FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, October 17, 2015

தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள்:-

தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள்:- 

பல்துறைப் பயிற்சித்திறம் வாய்ந்த தமிழர்களுக்கு இந்தியாவின் வடநாட்டிலும், உலகெங்கிலும் ஏராளமான தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன... தென் இந்தியாவில் வசிக்கும் தமிழருக்கு "ஹிந்தி" மொழி மற்றும் வடநாட்டு கலாசாரம், காலநிலை, உணவு பழக்க வழக்கங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த… உரிய படிப்பைப் படித்த பலருக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் திணறுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே....

இந்திய வடமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்களின் குடும்ப தலைமுறையினருக்கு, தமிழ் தாய்மொழியாக, எந்த நேரமும் ஒருவருக்கொருவர் தமிழில் பேசிக்கொண்டிருந்தாலும், தமிழில் எழுத படிக்க என்று வரும்போது  "தெரியாது" என்பது ஏறக்குறைய 75% சதவீதத்திற்கு மேல் இருப்பது, தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள் என்று சொன்னால் அது மிகையாகாது....

தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கை, மலேசியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் வாழும் ஏராளமான தமிழர்களின் தற்போதைய தமிழ் தலைமுறையினரின் நிலைமைகூட இப்படித்தான் இருக்கிறது. 

மேலை நாடுகளில் பலர் அங்கு வாழும் தமிழர்களின் மூன்றாம் தலைமுறையினருக்கு தமிழ் கற்ப்பிக்கும் செயலை செய்து போருலீட்டுபவர்களை தற்ப்போது மிக அதிக அளவில் காணமுடிகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் தமிழை கற்றுக்கொடுக்கும் தமிழாசிரியர்கள் தமிழை உயிர் எழுத்துக்களிலிருந்து  ஆரம்பிக்காமல், புதிய தமிழ் கற்கும் முறை என்கிற "ட" எழுத்தை முதலிலும் அதைத் தொடர்ந்து "ப" பிறகு "ய" பிறகு "ம" என எழுத கற்றுத்தந்து பயிற்சிதருவது வித்தியாசமான பயிற்சி முறை. இப்படிப்படிக்கும் இவர்களுக்கு தமிழ் இலக்கணம் எப்படி புரியும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. பழைய தமிழ் கல்வி முறையில், உயிர் எழுத்துக்களிலிருந்து ஆரம்பிக்கும் கல்வி வழியில் இலக்கண சுத்தமாக தமிழ் கற்றுத் தேர்வது கடினம் என்கிற நிலையில் இந்த புதிய தமிழ் கற்கும் முறையில் எங்கே நமது தமிழ் மொழியின் தொன்மை சிறிது சிறிதாக குறைந்துவருகிறதோ? என்கிற ஐயம் ஏற்ப்படுகிறது. 

புது தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற எல்லைகளில் வாழும் தமிழர்களின் இனைய வலைப்பக்கங்கள் 75% ஆங்கிலத்திலும் 25% தமிழ் மொழியிலும் இருக்கிறது, பலர் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களும் எங்கே தமிழில் எழுதி தவறாகப் போகுமோ? என்று அஞ்சி ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்... பலர் தமிழை கணினியிலும் தமது கைத் தொலைப்பேசியிலும் ஆங்கில எழுத்துக்களில் எழுதி "தமிளிங்கிலீஸ்" என்று தமிழை கொச்சைப் படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு தமிழ் நிகழ்ச்சியின் அழைப்பிதழ், எதோ ஒரு சிலரின் மொழியின் மீதிருக்கும் பற்றுதலால் தமிழிலும், மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும் அச்சடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. 

வாய்ப்புகள் ஒருபக்கம் இருந்தும், உரிய முறையில் பயன்படுத்தமுடியாத வகையிலும், ஒருபுறம் வாய்ப்புகள் இல்லையே என்று ஏங்கும் வகையிலும் தவிக்கும் தமிழர்களுக்கு, நான் சொல்ல நினைப்பது...........இவை அனைத்தும் "தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள்" என்று சொன்னால் அது மிகையாகாது ..........

அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி... புதுதில்லியிலிருந்து........... 
        

Thursday, October 15, 2015

செய்தி காட்டுத் தீ போல சிரிப்பா சிரிக்குது....சிரிப்பு சிரிப்பு.....

நாடு முழுவதும் "மாட்டிறைச்சி" செய்தி காட்டுத் தீ போல சிரிப்பா சிரிக்குது....சிரிப்பு சிரிப்பு.....

#என்னப்பா தயாரிப்பாளர் வீட்டின் முன் எல்லாரும் ஏன் இப்படி வரிசையா நிக்கிறாங்க?

தற்ப்போதைய நிலைமைக்கு தகுந்த "மாடுகள் பற்றிய கதையை" திரைப்படமா எடுக்க, கதை வேணும்னு  விளம்பரம் செய்திருந்ததால இத்தனைப்பேர் கதையோட நேரில் வந்திருக்காங்க!!!  (கோகி)



#1. மாட்டுச் சந்தைக்கு போய், மாடு வாங்கப்போறேன்னு சொன்னதால, ஊர் மக்களெல்லாம் என்னை துரத்திக்கிட்டு வராங்க,  ....காவல் துறை ஏட்டைய்யா.... என்னைக்.... காப்பாத்துங்க!!!!! (கோகி)

#2. தேர்தலுக்கு "மாட்டுச் சின்னம்" தரப்பட்டது எங்கள் புதிய கட்சிக்கு எதிராக செய்யப்பட்ட சூழ்ச்சி .....இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.... (கோகி) 

#3. என்னங்க உங்க அம்மா என்னைப் பற்றி அக்கம் பக்கம் இருப்பவர்களிடம், இவ எங்க வீட்டு "மாட்டுப் பொண்ணு" என்று சொல்லுவது எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை..!!! (கோகி)

#4. நீதிபதி, குற்றம் சாற்றப்பட்டவரிடம்.. நீ ஏன் மாட்டிறைச்சிக்காக  மாடுகளை கொன்றாய் ?  "பசுவதை தடை" சட்டத்தின்படி நீ செய்தது குற்றம் என்பது உனக்குத் தெரியாதா? 

குற்றவாளி கூண்டில் நிற்ப்பவர்:- ஐயா, "பசுவதை தடை" பசு மாட்டுக்குத் தானுங்களே.... நான் இறந்துபோன எருமை மாட்டைத்தான் இறைச்சிக்காக வெட்டினேன்.!!!! (கோகி)

#5. ஆசிரியர்:- வீட்டுப்பாடம் செய்யாம இப்படி எருமை மாடு மாதிரி நிக்கிரையே உனக்கு வெட்கமா இல்லை.

மாணவன்:-.... சார் ரொம்ப மிரட்டாதீங்க,.. மாட்டுக்கறி பற்றிய பாடம் சொல்லித் தரீங்கன்னு போலிசுக்கு போட்டுக்குடுத்துடுவோம்.!!!!!....(கோகி)

#6. அரசு அலுவலக அதிகாரி, அவரது உயர் அதிகாரியிடம்... "சார் அந்த "எ- 5 கிளார்க்-மருது" எந்த வேலையும் செய்யாம எல்லாரையும் மிரட்டிக்கொண்டு காலம் தள்ளுறாரு, இவர வேற எங்கயாவது மாற்றல் செய்துடுங்க"...

அரசு உயர் அதிகாரி:-  இவனையெல்லாம் மாட்டு ஆஸ்பத்திரிக்கு மாத்தினால்தான் சரிபட்டு வருவான். அங்கே பொது மக்கள் இவனை கவனித்துக்(கொள்வார்கள்).....(கோகி)    

#7. டீ கடையில் ஒருவர்:- தொலைக்காட்சியில் செய்தி பார்க்கையில், ஏம்ப்பா மாட்டுக்கறி  கிலோ ஒரு  60/70 ரூபா இருக்குமா?,...... அந்த குடும்பத்துக்கு அரசு 5 இலட்சம் தந்தாங்கன்னா ... பிரதமர் காப்பீட்டுக்கு கூட 2 லட்சம் தானுங்களே!!.... சும்மா வேலைவெட்டி இல்லாதவங்க  இத பத்தி யோசிக்க மாட்டாங்களா????...!!!!!...... (கோகி)....    

#8. இனி மாட்டுப் பிறவி எடுத்தா இந்தியாவில்தான் பிறக்கணும்.....(கோகி) 

#9. மாட்டுக்கு ஏதாவது ஆகிப்போச்சுன்னா "பசு வதை" சட்டம் பாயும்னு இனி யாரும் நம்மள பயமுறுத்த முடியாது!!!!  (கோகி) 

#10.நான் அப்பவே சொன்னேன் மாட்டு லோன் எல்லாம் வேண்டாம் என்று......(கோகி) 

#11. மாட்டுக்கும், கொழிக்கும் பயப்படுற அளவுக்கு ஆட்டுக்கு பயப்படுற காலம் எப்போ வரும்? (கோகி).

#12. அந்தணர்:- தானமா?  அதுவும் கோதானமா??? வேண்டாவே வேண்டாம்... அந்த மாட்டுக்கு ஏதாவது ஆனா,  ஊர் மக்கள் எல்லாம் ஒண்ணா  சேர்ந்து  என்ன அடிச்சு போட்டுடுவா!!!!! ....(கோகி)

Thursday, October 8, 2015

"நிதான மந்திரம்" நூறு ஆண்டு ஆரோக்கியமாக வாழ தினம் சொல்லவேண்டிய "மந்திரம்"

"நிதான மந்திரம்" நூறு ஆண்டு ஆரோக்கியமாக வாழ தினம் சொல்லவேண்டிய  "மந்திரம்" 


"நிதானம்", (நிதானமே பிரதானம்)  என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

இந்த மந்திரம் உங்களுக்காக, நீங்கள் நினைவில் வைத்து சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல்லாகும். 

"நிதானம் என்பது வேகத்தோடு சம்மந்தப்பட்ட சொல்லாக இருந்தாலும், நான் இங்கு குறிப்பிட வந்தது உடல் நலம், அது சிறப்பாக இருந்தால் எதையும் நம்மால் சாதிக்க முடியும். 

அதாவது ஒவ்வொரு முறையும் நாம் நமது உணவை உட்கொள்ளும்போது நமக்கு நாமே நினைவில் நிறுத்தி சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல் இது. 

இந்த அவசர யுகத்தில் அவசர அவசரமாக சரியாக மென்று தின்று விழுங்காத உணவுப்பழக்கத்தினால் செரிமானம் கேட்டு, உடல் நலத்தோடு மனநலமும் கெட்டுப்போவதால் ஏற்ப்படும் விளைவுகளுக்கு ஒரு அளவு என்பது இல்லை. அது எப்படிப்பட்ட இழப்புக்களை உருவாக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.  ஆகவே ஒவொரு முறையும் நாம் நமது உணவை சாப்பிடத் தொடங்கியது முதல் உணவை உண்டு முடிக்கும்வரை இந்த "நிதானம்"....(நிதானமாக உணவை நன்கு மென்று விழுங்கவேண்டும்)  என்கிற மந்திரத்தை நினைவில் நிறுத்தி செயல்படவேண்டிய கட்டாய நிலையில் நாம் இருக்கிறோம். 

* உணவை நன்கு கடித்து மென்று சிறிது சிறிதாக விழுங்கவேண்டும். 

*சாப்பிட்டு முடிக்கும்வரை, இடையில் அவசியம் தேவை ஏற்ப்படாத நிலையில்,  தண்ணீர் பருகுவதை தவிர்க்கவேண்டும். சாப்பிட்டு முடித்தபிறகு தண்ணீர் பருகவது செரிமானத்திற்கு சிறந்தது.  

*வாயை மூடி பிறகு உணவை மென்று விழுங்கவேண்டும், வாயை திறந்தபடி மெல்லுவதால், உணவோடு காற்றும் சேர்ந்து விழுங்கப்படுவதால் வயிற்றில் வாயுத் தொல்லைகள் ஏற்ப்பட்டு, செரிமானமும் அதோடு தூக்கமும் கெட்டுப்போகும்.  

*பேசிக்கொண்டே சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும், அப்படி செய்வதால் உணவின் சுவை தெரியாமல் நமது கவனம் திசை திருப்பப்படுவதால், உண்ணும் உணவை செரிக்கத் தேவையான உமிழ் நீர் சுரப்பி தனது வேலையை செய்யாமல் நாம் சாப்பிடும் உணவை கேட்டுப்போகச் செய்யும். ஆகவே நாம் உண்ணும் உணவே விஷமாக மாற வாய்ப்புகள் உள்ளது.

*சாப்பிடுபவரின் கவனம் சிதறாமல், உணவை சுவைத்து ரசித்து உண்ணும் வகையில் மன நிலை இருக்கும்படி பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். 

*உணவை சுவையாக சமைப்பதைவிட, மகிழ்ச்சியாக சாப்பிடும்படி பரிமாறுவது சிறந்தது.    

ஆகவே நிறுத்தி நிதானமாக மென்று விழுங்கவேண்டும் என்கிற இந்த "நிதான" மந்திரத்தின் தன்மையையும் அதன் சக்தியையும் நீங்களும் உணர்வீர்கள் என்றால், உங்களுக்கும் அது   மிகப்பெரிய பயனை பெற்றுத் தரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.  

விடாமல் முயலுங்கள், ....
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் ! நன்றி. 
அன்புடன்.... கோகி என்னும் கோபால கிருஷ்ணன் -ரேடியோ மார்கோனி. புது தில்லியிலிருந்து........... 

Wednesday, October 7, 2015

உழைத்த நாய்க்கு 99% சதவீதம் என்றால், முதலாளியின் பார்வையில் 66% சதவீதம் மட்டுமே???

உழைத்த நாய்க்கு 99% சதவீதம் என்றால், முதலாளியின் பார்வையில் 66% சதவீதம் மட்டுமே???


ஒரு நாள் கடைக்கு நாய் ஒன்று வந்தது. முதலில் கடைகாரர் அந்த நாயை விரட்டினார் பிறகு அதன் வாயில் ஒரு சீட்டை பார்த்தார் அதில் “நாயின் கழத்து பட்டையில் 100ரூபாய் உள்ளது அதை வைத்துக் கொண்டு 5 சோப்பும் 1 ஷாம்பூவையும் கொடுத்து உதவுங்கள்” என்றிருந்தது. கடைக்காரரும் சீட்டில் உள்ளதையும் மீதி சில்லரையையும் பையில் போட்டு கொடுத்தார். நாயும் கவ்விக் கொண்டு சென்றது. கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை... 


கடையை மூடிக்கொண்டு நாயின் பின்னலேயே சென்றார். நாய் ஒரு வீட்டின் முன் நின்றது காலால் கதவை தள்ளி பார்த்து, கதவு திறக்கவில்லை. பிறகு கதவை தன் தலையால் முட்டிவிட்டு காத்திருந்தது. சத்தம் கேட்டு நாயின் எஜமானன் வந்தான். நாயை முறைத்து பார்த்துவிட்டு அதை அடிக்க ஆரம்பித்தான். கடைக்காரருக்கு பயங்கர கோபம் , எஜமானனிடம் சென்று “இவ்வளவு அறிவார்ந்த நாயை போய் அடிக்கின்றீர்களே” என்று கேட்டார். அதற்கு அந்த எஜமானன் “இந்த அறிவுகெட்ட நாய் சாவியை மறந்து விட்டு சென்றிருக்கிறது, இந்த மாதம் மூன்றாவது முறையாக இதை செய்கிறது” என்றான்...



கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா! 



உங்களை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள் என்று கேட்டால், நீங்கள் 100% சதவீதம் என சொல்ல தயங்கி 99% சதவீதம் என்று கூறுவீர்களானால்... உங்களின் மதிப்பெண் "99" என்பது  உங்களுக்குத்தான் "99" என்று தெரியும், அதுவே உங்களின் எதிரில் இருப்பவர்களுக்கு "66" என்று தெரியும். ஆகவே இனி உங்களை நீங்கள் 66 என்று மதிப்பிட்டு, நூறு சதவீதத்தை எட்டுவதற்கு மேலும் நிறைய கற்றுக்கொள்ள நினைத்தால் அதுவே மற்றவர்களின் பார்வையில்  "99" என உங்களின்  மதிப்பை உயர்த்திக் காட்டும்.........அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.  

Tuesday, October 6, 2015

"டெங்கு" என கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருத்துவர்கள், ஒரு ஸ்பெஷல் ரிபோர்ட்:

"டெங்கு" என வீண் பயம் பீதி வேண்டாம்!!!! வைரஸ் காச்சலாகவும் இருக்கலாம்.:- பயத்தைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருத்துவமனைகள், ஒரு ஸ்பெஷல் ரிபோர்ட்:-

புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட மாநிலப் பகுதியில் அமைந்திருக்கும் பல (பிரபல) தனியார் மருத்துவமனையில், பொதுமக்களின் பயத்தையும் படபடப்பையும் பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருத்துவ வியாபாரக்கூடமாக  மாற்றப்பட்டுள்ளது. 

எனது மகனுக்கு ஜுரம் என்று கல்லூரியிலிருந்து தொலைபேசி வந்தபோது நானும் முதலில் இப்படி பயமும் பதற்றமும் அடைந்தேன், கல்லூரி பேரூந்திலிருந்து இறங்கிய எனது மகன் மிகவும் சோர்ந்து களைப்படைந்து காணப்பட்டான். உடனே எனது வீட்டின் அருகே இறுக்கும் அந்த பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்றோம். சிறப்பு மருத்துவர் ஒருவர் உடனே இரத்த பரிசோதனை செய்யும்படி  அந்த மருத்துவமனையில் அமைந்திருந்த இரத்த பரிசோதனைக் கூடத்திற்கு செல்லுமாறு ( FBC-Full blood count ) எப். பி. சி -என எழுதி அனுப்பினார். நிறைய கூட்டம் நிரம்பி வழிந்தது, வந்திருந்த அனைவருமே ஜுரத்திர்க்கான இரத்த பரிசோதனை செய்ய காத்திரூந்தனர். அந்த தனியார் மருத்துவமனையில் வந்த கூட்டம் அனைத்திற்குமான இரத்த பரிசோதனை முடிவுகள் மற்றும் அங்கு பரிசோதித்த அனைவரையும் அந்த தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க விழைந்ததை பார்த்தபிறகு எனக்கு சிறிது சந்தேகம் ஏற்ப்பாட்டது சரியாகவே இருந்தது. 

எனது மகனின் இரத்த பரிசோதனை முடிவை பார்த்த மருத்துவர் இரண்டு இடங்களில் வட்டமிட்டு மகனின் இரத்தத்தில் சிலவகையான இரத்த தட்டுக்கள் குறைவாக இருப்பது "டெங்கு" நோய்க்கான அறிகுறியாகவும் இறக்கலாம் ஆகவே உடனே அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்குமாறு கூறினார்.  நல்லவேளையாக நான் டெங்கு ஜுரத்திர்க்கான இரத்த பரிசோதனைக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பதாக கூறி அதற்க்குண்டான இரத்த மாதிரியை தந்துவிட்டு மகனை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன், அப்போது எனக்கு மிகவும் பழக்கமான ஒரு குடும்ப மருத்துவர் அந்த மருத்துவமனையில் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் விவரம் கூறினேன் உடனே அவர் மருந்து குறிப்பு சீட்டில் ஒவ் ஒரு நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை "எலக்ட்ரால்"ORS-என்னும் உடனடி சக்தியைத் தரக்கூடிய பல்வேறு வைடமீன்கள் அடங்கிய பானத்தைக் (தற்போது இது ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பானமாக, மாஜா-மாம்பழ ஜூஸ் போல டப்பியில் குழலை சொருகி உடனே குடிக்கலாம்)  குடிக்கவேண்டும் என எழுதித்தந்தார்.  

அன்று இரவு ஜுரத்திற்கு பாராசிட்டமைல் மாத்திரையும் அதோடு அந்த எலக்ட்ரால்/ORS-பானத்தையும் பருகியதில் மறுநாள், ஜுரம் இல்லாமல் நேற்றைப்போல சோர்வாக இல்லாமல், புத்துணர்வாகவும் தெம்பாகவும் இருந்தான். அன்று டெங்கு ஜுரத்திர்க்காக இரத்த பரிசோதனை செய்த முடிவை பார்த்தபோது அவனுக்கு டெங்கு ஜுரம் இல்லை என்பது தெரிந்தது,  முடிவைப்பார்த்த மருத்துவர் டெங்கு ஜுரம் இல்லை ஆகவே டைப்பாய்டு ஜுரமாக இருக்குமோ என்று இரத்த பரிசோதனை செய்யச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அதையும் செய்துவிட்டு அதன் முடிவிற்காக காத்திருந்தோம். 

மறுநாள்  டைப்பாய்டு ஜுரம் இல்லை என இரத்த பரிசோதனை முடிவு வந்தபோது. அந்த சிறப்பு மருத்துவர் கூறினார் இது எதோ வைரல் ஜுரமாக இருக்கும் என்பதால் அதற்க்குண்டான சோதனைகளை செய்யச்சொன்னார். இதைப்பார்த்த எனது மகன் அங்கேயே சண்டைக்கு வந்துவிட்டான் எனக்குத்தான் இப்போது ஜுரம் இல்லையே வைரல் ஜுரம் இருக்கலாம் என்றால் அதற்குண்டான மருந்து மாத்திரிகளை எழுதித் தரலாமே என்றான். மருத்துவர் மேலும் கீழும் பார்த்துவிட்டு மருந்து மாத்திரைகளை எழுதித் தந்தார். 

அந்த தனியார் மருத்துவமனையில் இருந்த இரத்த  பரிசோதனை நிலையத்தின் மீது சந்தேகம் எழுந்ததால், வேறொரு பிரபல இரத்த பரிசோதனைக் கூடத்தில் என் மகனின் இரத்தம் பரிசோதித்தபோது, அந்த குறிப்பிட்ட இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை தேவையான அளவிலும் சென்ற பரிசோதனை முடிவைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது தெரியவந்தது. 

எனக்கு என்ன சந்தேகமென்றால். இரத்த பரிசோதனையைக் கூடவா மருத்துவமனைக்கு சாதகமாக அமையுமாறு பரிசோதனை முடிவு என சான்றளிக்கப்படுவது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. விவரம் கேட்டபோது அந்த மருத்துவமனையில் இரத்த பரிசோதனைகள் செய்வது வேறு ஒரு பிரபல இரத்த பரிசோதனை செய்யும் குழுமம் என்பது தெரியவந்தது. இதில் கூடவா கொள்ளை லாபம் அடிக்க கூட்டு முயற்சியில் ஈடுபடுவார்கள்.  விவரம் தெரியாத பலர் தமது குழந்தைகளை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் மருத்துவம் என்கிற பெயரில் நிறைய பணம் செலவு  செய்கிறார்கள்.   மருத்துவம் எப்படியெல்லாம் வியாபரமாகிக்கொண்டு போகிறது என்று பார்க்கையில் மனம் பட படக்கிறது. 

இது  குறித்து நிறைய விவரங்கள் தெரியவந்தது நேரமின்மையால் பிறகு வேறு ஒரு பதிவில் தெரிவிக்கிறேன்... நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.



Wednesday, September 23, 2015

கொலுசுவின் புது முயற்சி.....

கொலுசுவின் புது முயற்சி 
========================
வரும் அக்டோபர் மாதம் முதல் "கொலுசு" இதழில் ஒரு புது முயற்சியாக, கவிதைகளை ஒலி வடிவில் தர இருக்கிறார்கள். ஆகவே, தங்களின் கவிதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து (.mp3) அனுப்பினால், ஆசிரியர் குழு தேர்ந்தெடுக்கும் ஒலி வடிவக் கவிதைகள் இதழில் இடம் பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். தங்கள் கவிதைகளை தங்களது குரலிலே தமிழ் உலகமே கேட்கும் ஓர் அரிய வாய்ப்பு .

ஒலிவடிவக் கவிதைகளைஅனுப்பவேண்டிய முகவரி  "kolusu.in@gmail.com"

இதை தங்கள் கவிதை நண்பர்களுக்கும் பகிருங்கள் ..நன்றி...கோகி

Sunday, September 20, 2015

.....மாப்பிள்ளைதான்:-"A DAY BEFORE MY LIFE START "

மாப்பிள்ளைதான்:-"A DAY BEFORE MY LIFE START" பழைய புகைப்படம்........ தேடி எடுத்ததா!?  இல்லை இல்லை, அதுவா நம்ம கண்ணுல பட்டுது....அப்புறம் என்ன?....நிறைய விஷயங்கள் ஞாபகம் வருது.......... ஆரம்பத்துல சிதம்பரம்(நடராஜர்) ஆட்சிதான் போகப் போக மதுரை(மீனாட்சி) ஆட்சிக்கு கொண்டு வந்துடறாங்கப்பா!!!!... திருமண வாழ்க்கையில் விட்டுக்குடுக்குற மனப்பான்மை முக்கியமா புருசனுக்கு இல்லாம போச்சின்னா,  சமூகம் பெண்களை திட்டுவது இருக்கட்டும், ஆண்களைக்கூட  "ஒரு பெண்ணை கட்டி குடும்பம் நடத்த துப்பிலையே உனக்குன்னு' மனைவி கோபித்துக்கொண்டு அவங்க அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டால'  நமக்குத்தான் டோஸ் ...அசிங்கமப்பா" ......அதனால, எல்லா ஆண்பிள்ளைகளும் இப்படித்தான் எதுக்கு வம்புன்னு அவங்க சொல்லறது சரிதான்னு தலைய ஆட்டிடுறாங்க.....அப்புறம் என்ன? மதுரை(மீனாட்சி) ஆட்சி ஏற்ப்படுகிறது....... இருந்தாலும் இந்த விஷயத்தை பெண்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.....ரொம்ப அடம் பிடிக்கிறாங்கப்பா!!!!.....

எங்கள் வீட்டில் நாங்கள் 6 குழந்தைகள் 2அக்கா பிறகு நான் அடுத்தது என் தம்பி, அதற்க்கு பிறகு 2 தங்கைகள்.... ஆகவே இரண்டு தங்கைகளுக்கு  திருமணம் முடியட்டும் பிறகு எனக்கு பார்க்கலாம் என்று அப்பா,அம்மா  சொல்லவில்லை... நானே முடியாது என்றேன்..... அதான் 2 தங்கைக்கும் கல்யாணம் ஆயிடுத்தே உனக்கு பொண்ணு பார்க்கலாமா? என்ற அம்மாவிடம் இன்னும் 2 வருடம் போகட்டும் தங்கைகளுக்கு தலை தீபாவளி, பொங்கல்... வளைகாப்பு சீமந்தம் மற்றும் ஒரு குழந்தை பிறக்கட்டும்... காது குத்தல் எல்லாம் ஓரளவு முடிந்திருந்த நேரம் .....  "கல்யாண பொருத்தம் ரொம்ப அருமை,  நீயும் பெண்ணைப் பாக்கணும் (பின்.குறிப்பு:-பெண்ணிற்கு ஹிந்தி பேச தெரியுமாம்) சீக்கிரம் புறப்பட்டு சென்னைக்கு வா" என்று அம்மாவின் அழைப்பு (பெண்ணின் புகைப்படம் அனுப்பியிருந்தார்...அம்மாவுக்கு மிகுந்த நம்பிக்கை எப்படியும் பையன் விழுந்துடுவான்... புகைப்படத்தில் பொண்ணு  "பேஷா" இருக்கா..!!!)

ஆகவே... நான் தில்லியிலிருந்து உடனே கிளம்பி சென்னைக்கு நேரிலேயே வந்துவிட்டேன்... எப்போது பெண் பார்க்க போகிறோம்???, எதுக்கு திரும்ப திரும்ப நிச்சயதார்த்தம் அது இது என்று அடிக்கடி தில்லியிலிருந்து வரவேண்டும், நிச்சயதார்த்த புடவையும் வாங்கிக்கொண்டு பெண் பார்க்கும்போதே நிச்சயமும்  செய்துவிட்டு வரலாமே, நேரடியாக திருமண தேதி குரித்துவிடலாமே என்றேன்.......பரவாயில்லையே நல்ல ஐடியா என்று கூறியதோடு அப்படியே செய்தோம்.... (என் மைண்ட் வாயிஸ் :- உன் மூஞ்சிக்கு ஒரு பெண் கிடைத்ததும் அப்படியே அமுக்கிடலாம்னு தானே...நான் நாசூக்காக என் மனதை - "கம்முனு கட" என்றேன் ... உண்மையை சொல்ல விடமாட்டேங்கிறாங்கப்பா.....).

பெண்வீட்டில் அனைவருக்கும் சகஜமாகப் பேசிப் பழகும் என்னைப் பிடித்திருந்தது. மாப்பிள்ளைக்கு "ஒகே" என்றனர்....... எங்கோ வானொலியில் பாட்டு பாடுவதுபோல எனது மைண்ட் வாய்ஸ்  "மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய், மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்" ...........

சினிமா பார்க்கும்போது பாட்டு முடிந்ததும் என்ன நடக்குமோ என்பதுபோல மனசுக்குள்ள ஒரு டக் டக் ...அதுபோல என் மனது சொன்னது ...பொறுமையா இரு, "மாப்பிள்ளை பிடித்திருக்கிறது" என்று பொண்ணு சொல்லணுமில்ல..... எங்கே இந்தப் பெண் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால்.... எனவே சற்றும் யோசிக்காமல் "பெண்ணிடம் நான் தனியாக பேசவேண்டும் என்றேன்" என்னுடைய அம்மா மற்றும் அக்காவும் மாமாவும் டேய் என்னடா இது என்றார்கள்?

....... புரிந்துகொண்ட எனது மாமியார்வீட்டினர் சம்மதம் என்றார்கள்..... சென்னை IIT-குடியிருப்பு வளாகத்தின்.... வீட்டின் பின் பகுதி என நினைக்கிறேன்... நான்தான் நிறைய பேசினேன்- எனக்கு  மனைவியாகப்போகும் கல்யாணப் பொண்ணு எதுவும் பேசவில்லை.. ஆனால் திருமணத்திற்குப் பிறகு இது மாறிவிட்டது-மனைவி அதிகம் பேசினார்.... அட வீட்டுக்கு வீடு வாசப்படி.... இது எல்லாம் சகஜமப்பா". 

"மனிதன் தனது வாழ்க்கையை அவனது திருமணத்திற்குப் பிறகுதான் தொடங்குகின்றான்" எதோ புத்தகத்தில் படித்தது..... ஆகவே நான் எனது வாழ்க்கையை தேடங்கவிருக்கும் நாளுக்கு முந்தய நாள் மாலை நேரம் "A DAY BEFORE MY LIFE START" (தலைப்பு புரிந்துவிட்டதல்லவா?) அன்று மாப்பிள்ளை அழைப்பு...... அந்த நேரத்தில் என் மனதில் எங்கோ வானொலியில் பாட்டு பாடுவதுபோல, எனது மைண்ட் வாய்ஸ் "மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மன மாலை சூடிடும்... கல்யாணம்..ஹ ஹ ஹா கல்யாணம், கல்யாணம்"...  

கோவிலிலிருந்து கல்யாண மண்டபத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன்.  திருமண மண்டபத்தை நெருங்கிவிட்டோம் மண்டபத்திலிருந்து மணமகள் அழைத்துவரப்படுகிறாள் என்னோடு மாப்பிளை அழைப்பு வாகனத்தில் இருவரும் சேர்ந்து அமர எங்களை சுற்றி இருக்கும் சுற்றமும், நட்பும் கேலி பேசிக்கொண்டதை மேலும் பல பக்கங்கள் எழுதலாம் இருந்தாலும் சுற்றத்தினர்கள் அவரவர் கைக் குழந்தைகளை மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் மடியில் அமர செய்து புகைப்படம் எடுப்பது என்பது தற்போது பாரம்பரிய செயலாகிவிட்டது. எனக்கும் குழந்தைகள் என்றால் மனதுக்கு பிடிக்கும் என்பதால் எனது மடியில் அமர சற்றும் யோசிக்காமல் இடம் கொடுத்தது...(புகைப்படத்தில் இருப்பது எனது மடியில் என்னுடைய தாய்மாமாவின் மகளின் குழந்தை அதாவது எனது தாய்மாமாவின் பேத்தி) ........குழந்தைகள்  "சு-சு" பண்ணிவிட்டால் அதுவேற கேலி கூத்து என்று... எனது மனைவி மிகவும் கவனமாக அதை தவிர்த்தார் என்று  பிறகுதான் தெரிந்தது....

மாப்பிள்ளை அழைப்பு நடந்த அன்று இரவு கல்யாண மண்டபத்தில் பெரிய சண்டை "மாப்பிள்ளைக்கு" இரவு தூங்க தலையணை தரவில்லை என்று ...
அடடா அப்புறம் என்னாச்சு....
 (தொடரும்)...

வாழ்க்கையில் விடாமல் முயலுங்கள்....
(முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்...முயலாமை வெல்லாது).
விரும்பியதைப் பயிலுங்கள், 
தொடர்ந்து சிந்திப்போம், 
மீண்டும் சந்திப்போம் ,
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி-புது தில்லியிலிருந்து.


Thursday, September 17, 2015

ஏமாறுவது தவறா? அல்லது ஏமாற்றுவது தவறா?

ஏமாறுவது தவறா? அல்லது ஏமாற்றுவது தவறா?

கண்ணுக்கு தெரியாத அளவில் மிக மெல்லிய இழையில் நெய்த புது ஆடை செய்துதருகிறோம் என்று இரண்டு நெசவாளர் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள், அரசரை சம்மதிக்கவைத்து எந்த வேலையும் செய்யாமல் பல காலமாக அரான்மனையின் விருந்தினராக ஏக போகங்களை அனுபவித்து வந்தனர்.

அரசர் அந்த இருவரையும் அவைக்கு அழைத்து, இனி பொறுமையாக இருக்கமுடியாது, ஆகவே நாளை நீங்கள் நெய்த ஆடையை அணிந்து நகர்வலம் வரப்போகிறேன், உடையை தயார் செய்து வையுங்கள் என்று கட்டளையிட்டார்.

அரசக் கட்டளையை கேட்ட அந்த இரண்டு ஏமாற்றுக் காரர்களுக்கு பயம் வந்துவிட்டது, சமாளித்துக்கொண்டு "அரசே நாங்கள் நெய்த அந்த சிறப்பு உடையானது நல்லவர்கள் கண்களுக்குத்தான் தெரியும், கெட்டவர்கள் கண்கள்க்குத் தெரியாது என்றனர். இதைக்கேட்ட அரசரோடு வீட்டிருந்த அவையிரருக்கும் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

ஆகவே அனைவரும் அரசர் அணியப்போகும் அந்த சிறப்பு உடையை பார்க்க ஆவலாக காத்திருந்தனர்......நீங்களும் நானும் எல்லோரும்தான் .... காத்திருக்கிறோம் .... இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு உடை மற்றும் நான் கேட்ட கேள்விக்கு விடை தெரிகிறதா? .."ஆம்" அல்லது "இல்லை" இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பதில் கூற முடியுமா? .. . நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. .........

Tuesday, September 15, 2015

தமிழ் தாத்தா உ.வே.சா.அவர்கள் எழுதிய‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’....‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’:-

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் உ.வே. சாமிநாதையர் மாணவராய்த் தங்கிப் பல நூல்களைப் பாடம் கேட்டு வந்தார். அப்பொழுது சவேரிநாத பிள்ளை என்ற கிறித்தவரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தார். இப்போது உ.வே.சா. எழுதிய நான் கண்டதும் கேட்டதும் நூலிலிருந்து ஒரு பகுதி :

ஒரு நாள் பிற்பகலில் பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளையை ஒரு காரியமாக மாயவரத்தில் முனிசீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளையிடம் அனுப்பினார்கள். அங்குச் சென்ற சவேரிநாத பிள்ளை இரவு 12 மணியாகியும் திரும்பி வரவில்லை. பிறகு 2 மணிக்கு வந்தார். வந்தவரை “ஏன் இவ்வளவு காலதாமதம்” என்று பிள்ளை வினவினார். அதற்குப் பின்வருமாறு சவேரிநாதர் பதில் கூறினார்:

நான் இரண்டு மணிக்கு வந்ததே பெரும் பிரயாசையாகி விட்டது. முனிசீப் வீட்டிற்கு வருகையில் இரவு 9 மணியாகிவிட்டது. அவர்களோடு பேச வேண்டிய காரியத்தைப் பேசிவிட்டுத் திரும்பும் போது இரவு மணி பதினொன்று. எங்கும் மையிருட்டாய் இருந்தது.

அங்கிருந்து புறப்பட்டுச் சிறிது தூரம் வந்தேன், பெரிய மைதானத்துக்கு அருகில் வந்த போது திடீரென்று காலில் ஏதோ தட்டியது. கட்டையாக இருக்கலாமென்று எண்ணி நான் சிறிது ஒதுங்கி வர ஆரம்பித்தேன். அந்த இடத்திலும் என் காலில் ஒன்று இடித்தது. இருட்டு மிகுதியாய் இருந்ததால் எனக்குப் பயம் ஏற்பட்டது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை ஊன்றிக் கவனித்தேன்.

என்ன ஆச்சரியம்! அங்கே வழி நெடுக அநேக ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதேனும் சத்தம் செய்யவில்லை. மெல்லக் குனிந்து ஒருவரைத் தடவித் தொட்டுப் பார்த்து வழிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அதற்குள், மற்றொருவர் எழுந்து என் காதில், ‘முட்டாளே, பேசாதே! பாரதக்கதை நடக்குது’ என்று சொல்லிவிட்டு என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே உட்கார வைத்துவிட்டார். நாம் நினைத்தபடி அவ்வளவு அபாயம் இல்லை என்று எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. பெருமூச்சு விட்டேன். எங்கே பாரதம் நடக்கிறது என்று கவனித்தேன்.

ஏதோ பாட்டுப் போன்ற ஒரு தொனி காதில் விழுந்தது. அதனொடு இடையிடையே ஆமாமா! என்ற சத்தமும், உடுக்கையொலியும் பம்பையின் முழக்கமும் ஒன்றன்பின் ஒன்றாய்க் கேட்டன. என்ன கூறப்படுகின்றன என்று காதை நிமிர்த்திக் கொண்டு கேட்டேன்.

‘பீமசேன மவராசா, மவராசா, மவராசா!’ என்றார் முதல்வர். ‘ஆமாமா!’ என்றார் பின்பாட்டுக்காரர். ‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’ என்று உற்சாகத்தோடு கைகளைக் கீழும் மேலும் அசைத்துக்கொண்டு கர்ச்சனை செய்தார் பிரசங்கியார். பின்பாட்டுக்காரர் ‘ஆமாமா’ என்று மூன்று முறை முழங்கினார். அப்பால் உடுக்கையின் ஓசையும் பம்பையின் முழக்கமும் எழுந்தன. இப்படிச் சில நிமிஷம் முழங்கியபின் உடுக்கைக்காரர்,

‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’ என்று சொல்லி ஆலாபனம் செய்யத் தொடங்கிவிட்டார். ஜனங்கள் எல்லாரும் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் மட்டும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. மேடையில் நடந்த கதை ‘பாரதம்’ என்பதை பீமசேன மவராசா என்ற சத்தத்தால் அறிந்தேன். அதற்கு மேல் நான் கேட்ட முழக்கங்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை.

வரும்பொழுது ஒருவரோடு ஒருவர் பேசி வருகையில் பிரசங்கியார் சொன்ன வாக்கியம் ஒரு யானையை அடிப்பதற்குப் பீமசேனன் மரத்தைப் பிடுங்கினான் என்பதென்று தெரிய வந்தது. இந்த ‘டிங்கினானே’ வரலாற்றைப் பிள்ளையவர்கள் அங்கே வருபவர்களுக்கெல்லாம் சவேரிநாத பிள்ளையைக் கொண்டு சொல்லிக் காட்டி வந்தார்கள்.

உ.வே.சா.வின் சுயசரிதம், சுவாரிசியமாக எழுதியிருக்கிறார் ... இதுபோல "எங்கோ மனம் பறக்கிறதே கூட எத்தனை முறை படித்தாலும்,  படிக்கப் படிக்க சிரிப்பும் சந்தோசமும் அதிகரிக்கும் .... நன்றிகளுடன் கோகி ...

என் நினைவில் நிறைந்திருக்கும் "அண்ணா"....

இன்று  பேரறிஞர் அண்ணா என்று போற்றப்படும்  திரு.காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினம்(செப்டம்பர்-15), இந்தியாவின் தென் மாநிலங்கள் சிறந்த கல்வித் திறன் பெற்ற மாநிலமாகத் திகழ முக்கிய காரணமாக விளங்கியவர் பேரறிஞர் அண்ணா. நமது தேசத் திருநாட்டின் அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க பள்ளிக்கூடம் வரவேண்டும் என்கிற சீரிய நோக்கில், ஒருவேளை உணவாவது அந்த ஏழை குழந்தைகளுக்கும் பள்ளியில் கிடைக்கும்படி செய்தால் அதற்காகவாவது  நிச்சயம் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்கு வருவார்கள் என்கிற ஆணித்தரமான நம்பிக்கையில், அவர் இயற்றிய திட்டமும், அந்த திட்டத்தை பிடிவாதமாக செயல் படுத்திய விதமும்தான் அவருக்கு சிறப்பான பெயரைப் பெற்றுத்தந்தது. "நேற்றைய முட்டாள்தனமான திட்டம் என்று தூற்றப்பட்ட பல திட்டங்கள் தற்கால சூழலுக்கு மிகவும் ஏற்றவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது". அதற்க்கு ஒரு உதாரணம்தான் பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டம்.  இன்று உலகமே வியந்து போற்றக்கூடிய திட்டத்தை வகுத்தவர் என்கிற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது என்றால் அதற்குப் பின்னால் எத்தனையோ சிரமங்களையும், எதிர்ப்புக்களையும் எதிர்கொண்டு அவர் நிறைவேற்றிய திட்டம் தான் "மதிய உணவு திட்டம்". கல்யாணம் செய்துப் பார்... வீட்டைக்கட்டிப்பார்  என்கிற மனப்பான்மை கொண்ட மக்கள், பல ஆயிரம் மாணவர்களுக்கு தினமும் உணவு சமைப்பது என்பது 'தினம் ஒரு திருமணம்' செய்வது போல, மிகப்பெரிய செயலாயிற்றே, இது முடியக்கூடிய செயலா? இது என்ன முட்டாள் தனமான திட்டம் என்றெல்லாம் தூற்றினார்கள். 

ஓர் இடத்தில் மிகப் பிரும்மாண்டமான சமையல், பிறகு அது அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் எடுத்து சென்று விநியோகிக்கப்படும் என்கிற ஏற்பாட்டில் மிகவும் சிரமம் ஏற்பாட்டாலும்.. பின்னாளில் அதை சிறப்பாக செயல்படுத்திய பெருமை, மா மனிதர், கர்மவீரர்  காமராஜருக்கே சென்றடையும். 

அதன் பிறகு அந்த திட்டத்தை மேலும் சிறப்படைய செய்த பெருமை நமது எம் ஜி ஆர் என்கிற திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களைச் சேரும். இவரின் காலத்தில்தான் இந்த திட்டம் உலக அளவில் சிறந்த திட்டமாக செயல்படுத்தப்பாட்டது. 

ஆகவே இன்றைய தினத்தில் தென் மாநிலங்கள் சிறந்த கல்வித்திறன் படைத்த மாநிலமாகத் திகழ மிக முக்கிய காரனமாகத்திகழ்ந்த நமது மனங்களில் என்றும் நிறைந்திருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவை போற்றுவோமாக. 

இப்படிக்கு நன்றிகளுடன் 
கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.... புது தில்லியிலிருந்து .....

Monday, September 7, 2015

"சேவை வரி" :- சேவை என்றால் என்ன?

சேவை வரி :- சேவை என்றால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு செய்யும் தொண்டுக்கு சேவை என்று பெயர் அப்படிப்பட்ட சேவைக்கும் வரி என்பது சரியில் என்பது பலரது வாதம் ... சேவை என்பதற்கு பதிலாக ஆதாய வரி என்று இருந்திருக்கலாமே என்பது ஒரு எண்ணம் தோன்றுவது இயல்பே.


"ஆதாய வரி" என்பது அர்த்தம் வேறு அது வேறு ஒரு வரி விதிப்பின் கிழ் வருகிறது, இருப்பினும் அரசாங்கம் இந்த சேவை வரி என்பதில் சில பிரிவுகளை ஏற்ப்படுத்தி சில சலுகைகள் அறிவித்துள்ளது குறிப்பிடப்படவேண்டும்.  என்ன இருந்தாலும் சேவைக்கு வரி என்பது சரியில்ல என்றுதான் தோன்றுகிறது. மக்களின் அன்றாட தேவையான உணவு உடை கல்வி இருப்பிடம் போன்ற அனைத்துமே சேவை வரியின் கீழ் வருவது வேதனைக்குரிய விஷயம். 



கடன் பெற்றால் அதற்க்கு வட்டி கட்டவேண்டும் என்கிற கவலையோடு தற்ப்போது சேவை வரிச்சுமையும் சேர்ந்து சுமப்பது என்பது பல மக்களின் மனங்களில் புகைகின்ற வேதனை எப்போது எங்கு வெடிக்கும் என்று தெரியவில்லை, 



பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிவரையில் மாணவர்கள் கல்விகற்கும் செலவே மிகவும் சுமையான செலவுதான் இதோடு அந்த செலவுகளும் சேவை வரியின்கீழ் வருவது மிகவும் வேதனையான வரிச்சுமை, அரசு இதற்க்கு வருமான வரிவிதிப்பில் கல்விச் செலவுகளுக்குஆகும் செலவுகளை 80சி யின் கீழ் தள்ளுபடி தருவதாக கூறுவது ஏழை விவசாயி, மற்றும் வருமான வரிக்குட்படாத பல பெற்றோர்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளில், மாணவர்களின் வயிற்றில் அடிப்பதுபோலத்தான்... இப்படி பலவிதங்களில் ஆராய்ந்து பார்க்கும்போது மிஞ்சுவது வருத்தம் மட்டுமே. 



ஆகவே சேவை வரிபற்றிய மேலும் பலரது கருத்துக்களையும் ஆராய்ந்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், நீங்களும் இதில் பாதிப்படைந்திருந்தால் உங்களின் ஆலோசனை என்ன? வாருங்கள் இதைப்பற்றி மேலும் அலசுவோம், ஆரோக்கியமான வழியில் உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள் . தங்களின் மேலான கவனம் இந்தப் பதவில் திருப்பியமைக்கு நன்றிகளுடன் கோகி என்னும் கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி. 

Wednesday, September 2, 2015

மாதக்கடைசி பணத் தட்டுப்பாடு, ATM-வரை சென்று பணம் எடுக்க முடியாத சூழ்நிலை, திடீர் என நண்பர்கள் கூட்டம் வீட்டிற்கு வருகை தர

மாதக்கடைசி பணத் தட்டுப்பாடு, ATM-வரை சென்று பணம் எடுக்க முடியாத சூழ்நிலை,  திடீர் என நண்பர்கள் கூட்டம் வீட்டிற்கு வருகை தர, வேறு வழியில்லாமல் பாலில் தண்ணீர் ஊற்றி, காப்பி கலக்கமுடியாமல் எங்கே கண்டுபிடித்துவிடுவார்களோ, என்று அனைவருக்கும்   சுடச் சுட ஏலக்காய் மணக்க தேநீர் "டி" பருகத்தந்தோம்.  அனைவரும் கிளம்பும்போது ஒரு நண்பர் மட்டும் என்னை தனியாக அழைத்து "பாலும் தண்ணி அதில் போட்ட "டீ"யும் தண்ணி, உங்கள் வீட்டில் தண்ணிக்கு பஞ்சமில்லை என நினைக்கிறேன் என்று கூறியதோடு, நிலைமையை புரிந்துகொண்டதாகவும் கூறினார்.... 


நீங்கள் பாலில் தண்ணீர் சேர்த்திருப்பது பிறருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதன் சுவை காட்டிக்கொடுத்துவிடும். அதுபோல உங்களிடம் நல்ல விஷயங்கள் குறைய குறைய உங்களது செயல் அதனை காட்டிக்கொடுத்துவிடும்.....கோகி ...

Monday, August 31, 2015

கின்னஸ் சாதனை படைத்த, 96 மணி நேரத்தில் தயாரித்து நிறுவப்பட்ட, உலகின் மிகப்பெரிய புத்தகத்தின் - காணொளிக்காட்சி இது.... இந்த   "விஸ்வரூப (மெகா சைஸ்) புத்தகம்"  இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் சமண மதத்தைச் சார்ந்த புரட்சிகர துறவி  மற்றும் முனிவர் என்று அழைக்கப்படும் (உடலில் ஆடைகள்  ஏதும் அணியாமல்  "அம்மணமாக" அருளாசி வழங்கும்- புரட்சிகர துறவி)   ஸ்ரீ  ஸ்ரீ தருண் சாகரின் சொற்பொழிவுகள் அடங்கிய  விஸ்வரூப புத்தகம் ஒன்றை 2000 கிலோ எடையிலும் 33 அடி உயரம் மற்றும் 22 அடி ஆகலமும் கொண்ட இந்த உலகத்தின் மிகப் பிரும்மாண்டமான புத்தகம் 25 தொழிலாளர்களைக்கொண்டு, இந்திய ரூபாய் 5,00,000/- ஐந்து லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்புத்தகம் தற்போது ஹரியான மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பி ஜே பி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் தலைமை ஏற்று புது தில்லிக்கு அருகே அமைந்த "பரிதாபாத்" என்கிற நகரத்தில்  சென்ற மாதம் புத்தகத்தை வெளியிட்டதோடு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.  உலகின் மிகப்பிரிய புத்தகமாகையால் கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இது இடம்பிடித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. .... இப்படிக்கு கோகி என்கிற கோபாலகிருஷ்ணன் ரேடியோ மார்கோனி- புது தில்லியிலிருந்து   https://youtu.be/4uGmkJNaL3A https://youtu.be/4uGmkJNaL3A

Saturday, August 22, 2015

நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறையில், காப்பி தயாரிப்பதைப் பற்றிப் பார்ப்போம், நிகழ்ச்சியின் முதலில் காப்பி குடிக்க தருவதுகூட விருந்தோம்பல் போன்று,  காப்பி -என்பது எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சிறப்பம்சமாகவே கருதப்படுகிறது.

காபி தயாரித்தல்தான் ஆண்கள் எல்லோரும் முதலில் கற்கும் அடுப்படி அனுபவம் என்று நான் நினைக்கிறேன்.
ம்...ம் காபி போடுறது மட்டுமா ? புருஷ லட்சணம்..

இக்கரைக்கு அக்கரை  பச்சை
சக்கரைக்கு அக்கறை இச்சை
இதுதான் டபரா டம்பளர் இல்லாமல் வெறுங்கையில் "டி ஆத்துவது"என்பது.

காபி என்றாலே அது பில்டர் காபிதான்!
பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.
பில்ட்டர் காபியே காபி மற்றெல்லாம் வெறும்
பில்ட் அப் கொடுத்தவை.

ஒரே நிமிடத்தில் காபி தயார் செய்து, அதை மூன்று நிமிடங்கள் ஆனந்தமாக, ருசித்துச் சாப்பிடலாம்.

காபியில் பாலா? பாலில் காபியா? சிலபேர் சுவருக்கு அடிக்கும் பெயின்ட் போல் திக் காபி பேர்வழி என்று காபி போடுவார்கள். எங்கள் வீட்டில் காபி சாப்பிட அழைக்கும் போது, "வேண்டாம் மாமி" என்று அலறி ஓடிய நண்பன்

ஒருவழியா ....காப்பி ,பேஸ்ட்  அல்லது டபரா-டம்பளர் ,ப்ரஷா?

பெயர்க்காரணம் ...? TUMBLE ஆவதால் அது தம்ப்ளர்?
 டம்பளர் கீழே டம்பள் ஆகாமல் இருக்க டபரா என்று ஒன்று கொடுக்கிறார்களே!

கல்யாணம் பண்ணிப்பார் :- டம்பளர் டபரா செட், தட்டு முதலியன காணாமல் போனாலும் நாம் தான் தண்டம் அழ வேண்டும்....

மண்ணெண்ணெய் ஸ்டவ் காப்பி
மறக்கமுடியாத அந்தக்கால காப்பி

(குமுட்டி)கரியடுப்புக் காப்பி
அது பாட்டி போடும் காப்பி
நாக்கு சுட்டுக்கொண்டு குடித்த ஞாபகம்.

பாட்டி உபயோகித்த பித்தளை பில்டரினால் காப்பிக்கு சுவையும் மணமும் கூடுவது பற்றி யாரோ ஒரு பேப்பர் கூட எழுதியிருப்பதாகக் கேள்வி.

பித்தளை டபரா டம்பளர் சில சமயம் ஒரு மாதிரி வாசனை வரும். எனவே காபி குடிக்க எவர் சில்வர் டபரா டம்ளரே சிறந்தது.

காபியின் பரம பக்குவம் அதில் கலக்கும் சர்க்கரையின் அளவைப்பொறுத்து இருக்கும். அவரவருக்கு சரியான அளவில் சக்கரை போடுவது ஒரு கலை. அது அன்பான அம்மா, மனைவி, அக்கா தங்கை இவர்களுக்கு மட்டுமே தெரியும். இவ்வளவு ஏன்? என் காபிக்கு எவ்வளவு சர்க்கரை என்று என்னை விட என்னுடைய திருமதிக்கு தான் சரியாகத் தெரியும். ஆனா எங்காத்து மாமிக்கு மட்டும் காபி பாயாசம்.

பில்ட்டர் காபி டிகாசன் முதலில் வடிகட்டியபிறகு, இரண்டாவது டிகாசனில் கலக்கு காப்பிக்கு சண்டை மண்டை உடையும்.....

அம்மாவின் specifications-ல் அரைக் கொட்டை, முழுக்கொட்டை, வறுக்க, அரைக்க உபயோகப்படும், சாதனங்களும், முறைகளும், அரைத்த பொடியின் grain size, இவற்றுடன், பில்டரில் போடப்படும் பொடியின் அளவு, குடை எனப் படும் distributor உபயோகம், முதலில் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு, அதன் வெப்ப நிலை, அது ஊற்றப் படும் விதம், இவை தவிர, பவுடர் பால், பசும் பால், எருமைப் பால், பதப் படுத்தப் பட்ட பால் இவற்றின் தன்மை கொண்டும், போடப்படும் சர்க்கரையின் அளவு, கலக்கப் படும் விதம் [ஆற்றல், கலக்கல்] நுரை வேண்டுமா வேண்டாமா என்ற வாதங்களை எல்லாம் தாண்டி, அம்மா எப்போ காப்பி தருவா என்று ஏங்க  வைக்கும் பானம் எங்கள் அம்மாவின் காப்பி.

எதுவானாலும் காபி போடறது ஒரு கலைதான்! அது சிலபேருக்குதான் கைவந்த கலையாகிறது!

Saturday, August 15, 2015

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை-சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்" அதில் ஒரு பகுதியான-(பகுதி -ஏழு)

வானொலியின் "கதையும் பாடலும" நிகழ்ச்சிக்கு நான் உருவாக்கிய (32-வார தொடர்) எனது முதல் விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சி தயாரிப்பு..... 2003 ல் நான் எழுதிய இந்த தொடர் 2010 ஜூலை மதத்தில் தொடங்கிய எனது இந்த வானொலி தொடரின் ஏழாவது பகுதி, வானொலி நிலையத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க புதுப்பட பாடல்களை எனது கதையின் இடையில் பொருத்தி (அந்த வருடத்தின் ஆகஸ்ட் 15 ஞாயிறு அன்று) ஒலிபரப்பான   நிகழ்ச்சி இது.....நிகழ்ச்சி தலைப்பு  "உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை - சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்" அதில் ஒரு பகுதியான-(பகுதி -ஏழு -கதாநாயகியின், தங்கையின் கதை தொடக்கம்-பள்ளிக்கூடம்.) (13 -பாடல்கள் )

 "உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை-சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்" இந்த பாடல் நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது சிறிது ஒலிபரப்பாகும். தொடர்ந்து கதையை கனடா பண்பலை வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் வாசிப்பார் கதையின் இடையில் பாடல்கள் வரும்.
  
# நானும் (சுந்தர வடிவேல்) எனது நண்பனும் (கிருஷ்ணனும்) எப்போதும் இணைந்தே இருப்போம். 2 ம் வகுப்பிலிருந்து நண்பர்கள், ஒன்றாகவே படித்து வருகிறோம், தற்போது 12 ம் வகுப்பில் படிக்கும் எங்களுக்கு அது முக்கியமான வருடம் என்பதாலும் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் கல்லூரியில் நாங்கள் எதிர்பார்க்கும் பாடப் பிரிவில் இடம் கிடைக்கும் ஆகவே படிப்பில் அதிக கவனம் வைத்து படித்துவந்தோம்.
பாடல்:-1. முஸ்தப்பா முஸ்தப்பா... (#song-Mustafa Mustafa dont worry  - Kadhal Desam).

அன்று எங்களது  பள்ளியின் கால அட்டவணைப்படி முதல் வகுப்பு தமிழ்... மாணவ மாணவியர் அனைவரும் தமிழ் ஐயா அவர்களின் வருகைக்காக காத்திருந்தோம்...... இன்று அரையாண்டு பரிட்சை விடைத்தாள்கள் அனைத்து மாணவர்க்கும் வகுப்பில் வழங்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பில், ....பின் வரிசையில் ஒரு சிலருக்கு ஏன்டாப்ப பள்ளிக்கு வந்தோம் என்றும், மற்றும் பலருக்கு சற்று பயம் கலந்த இறுக்கமான சுழலில் இருப்பது போல்... அமைதியாக  ஆசிரியரின் வருகைக்காக காத்திருந்தோம். பாடல் 2. நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது (Nanbane Enathuyir Nanbane-படம் சட்டம்)

நானும் எனது நண்பனும் எப்போதும் இணைந்தே இருப்போம், நாங்கள் உட்காருவது வகுப்பின் முதல் வரிசை, வகுப்பின் பாதியளவு மாணவிகளின் வரிசைக்கு அடுத்த சற்று  இடைவெளிவிட்டு   எங்களின் வரிசை ஆரம்பம்,  நாங்கள்  தேர்வை  நன்கு எழுதி இருந்ததால் மிகுந்த மகிழ்ச்யுடன் ஆசிரியரின் வருகையை எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்தோம், எங்களுக்கு முதல் மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் அவ்வப்போது மாணவிகள் பக்கம் கண்கள் திரும்பிப்பார்க்க, முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.ஸ்டைலாக சற்று சட்டை காலரை  உயர்த்தலாமா? வேண்டாம்..வேண்டாம்...முதலில் விடைத்தாள் கையில் வரட்டும் பிறகு பார்த்துகொள்ளலாம். இந்த மாணவிகள் ரொம்ப மோசம், விடைத்தாளில் ஏதாவது ஒரு மதிப்பெண்  குறையை காண்பித்து, ஆசிரியரிடம் அழுது மன்றாடி தமது மதிப்பெண்களை சற்று உயர்த்திக்கொண்டு அதனால் முதலிடத்திற்கு முன்னேரிவிடுகின்றனர்... இருக்கட்டும், இந்தமுறை நாமும் முயற்சிப்போம், முதலிடம் நமக்குதான்........ பாடல் 3. மனமே நலமா, உந்தன் மாற்றங்கள் நிஜமா? .(Song-MANAMAE NALAMA. ... AUTOGRAPH)... 

தமிழ் ஐயா (ஆசிரியர்) வகுப்புக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்று  வணக்கம் சொல்லி அமர்ந்தோம், வகுப்பை ஒரு முறை சுற்றிப்பார்த்த ஆசிரியர், நான் இன்னும் உங்களது அரையாண்டு விடைத்தாள்களை திருத்தவில்ல என்றார்..... அனைவரிடமிருந்தும் ஒரு பெருமூச்சு வெளிவந்தது. அப்போது ஆசிரியர் எனது நண்பன் கிருஷ்ணனை அழைத்து  எங்கள்  வகுப்பின் அரையாண்டு விடைத்தாள் கட்டை அவனிடம் தந்து, உங்கள்  வகுப்பின் அனைத்து விடைத்தாள்களையும் நியே திருத்தி, சரியான மதிப்பெண் வழங்கி, நாளைக்குள் திரும்ப என்னிடம் ஒப்படைக்கவேண்டும், உனது நண்பன் வடிவேலையும் உனக்கு உதவியாக சேர்த்துக்கொள் என்று கூறி, அவர் அந்தப்பளியின் உதவி தலைமை ஆசிரியராக இருந்ததால், பள்ளியின் முக்கிய அலுவலக வேலை இருப்பதாக கூறி, உடனே வகுப்பை விட்டு சென்றுவிட்டார். (செல்வதற்கு முன் எங்களிடம்  "கவனமாகவும் வகுப்பில் ஒருவரும் குறை சொல்லாத அளவில் சரியாக விடைத்தாள்கள்  திருத்தப்படவேண்டும்  என கட்டளையிட்டார் ) பாடல் 4. #படம் : கர்ணன் இசை : விசுவனாதன் ராமமூர்த்தி, பாடலை இயற்றியவர் : கண்ணதாசன் பாடல் "என்னுயிர் தோழி கேளொரு சேதி இதுதானோ உங்கள் மன்னவன் நீதி.."

!!!!அவ்வளவுதான் வகுப்பில் அனைவரது கண்களும் எங்கள் பக்கம்  திரும்ப,  நாங்கள் மிகப்பெரிய உருவம் பெற்றதுபோல்...(விஸ்வரூபம்)... காற்றில் மிதக்கலானோம். எங்களுக்கு இப்படி ஓர் வாய்ப்பா? சற்றுநேரம் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை... திக்குமுக்காடிப்போனோம். பாடல் 5.(song-Indha Nimidam -Movie Pallikoodam) இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா, இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொட...ராதா.... 

அரையாண்டு விடைத்தாள் கட்டு எங்கள்  கையில் வந்தபோது மிகப்பெரிய பொறுப்பு வந்துவிட்டதுபோல் உணர்ந்தோம்.  சில மாணவிகள் எங்கள் பக்கம் ஓடி வந்து,  நாங்கள் "கோனார் தமிழ் உரைநடை" பாட நூலின்படி தேர்வு எழுதிள்ளோம், ஆகவே நீங்கள் எங்களது விடைத்தாள்களை இதைபார்த்து படித்து திருத்துங்கள் என்றார்கள்.... இன்னும் சிலர் வேறு பல உரைநடை விடைத்தாள் நூலையும் தந்து கவனமாக திருத்தும்படி கூறினார்கள்..... கையிலும், மனதிலும் மிக அதிக கணம்...... நிரம்பியது போல் உணர்தோம்...... (அன்று இரவுமுழுதும்  தூங்காமல் (கண்ணில் விளக்கெண்ணை தடவிக்கொண்டு என்பார்களே... அதுபோல) பெருமுயற்சியின் விளைவாக ஏற்றுக்கொண்ட பணியை விடியற்காலை 3 மணியளவில் முடித்தோம்.)
பாடல் 6. தோழா   தோழா  தோள்கொடு  கொஞ்சம்  சஞ்சிகனும் -  (singer சித்ரா, Movie-Paandavar Bhoomi)
  
மறுநாள் திருத்திய விடைத்தாள் கட்டுக்களுடன்,  சரியாக பள்ளிமனியாடிக்கும்போதுதான் வகுப்புக்குள் நுழைந்தோம். வழக்கம்போல ஆசிரியர் தமிழ் அய்யா வகுப்புக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்று  வணக்கம் சொல்லி அமர்ந்தோம்.  தமிழ் அய்யா அழைப்பதற்கு முன்பே நாங்கள் அவரிடம் சென்று திருத்திய விடைத்தாள்களை தந்தோம். பாடல் 7. ஒரு நண்பன் இருந்தான் ("Oru Nanban Iruntha" from movie "Enakku 20 Unakku 18") 

ஆசிரியர் ஒவொருவராக பெயர் கூறி அழைத்து அவரவர் விடைத்தாள்களை வழங்கினார். எங்களது பெயர் கூப்பிட்டதும் நாங்களும் எங்களது விடைத்தாளை பெற்றுக்கொண்டோம்.  நாங்கள் எங்களுடைய விடைத்தாளை திறந்து பார்க்காமல் மற்றவர்களின் முகங்களைத்தான் பார்த்தவண்ணம் இருந்தோம்.  பெற்றுக்கொண்ட அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது  ( மதிப்பெண்களை வாரி வழங்கியிருப்பதால் நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்) பாடல் 8. ஓ நண்பனே நண்பனே....(actor vikaram-Movi Dhil-Oh Nanbane Nanbane) 

எனக்கும் என் நண்பனுக்கும்  சற்று வருத்தமே, காரணம் நாங்கள் திருத்திய விடைத்தாளுக்கு நாங்களே எங்களுக்கு  முதல் மதிப்பெண் போட்டுக்கொண்டால் சரியாக இருக்காது என்பதால் இந்தமுறை வகுப்பில் இரண்டாவது மற்றும் முன்றாம் நிலைக்கான மதிப்பெண்தான் பெறமுடிந்தது மேலும் அதிகப்படுத்த முடியாத தர்மசங்கடமான நிலை, இருந்தும் வகுப்பின் அனைத்து விடைத்தாள்களும் எங்களால் திருத்தப்பட்டது என்கிற பெருமை எங்களின் மனம் முழுவதும் பரவிக்கிடந்தது. பாடல் 9. இனி ஜல்சா பண்ணுங்கடா ....(Movie Name : Chennai 600028 Song : Jalsa Pannungada Singers : Ranjith, Tippu, Premji Amaran, Haricharan & Karthik).

அன்றைய பாட வகுப்பு முடிந்ததும், தமிழ் அய்யா எங்கள் இருவரையும் தனியே வகுப்புக்கு வெளியே  அழைத்துச் சென்று  "கிருஷ்ணா, வடிவேல் நீங்கள் இருவரும் நன்கு படிப்பவர்கள்,  அனாலும் சென்றமுறை நீங்கள் சற்று குறைவான மதிப்பெண் எடுத்து சற்று கவனக்குறைவாக இருந்தீர்கள்,  எனவேதான் உங்களை  வகுப்பின் அனைவரது விடைத்தல்களையும் திருத்தும்படிக்கூறினேன்,  நீங்களும் கவனமாக விடைத்தாள்களை திருத்தியதால் இனி உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்களை மறக்கமாட்டீர்கள்.  மாறாக நான் உங்களுக்கு வினாத்தாளுக்கான விடையை நன்கு மண்டையில் நுழையட்டும் என்று நுருமுறை கட்டாயப்படுத்தி எழுத சொல்லியிருந்தால் நீங்கள்  நிச்சயம் செய்திருக்க மாட்டீர்கள், அப்படி செய்திருந்தாலும் அது உங்கள்  மனதில் பதிந்திருக்காது எனவேதான் இப்படி செய்தேன்" என்று கூறிக்கொண்டே போனார் ... எங்களுக்கு ஆசிரியர்  "கீதையை" உபதேசம் செய்வதுபோல இருந்த்தது, எங்களது பெருமை என்ற மிகப்பெரிய மாய உருவம், அடங்கி , ஒடுங்கி மிகச்சிறிய உருவமாக மாறியதுபோல வெட்கித் தலைக் குனிந்தோம். பாடல் 10.   # வாழ்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் Poompuhar - Vaazhkai Enum Odam by K.B Sundarambal

"இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும் கூட!"  (வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த மாபெரும் கலைஞன் சார்ளி சாப்ளினின் இந்த மந்திரச் சொல், நம் வெற்றிக்கும் நல்ல சாவி!)   பாட்டு 11. :- #வாழ்ந்து  பார்க்கவேண்டும் அறிவில் மனிதராகவேண்டு    TMS & BP SRINIVAS- Sivaji Ganesan & S.S.R - Vaazhnthu Paarkkavendum - Santhi - http://youtu.be/YU-b1hNh0g0

குறிப்பு:- தப்போது 35 வருடங்கள் போயே போச்சு இருந்தும் பழைய ஞாபகங்கள்....இப்போது நான் அந்த நாட்களை நினைத்துப்பார்க்கிறேன்......  பாடல்-12. (மீசைக்கார  நம்ப  உனக்கு  ரோசம்  அதிகம்டா ..அதவிட பாசம் அதிகம்டா )... 

நண்பா உனது நினைவுகளுடன் நமது வகுப்புத் தோழி கீதாவின் தங்கை ராதையையும் நினைத்துப்பார்க்கிறேன். எப்படிப்பட்ட போராட்டங்களுக்கிடையே உன்னுடைய காதல் திருமணம் நடந்தது பாடல்-13. உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே....(தொடரும்) மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திக்கிறேன் அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைபெறுகிறேன் .... 

வாழ்க்கையில் உயர...
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் !
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.


பின்குறிப்பு:- வானொலி நிலைய நிகழ்ச்சி இயக்குனர் அவர்களுக்கு, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு அதிகமாகவே சில பகுதிகளில் ஒரு சில பாடல்கள் அதிகப்படியாக, கதையோடு அமைந்துவிட்டது, ஆகவே அதிகப்படியான அந்தப் பாடல்களை நீக்காமல் எனது நினைவில் நீக்கமற நிறைந்து இருக்க வேண்டுகிறேன். மேலு நீங்கள் கேட்டுக்கொண்டபடி பழைய பாடல்களை எடுத்துவிட்டு புதிய பாடல்களை புகுத்தியிருக்கிறேன். 

Friday, August 14, 2015

வெண்மணி அறக்கட்டளை வழங்கும் வெண்மணி இலக்கிய விருதுகள்

வெண்மணி அறக்கட்டளை வழங்கும் வெண்மணி இலக்கிய விருதுகள்:-
ரூ. ஒரு லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிசுகள்பாராட்டுக் கேடயங்கள்பொன்னாடைகள் கொண்டது)
1.   குறும்படப் போட்டி2. ஆவணப்படப் போட்டி3. நூல்களுக்கான போட்டி
4. கவிதைப் போட்டி5. கதைப் போட்டி6. கட்டுரைப் போட்டி
1.குறும்படப் போட்டி – ரூ10,000./- 7,000./- 5,000./ மூன்று பரிசுகள்     = ரூ.22,000/-
2. ஆவணப்படப் போட்டி- ரூ,10,000./- 7,000./- 5,000./-     மூன்று பரிசுகள் = ரூ.22,000/- 
தவிர ரூ. 2000./- வீதம் சிறந்த கதைஇயக்குநர்ஒளிப்பதிவாளர், நடிகர்நடிகைகுழந்தை நடிக நடிகைகள்படத் தொகுப்பாளர்ஒளிப்பதிவாளர்களுக்கு என்று      எட்டுப் பரிசுகள்    8x2,000 = 16,000/- 

3. நூல்களுக்கான போட்டி      –   ரூ,.30.000/-
போட்டிக்கு வரும் நூல்களில் கீழ்க்கண்ட துறைகளில் 10 துறைகளுக்கு மட்டும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு பரிசாக ரூ. 3,000./- வீதம் 10 x 3,000/- = 30,000/-

கவிதைகதைமொழியாக்கம்தமிழ் வளர்ச்சிதனித்தமிழ் வளர்ச்சி,  தமிழ் மருத்துவம்,நாட்டுப் புறவியல்தலித்தியம்பெண்ணியம்அறிவியல்கணிணித் தொழில் நுட்பம்,அரசியல்வரலாறு,  சமூகவியல்பண்பாடுவாழ்வியல்சூழலியல்பல்சமய ஆன்மீகம்,பயணவியல் தன்முன்னேற்றம்திறனாய்வு பல்துறை விழிப்புணர்வுச் செய்திகள் போன்ற தலைப்புகளிலும் இன்ன பிற துறைகளிலும் இருக்கலாம்.

* இரண்டு படிகள் தேவை.
* ஒருவரே பல துறை நூல்களை அனுப்பலாம்.
4. கவிதைப் போட்டி -    ரூ2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.000/- = ரூ.6,000/-
5. கதைப் போட்டி -      ரூ2,000./- வீதம் மூன்று பரிசுகள்  3 x 2.000/- = ரூ.6,000/-
6. கட்டுரைப் போட்டி -   ரூ2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.00/0- = ரூ.6,000/-
* ஒரு படி போதும்.
* படைப்புகள்  ஏ 4 அளவில்  5 பக்க அளவில் இருக்கலாம்.
* படைப்புகளை மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம். அவை யுனிகோடு தமிழ்ப் பாண்டில் செய்திருக்கப்பட வேண்டும்.
* சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
* இதுவரை எதிலும் வெளிவராததாக இருக்க வேண்டும்.
* ஒருவரே பல படைப்புகளை அனுப்பலாம்.
* படைப்புகளை திரும்ப அனுப்ப முடியாது..
* படைப்புகள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய முகவரி : கு.மாரிமுத்துவழக்கறிஞர்,சென்னை உயர்நீதி மன்றம்வெண்மணி அறக்கட்டளை / வெண்மணிப் பதிப்பகம்எண் 114 / 61முதல் தளம்மூர் தெருசென்னை - 600 001மின்னஞ்சல் முகவரி: kumarimuthu12@gmail.com
செல்பேசி எண்  93 45 34 61 08 க்கு அனுப்பப்பட வேண்டும்,
அனைத்துப் போட்டிகளுக்கும் கடைசி நாள் : 31.10.2015    * பரிசளிப்பு : பிப்ரவரி 2016.

* தொடர்பு கொள்ளவேண்டிய நேரம் : பிற்பகல் 4 முதல் 10 மணியளவில்.

Wednesday, August 5, 2015

கண்ணுக்கு அணியும் மூக்குக் கண்ணாடியே !!!
காணும் காட்சிகள் கண்ணுக்கு சொந்தமில்லை,
மனதிற்கு என்பதை மறந்துவிடாதே ....  கோகி.லா
தல போல வருமா????
யோசனை...உனது பிம்பம் என் கண்ணில் பட்டபோது,
வாசனை ... என்னருகே நீ இருந்தபோதெல்லாம்...
சாதனை ... என் கன்னத்தில் உன் உதடுகள் பட்டபோது...
பாவனை ... என்னை நான் உணர்ந்துகொண்டபோது.
சோதனை ..தீராத நோயென என் காதுகள், மனதுக்கு சொன்னபோது.
காலனை .. கண்டதால் நீ முந்திக்கொண்டபோது..
வேதனை ...உனது இழப்பு, என் கைகள் கன்னத்தில் இருந்தபோது.
இத்தனை நடந்தபின்னும் இன்னும் ....
எத்தனை... நாட்கள் உடலை இழந்த தலையாய் நான்... (கோகி..லா)

Sunday, August 2, 2015

இப்படிக்கு ...திரு நங்கை .

நாங்கள் மணக்காமல் போனாலும்... 
வண்ணமயமான காகிதப்பூக்கள்..!!!!! 
இப்படிக்கு ...திரு நங்கை ...(கோகி...லா)
வாழ்க்கையின் தாகம் ...
கஷ்டப்பட்டு குடிப்பதற்க்கில்லை...
இஷ்டப்பட்டு அருந்துவதற்கு....
கோகியின் கோமனக் கவிதை தொகுப்பிலிருந்து ....

Thursday, July 16, 2015

"மேலாளர்" (Manager) பதவிக்காக நேர்காணல்(Interview) தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் "கழிவறை நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா" என்றார்.

வானொலியில் நான் எழுதி வழங்கிய நிகழ்ச்சித் தொகுப்பை, புத்தகமாக........

Episode-100- நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? 

....."மேலாளர்" (Managre) பதவிக்காக நேர்காணல்(Interview)தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் "கழிவறை (Toilet) நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா" என்றார்.

இப்போது இந்த விளையாட்டின் பந்து உங்களிடம் உள்ளது. நேர்காணலுக்கு வந்திருப்பவர் நீங்கலாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.


# பொதுவாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் சொல்வதைக்கூட சுத்தகரிப்பு தொழிலாளி சரியாக செய்யமாட்டார். நீங்களோ இன்னமும் அந்த நிறுவனத்தில் சேரவில்லை ஆகவே உங்களுக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உதவமாட்டார்கள்.

# நீங்களாகவே கழிவறையை பெருக்கி சுத்தம் செய்தால் நீங்கள் அந்த பணிக்குத்தான் லாயக்கு என்று முத்திரை குத்தப்படலாம்.

# மேலாளர் பதவிக்கு வந்த என்னைப்பார்த்தா இப்படி சொன்னாய் என்று கோபித்துக்கொண்டு "சரிதான் போடா சொட்டத்தலையா" என்று திட்டிவிட்டு வந்துவிட்டாலும் நீங்கள் மேலாளர் பதவிக்கு லாயக்கு இல்லாதவர் என முத்திரை குத்தப்படும்.

# இந்த கேள்விக்கான பதில் என்ன என்றால்..நிறுவனத்தின் மேலாளர் என்பவர் விரல் நுனியில் விவரங்களை (fingers edge information) வைத்திருக்க வேண்டமா?

ஒரு நிறுவனத்திற்கு தேவையான அனைத்துவித சேவைகளையும் பெறுவதற்கு தேவைப்படும் சேவை நிறுவன தொலைபேசி எண்கள், நபர், முகவரி, போன்ற அனைத்து தகவல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களே...
விரல்  நுனியில்  விவரங்கள் வைத்திருப்பவர் என்பவர்"

இப்போது நீங்கள் உங்களின் " விரல் நுனியில் உள்ள விவரங்களை" பயன்படுத்தி கழிவறை சுத்தகரிக்கும் நிறுவனத்தை அழைத்து, சுத்தம் செய்யச்சொல்லி, பிறகு சுத்தமான கழிப்பிடத்தை அந்த நிறுவன உரிமையாளரிடம் காண்பித்து, "சபாஷ் மிக அருமையாக செய்திருக்கிறாய்" என்று கூறும்போது.... கழிவறை சுத்தகரித்த நிறுவனத்தின் செலவு சீட்டை(Bill) தந்து, அதற்க்கான தொகையை செலுத்துமாறு கூறவேண்டும்.

...."வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைகாரன் வெவகாரமான வேலைக்காரன்.. http://youtu.be/HlYJd-bLiPk "

அடுத்த நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...

விடாமல் முயலுங்கள்,

விரும்பியதைப் பயிலுங்கள்...

தொடர்ந்து சிந்திப்போம் .....

மீண்டும் சந்திப்போம் !

வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.

" வா மா மு "


புத்தகத்தின் அட்டைப்படம் - எழுதிய கதை விலைபோகுமா? தெரியவில்லை....., பதிப்பாளர்- அட்டைபடம் போணியாகும் என்கிறார் ..... மாற்றி யோசிக்க இந்த பாடல்தான் நினைவுக்கு வருகிறது ... : எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் பி ஷைலஜா குரல்: "வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆஹா" ...

# சொற்கள், வார்த்தைகளாக மாறும்போது உருவாகும் மந்திர அதிசயத்தை உண(ர்/ரு)பவர்களின் கையில் நிச்சயம் இந்த புத்தகக் குழந்தை தவழும் ......

# வாய்ப்பு-முடிவு-மாற்றம்:- வாய்ப்புக்கு தகுந்த முடிவெடுக்காவிட்டால் வாழ்க்கை மாறாது...

# மாற்றம்-வாய்ப்பு-முடிவு :- ஒரு மாற்றம் நல்ல வாய்ப்பை தருமென்றால், உடனே முடிவெடுக்கத் தயங்காதே.


# முடிவு-மாற்றம்-வாய்ப்பு :- ஒரு முடிவை எடுத்தபின்பு, எந்த மாற்றத்திற்கும் தகுந்தாற்போல, கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்பவன் திறமையானவன்.


FREE JOBS EARN FROM HOME