FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, March 8, 2013

13-05-2012-அன்னையர் தின சிறப்பு நிகிழ்ச்சி -WWW.A9RADIO.COM

திரு பொன் சிவா வரதராஜன் அவர்கள் வழங்கிய 13-05-2013 அன்றைய நான் தொகுத்திருந்த எனது அன்னையர் தின சிறப்பு நிகிழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ் வொரு வரியையும் மிகத்தெளிவாக வாசித்து வழங்கிய விதம் மிகவும் அருமை. உலக தமிழ் நேயர்கள் அவர்களது தாய்க்கு அவர்களே வழங்கிய நிகழ்ச்சியை போல் இருந்தது. நிகிழ்ச்சி ஒலிபரப்பாகும்போது நான் மலேசியாவில் என்னுடைய நண்பர்களுடன் கேட்டு மகிழ்தோம், A9 வானொலிக்கு இப்போது மேலும் நிறைய மலேசியா ரசிகர்கள் விரும்பி கேட்டுக்கொண்டிருக்கிரர்கள். எனது நிகழ்ச்சியை வழங்கிய A9 வானொலி நிலையத்திற்கும் எனது நன்றிகளுடன் மார்கோனி கோபாலகிருஷ்ணன் (எ) சிங்கையிலிருந்து-கோகி.
13-05-2012-அன்னையர் தின சிறப்பு நிகிழ்ச்சி -WWW.A9RADIO.COM
உலகிலே புனிதமான பாசம் தனது தாயின் பாசம்!
தாய் – நமது ஆரம்பம், அவ்வை- தமிழின் ஆரம்பம், சரஸ்வதி – இசையின் ஆரம்பம் என மகளிர் சக்தி எங்கும் எதிலும் உண்டு. ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்று உரைச்சொல்லும் உண்டு. இச்சக்திகள் ஒன்றிணைந்து முன்னே வந்தால் வெற்றி, மிகப் பெரும் வெற்றியாக மாறும்.
 
கருவில் தாங்கி உருவினில் உயிர் பெற உழைத்தவள் அம்மா, உயிர் எழுத்தின் உண்மை பெயர் அம்மா, பிரியாமல் இருப்பதற்காய் பிரிவை வரமாய் கேட்கிறேன்... பிரிவால் கூட முடியாதம்மா என்னிடம் இருந்து உன்னை பிரிப்பதற்கு....
பாசம் மிகுந்த ரசிக நெஞ்சங்களே ..அன்னையர் தினம்னா ஒருநாள் மட்டும் தானான்னு... கேட்டீர்கள் என்றால், இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன்... இருந்தும் அம்மாவுக்கு இப்படி ஒரு மகிழ்ச்சியான, எதிர்பாரத, இன்ப அதிர்ச்சி தரும் கொன்ன்டாட்டமான நாளை அன்பளிப்பாக தந்தாள் அது இப்படித்தான் இருக்கும்...(முக்கியமாக ஒரு விவரம் தெரிந்துகொள்ளவேண்டும் திடீர் என்று அம்மாவுக்கு பரிசு தந்தாள் அது வேறுவிதமாக மாரிவிட்டக்கூடும் "மகனே நீ என்னிடம் எதாவது எதிர்பார்கிறாயா "என அம்மா நம்மை கேட்க நேரிடும் ஆகவேதான் எதிர்பாரத, இன்ப அதிர்ச்சி தரும் கொன்ன்டாட்டமான நாளை அன்பளிப்பாக தந்தாள் XXXXXXXXX) இது அவருக்கு மட்டும் இல்லாமல் நமக்கும் மகிழ்ச்சியான நாள்தானே ...இந்த படத்திலும் அப்படியே ...எதிர்பார்போடு இருந்த அம்மாவுக்கு எதிர்பாராமல் தந்த பரிசு எப்படி இருக்கும்.... வாங்க இந்த படத்தின் பாட்டை கேட்டாலே புரியும்...இப்ப இந்த பாட்டை கேட்போமா #Neeye Neeye song - M Kumaran S/O Mahalakshmi , நீயே நீயே, நானே நீயே ... நெஞ்சம் பாடும் வுயர் தீயே தீயே.
அம்மா பாட்டு என்றாலே MGR, SHIVAJI, RAJINI, KAMAL பாட்டுதான், முதல்ல நம்ம கண்முன்னால் வரும் ..சூப்பர் STAR அவர்களுக்கு அமைந்த அம்மா பாடல்களில் இது தான் டாப், அதோடு இசை ஞானி இளையராஜா அவர்களுக்கும் அம்மாவுக்காக பாடிய பாடலில் இதுதான் டாப், இந்த பாட்டை கேட்டால் நாம் மேழுகுவத்திபோல உருகி போய்விடுவோம்...(இந்த பாடலில் இளையராஜா அவர்களும், KJ யேசுதாஸ் அவர்களும் கூட அன்னையின் பாசத்தில் உருக உருக இசைத்து பாடிய ஒரு சாதனை பாடல் இது. வாங்க நாமும் அவர்களுடன் மெழுகுவர்த்தியாக உருகி இந்த பாடலை கேட்போமா ?
#அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே Amma Endru Azhaikadha Movie - Mannan
Music Director - இளையராஜா, Director - P வாசு, Singer - KJ யேசுதாஸ் ...
இதுவும் சூப்பர் ஸ்டார் அம்மாவுக்காக உருக்கமான பாடல் #SUPER STAR RAJINI'S Amma Amma Enthan Aaruyire, அம்மா, அம்மா, என் ஆருயிரே .....
அட நம்ம பத்மஸ்ரீ கமலஹாசன் எப்பிடின்னு பார்கலாமா ..அவரு குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அம்மா பாட்டைத்தான் பாடி "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே.. அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயேநு தனது திரை உலகத்தில் காலடி எடுத்துவைத்தார், அவருக்காக அமைந்த அம்மா பாடல்களில் இது தான் டாப்.. வாங்க பாடலை கேட்போம்
#கமலின் அம்மா பாட்டு :- SONG:- NANAGA NANILLAI THAYE(படம் THUNGATHEY தம்பி THUNGATHEY) நானாக நான் இல்லை தாயே நல்வாழ்க்கை தந்தாயே நீயே.
#MGR- அப்பப்பா ...அம்மாக்காக இவருக்கு அமைந்த பாடல்களுக்கு கணக்கே இல்லை...எராளமான பாடல்கள் ..."தாய் மேல் ஆணை தமிழ்மேல் ஆனைன்னு ஆரம்பித்தால் ....எராளமான அம்மா பாடல்கள்... இவருக்கு அம்மான்னா உயிர்,... அப்படி ஓர் "அம்மா பாசம்". அவ்வளவு ஏன் இவர் ஓர் அம்மா பயித்தியம்னுகூட சொல்லலாம், இவர் பார்வையில் தாய்குலம் அனைவரும் "அன்னையின் உருவம்"... அம்மா பிள்ளை MRG... அவருக்கு இணை அவரே... இப்ப அவரின் தாய்ப்பாசத்தில் அவருக்கு அமைந்த பாடல்களில் இது தான் சூப்பர் ஹிட் டாப் 1-முதல் இடம் ...என்ன பாடல் அது ....
#தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறப்பதில்லை எனக்கொருதாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள் -TMS அவர்களின் குரலில் என்ன இனிமையான பாடல் ...(ஜீவா நதியாய் வருவாள், என் தாகம் தீர்த்து மகிழ்வாள் ..தவறினை பொறுப்பாள் தர்மத்தை வளர்ப்பால், தரணியிலே வளம் சேர்த்திடுவாள்- அந்த தாய் இல்லாமல் நான் இல்லை) (ஆதி அந்தமும் அவள்தான், நமை ஆளும் நீதியும் அவள்தான், அகந்தையை அழிப்பாள் ...ஆற்றலை கொடுப்பாள் , அவள்தான் அன்னை மகாசக்தி -அந்த தாய் இல்லாமல் நான் இல்லை ...)
#அடுத்த அம்மாவுக்கான MGR அவர்களின் வெற்றிப்பாட்டு இது, படம் -தேடிவந்த மாப்பிள்ளை :- பாடல் :-வெற்றிமீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும் (தாயே )
#அடுத்தது இந்த பாடலில் MGR அவர்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள், என்று பாடி நம்முடைய தேசப்பற்றை ஒரு தாய்க்கு சமமாக அந்த தேசத் தாய்மைக்கு மிக உயர்ந்த நிலையான "இமயமலையின் உச்சிக்கு உயர்த்தி" பாடும்படி அமைந்த பாடல் இது .. வாங்க நமது தேசத் தாய்க்காக ஒரு பாடல் கேட்போம் .
# ஒருதாய் மக்கள் நாம் என்போம் ..ஒன்றே எங்கள் குலம் என்போம்.. Oru Thai Makkal from the 1963 movie "Ananda Jothi" starring MGR / M.G. Ramachandran, Devika, M.R. Radha, S.A. Asokan, S.V. Sahasranamam, P.S. Veerappa, Manorama, Master Kamal Haasan & Javar Sitaraman.
அப்பாவும் பிள்ளையும் (மக்கள்திலகம் சிவாஜிகணேசன் , இளையதிலகம் பிரபு ) இருவருக்கும் அமைந்த அம்மா பாட்டு, அந்த வரிசையில் மக்கள்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு அமைந்த அம்மா பாட்டு.. எண்ணி பார்க்கமுடியாத பாடல்கள் உள்ளது அதில் இதுதான் மிகவும் உயர்ந்த ஒன்று. இந்த பாடலை கேட்டாலே அன்னையை விட்டு விலகி இருப்பவர் அனைவரும் ஓடி சென்று அன்னையின் காலில் விழுந்து ..அன்னையை ஆசையாக அரவணைத்து இருப்பர் .. "One of the greatest songs dedicated to mothers worldwide.என்ன பாட்டு அது வாங்க கேட்போம்
#அன்னையை போலொரு தெய்வமில்லை அவள் அடி தொழமறுப்பவர் மனிதரில்லை,மண்ணில் மனிதரில்லை!!
அப்பாவைவிட பிள்ளை ஒரு படி மேலே என மக்கள்திலகம் சிவாஜிகணேசன் பிள்ளை இளைய திலகம் பிரபு அவர்களுக்கு அமைந்த அம்மா பாட்டு இது வாங்க பட்டை கேட்போம் :-
#AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU -அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்! எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேக்கிற பாக்கியம்!
#SOLLI SOLLI VANTHATHILLAI(SENTHAMIL PAATTU)PRABU -
# இசை புயல் AR ரகுமான் மற்றும் வைரமுத்து அவர்களும் இந்த பாடலில் தாய்க்காக உருகி உருகி பாடலை அமைத்திருக்கும் விதத்திலிருந்தே அவர்களுக்கு தாய்மேல் உள்ள பாசம் நன்கு தெரியும்... இந்த பாடலை கேளுங்களேன் மனம் இலகிப்போகும்.Song உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே… உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே.....! [உன்னிகிருஷ்ணன் அவர்களின் இனிமையான குரலில் உயிரும் நீயே என்ற அம்மாப் பாடல் ] - Movi-Pavithra, Singer: Unni Krishnan, Music: AR ரஹ்மான்.
#காதல் மன்னன் ஜெமினிகணேசன் அவர்கள் நடித்த படத்தில் (கணவனே கண் கண்ட தெய்வம் ) கண்டசாலாவின் அருமையான அம்மா பாடல் இது( "அம்மா நீ கலங்காதே" ..நீ அல்லவோ பெண் தெய்வம் ..பாரத நாட்டிற்கு பெருமை அளித்திடும் அணிகலன் பெண்குலம் )
# நடிகர் சிவகுமார் மற்றும் நடிகை சுஜாதா அவர்களுக்கு அமைந்த பாடல் :- தாலாட்டு மாறிப்போனதே...என் கண்ணில் தூக்கம் போனதே பெண்பூவே வந்தாடு :- S.Janaki-Isai-Ilayaraja-Movi "UNNAI NAAN SANTHITHEN"
#நடிகர் சூரிய அவருக்கு அமைந்த அம்மா பாட்டு "காலையில் தினமும் கண் விழித்தெழுந்தால் அம்மா -உன்னிக்ருஷ்ணன் குரலில் நியூ பட பாடல் இது ...அடுத்து "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா ?"
# இந்த பாடல் கொஞ்சம் கவனித்து கேட்டீர்கள் என்றால் (இது ஒரு தாய்க்கு மகன்/மகள் பாடுவதுபோலவும் .. ஒரு தாய், மகள் /மகனுக்காக பாடுவதுபோலவும் இருக்கும் )
#Nenjil Jil - Kannathil Muthamittal ... ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
#இந்த பாடல் ஒரு டிஸ்கோ பாடல் அதுவும் அம்மாக்காக ஒரு டிஸ்கோ பாடல் :-song:- அன்னை என்னும் ஆலயம் , அன்பில் வந்த காவியம், கண்ணில் வந்த ஓவியம் -Movi-Aboorva Sagotharigal- by Janaki Music-Bappilahari.
#இப்ப நாம நம்ம தமிழ் தாய் கடவுளுக்கு ஒரு பாட்டு கேட்கலாமா
ஆத்தி சூடி தந்த அவ்வை சொல்லியது அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்
பால்... தமிழ் பால் , என்னும் நினைப்பால் , இதழ் துடிப்பால், அதன் பிடிப்பாள் , சுவை அறிந்தென்........அதுவல்லவோ நமக்கு தாய்ப்பால் ..முதன் முதலில் நமக்கு உட்டிய தமிழ் பால் அல்லவா அது
#அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை (டீச்சரம்மா படத்தில் KR விஜயா அவர்களுக்கு அமைந்த பாடல்)
# அடிமைப்பெண் படத்தில் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்காக அமைந்த திரைப்பட பாடல் இது . "அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி ...அவர்களே இவ் உலகின் தெய்வம்"
# தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை....
# Thiyagaraja bhagavathar - Movi-HARIDAS- அன்னையும் தந்தையும் தானே, பாரில் அண்ட சராசரங்கள்
# கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ - Song from Annai வேளாங்கண்ணி
# எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரிமாதா "படம் -மிஸ்ஸிஅம்மா"
# நீலக் கடலின் ஓரத்தில் - Neelakadalin - Song from அன்னை வேளாங்கண்ணி
தமிழுக்கு அது (RAHI தேவையில்ல போலிருக்கிறது
சோகமான "அம்மா" பாட்டுக்கள் :-sentimental song about a mother

# நடிகர் கார்த்திக் அவர்களுக்கு அமைந்த பாடல் :- அம்மான்னா சும்மா இல்லைட .. அவ இல்லேன்னா யாரும் இல்லே டா - hero karthik ,music Ilayaraja
# Movie:-Raam. ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நி கண்ணுறங்கு …(அம்மா என்னும் மந்திரமே அகிலுலகம் வாழ்கிறதே )
#அரண்மனை கிளியில்- இளையராஜாவின் இசையில், ராஜ்கிரண் அவர்களுக்கு அமைந்த பாடல் "உன்னை போல ஆத்த என்னை பெத்து போட்டா, என்ன பெத்த ஆத்தா கண்ணீர்தான் பாத்தா..."
#என் தாயின் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே ..என் வாயும் வயிறும் போற்றிவலத்திட்ட (ARANMANAI KILI MOVIE)RAJKIRAN.............
#சிவாஜி -ஆரரிரோ படியதரோ , தூங்கிபோனதரோ …Movi-Thaiku Oru Thalattu-
நம்ம இளைய தளபதி "விஜய் அவர்களுக்கு அமைந்த இந்த பாடல் :-Song:- தெய்வத்துக்கே மாருவேசமா,படம் -சிவகாசி.
ரஜினி அவர்களுக்கு அமைந்த சோகமான அம்மா பாட்டு "அம்மா உன் பிள்ளை நான் "-படம் தளபதி .
நல்ல பொன்னால் இதுபோலே வருமா இனிமேலே
இனிய ரசிக நெஞ்சங்களே, இந்த நிகழ்ச்சியைப்பற்றிய உங்களது மேலான விமர்சனங்களை அள்ளித்தெளியுங்கள் ..
A9 வானொலியின் FACEBOOK-முகநூல் வாயிலாகவும் தெரிவிக்கலாம்
A9 வானொலியின் வலைத்தளத்திலும், அல்லது மின் அஞ்சல் (E-MAIL )வழியாகவும் தெரிவிக்கலாம்
A9 வானொலியின் "SKYPE" -என்கிற "வான்முகவின்" வழியிலும் தெரிவிக்கலாம்
#AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU -அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்! எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேக்கிற பாக்கியம்!
# நடிகர் கார்த்திக் அவர்களுக்கு அமைந்த பாடல் :- அம்மான்னா சும்மா இல்லைட .. அவ இல்லேன்னா யாரும் இல்லே டா - hero karthik ,music Ilayaraja
#அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை (டீச்சரம்மா படத்தில் KR விஜயா அவர்களுக்கு அமைந்த பாடல்)
# அடிமைப்பெண் படத்தில் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்காக அமைந்த திரைப்பட பாடல் இது . "அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி ...அவர்களே இவ் உலகின் தெய்வம்"
# ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா ?"
#Thiyagaraja bhagavathar - Movi-HARIDAS- அன்னையும் தந்தையும் தானே, பாரில் அண்ட சராசரங்கள்
#Song-Anbulla appa, yennappa ungal kadhal kadhayai - Movie-anbulla appa (1987).. பாட்டும் படமும் படம்: அன்புள்ள அப்பா, பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ் . பி . ஷைலஜா , இசை: ஷங்கர் - கணேஷ் , வருடம்: 1987 http://youtu.be/Q-jTzEwz8FI
ஆண்கள் மனசே அப்படித்தான், அது அடிக்கடி மாறும் இப்படித்தான் .... ஆண்கள் மனசே http://youtu.be/D0eg7NdX_r8
y
#பிள்ளைக்கு தந்தை ஒருவன் - Pillaikku thanthai oruvan http://youtu.be/zsJJ4zVdC7g
#Vaanukku Thanthai Evano - Aadu Puli Aattam - SPB - LR Anjali - Kamal - Thengai - Rajani - Sripriya, Movie : Aadu Puli Aattam Music : Vijaya Bhaskar Singers : SPB , LR Anjali
Actors : Kamal, Thengai Seenivasan, Rajani , Sripriay http://youtu.be/DsdH9WR0Ub0

‘மிச்ர’ அதாவது கலப்பு, ஒரிஜினல் ராகம் இல்லை என்று ஆகிவிடும்!

நாம் ரசிக்கப் போகும் ‘உனக்காகவே நான் உயிர் வாழ்வேனேஎன்று மனதை உருக்கும் ஒரு பாடல்’ இந்த பாடல் ‘பாகேஸ்ரீ’ எனும் ராகத்தைத் தழுவியது. பாடலை தஞ்சை ராமையதாஸ் எழுதியிருக்கிறார். http://youtu.be/O5qPzM_zBuM

ஒரு முறை மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட பாட்டை என்ன ராகம் என்று கேட்டாராம் அதற்க்கு இசை மன்னர் : “ராகமா? ராமமூர்த்தி ராகம், இல்லையென்றால் கிருஷ்ணமூர்த்தி ராகம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! சினிமா பாட்டுக்கெல்லாம் ராகம் தேடாதீங்க ஸார்” என்றாராம். அதனால்தான் நான் இன்ன ராகத்தைத் ‘தழுவியதுஎன்று எழுதித் தப்பித்துக் கொள்ளுகிறேன்! மிகப் பழைய படங்களின் பாட்டுப் புத்தகத்தைப் பார்த்தால் கூட, ‘மிச்ர மாண்ட்’, மிச்ர இந்தோளம்என்று அந்தந்தப் பாடல் வரிகளுக்கு மேல் ராகங்களுக்கு முன் ‘மிச்ரஎன்று சேர்த்துப் போட்டிருப்பார்கள். குறிப்பிட்ட ஸ்வரங்களைக் கொண்ட ராகத்தில் அன்னிய ஸ்வரங்கள் சேர்ந்தால் ‘மிச்ரஅதாவது கலப்பு, ஒரிஜினல் ராகம் இல்லை என்று ஆகிவிடும்! ..... இப்போது கலப்பில்லாத ‘பாகேஸ்ரீ’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல் கேட்கவேண்டுமானால் இதே ராகத்தைத் தழுவி, குலேபகாவலியில் மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ, மீண்டசொர்க்கத்தில் கலையே என் வாழ்க்கையின், போன்ற பல சிறந்த பாட்டுக்கள் உண்டு.


இராகம்: கல்யாணி
 
பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு இலக்கணம் மிக முக்கியம். ஆனால் திரையிசை இயக்குநர்களுக்கோ, மனமகிழ்வு ஏற்படுத்துதல் மட்டுமே முக்கியம். வலைப்பதிவர்கள் போல, அவர்களுக்கு யார் கட்டுப்பாடும் கிடையாது. அதனால், அவர்கள் தங்களுக்குப் பிடித்தபடி, விருப்பப்பட்ட இராகங்களுக்கு, வேண்டுமென்றபோது, 'வித்தவுட்டில்' போய்விட்டு, பல்லவியில் சமர்த்தாக ஆரம்பித்த இராகத்திலேயே வந்து ஒட்டிக் கொள்வார்கள்.
 
கல்யாணி இராகம் 65ஆவது மேளகர்த்தா இராகம் (72 தாய் இராகங்களில் ஒன்று) திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு இது ஒரு விருப்பமான ராகமாகும். குறிப்பாக இளையராஜா, கல்யாணி என்றால், ஒரு கலக்கு கலக்கி விடுவார். இந்த ஒரே ராகத்தில், பல வித்தியாசமான பாடல்களைத் தந்துள்ளவர் அவர். 'வெள்ளைபுறா ஒன்று', 'ஜனனீ, ஜனனீ', 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே', 'நிற்பதுவே நடப்பதுவே', 'காற்றில் வரும் கீதமே', என்று தொடரும் இந்த வித்தியாசமான பாடற் பட்டியலைப் பார்த்தால், கண்டிப்பாக நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். திரைப்பாடலுக்கு போகும் முன்பு இந்த ராகத்தை பற்றிய சின்ன விளக்கங்கள்.
கல்யாணி- இந்த ராகத்தின் ஆரோகணம் (ஸ்வரங்களின் ஏறு வரிசை): ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ, அவரோகணம் (ஸ்வரங்களின் இறங்கு வரிசை): ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ...
கர்னாடக சங்கீத கச்சேரிகளின் கல்யாணி ரகத்தில் அமைந்த கீர்த்தனைகள்':- ....தியாகையர் கீர்த்தனையில்"நிதிசால சுகமா",... முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனையில்-"கமலாம்பாம் பஜரே ",... சியாமா சாஸ்திரி கீர்த்தனையில் "ஹிமாத்ரி சுதே பாஹிமாம்" இன்னும் தனிப்பாடல்களில் வரிசையில் நிறைய பக்திப்பாடல்கள் இருக்கிறது.
வட இந்தியாவில் இதே கல்யாணி இராகம், 'யமன்' என்றழைக்கப்படுகின்றது. இதற்கு, 'சாந்த கல்யாணி' என்ற மற்றொரு பெயருமுண்டு. இந்த இராகம், ஹங்கேரி நாட்டிலும் பிரபலம் என்பது பெரும்பாலோர் அறியாததொன்று. மேளகர்த்தா இராகமான கல்யாணியிலிருந்து 150க்கும் மேலான ஜன்ய இராகங்கள் பிறந்த்திருப்பதாகத் தெரிகின்றது. இப்போது திரைப்படப்பாடல்கள் வரிசையில்
 
முதலில் -பழைய பாடல்கள் வரிசையில்:-
இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப் புதல்வன்
நமக்கினி பயமேது - ஜகதலப்ரதாபன்
காவிரிப் பெண்ணே வாழ்க - பூம்புகார்
மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர்
இடைக்காலப்பாடல்கள் வரிசையில்:-
கண்ணன் வந்தான் - ராமு *
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - தெய்வ மகன் *
கலை வாணியே - சிந்து பைரவி *
உன்னை நான் பார்க்கையில் - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
புதிய பாடல்கள் வரிசையில்:-
#கொக்கு சைவக் கொக்கு - முத்து
#சிங்கநடை போட்டு - படையப்பா
#நிற்பதுவே நடப்பதுவே - பாரதி *
#உப்புக் கருவாடு - முதல்வன்.
முன்னமே கூறியது போல, இந்தப் பட்டியலில், கல்யாணி இராகம் எந்தெந்தப் பாடல்களிலெல்லாம், பிரதானமாக இருக்கிறது என்று கருதுகிறீர்களோ, அந்தப் பாடல்களை மட்டும் ஒருங்கே பதிவு செய்து, பத்து முறை கேட்டுப் பாருங்கள். அதன் பின், ஏதெனும் ஒரு சங்கீத கச்சேரிக்கு சென்று, பாடகர் 'நிதிசால சுகமா' அல்லது, 'பங்கஜ லோசனா' என்று பாட ஆரம்பித்தவுடன், "ஆபோகிதானே இது?" என்று அப்பாவியாய்க் கேட்கும் உங்கள் பக்கத்து சீட் பார்ட்டியிடம், "நோ, நோ. கல்யாணி ராகம் இது", என்று அசத்தலாம். அடுத்த பதிவில் நாம் தோடி: ராகம் இது எட்டாவது மேளகர்த்தா ரகத்தைப்பற்றிப்பார்போம். http://youtu.be/5-y-J9Pabq8
 
உங்களுக்கு கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல் பிடிக்கும் என நினைக்கிறேன் .
கல்யாணி ராகத்தில் அமைந்த திரைப்பட பாடல் பட்டியல் இது 01. ஆதாரம் உன்றன் திவ்ய பாதமே - பக்த கௌரி
02. அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர்
03. ஆடும் அருள் ஜோதி - மீண்ட சொர்க்கம்
04. ஆழ் கடலில் முத்தெடுத்து - ராகம் தேடும் பல்லவி
05. அம்மா என்றழைக்காத உயிரில்லையே - மன்னன் *
06. ஆராரோ ஆராரோ - ஆனந்த்
07. அத்திக்காய் காய் காய் - பலே பாண்டியா
08. சரணம் பவ கருணாமயி - சேது
09. தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் *
10. என்னை ஒருவன் பாடச் சொன்னான் - கும்பக்கரை தங்கையா
11. இகலோகமே - தங்கமலை ரகசியம்
12. இளவட்டம் கேட்கட்டும் - மை டியர் மார்த்தாண்டன்
13. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப் புதல்வன் *
14. இசையமுதம் - கோடீஸ்வரன்
15. ஜனனீ ஜனனீ - தாய் மூகாம்பிகை *
16. கலை வாணியே - சிந்து பைரவி *
17. கனவிலும் உனை மறவேன் நான் - மச்சரேகை
18. கண்ணாலே காதல் கவிதை சொன்னானே - ஆத்மா
19. கண்ணன் வந்தான் - ராமு *
20. காவிரிப் பெண்ணே வாழ்க - பூம்புகார் *
21. காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு *
22. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - தெய்வ மகன் *
23. கொக்கு சைவக் கொக்கு - முத்து
24. மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்
25. மனதில் ஒரு பாட்டு - தாயம் ஒண்ணு
26. மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் - அஷோக் குமார்
27. மஞ்சள் வெயில் - நண்டு *
28. மஞ்சள் வெயில் மாலையிலே - காவேரி
29. மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர் *
30. முகத்தில் முகம் பார்க்கலாம் - தங்கப் பதுமை *
31. நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம் *
32. நமக்கினி பயமேது - ஜகதலப்ரதாபன்
33. நான் என்பது நீ அல்லவோ தேவா - சூரசம்ஹாரம்
34. நான் பாட வருவாய் - உதிரிப் பூக்கள்
35. நானே உன் அடிமையே - மண மகள்
36. நீது சரணமுலே - சேவாசதனம்
37. நினைக்கின்ற பாதையில் அணைக்கின்ற - ஆத்மா
38. நிற்பதுவே நடப்பதுவே - பாரதி *
39. ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம் *
40. பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் - பெண்
41. புத்தம் புது ஓலை வரும் - வேதம் புதிது
42. ராதா அழைக்கிறாள் - தெற்கத்திக் கள்ளன்
43. சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் - இது நம்ம ஆளு *
44. செண்பகவல்லி உன்னைச் சேவித்தேன் - காசினி வேண்டினி
45. சிந்தனை செய் மனமே - அம்பிகாபதி *
46. சிங்கநடை போட்டு - படையப்பா
47. சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத் தங்கம்
48. சுந்தரேஸ்வரனே சுபகராக்ருபா - கன்னிகா
49. சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி *
50. சுத்திச் சுத்தி - படையப்பா
51. தாலாட்டும் காற்றே - தேவன்
52. தானே தனக்குள் - பேரும் புகழும் *
53. தாயைப் பணிவேன் - ஜகதலப்ரதாபன்
54. தாழையாம்பூ முடிச்சு - பாகப் பிரிவினை
55. தேன் சிந்துதே வானம் - சொல்லத்தான் நினைக்கிறேன் *
56. திருவளர் உருவே போற்றி - பக்த துளசிதாஸ்
57. துணிந்த பின் மனமே - தேவதாஸ் *
58. உள்ளம் ரெண்டும் - தூரத்து இடி முழக்கம்
59. உன்னை நான் பார்க்கையில் - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
60. உப்புக் கருவாடு - முதல்வன்
61. வா காத்திருக்க நேரமில்லை - காதலிக்க நேரமில்லை
62. வைதேகி ராமன் - பகல் நிலவு
63. வான் பொய்த்தாலும் தான் பொய்யா - ஆடிப் பெருக்கு
64. வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்ந்த உள்ளம் *
65. வாசமல்லிப் பூவு - செவ்வந்தி
66. வீணையடி நீ எனக்கு - ஏழாவது மனிதன்
67. வெள்ளை புறா ஒன்று - புதுக் கவிதை *
68. விழிகள் மீனோ மொழிகள் தேனோ - ராகங்கள் மாறுவதில்லை
69. யாரறிவான் இறைவன் திருவருள் - ஞான சௌந்தரி http://youtu.be/5-y-J9Pabq8


 

[கேம்பஸ்] கல்லூரியில் நேர்காணல்/நேர்முகத்தேர்வு

பல நிறுவனங்கள் [கேம்பஸ்] கல்லூரியில் நேர்காணல்/ நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னமே, மாணவர்களை நேர்காணலுக்கு தயார்படுத்துவதற்கு எங்களைப்போன்ற ஆலோசகர்களின் உதவியை நாடுவார்கள், நான் பார்த்த பல மேலாண்மை கல்லூரிகளில் அறுபது சதவிகித மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள திணறுகின்றனர். நல்ல மதிப்பெண் பெற வழிகாட்டியவர்கள், நல்ல வேலைவாய்ப்பை பெறுவது எப்படி என்பதில் அதிகம் வழிகாட்டுதல் கிடைக்காமல் தினருவதையே பார்க்கின்றேன். 
#கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... மேல்நிலை படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்கவைகலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத்தொடங்கிவிடுகின்றனர். தற்போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவுகள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு
தீர்கமான முடிவோ சிந்தனை இல்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழலில்தான்..தற்போதைய கல்விக் கண்காட்சியிலும, மற்றும் பல நிறுவனங்களின் [Campus interview] கல்லூரியில் நேர்காணலின்போதும் அனைத்து மாணவர்களுக்கும் இதை எதிர்கொள்வது எப்படி என்பதை கூறிவருகிறேன். குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெரும் கல்வியாக கீழ்வரும் 5 பாடப்பிரிவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1. வணிகவியல் (Commerce) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது-மேற்கொண்டு வேலையில் சம்பாதித்துக்கொண்டே படித்துக்கொள்ளலாம்) 5years course of BCOM-BL, or FICA, BCS...போன்றவை....
2. மருத்துவ செவிலியர் (Nursing) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது அல்லது பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும்)
3. கணினிக்கல்வி (Computer) (பல்வேறு விதமான கணினி சார்ந்த பட்டய மற்றும் உயர் பட்டப் படிப்புகள் )
4. ஆசிரியர் பயிற்சி.(Teachers Training)
5. சட்டக்கல்வி (Law) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் 3 ஆண்டு சட்டக் கல்வி அல்லது ஒரு சிறு சட்டம் சார்ந்த பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும், தனியார் பணியிடங்களில் அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்திருக்கும் கல்வி இது)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு http://youtu.be/qvCDPf1_Qeg
உங்களின் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள். காரணம் உயர் கல்வி படிப்பிற்கு தேவையான தொகை கிடைக்காதபோது நீண்ட நாட்கள் வங்கி கணக்கை வைத்திருந்த தகுதியின் அடிப்படையில் உங்களின் மகள்/மகனுக்கு அதே வங்கியில் உடனே கல்விக்கடன் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது 18 வயதிற்கு பிறகு உங்களின் மகள்/மகன் படிப்பு செலவுக்கு உங்களை சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை, அவர்களாகவே கல்விக்கடன் பெற்று அவர்களின் விருப்பப்படி படிக்க முடியும். அவர்களின் காலில் அவர்களே நிலைத்து நிற்கும் பொறுப்புள்ளவர்களாக உங்கள் பிள்ளைகளும் இப்படிப்பாடுவார்கள் "எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே". http://youtu.be/geYyN5_QYKg
,கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு http://youtu.be/qvCDPf1_Qeg
#"நான் ஒரு குமாஸ்தா நான் படுவேன் தமாஷா" பல நிறுவனங்கள், [Campus interview] கல்லூரியில் நேர்காணல்/நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னமே, மாணவர்களை நேர்காணலுக்கு தயார்படுத்துவதற்கு எங்களைப்போன்ற ஆலோசகர்களின் (Consultant) உதவியை நாடுவார்கள், நான் பார்த்த சில மேலாண்மை(Management MBA&MCA) கல்லூரிகளில் அறுபது சதவிகித மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள திணறுகின்றனர் என்பது நன்கு தெரிகிறது. நல்ல மதிப்பெண் பெற வழிகாட்டியவர்கள், நல்ல வேலையை பெறுவது எப்படி என்பதில் அதிகம் வழிகாட்டுதல் கிடைக்காமல் தினருவதையே பார்க்கின்றேன். அந்த வகையில் ஒரு மேலாண்மைக்கல்லூரியின் நேர்காணலின்போது "பிரபல ஐ டி நிறுவனத்தில் பலர் இப்படித்தான் நினைக்கிறார்கள் என கூறி... அதற்க்கு சரியான ஒரு ஆலோசனை தரும்படி என்னை கேட்டுக்கொண்டனர் , அதாவது புதிதாக வேளையில் சேருபவர்களுக்கு, வெகுகாலம் வேலையில் இருப்பவர்களைவிட அதிகம் சம்பளம் தருகிறார்கள். அதோடு புதிதாக வருபவர்களுக்கும் பழையவர்கள் வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும், எனவே வேலையே ராஜினாமா செய்துவிட்டு திரும்பவும் இதே நிறுவனத்தில் புதிதாக அதிக சம்பளத்தில் மறுபடியும் சேர்ந்தால் என்ன என்று எண்ணுகின்றனர். என்றார் " அதற்க்கு நான் இருகோடுகள் திரைப்படத்தில் வரும் தத்துவ வசனத்தை" (சிறிய கோட்டிற்கு அருகே ஒரு பெரிய கோடு போடவேண்டும்) என்று எடுத்து சொன்னேன் " எது பெரிய மற்றும் சிறிய கோடு என்பதை புரியவைத்து அதற்க்கு ஏற்ப தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கொள்ள தேவையானதை செய்யுங்கள் என்றேன்". "நான் ஒரு குமாஸ்தா நான் படுவேன் தமாஷா" http://youtu.be/YGHTH7fE_tc
அவனுக்கு அன்று ஒரு மின்சாதன பொருட்கள் தயாரிப்பின் தலைமை அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு இருந்தது. அந்த அலுவலகம் இருந்த பத்தாவது மாடியை அடைந்ததும் அங்கு வந்திருக்கும் கூட்டத்தைப்பார்த்து அதிர்ந்து போனான். இந்த கூட்டத்தில் நமக்கு வேலை கிடைத்தாமதிரிதான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே பலமணி நேரம் காத்திருந்த பின்பு அவனது அழைப்பு வந்ததும் அந்த நேர்முகத்தேர்வை எதிர்கொண்டான். மனதின் நம்பிக்கை தளர்ந்து போனதால் மனச் சோர்வுடன் " மின்தூக்கியை பயன்படுத்தாமல்" நிதானமாக படிக்கட்டின் வழியாக படியிறங்கி நடக்கலானான். அந்த அலுவலக கட்டிடத்தின் தரைப்பகுதிக்கு வந்தவுடன் அவனை அங்கு வந்த ஒரு அலுவலக அதிகாரி கை குலுக்கி வரவேற்று "நீங்கள் இந்த வேலையில் சேர தகுதிபெற்றுவிட்டீர்கள், அலுவலகத்திற்கு வந்து உங்களின் வேலைவாய்ப்பு ஆணையை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்". மின்தூக்கியை பயன்படுத்தாமல் நிலைப்படியில் நடந்துவந்து மின்சாரத்தை சேமிக்க உதவும் எண்ணம் உடையவர் என்பதாக அவருக்கு அந்த வேலை வாய்ப்பு கிடைத்தது. "நேரம் நல்ல நேரம், உன்னை நெருங்கி பார்க்கும் நேரம். காலம் நல்ல காலம்...." http://youtu.be/hIfmUOo1yyQ
#அவள் நேர்முகத்தேர்விர்க்காக சிறிது காலதாமதமாக ஓடோடி குறிப்பிட்ட அந்த அலுவலகத்தினுள் நுழைந்தால் நல்ல வேலை கூட்டமே இல்லை ஒரே ஒரு ஆள் மட்டும் டிப் டாப் உடை அணிந்து உட்கார்ந்திருந்தார். அவள் மனதுக்குள் பல எண்ணங்கள் ஓடியது வந்திருக்கும் இவன் ஒருவனை துரத்திவிட்டால் இந்த வேலை நமக்குத்தான் என்று மனக்கணக்கு போட்டு அதற்க்கான முயற்சியில் அவனை நோக்கி நகர்ந்தால். வணக்கம் என்னுடைய பெயர் வசந்தி நான் இந்த நிறுவனத்தின் பணியாளர் நல ஆணையராக இருக்கிறேன், இன்று இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு தேர்வு செய்யவேண்டிய முக்கியமான இருண்டு அதிகாரிகள் வராததால் நேர்முகத்தேர்வு வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது, பின்னர அதை உங்களுக்கு தெரியப்படுத்துவோம் ஆகவே நீங்கள் போகலாம் என்று கூறிவிட்டு அலுவலகத்தின் உள்ளே செல்வதுபோல் நடித்து சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தால். அந்த அலுவலக வரவேற்ப்பரையில் யாரும் இல்லாது வந்திருந்த ஒருவனும் சென்றுவிட்டபடியால் தனக்குத்தான் இந்த வேலை வாய்ப்பு என்று சந்தோசமாக அமர்ந்திருக்க, அப்போது அவளது பெயர் அழைக்கப்பட்டு நேர்முகத்தேர்விற்கு உள்ளே போகச்சொன்னார்கள் ... உள்ளே நுழைந்த அவள் அதிர்ந்து போனால் சற்று நேரம் முன்பு யாரை விரட்டியாடித்தாரோ, அவர் அங்கு நிறுவனத்தின் உயர் அதிகாரியாக உட்கார்ந்திருந்தார்.
நிறுவனத்தின் மேலாளர் என்பவர் விரல் நுனியில் விவரங்களை வைத்திருக்க வேண்டமா? "மேலாளர்" பதவிக்காக நேர்காணல் தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் "கழிவறை நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா" என்றார்.
இப்போது இந்த விளையாட்டின் பந்து உங்களிடம் உள்ளது. நேர்காணலுக்கு வந்திருப்பவர் நீங்கலாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.
#பொதுவாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் சொல்வதைக்கூட சுத்தகரிப்பு தொழிலாளி சரியாக செய்யமாட்டார். நீங்களோ இன்னமும் அந்த நிறுவனத்தில் சேரவில்லை ஆகவே உங்களுக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உதவமாட்டார்கள்.
#நீங்களாகவே கழிவறையை பெருக்கி சுத்தம் செய்தால் நீங்கள் அந்த பணிக்குத்தான் லாயக்கு என்று முத்திரை குத்தப்படலாம்.
#மேலாளர் பதவிக்கு வந்த என்னைப்பார்த்தா இப்படி சொன்னாய் என்று கோபித்துக்கொண்டு "சரிதான் போடா சொட்டத்தலையா" என்று திட்டிவிட்டு வந்துவிட்டாலும் நீங்கள் மேலாளர் பதவிக்கு லாயக்கு இல்லாதவர் என முத்திரை குத்தப்படும்.
# இந்த கேள்விக்கான பதில் என்ன என்றால்... உங்களின் " விரல் நுனியில் உள்ள விவரங்களை" பயன்படுத்தி கழிவறை சுத்தகரிக்கும் நிறுவனத்தை அழைத்து சுத்தம் செய்யச்சொல்லி, பிறகு சுத்தமான கழிப்பிடத்தை அந்த நிறுவன உரிமையாளரிடம் காண்பித்து "சபாஷ் மிக அருமையாக செய்திருக்கிறாய்" என்று கூறும்போது.... கழிவறை சுத்தகரித்த நிறுவனத்தின் செலவு சீட்டை தந்து அதற்க்கான தொகையை செலுத்துமாறு கூறவேண்டும். ...."வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைகாரன் வெவகாரமான வேலைக்காரன்..... "
அடுத்த நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...வணக்கம் http://youtu.be/HlYJd-bLiPk
வணக்கம் இன்று ஒரு வேடிக்கையான நேர்முகத்தேர்வு விவரத்தை பார்ப்போம், அது ஒரு மருத்துவக்கல்லூரி சேர்வதற்கான மாணவர்களின் நேர்முகத்தேர்வு நடந்துக்கொண்டிருந்தது, அப்போது ஒரு மாணவியிடம் நீ ஏன் மருத்துவராக ஆசைப்படுகிறாய் என்கிற கேள்வி கேட்கப்பட்டது அதற்க்கு அந்த மாணவி "மக்கள் தொகையை கட்டுப்படுத்த" எனக்கூறிய பதிலைக்கேட்ட அனைவரும் சிரித்துவிட்டனர். அதாவது மருத்துவராகி அனைவரையும் கொள்ளப்போகிறாய் என்பதாக அர்த்தமாகிவிட்டதை உணர்ந்த அந்த மாணவி உடனே "இல்லை இல்லை நான் சொல்லவந்தது குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவேன்" என்று மாற்றிக் கூறினார்.... இறுக்கமான அந்த இடத்தில் அந்த மாணவியால் சிறிது நேரம் சிரிப்புடன் மகிழ்ச்சி சூழ்நிலை ஏற்ப்பட்டதினாலே அவருக்கு மருத்துவகல்லூரியில் சேர தகுதி வாய்ப்பு கிடைத்தது. இங்கு இணைத்திருக்கும் இந்த பாடல் திரைப்படம், மிஸ்ஸியம்மா. கதாநாயகன் ஜெமினி கணேசன் மற்றும் கதாநாயகி- சாவித்ரி இருவரும் கணவன் மனைவி என்று பொய் சொல்லி வேலை பெற்றபோது திரையில் வரும் பாடல் குரல் : பி சுசிலா, இசை : எஸ். ராஜேஸ்வர் ராவ், நடிகை : ஜமுனா, பாடல் :- அறியாப் பருவமடா - மலர் அம்பையே வீசாதடா... மதனா... (அறியா) .. மீண்டும் நாளை சிந்திப்போம்...வணக்கம். http://youtu.be/TS0cm07-_oo

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம் அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம். http://youtu.be/zwlulhmOF8s


வணக்கம் இன்று ஒரு வேடிக்கையான நேர்காணல் விவரத்தை பார்ப்போம், அது ஒரு மருத்துவக்கல்லூரி சேர்வதற்கான மாணவர்களின் நேர்காணல் நடந்துக்கொண்டிருந்தது, அப்போது ஒரு மாணவியிடம் நீ ஏன் மருத்துவராக ஆசைப்படுகிறாய் என்கிற கேள்வி கேட்கப்பட்டது அதற்க்கு அந்த மாணவி "மக்கள் தொகையை கட்டுப்படுத்த" எனக்கூறிய பதிலைக்கேட்ட அனைவரும் சிரித்துவிட்டனர். அதாவது மருத்துவராகி அனைவரையும் கொள்ளப்போகிறாய் என்பதாக அர்த்தமாகிவிட்டதை உணர்ந்த மாணவி உடனே "இல்லை இல்லை நான் சொல்லவந்தது குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவேன்" என்று மாற்றிக் கூறினார்.... இறுக்கமான அந்த இடத்தில் அந்த மாணவியால் சிறிது நேரம் சிரிப்புடன் மகிழ்ச்சி சூழ்நிலை ஏற்ப்பட்டதினாலே அவருக்கு மருத்துவகல்லூரியில் சேர தகுதி வாய்ப்பு கிடைத்தது.

&வழக்கம் போல நடக்கும், இரயில் போக்குவரத்துத்துறையின் வேலைவாய்ப்பு நேர்காணல்(நேர்முகத்தேர்வு) நடந்துகொண்டிருந்தது அப்போது நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவரைப் பார்த்து, "இரண்டு இரயில் வண்டிகள் எதிர் எதிரே, ஒரே இருப்பு பாதையில் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, அதை பார்த்த நீ என்ன செய்வாய்" என்று கேட்கப்பட்டது.
தேர்வுக்கு வந்திருந்தவர்:- சிகப்பு கோடி காட்டி நிறுத்திவிடுவேன் என்றார்.
தேர்வாளர்:- அது இரவு நேரமாக இருந்தால் என்ன செய்வாய் என்று கேள்வி கேட்க.
தேர்வுக்கு வந்திருந்தவர்:- சிகப்பு விளக்கு காட்டி வண்டியை நிறுத்துவேன் என்றார்.
தேர்வாளர்:- சிகப்பு விளக்கு உன்னிடம் இல்லாமல் போனால் என்ன செய்வாய்?
தேர்வுக்கு வந்திருந்தவர்:- சட்டையை கழற்றி அதில் நெருப்பு பற்றவைத்து அந்த வெளிச்சத்தை கொண்டு வண்டியை நிறுத்திவிடுவேன் என்றார்.
தேர்வாளர்:- அப்படி செய்தும் வண்டி நிற்காவிட்டால் என்னசெய்வாய்?
தேர்வுக்கு வந்திருந்தவர்:- சற்று கடுப்புடன் யோசித்த பிறகு, "வீட்டிற்கு சென்று என்னுடைய தங்கையை அழைத்து வருவேன்" என்றார் ???????????????
தேர்வாளர்:- ஏன் அப்படி,.... உன் தங்கை வந்து வண்டியை நிருத்திவிடுவாரா !!!!!
தேர்வுக்கு வந்திருந்தவர்:- இல்லை ஐயா, இப்படி இரண்டு இரயில் வண்டிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதை எனது தங்கை இன்றுவரை பார்த்ததே இல்லை, ஆகவே அவளை அழைத்துவந்து வேடிக்கை பார்க்கச்சொல்வேன் என்றார்....
சிறிது நேரம் சிரிப்புடன் கூடிய மகிழ்ச்சி சூழ்நிலை ஏற்ப்பட்டதினாலே அவருக்கு வேலையில் சேர வாய்ப்பு தரப்பட்டது.
அது ஒரு பழுது பார்க்கும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனம், அன்று அந்த நிறுவனத்தில் பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான(Engineers) சில காலி இடங்கள் நிரப்புவதற்கு நேர்முகத்தேர்வு நடந்துகொண்டிருந்தது, தேர்வுக்கு வந்திருந்த ஒரு பொறியியல் வல்லுனரிடம் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகரி ஒரு சிறிய கல் உடைக்கும் உளியையும்(chisels) அதோடு ஒரு சுத்தியலையும்(Hemmar) தந்து நிறுவனத்தின் வாசல் பகுதியில் வைத்திருக்கும் ஒரு பெரிய பாறாங்கல்லை எவ்வளவு விரைவாக முடியுமோ அந்தனை விரைந்து தூள் தூளாக உடைத்துவிட்டு வாருங்கள் எனக்கூறினார். அதைக்கேட்ட நேர்முகத்தேர்விற்கு வந்திருந்த பொறியியல் பட்டதாரி நபர், நான் அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்று கூறி வெளிநடப்பு செய்துவிட்டார். அடுத்து வந்த ஒரு பொறியியல் பட்டயப்படிப்பு(Diploma) படித்த நபர், உளி மற்றும் சுத்தி போன்ற பொருட்களை நிறுவன அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டு நேராக அந்த பெரிய பாறை இருக்கும் இடம் நோக்கி நடந்தார். அப்போது அந்த நிறுவன அதிகாரி நில்லுங்கள், எதிர் கேள்வி கேட்க்காமல் எதையும் செய்ய தயாராகும் மனப்பக்குவம் கொண்ட நபரைத்தான் இந்த பதவிக்கு தேவை என இந்த நிறுவனத்தின் முடிவிற்கு நீங்கள் தகுதியுடையவராக, உங்களை நாங்கள் இந்த பனி இடத்திற்கு தேர்வு செய்திருக்கிறோம். அதற்க்கான பனி உத்தரவை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். "நாளை உலகை ஆளவேண்டும் உழக்கும் கரங்களே, இந்த நாடு முழுதும் வளரவேண்டும் உழக்கும் கரங்களே ... வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே " http://youtu.be/WR84yInGjCE
 

'சாருகேசி' சுந்தரராஜன் பற்றி உங்களுக்கு தெரியுமோ?...

'சாருகேசி' சுந்தரராஜன் பற்றி உங்களுக்கு தெரியுமோ?...அவர் வெவ்வேறு ராகங்களில் அமைந்த கர்னாடக சங்கீத பாடல்களை பிடிவாதமாக "சாருகேசி" ராகத்திலேயே பாடக்கூடியவர். இவரின் "சாருகேசி" ரகத்தில் அமைந்த கர்நாடக சங்கீத கச்சேரிக்கு தனி ரசிகர் கூட்டமும் உண்டு. "வாதாபி கணபதிம் பஜேயை" ஹம்சத்வனி ராகத்தில் பாட வேண்டியதை, சர்வ சாதாரணமாக சாருகேஸியில் பாடுகிறார், மேலும் சிந்துபைரவி திரைப்படத்தில் இளையராஜா காம்போஜியில் உள்ள 'மரிமரி நின்னே' கீர்த்தனையை சாருமதியில் மாற்றிப் பாடியதை கேட்ட அனைவரும் இவரைப்பற்றி பெருமையாக பேசுகிறார்கள் என்றால் பாருங்களேன் !!!!!!!!!!!! சாருகேசி ராகம், இதன் பூர்வாங்கம் சங்கராபரணத்தைப் போன்றும், உத்தராங்கம் தோடியைப் போன்றும் இருப்பது கவனிக்கத் தக்கது. அது சரி இந்த ராகத்தில் அமைந்த திரைப்படப்பாடல் ஒன்று உலக தமிழ் ரசிகர்களை விழுங்கி ஏப்பம் விட்டது அது இந்த பாடல்தான் மன்மத லீலையை வென்றாருண்டோ..: ஹரிதாஸ் http://youtu.be/Lt3MRCvAtao

ஆண்பால் ராகமான ‘காபி ராகம்’ ரம்யமான மாலை வேலையில் பாட ஏற்ற ரகமாகும்

ஆண்பால் ராகமான ‘காபி ராகம்’ ரம்யமான மாலை வேலையில் பாட ஏற்ற ரகமாகும். சங்கீத கச்சேரிகளில் காபியில் கட்டிப்போட 'என்ன தவம் செய்தனை'.... யசோதை கண்ணனை உரலில்தானே கட்டினார், கச்சேரியில் பாடகரோ "ரசிகர்களை குரலில் கட்டி வாய் பொத்தி, கண்ணனைக் கெஞ்ச வைத்து, ரசிக்கும்படி பாடிக்கொண்டிருப்பார். காணரம் ரசிகர்களை இடையில் காப்பி குடிக்க எழுந்துபோகாமல், செவி வழியே காபி இராகத்தை புகுத்தும் இந்த நுணுக்கத்தை சங்கீத கச்சேரிகளில் காபி இராகம் பாடாத சங்கீத கச்சேரியா? என்று பயன்படுத்திக்கொண்டார்கள். http://youtu.be/a0RGxUXOZRs

"காபி ராகம்" ராகத்தின் ஸ்வரங்கள்: ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், அந்தர காந்தாரம்,சுத்த மத்யமம்(ஹிந்துஸ்தானி மரபில் ‘ப்ரதி மத்யமம்’அன்னிய ஸ்வரங்கள் வ ரும்) பஞ்சமம், சுத்த தைவதம்.
"காபி ராகம்" இந்த ராகம் 22ஆவது ‘மேளகர்த்தா’வான ‘கரஹரப்ரியா’விலிருந்து உருவானது. (அதாவது ஜன்ய ராகங்கள்’ என்பவை ‘தாய் – ராகங்களின் ’ ஸ்வரங்களின் எண்ணிக்கையை மாற்றியமைப்பதன் மூலம் பிறப்பவை)
ஆண்பால் ராகமான ‘காபி ராகம்’ ரம்யமான மாலை வேலையில் பாட ஏற்ற ரகமாகும்.(மாலையில் காப்பி குடிக்கும் நேரத்தின் பொது) இந்த
ராகத்தில் கர்னாடக கச்சேரி பாடல் நிறைய இருக்கு, அதில் அதிகம் கச்சேரியில் இந்த 'என்ன தவம் செய்தனை' என்ற பாடலை பலரும் விரும்பி பாடுகின்றனர். திரைப்படப்பாடல்கள் வரிசையில் -பழைய பாடல்கள் :-
# ஔவையார்(1953) படத்தில் வரும் இந்த பாடல் "நல்லார் ஒருவருக்கு", பாடியவர் K.B.சுந்தராம்பாள், பாடலுக்கு இசை மாயவரம் வேணு.
# காளிதாஸ் படத்தில் வரும் "காலத்தில் அழியாத காவியம் தரவந்த மாபெரும் கவி மன்னனனே- K.B.சுந்தராம்பாள், பாடலுக்கு இசை திரையிசை திலகம் கே வி மகாதேவன் அவர்கள்.
#. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி(1954) படத்தில் அழகே பெண் வடிவான பிம்பமே என்கிற பாட்டை பாடியவர் V.N.சுந்தரம் , இசை T.G.லிங்கப்பா, பாலை இயற்றியவர் K.D.சந்தானம்.
இடைக்காலப்பாடல்கள் :-
# ப்ரியா (1978) படத்தில் வரும் ஒரே பாடல் ஒன்று என்ற பாடலை பாடியவர் S.ஜானகி, மற்றும் K.J.யேசுதாஸ் அவர்கள், இசை இளையராஜா.
#. மூன்றாம் பிறை(1982) படத்தில் வரும் பாடல் கண்ணே கலைமானே, பாடியவர் K.J.யேசுதாஸ், கண்ணதாசன் அவர்களின் இந்த பாடலுக்கு இசை இளையராஜா.
புதிய பாடல்கள் :-
#. மே மாதம் (1994) படத்தில், என்மேல் விழுந்த மழைத் துளியே என்கிற பாடலை பாடியவர் ஜெயச்சந்திரன், இசை A.R.ரஹ்மான்.
#. பம்பாய்(1995) படத்தில் குச்சி குச்சி ராக்கம்மா என்கிற பாடலை பாடியவர் ஹரிஹரன் குழுவினர், இசை A.R.ரஹ்மான்.
எனது குறிப்புக்கள் அனைத்தும் வானொலி நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு நிலையத்தார்களின் விருப்பாப்படி மூன்று பிரிவுகளில் அமைத்திருக்கும் அதாவது திரைப்பாடல்கள் பழைய பாடல்கள், இடைக்காலப்பாடல்கள், புதியபாடல்கள் என பிரித்து அமைத்திருப்பேன்.

ஆனந்த பைரவி ராகம் -ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்

ஆனந்த பைரவி ராகம் -ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அதுபோலத்தான் ஆனந்த பைரவி இராகம், தாளம் - ரூபகமாகக்கொண்டு பாட ஆரம்பித்தால் ஆர்வமுள்ள சங்கீதப்பிர்யர்களுக்கு நிறுத்த மனமிருக்காது. 1985,86 அப்போதெல்லாம் ஒலி நாடாக்களில் (டேப் ரெகார்டர்) மூலம் பாடலை ரசிக்கும் ரசிகர்கள் அதிகம் இருந்த காலம் TTK மற்றும் T-Series ஒலி நாடாக்கள்(T60 & 90) மிகவும் விலைகுறைவாக கிடைத்தது சென்னை "லக்ஷ்மி மயுசிகல்ஸ்" அவர்களுக்காக மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் "ஆனத்த பைரவி மற்றும் கல்யாணி" இராகத்தில் அமைந்த கச்சேரியை பதிவு செய்து தந்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகாராஜபுரம் சந்தானம் அப்படி ஒரு மன நிலைக்கு எங்களை அழைத்து சென்றார் அவரின் தனிப்பாடல்களில் அமைந்த கச்சேரி மிகவும் பிரபலமானது ஆகவே அதை ஒலி நாடவாக செய்யலாம் என்கிற எங்களது முதல் முயற்சி பெரிய வெற்றியாகவும் அமைந்தது " கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா" இந்த பாடல் பல ராகங்களால் ஆனது(அதாவது ராகமாலிகா) முதல் சரணம் வரையில் ஆனந்த பைரவி ராகம். பிறகு வரும் சரணங்கள் கல்யாணி, பாகேஸ்வரி மற்றும் ரஞ்ஜனி ஆகிய ராகங்கள். இவை எல்லாம் அந்த பாடலிலேயே வரும். இந்த ராகத்துக்கு மட்டும் ஒரு சிறப்பு,... கேட்க கேட்க சந்தோசமும் குதூகலமும் பெருகும்...சோர்ந்த உள்ளங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரும் ரகமாக இருப்பதோடு நமது வாழ்க்கைக்கு இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் கேட்பது அவசியமும் கூட. கர்னாடக கச்சேரிகளில் நிச்சயம் இந்த ராகத்தில் ஒரு சில பாடல் இருக்கும், இந்த ஆனந்த பைரவி ரகத்தில் ஷியாமா சாஸ்திரிகளின் 'மரிவேர கதி" மற்றும் "ஓ ஜகதாம்பா" வும் அவரின் அனைத்து கச்சேரிகளிலும் நிச்சயம் ஒலிக்கும் அதை கேட்க கொடுத்துவைத்திருக்கவேண்டு.
ஆனந்தபைரவியின் ஆரோகானம்-ஸகரிகமபதநிஸ.....அவரோகனம்-ஸநிதபமகரிஸ. இந்த ராகம் பொதுவாக ஆனந்தமான, ரம்மியமான மனநிலையை தரவல்லது (இந்த ராகத்தில் இதமான சோகத்தை வெளிப்படுத்தவும் பாடலாம்) திரைப்பாடலை விட இந்த இராகத்தில் அமைந்த பக்தி பாடல்களான விநாயகர் மற்றும் முருகன், கண்ணன், ஐயப்பன், அம்மன் பாடல்கள் மனதுக்கு இதமான இன்பத்தை தருபவை. திரைப்பட பாடல்களில் முதலில் -பழைய பாடல்களின் வரிசையில்:-
#. சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா -காளிதாஸ்
#. போய் வா மகளே போய் வா - கர்ணன்
இடைக்காலப்பாடல்கள் வரிசையில்:-
#. காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் - காவல்காரன்(எம்.ஜி.ஆர் படத்தின் ஒரு அற்புதமான பாடல்)
#. நான் ஆட்சி செய்துவரும் - ஆதி பராசக்தி
#. சபரி மலையில் வண்ண சந்ரோதயம் - ஸ்வாமி ஐயப்பன்
புதிய பாடல்கள் வரிசையில்:-
#. கொஞ்ஜ நாள் பொறு தலைவா - ஆசை(இசை அமைப்பாளர் தேவாவிற்கு அவர் இசையிலேயே மிகவும் பிடித்த பாடல் - பாடல் வரிகள் உள்பட)
#. மெட்டு போடு மெட்டு போடு -டூயட்
#. சுடிதார் அணிந்து வந்த சொர்கமே - பூவெல்லாம் கேட்டு பார்
http://youtu.be/Z7G77osJiRE
அடுத்த பகுதியில் நாம் கல்யாணி ராகத்தில் அமைந்த மழையில் நனைவோமா ?
Not complete yet…. to be add some more info in this….each 3 title of 1.old songs/ 2.middle songs/ 3.new songs to be each title =10songs you can take a choice of 5 to broadcast in every single title.
[2:22:44 PM] A9RADIO™: This is excellent Sir.
[2:23:26 PM] A9RADIO™: will be amazing if we can do this show
[2:27:38 PM] A9RADIO™: Talk to your sponsor
[2:28:05 PM] A9RADIO™: it will be like a 1 hour program with all these song
[2:28:19 PM] A9RADIO™: so good for weekly
[2:28:52 PM] A9RADIO™: show
[2:29:51 PM] A9RADIO™: every 15min we can play sponsor's advertisement
[2:30:39 PM] A9RADIO™: and also mention as many as verbaly like this program sponsored by so and so...
[2:32:15 PM] A9RADIO™: for 1 hour show to produce and play $150 per episode
[2:32:38 PM] A9RADIO™: but we can discuss about that.

Him to sponsored this programme for me to play a add programme in A9 Radio…. Please the details to be mail you ..note will take one more month time It’s depending sponsor ship and yours (A9 Radio) availability of programme.
உங்களுக்கு தெரியுமா? ஒரு மணிநேர வானொலி விளம்பரதாரர் நிகழ்ச்சி ஒன்றுக்கு $100-150 +அமெரிக்க டாலர் அல்லது ருபாய் 7500-10000 வரை ஆகும். உங்களின் வியாபார உறவினரோ அல்லது நண்பர்களோ அவர்களின் விளம்பரத்துடன் கூடிய இந்த தொகையை, நீங்கள் தாயரித்த நிகழ்ச்சிக்கு தர தாயாராக இருந்தால் உடனே உங்களுக்கு பிடித்த வானொலி அல்லது TV நிகழ்ச்சி தாயாரிப்பாலரை தொடர்புகொண்டால் ...TV / வானொலியில் உங்களின் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்..உங்களின் முயற்சிக்கு ஏற்ப அந்த நாள் உங்களுக்கு அருகே

 

ஆனந்த பைரவி ராகம் என்றாலே எனக்கு பெங்களூர் ஏ.ஆர். ரமணியம்மாள் அவர்களின் பாடல்கள் முதலில் ஞாபகத்திற்கு வரும்
பாடல்: வேலவா வடி வேலவா, இயற்றியவர்: எஸ். கோவிந்தராஜன், இசை: டி.ஏ. கல்யணம்....
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா
வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்று வேலவா
ஓடி வா அன்பரை நாடி வா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா ....http://www.youtube.com/watch?v=t9ImA-OmnL8&feature=share&list=PL4F2A7DB317C0F0EC

பொம்ம பொம்ம தா, தைய தைய நாக்கு...திநாக்கு நக்குதின பாஜங்கரே (Thaipusam Song) by Bangalore A.R Ramani http://youtu.be/eNThyII96xo
Song: vElavaa vati vElavaa - பாடல்: வேலவா வடி வேலவா
Singers: Bangalore A.R. Ramaniyammal
பாடியவர்: பெங்களூர் ஏ.ஆர். ரமணியம்மாள்
Lyrics: S Govindarajan - இயற்றியவர்: எஸ். கோவிந்தராஜன்
Music: T A Kalyanam - இசை: டி.ஏ. கல்யணம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா
வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்று வேலவா
ஓடி வா அன்பரை நாடி வா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்று வேலவா
ஓடி வா அன்பரை நாடி வா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா

Song: eppadi padinaro - பாடல்: வேலன் வருவாரடி
Singers: D.K. Pattammal - பாடியவர்: டி.கே. பட்டம்மாள்
Lyrics: Desika vinayagam pillai - இயற்றியவர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Raga: Ragamalika
ராகம்: ராகமாலிகை
வேலன் வருவாரடி வேலன் வருவாரடி
வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி
வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி
வேலன் வருவாரடி
வள்ளிமேல் மோகம் கொண்டு வேடனான வடி
வேலன் வருவாரடி வருவாரடி வருவாரடி


பூபாள ராகம் - இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை விடியற்காலையில் பாடுவது சிறப்பு

அமைதியான விடியற்காலை என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும்..எங்கோ வெகுதூரத்திலிருந்து காற்றில் தவழ்ந்துவரும் பக்தி கீதம் , அதிலும் மார்கழி மாதம் என்றாலே விடியற்காலையில் கோவிலில் அபிஷேக தரிசனம் முடிந்து ...வரிசையில் நின்று கைநிறைய சுட சுட பொங்கல் பிரசாதம் சாப்பிடும் அந்த தேவாமிருத சுவைக்கு ஈடு இணையே இல்லை.. .நான் இங்கு சொல்ல வந்தது , பூபாள ராகம் - இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை விடியற்காலையில் பாடுவது சிறப்பு, இந்த ராகத்திற்கு ஏற்ற இசைக்கருவி புல்லாங்குழல் மற்றும் "சுப நாயனம்" இத்துடன் 'கடம் அல்லது மிருதங்கம்" வாசிக்க தகுந்தது என புராணங்களில் குறிப்பு உள்ளது (முன்னோர்கள் வகுத்த நெறிமுறைகளை பின்பற்றுவது எவருக்கும் எந்த காலங்களுக்கும் சிறந்தது) ஆண் பால் ராகமான இந்த ராகத்தின் ஷட்ஜமம்- சுத்த ரிஷபம், (அந்தரகாந்தாரம்) பஞ்சமம், சுத்த தைவதம் (முக்கியமாக -‘மத்யமம்’, ‘நிஷாதம்’ ஆகிய ஸ்வரங்கள் இந்த ராகத்தில் இல்லை எனலாம்) (ஆண் பால் ராகம் என்றால் ஆண்கள் பாடக்கூடியது என்று ஏதும் அர்த்தம் இல்லை ..சுருக்கமாக இந்த ராகம் உச்சஸ்தாதியில் (கட்டை) ஏற்ற இரக்கங்களின் அளவிற்க்கேர்ப்ப தன்மையை உணர்ந்து, ராகங்களை வகைப்படுத்தினார்கள் ...இன்னும் பால விவரம் உள்ளது எல்லாவற்றையும் கூறுவது என்பது இந்த இடத்தில் மெத்த கடினம்) இப்போது இந்த ராகத்தில் அமைந்த பக்திப்பாடல்கள் பல உள்ளது "கைதல நிறைகனி "....முதலில்முக்கியமான நமது முழு முதர்க்கடவுலான விநாயகர், முருகன் பாடல்கள் மற்றும் கண்ணன் பாடல்களும் அதிகம் உள்ளது. திரைப்படப் பாடல்கள் -(மகாநதி) ஸ்ரீ ரங்கா ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி, அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி அதை கூவென்று சொல்லுகிரேன், உன்னிடம் மயங்குகிறேன் உள்ளாத்தல் நெருங்குகிறேன், சலங்கையிட்டாள் ஒரு மாது, தெய்வீக ராகம் திகட்டாத பாடல் கேட்டாலே போதும்,நானாக நான் இல்லை தாயே, பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் (கலப்பு ), இப்படி பல பாடல்கள் உள்ளது http://youtu.be/eKZy3DK5KBg

மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிருஷ்ணா

‘மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹணத்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன.[ஆரோகணம்: S G3 PA N2 S அவரோகண்ம்: S N2 PA G3 S] (#நாரதர் கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர் !!!)! இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கியதோடு இந்த ராகத்தை முதன் முதலில் சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராகத்தினை அறிமுகம் செய்தார். இந்தக் கச்சேரியில் இவர் பாடிய "மஹதி" ராகப் பாடலான " மஹனீய மதுர மூர்த்தே " என்ற பாடல் இவரின் கர்னாடக கச்சேரியில் மிகப் பிரபலமானது. அபூர்வமான இந்த ராகத்தில் அமைந்த ஒரே ஒரு திரைப்பாடல் 'அபூர்வ ராகங்கள்' தமிழ்த் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது இயக்குநர் பாலசந்தர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு வித்தியாசமான, ஒரு அபூர்வ ராகத்தில் பாடல் வேண்டுமென்று கேட்டிருக்கின்றார். விஸ்வநாதன் தற்செயலாக பாலமுரளி கிருஷ்ணாவைச் சந்தித்திருக்கின்றாராம். அப்போதுதான் பாலமுரளி தனது உருவாக்கமான மஹதியைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதில் உருவானதுதான், மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான "அதிசய ராகம்; ஆனந்த ராகம்; அழகிய ராகம்" என்ற பாடல். இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறிவிடுகின்றது (ராகமாலிகை பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன் ஒரு பாடலில் பல ராகங்களும் தொடர்ந்துவரப் பாடும் ராகத் தொடர்ச்சியே ராகமாலிகை ) இந்த அதிசய ராகத்தினைக் இப்போது இங்கே கேளுங்கள்.http://youtu.be/zzV7M7SEaig
தங்களுக்கு எனது மிக்க நன்றிகள் நன்றி நன்றி
#கொசுறுச் செய்தி: மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணையின் பெயராகும். ஆனால், 'எந்தப் படத்திலும் நாரதர் வீணையின வைத்துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவைதானே வைத்துக் கொண்டு வருவார்', என்று நீங்கள் வியப்பது எனக்கு புரிகின்றது. முதன் முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணையை வைத்துக் கொண்டு வருவதாகத்தான் காட்சிகள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல் நாரத இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொண்டுபடும் அவஸ்தையினப் பார்த்த ஆர்ட் டைரக்டர், வீணைக்குப் பதிலாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்பது போலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்குப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நாரதர் ஏன் என்று கேள்வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூக்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, "நாராயண; நாராயண" என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி

&2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
&நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
... அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
&பொருத்தமான பாடல்கள் கொண்ட குட்டி வானொலி கதைகள் ...தாங்களே முன்வந்து கேட்டதற்கு எனது நன்றிகள்
&என்னிடம் தயாராக உள்ள கதைகளின் நடுவில் உள்ள பழைய பாடல்களை மாற்றி சற்று புதிய பாடல்களை பொருத்தி சரிசெய்து அனுப்பிவைக்கிறேன்.
&ஒரு இந்திய விவசாயியும் பாகிஸ்தான் விவசாயியும் சந்தித்துக் கொண்டார்கள்..

இந்தியர் தன் வயலைச் சுற்றிக் காட்டினார்..

பாகிஸ்தானி சொன்னார்.. என்னுடைய வயலை காரில் சுற்றிப் பார்க்க ஒரு முழுநாள் தேவைப்படும்..

இந்தியர் சொன்னார்..

" என்கிட்டேயும் அது மாதிரி ஒரு ஓட்டைக் கார் இருந்தது. பழைய இரும்புக்கு
போட்டுட்டேன்,,!*(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&மன்மோகன் சிங்கும், ஒபாமாவும்
பாரில் அருகருகே அமர்ந்து உள்ளனர். அப்போது ஒரு நபர் அந்த பாருக்கு வருகிறார்.

சிப்பந்தியிடம் அவர்கள் மன்மோகன் சிங்கும், ஒபாமாவும் தானே என்று கேட்கிறார்.

"ஆம்! அவர்கள்தான்!" என்றார் சிப்பந்தி.

உடனே அந்த நபர் அவர்களிடம் சென்று "ஹலோ! இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்றார்.

மன்மோகன் சிங் & ஒபாமா : "நாங்கள் மூன்றாம் உலகப் போரைப் பற்றி விவாதிக்கிறோம்."

அந்த நபர், "ஒ! உண்மையாகவா? என்ன நடக்கப் போகிறது? " என்று கேட்கிறார்.

மன்மோகன் சிங்: "நல்லது! நாங்கள் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களையும், ஒரு சைக்கிள்
ரிப்பேர் செய்கிறவரையும் கொல்லப் போகிறோம்"

உடனே அந்த நபர் மிகவும் ஆச்சரியத்துடன் "என்னது ஒரு சைக்கிள் ரிப்பேர் செய்பவரா?" என்று கேட்கிறார்.

மன்மோகன் சிங் ஒபாமா ஐப் பார்த்து, "பார்த்தீர்கள? நான் அப்பவே சொன்னேன், ஒருவரும் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களைப் பற்றி கவலைப் படமாட்டார்கள்! நாம் திட்டமிட்டபடி இதை செய்து முடித்துவிடுவோம்"
நான் படித்ததில் பிடித்த நகைச்சுவை இது. .....

$ ஒரு ஆப்பிரிக்கன், ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி மூவரும் மெக்சிகோவில் பயணம் செய்த போது ஒரு மெக்சிகனை ஏதோ ஒரு காரணத்துக்காக கொன்று விட்டனர்.அவர்கள் மூவருக்கும் மின்சார நாற்காலி மரண தண்டனை அளிக்கப்பட்டது.

ஆப்பிரிக்கன் ' நான் ஒரு டென்டிஸ்ட். நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் .என்னை விட்டுவிடுங்கள் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

இந்தியன் ' நான் ஒரு டாக்டர் . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது .. சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

பாகிஸ்தானி ' நான் ஒரு எலெக்ட்ரிகல் இஞ்சினியர்.. . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன்...அதற்கு முன் ஒரு விஷயம்..அங்கே பாருங்கள் நீங்கள் ஒயரை மாற்றி கனெக்சன் கொடுத்துள்ளீர்கள்..அந்த கருப்பு ஒயரையும் சிவப்பு ஒயரையும் இடம் மாற்றினால் தான் மின்சாரம் பாயும்.'....... மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

&ஒரு பாகிஸ்தானிய மாணவன் அமெரிக்க பள்ளி ஒன்றில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

ஆசிரியர்: உன் பெயர் என்ன?

மாணவன்: அஹமத்

ஆசிரியர்: தவறு. இப்பொழுது நீ அமெரிக்காவில் இருக்கிறாய். எனவே இன்றிலிருந்து உன் பெயர் ஜானி. சரியா...

பாகிஸ்தானிய மாணவன் யோசித்தபடியே வீட்டுக்கு சென்றான். வீட்டில் அவனது தாய் 'முதல் நாள் வகுப்பு எப்படி இருந்தது?' என்று கேட்டார்.

மாணவன்: ஓ....நன்றாகவே சென்றது. இன்றிலிருந்து நான் ஒரு அமெரிக்கன். என் பெயர் இனி ஜானி.

பையனின் தந்தையும் தாயும் இஸ்லாத்தை அடி பிறழாமல் பின் பற்றுபவர்கள். எனவே கிறித்தவ பெயரை வைக்கக் கூடாது என்று போதித்தனர். பையன் கேட்பதாக இல்லை. எனவே இவ்வாறு சொன்னதற்காக பையனை திருத்துவதற்காக அவனை அடித்து விட்டனர். அடி வாங்கிய மறு நாள் அதே யோசனையோடு பள்ளியினுள் நுழைந்தான் அஹமத். இவன் யோசனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்த ஆசிரியர் 'என்ன ஆச்சு உனக்கு ஜானி?' என்று கேட்டார்.

பையன் பொறுமையாக சொன்னான் "அமெரிக்கனாக மாறிய என்னை இரண்டு பாகிஸ்தானிகள் அடித்து விடடனர்"

&கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இபோ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???....
& அப்பா : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?
மகன் : அம்மா அடிச்சிட்டாங்கப்பா...
அப்பா: சீ ..சீ...இதுக்கெல்லாமாடா அழுவாங்க?
மகன் : அட போங்கப்பா நீங்க எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க என்னால முடியல

& சுதா: ஏன் அந்த கிளி ஜோசியக்காரர் வந்தாலே எல்லோரும் கதவை சாத்திக்கிறாங்க?
மகா: அவர் எல்லோரும் பயந்து சாகுறமாதிரி ‘கிலி' ஜோசியம் சொல்லுவாராம் அதான்....

$கமலா: கல்யாணம் வேண்டாம்னு சொன்ன நீ உடனே கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொல்றியே எப்படி?
விமலா: உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கம்மியா இருக்காம். டாக்டர் சத்தானதா சமைச்சு சாப்பிடச் சொன்னார். அதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன்....

& பெண்: டாக்டர் என்னோட கணவர் தினமும் தூக்கத்தில என்னைய திட்டுறாரு.
டாக்டர்: முழிச்சிட்டு இருக்கிறப்ப செய்ய முடியாததை
தூங்கும்போதாவது செய்யட்டுமே விடுங்க !..

&டாக்டர் : இன்னையில இருந்து உங்களுக்கு புது சிகிச்சையை அறிமுகம் செய்யப்போறோம்.
நோயாளி : புது சிகிச்சை இருக்கட்டும் டாக்டர். முதல்ல அந்த புது நர்ஸை அறிமுகப்படுத்துங்க !..

&பப்பு - அப்பா, உங்களால இருட்டுல கையெழுத்துப் போட முடியாதுன்னு சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்க.
அப்பா - யார் சொன்னா, எப்படிப்பட்ட அமாவாசை இருட்டிலேயும் சூப்பரா கையெழுத்துப் போடுவேன் தெரியுமா.. எங்க போடனும் சொல்லு..
பப்பு - என்னோட பிராகரஸ் ரிப்போர்ட்ல தான்...!

&நோயாளி : ஆபரேசனுக்கு முன்னாடி டாக்டர் ஏன் நெத்தியில கோடு போட்டார்?
நர்ஸ் : டாக்டர் எந்த வேலை செஞ்சாலும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிப்பார் அதான்....

&ஒருவர் : அந்த டாக்டர் ஆபரேசன் பண்றப்ப கூட மயக்க மருந்து யூஸ் பண்ணமாட்டார்.
மற்றவர் : பரவாயில்லையே !
ஒருவர் : அட நீ வேற ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடியே பீஸ் எவ்வளவுன்னு சொல்லிடுவாரு அதுலையே நோயாளி மயங்கிடுவாங்க....

&மச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்!!!??.........

நானா ....எப்படிடா??!!....

இப்பவோ......அப்பவோன்னு இருந்த என் மாமனார்கிட்ட நீ எழுதின ஒரு ஜோக்க படிச்சு காட்டினேண்டா......அவ்வளவுதான் பொட்டுன்னு போயி சேர்ந்துட்டாருடா.....அப்புறம் அவருடைய சொத்தெல்லாம் எனக்கு வந்துடுச்சில்ல??!!!.

&கட்சித் தொண்டர்கள்கிட்டே ‘மனு’ வாங்கிய
தலைவர், ஏன் கோபப்பட்டாராம்?

&யாரோ ஒரு தொண்டர், பசங்களோட வீட்டு பாடத்தை செய்து கொடுக்க சொல்லி மனுவாக கொடுத்துட்டாராம்…அதான்!
உன் பேரு என்னம்மா?

"சனியாத்தா"

உன் புருஷன் பேரு என்னம்மா?

"சனியப்பன்"

உன் பெரிய பையன் பேரு?

"பாத சனி"

உன் சின்ன பையன் பேரு?

"அஷ்ட சனி"

உன் ஊரு பேரு?

"சனியாசிகுப்பம்"

உன் புருஷன் என்ன வேலை செய்கிறார்?

"சனிஸ்வரர் கோயில் வாசலில் சம்சா விற்கிறார்"!!!!!!!??......

சென்சஸ் எடுப்பவர் : அட... ச்சே...ராசி பலன்லே ..ஏழரை ஆரம்பம்னு போட்ருந்தான்...நான் நம்பலை....ஆரமபிசிடுச்சுடா..சாமி...

&ஒரு பேருந்து விபத்து!
பயணிகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தனர். கைகால்கள் இழந்தவர்களின் அலறல்.

"கண்டக்டர் என்னப்பா ஆனான்?"

பரபரப்போடு கண்டக்டரை அக்கறையோடு தேடிக்கொண்டிருந்தார் ஒருவர்.
"பாவம், கண்டக்டர் இவருக்கு ரொம்ப பழக்கமான ஆள் போலிருக்கு!" என்று நினைத்த சிலர், சற்று தொலைவில் ஒரு மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கண்டக்டரை அவருக்கு சுட்டிக்காட்டினார்கள்.

பரபரப்போடு அவரை நோக்கி ஓடினார் அந்த ஆசாமி.
உடைந்துபோய் ரத்தம் வழிந்துகொண்டிருந்த தன் மூக்கைப் பொத்தியவாறு உட்கார்ந்திருந்த கண்டக்டரை நெருங்கினார் அவர்.

"என்னப்பா...இங்கேயா இருக்கறே.....ஆனது ஆயிப்போச்சு...நடக்கவேண்டியதைப் பார்க்கணுமுல்ல....எனக்கு வரவேண்டிய சில்லறை பாக்கி 15ரூபா அம்பது காசைக் குடுத்துடுப்பா!.....நான் வேற பஸ்சுல போய்க்கறேன்!"

&என்னதான் ரகசியமோ இதயத்திலே...
நினைத்தால் எனக்கே சிரிப்புவரும் சமயத்திலே

&விழியிலே மணி விழியினில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களின் பொன்னும் மின்னும்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
ம்ஹும்.. ம்ஹும்..:
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீயும் ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்

&கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாம் அதிசயம் ஆனந்தம் ..காற்றினிலே வரும் கீதம்....

Tea கப்புல "Tea" இருக்கும், World கப்புல

&ஜோசியர் :-இன்னும் ஆறு மாதம் மட்டுமே உங்களுக்கு ரொம்ப கஷ்ட்டம்
ஜோசியம் பார்க்க வந்தவர் :- ஆறு மாதத்துக்கு அப்பறம்
ஜோசியர் :- கஷ்டம் தெரியாமல் பழகிவிடும்
&என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,
சினிமா Colourல தான் ஓடும்.
 &என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,

&உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. தொடர்ந்து பணியைச் செய்ய வேண்டும்.
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து தான் ஆக வேண்டும்.
&மரணத்தைப் பற்றி கவலைப்படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை. பிறகு எதற்கு அந்தக் கவலை?
&புது தில்லியில் ஒரு தொலைபேசி உரையாடல் - "சுந்தர் என்பவர் எனது ஆபீஸ் நண்பர், என் குழுவில் புதிதாக சேர்ந்த என்ஜினியர் ஒரு காஷ்மீரத்துப் பெண் பெயர் "மீனாக்ஷி மாண்டு" அன்று ஒரு தொலைபேசியில் ஹிந்தியில் அழைப்பு வர மறு முனையில் "மீனாக்ஷி ஹே" என கேட்க.... நான் "ஹே" இருக்கிறார் என்றேன் அடுத்து ஹிந்தியில் 'சுந்தர் ஹே" என்று கேட்டதும் நான் "பஹூத் சுந்தர்" என்றேன் (ஹிந்தியில் சுந்தர் என்றால் அழகு) ..... ரொம்ப அழகு என்றுகூற, ஆனால் தொலைபேசியில் கேட்டதோ சுந்தர் என்கிற எனது ஆபீஸ் நண்பரை என்பது தெரிந்த பிறகு ... சிரிப்புதான் ........
ஹையா ரிக்க்ஷா மாமா பாட்டு எனக்கு பிடிக்கும்
 
&அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மால, எடுத்த வாரேன்
கழுத்த காட்டு கை இரண்ட சேர்த்து
&பேய், பூதம், பிசாசு-பாட்டு
பயமாஇருந்தா... பாக்காவேண்டாம், கேட்கவேண்டாம்.....
தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி காதலான கண்ணீர் காணவில்லையா ஓ நீயில்லாமல் நானா
 
&சின்னப்புறா ஒன்று, எண்ணக் கனாவினில், வண்ணம் கெடாமல் வாழ்கின்றது. நினைவில், உலவும்... நிழல் மேகம்,.... நூறாண்டுகள் நீ வாழ்கவே...

&ஆ... ஆஆஆஆ ஆ... ஆஆஆஆ
வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான்
வாசலைத் தேடி வா வா வா
 
&BOY-boy பாயினா பய்யன்
GIRL-girl கேர்ள் ன்னா பொண்ணு
இந்த பொன்னைக் கண்டதும்
போதை உண்டாகுதே...........
MAD-mad 'மேட்' ன்னா கிறுக்கு
HEAD-head ஹெட் ன்னா தலை
தலை கிறுக்கு புடுச்சு நீ
ஏனோ திண்டாடுரே....
எஸ் பி பி அவர்களின் கிட்டா[ர்] இசையில் இழைத்தேடுக்கும் இனிய பாடல்
பல்லவி இல்லாமல், பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஒடுகிறேன்
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும் போதும் பேசுகிறென் ஹ
இந்த ராகமும் தாளமும் எதற்காக ?
உயிரே உனக்காஆஹ, உயிரே உனக்காஆஹ
உயிரே உனக்காஆஹ, உயிரே உனக்காஆஹ

&மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ரசிப்பதில்லை
அந்த பௌர்னமியை இவன் ஹ்ஹ ரசிப்பதில்லை

& வள்ளுவன் குறளில் சொல்லேடுத்தேன்
கம்பன் கவியில் சுவை எடுத்தேன்
இளங்கோ வரியில் எழில் எடுத்தே
பாடுவோம், நாம் ஆடுவோம் .... 

&அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
&விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

&வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

&ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
&உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!
&டீச்சர்: உன்னோட பேர் என்னமா?
பெண்: ஐஸ்வர்யா
டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?
பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டாகூப்பிடுவாங்க..
டீச்சர்: ??? ( எதுக்கு தாயி இந்த கொலை வெறி? )
&ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
"ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன‌
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்"
 
&உனது எதிரி எறும்பு போல இருந்தாலும்,
அவனை யானை போல கருது....
&வாழ்கையில் ரெண்டு விசயத்த எப்பவும் மறக்கக் கூடாது.
விரும்பி எது வந்தாலும் take care
விலகி எது போனாலும் don't care
தொ[ல்]லைப்பெசியிளிருந்து......
 & என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,
சினிமா Colourல தான் ஓடும்.
&என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
... வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.
 
& பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
சொன்னா புரிஞ்சுக்கணம்... அவ்வளவுதான்(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) ம்)  
 
& ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு.....
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு......(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
 
&வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி  கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் "ப்ரைஸ்" கிடைக்கும்.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
...
&என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
&Tea கப்புல "Tea" இருக்கும், World கப்புல World இருக்குமா !!!!!!
&என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,  அவிச்ச முட்டை போடாது.
&வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?
ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!
வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!
 
& ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! !(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதல Thank You சொல்ல முடியாது !!! !!!!! (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
&எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்
 
& ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்..(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) 

 & கார் ஓட டயரும் தேயும்

 &சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு....(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) 
 
& சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை..(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) 

 & தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்...(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) 
 
& தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

 &துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது..(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) 
 
& பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல
 
& மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

& முடியுள்ள போதே சீவிக்கொள்

& பழகின செறுப்பு காலை கடிக்காது

 &ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டைதான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&T Nagar போனா டீ வாங்கலாம்.  ஆனால்  விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம் ஆனா ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&என்னதான் உன் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&மீன் பிடிக்கிறவனை மீனவன்'னு சொல்லலாம்……. நாய் பிடிக்கிறவனை நாயவன் என்று சொல்ல முடியுமா? (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&என்னதான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா வலிக்குமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&ஸ்கூல் டெஸ்டில பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்டில பிட் அடிக்கலாம், பிளட் டெஸ்டில பிட் அடிக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&பொங்கலுக்கு லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி வடைக்கு லீவு கொடுப்பாங்களா?? (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&கோல மாவில கோலம் போடலாம்… கடலை மாவில கடலை போட முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&தூக்க மருந்து சாப்பிட்ட தூக்கம் வரும்.. இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா??? (என்ன கொடுமை சார் இது)

&வாழை மரம் தார் போடும் அதை வச்சு ரோடு போட முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&பாலில இருந்து பால்கோவா பண்ணலாம்… ரசத்தில இருந்து ரசகுல்லா பண்ண முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&சண்டே அன்னைக்கு சண்டை போட முடியும். ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)


Tea கப்புல "Tea" இருக்கும், World கப்புல

#ஜோசியர் :-இன்னும் ஆறு மாதம் மட்டுமே உங்களுக்கு ரொம்ப கஷ்ட்டம்
ஜோசியம் பார்க்க வந்தவர் :- ஆறு மாதத்துக்கு அப்பறம்
ஜோசியர் :- கஷ்டம் தெரியாமல் பழகிவிடும்
# என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,
சினிமா Colourல தான் ஓடும்.
#என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,

#உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. தொடர்ந்து பணியைச் செய்ய வேண்டும்.
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து தான் ஆக வேண்டும்.
#மரணத்தைப் பற்றி கவலைப்படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை. பிறகு எதற்கு அந்தக் கவலை?
# புது தில்லியில் ஒரு தொலைபேசி உரையாடல் - "சுந்தர் என்பவர் எனது ஆபீஸ் நண்பர், என் குழுவில் புதிதாக சேர்ந்த என்ஜினியர் ஒரு காஷ்மீரத்துப் பெண் பெயர் "மீனாக்ஷி மாண்டு" அன்று ஒரு தொலைபேசியில் ஹிந்தியில் அழைப்பு வர மறு முனையில் "மீனாக்ஷி ஹே" என கேட்க.... நான் "ஹே" இருக்கிறார் என்றேன் அடுத்து ஹிந்தியில் 'சுந்தர் ஹே" என்று கேட்டதும் நான் "பஹூத் சுந்தர்" என்றேன் (ஹிந்தியில் சுந்தர் என்றால் அழகு) ..... ரொம்ப அழகு என்றுகூற, ஆனால் தொலைபேசியில் கேட்டதோ சுந்தர் என்கிற எனது ஆபீஸ் நண்பரை என்பது தெரிந்த பிறகு ... சிரிப்புதான் ........
ஹையா ரிக்க்ஷா மாமா பாட்டு எனக்கு பிடிக்கும்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
#அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மால, எடுத்த வாரேன்
கழுத்த காட்டு கை இரண்ட சேர்த்து http://youtu.be/Nkjr9GUK7to
#"பேய், பூதம், பிசாசு"-பாட்டு
பயமாஇருந்தா... பாக்காவேண்டாம், கேட்கவேண்டாம்.....
"தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி காதலான கண்ணீர் காணவில்லையா ஓ நீயில்லாமல் நானா .... http://www.youtube.com/watch?v=548dRZQb2rw&feature=share&list=PL12B7C3FDFE4C71D5
#சின்னப்புறா ஒன்று, எண்ணக் கனாவினில், வண்ணம் கெடாமல் வாழ்கின்றது. நினைவில், உலவும்... நிழல் மேகம்,.... நூறாண்டுகள் நீ வாழ்கவே...
http://www.youtube.com/watch?v=rEBBaUdhLyQ&feature=share&list=PL12B7C3FDFE4C71D5

#ஆ... ஆஆஆஆ ஆ... ஆஆஆஆ
வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான்
வாசலைத் தேடி வா வா வா
#BOY-boy பாயினா பய்யன்
GIRL-girl கேர்ள் ன்னா பொண்ணு
இந்த பொன்னைக் கண்டதும்
போதை உண்டாகுதே...........
MAD-mad 'மேட்' ன்னா கிறுக்கு
HEAD-head ஹெட் ன்னா தலை
தலை கிறுக்கு புடுச்சு நீ
ஏனோ திண்டாடுரே.... http://youtu.be/0hlqlHoejsg
எஸ் பி பி அவர்களின் கிட்டா[ர்] இசையில் இழைத்தேடுக்கும் இனிய பாடல்
பல்லவி இல்லாமல், பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஒடுகிறேன்
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும் போதும் பேசுகிறென் ஹ
இந்த ராகமும் தாளமும் எதற்காக ?
உயிரே உனக்காஆஹ, உயிரே உனக்காஆஹ
உயிரே உனக்காஆஹ, உயிரே உனக்காஆஹ
http://www.youtube.com/watch?v=cnH7BXl5rlQ&feature=share&list=PL12B7C3FDFE4C71D5
மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ரசிப்பதில்லை
அந்த பௌர்னமியை இவன் ஹ்ஹ ரசிப்பதில்லை
http://www.youtube.com/watch?v=-c5eIXpPWdQ&feature=share&list=PL12B7C3FDFE4C71D5
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை
ஒண்ணா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ
ம்ஹும்.... ஹும்... ஹும்....ஹும்...
http://www.youtube.com/watch?v=XnQk_cOledc&feature=share&list=PL12B7C3FDFE4C71D5
# வள்ளுவன் குறளில் சொல்லேடுத்தேன்
கம்பன் கவியில் சுவை எடுத்தேன்
இளங்கோ வரியில் எழில் எடுத்தே
பாடுவோம், நாம் ஆடுவோம் .... http://youtu.be/9W0vmxeyXys

# அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
#விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
#வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=======================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
#உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!
#டீச்சர்: உன்னோட பேர் என்னமா?
பெண்: ஐஸ்வர்யா
டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?
பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டாகூப்பிடுவாங்க..
டீச்சர்: ??? ( எதுக்கு தாயி இந்த கொலை வெறி? )
#ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
"ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன‌
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்"
#உனது எதிரி எறும்பு போல இருந்தாலும்,
அவனை யானை போல கருது....
#வாழ்கையில் ரெண்டு விசயத்த எப்பவும் மறக்கக் கூடாது.
விரும்பி எது வந்தாலும் take care
விலகி எது போனாலும் don't care
தொ[ல்]லைப்பெசியிளிருந்து......
# என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,
சினிமா Colourல தான் ஓடும்.
#என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
... வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.

#பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
சொன்னா புரிஞ்சுக்கணம்... அவ்வளவுதான்(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) ம்)

#ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு.....
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு......(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
#
வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் "ப்ரைஸ்" கிடைக்கும்.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
...
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
Tea கப்புல "Tea" இருக்கும், World கப்புல World இருக்குமா !!!!!!
என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,
அவிச்ச முட்டை போடாது.
#வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?

ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!

வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!
# ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! !(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதல Thank You சொல்ல முடியாது !!! !!!!! (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
#
* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்..(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

* கார் ஓட டயரும் தேயும்

* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு....(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை..(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

... * தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்...(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது..(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

* முடியுள்ள போதே சீவிக்கொள்

* பழகின செறுப்பு காலை கடிக்காது

* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

#என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டைதான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
#கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம் ஆனா ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
#
என்னதான் உன் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

மீன் பிடிக்கிறவனை மீனவன்'னு சொல்லலாம்……. நாய் பிடிக்கிறவனை நாயவன் என்று சொல்ல முடியுமா? (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

என்னதான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா வலிக்குமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

ஸ்கூல் டெஸ்டில பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்டில பிட் அடிக்கலாம், பிளட் டெஸ்டில பிட் அடிக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பொங்கலுக்கு லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி வடைக்கு லீவு கொடுப்பாங்களா?? (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

கோல மாவில கோலம் போடலாம்… கடலை மாவில கடலை போட முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

தூக்க மருந்து சாப்பிட்ட தூக்கம் வரும்.. இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா??? (என்ன கொடுமை சார் இது)

வாழை மரம் தார் போடும் அதை வச்சு ரோடு போட முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பாலில இருந்து பால்கோவா பண்ணலாம்… ரசத்தில இருந்து ரசகுல்லா பண்ண முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

சண்டே அன்னைக்கு சண்டை போட முடியும். ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
#2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
#
நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
... அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
# பொருத்தமான பாடல்கள் கொண்ட குட்டி வானொலி கதைகள் ...தாங்களே முன்வந்து கேட்டதற்கு எனது நன்றிகள்
என்னிடம் தயாராக உள்ள கதைகளின் நடுவில் உள்ள பழைய பாடல்களை மாற்றி சற்று புதிய பாடல்களை பொருத்தி சரிசெய்து அனுப்பிவைக்கிறேன்.
*ஒரு இந்திய விவசாயியும் பாகிஸ்தான் விவசாயியும் சந்தித்துக் கொண்டார்கள்..

இந்தியர் தன் வயலைச் சுற்றிக் காட்டினார்..

பாகிஸ்தானி சொன்னார்.. என்னுடைய வயலை காரில் சுற்றிப் பார்க்க ஒரு முழுநாள் தேவைப்படும்..

இந்தியர் சொன்னார்..

" என்கிட்டேயும் அது மாதிரி ஒரு ஓட்டைக் கார் இருந்தது. பழைய இரும்புக்கு
போட்டுட்டேன்,,!*(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
--------------------

மன்மோகன் சிங்கும், ஒபாமாவும்
பாரில் அருகருகே அமர்ந்து உள்ளனர். அப்போது ஒரு நபர் அந்த பாருக்கு வருகிறார்.

சிப்பந்தியிடம் அவர்கள் மன்மோகன் சிங்கும், ஒபாமாவும் தானே என்று கேட்கிறார்.

"ஆம்! அவர்கள்தான்!" என்றார் சிப்பந்தி.

உடனே அந்த நபர் அவர்களிடம் சென்று "ஹலோ! இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்றார்.

மன்மோகன் சிங் & ஒபாமா : "நாங்கள் மூன்றாம் உலகப் போரைப் பற்றி விவாதிக்கிறோம்."

அந்த நபர், "ஒ! உண்மையாகவா? என்ன நடக்கப் போகிறது? " என்று கேட்கிறார்.

மன்மோகன் சிங்: "நல்லது! நாங்கள் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களையும், ஒரு சைக்கிள்
ரிப்பேர் செய்கிறவரையும் கொல்லப் போகிறோம்"

உடனே அந்த நபர் மிகவும் ஆச்சரியத்துடன் "என்னது ஒரு சைக்கிள் ரிப்பேர் செய்பவரா?" என்று கேட்கிறார்.

மன்மோகன் சிங் ஒபாமா ஐப் பார்த்து, "பார்த்தீர்கள? நான் அப்பவே சொன்னேன், ஒருவரும் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களைப் பற்றி கவலைப் படமாட்டார்கள்! நாம் திட்டமிட்டபடி இதை செய்து முடித்துவிடுவோம்"
நான் படித்ததில் பிடித்த நகைச்சுவை இது. .....
==========

ஒரு ஆப்பிரிக்கன், ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி மூவரும் மெக்சிகோவில் பயணம் செய்த போது ஒரு மெக்சிகனை ஏதோ ஒரு காரணத்துக்காக கொன்று விட்டனர்.அவர்கள் மூவருக்கும் மின்சார நாற்காலி மரண தண்டனை அளிக்கப்பட்டது.

ஆப்பிரிக்கன் ' நான் ஒரு டென்டிஸ்ட். நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் .என்னை விட்டுவிடுங்கள் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

இந்தியன் ' நான் ஒரு டாக்டர் . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது .. சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

பாகிஸ்தானி ' நான் ஒரு எலெக்ட்ரிகல் இஞ்சினியர்.. . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன்...அதற்கு முன் ஒரு விஷயம்..அங்கே பாருங்கள் நீங்கள் ஒயரை மாற்றி கனெக்சன் கொடுத்துள்ளீர்கள்..அந்த கருப்பு ஒயரையும் சிவப்பு ஒயரையும் இடம் மாற்றினால் தான் மின்சாரம் பாயும்.'....... மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
========

ஒரு பாகிஸ்தானிய மாணவன் அமெரிக்க பள்ளி ஒன்றில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

ஆசிரியர்: உன் பெயர் என்ன?

மாணவன்: அஹமத்

ஆசிரியர்: தவறு. இப்பொழுது நீ அமெரிக்காவில் இருக்கிறாய். எனவே இன்றிலிருந்து உன் பெயர் ஜானி. சரியா...

பாகிஸ்தானிய மாணவன் யோசித்தபடியே வீட்டுக்கு சென்றான். வீட்டில் அவனது தாய் 'முதல் நாள் வகுப்பு எப்படி இருந்தது?' என்று கேட்டார்.

மாணவன்: ஓ....நன்றாகவே சென்றது. இன்றிலிருந்து நான் ஒரு அமெரிக்கன். என் பெயர் இனி ஜானி.

பையனின் தந்தையும் தாயும் இஸ்லாத்தை அடி பிறழாமல் பின் பற்றுபவர்கள். எனவே கிறித்தவ பெயரை வைக்கக் கூடாது என்று போதித்தனர். பையன் கேட்பதாக இல்லை. எனவே இவ்வாறு சொன்னதற்காக பையனை திருத்துவதற்காக அவனை அடித்து விட்டனர். அடி வாங்கிய மறு நாள் அதே யோசனையோடு பள்ளியினுள் நுழைந்தான் அஹமத். இவன் யோசனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்த ஆசிரியர் 'என்ன ஆச்சு உனக்கு ஜானி?' என்று கேட்டார்.

பையன் பொறுமையாக சொன்னான் "அமெரிக்கனாக மாறிய என்னை இரண்டு பாகிஸ்தானிகள் அடித்து விடடனர்"
============
கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இபோ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???....
======
அப்பா : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?
மகன் : அம்மா அடிச்சிட்டாங்கப்பா...
அப்பா: சீ ..சீ...இதுக்கெல்லாமாடா அழுவாங்க?
மகன் : அட போங்கப்பா நீங்க எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க என்னால முடியல
=======
சுதா: ஏன் அந்த கிளி ஜோசியக்காரர் வந்தாலே எல்லோரும் கதவை சாத்திக்கிறாங்க?
மகா: அவர் எல்லோரும் பயந்து சாகுறமாதிரி ‘கிலி' ஜோசியம் சொல்லுவாராம் அதான்....
=======
கமலா: கல்யாணம் வேண்டாம்னு சொன்ன நீ உடனே கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொல்றியே எப்படி?
விமலா: உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கம்மியா இருக்காம். டாக்டர் சத்தானதா சமைச்சு சாப்பிடச் சொன்னார். அதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன்....
======
பெண்: டாக்டர் என்னோட கணவர் தினமும் தூக்கத்தில என்னைய திட்டுறாரு.
டாக்டர்: முழிச்சிட்டு இருக்கிறப்ப செய்ய முடியாததை
தூங்கும்போதாவது செய்யட்டுமே விடுங்க !..
=======
டாக்டர் : இன்னையில இருந்து உங்களுக்கு புது சிகிச்சையை அறிமுகம் செய்யப்போறோம்.
நோயாளி : புது சிகிச்சை இருக்கட்டும் டாக்டர். முதல்ல அந்த புது நர்ஸை அறிமுகப்படுத்துங்க !..
========
பப்பு - அப்பா, உங்களால இருட்டுல கையெழுத்துப் போட முடியாதுன்னு சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்க.
அப்பா - யார் சொன்னா, எப்படிப்பட்ட அமாவாசை இருட்டிலேயும் சூப்பரா கையெழுத்துப் போடுவேன் தெரியுமா.. எங்க போடனும் சொல்லு..
பப்பு - என்னோட பிராகரஸ் ரிப்போர்ட்ல தான்...!
=========
நோயாளி : ஆபரேசனுக்கு முன்னாடி டாக்டர் ஏன் நெத்தியில கோடு போட்டார்?
நர்ஸ் : டாக்டர் எந்த வேலை செஞ்சாலும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிப்பார் அதான்....
=======
ஒருவர் : அந்த டாக்டர் ஆபரேசன் பண்றப்ப கூட மயக்க மருந்து யூஸ் பண்ணமாட்டார்.
மற்றவர் : பரவாயில்லையே !
ஒருவர் : அட நீ வேற ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடியே பீஸ் எவ்வளவுன்னு சொல்லிடுவாரு அதுலையே நோயாளி மயங்கிடுவாங்க....
=========
மச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்!!!??.........

நானா ....எப்படிடா??!!....

இப்பவோ......அப்பவோன்னு இருந்த என் மாமனார்கிட்ட நீ எழுதின ஒரு ஜோக்க படிச்சு காட்டினேண்டா......அவ்வளவுதான் பொட்டுன்னு போயி சேர்ந்துட்டாருடா.....அப்புறம் அவருடைய சொத்தெல்லாம் எனக்கு வந்துடுச்சில்ல??!!!.
=========
கட்சித் தொண்டர்கள்கிட்டே ‘மனு’ வாங்கிய
தலைவர், ஏன் கோபப்பட்டாராம்?

யாரோ ஒரு தொண்டர், பசங்களோட வீட்டு பாடத்தை செய்து கொடுக்க சொல்லி மனுவாக கொடுத்துட்டாராம்…அதான்!
========
உன் பேரு என்னம்மா?

"சனியாத்தா"

உன் புருஷன் பேரு என்னம்மா?

"சனியப்பன்"

உன் பெரிய பையன் பேரு?

"பாத சனி"

உன் சின்ன பையன் பேரு?

"அஷ்ட சனி"

உன் ஊரு பேரு?

"சனியாசிகுப்பம்"

உன் புருஷன் என்ன வேலை செய்கிறார்?

"சனிஸ்வரர் கோயில் வாசலில் சம்சா விற்கிறார்"!!!!!!!??......

சென்சஸ் எடுப்பவர் : அட... ச்சே...ராசி பலன்லே ..ஏழரை ஆரம்பம்னு போட்ருந்தான்...நான் நம்பலை....ஆரமபிசிடுச்சுடா..சாமி...
=======
ஒரு பேருந்து விபத்து!
பயணிகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தனர். கைகால்கள் இழந்தவர்களின் அலறல்.

"கண்டக்டர் என்னப்பா ஆனான்?"

பரபரப்போடு கண்டக்டரை அக்கறையோடு தேடிக்கொண்டிருந்தார் ஒருவர்.
"பாவம், கண்டக்டர் இவருக்கு ரொம்ப பழக்கமான ஆள் போலிருக்கு!" என்று நினைத்த சிலர், சற்று தொலைவில் ஒரு மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கண்டக்டரை அவருக்கு சுட்டிக்காட்டினார்கள்.

பரபரப்போடு அவரை நோக்கி ஓடினார் அந்த ஆசாமி.
உடைந்துபோய் ரத்தம் வழிந்துகொண்டிருந்த தன் மூக்கைப் பொத்தியவாறு உட்கார்ந்திருந்த கண்டக்டரை நெருங்கினார் அவர்.

"என்னப்பா...இங்கேயா இருக்கறே.....ஆனது ஆயிப்போச்சு...நடக்கவேண்டியதைப் பார்க்கணுமுல்ல....எனக்கு வரவேண்டிய சில்லறை பாக்கி 15ரூபா அம்பது காசைக் குடுத்துடுப்பா!.....நான் வேற பஸ்சுல போய்க்கறேன்!"
என்னதான் ரகசியமோ இதயத்திலே...
நினைத்தால் எனக்கே சிரிப்புவரும் சமயத்திலே
http://youtu.be/TC_ewqr6eqk

விழியிலே மணி விழியினில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களின் பொன்னும் மின்னும்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
ம்ஹும்.. ம்ஹும்..:
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீயும் ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்.... http://www.youtube.com/watch?v=xX9ZLClies4&feature=share&list=PL71E157D7E01C958E
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாம் அதிசயம் ஆனந்தம் ..காற்றினிலே வரும் கீதம்.... http://youtu.be/od2N2tZnu14

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

மனைவி அமைவதெல்லாம் Manmadha Leelai (1976), Music: MS. விஸ்வநாதன், Cast: Kamal Hassan, Aalam, Y. Vijaya
Artist(s): Yesudas. http://youtu.be/d03mavMw2Ig
மனைவி அமைவதெல்லாம் ......
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

* அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
...
* மனது புண்படும்படி பேசக்கூடாது.

* கோபப்படக்கூடாது.

* சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

* பலர் முன் திட்டக்கூடாது.

* எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

* முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

* மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

* சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

* மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

* பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

* வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

* பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

* ஒளிவு, மறைவு கூடாது.

* மனைவியை நம்ப வேண்டும்.

* முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

* தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

* உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

* அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

* நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

* எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.

* மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

* மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

* பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

* மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.

* கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

* சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

* எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

* சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

* சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

* சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
* குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால்
“இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

* மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

* அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

* மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

* ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

* வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
தொடரும்...... http://youtu.be/d03mavMw2Ig
"காமன் வுமேன்" - காமன் மேனின் பார்வையில்
ஆர்.கே.லக்ஷ்மண் அவர்களால் பிரபலமான காமன் மேன், சமீப காலத்தில் "உன்னைப்போல் ஒருவன்" படத்திற்கு பிறகு பரபரப்பாக பேசப்பட்டார்.முக்கியமாக தமிழ்ப் பதிவுலகில்... எனக்கு ஒரு மன வருத்தம்.அது என்ன இந்த காமன் வுமேனை மட்டும் யாரும் கண்டு கொள்ளவே இல்லையே என்று....

எனவே வீட்டுக்கு வீடு வாசப்படியாக சில இல்லத்தரசிகளை சிறப்பிக்கும்மாறு... "காமன் வுமேனின் குணாதியசங்கள்" - ஒரு காமன் மேன் பார்வையில்.

1. ஆன்லைன் ஷாப்பிங், ஃபோன் ஷாப்பிங் என்று பல வசதிகள் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் மறக்காமல் காபி பொடியோ, சர்க்கரையோ வாங்க கணவனை கடைக்கு அனுப்புபவர்கள்.

2. தன் குழந்தையின் அழகுக்கும் புத்திசாலிதனத்துக்கும் தன் பரம்பரையும், தவறுகளுக்கும் துர்குணங்களுக்கும் தன் கணவனின் ஜீன்களும் காரணம் என்று சர்வ நிச்ச்யமாக நம்புபவர்கள்.

3. நான்கு மணி நேரம் நாப்பது கடை ஏறி இறங்கி துணிகள் வாங்கிய பிறகு எதிரில் வரும் பெண்ணின் உடையோ அல்லது நாப்பத்தி ஒண்ணாவது கடை பொம்மையின் சேலையோ அழகாக இருப்பதாக சொல்பவர்கள்.

4. தொலைக்காட்சியில் TV துக்கமான சம்பவ செய்தியை படிக்கும், பெண்ணின் தோடு டிசைன் நன்றாக இருப்பதாக ரசிப்பவர்கள்.

5. ஒரு கிலோவுக்கு 200 கிராம் எடையில் அடிக்கும் காய்கறிக்காரனிடம் கொசுறாக கிடைக்கும் கறிவேப்பிலை கொத்தமல்லிக்காக சந்தோஷப்படுபவர்கள்.

6. உலகச் செய்திகளை விட லோக்கல் (அக்கம் பக்கத்து வீட்டு) செய்திகளில் அதிக நாட்டம் கொண்டவர்கள்.

7. சொந்த சோகங்களை தொலைக்காட்சித் தொடர் சோகங்களில் மூழ்கி மறப்பவர்கள்.

8. மருமகளாக இருக்கும் போது தானே சிறந்த மருமகள் என்றும் மாமியாராக இருக்கும் போது தானே சிறந்த மாமியார் என்றும் நினைத்துக் கொள்பவர்கள்.

9. சமையல் செய்ததில் எது மீதமானாலும் மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஒரு வாரம் கழித்து First in First Out (FIFO) அடிப்படையில் குப்பைத் தொட்டியில் கொட்டுபவர்கள்.

10. தமிழின் மிகச் சிறந்த நாவல்களை எழுதியவர் லஷ்மி என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்பவர்கள்.

11. "எங்கியோ பாத்தா மாதிரி இருக்கே", என்று ஏதாவது பெண்ணை விகல்பமில்லாமல் பார்க்கும் கணவன்மார்களை முறைப்பவர்கள்.

12. ஒழுங்காக பாத்திரம் தேய்க்காத வீடு பெருக்காத வேலைக்காரப் பெண் ஒரு நாள் வேலைக்கு வராவிட்டாலும் புலம்புபவர்கள்.

13. கடினமாக உழைத்து நல்ல பெயரும் பதவி உயர்வும் வாங்கும் கணவனை சரியாக ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிடும் பக்கத்து வீட்டுகாரனின் சாமார்த்தியம் வராது என்று இடித்துரைப்பவர்கள்.

20. ப்ளக்கை சொருகி லைட்டை போடும் மகனை வருங்கால எடிசனாகவும், கிளியை நினைத்து காகம் வரையும் போது பின்னாள் பிகாஸோவாகவும், ரெண்டக்க ரெண்டக்க பாட்டுக்கு இடுப்பில் கை வத்துக் கொண்டு தலையை ஆட்டும் பெண்ணை "பத்மா சுப்ரமணியத்துகிட்ட சேத்து விட்டா நல்லா வருவா" என்றும், "பாலும் தெளி தேனும்" சொல்லும்போது எஸ்.பி.பி யாகவோ, எம்.எஸ்.சுப்புலஷ்மியாகவோ நினைத்து புளகாங்கிதமடைவார்கள்.

பி.கு: 20 எழுதிரலாம்னு ஒரு வேகத்துல ஆரம்பிச்சேன். 6 மிஸ்ஸிங். பின்னாடி ஏதாவது தோணினாலோ, பின்னூட்டங்களில் வந்தாலோ இடையில் சேர்க்கப்படலாம்.

பிற்சேர்க்கை:
14.உலகத்திலேயே தனக்கு மட்டும் தான் மோசமான கணவன் வாய்த்ததாக புலம்புவார்கள்.(உபயம்: கோவி.கண்ணண்)
இது நன்றியுடன்.. ரசித்து சுட்ட பழம். "இப்படிக்கு கோகி" http://youtu.be/FkRV2zhjZB0

FREE JOBS EARN FROM HOME