FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 15, 2016

இணையத்திலும் "அம்மா" யூனிகோடுகள் .....

Re: [FTC] புதிய தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்:-

Font Name: uniAmma-11

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Font Name: uniAmma-12

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Font Name: uniAmma-13

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Font Name: uniAmma-14

Re: [FTC] புதிய தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்

இன்பாக்ஸ்
x
மன்றங்கள்
x

இரா.சுகுமாரன் rajasugumaran@gmail.com

பிற்பகல் 12:20 (28 நிமிடத்திற்கு முன்)
பெறுநர்: freetamilcompu.
எழுத்தும் அம்மா என்றால் !!! வேறு பெயர் கிடைக்கவில்லையா?
On Apr 14, 2016 10:51 AM, "Selva Murali" <murali1309@gmail.com> wrote:
வணக்கம் நண்பர்களே!!

இணையத்தில் யுனிகோடு என்றாலே லதா எழுத்துருவும், ஏரியல் யுனிகோடு எம்எஸ் மற்றும் விஜயா எழுத்துருக்கள்தான் அதிகமாக பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலைமையை சற்றே மாற்றிட  எங்கள் நிறுவனம் ஏற்கனவே பனீசியா நிறுவனம் கட்டற்ற முறையைல் வெளியிட்ட டாம் எழுத்துருக்களை யுனிகோடு வெப் எழுத்துரு முறைமைக்கு மாற்றி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விதவிதமான எழுத்துருக்களை இணையத்தில் பயன்படுத்தலாம். மின் புத்தகம், குறுஞ்செயலிகள் என எல்லாவிடங்களிலும் இதை பயன்படுத்தலாம்.

எழுத்துருக்களின் மாதிரி



தமிழ்ப் புத்தாண்டில் பொதுப்பயன்பாட்டு வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி

இன்னமும் 100 எழுத்துருக்கள் விரைவில் வெளியிடப்படும்


இந்த எழுத்துரு திட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டிய திரு.தகடூர் கோபி அவர்களுக்கு நன்றி!

நன்றி.


--
M.S.Murali (B+ve)

Tuesday, April 12, 2016

"குரு கிராம்" ஒரு புதிய கிராமம் புதிய பெயர் இன்றுமுதல் உதயமாகியது .

செய்தி:- புது  தில்லியின் எல்லையில் இருக்கும் ஹரியான மாநில "குடு காவுன்"  என்கிற தற்ப்போதைய தொழில்நகரம் இன்றுமுதல் "குரு கிராம்" என்று (சமஸ்கிருத மொழி)  பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.  ஒரு காலத்தில் நான் 1991 ல் பார்த்த போது எங்கும் எருமை மாடுகளும், எருமை சான வரட்டிகளுமாக இருந்த கிராமம், 2000ம் ஆண்டுக்குப் பிறகு புது தில்லியின் தொழிலாக மாசு கட்டுப்பாட்டு கெடுபிடிகளால் பல தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து தில்லியிலிருந்து இந்த குடு கிராமத்திற்கு இடம்பெயர்ந்தன.  அப்படிப்பட்ட நிலையில்தான் அந்தக் கிராமம் இன்று மிகப்பெரிய தொழில்நகரமாக  உயர்ந்தது.  இன்றும் உத்திரப்பிரதேசம் மற்றும் தில்லியிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் தினமும் இந்த தொழில் நகரத்திற்கு சென்றுவருகிறார்கள்.  புது தில்லியின் பாலம் சர்வதேச விமான  நிலையத்திலிருந்து வெறும் 10 மையில் தொலைவில் அமைந்திருக்கும் ஹரியான மாநிலத்தின் இந்த புதிய தொழில் நகரத்தின் புதிய பெயர் "குரு கிராமம்"  நட்புடன் கோகி -ரேடியோ மார்கோனி, புது தில்லியிலிருந்து. 
Photos: Mr.Shiv Kumar Pushpakar - The Hindu



Friday, April 8, 2016

Want to be a TV Broadcast Journalists...

Want to be a TV Broadcast Journalists, to collect, verify and analyse information about news and events, and present that information in an accurate, impartial and balanced way. Please mail your details to "Careers@ns7.tv"

Friday, April 1, 2016

இன்று World Autism Awareness Day.ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்கும்- NIMHANS & VIMHANS.

ஏப்ரல் 2, 2016 இன்று World Autism Awareness Day.... ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்கும், இந்தியாவின் சிறந்த மற்றும் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான "மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான" தேசிய நிறுவனம் (NIMHANS-National Institute of Mental Health and Neuro Sciences) பெங்களூரில் அமைந்துள்ளது." இதைப்போலவே மற்றொன்று புது தில்லியில் இருக்கும் "விம்ஹான்ஸ்"(VIMHANS -Vidyasagar Institute of Mental Health, Neuro & Allied Sciences) வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த இரண்டு இடங்களையும் சுற்றிப்பார்த்த என்னுடைய அனுபவம், என் மனதை நெகிழவைத்த அனுபவமும்கூட.............. அங்கு சிகிச்சை பெறுபவர்கள் சராசரி நோயாளிகள் போல இருந்தாலும் சிறு அளவிலான மூளைக் குறைபாடு அல்லது நரம்பியல் குறைபாடு உடையவர்கள்’ என்று அங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் சொன்னபிறகுதான் தெரிந்தது................ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு நாள் ஏப்ரல் 2, 2016 இன்று World Autism Awareness Day என்று ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட நாள். கோகி-ரேடியோ மார்கோனி.  


அப்போது 1985-87, நான் டாக்டர் ராதா கிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் (நான் படித்த அதே பள்ளியில்) பகுதிநேர ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நேரம். முன்பு நான் மாணவனாக அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கு மேல்நிலைக்கல்வி "தாவரவியல்" ஆசிரியராக இருந்தவர்................................. " திரு ந.கிருஷ்ண சுவாமி சார் (சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கிறார்) என்னிடம் 15 நாட்கள் விடுப்பில் அவரது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான" தேசிய நிறுவனம் (NIMHANS) பெங்களூருவுக்கு சென்றுவர உடன் உதவிக்கு வருமாறும், அதற்குத்தேவையான திட்டமிடவேண்டும் என்று என்னுடைய உதவியை கேட்டபோது, பள்ளி கலைக்கல்வி நாடகக்குழு நிகழ்ச்சி தயாரிப்பில் உதவியாக இருந்த எனக்கு "மருத்துவ சிகிச்சைக்கு திட்டமிடுதலில் " அதுதான் முதல் அனுபவமும்கூட..... 

ஆகவே நிகழ்ச்சி தயாரிப்பு என்பது அவ்வளவு எளிய வேலை இல்லை அதற்க்கென்று தனி அனுபவ அறிவும், செயல் திறனும்  அவசியம் தேவை....... மேலும் பல சுவையான விவரங்களுக்கு வாருங்கள் நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறைக்கு..... அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.  http://programmedirector.blogspot.in/2015/11/blog-post_21.html

Sunday, March 27, 2016

"சொல்லும் முன் செயலாக......எள் என்று தொடங்கும்போதே எண்ணெய்யை கொண்டுவரவேண்டும்" என்றார்.....

எள் என்றால் எண்ணெய்யாக நிற்கவேண்டும் "சொல்லும் முன் செயலாக......எள் என்று தொடங்கும்போதே எண்ணெய்யை கொண்டுவரவேண்டும்" என்றார்.....

நான் முதலில் ஒரு ஆலோசகராகத்தான் அந்த நிறுவனத்தின் உரிமையாளரை தொடர்புகொண்டேன்... அது ஒரு உள்ளாடை பெயரில் தொடங்கும், தொலைத்தொடர்புத்துறை சார்ந்த பெரிய சீன நிறுவனத்தின் துணை நிறுவனம். என்னைபோன்ற இந்திய ஆலோசகர்களை  சீண்ட கூட  மாட்டார்கள் என்கிற நினைப்பில்... கல் எரிந்து பார்ப்போம்... என்றுதான் முயற்சி செய்தேன்... உடனே அழைப்பு வந்தது ஆச்சிரியம்தான்......  எதோ ஒரு நேரத்தில் பேச்சுவாக்கில் தென்னிந்தியர்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் எனவும், அவர்களுக்கு தரப்பட்ட பணியில் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கயை வெளிப்படுத்தினார்... அவரது நம்பிக்கைதான் எனக்கு வாய்ப்பு தந்தது என்பதை புரிந்துகொண்டேன்...... இருப்பினும் நான் சிங்கப்பூரில் பெற்ற சீன மொழி அறிவை (மாண்டரின்) பெருங்காய அளவில் அவ்வப்போது பயன்படுத்தியது அவருக்கு பிடித்திருந்தது என்பதை அவரது அணுகுமுறையில் தெரிந்துகொண்டேன்...... பாராட்டி வேலைவாங்கும்  திறமையான நிர்வாக இயக்குனர் அவர் என்பதையும் புரிந்துகொண்டேன்.   

நமது திட்டப்பணிக்கு எள் என்று தொடங்கும்போதே எண்ணெய்யை கொண்டுவரவேண்டும்.... அப்படிப்பட்ட ஒரு தலைமை நிர்வாகி தேவை என்றார்....(அவர் ஆங்கிலத்தில் சொன்னதை மிகப் பொருத்தமான தமிழில் குறிப்பிட்டுள்ளேன், எள் மற்றும்  எண்ணையைப்பற்றி தமிழர்களுக்கு மட்டுமே தெரிந்த பழமொழி,.... வேறு எந்த  மொழியிலும்  இல்லாத உவமை தமிழ் மொழிக்கு உண்டு.)  ஆனால் எள் என்றால் எண்ணெய்யாக 'வழிகிறவர்கள்தான்' இன்று நிறைய பார்க்கமுடிகிறது. இவர்கள் சோப்பு போடுவது, வெண்ணை வெட்டுவது, ஜாலரா அடிப்பது போன்ற பணிகளில் பலர் வல்லவர்களாக வளம் வந்துகொண்டிருப்பதை நான் அதிகம் பார்த்திருக்கிறேன் என்பதை எனது உள்மனது நினைவுபடுத்தியது.

அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயலாற்றிக்கொண்டிருக்கும்  அவர் பிரபல சீன நிறுவனத்தின் சொந்தக்காரர்.... சீன நாட்டைச் சேர்ந்தவர்... சரளமாக ஆங்கிலம் பேசும் அவரை சட்டென்று சீன நாட்டை சேர்ந்தவர் என்று சொல்லுவது கடினம்... நானே ஒரு முறை அந்த நிறுவனத்தின் ஆண்டுவிழா நிகழ்ச்சியின்போது ஒரு வாய்ப்பு கிடைத்ததால்....."நீங்கள் சீனாவின் ஹாங் காங்கில் பிறந்து வளந்தவரா?" என்று கேட்டிருக்கிறேன்.... அவர் சிரித்துக்கொண்டு இல்லை சாங்காய் அருகில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும், (புரியாத பெயரில் எதோ கிராமமொன்றை சொன்னார்) அவரது முன்னோர்கள் விவசாயமும் மீன்பிடித்தல் மற்றும் மீன் சந்தை வியாபாரம் செய்தவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றார். அவர் அப்படி கூறியதில் எனக்கு மிகுந்த ஆச்சரியம்.... 

அந்த நிறுவனத்தை மேலோட்டமாக ஒரு சுற்று சுற்றிவந்தபோது, நான் நினைத்தபடியே பலர் அலுவலகப் பனியின் நேரத்தை வீனடித்துக்கொண்டிருன்தனர், இதில் ஆச்சரியம் என்னவென்றால் வேலை அதிகம் என்று வேலை நேரம் தவிர அதிகப்படியான நேரத்திலும் வேலை செய்து அதிகப்படியான (OT-Over Time) சம்பளம் ஈட்டுபவர்கலாக மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றுவதைப்போல வளம் வந்துகொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு பிரிவின் தலைமை அதிகாரிகளோடு அவர்களது பிரிவினை சுற்றிப்பார்த்தபோது... பல இடங்களில் எனது கேள்விக்கு ...அதிகம்.... "இல்லை, கிடையாது,  தெரியவில்லை" போன்ற பதில்கள் கிடைத்தது.... பல அலுவலகப் பிரிவுகளில் கணினி இருந்தும் உல் கட்ட செயல்பாட்டிற்கு மிக அதிகமான காகித உத்தரவுச் சீட்டு  மற்றும் கடிதக் கோப்புக்கள் பயன்படுத்துவது தெரிந்தது. எந்த ஒரு விவரமும் கோப்புகளை புரட்டிப்பார்த்து நீண்ட நேரம் செலவு செய்து அறிந்துகொள்ள வேண்டியிருந்தது......  மேலும் இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் ....நன்றிகளுடன்  ரேடியோ-கோகி.   

Friday, March 25, 2016

World’s first hospital train ...

World’s first hospital train ....Lifeline Express is run and operated by Impact India Foundation with the help of Indian Railways and Health Ministry of India.. it has 2 surgical operation theater, 3 operating tables, a sterilization area, 2 recovery rooms for patients, on-board power generators, a pantry car, storage for medical supplies, and accommodation for medical staff.. So far it has medically served over 900,000 people including more than 100,000 surgeries in the remotest rural parts of the country!!

Wednesday, March 23, 2016

பூமியின் நிழல் நிலவில் விழும் காட்சி Date : ( 23 - 03 - 2016 ) Day : Wednesday

பூமியின் நிழல் நிலவில் விழும் காட்சி Date : ( 23 - 03 - 2016 ) Day : Wednesday புதன் கிழமை இந்திய நேரப்படி 3.10 pm(15.10 Hrs) இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் சந்திரகிரகணத்தை, அதாவது பூமியின் நிழல் நிலவில் விழும் காட்சி இந்தியாவில் தெரியாது, ஆனால் இந்த நிகழ்வை / கிரகணத்தை சிங்கப்பூரில் நன்கு காணமுடியும்.  

இந்தியாவிற்கு இந்த கிரகண தோஷம் கிடையாது. ஆனால் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் உத்திரம் நட்சத்திர காரர்கள் கிரகன சாந்தி செய்துகொள்வது சிறப்பு. 

பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் கிரகன காலத்தில் தீர்த்தமாடி, சுத்தமாய் அவர்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றவும். பிறகு முடிந்தால் கிருஷ்ணன் கோவில் சென்று பெருமாளை சேவிக்கவும். 

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கிரகணம் துவங்கும் நேரம் : மாலை ( 5 - 39 ) மணி அளவில் ஆகும் எச்ளிப்சே Starting Time : ( 5 - 39 ) Pm ( Singapore Time ).

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கிரகணம் முடிவடையும் நேரம் : இரவு ( 9 - 59 ) மணி அளவில் ஆகும் எச்ளிப்சே Ending Time : ( 9 - 59 ) Pm ( Singapore Time ). அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.

Wednesday, March 16, 2016

தாமதங்கள்= தா+மதங்கள் DELAYS CAN CHANGE EVERYTHING.

DELAYS CAN CHANGE EVERYTHING.
தாமதங்கள்= தா+மதங்கள் 
தாமதங்கள் "தா-மதங்" என்ற கள்.
தாமதங்கள் அனைத்தையும் மாற்றிவிடும். 
தாமதங்கள் தலைகீழாக புரட்டிப்போடும்.
தாமதங்கள் தாக்கத்தை ஏற்ப்படுத்தும்.
தாமதங்கள் தடுமாற்றத்தை தரும்.
தாமதங்கள் தரம் தாழ்த்திவிடும். 
தாமதங்கள் தடம் மாற்றிவிடும்.
கள்..
ங்க..
மத..
தா...ல்...
நட்புடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

மாற்றம் என்பது பிறருக்கு அல்ல உங்களுக்குத்தான் தேவை.

மாற்றம் என்பது பிறருக்கு அல்ல உங்களுக்குத்தான் தேவை. நன்கு சிந்தியுங்கள் மாற்றம் வேண்டும் என்று கூறி அவர்களுக்குத்தேவையான மாற்றத்தை உங்களை வைத்து நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முதலில் நீங்கள் உங்களின் அலுவலத்தில் உங்களின் வேலையை செய்கிறீர்களா அல்லது பிறரது வேலையை செய்கிறீர்களா என்று நீங்களே உங்களைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.   உலகின் 96 % மக்கள் அவர்களது பணியை செய்யாமல், மற்றவர்களின் பணியை செய்து உழைக்கிறார்கள். எப்போது ஒரு மனிதன் தன்னைப்பற்றி உணர்ந்து தனது முன்னேற்றத்திற்கு உழைக்கிறானோ அப்போதுதான் அவன் உயர்வான ஒரு நிலையைப் பெறுவான். 

நிர்வாகிகள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட செயலை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட்டால் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். இதைத்தான் நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்..... அப்படி முன்னோர்கள் கூறிய அந்தக்கதைதான் என்ன?


ஒரு ஊரில் துணிகளை துவைக்கும் சலவைத் தொழிலாளி ஒருவர் அவரது வீட்டில் அவருக்கு உதவியாக இருக்க ஒரு கழுதையையும், அவரின் வீட்டு காவலுக்கு என ஒரு நாயையும் மிக அன்போடு பராமரித்து வளர்த்துவந்தார்.

ஒருநாள் இரவு ஒரு திருடன் அந்த சலவைத் தொழிலாளியின் வீட்டில் இருக்கும் பொருளை திருடுவதற்காக சிறிது தொலைவில் மறைந்திருந்து, இரவு அனைவரும் தூங்கட்டும் பிறகு திருடலாம் என காத்திருந்தான்.

இதைப்பார்த்துவிட்ட சலவைத் தொழிலாளியின் வளர்ப்புக் கழுதை, தமது எஜமானர் வீட்டுக்கு திருடன் திருட வந்திருப்பது தெரிந்து மனம் பதறியது, கழுதையின் அருகே அமைதியாக படுத்திருக்கும் அந்த வீட்டு நாயிடம், கழுதை தனது பதற்றத்தை கூறி அவர்களது எஜமானரை எழுப்பி நடக்கவிருக்கும் திருட்டை தடுக்க உதவுமாறு கூறியது. அதற்க்கு நாயும் அந்த திருடன், திருட ஒளிந்திருப்பதை பார்த்துவிட்டதாகவும், திருடனை பிடித்து திருட்டை தடுக்கவேண்டியது இந்த வீட்டு நாயான தன்னுடைய வேலை எனவே நான் பார்த்துக்கொள்கிறேன், கழுதையே நீ சற்று அமைதியாக உன்னுடைய வேலையை கவனி என்றது.

பதற்றமாக இருந்த கழுதை, எப்படியாவது திருடன் வந்திருப்பதை தமது எஜமானருக்கு தெரியப்படுத்தவேண்டும் என தனது சக்தியை எல்லாம் திரட்டி உரக்க கத்தியது .....

கழுதையின் கத்தலைக் கேட்ட சலவைத் தொழிலாளி தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான், இந்தக் கழுதை ஏன் இப்படி நாடு இரவில் எனது தூக்கத்தைக் கெடுத்து கத்துகிறது என்று வீட்டின் கூரையில் சொருகி இருந்த உருட்டுக் கட்டையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியில் வந்தான், அங்கு கத்திக்கொண்டிருந்த கழுதையின் முதுகில், தனது கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் ஓங்கி ஒரு அடி அடித்து, கழுதையே உனக்கு என்ன வந்தது வாயை மூடி அமைதியாக படுத்துக்கிட, ஏன் எனது தூக்கத்தைக் கெடுக்கிறாய் என்று கூறி மேலும் ஒரு உருட்டுக்கட்டை அடியை கழுதைக்கு தந்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான். 

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாய், கழுதையைப் பார்த்துக் கூறியது. நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் என "அவரவர் வேலையை அவரவர் செய்யவேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் உதய் விழும்" என்றது.....        

இது அலுவலக மேலாண்மைக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் முன்னேற, சிறந்த இடத்தைப் பிடிக்க ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.  

மேலும் ஒரு உதாரணத்திற்கு... வகுப்பில் உள்ள மாணவர்களிடையே நன்றாக படிப்பவன் சுமாராக படிப்பவன் என்ற பேதம் இருந்தாலும், யார் தன் நிலையிலிருந்து மிகுந்த முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்களே ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவருவார்கள். அந்த மாணவனே சிறந்த மாணவனாக ஆசிரியரால் முன்நிருத்தப்படுகிறான். ஆகவே நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களுக்குண்டான வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும், அதற்குரிய ஊதியமும் பெற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். சிலருக்கு தன்னுடைய வேலை எது என்றுகூட பிரித்து தெரிந்துகொள்ளக்கூடிய திறமையில்லாமல், மற்றவரது வேலைதான் தன்னுடைய வேலை என்று வாழ்க்கையை வாழத்தெரியாமல் வீனடித்துக்கொண்டிருக்கிரார்கள். இந்தப் பதிவை மேலும் தொடர்ந்து படியுங்கள் பல விவரங்கள் உங்களுக்குப் புரியும்.

"பாடல்:- இந்த மாநிலத்தைப் பாராய் மகனே! உந்தன் வாழ்க்கை தனை உணர்வாய் மகனே! இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா! முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா!!!! ...."

முதலில் அலுவலகத்தில் உங்களது பனி எது என்று தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் சேர்த்து செய்தால் தான் நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் உங்களின் சொந்த முயற்சிக்கான வேலைகளையும் செய்யவேண்டும். 

உதாரணமாக உங்களின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் சொந்த முயற்சிக்கான, உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய நேரமாக, உங்களின் உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது உங்களுக்கு பணம்பழம போன்ற நெல்லிக்கனி"  (புரிகிறதா? இல்லையென்றால் மேற்கூறிய உதாரணத்தை திரும்ப திரும்ப படித்துப்பாருங்கள் புரியும்).

பாடல்:- "காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது" என்பதை நேரம் + நிர்வாகம் = வெற்றி என்கிற நூலாக்கி, நேரத்தை நமது நிர்வாகத்தில் வைப்பதன் முக்கியத்துவத்தை மிகக் கச்சிதமாக எழுதியிருக்கிறார் கவிஞ்சர் கண்ணதாசன் அவர்கள்....

மேலும் தற்போது உங்களின் மாத ஊதியம் 10000/- என்றால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளின் அது இரண்டு மடங்காக 20000/- என ஊதியம் அதிகமாக கிடைக்குமாறு, அதற்குத் தேவையான முயற்சிகளை செய்வதுதான், உங்களின் உயர்வுக்கான சொந்த முயற்சிக் குறிக்கோளாக இருக்குமாறு, நீங்கள் தினமும் சேமிக்கும் உங்களின் உபரி நேரத்தில் அதற்க்கான முயற்சிகளை செய்யும் நேரமாக அமைத்துக்கொள்ளுங்கள்.

"பாடல்:-உள்ளத்திலே உரம் வேண்டுமடா, உண்மையிலே திறம் காணுமடா,  ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா..........ஏட்டுச சுரைக் காயெல்லாம், மூட்டை கட்டியாகணும், நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்....." 
ஆகவே அவரவர் வேலையை அவரவர் செய்வதே சாலச் சிறந்தது அதாவது "நாயின் வேலையை நாயும் கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும்". 

நான் பலநேரம் இதுபற்றி சிந்தித்ததுண்டு, இன்னமும் கூட பலர் அவர்களின் அலுவலகத்தில், அவர்களது வேலையை செய்யாமல் பிறரது வேலையை செய்து மாத சம்பாத்தியம் பெறுகிறார்கள்.  எப்போது ஒருவர் தன்னுடைய வேலை இது என்று உணர்ந்து, தனது வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும் பெற்று உயர்வு பெறுகிறார்களோ, அவரே அவர்களது வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களது ஆரம்ப இடத்திலேயே சரியாக வாழக்கையை அமைத்துக்கொள்ளாமல் திணறி தனது முடிவுக்கு தானாகவே காரனமாகிவிடுகிரார்கள். இதை வைத்துத்தான் நீங்கள் பணிபுரியும் உங்களின் நிறுவனம் உங்களின் திறனை மதிப்பிடுகிறது.

"பாடல்:-புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...."

இப்போது நாம்,  நமது உயர்விற்கான தலைவிதியை எப்படி மாற்றி அமைத்துக்கொள்வது என்பதைப் பார்ப்போம்..... இதற்க்கு நாம் நமது அனைவரது வாழ்விலும் உள்ள ஒரு உதாரணத்தை இங்கு எடுத்துக்கொள்வோம். வழக்கமாக நாம் அலுவலகம் செல்ல பேரூந்து நிறுத்தத்தில் பலமணி நேரம் காத்துக்கிடந்தும் நமக்குத் தேவையான அந்த பேரூந்து உடனே வருவதில்லை. பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இருந்தாலும் அரை மணிநேரமாகியும் எந்த ஒரு பேரூந்தும் வாராதது நமது தலைவிதி என்று நினைப்போம். மறுநாள் நமக்கு பேருந்தில் செல்லவேண்டிய அவசியமிருக்காது, நாம் வேறு வேலையாக நேற்று நின்றிருந்த அதே பேரூந்து நிலையத்தைக் கடக்கின்றபோது, நேற்று எந்த பெரூந்திர்க்காக வெகுநேரம் காத்திருந்தோமோ அதே பேரூந்து ஒன்றன்பின் ஒன்றாக காலியான இருக்கைகளுடன் இரண்டு மூன்று பேரூந்துகள் செல்வதைப்பார்க்கலாம்.

"பாடல்:- சொல்லாதே யாரும் கேட்டால், எல்லோரும் தாங்கமாட்டார்... ....விதி என்று ஏதுமில்லை, வேதங்கள் வாழ்க்கையில்லை ...." 

ஆகவே ஒன்று நிச்சயமாக தெரிகிறது, எது நமக்கு வேண்டுமோ அது நமக்கு கிடைக்காது, எது நமக்கு வேண்டாமோ அது நிறைய கிடைக்கும்" இதுதான் நமது தலைவிதி என்று தெரிந்துவிட்டதால் இனி நாம் நமது வாழ்க்கையை எது கிடைக்கிறதோ அதை நோக்கி அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். அது எப்படி என்று மேலும் தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.  

பாடல்: "மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு, அதை தாவ விட்டால், தப்பி ஓட விட்டால்... நம்மை பாபத்தில் ஏற்றிவிடும்..."

பொதுவாக மனிதனின் மனம், "இது" இருந்தால் நான் இன்னும் சிறப்பாக இருப்பேன் என்கிற மனநிலையில் "இது (அல்லது) அது" என்பவற்றிற்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறது. உதாரணமாக இன்னும் அதிக சம்பளம் கிடைத்தால் நான் இன்னமும் அதிக நேரம் கடுமையாக உழைக்கத் தயார் என்கிற கூற்று அனைவரின் மனதிலும், அதோடு சொல்லிலும், செயலிலும் வெளிப்படுவதைப் பார்க்கிறோம், ஆகவே மனிதனின் மனம் "பணம்" என்கிற ஒன்றின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் "கோழை" என்று சொன்னால் எத்தனை உள்ளங்கள் இது சரியான கூற்று என்று ஒப்புக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறது??????. 

"பாடல்:- மயக்கமா? கலக்கமா?...மனதிலே குழப்பமா?... வாழ்க்கையில் நடுக்கமா?......." 

வேறு ஒரு உதாரணத்தையும் சொல்கிறேன்.... ஒருவர் மற்றவரை ஒப்பிட்டு தனது நிலையைப் பற்றி நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பார். நான் செய்யும், அதே பணியை செய்யும் அவருக்கு என்னைவிட அதிக சம்பளம் என்பார்... "எனக்கு ஒருநாளைக்கு ரூ300 என்றால் அதே வேலையை செய்யும் அவருக்கு ரூ400 ஏன்?" என்பார்... 

அதற்க்கு நான் அவரிடம் ..... "நீங்கள் ரூ600 க்கு தகுதியுடையவர் பின்பு ஏன் ரூ 400ஐப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள்???? என்றேன்".... 

அப்படிஎன்றால் எனக்கு ரூ 600 கிடைக்கவேண்டுமல்லவா ஏன் கிடைக்கவில்லை? என்கிற அவரின் கேள்விக்கு நான் தந்த பதில்.... "அது உங்களின் கையில் அல்லவா இருக்கிறது... முதலில் ரூ 600க்கு உண்டான வேலையை, திறமையை செயலில் காட்டுங்கள். பிறகு என்னை வந்து பாருங்கள்.... என்றேன். 

"பாடல்- உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... உனக்கு நீதான் நீதிபதி... மனிதன் எதையோ பேசட்டுமே.... மனச பார்த்துக்கோ நல்லபடி உன் மனசை பார்த்துக்கோ நல்லபடி....." 

ஆகவே ஒரு ரகசியத்தை நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன்.... நீண்ட ஒரு வரிசையில் நிர்ப்பவர்களில், முதலில் யார் நிற்கிறார்களோ அவர்களை மட்டுமே நாம் பார்க்கமுடியும். அவர்களின் பின்னால் நிர்ப்பவர்களை நம்மால் பார்க்கமுடியாது.  உலகத்தின் பார்வை யார் முதலில் இருக்கிறார்களோ அவர்களின் மீது மட்டுமே இருக்கும், அதாவது, நல்ல சம்பளம், நல்ல வாய்ப்பு என ஏதாவது ஒரு காரணத்தின் பின்னால் நீங்கள் நின்றுகொண்டிருந்தாள்... பின்னல் நின்றுகொண்டிருக்கும் உங்களை யாருக்கும் தெரியாமலே போய்விடும். அடுத்த 10 வருடங்கள் ஆனாலும் நீங்கள் முன்னேறமுடியாது. ஆகவே ஏதாவது ஒரு காரணத்தின் பின்னால் நிற்கும் உங்களின் முடிவை விட்டுவிடுங்கள். குறைவான சம்பளம் அல்லது சம்பளமே இல்லையென்றாலும் சிறப்பாக எந்த வேலையையும்  செய்து முடிப்பேன் என்கிற முடிவோடு செயல்பட்டு, முதலிடத்தில் நில்லுங்கள்..... பிறகு பாருங்கள்... உங்களின் சிறப்பான செயலை பாராட்டி பதவியும் பணமும் உங்கள் பின்னால் வரும்..... உங்களுக்கு எது தேவையோ அனைத்தும் உங்களின் பின்னால் வரும்... உங்களுக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் உங்களின் பின்னல் வரும் அவைகளை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையென்றால் உங்களின் அதிகாரிக்குப் பின்னால் செல்லும் உங்களைத்தான், அவரது முன்னேற்றத்திற்கு அவர் பயன்படுத்திக்கொள்வார். 

"பாடல்:- பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே ...கருடன் சொன்னது.... அதில், அர்த்தம் உள்ளது..."

முதலில் உங்களின் முன்னேற்றத்திற்கு என்னவெல்லாம் தேவை என்பதை தேர்ந்தெடுத்து அதற்க்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், படிப்படியாக நீங்கள் உயர்ந்தநிலை அடைந்தபிறகு, அந்த உயர்நிலையை சரியானபடி தக்கவைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.....  பலர் மகாபாரத அபிமன்யுவைப் போல வேகமாக உயர்வான நிலையை எட்டிப்பிடித்து பிறகு அந்த உயர் பதவியை த்க்கவைத்துக்கொள்ளமுடியாமலும், அந்தப்பதவிக்கு கீழ் நிலைக்கு வரமுடியாமலும், தட்டுத் தடுமாரிவிடுகிரார்கள்... ஆகவே நீங்கள் பெற்ற உங்களின் உயர்நிலையை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்பதைப்பற்றி  பார்ப்போம் ....தொடரும் 

"பாடல்:- துணிந்து நில், தொடர்ந்து செல்... தோல்வி கிடையாது தம்பி... உள்ளதை சொல், நல்லதை செய்... தெய்வம் இருப்பதை நம்பி...."

.... அன்புடன் கோகி -ரேடியோ மார்கோனி.   

Saturday, March 12, 2016

சேவல் கூவிட, பொழுது புலர்ந்தது, புத்தகத்திலே......

சேவல் கூவிட 
பொழுது புலர்ந்தது
புத்தகத்திலே......

பெற்ற குழந்தைக்கும் தெரியாத 
குடும்ப உறவினர்கள் 
புத்தகத்திலே..... 

புத்தகமும், நூலகமும்..
அருங்காட்சியகத்தில்
அடுத்த சில நூற்றாண்டுகளில்...

நட்புடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

Friday, March 4, 2016

2016 ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து கிரகணங்கள் நிகழும்.

2016 ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து கிரகணங்கள் நிகழும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புது தில்லி, மார்ச்-9 -2016 அன்று நடக்கவிருக்கும் பகுதி சூரிய கிரகணத்தை சிங்கப்பூரர்கள் முழுமையாக காணலாம். மிக அரிதான நிகழ்வாகக் கூறப்படும் இந்தக் கிரகணத்தில் உச்சநிலையின்போது கிட்டத் தட்ட 90% விழுக்காட்டுச் சூரியனைச் சந்திரன் மறைக்கும் இந்த சூரிய கிரகணம்  இந்தியாவில் கிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் இறுதிகட்ட நேரத்தில் மட்டுமே காணக்கூடிய சூரிய கிரகனமாகும், மற்ற பெரும்பாலான இந்தியப் பகுதியில் இந்த  சூரிய கிரகனத்தை பார்க்கமுடியாது. மலேசியா, சிங்கப்பூருக்கு இந்த சூரிய கிரஹனம் முழு சூரிய கிரஹனமாக எளிதில் பார்க்ககூடியதாக இருக்கும்.  

இந்தியாவின் பெரும்பாலான இடங்களில், கிரகணம் தொடக்கப் பகுதி தெரியாது, கிரகனத்தின் இருதிகட்டாத்தில் சூரிய உதயம் அதாவது ஓரளவு ஒளிமங்கச்செய்யும் சூரிய உதயத்திற்கு முன் இருக்குமாறு தெரியும்.

இந்த சூரிய கிரஹனம் இந்திய நேரப்படி அதிகாலை 4.49 மணிக்கு தொடங்கி முழு கிரகன நிலையை 5.47மணிக்கும் பிறகு காலை 6.48 மணியளவில் இருதிகட்டநிலையை அடையும். 


பித்ரு தர்ப்பணம் என்னும் மூதாதையர்களுக்கு செய்யும் சூரிய கிரகன கால தர்ப்பணம் என்பது சூரிய உதயத்திற்கு முன்பு செய்யவேண்டிய சடங்கு ஆகவே உங்களின் பகுதியில் காலை (5அம டு 6.50அம) 5மணியிலிருந்து  6.50மணிக்குள்  சூரிய உதயம் இருக்குமானால் சூரிய உதயத்திற்கு முன்பு செய்யலாம். நீங்கள் வசிக்கும் பகுதியில் காலை 6.50மணிக்கு மேல் சூரிய உதயம் இருக்குமானால் கிரகண தர்ப்பணம் செய்யத் தேவையில்லை.  
சூரிய கிரகனத்தைப் பார்க்கலாமா? விஞ்ஞன முறைப்படி சூரியவிட்டத்தை சந்திரன் கடக்கும் நிகழ்வான அதாவது சூரியனுக்கும் பூமிக்குமிடையில்  சந்திரனின் வருவதால் ஏற்ப்படும் இந்த நிகழ்வைப் பார்க்கலாம் தவறில்லை,  மெய்ஞான முறைப்படி இப்படிப்பட்ட கிரகனத்தின்போது தாறுமாறான சூரிய கதிரானது நேரடியாகவோ அல்லது நவ கோள்களின் மீது பட்டு பிரதிபலிப்பு தாறுமாறான கதிர்களாக உயிர்களின் மீது விழுவதால் உயிர்களின் சக்திக்கு ஊரு விளைவிக்கும் நிலையை உண்டாக்குகிறது என்பது பண்டைய புராண காலத்திலிருந்து கூறப்படும் கூற்று. அறிவியல் முறையிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.  

ஜோதிடம்:- சூரியனின் கதிர்கள் நேரடியாக உயிர்களின் மீது படுவது சிறப்பானது அதைவிட சிறப்பாக அதன் பிரதிபலிக்கும் ஒளிக் கதிரானது இரண்டுமடங்கு சிறந்தது, அது உள்ளத்திற்கும் உணர்வுகளுக்கும் புதிய தேம்பைத்தருகிறது.... அதாவது சூரிய ஒளிக் கதிரானது சந்திரன் மற்றும் பிற கோள்களின் மீது பட்டு பிரதிபலிக்கும் ஒளிக் கதிராக நம் மீது படும்போது  உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகப்பெரிய சக்தியை தருகிறது அதைத்தான் நாம் 9-நவ கோள்களின்  சக்தியாக (கோள்களின் பார்வை என)  உணருகின்றோம். 

அடுத்த சூரியகிரஹன  வரும் 09-மே-2016 திங்கள் அன்று புதன் கோளானது சூரிய விட்டத்தை கடக்கும்போது ஏற்ப்படுகிறது. இது மாலை 4மணியிலிருந்து சூரியன் (அஸ்தமிக்கும்) மறையும் வரை  இந்தியாவின் அனைத்துப்பகுதியிலும் தெரியும். 


இந்த சூரிய கிரஹனம்  பூரட்டாதி நட்சத்திரத்தில் ஏற்ப்படுகிறது,  இந்த சூரிய கிரகன தோஷ நட்சத்திரங்கள்:-சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம். என இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகன கதிர்களினால் உடலும் மனமும் தாக்கப்படாமல் தம்மை காத்துக்கொள்ள, கிரகன தோஷ சாந்தி செய்துகொள்வது சிறந்தது  

1. சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை வழிபட்டால், எப்படிப்பட்ட கிரகன தோஷங்களின் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம். 


2. பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் கிரகன காலத்தில் தீர்த்தமாடி, சுத்தமாய் அவர்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றவும். பிறகு முடிந்தால்  கிருஷ்ணன் கோவில் சென்று பெருமாளை சேவிக்கவும்.

3) கிரகன காலத்தில் (ஆண்கள்) தீர்த்தமாடி காயத்ரி ஜபம், அஷ்டாக்ஷரம், த்வயம், சர்மா ஸ்லோக ஜெபங்களை முடிந்தவரை செய்யவும். இக்காலங்களில் ஜபம் செய்வது பத்து மடங்கு ஜபம் செய்யும் பலனை அளிக்கும்.

4) பெண்கள் குழந்தைகள் ஸ்லோகம், ச்தோற்ற பாடம் முதலியவைகளை பாராயணம் செய்யலாம்.

5) அனைவரும் காலை 7.00 மணிக்கு மேல் தீர்த்தமாட வேண்டும்.

6) கிரகணம் விடியற்காலை 5.00 மணிக்கு ஆரம்பிக்கின்றது. எனவே கிரகணம் முடிந்த பின் தீர்த்தமாடி, சமையல் செய்து சாப்பிடலாம். அதாவது காலை 7.00 மணிக்கு மேல்.

7) நேற்று இரவு சமைத்த உணவை மீதம் வைத்து சாப்பிட வேண்டாம்.

8) ஊறுகாய், தயிர் போன்றவற்றில் தர்ப்பம் (நுனி கிள்ளிப் போட்டு ) போட்டு வைக்கவும். தர்ப்பைப்புல்லானது கிரகன கதிர்களை நெருங்கவிடாமல் காக்கும் சக்திபடைத்தது. 

9) இங்கே குறிப்பிட்டவை தவிர வேறு சந்தேகங்கள் இருந்தால் வாட்சப்பில் தொடர்புகொள்ளுங்கள்.

நன்றிகளுடன் ரேடியோ-கோகி. 

Wednesday, March 2, 2016

ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில்....

பல வழிகளில் உங்களின் ஓய்வுநேரத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் ஆனாலும் அது எந்தவகையில் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்பதுதான் முக்கியம்.


ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.http://www.onlineadpostingjobs.com/register.php?ruser=87116862

சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.https://www.sitedone.com/user/508

தொலைக்காட்சியில் பொழுதைக் கழிப்பதால் உங்களின் பொருளாதாரம் உயரப்போவதில்லை மாறாக மேலும் பல புதிய தொலைக்காட்சி நிலையங்கள் உருவாகி லாபம் ஈட்டுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால் நலம்.

நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....நட்புடன் ரேடியோ-கோகி.

Wednesday, February 24, 2016

ஜீசஸ் ஒரு தமிழ் பிராமணர்:ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்ச்சை புத்தகம் 70 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பு…

ஜீசஸ் ஒரு தமிழ் பிராமணர்: ஆமாங்கோ!!! என்கிறார் மராட்டிய புத்தக ஆசிரியர் கணேஷ் சாவர்க்கர்..... ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்ச்சை புத்தகம் 70 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பு…


ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில் எழுதப்பட்ட புத்தகம், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இந்துத்துவா அமைப்பான இந்து மகா சங்கம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆகியவற்றின் முன்னோடி என்று கூறப்படும்  வி.டி.சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதுகுறித்து வீர சாவர்க்கர் நினைவு அறக்கட்டளையின் தலைவர் ரஞ்சித் சாவர்க்கர், மும்பையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, அத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தகவல்களை, அவர் கூறினார். […] http://thetimestamil.com/

Thursday, February 18, 2016

யோகம் அடித்தது-"அடிக்கிறதுமணிகள்" ரிங்கிங் பெல்லஸ்- யோகம் அடித்தது 'சுதந்திர 251' ... ஒரு கைத்தொலைபேசி முன்பதிவு செய்தாகிவிட்டது ... எப்போது கையில் தவழும்?

யோகம்  அடித்தது- அடிக்கிறதுமணிகள்" ரிங்கிங்  பெல்லஸ்- யோகம் அடித்தது 'சுதந்திர 251' ... ஒரு கைத்தொலைபேசி  முன்பதிவு செய்தாகிவிட்டது ... எப்போது கையில் தவழும்? http://freedom251.com/cart

Wednesday, February 17, 2016

251 ரூபாய் மலிவு விலை ஸ்மார்ட்போன்-முடங்கியது இணையதளம், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்...

251 ரூபாய் மலிவு விலை ஸ்மார்ட்போன் வாங்க ஆர்வம் : முடங்கியது இணையதளம், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்...
உங்களின் சம்பளத்தில் PF/EPF என்னும் மாதாந்திர பணியாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம்,  உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊதியத்தை குறைப்பதாக தோன்றலாம்,........ ஆனால் உங்களுக்கு தெரியாமலே  நீங்கள் கோடீஸ்வரர் ஆகப்போகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா???????? விவரம்:-  படத்தைப் பார்த்து, 3-வளம் வந்து, தோப்புக்கரணம் போட்டு, கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.... நட்புடன் ரேடியோ-கோகி.  

உலகளவில் சர்க்கரை தயாரிப்பு விலையை நிர்ணயிக்கும் முக்கிய நாடுகளாக...

தற்போதைய சூழலில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு முக்கிய நாடுகள் 2016 மற்றும் 2017 ஆண்டுக்கான, உலகளவில் சர்க்கரை தயாரிப்பு விலையை நிர்ணயிக்கும் முக்கிய நாடுகளாக விளங்கும். என்று உலக சர்க்கரை உற்பத்தியில் முக்கியப் பங்குவகிக்கும் நாடான பிரேசில் கருத்து தெரிவித்துள்ளது.  மேலும் முழு விவரங்களுக்கு  எனது ஆராய்ச்சி புத்தகமான "CLIP-CANE LOGISTIC IMPROVEMENT PROGRAM in Indian Sugar Industries"by Gopal Krishnan -Radio Maconi ......https://www.researchgate.net/publication/276253304_CLIP-CANE_LOGISTIC_IMPROVEMENT_PROGRAM_in_Indian_Sugar_Industries

வெறும் ருபாய் 251/- விலையில் அதி நவீன கைத் தொலைப்பேசி 4-ஜி ஸ்மார்ட்போன் "இந்தியாவின்-அடிக்கிறது மணிகள்" நிறுவனம் வழங்க உள்ளது.

வெறும் ருபாய் 251/- விலையில் அதி நவீன கைத் தொலைப்பேசி 4-ஜி ஸ்மார்ட்போன்"இந்தியாவின்-அடிக்கிறதுமணிகள்"Ringing Bells  நிறுவனம் வழங்க உள்ளது. 

நாட்டில் வளர்ந்து வரும் நான்காம் தலைமுறைத் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அதி நவீன கைத்  தொலைப்பேசிக்கான சந்தையில் மிகப்பெரிய புரட்சியையும்,  மற்ற தயாரிப்புகளுக்கு இடையூறு ஏற்ப்படுத்தும் வகையில் ஒரு புதிய அதிநவீன கைத்தொலைப்பேசியை நாட்டின் உள்நாட்டு கைபேசி தயாரிப்பாளரான, "இந்தியாவின்-அடிக்கிறது மணிகள்"   (Ringing Bells) என்கிற நிறுவனம்  உலகிலேயே மிக மலிவு ஸ்மார்ட்போன் விலையில் வெறும் ரூ 251/- விலையில் வழங்க முன்வந்துள்ளது. 

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு மனோகர் பாரிக்கர், திரு.முரளி மனோகர் ஜோஷி அவர்கள் தலைமையில் ஒரு நிகழ்வில் ஸ்மார்ட்போன் 'சுதந்திர 251' தொடங்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஸ்மார்ட்போன் 'சுதந்திர 251' என்கிற நான்காம் தலைமுறையைச் சேர்ந்த 4ஜி  தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பாட்ட  4 அங்குல திரைக் காட்சி கொண்ட 1.3GHz Quad-core செயலி, 1 ஜிபி ரேம் மற்றும் 8GB உள்ளக சேமிப்பு (32 ஜிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளமுடியும்), 3.2-மெகாபிக்சல் என்கிற உயர்தர பெரிய  பிம்பக் குவியம் கொண்ட  பின்புற புகைப்படக் கருவி/கேமரா, மற்றும் 0.3 மெகாபிக்சல் சிறு பிம்பக் குவியம் கொண்ட முன்புறக் புகைப்படக் கருவி/ கேமரா, மற்றும் ஒரு 1450 mAh திறன் கொண்ட மின் சேமிப்பு கலன்/பேட்டரி ஆகியவைகளை கொண்ட உயர்தர  தொலைபேசியாக  வெளிவர இருக்கிறது என்று கூறியுள்ளார்.
  .
இந்த "சுதந்திர 251" என்கிற அதி நாவீன தொலைப்பெசியைப் பெற, நிறுவனத்தின் "http://www.ringingbells.co.in/" என்கிற வலைப்பதிவில் முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே தொலைப்பெசியைப் கொள்முதல் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது, இதற்க்கான முன்பதிவு செய்ய,  வருகிற  பிப்ரவரி 18 திகதி காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிவரை, தொடர்ந்து  பிப்ரவரி 21 ஆம் திகதியன்று முடியும் வகையில் நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் தேவையான  முன்னேர்ப்படுகள்  செய்துள்ளதாக இந்தக் கைத்தொலைப்பேசி தயாரிப்பு நிறுவனம் "அடிக்கிறது மணிகள்" தெரிவித்துள்ளது.  அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த நிறுவனம் ஜூன் 30- 2016 முன்பாக வினியோகம் செய்து முடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்றும் இது இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்திய ஒரே நபர் இவர் மட்டுமே என்று பறைசாற்றும் வகையில் நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கும் திட்டம் என்று நிகழ்ச்சியில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.    

எது எப்படியோ நமக்கு விலைமலிவான கைத்தொலைப்பேசி கிடைக்கிறது. இனி நம் குழந்தைகள் விலை அதிகமான கைத் தொலைப்பேசியை உடைத்துவிட்டார்களே என 'பகீர்' என்று அடித்துக்கொள்ளும் மனசுக்கு விடுதலை கிடைத்ததை எண்ணி மகிழ்வோம்.  

முக்கியக் குறிப்பு:- இந்த திட்டம் இன்றைய தேதியில் இன்னும் பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில் உள்ளது ... அதாவது முன்பதிவில் இடம் கிடைத்து, தரமான தொலைப்பேசி நமது கையில் தவழும்வரை... சாதனை என உணர்ச்சிவசப்படாமல்..... பொறுமையாக இருக்கவேண்டும். 

உங்களின் மேலான விமர்சனங்களை மேற்கண்ட தொலைப்பேசியை பெறுவதற்குமுன்.... பெற்றபின் என்கிற தலைப்பில் தொடருங்கள் ...இப்படிக்கு நட்புடன் ரேடியோ-கோகி, புதுதில்லியிலிருந்து. 

Sunday, January 17, 2016

அதிர்ச்சி :-(சிம்லா) இந்தியாவில் எரிமலையா? வேடிக்கப்போகுதா?

அதிர்ச்சி :- (சிம்லா) இந்தியாவில் எரிமலையா? வேடிக்கப்போகுதா?
(குறிப்பு:- 28-04-2013 கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டெக்டானிக் ஆய்வியல் நிபுணர் ஜேம்ஸ் ஜாக்சன் கூறும்போது, “நேபாள பூகம்பத்துக்குப் பிறகான பூமியின் ஊடாக சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறை 3 மீட்டர்கள் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வு” என்று கூறினார். இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு, ஐரோப்பா, ஆசியாவை தாங்கும் கண்டத்தட்டை நோக்கி ஆண்டுக்கு 2 செமீ நகர்கிறது. தற்போது பூகம்பம் ஏற்பட்ட ஃபால்ட் இந்த இரண்டு கண்டத்தட்டுகளுக்கு இடையே உள்ளது.) 

சென்ற பத்து மாதமாக இந்தியாவில் யாருக்கும் தெரியாமல் உலக வெப்பமயமாதலின் இயற்க்கை தனது அறிகுறிகளை வெளிக்காட்டத் தொடங்கிவிட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா போன்ற இந்தியாவின் வட மாநிலங்களில் இதுவரை கிட்டத்தட்ட 1500 மனிதர்களுக்குமேல் (விலங்குகள் இன்னும் கணக்கிடப்படவில்லை) மஞ்சள் காமாலை நோய் ஏற்ப்பட்டு கடுமையான சிகிச்சைக்காக ஹிமாச்சல் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மருத்துவமனையில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். விவரம் அறிந்த புதுதில்லியின் அனைத்திந்திய மருத்துவக்கழகம் விழித்துக்கொண்டு  ஆராய்ந்துவருகிறது.  இன்னமும் உறுதிபடுத்தப்படாத தகவலின்படி மேற்கண்ட இரண்டு வட மாநிலங்களின் நிலத்தடி நீரில் அடர் கந்தகம் கலந்த நீராக வெளிவருவது கண்டறியப் பட்டுள்ளதாக தெரிகிறது. http://www.tribuneindia.com/news/himachal/more-than-500-jaundice-cases-in-shimla/180093.html


பின்குறிப்பு:- ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா பகுதியில்தான் 15-01-2016 நிலவரப்படி 1000-க்கும் அதிகமானவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய்  தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகவே அந்தப்பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் உணவகங்களில் நீர் அருந்தவோ உணவு உன்னாவோ உகந்ததல்ல என தெரிகிறது, உங்களது உறவினர்கள் யாராவது ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்தால் நிலத்தடி நீரை பயன்படுத்தவேண்டாம் என எச்சரிக்கை செய்வது சிறந்தது. தற்போது நான் பணியாற்றிக்கொண்டிருக்கும் உத்திரா கண்ட மாநிலத்தின் நிலத்தடி நீரும் சுவை மாறியிருப்பது என்னால் உணரமுடிகிறது. கங்கை நதிப்படுகைக்கு அருகில் இருப்பதால் நீரின் நிறம் தெளிவாக இருந்தும் நீரின் சுவை சென்ற ஆண்டைப்போல் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 

1992-ம் ஆண்டு முதல் நில  நடுக்கம் சார்ந்த பல புள்ளிவிவரங்களை சேகரித்து ஆராய்ந்து வருகிறேன்.    நான் ஏற்க்கனெவே எனது மே-2015 மாத பதிவில் குறிப்பிட்டதுபோல இந்தியாவின் வடமாநில எல்லைப்பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் நிகழ வாய்ப்புக்கள் உள்ளது என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் நிருபிப்பதைப்போல் இருப்பதால் நமது இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு பூமி அடுக்குகளுக்கு கீழ் (பூமித்தட்டின் கீழ்) மிக உயர்ந்த வெப்பம் நிறைந்த எரிக்குழம்பு ஒன்று உருவாகியுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்தியாவின் வடமாநில எல்லைப்பகுதியில் பல இடங்களில் நிலத்தடிநீர் கெட்டுப்போனது எரிகுழம்புகளின் வீரியம் கலந்திருக்குமோ என்று தற்ப்போது ஆராசிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இந்த ஆராச்சி அதை உருதிபடுத்துமேயானால், வட இந்தியாவில் ஒரு பெரிய எரிமலை உருவாகுமா? என்பது தெள்ளத் தெளிவாகிவிடும். 

வழக்கமாக பூமிக்கடியில் உள்ள ‘டெக்டானிக் பிளேட்ஸ்’ என்றழைக்கப்படும் கண்டத் தட்டு கள் நகர்வதாலும், ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதாலும் நிலநடுக் கம் ஏற்படுகிறது.  இந்தியா - யுரேசியா கண்டத் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வ தற்கு காரணமாகும் ஒரு முக்கிய ‘ஃபால்ட்’ நேபாளத்தில் இருக்கிறது. இந்த ஃபால்ட்டில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருப்ப தாக கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு, ‘சென்டர் பார் மேத்தமெட்டிக்கல் மாடலிங் அண்ட் கம்ப்யூட்டர் சிமுலேஷன்’ என்ற ஆராய்ச்சி மையத்தின், நிலநடுக்கவியல் ஆய்வாளர் வினோத் குமார் கவுர் என்பவர் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘‘இந்த ஃபால்ட்டில் அதிகமான ஆற்றல் சேர்ந்துள்ளதற்கான ஆதாரங்களை கணக்கீடுகள் காட்டுகின்றன. 8 புள்ளி அளவுக்கு ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் பதிவாவதற்கான வாய்ப்பு இந்த ஃபால்ட்டில் உள்ளது. சென்ற நேபாள பூகம்பத்திற்குப் பிறகு பல இயற்க்கை மாற்றங்கள் இந்தியாவில் ஏற்ப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. நேபாள பூகம்பத்திற்குப் பிறகு இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு கிழக்கு நோக்கி இந்தியாவின் தென் பகுதிக்கு கீழ் பக்கமாக 6 மீட்டார் அளவு நகர்ந்திருக்கிறது என்ற புவியியல் ஆராய்ச்சியாளர்களின் விவரத்தை  ஏற்க்கனெவே எனது முந்தய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் அதன் விளைவாகத்தான் தென்னிந்தியாவின் நிலப்பரப்பு கிழக்கு நோக்கி நகர்ந்திருக்கலாம் அதனால் ஏற்ப்பட்ட காற்றுமண்டலத்தின் அழுத்தம் காரணமாக கடல்நீர் மேகங்களால் உறுஞ்சப்பட்டு தென் மாநிலங்களில் மழையாக கொட்டித்தீர்த்தது என தீர்மானிக்கலாம். அதுமட்டுமல்ல தற்போது இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு (இந்திய பூமித் தட்டானது) ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேசிய கடல் எல்லையில் கண்டத்தட்டு விளிம்பு உள்ளதால், கடலின் வெப்பம் அதிகமாகும்போது ஆஸ்திரேலியாவின் சுண்ணாம்புப்  பாரை நிறைந்த கடல் எல்லை நிலபரப்பு வேப்பத்தின்காரனமாக சுண்ணாம்பு பாறை இருகும்போது  இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு இளகி உடையும் அபாயம் உள்ளது அப்படி உடையும்போது கடலில் இந்திய நிலப்பரப்பின் கண்டத்தட்டானது அமிழும்போது மிகப்பெரிய சுனாமி அலைகள் உருவாகலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலியாவின் கடல் ஆராய்ச்சியாளர் ஒருவர், அப்படி ஒரு வாப்பு இருப்பதாக ஒப்புக்கொள்கிறார். ஆழிப் பேரலையான சுனாமியானது கடல் பகுதி ஆழமாக இருக்கும் சிங்கப்பூர் மலேசியா போன்ற இடங்களில் அதிக ஆபத்தை ஏற்ப்படுத்தாது. அதிகம் ஆழமில்லா கடற்ப பரப்பைக் கொண்ட இந்தியாவின் தென் மாநிலங்களுக்குத்தான் அதிக அபாயம் உள்ளது. 

@ 11-01-2016-இந்தோனேசியா 6.8 ரிக்டர் அலகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:-நிலநடுக்கத்தால் தாலத் தீவில் கட்டிடங்கள் குலுங்கி பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர். வீடுகளைவிட்டு வெளியேறிய அவர்கள் அதிகாலை வரை வீதிகளிலேயே தஞ்சம் அடைந்திருந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படவாய்ப்பு இல்லை என பசுபிக் சுனாமி ஆய்வு மையம் கூறியுள்ளது.

04-01-2016  A powerful earthquake shook parts of India, Bangladesh, Bhutan and Myanmar at 4:35 a.m. local time Monday morning, leaving at least four dead and 100 more injured.People rushed out of their homes before dawn on Monday morning as the tremor knocked over furniture and caused books to fall from their shelves, according to the Associated Press.

@  25-12-2015 ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 6.2 ஆகி பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. ஆப்கனிஸ்தானில், உள்ளூர் நேரப்படி, 25-12-2015 இரவு 11.44க்கு தலைநகர் காபூலுக்கு வடகிழக்கே 280 கிலோ மீட்டர் தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

@ வங்க தேசத்தில் இன்று காலை 11-12-2015 லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் வடமாநிலங்களிங்களான அசாம், மேகாலாயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்த், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஆகிய மாநிலங்களிலும் இது உணரப்பட்டது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. அதிகாலை 3.45 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 12 விநாடி வரை இந்த நிலநடுக்கம் இருந்ததாக தெரிகிறது.

@ 13-06-2015 அந்தமான் பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அலகில் 5.2 பதிவான இந்த நிலநடுக்கம், 38 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

@ 13-05-2015 இன்று  ஜப்பான் கடற்பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு கடற்பகுதியில் 6.8 என்ற ரிக்டர் அளவில் இன்று காலை 6 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியாகி கடற்பகுதியில் ஹோன்சு தீவு அருகே 46 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த மோசமான நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகள் தாக்கியதில் ஜப்பானில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.  இருப்பினும் இன்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

@ நேபாளம், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நேற்று (12-05-2015) நிலநடுக்கம் ஏற்பட்டது. 12-05-2015 12.30am இன்று நேபாளம் மற்றும் சீனா,  ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பாக, தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களிலும் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது. இன்றைய இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

@ 12-05-2015 12.30am ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பாக, தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களிலும் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நில அதிர்வு காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நில அதிர்வை உணர்ந்த மக்கள் கட்டடங்களில் இருந்து வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர். தில்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தில்லி மட்டும் அல்லாமல் பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

@ 01-05-2015...பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.1 ஆக பதிவு... பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்தாலும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

நேற்று (வியாழக்கிழமையும்) இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.7 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் குறித்து ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் டேனியல் ஜக்ஸா கூறும்போது, "இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்புள்ளியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில்தான் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இந்தப் பகுதிகளில் மக்கள் அதிகளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

@ 01-05-2015 அந்தமானில் நிலநடுக்கம்: அந்தமான் தீவுகளிலும் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.45 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டரில் 5.4 ஆக இருந்தது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும், உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ பெருமளவில் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

@ 28-04-2013 நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தின் எதிரொலியாக தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பெரும்பாறைகள் தெற்கு நோக்கி பல மீட்டர்கள் இடம்பெயர்ந்துள்ளன. ஆனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாறுதல் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு எனது முந்தய மே -2015 பதிப்பை வாசிக்கவும்,

"துணிந்து நில் ஹ ஹ .. தொடர்ந்து செல் ...ஹ ஹ ஹ ... தோல்வி கிடையாது  தம்பி ... உள்ளதை சொல், நல்லதை செய்... தெய்வம் இருப்பதை நம்பி ......"

நன்றிகளுடன்  கோகி-ரேடியோ மார்கோனி .... தற்ப்போது உத்திராகண்ட் மாநில திட்டப் பணிமனையிலிருந்து .....



Thursday, January 14, 2016

உங்களது வங்கிக்கணக்கில் ருபாய் 25,000/- செலுத்தப்பட்டது....

"Your Bank Accounts ###### is Credited Rs. 25,000/- We assure you every moth the same amount will be credited in to your account. If you want to see this SMS every month give a missed call on this phone number xxxxxxx889."  உங்களது வங்கிக்கணக்கில் ருபாய் 25,000/- செலுத்தப்பட்டது என மேற்கூறியவாறு உங்கள் தொலைபேசியில் ஓர் குறுஞ்செய்தி வந்தால் உடனே மகிழ்ந்துவிடாதீர்கள்...!!!!!!.

ஒரு கட்டிடக் கட்டுமானத்துறையின் பிரபல நிறுவனம் ஒன்று மேற்கண்ட தொலைப்பேசி குறுஞ்செய்தியை அனுப்புகிறது. ஒருமுறை நீங்கள் உங்களின் தொலைபேசியில் அவர்களோடு  தொடர்பு ஏற்ப்படுத்திக்கொண்டாலே போதும், தொடர்ந்து பல அழைப்புகளை நீங்க சந்திக்கவேண்டியிருக்கும். அனைத்து அழைப்புக்களும் உங்களது நிலையை முழுமையாக தெரிந்துகொண்டு  எப்படியாவது அவர்கள் நிறுவனத்தில் உங்களது பணத்தை (கடன்வாங்கியாவது)  முதலீடு செய்யுமாறு செய்வதுதான் அவர்களின் நோக்கம்.  விளைவு பரிதாபத்திற்குரியவர் பட்டியலில் உங்களது பெயரும் சேர்ந்துவிடும். அதோடு  வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி மாலத துயரத்திற்கும் நீங்கள் தள்ளப்படுவீர்கள்.   

மக்களை ஏமாற்றுவதற்கு இப்படி பல வியாபார ராஜ தந்திரிகள் நாட்டில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.  ஒரு நான்கு முறை உங்களோடு தொலைப்பேசி தொடர்பு கிடைத்துவிட்டாலே போதும் உங்களது குடும்ப பொருளாதார நிலையை முழுவதுமாக தெரிந்துகொண்டு உங்களுக்கு மிகக் கச்சிதமான வலை ஒன்று பின்னப்பட்டு அதில் உங்களை மாட்டி பாழும் கிணற்றில் தள்ளிவிடுவார்கள். 

அப்படித்தான் ஒரு பிரபல விடுமுறை பயண மன்றம் (கிளப்) ஒன்று எனது நண்பனுக்கு குலுக்கல் முறையில் ருபாய் 25,000/- பரிசு விழுந்துள்ளது என்றும் தாங்களின் மணைவியுடன் வந்து பெற்றுச் செல்லுமாறு கூற, அவரும் அந்த நிறுவனம் கூறிய விலாசத்திற்கு சென்றதும், பரிசினைப் பெற ருபாய் 5000/- செலுத்தவேண்டும் என்று கூறியதும்  அவர் பணத்தை செலுத்தி பரிசைக்கேட்டபோது அவருக்கு கிடைத்தது ருபாய் 25000/- மதிப்பிலான விடுமுறை பயண கட்டணத்தில் தள்ளுபடிக் கூப்பன்/சீட்டு. பிறகுதான் அவருக்குப் புரிந்தது அந்த நிறுவனத்தின் வலையில் அவர் சிக்கிக்கொண்டார் என்பது. அதைவிட பெரிய கூத்தாக மாதா மாதம் செலுத்திய தொகைக்கு அந்த நிறுவனம் ஏற்பாடு செய்துதந்த விடுமுறைப் பயண அனுபவத்தை அவர் கூறியபோது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த துயர அனுபவத்தால அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்ப்பட்டது என்று கூறியபோது மேலும் மனதிற்கு வருத்தமாக இருந்தது.

இந்தக் கலியுகத்தில் எவரும் அவ்வளவு எளிதில் பணத்தை உங்களுக்கு வாரிக் குடுக்க முன்வரமாட்டார்கள். நீங்கள் தருபவரோ அல்லது பெறுபவரோ, 'ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு' என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆகவே மேற்க்கண்டவாறு உங்களுக்கு மினஞ்சல் வந்தாலோ அல்லது தொலைப்பேசி குறுஞ்செய்தி வந்தாலோ, உடனே உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக யோசித்து செயல்படுங்கள். அப்படி ஏமாற்றுபவர்களின் இடங்களுக்கு செல்லும்போது உங்களின் சட்டைப் பையை காலியாக வைத்திருக்க மறந்துவிடார்தீர்கள்...... அதாவது "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்" உங்களது சட்டைப்பையில் பணம் இருந்தால்தானே நீங்கள் அந்த பணத்தை இழந்து ஏமாற்றமடைய..... 

விழித்திருங்கள் வாழ்க்கயில் செழித்திருங்கள்.......   

"பாடல்:- ஏமாற்றாதே ஏமாற்றாதே!!!!... ஏமாறாதே ஏமாறாதே...!!!!!"

நட்புடன்.......  கோகி-ரேடியோ மார்கோனி. 
          

Wednesday, December 30, 2015

ரத்தம் சிந்தா (புத்தாண்டு) புத்தம் புதிதாய் மலரட்டும்....

"ரத்தம் சிந்தா (புத்தாண்டு) புத்தம் புதிதாய் மலரட்டும்"
விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(ஹே அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே...வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

(ஹே அச்சம்)

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(இனி அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்

FREE JOBS EARN FROM HOME