கொண்ட பார்வதி தேவி, நந்திக்கு சாபம் கொடுத்தார். பின்னர் அவரே சாப விமோசனமும் கொடுத்தார். கணேச சதுர்த்தியின் போது விநாயகருக்கு விருப்பமான பொருளை சமர்பித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறவே அருகம்புல்லை படைத்து சாப விமோசனம் பெற்றாராம்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[06/09, 6:47 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥விநாயகனே வினை தீர்ப்பவனே... வேழ முகத்தோனே ஞால முதல்வனே... குணாநிதியே குருவே சரணம் ..🥥*

[06/09, 6:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-2🥥*

*விநாயகருக்கு அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*ஜ்வாலாசுரன் என்ற அனலன் வேண்டாத சேர்க்கையினால் தீயவனாகி சாபம் பெற்றான். இதனால் மூர்க்கனாக மாறி தேவர்களை இம்சித்து வந்தான். வரங்கள் பல பெற்றதாலும், பிறப்பிலேயே அவனது உடல் பெரும் அனலைக் கக்கியதாதால் அவனுக்கு அருகில் கூட யாரும் செல்ல முடியவில்லை. செல்பவர்களை எல்லாம் சாம்பலாக்கினான் ஜ்வாலாசுரன். என்ன செய்வது என்று புரியாத தேவர்கள் பிள்ளையாரை வேண்டி அவரது உதவியை நாடினர். கணநாதரும் அவனை ஒழித்து தேவர்களை காக்க அவனிருக்கும் இடம் சென்றார். அங்கு கணபதியின் கணங்கள் எல்லாம் வெம்மை தாங்காமல் ஓலமிட்டன. இதனால் கணபதியின் கோபம் எல்லை கடந்தது. ஜ்வாலாசுரனை பெரும் அனல் வடிவம் கொண்டு கணபதி தாக்கினார்.*


*அந்த அசுரன் ஓய்ந்துபோன தருணத்தில் அவனைப் பிடித்து விழுங்கி விட்டார் கணபதி. உஷ்ணம் தாங்காத கணநாதர் சக்தியை எண்ணி வணங்கினார். தேவர்கள் யாவரும் கணநாதரை குளிர்விக்கும் வகையில் என்ன என்னவோ செய்துபார்த்தார்கள். எதிலுமே தீ தணியவில்லை. சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும் சேர்ந்து ஒரு சாண் அளவுள்ள இருபத்தொரு அருகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்தது.*


*அருகம்புல்லினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த பிள்ளையார் மகிழ்ந்தார். அதுமுதல் தனக்கு பிடித்த அருகம்புல்லைக் கொண்டு யார் பூஜை செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய வரம் தருவேன் என்று கூறினாராம் பிள்ளையார். ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர், சதுர்த்தியிலும் தூர்வாஷ்டமியிலும் பிள்ளையாரை அருகம்புல் சாற்றி வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[06/09, 6:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு... அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து..🥥*

[06/09, 6:56 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-3🥥*

*விநாயகருக்கு அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*யாஷினி தேவி என்ற தேவ மங்கை விநாயகரை திருமணம் செய்ய நினைத்து தவம் இருந்தாள். ஆனால் அதற்கு சம்மதிக்காத விநாயகர் அருகம்புல்லாக மாறி தனக்கு விருப்பமான பொருளாக தன்னுடனேயே இரு என்று வரமளித்தார் என்கிறது புராண கதை.*


*அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்*.


*அருகம்புல்லுக்கு ஈடானது எதுவும் இல்லை. தன்னுடைய செல்வங்களுக்கு மேலானது அருகம்புல் என்று அந்த குபேரரே கூறியுள்ளார். பாற்கடலில் இருந்து எடுக்கப்பட்ட அமிர்தம் அருகம்புல்லின் மீது விழுந்ததால் அதற்கு அழிவென்பதே கிடையாது. பூஜைக்கு உரிய இந்த புல்லிற்கு ஆகர்ஷன சக்தியை உறிஞ்சும் தன்மை உண்மை. நல்ல சக்தியை தேக்கி வைத்து தீய சக்தியை விலக்கி வைக்கும் தன்மை கொண்டது அருகம்புல்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[06/09, 6:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே.. வினைகளை வேறறுக்கும் துணைவனும் நீ தானே... வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே..🥥*

[06/09, 7:03 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-4🥥*


*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*வரலாறு, தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி அவர்கள் அருகம்பில் குறித்த ஒரு அரிய தகவலைத் தருகிறார்:*


*எதை தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது என்பது பழம்பெரும் காலம் முதலே ஒரு முக்கிய செயலாக இருந்தது என்பது பல வேத சாஸ்திர புராண இதிகாசங்களில் காணலாம். அதுபோல பல புராதான மன்னர்களது ஆட்சியில் பிள்ளையாருக்கு உகந்த அறுகம்பில் கொண்டு சுப நிகழ்ச்சிகளை தொடங்கினார்கள்..*


*பண்டைய அரசு குறிப்புகளில்,  அருகம் புல், புல் வகைகளில் அரசு போன்றது. ஆகையால் ராஜாக்கள் பட்டாபிஷேக தினத்தன்று அருகம் புல்லை வைத்து ஒரு மந்திரம் சொல்லுவார்கள். ‘’அருகே, புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ அதே போன்று மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ எணன்று முடி சூடும்போது மன்னன் கூறவேண்டும் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன’ (பக்கம்26, யாவரும் கேளிர், டாக்டர் இரா நாகசாமி)*


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[06/09, 7:06 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்... ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்(2)🥥*

[06/09, 7:12 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-5🥥*

*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*ஜனகமஹாராஜாவுக்கு தான்தான் பூவுலகில் தான தருமங்கள் செய்து மக்களை பசியின்றி காக்கும் சிறந்த மன்னர் என்கிற கர்வம் வந்தது...*


*அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என நினைத்த விநாயகர் ஒரு வேதியர்போல தன்னை மாற்றிக்கொண்டு ஜனகமஹாமன்னரின் அரண்மனைக்கு சென்று தான் மிகுத்த பசியோடு வந்திருப்பதாக கூற.. அந்த அரசரவையிலிருந்த மன்னரின் ராஜகுமாரன் அவருக்கு உரிய மரியாதை செய்து அரண்மனையின் உணவு பரிமாறும் அறைக்கு அழைத்துச்சென்று அவருக்கு தேவையான அறுசுவை உணவு வகைகளை வழங்குமாறு கூறினார்..*


*சற்று நேரத்தில் சேவகர்கள் ஓடிவந்து அரண்மனை உணவகத்தில் இருந்த உணவு அனைத்தும் தீர்ந்துபோனது. இருந்தும் அந்த அந்தன வேதியரின் பசி தீரவில்லை என்கிறார்கள்...*


*ராஜகுமாரனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இவர் நிச்சயமாக மனிதர் இல்லை. தேவராகவோ, பூதமாகவோ இருக்க வேண்டும். அரண்மனையில் இனி சாப்பிடுவதற்கென எந்தப் பொருளும் இல்லை. காவலர்கள் மூலமாக ஊரிலுள்ள எல்லார் வீட்டிலும் இருந்து உணவு கொண்டு வரச்சொல்லுங்கள் எனக் கட்டளையிட்டான் ராஜகுமாரன். விஷயம் ஜனகருக்கும் பறந்தது. அவர் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். ஊரார் வரிசையாக உணவுப்பண்டங்களை அடுக்கினர். அந்தணர் வடிவில் இருந்த கணபதிக்கோ அது ஒரு கைப்பிடி அளவே இருந்தது. அதையும் காலி செய்துவிட்டு, பாவிகளே! பெரும் பசியுடன் வந்த எனக்கு கடுகளவு சாப்பாடு போட்டு, மேலும் என் பசியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே! உம்... போடுங்க சாப்பாட்டை, என்று கத்தினார். ஜனகர் அவர் அருகே வந்து, வேதியரே! உமக்கு கொடுக்க எங்கள் நாட்டிலேயே இப்போது ஏதுமில்லை. என்னை மன்னிக்க வேண்டும். உமது பசியைப் போக்கக்கூடியவர் என நீர் யாரை நினைக்கிறீரோ அங்கேயே போய் நீர் பசியாறிக் கொள்ளலாம், என்றார்.*


*மன்னனே! நீ தானே பரப்பிரம்மம். அப்படித் தானே ஊரெங்கும் சொல்லிக் கொண்டு திரிகிறாய். கடவுளுக்கு சமமான உனக்கு யாசகம் கேட்டு வந்த அந்தணனின் பசியைத் தீர்க்க முடியவில்லையே. ஒரு சிறு பகுதியை ஆளத்தெரியாத நீ, கடவுளாக இருந்து இந்த பிரபஞ்சத்தையே எப்படி காக்கப் போகிறாய்? என் பசியைத் தீர்ப்பதாக வாக்குறுதி தந்து விட்டு, அதைக்கூட காப்பாற்றாத நீயெல்லாம் தெய்வம் என்று சொல்லிக்கொள்கிறாயே, என்று அவருக்கு உரைக்கிற மாதிரி சொல்லிவிட்டு கோபப்படுவது போல் நடித்து வெளியேறி விட்டார். அவர் சென்ற பிறகு ஜனகர், தன்னைப் பரப்பிரம்மமாக நினைத்து கர்வத்துடன் நடந்து கொண்டதையும், யாசகம் கேட்டவருக்கு கூட உணவிட முடியாத தனது இயலாமையையும் எண்ணி வருந்தினார்.*


 *அரண்மனையில் இருந்து புறப்பட்ட அந்தணராகிய கணபதி, திரிசுரன் என்ற தன் பக்தனின் வீட்டிற்குச் சென்றார். திரிசுரனும் ஒரு அந்தணர். அவரது மனைவி விரோசனை. கணவர் யாசகமாகக் கொண்டு வரும் அரிசியை சமைத்து விநாயகருக்கு படைத்து விட்டு சாப்பிடும் பழக்கமுடையவள். கணவருக்கு பூஜை வேளையில் பணிவிடை செய்பவள். அவர்களின் வீட்டுக்குச் சென்றதும், திரிசுரன் வெளியே வந்து அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, தன் குடிசைக்குள் அழைத்துச் சென்றார். திரிசுரனே! நான் தீர்த்தயாத்திரை செல்கிறேன். வழியில் பசிக்கிறதே என்பதற்காக இந்த நாட்டு மன்னன் ஜனகரிடம் உணவு கேட்டேன். அவர்களோ குறைந்த அளவு தந்து, என் பசியை மேலும் தூண்டி விட்டார்கள். பசியடங்காத நான், உங்களிடம் உணவு கேட்டு வந்துள்ளேன். ஏதாவது கொடுங்களேன், என்றார்.* 


*விரோசனைக்கு கண்ணீர் முட்டியது. சுவாமி! மற்ற நாட்களில் கூட நெல்லோ, அரிசியோ பிøக்ஷயாக ஏற்று வருவார் என் பர்த்தா. இன்றோ, அவர் ஏதுமில்லாமல் வெறும் கையுடன் திரும்பி விட்டார். விநாயகருக்கு அர்ச்சனை செய்த அருகம்புல் மட்டுமே இங்குள்ளது. வேறு ஏதுமில்லை. நான் என்ன செய்வேன்? பசித்து வந்த தங்களுக்கு ஏதும் தர முடியாமல் தவிக்கிறேனே! என்று தங்கள் நிலைமையை வெளிப்படுத்தினாள். பெண்ணே! இதுபற்றி கவலை வேண்டாம். உன்னிடம் இருப்பதாகச் சொல்கிறாயே, அருகம்புல், அதில் ஒன்றிரண்டைக் கொடுத்தாலே போதும். என் பசி தீர்ந்து போகும், என்றார் சுவாமி. விரோசனையும் அவ்வாறே அவருக்கு இரண்டு அருகம்புல்லைக் கொடுத்தாள்.*


*கணபதி அதை வாயில் போட்டாரோ இல்லையோ, அந்த வீடு பொன்மயமாக ஜொலித்தது. அவ்வூரிலுள்ள குடிசைகளெல்லாம் மாளிகைகளாகி விட்டன. ஜனகரின் அரண்மனையில் முன்பையும் விட செல்வம் கொழித்துக் கொட்டிக் கிடந்தது. அவருக்கு பேராச்சரியம். அரண்மனைக்கு வந்த வேதியரே இதற்குக் காரணம் என்பதை அவர் புரிந்து கொண்டார். திரிசுரனின் இல்லத்திற்கு அவர் விரைந்தார். அப்போது விரோசனை, சுவாமி! தாங்கள் யார்? எங்கள் வீட்டின் நிலையையே மாற்றி விட்டீர்களே. பசும்புல்லுக்கு பசும்பொன் கொடுத்த புண்ணியரே! தங்களைப் பற்றிச் சொல்லுங்களேன், என்றதும் விநாயகர் தன் சுயரூபத்தை அவளுக்கு காட்டினார்*. 


*திரிசுரன் அவரிடம், சுவாமி! இந்த ஏழையின் வீட்டுக்கா எழுந்தருளினீர்கள்! நான் அருகம்புல் தவிர தங்களுக்கு ஏதும் தந்ததில்லையே! இனிக்கின்ற மோதகமும், சித்ரான்னங்களும் படைத்து உம்மை வழிபடும் இடங்களுக்கெல்லாம் செல்லாமல், எங்கள் மகாராஜா தங்களுக்கு ஏராளமான உணவிட்டும் அவர் வீட்டில் காட்சி கொடுக்காமல் இங்கு வந்து காட்சி தந்தமைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள அடியேன் விரும்புகிறேன், என்றார்.*


*இதற்குள் ஜனகரும் அங்கே வந்து விட, அவர் பரவசம் மேலிட கணபதியை வணங்கி, விநாயகரே! நானே பரம்பொருள் என இறுமாந்திருந்தேன். என் மாயையை தீர்த்த வல்லவரே! உம்மை மதிக்கத்தவறிய எனக்கு இனியும் இவ்வுடலில் உயிர் வேண்டாம். நான் உமது திருவடியை அடைந்து பாக்கியத்தை அருள்வீரா? நான் செய்த தவறுக்குரிய தண்டனை எதுவாயிருந்தாலும் கொடும்! ஆனால், என்னை மீண்டும் பிறவியெடுக்கச் செய்யாமல் தடுக்க வேண்டும், என்றார்.*


*கருணைக்கடலான விநாயகர் அவருக்கும் திரிசுரன் தம்பதிக்கும் அருள்செய்து, என்னைத் திருப்திப்படுத்த ஆடம்பரம் ஏதும் தேவையில்லை. ஒரு பூவையையோ, இலையையோ எனக்கு அர்ப்பணித்தாலே போதும். அதுவும் இல்லாதவர், எனக்கு மந்திரங்கள் கூறியும், என் திருநாமங்களைக் கூறியும் இதயத்தில் இருந்து அருகம்புல்லையும், அதற்கிணையான வன்னி இலைகளையும் தந்தாலே போதும், என்றார்*


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[07/09, 8:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-6🥥*

*விநாயகருக்கு அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*பாம்பும் கீரியும் பரம எதிரிகள். இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தால் தாக்கிக் கொல்லாமல் விடா. பாம்பு கடிக்கும் போது விஷத்தைப் போக்குவதற்காக ஒவ்வோரு முறையும் கீரி, அருகம் புல் மீது படுத்துப் புரண்டு சக்தி பெறும் என்பதும் கவனிக்கத்தக்கது.*


*அருகம் புல் பெயரிலேயே சக்தி கொடுக்கும் சூரியன் பெயரும் (அருகன்) இருக்கிறது. அருகன்=சூரியன்=ஆர்கோஸ் (கிரேக்கம்)= பர்கோ தேவஸ்ய( காயத்ரி மந்திரம்) எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய சொற்கள்.*


*இலங்கை மக்களும் நாட்டார் சமூகத்தினரும் அருகின் பெருமையை நன்கு அறிவர். இலங்கையில் குழந்தைகளுக்கு ‘’பால் அரிசி’’ வைப்பார்கள். பள்ளிக்குப் போகும் முன் குழந்தைகளுக்கு பாலில் அருகம் புல்லைத் தோய்த்து வாயில் விடுவர்.*


*கல்யாண காலங்களில் மணமக்களை வாழ்த்தி அருகரிசி போடுதலும் உண்டு.*


*இப்படி பல ஆய்வுகளில் அருகம்பிலுக்கு இருக்கும் மகத்துவத்தை தெரிந்துகொண்டு. அப்படிப்பட்ட உயர்வான அருகம்புல்லை அன்புடன் பிள்ளையாருக்கு சாற்றுவது எத்தனை சிறப்பு என்பது புரிகிறதா?...*


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[07/09, 8:46 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன் சன்னதி சரண் அடைந்தோமே..🥥*

[08/09, 7:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-7🥥*

*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*🌾தோப்புக்கர்ணமும், அருகம்புல், எருக்கமாலை, அற்புதம்..🌾*


*கடுமையான தவம் செய்து சிவனின் சாகாவரம் பெற்ற, விநாயர்போன்ற முக தோற்றம் கொண்ட கஜமுகாசுரனின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது....* 


*இந்திரன் முதலான தேவர்களையும், நவக்கிரகங்களையும் அவன் ஆட்டி வைத்தான்.* 


*அவர்கள் தினமும் இருட்டறையில் அடைக்கப்பட்டு தேவையில்லாமல் சித்ரவதை செய்யப்பட்டனர். ஒருமுறை அவர்கள் அனைவரையும், மொத்தமாக ஒரு மைதானத்தில் நிறுத்திய யானை முகம் கொண்ட கஜமுகாசுரன், சுக்ராச்சாரியாரையும், முன்னாள் அசுரத்தலைவனும் தற்போது தனக்கு அமைச்சராக இருப்பவனுமான அசுரேந்திரன் ஆகியோரையும், அசுரத்தளபதிகள், அசுரமக்கள் அனைவரையும் வரவழைத்தான். அசரகுல திலகங்களே! தேவர்கள் நம்மை வென்று விடலாம் எனக்கருதினார்கள். ஆனால், நான் சிவனாரிடம், அவரது சக்தியைத் தவிர வேறு எதனாலும் அழியமாட்டேன் என்ற வரம் பெற்றிருக்கிறேன். எனவே, இந்தத் தேவர்கள் என்னை எதுவும் செய்ய இயலாது. நம்மை பல சமயங்களில் இவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர். நம்மை வென்று விட்டதாக மார்தட்டியுள்ளனர்.*


*இப்படிப்பட்ட கொடியவர்கள் இப்போது நம்மை வணங்கி நிற்கின்றனர். ஆனால், வணக்கத்திலும் இப்போது ஒரு வித்தியாசத்தைக் காணப்போகிறீர்கள். இதோ! இவர்கள் அனைவரும் தங்கள் காதுகளை மாறுகைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். உட்கார்ந்து உட்கார்ந்து எழ வேண்டும். தோப்புக்கர்ண வழிபாடு என்பது இதற்குப் பெயர்.*


*இப்போது தேவர்கள் என் முன்னால் தோப்புக்கர்ணம் போடப் போகிறார்கள். நீங்கள் பார்த்து ரசித்து கைத்தட்டி மகிழுங்கள், என்றான். பின்னர் தேவர்களை நோக்கி உம் என்று அதட்டினானோ இல்லையோ, நடுநடுங்கிப் போன தேவர்கள் 108 முறை தோப்புக்கர்ணம் போட்டு, கால் வலித்து மயங்கிச் சாய்ந்தனர். அவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்து சுக்ராச்சாரியாரும், அசுரேந்திரனும் கைகொட்டி ரசித்தனர். வேடிக்கை பார்க்க வந்த அசுரமக்கள், அவர்கள் மீது கதாயுதங்களை வீசினர். அவை அவர்கள் உடல்களைப் பதம்பார்த்து ரத்தம் கொட்டியது. இப்படி நடந்த கொடுமைக்குப் பிறகு, அவர்களை சிலகாலம் விடுவித்தான் கஜமுகாசுரன்.* 


*தேவர்கள் இதுதான் சமயமென கைலாயத்தை நோக்கி விரைந்தனர். வாசலில் சின்னக்கணபதி வீற்றிருந்தான். விதிமுறைப்படி அவர்கள் கணபதியைப் பூஜித்தனர். கணபதியே! எங்கள் நிலையைப் பார்த்தீரா! பல தவங்கள் செய்தாலும், இறைவனின் சோதனைக்கு நாங்கள் ஆளாகியுள்ளோம். கஜமுகாசுரனுக்கு தங்கள் தந்தையார் தந்த வரத்தால் நாங்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. காக்கும் கடவுளே! கணபதியே! நீர் தான் எங்களுக்கு அருள வேண்டும். சிவபெருமானை சந்திக்க அனுமதி தர வேண்டும், என்றனர். கணபதி அவர்களை நோக்கி புன்னகைத்தார்.*


*தேவர்களே! கவலை வேண்டாம். என்னைத் தஞ்சமடைந்தவர்களை கைவிட மாட்டேன். வாருங்கள், தந்தையாரைப் பார்க்கச் செல்வோம், எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்றார்.* 


*தேவர்களின் நிலை கண்ட சிவபெருமான் கொதித்துப் போனார். தேவர்களே! தேவராயினும், அசுரராயினும் நான் நீண்ட ஆயுள் என்னும் வரத்தைக் கொடுப்பது உலக மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே! கஜமுகாசுரன் நான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால், அவன் சக்தி இழந்தவனாகிறான். இருப்பினும், நான் அவனுக்கு கொடுத்துள்ள வரத்தின்படி, என் சக்தியான கணபதியை அனுப்பி அவனை சம்ஹாரம் செய்கிறேன், என்றதும், ஆஹா... விமோசனம் அடைந்தோம், என்று சொன்ன தேவர்கள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கணபதியைப் புகழ்ந்து பாடினர்.* 


*பின்னர், தந்தையின் கட்டளைப்படி, கணபதி அசுரர்களின் பட்டினமான மதங்கநகரத்திற்கு படைகளுடன் புறப்பட்டார். அசலன் என்ற பூதகணம் அவரை தன் தோளில் ஏற்றிக்கொண்டது. சின்னக் கணபதியின் வருகை பற்றி, மதங்கநகருக்கு தகவல் தெரிந்து விட்டது யாரோ ஒரு சிறுவன், போருக்கு வருகிறான் என்பதைக் கேட்ட கஜமுகாசுரனும், சுக்ராச்சாரியார், அசுரேந்திரன் ஆகியோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தேவர்களுக்கு போயும் போயும் ஒரு குழந்தை தானா தலைவனாகக்கிடைத்தான். இந்த அவமானத்தை என்னவென்று சொல்வது? என்று தங்களுக்குள் கேலி பேசிக்கொண்டனர். மதங்கநகரத்தை சின்னக்கணபதி அடையும் முன்பே, கஜமுகாசுரன் தனது படைகளுடன் போர்க்களத்தில் தயாராக நின்றான்.* 


*கணபதி தேவர்கள் புடைசூழ அங்கு வந்ததும், கஜமுகாசுரன் அவரை நோக்கி, ஏ சிறுவனே! என்னைப் போலவே யானை முகத்துடன் நீ பிறந்துள்ளதால், உன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்ளாதே. நீ குழந்தை. பலகாலம் வாழ வேண்டியவன். இந்த தேவர்களின் பேச்சைக் கேட்டு உன் உயிரைப் போக்கிக் கொள்ளாதே. என் சிறுவிரலின் பலம் கூட நீ இருக்க மாட்டாய். திரும்பிப் போய்விடு. நீ சிறுவன் என்பதால், உன் மீது கருணை கொண்டு உன்னை திரும்பிச் செல்ல அனுமதிக்கிறேன். போய்விடு, என்றான்.*


*கணபதி கலகலவெனச் சிரித்தார்... இன்னும் சிறிது நேரத்தில் கஜமுகாசுரன் என்னவாகப்போகிறான்..*

*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[08/09, 8:03 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥மஹா கணபதிம்…  ஸ்ரீ மஹா கணபதிம்… ஸ்ரீ மஹா கணபதிம் மனசா ஸ்மராமி.. மஹா கணபதிம் மனசா ஸ்மராமி.. மஹா கணபதிம் மனசா ஸ்மராமி.. மஹா கணபதிம் மனசா ஸ்மராமி.. வசிஷ்ட வாம தேவாதி வந்தித..🥥*

[09/09, 12:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-9🥥*

*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*🌾தோப்புக்கர்ணமும், அருகம்புல், எருக்கமாலை, அற்புதம்..🌾*

இந்துக்களின் விநாயகர் வழிபாடுகளில் முக்கியமானது விநாயகரின் முன்னால் தமது தலையில் மூன்று முறை குட்டி தோப்புக்கரணம் போட்டு வணங்கும் முறையாகும். இந்த வழிபாட்டு முறை எவ்வாறு வந்தது என்பதற்கு புராணக் கதைகளில் வேறுபட்ட காரணங்கள் கூறப்படுகின்றன.


கதை-1 தோப்புக்கரணத்தை ஆதியில் உண்டாக்கியவர் மஹாவிஷ்ணு. ஒரு முறை மருமான் கணேசரைப் பார்க்க கைலாயம் சென்றவர் குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதற்காக தன் சக்கரத்தைச் சுற்றிக் காட்டினார். குழந்தை தன் தும்பிக்கையை நீட்டி சக்கரத்தை பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டது. என்ன செய்தும் அதைத் திருப்பி வாங்கமுடியாமல் கடைசியில் விஷ்ணு தன் நான்கு கைகளினாலும் தன் இரு காதுகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இதை ஒரு வேடிக்கையாகப் பார்த்த குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க, வாயிலிருந்த விஷ்ணுசக்கரம் வெளியே விழுந்தது.


மஹாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக்கொண்டது சமஸ்கிருதத்தில் தோர்பிஹ் (கைகளால்) கர்ணம் (காது) என்று குறிப்பிடப்பட்டது.இதுதான் காலக்கிரமத்தில் 'தோப்பிக்கரணம்', 'தோப்புக்கரணம்' என்றாகியிருக்கிறது. மஹாவிஷ்ணுதான் இதை முதலில் தொடங்கினார், மனிதர்கள் அல்ல, என்பதற்கு சான்று 'தோர்பிஹ்கரணம்' என்ற சொல்லிலேயே அடங்கியிருக்கிறது. இது புரிய சமஸ்கிருதத்தில் சிறிது இலக்கண அறிவு தேவை.


அதாவது, 'தோர்பிஹ்' என்றால் 'பல கைகளால்'. 'தோஸ்' என்பது கை. முதல் வேற்றுமை ஒருமை 'தோஹ்'. 'கைகளால்' என்பது மூன்றாம் வேற்றுமை. 'ஒரு கையால்' என்பதற்கு 'தோஷா'.'இரண்டு கைகளால்' என்பதற்கு 'தோர்ப்யாம்'. மனிதர்களாகிய நாம் இரண்டு கைகளால் போடும் தோப்புக்கரணத்தை 'தோர்ப்யாம் கர்ணம்' என்றுதான் சொல்லவேண்டும். இது பேச்சு வழக்கில் திரிந்தால்கூட 'தோப்பாங்கரணம்' என்றுதான் ஆகியிருக்குமே தவிர, 'தோப்பிக்கரணம்' என்றோ 'தோப்புக்கரணம்' என்றோ ஆகியிருக்காது. 'தோர்பிஹ்' என்று மூலரூபத்தில் இருந்திருந்தால் தான் அது சிதைந்து 'தோப்பி', 'தோப்பு' என்று ஆகியிருக்கும். 'தோர்பிஹ்' என்பது இரண்டுக்கும் மேற்பட்ட பல கைகளைக்குறிக்கும் 'பஹுவசன'மாயிருக்கிறது. விஷ்ணுவுக்கு நான்கு கைகள். அதனால்தான் அவர் நான்கு கைகளால் காதைப் பிடித்துக்கொண்டதை 'தோர்பிஹ்' என்று முதலில் சொல்லப்பட்டு அது 'தோப்பி', 'தோப்பு' என்று சிதைந்திருக்கிறது!


கதை2-ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலத்தினுள் கங்கை நீரை அடக்கி வைத்திருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. அகத்தியர் தட்டி விட்ட காகத்தைத் திரும்பிப் பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் ஒரு சிறுவன் நின்றுகொண்டு முனிவரைப் பார்த்துச் சிரித்தான்.


கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். பின்னர் இந்த வணக்க முறை விநாயகரை வணங்கும் ஒவ்வொருவரம் பின்பற்றத் தொடங்கினர்.


கதை-3 மற்றொரு புராணக் கதையில். கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்களை தன்னைக் கண்டால், தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். அதுமுதல் விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[09/09, 2:31 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-8🥥*

*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*🌾தோப்புக்கர்ணமும், அருகம்புல், எருக்கமாலை, அற்புதம்..🌾*

*சிறுவனே! ஏன் சிரிக்கிறாய்? நீ கணங்களுக்கு அதிபதி என்ற கர்வமா? அல்லது தேவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியமா? இந்தக் கோழைகளை நம்பி மோசம் போய் விடாதே! என்று கஜமுகாசுரன் சொல்லவும், கணபதி பதிலேதும் சொல்லாமல் மீண்டும் சிரித்தார்.* 


*கஜமுகாசுரனுக்கு கோபம் அதிகமாயிற்று. கோபமாக பேசுபவர்களைப் பார்த்து சிரிப்பது என்பது ஒரு வகையான கலை. இந்த சிரிப்பு மேலும் கோபத்தைத் தூண்டும். கோபம் எங்கே அதிகமாகிறதோ, அங்கே தோல்வி உறுதிப்படுத்தப்பட்டு விடுகிறது.*


*சின்னஞ்சிறுவா! என்னையே கேலி செய்கிறாயா? நான் சிவபெருமானின் அருள் பெற்றவன். மிருகங்களோ, பறவைகளோ, தேவர்களோ என்னை ஏதும் செய்ய முடியாது. அந்தச் சிவனின் சக்தியைத் தவிர வேறு எதுவுமே என்னை அழிக்க முடியாது. என்பதை அறியாமல், இந்த தேவர்களின் ஆயுதங்களை நம்பி வந்து விட்டாய். நீ சிறுவனாய் இருப்பதால் மீண்டும் மன்னிக்கிறேன். போய்விடு, என கர்ஜித்தான்.*


*கணபதி கலங்கவில்லை. இந்த கர்ஜனைக்கும் தனது களங்கமற்ற சிரிப்பினையே பதிலாகத் தந்தார். கோபம் உச்சியைத் தொட, தன்னிடமிருந்த சில அம்புகளை கணபதியின் மீது எய்தான் கஜமுகன். கணபதி அவற்றைத் தன் கையில் இருந்த கதாயுதத்தால் தட்டியே நொறுக்கி விட்டார்.*


*உம்...உம்... சூரனாகத்தான் இருக்கிறாய். இதோ! இந்த நாகாஸ்திரத்துக்கு பதில் சொல், இந்த இந்திராஸ்திரத்துக்கு பதில் சொல், இந்த வருணாஸ்திரத்துக்குப் பதில் சொல், இந்த வாயுவாஸ்திரம், நரசிம்மாஸ்திரம், பிரம்மாஸ்திரம் ஆகியவற்றுக்கு பதில் சொல், என ஒவ்வொரு அஸ்திரமாக அனுப்பினான் கஜமுகன். அவை அனைத்துமே, சிவசொரூபரான கணபதியின் காலடியைத் தழுவி பாவ விமோசனம் அடைந்தன. கஜமுகாசுரன் யோசிக்க ஆரம்பித்து விட்டான். வந்திருப்பவன் சிறுவன் என்றாலும் சாதாரண மானவன் அல்ல. அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை அறிந்து, சிறுவனே! இந்த மாயவித்தை கண்டெல்லாம் நான் நடுங்கி விட மாட்டேன். யார் நீ, தைரியமிருந்தால் சொல், என்றான்.*


*கஜமுகா! உனக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். நீ என் தந்தையின் பக்தன் என்பதால், இவ்வளவு நேரமும் பொறுத்திருந்தேன். தேவர்களும், மனிதர்களும், பறவைகளும், மிருகங்களும், அம்பு முதலான ஆயுதங்களும் உன்னை அழிக்க முடியாது என்பது வாஸ்தவம் தான். இந்த வரத்தையே என் தந்தையிடமிருந்து நீ பெற்றிருக்கிறாய். நான் சிவபுத்திரன். அவரது சக்தி. சிவனின் அம்சத்தால் உனக்கு அழிவு என்பதை மறந்து விட்டாயே. மேலும், நானும் மிருக வடிவினனும் அல்ல. தேவனும் அல்ல, பறவையும் அல்ல, மனிதனும் அல்ல. மிருகமும், தேவவடிவும் கலந்தவன். ஒருவேளை, இந்த வடிவாலும் நீ அழிய முடியாது என்ற வரமிருந்தாலும் கூட ஆயுதங்களால் தான் நீ அழிய முடியாது என்று வரம் பெற்றிருக்கிறாயே ஒழிய.. இதோ... என் உறுப்பான தந்தத்தால் அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற வில்லையே. எனவே, உனக்கு சக்தியிருந்தால் இதைத் தடுத்துப்பார், என்ற கணபதி, ஆவேசம் பொங்கியவராக தன் வலதுபுற கொம்பை ஒடித்தார். அப்போது அண்டசராசரமும் கிடுகிடுத்தது. கஜமுகன் முதலான அசுரர்கள் நடுநடுங்கினர். அவர்களால் ஓரிடத்தில் நிற்க முடியாத படி உலகம் அங்குமிங்கும் தள்ளாடியது. கணபதியே சாந்தம் கொள்வீர்! என தேவர்கள் வேண்டிக் கொண்டனர்.* 


*ஒடித்த கொம்பை கணபதி, கஜமுகாசுரன் மீது வீசி எறிந்தார். அது அவன் உடலை இருகூறாகக் கிழித்தது. ஆனாலும், கணபதியின் தந்தம் பட்டதால் அவனுக்கு ஞானம் பிறந்தது. அது மீண்டும் அவரையே வந்து சேர்ந்து ஒடிந்த பகுதியில் ஒட்டிக் கொண்டது. என்னை மன்னிக்க வேண்டும் பெருமானே! தாங்கள் சிவாம்சம் என்பதை அறியாமல் தங்களுடன் மோதி விட்டேன். எனக்கு முக்தி தர வேண்டும், என அவரது கால்களில் வந்து விழுந்தான். தனது பாதத்தை கஜமுகன் பற்றியதும், கணபதி அமைதியானார். கஜமுகனே! மனதில் அசுர குணங்களுடன் இறைவனை வழிபட்டு என்ன பலன்? நீ சிறந்த பக்தன் தான், ஆனால், கெட்ட குணங்கள் உன்னை ஆக்கிரமித்திருந்தன. என் நல்லாசியால், நீ ஞானம் பெற்றாய். பிளவுபட்ட உன் யானை முக உடல், இனி மூஞ்சூறாக மாறும். நீயே எனக்கு வாகனமாக இருந்து என்னை உலகெங்கும் சுமந்து செல்வாய், என அருள்பாலித்தார்.*


*கஜமுகாசுரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். கணபதியின் வாகனமாகும் பாக்கியம் பெற்றமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தான். கருணைக்கடலே! தங்களால் என் உயிரை எடுத்து நரகத்திற்கு அனுப்ப முடியும் என்றாலும் கூட, உம் அருள் எம்மைக் காத்தது. பகைவர்க்கும் அருளிய பரம்பொருளே! ஆதியந்தம் இல்லாதவரே! முதல்வரே! உம்மை வணங்குகிறேன், என அவர் முன்னால் தோப்புக்கர்ணம் போட்டான்.* 


*பின்னர் அவனை மூஞ்சூறாக மாற்றிய கணபதி, அதில் ஏறி, தேவர்கள் புடைசூழ வடதீவுக்குச் சென்றார்.*


*அங்கே திருமால், பாம்பாய் மாறி கிடந்தார். கணபதியின் காலடி அங்கு பட்டதும், விமோசனம் பெற்று சுயரூபம் அடைந்தார். மருமகனின் வெற்றியைப் பாராட்டினார். வந்த வேலை சுபமாக வந்த மகிழ்ச்சியில், அவர் வைகுண்டம் திரும்பினார்.*


*கணபதியை வணங்கிய தேவர்கள், இதுவரை கஜமுகாசுரனுக்கு போட்ட தோப்புக்கர்ணத்தை   தங்களுக்கு போடுகிறோம். இவ்வாறு செய்பவர்களுக்கு தாங்கள் அருள் செய்ய வேண்டும், என வேண்டிக் கொண்டனர். அப்படியே ஆகட்டும், என அருள் செய்த கணபதி, தாய், தந்தையிடம் வெற்றி செய்தியை அறிவித்தார். அவர்கள் அவரை வாழ்த்தினர்.*


*இந்நேரத்தில் காஷ்யப முனிவரின் மனைவியான அதிதி, விநாயகரை எண்ணி பூலோகத்தில் தவமிருந்து கொண்டிருந்தாள். விநாயகப் பெருமானே! நீர் என் வயிற்றில் பிறக்க வேண்டும், என்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது.*


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

FREE JOBS EARN FROM HOME