*🎶பாடல்:- மூடித்திறந்த விழி இரண்டும் பார் பார் என்றது...*🎶
*👁 #கண்களின்_மொழி 👁*
*👁️கண்களை கைகள் கொண்டு மறைத்தால் அது வெட்கப்படுகிறது,*
*👁️கண்களை கைகள் கசக்கினால் அது ஆதரவு கேட்கிறது,*
*🎶பாடல்:- கண்ணிலே என்ன உண்டு கங்கள்தானரியும், கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்.. என்மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத்தெரியும்..*🎶
*👁 #கண்களின்_மொழி 👁*
*👁️கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் அது உங்கள் மீது கோபம் கொள்கிறது,*
*👁️ஒரு கண் திறந்து ஒரு கண் மூடினால் அது உங்களிடம் சேட்டை குறும்புத்தனம் செய்கிறது,*
*🎶பாடல்:-கண்ணாலே பேசி பேசி கொல்லாதே..🎶*
*👁 #கண்களின்_மொழி 👁*
*👁️இரண்டு கண்களும் மூடி இருந்தால் அது சற்றே ஓய்வெடுக்கிறது அதாவது தூக்கம் வருகிறது,*
*🎶பாடல்:- தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே.. அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே... அந்த தூக்கமும் அமைதியும் நான் ஆனால்.. உன்னை தொடர்ந்ந்திருப்பேன் என்றும் துனையிருப்பேன்...*
*👁 #கண்களின்_மொழி 👁*
*👁️கண்கள் நீண்ட நேரமாகியும் விழிக்கவில்லை எனில் "அய்யோ பாவம்" அது இறந்துவிட்டது, மரணத்தை தேடிக்கொண்டது.*
* பாடல் கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு*
சித்தார் பின்னணியிசையாக கொண்ட பாடல்களை கேட்டு மகிழலாம்
*🎶வீணைக்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. வீணையில் மெட்டுகள் மெழுகின் மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள்.🎶*
🎻🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🎻
*🎶இன்றய நிகழ்ச்சியில் நாம் ரசிக்கவிருக்கும் பாடல்களில். சித்தார் பின்னணியிசையாக கொண்ட பாடல்களை கேட்டு மகிழலாம்...🎶*
*🙏சிவா விஷ்ணு தரிசனம்🙏*
*🎶சித்தார் இசைக்கருவியை சிவ ரூபத்தைப்போல நேராக மேல் நிறுத்தி வாசிப்பவர்கள், அதுவே வீணை என்றால் பள்ளிகொண்ட பெருமாள் போன்று படுத்தநிலையில் வைத்து வாசிப்பதையும் பார்த்து பரவசமடையலாம்*🎶
*🎶நரம்பு வாத்தியங்கள், கம்பி வாத்தியங்கள் என்று சொல்லப்படும் தந்தி வாத்தியங்களை மூன்றாகப் பிரிக்கின்றனர்.🎶*
*வில் போட்டு வாசிக்கும் வாத்தியங்கள் - வயலின், சாரங்கி,*
*தந்திகளைக் குச்சிகளாலோ அல்லது மரக்கட்டையாலோ தட்டி நாதத்தை உண்டாக்கும் வாத்தியங்கள் - கொட்டு வாத்தியம்.*
🎻🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🎻
*சித்தார் வாத்திய உலகத்தின் முடிசூடா மன்னர், பண்டிட் ரவி சங்கர் (Ravi Shankar, மேற்கு வங்காள மாகாணத்தை சேர்ந்தவர்: 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012), பல விருதுகளை பெற்ற உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார். ஒரு இசை நிகழ்ச்சியில் இசையோடு கலந்து காலமாகிப்போனாலும் இன்னும் பலரது இசை நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்..*
*அருமையான பாடல், பாடலின் இறுதியில் முழுமையாக சித்தார் இசையை மட்டும் தனியே தபேலா மற்றும் மிருதங்க இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:- சொன்னது நீதானா...சொல் சொல்..சொல்.. என் உயிரே...*
*அருமையான பாடல், பாடலின் காட்சியிலும் பாடல் முழுவதிலும் சித்தார் இசை பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.. பாடலில் சித்தார் இசையை மட்டும் தனியே வயலின், தபேலா இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:-
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...*
*பக்திமயமான பாடல், பாடலின் காட்சியிலும் பாடல் முழுவதிலும் சித்தார் இசை பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.. பாடலில் சித்தார் + புல்லாங்குழல் +வயலின்+, தபேலா இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:-
பாடும் வானம்பாடி ஹா....மார்கழி மாதமோ.. பார்வைகள்.. ஈரமோ.*
*இனிமையான பாடல், பாடலின் இடையிசையில் சித்தார் இசை +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.. பாடலில் சித்தார் + புல்லாங்குழல் +வயலின்+, தபேலா இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:- ஒரு ஜீவன் அழைத்தது, ஒரு ஜீவன் துடித்தது.. இனி எனக்காக அழவேண்டாம்...*
*இனிமையான பாடல், பாடலின் முதல் இடையிசையில் சித்தார் மட்டும் தனியாக இசைக்க இளையராஜா இசையப்புக்கு ஒரு தனி ஓ..ஓ..போடலாம் சித்தார் இசை உடன் கிட்டார் குழு வயலின் +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:- இசை கேட்டால் புவி அசைந்தாடும்...*
*இனிமையான பாடல், பாடலின் முதல் வரியிலிருந்தே சித்தார் மட்டும் தனியாக இசைக்க சித்தார் இசை உடன் கிட்டார் குழு வயலின் +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா+மிருந்தங்கம் தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*
*இசை கோர்வை கொண்ட இனிமையான பாடல், பாடலின் முதல் நிலையிலேயே சித்தார் மட்டும் தனியாக இசைக்க சித்தார் இசை பாடல் முழுது இடையிடையே வருவது சிறப்பு பாடலில் கேரளா செண்டை மேளம்+ கிட்டார் +குழு வயலின் +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா+மிருந்தங்கம் தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:- முத்த சம்பா பச்சநெல்லு குத்ததான் வேணும்...முத்து முத்தா பச்சரிசி அல்லத்தான்வேனும்*(பாடலின் இறுதி இசையை அவசியம் கேளுங்கள் இளையராஜாவுக்கு ஒரு ஜே போடலாம்)
*சிறந்த பாடல், பாடலின் இறுதியில்.. இது நம்ம வீட்டு கல்யாணம்.. என்று பாடல் முடியும்போது சித்தார் இசை மட்டும் தனியாக சிணுங்குவது உண்மையிலேயே ரசிக்கவேண்டிய இடம்...பாடலில் இடையிடையே சித்தார் சிணுங்குவது அற்புதம்.பாடலில் கிட்டார் குழு வயலின் +புல்லாங்குழல்+ஷெனாய் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*சித்தார் இசையில் ஹிந்தி பாடல்கள் நிறைய உண்டு... தமிழில் 32பழைய பாடல்கள், 50+(இளையராஜா) இடைக்கால பாடல்கள் 45+புதியபாடல்கள் தொகுப்பு உள்ளது. நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன். நன்றி கோகி ரேடியோ மார்கோனி, புது தில்லி.🎶🙏*
சிதார் இசையில் மற்றுமொரு பாடல்
பாடல்:-
இது குழந்தை பாடும் தாலாட்டு .ஒருதலைராகம்.
சிதார் இசையில் மெல்லிசை மன்னரின் பாடல்கள் சில..🎼🎼 "கன்னிப் பெண் " திரைப்படத்தில் வரும்
"பாடல்:-பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்.."
என்ற பாடலின் ஓபனிங் சிதார் இசையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை..
"உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் வரும் "அவள் ஒரு நவரச நாடகம்" பாடலின் bgm இல் சரணம் தொடங்கும் முன் வரும் மயக்கும் சிதார் இசை..
"அண்ணன் ஒரு கோயில்" திரைக் காவியத்தில் இடம்பெற்ற "
*💖🎶இன்றைய நிகழ்ச்சி தொகுப்பில் ஜால்ரா பாடல்கள்..💖🎶*
*🎶ஸ்ருதி பிசகாமல் ஜால்ரா தட்டுபவர்களால் கச்சேரி களைகட்டும். ஆனாலும்... ஜால்ராக்காரர்கள் ஒரு போதும் வித்வான்கள் ஆவதில்லை..🎶*🤣
செம்பு மற்றும் வெள்ளீயக் கலவையால் தாளம் செய்கிறார்கள். வெண்கலம், ஐம்பொன்னால் செய்யும் மரபும் இருந்தது. நாதஸ்வரத்துக்கு நரசிங்கம்பேட்டை போல தாளத்துக்கு நாச்சியார்கோவில். உலோகத்தை நீராக உருக்கி அதை வார்க்க வேண்டும். தாளம் வார்க்க வண்டல் மண் அவசியம். இந்த நாச்சியார் கோவில் பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்த வண்டல் மண்ணைச் சலித்து சாக்கில் கட்டி விற்பனைச் செய்கிறார்கள். அந்த மண்ணை வாங்கி மரச்சட்ட அச்சில் தாளத்தின் வடிவத்தை வைத்து அந்த மண்ணால் நிரப்பி தட்டிக் கெட்டிப்படுத்த அச்சு தயார். பின்பு அடுப்பில் கொதிக்கும் உலோகத்தைக் கரண்டியில் அள்ளி ஊற்றி ஆர வைக்கிறார்கள். 10 நிமிடம் கழித்து மண்ணைக் கொட்டினால் கொத்தாக வந்துவிடுகிறது தாளம். பிறகு ஓரத்தைத் தட்டி கடைசல் பட்டறையில் கடைந்து பாலிஷ் போட தாளம் தயார். 40 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை போகிறது.
*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*
*💖🎶இன்றைய நிகழ்ச்சி தொகுப்பில் ஜால்ரா பாடல்கள்..💖🎶*
*🤣🤣சின்ன வயதில்.. மார்கழி மாத பஜனைக்கு தாத்தா வாங்கி வாசித்த மிருதங்கம் .. தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கோவிலுக்கு போய் ரெண்டு தட்டு தட்டினால் கூடுதலாய் கொஞ்சம் பொங்கல் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால்.. கைவலி ரெண்டு அமிர்தாஞ்சன் பாட்டில் காலி. இந்தக் கூத்தெல்லாம் அடிக்க முடியாதென்று திரும்பவும் ஜால்ரா மாஸ்டரானேன். கொஞ்சம் ஆள் வளர வளர .. கவனம் வேறு திசையில் போக ஆரம்பித்தது. கோவிலில் மொத்தம் பத்து செப்பு ஜால்ராக்கள் தான் வைத்து இருப்பார்கள். தாளம் தெரிந்தவர்கள் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி. ஜால்ராக்கள் வைத்து இருப்பவர்கள் எல்லாரும் விஷயம் தெரிந்தவர்கள் மாதிரி பந்தா விட்டுக்கொள்வார்கள்...*🎶🤣*
*🎶ஆடாத மனமும் உண்டோ.. நடை அலங்காரமும்.. அழகு சிங்காரமும் கண்டு.. ஆடாத மனமும் உண்டோ..🎶*
Movie Name:-Mannadhi Mannan (1960) (மன்னாதி மன்னன்), Music:- Viswanathan Ramamoorthy, Singers:- T. M. Soundararajan, M.L.Vasanthakumari, Lyrics:- A. Maruthakasi
🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*
*🎶கரையாத மனமும் உண்டோ... தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு... கரையாத மனமும் உண்டோ.... ஆ……கரையாத மனமும் உண்டோ…....🎶*
Movie: Varusham(16) Padhinaaru,(1989), Music by : Ilayaraaja, Singers : K. J. Yesudas and K. S. Chithra, Lyricist: Vaali.
🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
*💖🎶இன்றைய நிகழ்ச்சி தொகுப்பில் ஜால்ரா பாடல்கள்..💖🎶*
*🎶....மிருதங்கத்தை தூக்கிக்கொண்டு உலா வரமுடியவில்லை என்றதும் அப்பா ஒரு கஞ்சிரா வாங்கித் தந்தார்(சினிமாவிலெல்லாம் ஒரு ஏழை தாத்தா தாடி வைத்துக்கொண்டு நட்ட நடு ராத்திரியில் தத்துவப் பாடலெல்லாம் பாடிக்கொண்டு கையில் வைத்துக் கொண்டு வாசிப்பாரே அது மாதிரி இருக்கும் கஞ்சிரா)*
*எனக்கு ரொம்ப ஆச்சரியம்... "என் திறமையை பார்த்துட்டு கை காசெல்லாம் போட்டு அப்பா வாங்கி குடுத்திருக்காராக்கும்" என்று பக்கதிலிருந்தவனிடம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தேன்.*
*"திறமையைப் பார்த்துட்டு ஒன்னுமில்ல... ஏற்கனவே பஜனைக்கு கூட்டம் குறைந்து கொண்டிருக்கே... நீ இதத் தட்டினாலாவது அதக் கேட்டு நாலு பேர் வந்து கூட்டம் கூடாதான்னு தான்" - சமயம் பார்த்து குட்டை உடைத்து மானத்தை வாங்கினார் ....🎶*🤣
*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*
*🎶தேனே தென்பாண்டி மீனே... இசைத் தேனே இசைத் தேனே... மானே இள மானே.. நீதான் செந்தாமாரை ஆரீராரோ... நெற்றி மூன்றாம்பிறை... தாலேலலோ…....🎶*
Movie Name : Udhaya Geetham 1985, Singer : SP Balasubrahmanyam, Music Composed by : Ilayaraja
Lyrics written by : Vaali
🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
*💖🎶 ஜால்ரா பாடல்கள்..💖🎶*
*🎶..........பஜனை எப்ப முடியும் ??? பிரசாதம் வாங்க பெரிய வரிசைவேற .. நேக்கு... நாக்குல... இச் ..இச்.. சீக்கரமா பிரசாதம் கிடைக்காதா ???? அது என்னமோ வீட்டிலே வெங்களப் பானை நிறைய பொங்கல் செய்தாலும் சாப்பிட பிடிக்காது... ஆனா ஒரு கையளவு.... சுட சுட.... பொங்கல் பிரசாதம் ... ஆஹா என்ன அருமை ... "ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கும்"*
*ஒரு நாள் அதிசயமாக சுண்டல், சர்கரைப் பொங்கலுடன் பஞ்சாமிர்தம் வேறு குடுத்தார்கள். இரண்டு பாத்திரம் குடுத்தவர்களுக்கு சர்கரைப் பொங்கலும் பஞ்சாமிர்தமும் ஒரே பாத்திரத்தில் வாங்கினேன். "ஏன்டா பிரக்ஸ்பதி..... ரெண்டையும் குழப்பிட்டையேடா...ஒரு ஆல இலைய நடுவில போட தெரியாது?" ....கோவில் என்று கூட பார்க்காம இலவசமா "பல்பு" கொடுக்கறாங்க.... பல்பு ...பீஸ்.. போயே... போயிடுச்சு IT'S GONE .....🎶*🤣
🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*
*🎶ஆஹா ஆஆ ஆஆஆ ததரினா னா ஆஆஆஆஆ... தேவி ஸ்ரீதேவி... தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா.. பாவி அப்பாவி.. உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா…....🎶*
Movie Name : Movie: Vazhvey Maayam 1982, Singer : S.P. Balasubrahmanyam and Vani Jayaram, Music Composed by : Gangai Amaran,
Lyrics written by : Vaali
🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
*💖🎶 ஜால்ரா பாடல்கள்..💖🎶*
*🎶......அந்த கோவிலில் கொஞ்சம் கொஞ்சமாகப் பதவிகளும் பொறுப்புகளும்(?!) வர ஆரம்பித்தன. பழம் (பிரசாதங்க) கொடுப்பதிலிருந்து சுண்டல், சர்கரைப் பொங்கல் கொடுக்கும் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டியில் மெம்பரானேன்...*🤣
*🤣அங்கிருந்து பார்த்த போது தான் அதுவும் நாய்ப் பொழப்புத் தான் என்று புரிய ஆரம்பித்தது. சில கட்டளைதாரர்கள் (அதாங்க சுண்டல் ஸ்பான்சர்) சில சமயம் சின்ன பாத்திரத்தில் கொஞ்சமாகக் கொடுப்பார்கள்.அன்றைக்குத் தான் இங்கே கூட்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும். அன்றைக்கு அனுபவஸ்தர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு சாமர்த்தியமாக சமாளிப்பார்கள். கடைசியில் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டி மெம்பர்கள் சட்டியில் மணடையை விட்டு மோப்பம் மட்டுமே பிடிக்கமுடியும்....🤣🌶️*
🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*
*🎶சுக ராகமே சுக போகமே.. சுக ராகமே என் சுக போகம் நீயே... கண்ணே கலை மானே.. கதை பேச வருவாயோ …....🎶*
Movie Name: Kanni Rasi 1985, Singer : Vani Jayaram and Malaysia Vasudevan
Music Composed by : Ilayaraja, Lyrics written by : Kuruvikkarambai Shanmugam
🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
*💖🎶ஜால்ரா பாடல்கள்..💖🎶*
*🤣🤣ஒரு முறை இந்த மாதிரி ஒரு சந்தர்பத்தில் நானும் நண்பனும் தெரியாத்தனமாக கோவில் சுண்டல், பொங்கல் விநியோக பொறுப்பை எடுத்துக் கொண்டோம். எனக்கு தெரிந்த (எனது பக்கத்துவீட்டு) எனதுவகுப்பில்கூட படிக்கும் பெண்ணுக்கு கொஞ்சம் கூடவும், பின்னால் வந்த பாட்டிக்கு ரெண்டு சுண்டல் குறைவாகவும் கொடுத்து விட்டேன்... அவ்வளவேதான் ....🤣🌶️ "ஏன்டா என்னை என்னனு நினைச்ச..உங்க அப்பனே என்ன பார்த்தா பயப்புடுவான், நீ சுண்டைக்கா பய... முன்னால் வந்த செவத்த குட்டிக்கு பல்ல இளிச்சுண்டு குடுக்ற நான் வந்தோடன பஞ்சப் பாட்டு பாடறியா..."*
*ஹி...ஹி...ஹி...ஹி...... (அசடு வழிய)...."பாட்டி உங்களுக்கில்லாமலா?? எவ்வளவு வேணுமோ அவ்வளவு தருகிறோம்....... மைண்ட்வாய்ஸ் ...."அடேய் மானம் போறது இந்த பாட்டிக்கு சீக்கிரம் பிரசாதம் குடுத்து அனுப்பிவை". ...அடியேன் கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி புது தில்லி ...*🎶🤣*
Movie Name : Alaipayuthey (2000)., Singer : பாடியவர்: ஹரிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலக்ஷ்மி
Music Composed by :A. R. Rahman, Song Lyrics penned by Oothukkadu Venkatasubba Iyer.
🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
‘‘ஒரு காலத்தில் 500&க்கும் அதிகமானோர் தாளக்கருவி உற்பத்தி செய்தார்கள். இப்போது எல்லோரும் குத்துவிளக்கு, பாத்திரத் தயாரிப்புக்கு மாறிவிட்டார்கள். எப்போதாவது ஓரிருவர் வந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார் நாச்சியார் கோவிலைச் சேர்ந்த குமரேசன். விற்பனை இன்மை, அங்கீகாரம் இன்மை காரணமாக இசைக்கருவிகள் செய்து வந்த பலர் இப்பொழுது வேறு தொழில் நாடிச் சென்று விட்டார்கள். இப்போது தொழில் செய்யும் பலரும் அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிக்க விரும்பவில்லை. தமிழர்களின் கலாச்சாரத்தை சார்ந்த தொழில்கள் அழிய விடாமல் காக்க வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது. ஆனால் தமிழக அரசாங்கம் இதைப் பற்றி எல்லாம் என்றுமே கலவலைப்படாது.
THANKS FOR WATCHING MY WEB BLOGS GOKI-RADIO MARCONI
ALL FREE SERVICE VISIT "NEW DELHI MANGALYAM GROUP"
*🎶ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார்..*🎶
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- அடி பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை..*
*பாடலின் ஆரம்பைசையில் தபேலா இசையோடு ஜலந்தரங்கள் இசைவர.. பாடலின் இடையிசையில் மற்றும் பாடலின் பின்னணியில் மெல்ல சிணுங்கல்களோடு வரும் ஜலந்தரங்கள் இசை...*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- இதழ் மொட்டு விரிந்திட..*
*பாடலின் அதிகமாக தொடர்ந்துவரும் ஜலந்தரங்கம். இசை பாடல் முழுதும் ஒவ்வொரு சரணத்திலும் வியாபித்திருக்கும் பாடலின் இடையிசையில் அவ்வப்போது வரும் ஜலந்தரங்கம் இசையும், பாடலில் இறுதியிலும் தொடர்ந்து வரும் ஜலந்தரங்கள் இசை...*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை - பணத்தோட்டம் 1963 - பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி*
*ஜலதரங்கம் , வயலின் முன் இசையுடன் ஆரம்பிக்கும் இந்த இனிமையான பாடல் மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த மிகச் சிறந்த பாடல் என்று சொல்லலாம்.அனாயாசமான நுண்சங்கதிகள் கொண்ட இந்த பாடல் இதமான வளைவுகளையும் ,இனிய மென் சுழிப்புகளையும் சுமந்து செல்கின்ற பாடலாகும்.*
*பாடலின் பல்லவியின் பின்னணியில் மின்னி மின்னி மறைந்து ஜாலம் காட்டும் ஜலதரங்க ஒலியும் , பல்லவி முடிவில் மேண்டலின் இசையுடன் கைகோர்த்துவரும் ஜலதாங்கமும், அதை அள்ளிச் சென்று அரவணைத்து வரும் வயலின் சேர்ந்திசையும் ,அதை ஆற்றுப்படுத்தி இனிமை சேர்க்கும் குழலிசையும் , மீண்டும் ஒருமுறை மேண்டலின் குழைந்து வர வயலின் அதை உயரே எடுத்து நெஞ்சை அள்ள ,சாரங்கின் மதுரநாதம் குளிர்ந்த காற்றாய் நுளைந்து மனத்தைக் கனிய வைக்க அனுபல்லவி [ திரு நாள் கூடி ….என்ற வரிகள் ] ஆரம்பிக்கிறது.அனு பல்லவி முடிந்து வர நறுமணம் பரவுவது போல சாரங்கியின் இனிய இசை படர்கிறது.அதை தொடர்ந்து " இரவில் உலவும் திருடன் அவன் என்றான் " வரிகளில் பாடலின் இனிமை உச்சம் வருகிறது.*
*பாடிய முறையும் ,இசையமைப்பும் , பாடல் வரிகளும் , வாத்தியங்களும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன.*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே ... .*
*பாடலின் ஆரம்பத்தில் தொடர்ந்து வருவதோடு.. பாடல் முழுதும் பின்னிசையாக அதிகமாக தொடர்ந்துவரும் ஜலந்தரங்கம். இசை பாடல் முழுதும் வியாபித்திருக்கும் ..*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- ஒரே பாடல் ஒன்று.. ராகம் ஒன்று..*
*பாடலின் ஆரம்பத்தில் ஆ..ஆ.பிறகு வரும் ஜலந்தரங்கம் இசை, ஒவ்வொரு பல்லவியிலும் ஆரம்பத்தில் வியாபித்திருக்கும் ஜலதரங்கம் இசை பாடலின் இடையிசையில் ஷெனாய் இசையோடு கூடி வருவதும் சிறப்பு......*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- மாஞ்சோலை கிளித்தானோ மான்தானோ ... .*
*பாடலின் ஆரம்பத்தில் தபேலாவும் மிருதங்கமும் போட்டி போட தொடர்ந்து ஜலதரங்கம் வருவதோடு.. பாடல் முழுதும் பின்னிசையாக அதிகமாக தொடர்ந்துவரும் இசை... பாடல் முழுதும் அங்கங்கே சிறு சிறு இடைவெளியில் ஜலதரங்க இசை வியாபித்திருக்கும் ..*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶இப்போதெல்லாம், பல இசைக்கருவிகள் காணக் கிடைப்பதில்லை. இந்திய இசைக் கருவிகளுள் இனிமையான ஒலி எழுப்பக்கூடிய ஒன்று, ஜலதரங்கம் எனப்படும் கருவி. 'ணிங்கி ணங்கி…' என்று அது எழுப்பும் இசை, ஒரு தந்தி வாத்தியத்தின் ஒலியைப் போலவே கேட்கும். இதை வைத்து, முழுப் பாடலை வாசித்துக் காட்டும், கச்சேரி செய்த வித்வான்களும் இருந்தார்கள்.*🎶
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*குளிர்க் காற்றை ஊடுருவிச் செல்லும் கூர்மையான குரலில் எஸ்.பி. ஷைலஜா பாடிய பாடல்களில் ‘ராசாவே உன்ன நான் எண்ணித்தான்’ பாடலும் ஒன்று. பாடலின் தொடக்கத் தில் ஜலதரங்கமும் புல்லாங்குழலும் இணைந்த இசைக் கலவையைக் கரும் பாறையில் பட்டுத் தெறிக்கும் சாரலாக ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மழை ஈரம் படிந்த குன்றின் மீது வரிசையாக வைக்கப்பட்ட விளக்குகளின் காட்சியை மனதுக்குள் எழுப்பும் இசை இப்பாடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்...*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*இசைச்சக்கரவர்த்தி என்றும் நாதஸ்வர மேதை என்றும் போற்றப்பட்ட டி.என்.ராஜரத்தினம்பிள்ளையிடம் வானொலி பேட்டி ஒன்றில் வாத்திய இசை பெரிதா ? பாடுவது பெரிதா ? என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு " வாத்தியம் என்பது உயிரற்ற ஜடம் , மனிதரின் குரல் என்பது உயிர் உள்ளது ; மனிதக்குரலே சிறப்பானது. வாத்தியம் போல பாடினார் என்றால் பெருமையில்லை, பாடுவது போலே வாசித்தார் என்று சொல்வதே பெருமை " என்ற கருத்து வெளிப்படும் வண்ணம் கூறியிருந்தார்.*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
QUICK AND EARLY MARRIAGE OPPORTUNITY.. VISIT NEW DELHI MANGALYAM
*2. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.*
*🎶பாடல்:- நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி... தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்.. தோள் கொடுத்து தூக்கி செல்லும்.. நாலு பேருக்கு நன்றி..*🎶
" செத்தாலும்,
நல்லதுக்கும்,
கெட்டதுக்கும் நான்கு பேர் வேண்டும்"
"நாலு பேரை போல வாழ்வில் நல்லா இருக்கனும்.."
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
*3. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல??*
*🎶பாடல்;-நாலு வகை பூவில் மலர்க்கோட்டை.. அதில் ராணி ஆகிறாய்.. நாலு புறம் வீசும்.. மலர் வாசம் .. அதில் நீ..யே ஆள்கிறாய்...*🎶
*ஏன் இந்த 'நாலு' மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்...*
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்,பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு,நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு,பிரபந்தத்தில் நாலாயிரம் என நான்கு வரும்.
நாலடியார், நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது,இனியவை நாற்பது
அக நானூறு,புற நானூறு,நாலாயிர திவ்ய பிரபந்தம் ..
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
*4. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்*
திசைகள் நான்கு
*🎶பாடல்:-நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும்.. படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது... நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும் தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ..*🎶
ஹரித்வார், அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்), நாசிக், உஜ்ஜையினி என நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.
*🎶பாடல்:- அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு.. அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு.. மணக்க மணக்க மயக்க மயக்க..இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க.. அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே.*🎶
[15/12, 4:28 PM] GOPAL & ARTHI KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்:- சபரி மலையில் வண்ண சந்திரோதயம்.. தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்.. கோடி கண் தேடிவரும் ஐயப்பனை.. நாம் கும்பிட்டு பாடுகின்றோம் எண்ணப்பனை..🙏*
[14/12, 3:20 PM] GOPAL & ARTHI KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக அன்னான் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக....*
[14/12, 3:23 PM] GOPAL & ARTHI KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- ஆடி பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது...*
பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்
*காற்றுக் கிண்கிணி என்பது உலோகம், மரம், மூங்கில் எனப் பலவிதமான பொருள்கள்கொண்டு செய்யப்படும் ஒரு தாள இசைக்கருவி ஆகும்.*
*1957 முதல் 1963 வரை வெளிவந்த பல பழைய பாடல்களில் ஜாஸ் இசையோடு இந்த ஆபிரிக்காவின் இசைக்கருவியின் ஒரு வகையான Pipe Harp, அல்லது Balafon உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் ஓசையில் அமைந்த பாடல்கள்..*
🪗🪗🪗🪗🪗🪗🪗🪗🪗🪗🪗
1.*🪗பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்..*
*🎶பாடல் என் அன்பில் கலந்தாயோ..சீமானே உணையடைந்தேனோ...*
*🪗பாடலின் ஆரபத்திலிருந்து பாடல் முழுதும் பின்னணியிசையில் இந்த ஆபிரிக்காவின் ஜாஸ் இசைக்கருவியின் இசையை கேட்கலாம்..*
*2.🪗பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்..*
*🎶பாடல் சின்ன சின்ன மூக்குத்தியாம் சேகப்புகல்லு மூக்குத்தியாம்...*
🎥திரைப்படம் பாதை தெரியுது பார் (1960)
*🪗பாடலின் ஆரம்பத்தில் மற்றும் இடையிசையில் பாடல் முழுதும் பின்னணியிசையில் இந்த ஆபிரிக்காவின் ஜாஸ் இசைக்கருவியின் இசையை கேட்கலாம்..*
3. *🪗பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்..*
*🎶பாடல் தங்க மோகன தாமரையை.. நீ செங்கதிர் கண்டு சிரிப்பதினாலே இளம் மங்கையர் வதனம் வாடுதே...*
🎥திரைப்படம் புதையல் (1957)
*🪗பாடலின் ஆரம்பத்தில் மற்றும் இடையிசையில் பாடல் முழுதும் பின்னணியிசையில் இந்த ஆபிரிக்காவின் ஜாஸ் இசைக்கருவியின் இசையை கேட்கலாம்..*
4.*🪗பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்..*
*🎶பாடல் ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே...*
🎥திரைப்படம் மாயாபஜார் (1957)
*🪗பாடலின் ஆரம்பத்தில் மற்றும் இடையிசையில் பாடல் பின்னணியிசையில் இந்த ஆபிரிக்காவின் ஜாஸ் இசைக்கருவியின் இசையை கேட்கலாம்..*
*🌟இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநில பகுதியிலும் வேறுபட்ட மூக்கணிகள்,மூக்குத்தி பிரபலமாகவுள்ளன.*🌟
*🌟தமிழகத்தில் மூக்குத்தி இல்லாத அம்மன் கோவில் எங்கும் இல்லை என்று கூறலாம். இரண்டு மூக்கிலும் வித விதமான வலையங்களும், வித விதமான ரத்தின கற்கள் பதித்த மூக்குத்தியும் பெண்களுக்கு மிகவும் சிறப்பாக கருதப்படும் மூக்கில் அணியும் அணிகலங்களாகும். மூக்கின் நடுவில் தொங்கும் மூக்குத்திக்கு புல்லக்கு என்று அழைப்பதும் உண்டு.*
*பாடல்:- 🌟மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்... காணிக்கையாய் கொண்ட சோம சுந்தர கண்களுக்கும் முகூர்த்த நாள் முகூர்த்த நாள் ..🌟*
*🌟....சரி சரி .. தீபாவலிக்குத்தான் வாங்கல...பொங்களுக்காவது ஒரு வைர மூக்குத்தி வாங்கி தாங்க மாமு..என் செல்லம்.. பட்டு.. வாங்கி தறீங்க ஆமா சொல்லிப்புட்டேன்.. மாமா..மாமோய்...*🌟
*🎶ஹம்மிங் பாடல்கள். அதாவது வார்த்தைகள் இல்லாமல் "அ..அ..ஆ, ல ல லா, ஹ ஹ ஹா, போன்ற சந்தங்களில் பாடுவது.*
*🎶இந்த ஹம்மிங் பாடல்களை மொத்தம் 8 வகையாக பிரிக்கலாம்..🤔*
*1.பாடல் முழுவதும் ஹம்மிங் வரும் பாடல்..*
*2. பாடலின் ஆரம்பம் மற்றும் நடுவில் பின்பு இறுதியில் மட்டும் வரும் ஹம்மிங் பாடல்கள்..*
*3.ஹேம் ஆரம்பத்தில் மட்டும் வரும் ஹம்மிங் பாடல்கள்..*
*4.பாடலின் இறுதியில் மட்டும் வரும் ஹம்மிங் பாடல்கள்.*
*5.ஆண் குரலில் மட்டும் ஹம்மிங் உள்ள பாடல்கள்*
*6.பெண் குரலில் மட்டும் ஹம்மிங் உள்ள பாடல்கள்*
*7.ஆண் பெண் என இருவரும் ஹம்மிங் செய்து பாடும் டூயட் பாடல்கள்.*
*8.பாடல் குழுவினர்கள் ஹம்மிங் செய்து பாடும் பாடல்கள்*
*🎶ஒவ்வொரு வகைக்கும் 40க்கும் மேற்பட்ட ஹம்மிங் பாடல்கள் தொகுப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது*
*🎶ஹம்மிங் பாடல்களில் பழைய பாடல்களே மிக அதிகம். அதிலும் குறிப்பாக மெல்லிசை மன்னர் MSV இசையமைத்த பாடல்களே அதிகம்...*
நன்றிகளுடன். கோகி, ரேடியோ மார்கோனி, புது தில்லியிலிருந்து...
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
*🎶இன்றய ஹம்மிங் பாடல் நிகழ்ச்சியில் MSV இசையில் பழைய பாடல்கள் வரும் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள்.. ஆனால் புது பாடல்களின் தொகுப்பில் ஒரு சில ஹம்மிங் பாடல்களை இன்றய நிகழ்ச்சியில் தந்துள்ளேன், தொடர்ந்து அடுத்த நிகழ்ச்சியில் மேலும் பல பாடல்களும் வரும்...😀👍🎶*
*😃💖ஆண் பெண் குரல் சேர்ந்த டூயட் ஹம்மிங் பாடல்கள்:- இந்த பாடலில் ஜாஸ் இசையில் முக்கியமாக.. மனசுக்கு குதூகலமாக துள்ளல்களை தரும்.. குழுவினர்களின் கோரஸ் குரல்... ஆனால் இந்த பாடலில் "பாடலின் ஆரம்பம் டூயட் குரல் ஹம்மிங் பாடலின் நடுவே வரும் ஹம்மிங் அதுவும் ஆண் குரலில் மட்டும் சோலோவாக ஹம்மிங் தந்திருப்பது தனி சிறப்பு" பாடலுக்கு மிக மிக இனிமை சேர்க்கும் SPB துள்ளல் குரலில் தூள் கிளப்பி இருப்பார்..*😃💕
*🎵பாடல்:-நெஞ்சம் பாடும் புதிய ராகம் தாளம் உன்னை தேடுது –படம் நெஞ்சில் ஓர் ராகம் [1982 ] – பாடியவர்: SPB+S.ஜானகி- இசை..T.ராஜேந்தர்*🎵
*💝இந்த பாடலின் சிறப்பை நாயகன் டிரம்ஸ் இசையில் ஹம்மிங் செய்து ஆரம்பித்து, வெட்டுக்கிளி கிறீச்சிடும் இசையில் பியானோ, எலக்ட்ரிக் கிட்டார் தொடர்ந்து வயலின், புல்லாங்குழல், அக்கியூஸ்டிக் கிட்டார் பேஸ் கிட்டார்... டெரம்பெட்.. கிளாறினேட் இசை வர... பாடலின் பின்னணியில் புல்லாங்குழல் இசை இடையில் விசில் இசையும் சேர்ந்து பாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.. மற்றும் டோம் டோம் கிட் இசை "சச்சச் சா" மிக அமைதியாக தொடர.. இயாட் பெடல்.. போன்ற இசைக்கலவையில்.. அற்புத பாடல்.*💝
🍬👇👇👇👇👇👇👇👇👇🍬
*😀💝பாடலின் ஆரம்பம் மற்றும் இடையிடையே பெண் குரலில் வரும் ஹம்மிங் சூப்பர்..🎼பாடல்:-சின்னப் புறா ஒன்று ...எண்ணக் கனாவினில் ..வண்ணம் கெடாமல் வாழ்கின்றது.. ' என்ற வாலி அவர்கள் எழுதிய இந்தப் பாடல் தெய்வீக கானம் போலவே எனக்கு ஒலித்தது. இப்போதும் அப்படியே ஒலிக்கிறது. இரண்டு சரணம் , இரண்டு வேறுபட்ட இடையிசையோடு உணர்ச்சிப் பெருக்கின் உச்சமாய் எஸ்.பி.பி குரலில் பாடல் எங்கெங்கோ கூட்டிச் செல்லும். பாடல் முழுக்க கிடார் வயலின் கொண்டு இசை ராஜாங்கமே நடத்தப்பட்டிருக்கும். பாஸ் கிடார் பாட்டு முழுவதும் சற்று தூக்கலாகவே தெரியும். முதல் இடையிசையில் கிடாரில் கொடுத்திருக்கும் அந்த இசைக் கோர்வை அட்டகாசமானது. இரண்டாம் இடையிசையில் தனித்த வயலின் கொண்டு அழுதிருப்பது அற்புதமானது. இடையிடையே பெண் குரலின் ஹம்மிங் கூடுதல் சோகத்தை சுகமாய் மாற்றிக் கொடுக்கும்.*🎼💖
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*😀💝பாடலின் இடையில் வரும் குழுவினர்களின் ஹம்மிங் அபூர்வமான ஹம்மிங் கோர்வை.. அதோடு இந்த பாடலில் அபூர்வமாக மேண்டலின் பின்னிசையும் வரும். பாடலை கவனித்து கேட்டால் மட்டுமே (மெண்டலி-மேண்டலின் இசையை) ரசிக்கமுடியும். பாடல்:- ரசாவே உன்னை நான் என்னிதான், பல ராத்திரி தூங்கள– தனிக்காட்டு ராஜா –SP.ஷைலஜா– இசை இளையராஜா பாடலுக்கு இரண்டாவது சரணத்தில் ஹம்மிங்.. து..துத்தி.. தூ.. பிறகு கிட்டார்+ மாண்டலின் இழையோடும். எனது சிறப்பான புது பாடல் தொகுப்பில் இது சிறப்பான பாடல்*
🎸🎼💖
*😀💝பாடலின் ஆரம்பம் மற்றும் இடை இடையே வரும் ஆன் குரல் ஹம்மிங் பாடலுக்கு மெருக்கேற்றுகிறது.. பாடல்:-யாரோடு யாரோ - இந்தப் பாடலை யுவனும், உஸ்தாத் சுல்தான் கானும் பாடியுள்ளார்கள். யுவன் தனது டிரேட்மார்க் குரலில் நன்றாகவே பாடியுள்ளார். பாடலில் வரும் குழந்தையின் கிரீச் குரலும், சாரங்கி இசையும் கேட்டவுடன் பிடித்துப் போகும் இசை, அற்புதமான லிரிக்ஸ், மற்றும் இடை இடையே வரும் உஸ்தாத் சுல்தான் கானின் ஹம்மிங், என சகலமும் சூப்பராக இருக்கும். இது எனது புது பாடல் தொகுப்புகளின் சிறந்த பாடல்👍💝*
*💝பாடலில் யோகி தீம் (சாரங்கியில்) - யோகி தீம் மியூசிக்கை உஸ்தாத் சுல்தான் கான் சாரங்கி எனும் இசைக்கருவியில் வாசித்திருக்கிறார். நடு நடுவே வரும் உஸ்தாதின் ஹம்மிங் குரலும், தீம் மியூசிக்கோடு கச்சிதமாகப் பொருந்துகிறது. சாரங்கி இசை அப்படியே நம் மனதை வருடுவதுபோல் ஒரு ஃபீலிங். தனிமையில் இருக்கும் போது கேட்டுப்பாருங்கள். மெய் மறந்துவிடுவீர்கள்.💝*
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*😀💝பாடலின் ஆரம்பத்தில் மட்டும் ஹம்மிங் வரும் பாடல்கள் வரிசையில்.. பாடல்:- நான் தேடும் செவ்வந்தி பூ இது –படம்:- தர்ம பத்தினி, இசை இளையராஜா + எஸ்.ஜானகி பாடும் பாடல், ஆரம்ப ஹம்மிங் பாடல்களின் வரிசையில், அருமையாக ஹம்மிங் உடன் ஆரம்பமாகும் எழுச்சி தருகின்ற பாடல்..💝*
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*🏆ஹம்மிங் குயின்?🏆*
*💝"ஸ்வரங்களின் அரசி" எனவும் "இந்தியாவின் ஹம்மிங் குயின்" என்றும் அழைக்கப்படுபவர் யார்?*
*🏆ஹம்மிங் குயின்?🏆*
*💝"ஸ்வரங்களின் அரசி" எனவும் "இந்தியாவின் ஹம்மிங் குயின்" என்றும் அழைக்கப்படுபவர் பிரபல பாடகி சொர்ணலதா தனது 14 வயது முதல் திரைப்பாடல்களை பாடியவர் 1400 மேற்பட்ட பாடல்களில் பின்னணி ஹம்மிங் குழுவில் இடம்பெற்று பாடியவர். தேசிய விருது பெற்றவர்?*
*💝ஹம்மிங் குயின் சொர்ணலதா பாடிய, வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே குழு ஹம்மிக் பாடல் மற்றும் சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, மிகவும் அருமையான பாடல்..💝*
👇👇👇👇👇👇👇👇👇👇👇
*😀💝பாடல்:- "வந்த நாள் முதல் இந்த நாள் வரை" பாடலின் அமைப்பு முறயில் மிகவும் புதுமையைக் கையாண்டார்கள மெல்லிசை மன்னர்கள்.பாடலின் ஆரம்பத்தில் விசில் சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை மட்டும் வரும் ஹம்மிங் பின்தொடர்ந்து முடிய, பாடல் ஆரம்பிக்கும். தொடர்ந்து விசில் சத்தத்தை பின்ணணி இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தியிருப்பார்கள்.இதில் புதுமையின் உச்சம் என்னவென்றால் இந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகம். தமிழ் செவ்வியலிசையில் மிக முக்கிய ராகங்களில் ஒன்றான மோகனம்.💝😀*
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*🤣💝🎶ஹம்மிங் 95% சதவீதம் பெண் குரல்கள்தான்.காரணம்? மனதை கொள்ளைக்கொள்ளும் உணர்ச்சி பொங்கி வழிவதுதான். காதல்/ஒரு வித உருக்கம்/சோகம் போன்ற பல ரசங்களும் தெறிக்கும்.தேவதைகளின் மொழி இந்த ஹம்மிங்.*🎶
*💝🎶குழுவுனராக ஹம்மிங் செய்யும் பாடல்கள் நல்ல ரசனை...இந்த பாடல் அழைக்காதே (1957) மணாளனே மங்கையின் பாக்கியம் - ஆதி நாராயண ராவ் அருமையான ஹிந்தோள ராக (குரூப்) குழு பெண்கள் ஹம்மிங் பாடல்💝🎶*
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*💝இந்த ஹம்மிங்கும் மனிதன் வாழ்நாளில் ஒரு நாளாவது கேட்க வேண்டும்... Stunning!அருமையான பாடல் வரிகள்... அருமையான ஹம்மிங் பாடல் இது பாடலின் ஆரம்பம் மற்றும் இடையிடையே வரும் பெண் குரல் ஹம்மிங் சூப்பரோ சூப்பர்.. பாடல்:-பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் – படம்:-பணம் படைத்தவன்1965. விஸ்வநாதன்-ராமமூர்த்தி. அமானுஷ்ய உணர்வைத் தரும் இந்தப்பாடலில் எல்.ஆர் ஈஸ்வரியின் ஹம்மிங் மற்றும் சைலபோன் இயைந்து பாடலை இனிமையூட்டுகிறது.💝😀*
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*💝பாடல் முழுவதும் பெண் குரலில் ஹம்மிங் தொடர்வது... பாடல்:-கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா – படம்:-ஆலயமணி 1962 -விஸ்வநாதன்-ராமமூர்த்தி. பாடலில் தந்திக்கருவிகளின் சலசலப்பை தென்னங்கீற்றாய் பொலிவுடன் தரும் அமானுஷ்யப்பாடல். அலையலையாய் பொங்கி பெருகி மறைந்து மீண்டும் எழுந்து வரும் இனிமை பொங்கும் ஹம்மிங், இந்தப்பாடலுக்கு சைலபோன் பொலிவையும் தருகிறது. இதில் முதலில் வரும் புல்லாங்குழல்/எல்.ஆர்.ஈஸ்வரியின ஹம்மிங் மனிதன் வாழ்நாளில் ஒரு நாளாவது கேட்க வேண்டும்.வசீகரம். லட்சணமான இசை. அருமையான பாடல் வரிகள். 🌧️ஆகாயத்தில் மிதக்கும் உணர்வை தந்த பாடல்.🎶😀💝*
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*💝🎶பாடல்:- மம்மா அம்மம்மா..கன்னத்தில் கன்னம் வைத்துக்... - (1966) - வல்லவன் ஒருவன் - இசை எஸ்.வேதா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்/ஹம்மிங் மனதை அள்ளுகிறது. ரொம்ப அபூர்வமான குரல்.அலட்சியமாகப் பாடுகிறார். Hats off L.R.Eswari.இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே போட்டு இருக்கிறேன். இந்த பாடலின் அற்புதமான இசை. மேற்கத்திய இசைத் தாக்கம்(????) வேதாவுக்கு நிறைய உண்டு.💝🎶*
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*💝🎶ஆண் குரலில் வித்தியாசமான துள்ளல்களோடு கூடிய ஹம்மிங் பாடல்:- உன்னை நான் பார்த்தது - (1975) -பட்டிக்காட்டு ராஜா -சங்கர் கணேஷ் - வித்தியாசமான ”பப்பப...பப....ப்பா” மற்றும் ஹம்மிங்.அட்டகாசம்.🎶💝🤣*
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*💝🎶🤣பெண் குரல் மட்டுமா பாடல் முழுதும் ஹம்முவது.. ஆண் குரலில் நாங்களும் ஹம்முவோம் என்று போட்டி பாடல்போல TMS பாடல் முழுதும் ஹம்மி இயிருப்பார்.. பாடல்:- பாலிருக்கு
பழமிருக்கு பசியிருக்காது. பாவமன்னிப்பு படப்பாடல் MSV அருமையாக இசையமைத்து, இசைத்திருப்பார். அருமையான பாடல் முழுதும் ஆண் குரலில் சிறப்பான ஹம்மிங் பாடல்*🤣💝🎶
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*😀💝 தொடரும் அடுத்த நிகழ்ச்சியிலும் ஹம்மிங்கின் பழைய பாடல் தொகுப்பு இடம்பெறும்...*
*🤣💝🎶மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுபவர்.. கோகி ரேடியோ மார்க்கோனி, புது தில்லியிலிருந்து...👍🙏🍬*
*💝🎶👻திரில்லர் ஹம்மிங்:-பேய்/சுடுகாடு/நடுகாடு/நடுஇரவு/ என்று விதவித ஹம்மிங். தமிழ்ப் படங்களில் ”வெள்ளை உடை ஆவி ஹம்மிங்” ரொம்ப விசேஷமானது.(நெஞ்சம் மறப்பதில்லை,துணிவே துணை/யார் நீ,அதே கண்கள்)*
*பயங்கரத்திற்கும் (horror) (குரல்?) கொடுப்பதுண்டு.சிவப்பு ரோஜாக்கள் படத்தில் தோட்டத்தில் இருந்து ஒரு பிணத்தின் எழும்போது வரும் ஆணின் முரட்டு ஹம்மிங் பயமுறுத்தும்.*
*💝👻🎶பாடல்:-நானே வருவேன் -(1960) யார் நீ -எஸ்.வேதா-அட்டகாசமான ஆரம்ப இசை.வெள்ளை உடை”ஆவி” ஹம்மிங்.🤣*
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*💝🎶சோலோ ஹம்மிங்.. பாடலின் ஆரம்பத்தில் வரும் AM.ராஜா அவர்களின் மிக இனிமையான நீண்ட ஹம்மிங்.. பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.*
*💝🎶AM.ராஜாவும் .P.சுசீலா அவர்களும் இணைந்து அமைந்த அருமையான டூயட் ஹம்மிங் பாடல் சித்தார் பின்னணி இசையில் தபேலா மிக நேர்த்தியான தாளத்தில் தொடரும் புல்லாங்குழல், வயலின் இசையும் அருமையான இசைக்கோர்வை கொண்ட அற்புதமான பாடல்*
*பாடல்:- கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய். மீண்ட சொர்க்கம் படத்தில் ,இசை T.சலாபதி ராவ், AM.ராஜா குரலில் இனிய பாடலில் பாடல் முழுதும் பி.சுசிலா அவர்கள் ஹம்மிங் செய்ய மிக அருமையான பாடல்..🎶💝*
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*💝🎶ஹம்மிங் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங்கும் மயக்கும்.வித்தியாசமான கம்போசிங்.*
*பாடல்:- நாம ஒருவரை ஒருவர் - (1971)குமரிக்கோட்டம்-எம் எஸ் வி- டிஎம்எஸ்-3.51ல் கொடுக்கும் ஹம்மிங் புதுசு/ஸ்டைல்.”நான் தொடர்ந்து போக” என்று டிஎம்எஸ் எடுக்கும் இடம் அருமை.அச்சு தமிழன் குரல்.இப்போது பாடும் இளைய தலைமுறை இந்தப் பாட்டை ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்க வேண்டும்.*🎶💝👍
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
[12/11, 7:54 PM] GOPAL & ARTHI KRISHNAN: *💝🎶பாடல்:- காற்றுக்கென்ன வேலி -(1977) அவர்கள் - எம் எஸ் வி. Stunning orchestration! ஆரம்பமே ஹம்மிங்தான்.முதல் சரண இசை(interlude) 1.29 ல் நிறுத்தப்பட்டு 1.31ல் தொடரும் ஜதிகள் ஹம்மிங் பிறகு அந்த ஹம்மிங்கில் ஜானகி தன் ஹம்மிங்கோடு சேருவது அருமை.*
🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬
*💝🎶பாடல்:-ரவிவர்மன் எழுதாத கலையே - (1988) - வசந்தி-சந்திரபோஸ், ஜேசுதாஸ், KS.சித்திரா இருவரும் இணைந்து டூயட் ஹம்மிங் செய்யும் இனிமையான பாட்டு. மென்மையான சிக்கல் இல்லாத எதிர்பார்த்தபடி வரும் ஹம்மிங். வீணையின் நாதம் இனிமைதான், இசைக்கோர்வை பாட்டின் ஆயுளை கூட்டும் என்பதை தீவரமாக கடைப்பிடிப்பவர் என்பது இவர் பாடல்களில் தெரியும்.*