FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, April 21, 2015

வானொலிக் கதைகள் "அந்தநாள் ஞாபகம் - பள்ளிக்கூடம்"- Episode/பகுதி 21....

வானொலிக் கதைகள் "அந்தநாள் ஞாபகம் - பள்ளிக்கூடம்" Episode/பகுதி-21:-(வானொலிக்கு நான் எழுதிய கதையும் பாடல்களும் நிகழ்ச்சிப் பதிவுகளிலிருந்து) "அப்போதெல்லாம் 9-ம் வகுப்புக்கு வந்துவிட்டாலே எதோ ஒரு பரீட்சை பயம் வந்துவிடும்.  9ம்  மற்றும் 10ம் வகுப்பு அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெறக்கூடிய வகுப்பு அல்ல என்றும்,  அன்றய பாடங்களை அன்றே முழுவதும் படித்து ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும் இல்லையென்றால் பரிட்சையில் தோல்விதான் 9ம் வகுப்பைத் தாண்டுவது கடினம் என எனது வகுப்பாசிரியர் ஏதேதோ சொல்லி மிரட்டி வைத்திருந்தார்...

பாடல்:- ஏ பார் ஆப்பிள் - A for Apple.. B for Biscuit  https://youtu.be/PBLIgp1XhmI

(9-ம்  வகுப்பு அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெறக்கூடிய வகுப்பு அல்ல என்றும்,  வகுப்பாசிரியர் ஏதேதோ சொல்லி மிரட்டி வைத்திருந்தார்... அந்தக்காலத்தில் பல கிராமத்து மாணவ, மாணவியர்கள் 9-ம் வகுப்பில் தனது படிப்பை நிறுத்திவிட இதுவும் ஒரு காரணம் என்றும் கூறலாம்). பாடல்:- "படிப்புக்கும் ஒரு கும்பிடு"... படம் :-இரும்புத் திரை (1960), பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு, இசை : எஸ் வி வெங்கட்ராமன்  https://youtu.be/_k06MusuBeQ

அன்றைய தேர்வு முடிவுகளில் 9ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பிற்கு தேர்ச்சி  பெற்றிருந்த மகிழ்ச்சியில், புது வகுப்பில் புது பாடங்கள், புத்தகங்கள் என அன்றுதான் புதிதாக பிறந்தவன் போல ஒரு குதூகலம் மனதில் நிறைந்திருந்தது. பாடல் "வெற்றிமீது வெற்றிவந்து என்னைச்சேரும் அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் உம்மைச்சேரும்  https://youtu.be/kYSsx_BZOp8

எதிரில் நண்பன் வந்தான் அவனும் வெற்றிபெற்றிருப்பன் இருப்பினும் பொதுவாக இருக்கட்டுமே என்று "நண்பா, உனக்கு கிடைத்ததுதான் எனக்கும் கிடைத்தது என்று கூறினேன்" அதைக்கேட்ட  அவனது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.  தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டே  கடைத்தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம்.   பாடல்:- உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி - நெஞ்சில் தூங்கிக் கிடக்குது நீதி  https://youtu.be/boyVeLaj14Y

என் மனம் புதிய வகுப்பு,  புதிய புத்தகங்கள் என எதோ ஒரு  மகிழ்ச்சியான சிந்தனைகள் மனதில் ஓட, தொடர்ந்து கடைத்தேருவழியாக நடந்துகொண்டிருந்தோம். பாடல் "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை  https://youtu.be/FfE1rTqyC-Y 

வழியில் மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் என ஏராளமானவர்கள் ஒரு புத்தகக் கடைமுழுவதும் நிரம்பி வழிந்தார்கள். மனம் பரபரத்தது எனக்கும் புதிய புத்தகம் வாங்கவேண்டும் என்று ஆசைதான். புதுப்புத்தகத்தின் வாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும். இருப்பினும் எனது குடும்ப சூழ்நிலையில் பாதிவிலையில் அதிலும் அனைத்து புத்தகங்களும் ஒரே நேரத்தில் வாங்க முடியாத சூழ்நிலை.  
பாடல்:- நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,.. வாழ்ந்தே தீருவோம்!  https://youtu.be/NaItT2DZVXU

சிறிது நேரம் அந்தக் கடையில் நிரம்பிவழிந்த கூட்டத்தை பார்த்தபடி நண்பனும் நானும்  நின்றுகொண்டிருந்தோம். என் வயதுதான் இருக்கும், அந்த மாணவன் அவனது அப்பாவிடம் இந்த புத்தகம் வேண்டும்...அதுவும் வேண்டும் என்று தொடர்ந்து புது புது புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருந்தான்.  கூட்டத்தில் சிறிது இடைவெளி தெரிந்தது சற்றென்று நான் அந்தக் கடையின் கூட்டத்தினுள்  நுழைந்து, கடைக்காரரிடம் 10ம் வகுப்பு புத்தகங்களின் மொத்த விலை எவ்வளவு என்று கேட்டேன். அவர் காசு வைத்திருக்கிறாயா? இல்லையென்றால் பிறகு வா என்று கூறிவிட்டு வேறு ஒருவருக்கு புத்தகம் விற்க விலை கூறிக்கொண்டிருந்தார். பாடல்:- காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும்  இது தெரியுமாடா https://youtu.be/Hv6lb4ttBOI

எனது பரிதாப நிலையை அந்தக்கடையில் புத்தகம் வாங்கிக்கொண்டிருந்த மாணவனும் அவனது தந்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர். என்ன நினைத்தாரோ? அவர் என்னை அருகில் அழைத்தார். அவரது சட்டைப்பையிலிருந்து, அவர் வீட்டு முகவரி பதித்த அழைப்பு சீட்டு (visiting card) ஒன்றை என்னிடம் தந்து, நாளை வீட்டிற்கு வந்து அவரது மகனின் சென்ற ஆண்டு  படித்த 10ம் வகுப்பு புத்தகங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். சந்தோசத்தில் அவரது பாதங்களில் சாஸ்டாங்கமாக விழுந்து நன்றியை தெரிவிக்க மனம் நினைத்தாலும் கூட்ட நெரிச்சலில் முடியாதுபோனதால் அவரிடம் நின்றபடியே நன்றி கூறி,  அந்த மகிழ்ச்சியை தனது வீட்டிற்கும் தெரிவிக்க, நண்பனின் கையை பிடித்து அவனையும் வேகமாக தரதர வென்று இழுத்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன். பாடல்:- நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்திருந்தேன் .. https://youtu.be/NnOPdx7Gn24

மறுநாள் காலை விடியமாட்டேன் என்று அடம் பிடித்தது. அருகிலிருந்த கையடிக்குழாயில் காக்கா குளியல் முடித்து வீட்டிற்க்குள் நுழைந்தபோது அம்மாவும் காஞ்சி குடித்துவிட்டு வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எனக்கும் ஒரு கலயத்தில் கஞ்சியும் தொட்டுக்கொள்ள ஊறுகாயும் வைத்திருந்தார்கள். கஞ்சியை குடித்துவிட்டு, வீட்டை தாழ் போட்டுவிட்டு, வெளியில் செல்ல சொல்லிவிட்டு, அம்மா வேலைக்கு சென்றுவிட்டார். பாவம் அவர்களுக்குத்தான் பள்ளிக்கூடம் படிப்பறிவு என்பது கிடைக்காத கனியாகிவிட்டதால் தனது மகனாவது நன்கு படிக்கட்டும் என்று பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்கிறார்கள்.  பாடல்:-பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன், ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்,  https://youtu.be/_k06MusuBeQ   
விலாசத்தை கண்டுபிடித்து, தயங்கி தயங்கி வீட்டின் வெளியிலிருந்து ஐயா என்று குரல் கொடுத்தேன்.முதலில் நேற்றுபார்த்த அந்த மாணவன் வெளியில் வந்தான் என்னை பார்த்தபிறகு, அப்பா என்று கூறிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றுவிட்டான். சிறிது நேரத்தில் அந்த மாணவனின் "அப்பா" அவர்கள் வீட்டினுள்ளிருந்து வெளியில் வந்தார், என்னை வீட்டிற்குள் அழைத்தார், நான் வீட்டிற்குள் சென்றதும்  அங்கு ஏற்க்கனவே அனைத்து புத்தகங்களையும் தயாராக எடுத்து வைத்திருந்ததைக் கண்டேன். அங்கு எனக்கு தருவதற்காக அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைக் காட்டிய அவர், இதேபோல உன்னுடைய சென்ற ஆண்டு 9ம் வகுப்பு புத்தகங்களையும், நீயும் மற்றொரு மாணவனுக்கு இலவசமாக தரவேண்டும் என்று கட்டளையிட்டார். நானும் அதற்க்கு என்னுடைய மனப்பூர்வமான சம்மதத்தை தெரிவித்தேன். பாடல்:- மனிதனென்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம் வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம். https://youtu.be/6Eg20JQwGYY 

அனைத்துபுத்தகங்களும் புதியதுபோலவே அட்டை போடப்பட்டு அழகாக இருந்தது. அதை பார்த்தபோதே மனதில் ஒரு ஆர்வம் ஊற்றடுத்து ஓடியது. அனைத்து புத்தகங்களையும் சரி பாதியாக அடுக்கிப் பிரித்து, எனது இரு தோள்களில் சுமந்துகொண்டு "நன்றி ஐயா" என்று கூறி அங்கிருந்து விடைபெற்றேன்.  பாடல்:- பாட்டு வாழ்ந்து பார்க்கவேண்டும் உலகில் மனிதனாகவேண்டும்  https://youtu.be/YU-b1hNh0g0

மனது முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. புத்தகங்கள் இலவசமாக எனக்கு கிடைத்ததுபோல எனது  நண்பனுக்கும் கிடைக்கவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அப்போதுதான்  எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. என்னைப்போலவே பலருக்கும் இதுபோல இலவசமாக பாட புத்தகம் கிடைத்தால் இன்னும் பலமடங்கு மகிழ்ச்சி கிடைக்குமல்லவா என்கிற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு சென்று தோளில் சுமந்திருந்த புத்தகங்களை வைத்துவிட்டு, அங்கு இருந்த என்னுடைய 9ம் வகுப்பு பாட புத்தகங்களை எடுத்துக்கொண்டு, நண்பனையும் அதுபோலவே அவனது 9ம் வகுப்பு புத்தகங்களை எடுத்துக்கொண்டு நாங்களிருவரும் பள்ளிக்கூடம் நோக்கி ஓடினோம்.  பாடல்:-சிரித்துவாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே https://youtu.be/Ji4Qzh2cXD4
பள்ளியினுள் நுழைந்தவுடன் அங்கிருந்த 8ம் வகுப்பு தேறிய, 9ம் வகுப்புக்கு செல்ல இருக்கும் மாணவர்களை நோக்கி... உங்களுக்கு 9ம் வகுப்பு புத்தகங்கள் இலவசமாக வேண்டுமா? உங்களுடைய பழைய 8ம் வகுப்பு புத்தகங்களை தந்துவிட்டு இந்த 9ம் வகுப்பு புத்தகங்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்று குரல் கொடுத்தோம். அதைக்கேட்ட பல மாணவர்கள் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். சற்று நேரத்தில் 10ம் வகுப்பு மற்றும் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் அருமையான யோசனை என்று என்னை பாராட்டி அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்களின் சென்ற ஆண்டு புத்தகங்களை பெற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு புத்தகங்களை மாற்றிக்கொண்டிருந்தோம். சற்று தூரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்களும் இந்த கூடத்தை பார்த்துவிட்டு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள், மனதில் சற்று பயம் வந்தது இதோடு நிறுத்திவிடலாம, என்கிற எண்ணம் தோன்றியது அதற்குள் "என்ன இங்கு கூட்டம்" என்று அதட்டலோடு வகுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியர் அவர்களும் என்னை நெருங்கிவிட்டார்கள்.  பாடல்:- நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே ... நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை வளரும் முல்லைகளே https://youtu.be/D2kQOWCzcl4

விவரத்தைக் கேள்விப்பட்டதும், தலைமை ஆசிரியர் என்னை முதுகில் தட்டிக்கொடுத்து அருமையான பணியை செய்திருக்கிறாய் என்று பாராட்டியதோடு, பள்ளி நூலக ஆசிரியரை அழைத்து இந்த மாணவனுக்கு தேவையான இடவசதியை பள்ளி நூலகத்தில் செய்துகொடுக்குமாறு கட்டளையிட்டார். அதோடு பள்ளியின் முதல் நாள் காலை தொழுகை கூட்டத்தில் என்னை மேடைக்கு அழைத்து பள்ளியின் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் பாராட்டியதோடு, ஏழை மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டம் சிறப்பான ஒரு திட்டம் என்றும் இதை செயல் படுத்திய என்னை சிறந்த மாணவன் என்று பாராட்டியதோடு, இதை அனைத்துப்பள்ளிகளிலும் செயல்படுத்தும்படி பள்ளிக்கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதப்போவதாகவும் கூறினார்.   பாடல்:- நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி  https://youtu.be/XG_gSzVn1Ys

இப்போது உங்களுக்கும் அந்த மாணவன் யார் என்று தெரிந்திருக்கும். பின்னாளில் அதே பள்ளியில் மேல்நிலை வகுப்பில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பை பெற்றுத்தந்ததும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்தான். பாடல்:- வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமைய்யா ஏழைகள் உங்களை நம்பி....  https://youtu.be/7lIENBK-la4

(இரண்டு வருடம் பகுதிநேர ஆசிரியராக நான் படித்த அதே பள்ளியில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் என எனது நாட்குறிப்பு புத்தகத்தில் இது குறித்தும், அப்போது நடந்த பல சுவையான சம்பவங்களையும் எழுதி வைத்திருக்கிறேன்.)....  பாடல்:- மீண்டும் பள்ளிக்கு போகலாம் https://youtu.be/51sfVxD_wlE
ஒருவேளை இந்த திட்ட விவரங்கள் உங்களின் பள்ளியில் நடைமுறையில் இல்லையென்றால், அனைத்து ஏழை மாணவர்களின் பயனைக்கருத்தில் கொண்டு, நீங்களே முன்னின்று இந்த சேவைப்பணியை உங்களின் அருகாமையில் இருக்கும் பள்ளியில் தொடங்கிவைத்தால், நீங்கள் செய்த இந்த உதவி உங்களின் எதிர்கால சந்ததியினரின் சிறப்பான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம். "  பாடல்:-நல்ல நல்ல சேவை... நாட்டுக்கு தேவை... Film : Porter kanthan (1955) https://youtu.be/-Y4bCc135QY 

இப்படிக்கு, நன்றிகளுடன் கோகி என்னும் கோபால் கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.  
பாடல்:- எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்; என் பாடல் நான் பாட பலர் ஆடுவார், இனி என்னோடு யார் ஆடுவார் ??????  https://youtu.be/vo00ogHbydI

Episode-110. இன்றைய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா?

Episode-110. இன்றைய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? 
It wan an interview question… “A Thing, that is available only  in “Heaven”… how to get those Things? First you explain us what is your answer for this question, and how you will be getting such things from Heaven?    ஒரு நிருவனத்தின் வேலைவாய்ப்பு நேர்காணலின்போது கேட்கப்பட்ட கேள்வி அது? அந்த ஒரு பொருள் "சொர்க்கத்தில்" மட்டுமே கிடைக்கும் என்றால், அந்தப் பொருளை கொண்டுவருவதர்க்கான சாதனையை நீங்கள் செய்யவேண்டிய சூழலில்,  உங்களின் பதில் என்ன? என்ன செய்வீர்கள்?. எப்படி கொண்டுவருவீர்கள்? முதலில் இந்த கேள்விக்கான பதிலைக்கூருங்கள் என்றனர்? 

அது ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூருக்கு அருகேயுள்ள தார்ப்பாலைவனத்தில் (  இந்தியாவில் இருக்கும்  தார்ப்பாலைவனத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 200,000 km2 ஆகும்) அமையவிருக்கும் ஒரு பெரிய காற்றாலை மின் உற்பத்தி மற்றும்  சூரிய ஆற்றலை மின்சக்தியாக மாற்றி பெறக்கூடிய நிறுவனத்தின் திட்டப்பணியை மேற்கொள்ள திட்ட மேலாளருக்கான் நேர்காணல் தேர்வின்போதுதான் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது .  காரணம் திட்டப்பணி நடக்கவிருக்கும்  அந்த தார்ப்பாளைவனத்தில் சரியான சாலை வசதிகூட கிடையாது அப்படிப்பட்ட சவாலான பணியை ஏற்று செய்யக்கூடிய திட்ட மேலாளருக்கு எத்தகைய சூழலையும்  எதிர்கொண்டு சமாளிக்கும் திறமை இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர்.  

சாதிக்க குறிப்பிட்ட எல்லை என்று ஏதுமில்லை. உங்களின் சாதனையை பிறர் பயன்படுத்திக்கொண்டால் அதற்காக நீங்கள், வருத்தப்படவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு உங்களின் சாதனையை பயன்படுத்திக்கொள்ளமுடியுமே  தவிர, அவர்களால் சாதிக்கமுடியாது. ஆகவே சாதிக்க, சாமர்த்தியமும் மிக மிக முக்கியம். அதோடு அந்த அந்த நேர, கால, இடத்திற்கு ஏற்றார்போல, சமயோசிதமாகவும் சாமர்த்தியமாகவும் பதில் சொல்ல தெரிந்திருக்கவேண்டும்.  

உங்களின் பதில் "ஆம்/ முடியும்" என்று கூறுவீர்களானால், முதலில் ஒரு சில விவரங்களை நன்கு ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும். அதாவது சொர்க்கம் அது எங்கிருக்கிறது? எப்படி அங்கு செல்லமுடியும்? புராணங்களில் மனிதனின் இறப்பிற்கு பின்பு சொர்க்கம் செல்லலாம் என்று குறிப்பிட்டிருப்பதை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது. இறந்தபிறகு திரும்ப மனித உடலில் அதுவும் நமது அதே உடலுக்குள் திரும்ப முடியுமா? என்கிற பல கேள்விகளுக்கு விடையே இல்லை. அப்படிப்பட்ட சூழலில் உங்களின் பதில் சிறப்பானதாகவும், அந்த நேர, கால, இடத்திற்கு ஏற்றார்போல, சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகவும் பதில் சொல்ல தெரிந்திருக்கவேண்டியது அவசியம். 

சரி இப்போது இந்தக் கேள்விக்கான சாமர்த்தியமான பதில் என்ன என்று பார்ப்போம்?   

"நானே சென்று எடுத்துவருவதைவிட, யாரையாவது சொர்கத்திற்கு அனுப்பி எடுத்துவரச் செய்வேன் " என்று  சாமர்த்தியமாக பதில்கூறவேண்டும்.

மேலும் யாரும் பார்த்திராத அந்த பொருளை எடுத்துவருவது மிகவும் எளிது... நீங்கள் எந்த ஒரு புதுப் பொருளை எடுத்துவருகிரீர்களோ "அதுதான் அது", அதாவது சொர்கத்திலிருந்து பெறப்பட்ட பெருள் இதுதான் என்று எதோ ஒரு புதிய பொருளைக்காட்டி சாதித்துவிட்டாதாக கூறலாம். சந்தேகமிருந்தால் உடனே உங்களை சொர்கத்துக்கு அனுப்பி, இதை என்னால் நிருபிக்கமுடியும் என்று கூறினாலே போதும், உங்களது சாதனை ஏற்றுக்கொள்ளப்படும். .. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .....

ஆகவே, எவர் ஒருவர் எந்த ஒரு கடினமான சாதனைகளையும் தமது குழுவினர்களைக்கொண்டு செய்து முடிக்கும் எண்ணம் உடையவராக, தனது குழுவினர்களை நிர்வகிக்கத்தெரிந்த மற்றும் குழுவினர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவர்கள் மட்டுமே சிறந்த திட்ட மேலாளராக பணியாற்றத் தகுதிபெற்றவராவார். ஆகவே  குழுவிலிருக்கும் ஒருவரை அனுப்பி "சொர்க்கத்தில்" இருக்கும் அந்த பொருளை நாம் எளிதாக பெற்றுவிடமுடியும் என்று கூறவேண்டும். அதேநேரம் உங்களின் குழுவிலிருந்து எவரையும் இழக்கவோ அல்லது  பணியிலிருந்து வெளியேற்றவோ கூடாது. ஆகவே அனைவரையும் அரவணைத்து செல்லவேண்டிய கட்டாய சூழலில் நீங்கள் இருப்பதையும் நினைவில் வைத்திருக்கவேண்டும். 

அடுத்த நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம்!...
வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. 

Saturday, April 11, 2015

அச்சு வெல்லம் என்றாலே அதற்க்கு சரியான ஜோடி பச்சரிசி...


அச்சு வெல்லம் என்றாலே அதற்க்கு சரியான ஜோடி பச்சரிசி... 

# அச்சு வெல்லத்தோடு தேங்காய் சேர்த்து சாப்பிட உடல் குளுர்ச்சியடையும். வேர் கடலையுடன் சேர்த்து சாப்பிட உடல் சூடேறும். 

# தயிருடன் அச்சு வெல்லம் சேர்ந்து சாப்பிட உடல் சூட்டை கூட்டும், அதுபோல தயிருடன் உப்பு சேர்த்து சாப்பிட உடல் உஷ்ணம் குறையும். 

# இதெல்லாம் விட அச்சு வெல்லம் தயாரிக்கும்போது வெல்லத்துடன் உப்பை சேர்த்து காச்சுவார்கள், உப்பு வெல்லத்தை புளித்துப்போகாமல் காப்பதோடு, நீண்ட நாட்கள் கெடாமலும் காக்கும்.... இனிப்புடன் சிறிதளவு உப்பு சேரும்போது... இனிப்புத்தன்மை சற்று கூடுவதாக மற்றுமொரு ஆய்வு கூறுகிறது....

# அச்சுவேல்லமும் சின்ன வெங்காயமும் "டெங்கு" காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

"அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிர நாள்தான் ஹோய்........காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்"

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. 

விழிப்போமா?....நெஞ்சே உன் ஆசை என்ன....

விழிப்போமா?..... நெஞ்சே உன் ஆசை என்ன....

# ."அகத்துள் ஆமை புகுந்தால்"... என்பதை தவறாக திரித்துக் கூறப்பட்டு   “ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்.” என்கிற பழமொழியாக மாறியது. 

அகத்தில் ஆமை புகுதல் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் "அகம்" என்றால் உள்ளே அதாவது உள்ளத்தின் உள்ளே  அல்லது மனதினுள்ளே என்பதாக பொருள்படும்.  இங்கு ஆமை என்பது இல்லாமை, இயலாமை, முடியாமை, தெரியாமை, பொறாமை போன்ற இன்னும் பலவித ஆமைகளில், ஏதாவது ஒரு ஆமை மனதுக்குள் புகுந்துவிட்டாலே போதும்,  அவனது மனதோடு சேர்ந்து அவனும் கெட்டுப்போவான். 

கை இழந்த ஊனமுற்றவர்கள் கூட மாற்றுத்திரனாளிகலாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள், ஆனால் கை இருந்தும் நம்பிக்"கையை" இழப்பவர்களுக்குத்தான் பல ஆமைகள் மனதினுள் புக சிறந்த வழியாக அமைகிறது. அப்படி நம்பிக்கையை இழக்கும்போது...அதனுடன் அடங்காமை, அறியாமை, இயலாமை, இல்லாமை, கல்லாமை, தீண்டாமை, தெரியாமை, பொறாமை, முடியாமை, முயலாமை,  போன்ற இன்னும் பல ஆமைகள் மனதிற்குள் புகுந்துவிட்டாலே, அந்த "தற்கொலை" என்கிற கோழைத்தனம் வந்துவிடுகிறது ... எனது 50 வருட வாழ்க்கையில்,  பள்ளிப்பருவத்தில் என் வகுப்பு நண்பன் (20வயதில்- ஒருவன்) மற்றும் நான் இரண்டு வருடம் ஆசிரியராக பணியாற்றியபோதும் என் வகுப்பு மாற்றுத்திரனாளியான மாணவி ஒருவள் என....மேலும் சிலரின் "தற்கொலை" என்கிற கோழைத்தனத்தை போக்க நான் எடுத்த சில முயற்சிகளும் கூட தோல்வியில் முடிந்தபோது... விதி வென்றதா? என்கிற கேள்விக்கு இன்னமும் எனக்கு விடை கிடைக்கவில்லை. 

ஒன்றுமட்டும் நிச்சயம்... என்ன ஆனாலும் ஆகட்டும் ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற வைராக்கிய எண்ணங்களை மனதில் விதைத்து மிகப்பெரிய மரமாக வளர்த்துக்கொள்வதே சிறந்த வழி....அப்படிப்பட்ட வைராக்கியத்தை  இளம் வயதிலிருந்தே மனதில் விதைப்பது மேலும் சாலச் சிறந்தது. 

#....நெஞ்சே உன் ஆசை என்ன?  நீ நினைத்தால் ஆகாததென்ன,  இந்த பூமி, அந்த வானம், இடி மின்னலை தாங்குவதென்ன ........

விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்!
வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. 

Sunday, April 5, 2015

கொழுக்கட்டை மந்தாரை :- பாட்டி சொன்னது:-


கொழுக்கட்டை மந்தாரை :- பாட்டி  சொன்னது:-   விநாயகருக்கும், குரு தட்ச்னாமூர்தி மற்றும் சநீஸ்வரபகவானுக்கும்   பிடித்த பூக்களில் இதுவும் ஒன்று.   இது பொதுவாக மஞ்சள் நிறமுள்ள பூக்களுடன்(சில இடங்களில் வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது) , பூக்களின் நடுவில் காப்பி கோட்டை நிறத்தில் கொழுக்கட்டையின் உள்ளே  இனிப்பு பூரணம் இருப்பது போலவே இந்த பூ அமைந்திருப்பதினால் இந்த பெயர் பெற்றிருக்குமோ?  முன்பெல்லாம் இதன் இலையை ஈர் குச்சியால் தைத்து சாப்பிடும் இலையாக பயன்படுத்தினார்கள் காலம் செல்ல செல்ல இந்த தாவரத்தை காண்பதே அரிதாகிப்போனது. (குறிப்பு:- அந்தி மந்தாரை என்பது வேறு வகை பூந்தாவரம், கொழுக்கட்டை மந்தாரை என்பது வேறு வகை தாவரம்) 
கொழுக்கட்டை மந்தாரை - இந்த மரத்திர்க்கு தனி மகத்துவம் உள்ளது. ஆன் மரம் மற்றும் பெண் மரம் என்று இருவித மரங்களாக காணப்படுகிறது. பெண் மந்தாரை மரம் அழகிய வண்ண பூக்களுடன் சிறு சிறு இலைகலைக்கொன்டதாகவும், ஆன் மந்தாரை மரம் பெரிய இலைகளைப் பெற்றிருக்கும் (இந்த ஆன் மந்தாரை  இலையைத்தான்  ஈர்க்குச்சியால் தைத்து சாப்பிடும் இலையாக பயன்படுத்துகிறார்கள்)  

மந்தாரையின் மருத்துவ குணம்:-இதன் இலையில் விளக்கெண்ணையை தடவி அந்த இலையை சூடான தணலில் வாட்டி,  கத்திக்குத்து அல்லது அடி பட்டு வீக்கம் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் சில மணி நேரங்களிலே வீக்கம் குறைந்து தசைகளுக்கு அடிபட்ட சுவடு தெரியாமல் வலி காணாமல் போகுமாம். ( சோழ மன்னர் காலத்தில் போதி சித்தர் என்று அழைக்கப்பட்ட ஒருவர் இந்த வைத்தியத்தை செய்ததாக குறிப்பு உள்ளது.) மந்தாரை மூல நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது, மந்தாரை இலையில் சாப்பாடு சாப்பிட்டால் குறிப்பாக தயிர் சாதம் பிசைந்து உண்டால் குடல் வியாதிகள் அனைத்தும் குணமாகும்.  மந்தாரையின் இலை, கிளை, வேர்,  மரப்பட்டை என அனைத்தும் பல்வேறுவிதங்களில் மருந்தாக பயன்படுகிறது.........நன்றிகளுடன் கோகி -என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.....

Friday, March 20, 2015

இயலாமையின் கோப தாபம்:-

இயலாமையின் கோப தாபம்:-

பலநேரம்   
நான் சிதறி விட்ட வார்த்தைகள் 
என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் 
என் மௌனம் என்றுமே 
என்னைக் கலங்க வைத்ததில்லை.
முயலும் வெல்லும் 
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது....

....விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) 

விலையில்லா "துளசி தீர்த்தத்தின்" விலைமதிப்பற்ற பெருமையை

வயதான பாட்டி, அவருக்கு தினமும் தான் பிரியமுடன் வணங்கும் பகவான் ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு நெய்வேத்தியம் படைப்பது வழக்கம். பாட்டியிடம் போதிய பணவசதி இல்லை என்றாலும் வீட்டில் சமைக்கும் உணவை-"சாதத்தை" தினமும் தான் வணங்கும் ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு படைத்த பிறகுதான் அனைவரும் உண்ணவேண்டும் என்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.  

திடீரென அதற்கும் இடைஞ்சலாக மகனுக்கும் அவனுடைய மனைவிக்கும் அவர்களது அலுவலக நேர மாற்றத்தின் விளைவாக  விடியற்காலையிலேயே சமைத்த சாதத்தை சாப்பிட்டுவிட்டு , மதியத்திற்கான உணவையும் கையேடு எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டதால், பாட்டிக்கு தர்ம சங்கடம் ஏற்ப்பட்டது. 

தனியாக சுவாமிக்கு நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்ய, தன்னால் ஒரு செலவு மற்றும் தொந்தரவு என்கிற பழிச்சொல் வந்துவிடுமோ? அப்படி பழிச்சொல்லோடு செய்யும் நெய்வேத்திய பிரசாதம் சரியானது இல்லை என்கிற முடிவில், அங்கும்-இங்கும் வைத்திருந்த காசுகளை ஒன்றாக சேர்த்து, கடையிலிருந்து கல்கண்டு வாங்கிவந்து, அதை பிரசாதமாக  நெய்வேத்தியம் செய்து,பேரன், பேத்தி,மருமகள் என்று அனைவருக்கும் கைநிறைய கல்கண்டு பிரசாதம் வழங்கியதோடு, தனது கணவருக்கும், மகனுக்கும் மட்டும் சக்கரை வியாதி இருப்பதால் ஒரு சிறு கல்கண்டு துகளை மட்டும் பிரசாதமாக தந்தார். அன்றைய பொழுது அதே சிந்தனையில் நகர்ந்தாலும், மேலும் இரண்டு நாட்கள் அதே நிலை தொடர்ந்தது.

மறுநாள் புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமை, துவாதசி திதி கூடிய விசேஷமான நாளாக இருந்ததால்,  காலையில் வழக்கம்போல ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு நெய்வேத்தியம் செய்ய முனைந்தபோது,  அவர் வாங்கிவைத்திருந்த கல்கண்டு பிரசாதத்தை சுற்றி ஏராளமான எறும்புகள் மொய்த்தவண்ணம் இருந்ததைக்கண்டு... இன்று பகவானுக்கு தன்னால் நெய்வேத்திய பிரசாதம் படைக்க முடியாமல் போகுமோ? என்று மனம் வருந்தினார். 

வேறு வழிதோன்றாமல் வீட்டு தோட்டத்திலிருந்து பறித்த துளசி இலைகளை தண்ணீரில் கலந்து "துளசி தீர்த்தமாக" செய்து பகவானுக்கு நெய்வேத்தியம் செய்தார். அதிசயமாக அன்று அனைவரும் துளசி தீர்த்தப் பிரசாதத்தை இரண்டு மூன்று முறை கேட்டு வாங்கி சாப்பிட்டதை நினைத்து பெருமிதமடைந்தார். விலை கொடுத்து வாங்கிய கல்கண்டு பிரசாதம் கடுகளவே உண்டாலும், சக்கரை நோய்க்கு விஷமாகும். விலையில்லா துளசி தீர்த்தப் பிரசாதம் எந்த நோய்க்கும் மருந்தாகும்.  விலைகொடுத்து வாங்கிய "கல்கண்டு" பிரசாதத்தைவிட, விலையில்லா "துளசி தீர்த்தத்தின்" விலைமதிப்பற்ற  பெருமையை  எண்ணி வியந்தார்.  

திருமலைக்கு வருகிறேன், காணிக்கை தருகிறேன் என்கிற பெருமாள் கோவிலுக்கு வேண்டுதல்  எப்போது நிறைவேறுமோ? அதை உடனே நிறைவேற்றமுடியவில்லையே? என்கிற கவலை உங்களுக்கு இருந்தால், உடனே சிறு துளசிதளம் (துளசி இலைக் கொத்து) பறித்து அதை தாமிர அல்லது வெண்கல கிண்ணத்தில் போட்டு அந்தக் கிண்ணம் நிறைய தண்ணீர் ஊற்றி,  நடு வீட்டில் ஒரு சிறு மாக்கோலம் போட்டு அதன் மீது கிண்ணத்தை வைத்து, அந்தக்கின்னத்தை நூத்திஎட்டு  சுற்றுக்கள் "ஓம் நமோ நாராயணாய" என்று கூறியபடி சுற்றிவந்தால்...108-பெருமாள் கோவிலுக்கு சென்று வந்த புண்ணியமும் உங்களின் வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஆன்றோர் கூற்று. 

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து.....

எளிமையான கல்விக்கடனுக்கு இளையவர் வங்கிக்கணக்கு அவசியம்.



எளிமையான கல்விக்கடனுக்கு  இளையவர் வங்கிக்கணக்கு அவசியம்.....உங்களின் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள். அதோடு அவர்களின் பள்ளிப்படிப்பிற்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை இந்த வங்கிக்கனக்கின் மூலம் செலுத்துங்கள். காரணம் உயர் கல்வி படிப்பிற்கு தேவையான தொகை கிடைக்காதபோது நீண்ட நாட்கள் வங்கி கணக்கை வைத்திருந்த தகுதியின் அடிப்படையில் உங்களின் மகள்/மகனுக்கு அதே வங்கியில் உடனே கல்விக்கடன் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது 18 வயதிற்கு பிறகு உங்களின் மகள்/மகன் படிப்பு செலவுக்கு உங்களை சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை, அவர்களாகவே கல்விக்கடன் பெற்று அவர்களின் விருப்பப்படி படிக்க முடியும். அவர்களின் காலில் அவர்களே நிலைத்து நிற்கும் பொறுப்புள்ளவர்களாக உங்கள் பிள்ளைகளும் இப்படிப்பாடுவார்கள்......"எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே". http://youtu.be/geYyN5_QYKg

மாணவர்களின் கல்விக் கடன் பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ‘கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

படிப்பை முடித்து ஓராண்டு வரை கல்விக் கடனுக்கான வட்டியோ, அசலோ திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. இந்தக் காலகட்டத்தில் கடனுக்கான வட்டியை மத்திய அரசே சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கிவிடும். வட்டி தள்ளுபடி காலம் முடிந்த பிறகு அந்தந்த வங்கிகளின் வட்டி விகிதப்படி வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு 72 அல்லது 120 தவணைகளில் வட்டியையும் அசலையும் மாணவர்கள் செலுத்த வேண்டும்.

இது தான் 2009-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு. ஆனால், இதன்படி எந்த வங்கியும் செயல்படுவதில்லை என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார். தனது மகளுக்கு கல்விக் கடன் வழங்கிய நாளில் இருந்து 14 சதவீதம் வட்டி விதித்த ஒரு தனியார் வங்கியை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கும் ராஜ்குமார், தன்னைப் போல பாதிக்கப்பட்ட நபர்களை ஒருங் கிணைத்து ‘கல்விக் கடன் விழிப் புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர் கூறியதாவது: கல்விக் கடன் விவகாரத்தில் மாணவர்க ளுக்காக தவணை விடுப்பு காலத்தில் மத்திய அரசிடம் இருந்து 5 சதவீதம் வட்டியைப் பெற்றுக்கொள்ளும் சில வங்கிகள், அதை மறைத்து சம்பந்தப் பட்ட மாணவர்களிடமும் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. மத்திய அரசு வழங்கும் வட்டி மானியத்தை மற்ற வங்கிகளுக்கு வழங்கும் முன்னோடி வங்கியாக (Lead Bank) கனரா வங்கியை நியமித்திருக்கிறார்கள். இதில் என்ன வேதனை என்றால், பெரும்பாலான வங்கிகள் தங்களுக்கு வரவேண்டிய வட்டி மானியத்தை கனரா வங்கியிடம் இருந்து பெறுவதற்கு அக்கறை காட்டவில்லை.

இதனால் அந்த நிதியானது மத்திய அரசின் கஜானாவுக்கே திரும்பிவிட்டது. அரசு கொடுத்த மானியத்தை வாங்காத வங்கிகள் இப்போது அதையும் மாணவர்கள் தலையில் ஏற்றிவிட்டன. எஸ்.சி - எஸ்.டி மாணவர்களின் கல்விக் கடனுக்கான வட்டி மானியத்தை 2009-ல் இருந்து பெரும்பாலான வங்கிகள் பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றன.

ஒன்று அந்த வங்கிகள் அந்தப் பிரிவு மாணவர்களுக்கு கடன் வழங்க மறுத்திருக்க வேண்டும் அல்லது கடனுக்கான வட்டியை அந்த மாணவர்களிடம் இருந்தே வசூலித்திருக்க வேண்டும்.
இந்தக் காரணங்களால்தான் அந்த வங்கிகள் வட்டி மானியத்தை பெறாமல் இருக்கின்றன. இதை அறிந்த இந்திய வங்கிகள் சங்கம், எஸ்.சி - எஸ்.டி மாணவர்களின் கல்விக் கடனுக்கான வட்டி மானிய தொகை கனரா வங்கியில் ஏராளமாக இருப்பில் உள்ளது.

சம்பந்தப்பட்ட வங்கிகள் அதை உடனடியாக பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றன என்று நவம்பர் 5-ம் தேதி, அனைத்து வங்கி களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. மொத்தத்தில் கல்விக் கடன் விவகாரத்தில் மத்திய அரசு விதித்த நிபந்தனைகளை வங்கிகள் கண்டுகொள்ளவில்லை.

இது குறித்து நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் சங்கம் ஆகி யோருக்கு நான் அனுப்பிய புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் படாததால் அவர்களையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்திருக் கிறேன். எனவே, கல்விக் கடன் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

கல்வி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினை களுக்கும் உரிய தீர்வை இந்த இயக்கம் முன்னெடுத்துச் செய்யும் என்று ராஜ்குமார் தெரிவித்தார். (தொடர்புக்கு: +91-9442164601)

Thursday, March 19, 2015

விதியின் பிடியிலிருந்து எப்படி தப்புவது?

பாவம் என்பது நமது எண்ணங்களின் செயல்பாடுகளோ? என்று ஒரு சந்தேகம் வருகிறது. சற்று சிந்தித்துப்பார்த்தால் "நடந்துகொண்டிருக்கிற நான், 'கால் இடறி தரையில் வீழ்வேன்' என்று நமது மனதில் ஓர் எண்ணம் நம்மை தொடருமேயானால், நிச்சயம் நாம் தரையில் வீழ்வது உறுதி. ஆகவே செயல்களைவிட நமது எண்ணங்கள்தான் நமது  தலைவிதியை நிர்ணயிக்கிறதோ என்கிற ஆணித்தரமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறது. 

திருவள்ளுவரும் 113வது அதிகாரத்தில் ஊழ் என்று தனி அதிகாரமே தந்திருக்கிறார். மேலும் எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்று கூறியிருப்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் நமது எண்ணங்கள்தான் விதியை நிர்ணயிக்கிறது என்பது புரிகிறது.  

சரி மனிதப்பிறவி தமது எண்ணங்களின் பிரதி பிம்பங்களான விதியின் பிடியிலிருந்து எப்படி தப்புவது? நம்பிக்கையானது, நல்லது மற்றும்   ஏற்புடையது என ஏற்றுக்கொள்ளுதல் போன்ற இன்னும் பல்வேறு அர்த்தங்களை கொண்டது.  நல்லது அல்லாதவைகளையும்,  "நல்லதாக" பார்ப்பது கூட ஒரு வகையில் நம்பிக்கயின் வடிவங்கள்தான். உதாரணமாக நாம் சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது நமது காலடியில்,  எறும்பு போன்ற பல்வேறு சிறு  உயிரினங்கள் மிதிபட்டு இறக்கின்றன, அதற்க்கு நாம்  பாவம் செய்ததாக வருந்துவதைவிட, அவைகளின் அந்தப் பிறவியிலிருந்து விடுபட்டு , அதைவிட சற்று உயரிய மறு பிறவி பெறுவதற்கு  நம்மால் ஆனா ஒரு உதவியாக நினைப்பதுதான் சிறந்தது, ஏன் எனில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இன்னும் பல புராண இதிகாசங்களிலும், பல உயிர்கள் இறப்பது பாவ விமோச்சனமாகவும் அல்லது கீழ் உயிரினத்திலிருந்து  விமோசனம் பெற்று உயரிய உயிருனமாக மறு பிறவி எடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நமது எண்ணங்களை சிறப்பான எண்ணங்களாக மாற்றினால் நமது தலைவிதியும் மாறிவிடும் என்பது தெரிகிறது.  ஆகவே நமது சிந்தனைகளை நெறிப்படுத்திக் கொண்டு செயல்படுவோமேயானால்  நமது தலைவிதியும் (எப்பிரவியாயினும்) சிறப்பாகவே இருக்கும்.. 

"நீ எதை தூக்கி எரிகிராயோ அது உன்னிடம் திரும்ப வரும் - மகாபாரதம் ... ஆவகே நமது எண்ணங்கள் நல்லவைகளாக பிறருக்கு உதவுமேயானால் அது நமக்கும் நல்லதாகவே அமையும். 

வாழ்க்கை மீது விதிக்கப்பட்டிருக்கும் சில எதார்த்தங்களை ஒப்புக் கொள்ள மறுக்காதீர்கள். நம் முன்னோர் அப்படியான எதார்த்த நிகழ்வுகளை “விதி” என்று வகைப்படுத்தினார்கள். அதை மாற்ற முடியாது என்பதாலேதான் “விதியை மாற்ற முடியும்” எனச் சொல்லாமல் “விதியை மதியால் வெல்லலாம்” எனச் சொல்லித் தந்தனர்..

விதியென்று ஏதுமில்லைவேதங்கள் வாழ்க்கையில்லை... உடலுண்டு உள்ளமுண்டு. முன்னேறு மேலே மேலே.

நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து.....  

Monday, March 2, 2015

நமது "தலைவிதி" என்கிற "குருவிக் குடை!

"குருவிக் குடை"
அனுதினம் விழித்தெழுந்து
அதற்காகவே காத்திருந்தபோதும்,
குருவியளவு அதிர்ஷ்ட மழையில்  கூட...
நம்மை நனைந்துவிடாமல் காக்கும்...
நமது "தலைவிதி" என்கிற
"குருவிக் குடை!..."


# "நான்"

சிறு குருவியே, ஆனாலும்......
பனி மலையின்
உச்சியில் நான் .....


# "அவ்வளவு பெரிய பற்களா"

தலை வாரும்  சீப்புக்கும்கூட
பற்கள் உண்டு ....
உன் காலை,
நான் வாரிவிட்டேன் என்கிறாயே ...
எனக்கு என்ன அவ்வளவு பெரிய
பற்களா இருக்கிறது ?????????????

Friday, February 20, 2015

சிரிக்க சிந்திக்க


#என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,

#உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. தொடர்ந்து பணியைச் செய்ய வேண்டும்.
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து தான் ஆக வேண்டும்.
#மரணத்தைப் பற்றி கவலைப்படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை. பிறகு எதற்கு அந்தக் கவலை?

# அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

#விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
#வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=======================
#ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
#உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

#டீச்சர்: உன்னோட பேர் என்னமா?
பெண்: ஐஸ்வர்யா
டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?
பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டாகூப்பிடுவாங்க..
டீச்சர்: ??? ( எதுக்கு தாயி இந்த கொலை வெறி? )


#ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
"ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன‌
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்"
#உனது எதிரி எறும்பு போல இருந்தாலும்,
அவனை யானை போல கருது....

#வாழ்கையில் ரெண்டு விசயத்த எப்பவும் மறக்கக் கூடாது.
விரும்பி எது வந்தாலும் take care
விலகி எது போனாலும் don't care
தொ[ல்]லைப்பெசியிளிருந்து......

#என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
... வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.

#ஜோசியர் :-இன்னும் ஆறு மாதம் மட்டுமே உங்களுக்கு ரொம்ப கஷ்ட்டம்
ஜோசியம் பார்க்க வந்தவர் :- ஆறு மாதத்துக்கு அப்பறம்
ஜோசியர் :- கஷ்டம் தெரியாமல் பழகிவிடும்.

புது தில்லியில் ஒரு தொலைபேசி உரையாடல் - "சுந்தர் என்பவர் எனது ஆபீஸ் நண்பர், என் குழுவில் புதிதாக சேர்ந்த என்ஜினியர் ஒரு காஷ்மீரத்துப் பெண் பெயர் "மீனாக்ஷி மாண்டு" அன்று ஒரு தொலைபேசியில் ஹிந்தியில் அழைப்பு வர மறு முனையில் "மீனாக்ஷி ஹே" என கேட்க.... நான் "ஹே" இருக்கிறார் என்றேன் அடுத்து ஹிந்தியில் 'சுந்தர் ஹே" என்று கேட்டதும் நான் "பஹூத் சுந்தர்" என்றேன் (ஹிந்தியில் சுந்தர் என்றால் அழகு) ..... ரொம்ப அழகு என்றுகூற, ஆனால் தொலைபேசியில் கேட்டதோ சுந்தர் என்கிற எனது ஆபீஸ் நண்பரை என்பது தெரிந்த பிறகு ... சிரிப்புதான் ........

#பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
சொன்னா புரிஞ்சுக்கணம்... அவ்வளவுதான்
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) ம்)

#ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு.....
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு......(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

#வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் "ப்ரைஸ்" கிடைக்கும்.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
...
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும், Rewindலாம் பண்ண முடியாது.
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

Tea கப்புல "Tea" இருக்கும், World கப்புல World இருக்குமா !!!!!!

# ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! !(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதல Thank You சொல்ல முடியாது !!! !!!!! (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

#* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்..(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

* கார் ஓட டயரும் தேயும்

* சிகரெட் விரலளவு, சீக்கு உடலளவு....(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை..

* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்...

* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது..

* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

* முடியுள்ள போதே சீவிக்கொள்

* பழகின செறுப்பு காலை கடிக்காது

* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே

#என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டைதான் போடும். நூத்துக்கு நூறெல்லாம் போடாது.
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

#கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம் ஆனா ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?

#என்னதான் உன் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

#மீன் பிடிக்கிறவனை மீனவன்'னு சொல்லலாம்……. நாய் பிடிக்கிறவனை நாயவன் என்று சொல்ல முடியுமா? (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

என்னதான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா வலிக்குமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

ஸ்கூல் டெஸ்டில பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்டில பிட் அடிக்கலாம், பிளட் டெஸ்டில பிட் அடிக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பொங்கலுக்கு லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி வடைக்கு லீவு கொடுப்பாங்களா?? (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

கோல மாவில கோலம் போடலாம்… கடலை மாவில கடலை போட முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

தூக்க மருந்து சாப்பிட்ட தூக்கம் வரும்.. இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா??? (என்ன கொடுமை சார் இது)

வாழை மரம் தார் போடும் அதை வச்சு ரோடு போட முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பாலில இருந்து பால்கோவா பண்ணலாம்… ரசத்தில இருந்து ரசகுல்லா பண்ண முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

சண்டே அன்னைக்கு சண்டை போட முடியும். ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

#2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
... அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
# பொருத்தமான பாடல்கள் கொண்ட குட்டி வானொலி கதைகள் ...தாங்களே முன்வந்து கேட்டதற்கு எனது நன்றிகள்
என்னிடம் தயாராக உள்ள கதைகளின் நடுவில் உள்ள பழைய பாடல்களை மாற்றி சற்று புதிய பாடல்களை பொருத்தி சரிசெய்து அனுப்பிவைக்கிறேன்.


*ஒரு இந்திய விவசாயியும் பாகிஸ்தான் விவசாயியும் சந்தித்துக் கொண்டார்கள்.. இந்தியர் தன் வயலைச் சுற்றிக் காட்டினார்..
பாகிஸ்தானி சொன்னார்.. என்னுடைய வயலை காரில் சுற்றிப் பார்க்க ஒரு முழுநாள் தேவைப்படும்..
இந்தியர் சொன்னார்.." என்கிட்டேயும் அது மாதிரி ஒரு ஓட்டைக் கார் இருந்தது. பழைய இரும்புக்கு போட்டுட்டேன்,,!

--------------------

மன்மோகன் சிங்கும், ஒபாமாவும்
பாரில் அருகருகே அமர்ந்து உள்ளனர். அப்போது ஒரு நபர் அந்த பாருக்கு வருகிறார்.

சிப்பந்தியிடம் அவர்கள் மன்மோகன் சிங்கும், ஒபாமாவும் தானே என்று கேட்கிறார்.

"ஆம்! அவர்கள்தான்!" என்றார் சிப்பந்தி.

உடனே அந்த நபர் அவர்களிடம் சென்று "ஹலோ! இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்றார்.

மன்மோகன் சிங் & ஒபாமா : "நாங்கள் மூன்றாம் உலகப் போரைப் பற்றி விவாதிக்கிறோம்."

அந்த நபர், "ஒ! உண்மையாகவா? என்ன நடக்கப் போகிறது? " என்று கேட்கிறார்.

மன்மோகன் சிங்: "நல்லது! நாங்கள் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களையும், ஒரு சைக்கிள்
ரிப்பேர் செய்கிறவரையும் கொல்லப் போகிறோம்"

உடனே அந்த நபர் மிகவும் ஆச்சரியத்துடன் "என்னது ஒரு சைக்கிள் ரிப்பேர் செய்பவரா?" என்று கேட்கிறார்.

மன்மோகன் சிங் ஒபாமா ஐப் பார்த்து, "பார்த்தீர்கள? நான் அப்பவே சொன்னேன், ஒருவரும் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களைப் பற்றி கவலைப் படமாட்டார்கள்! நாம் திட்டமிட்டபடி இதை செய்து முடித்துவிடுவோம்"
நான் படித்ததில் பிடித்த நகைச்சுவை இது. .....
==========

ஒரு ஆப்பிரிக்கன், ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி மூவரும் மெக்சிகோவில் பயணம் செய்த போது ஒரு மெக்சிகனை ஏதோ ஒரு காரணத்துக்காக கொன்று விட்டனர்.அவர்கள் மூவருக்கும் மின்சார நாற்காலி மரண தண்டனை அளிக்கப்பட்டது.

ஆப்பிரிக்கன் ' நான் ஒரு டென்டிஸ்ட். நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் .என்னை விட்டுவிடுங்கள் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

இந்தியன் ' நான் ஒரு டாக்டர் . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது .. சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

பாகிஸ்தானி ' நான் ஒரு எலெக்ட்ரிகல் இஞ்சினியர்.. . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன்...அதற்கு முன் ஒரு விஷயம்..அங்கே பாருங்கள் நீங்கள் ஒயரை மாற்றி கனெக்சன் கொடுத்துள்ளீர்கள்..அந்த கருப்பு ஒயரையும் சிவப்பு ஒயரையும் இடம் மாற்றினால் தான் மின்சாரம் பாயும்.'....... மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
========

ஒரு பாகிஸ்தானிய மாணவன் அமெரிக்க பள்ளி ஒன்றில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

ஆசிரியர்: உன் பெயர் என்ன?

மாணவன்: அஹமத்

ஆசிரியர்: தவறு. இப்பொழுது நீ அமெரிக்காவில் இருக்கிறாய். எனவே இன்றிலிருந்து உன் பெயர் ஜானி. சரியா...

பாகிஸ்தானிய மாணவன் யோசித்தபடியே வீட்டுக்கு சென்றான். வீட்டில் அவனது தாய் 'முதல் நாள் வகுப்பு எப்படி இருந்தது?' என்று கேட்டார்.

மாணவன்: ஓ....நன்றாகவே சென்றது. இன்றிலிருந்து நான் ஒரு அமெரிக்கன். என் பெயர் இனி ஜானி.

பையனின் தந்தையும் தாயும் இஸ்லாத்தை அடி பிறழாமல் பின் பற்றுபவர்கள். எனவே கிறித்தவ பெயரை வைக்கக் கூடாது என்று போதித்தனர். பையன் கேட்பதாக இல்லை. எனவே இவ்வாறு சொன்னதற்காக பையனை திருத்துவதற்காக அவனை அடித்து விட்டனர். அடி வாங்கிய மறு நாள் அதே யோசனையோடு பள்ளியினுள் நுழைந்தான் அஹமத். இவன் யோசனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்த ஆசிரியர் 'என்ன ஆச்சு உனக்கு ஜானி?' என்று கேட்டார்.

பையன் பொறுமையாக சொன்னான் "அமெரிக்கனாக மாறிய என்னை இரண்டு பாகிஸ்தானிகள் அடித்து விடடனர்"
============
கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இபோ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???....
======
அப்பா : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?
மகன் : அம்மா அடிச்சிட்டாங்கப்பா...
அப்பா: சீ ..சீ...இதுக்கெல்லாமாடா அழுவாங்க?
மகன் : அட போங்கப்பா நீங்க எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க என்னால முடியல
=======
சுதா: ஏன் அந்த கிளி ஜோசியக்காரர் வந்தாலே எல்லோரும் கதவை சாத்திக்கிறாங்க?
மகா: அவர் எல்லோரும் பயந்து சாகுறமாதிரி ‘கிலி' ஜோசியம் சொல்லுவாராம் அதான்....
=======
கமலா: கல்யாணம் வேண்டாம்னு சொன்ன நீ உடனே கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொல்றியே எப்படி?
விமலா: உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கம்மியா இருக்காம். டாக்டர் சத்தானதா சமைச்சு சாப்பிடச் சொன்னார். அதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன்....
======
பெண்: டாக்டர் என்னோட கணவர் தினமும் தூக்கத்தில என்னைய திட்டுறாரு.
டாக்டர்: முழிச்சிட்டு இருக்கிறப்ப செய்ய முடியாததை
தூங்கும்போதாவது செய்யட்டுமே விடுங்க !..
=======
டாக்டர் : இன்னையில இருந்து உங்களுக்கு புது சிகிச்சையை அறிமுகம் செய்யப்போறோம்.
நோயாளி : புது சிகிச்சை இருக்கட்டும் டாக்டர். முதல்ல அந்த புது நர்ஸை அறிமுகப்படுத்துங்க !..
========
பப்பு - அப்பா, உங்களால இருட்டுல கையெழுத்துப் போட முடியாதுன்னு சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்க.
அப்பா - யார் சொன்னா, எப்படிப்பட்ட அமாவாசை இருட்டிலேயும் சூப்பரா கையெழுத்துப் போடுவேன் தெரியுமா.. எங்க போடனும் சொல்லு..
பப்பு - என்னோட பிராகரஸ் ரிப்போர்ட்ல தான்...!
=========
நோயாளி : ஆபரேசனுக்கு முன்னாடி டாக்டர் ஏன் நெத்தியில கோடு போட்டார்?
நர்ஸ் : டாக்டர் எந்த வேலை செஞ்சாலும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிப்பார் அதான்....
=======
ஒருவர் : அந்த டாக்டர் ஆபரேசன் பண்றப்ப கூட மயக்க மருந்து யூஸ் பண்ணமாட்டார்.
மற்றவர் : பரவாயில்லையே !
ஒருவர் : அட நீ வேற ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடியே பீஸ் எவ்வளவுன்னு சொல்லிடுவாரு அதுலையே நோயாளி மயங்கிடுவாங்க....
=========
மச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்!!!??.........

நானா ....எப்படிடா??!!....

இப்பவோ......அப்பவோன்னு இருந்த என் மாமனார்கிட்ட நீ எழுதின ஒரு ஜோக்க படிச்சு காட்டினேண்டா......அவ்வளவுதான் பொட்டுன்னு போயி சேர்ந்துட்டாருடா.....அப்புறம் அவருடைய சொத்தெல்லாம் எனக்கு வந்துடுச்சில்ல??!!!.
=========
கட்சித் தொண்டர்கள்கிட்டே ‘மனு’ வாங்கிய
தலைவர், ஏன் கோபப்பட்டாராம்?

யாரோ ஒரு தொண்டர், பசங்களோட வீட்டு பாடத்தை செய்து கொடுக்க சொல்லி மனுவாக கொடுத்துட்டாராம்…அதான்!
========
உன் பேரு என்னம்மா?

"சனியாத்தா"

உன் புருஷன் பேரு என்னம்மா?

"சனியப்பன்"

உன் பெரிய பையன் பேரு?

"பாத சனி"

உன் சின்ன பையன் பேரு?

"அஷ்ட சனி"

உன் ஊரு பேரு?

"சனியாசிகுப்பம்"

உன் புருஷன் என்ன வேலை செய்கிறார்?

"சனிஸ்வரர் கோயில் வாசலில் சம்சா விற்கிறார்"!!!!!!!??......

சென்சஸ் எடுப்பவர் : அட... ச்சே...ராசி பலன்லே ..ஏழரை ஆரம்பம்னு போட்ருந்தான்...நான் நம்பலை....ஆரமபிசிடுச்சுடா..சாமி...
=======
ஒரு பேருந்து விபத்து!
பயணிகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தனர். கைகால்கள் இழந்தவர்களின் அலறல்.

"கண்டக்டர் என்னப்பா ஆனான்?"

பரபரப்போடு கண்டக்டரை அக்கறையோடு தேடிக்கொண்டிருந்தார் ஒருவர்.
"பாவம், கண்டக்டர் இவருக்கு ரொம்ப பழக்கமான ஆள் போலிருக்கு!" என்று நினைத்த சிலர், சற்று தொலைவில் ஒரு மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கண்டக்டரை அவருக்கு சுட்டிக்காட்டினார்கள்.

பரபரப்போடு அவரை நோக்கி ஓடினார் அந்த ஆசாமி.
உடைந்துபோய் ரத்தம் வழிந்துகொண்டிருந்த தன் மூக்கைப் பொத்தியவாறு உட்கார்ந்திருந்த கண்டக்டரை நெருங்கினார் அவர்.

"என்னப்பா...இங்கேயா இருக்கறே.....ஆனது ஆயிப்போச்சு...நடக்கவேண்டியதைப் பார்க்கணுமுல்ல....எனக்கு வரவேண்டிய சில்லறை பாக்கி 15ரூபா அம்பது காசைக் குடுத்துடுப்பா!.....நான் வேற பஸ்சுல போய்க்கறேன்!"
என்னதான் ரகசியமோ இதயத்திலே...
நினைத்தால் எனக்கே சிரிப்புவரும் சமயத்திலே
http://youtu.be/TC_ewqr6eqk

விழியிலே மணி விழியினில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களின் பொன்னும் மின்னும்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
ம்ஹும்.. ம்ஹும்..:
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீயும் ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்.... http://www.youtube.com/watch?v=xX9ZLClies4&feature=share&list=PL71E157D7E01C958E

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாம் அதிசயம் ஆனந்தம் ..காற்றினிலே வரும் கீதம்.... http://youtu.be/od2N2tZnu14

" வெளிநாட்டு மதங்கள எவ்வள்வு தொகை கொடுத்தாலும் மாறத்தயாராக இல்லை!!! 

அவர் ஒரு சிறந்த மத போதகராக இருந்தார். ஆனால் அவர் பணியாற்றிய ஆலய நிர்வாகம் வேற்று மதத்தவர்களை அவர்களின் மதத்தில் சேர்க்க முயற்சிக்கும்படி ஆலய மத போதகரை கட்டாயப்படுத்தினார்கள்.  ஆகவே அவர் அருகில் இருந்த ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள ஒரு கோவில் குளக்கரையில் இருந்த அரச மரத்தடி கற்சிலை கடவுளை மக்கள் வணங்கியபடி இருப்பதை  பார்த்த அந்த மத போதகருக்கு ஒரு யோசனை தோன்றியது, அதன்படி அவர் அங்கு கூடியிருந்த பொது  மக்களைப் பார்த்து "நீங்கள்  அனைவரும்  வணங்குவது  வெறும்  கற்சிலை அது  கடவுள் அல்ல, வேண்டுமானால்  இந்த  கற்சிலையும் இதோ  இங்கு அலைந்துகொண்டிருக்கும்  நாயையும் அந்த குளத்துக்குள் தூக்கி எரிந்தால் எது கரையை வந்து சேர்கிறது என்பதை நீங்களே பாருங்கள் அப்போது புரியும் என்றார்.
 
அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் வேறு முறையில் மாற்றி செய்யலாம் என்றார். அதற்க்கு அந்த மத போதகர் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யுங்கள் கற்சிலையில் கடவுள் இல்லை என்றார். 

முதலில் கடவுள் சிலை மீது அந்த உயிர் உள்ள நாயை போடுங்கள், பிறகு நாய் மீது கடவுள் சிலையை போடலாம் பிறகு எது அதன் தன்மை மாறாமல் இருக்கிறது என்று பார்க்கலாம் என்றார். 

இதைக்கேட்ட மத போதகர், தமது போதனை இங்கு செல்லுபடியாகது என தெரிந்துகொண்டு  அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். 

" வெளிநாட்டு மதங்கள எவ்வள்வு தொகை கொடுத்தாலும் மாறத்தயாராக இல்லை!!! 

நம்மைசுற்றி ஏராளமான ஆன்மாக்கள் எப்பொதும் அனைத்து இடங்களிலும்.....

ஒரு ஆத்துமாவின் சுய கதை என்கிற புத்தகம் படித்தபோது, அந்த ஆத்துமா மறுபிறவியாக ஒரு குழந்தையாக பிறந்ததுவரை நடந்த நிகழ்வுகள் என்பது சரியான முடிவில்லை. அருமையான சிந்தனை, சிந்தனையின் தொடக்கத்தில் இருந்த தெளிவு முடிவில் இல்லை ... அதாவது  "நான்கு சுவற்றுக்கு நடுவில் யாரும் இல்லை என்று மனிதன் நினைப்பது இயல்பு, ஆனால்  நம்மைசுற்றி ஏராளமான ஆன்மாக்கள் எப்பொதும் அனைத்து இடங்களிலும் சுற்றிக்கொண்டு இருப்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை. எனக்கும் அப்படிப்பட்ட எண்ணம் 12 வயதுவரை இருந்தது, அரவிந்தர் ஆசிரமத்தின் பிரதிநிதியான ஒரு குருவின் ஆசியில் பெற்ற ஆழ்நிலை தியானம் பயின்ற இளம் கன்று பயம் அறியாது என்பதற்கிணங்க, சவாசனத்தில்-ஆழ்நிலை தியானத்தில் இறங்கியபோது நடந்த நிகழ்வு அது(சவாசனத்தில்-அதாவது தரையில் படுத்தநிலையில் ஆழ்நிலை தியானம் செய்யக்கூடாது என்பது நியதி. உட்கார்ந்த நிலையில் மட்டுமே தியானம் செய்யவேண்டும் அதுவும் 20 அல்லது 30 நிமிடங்கள் மட்டுமே தியானத்தில் இருக்கலாம்) அப்படி தியானத்தில் இறங்கியபோதுமூன்று முறை என் உடலை நானே பார்த்த அனுபவம், என்னை சுற்றி ஏன் இப்படி ஒரு கூட்டம், கூச்சல், குழப்பம் தெளிவில்லாமல் ஒரு பயம் எனது கால்களை கால்பந்து விளையாடுவதுபோல எட்டி உதைத்து..... விழித்துக்கொண்டேன்... தூக்கத்தில் இருந்திருப்போமா?... தெரியவில்லை... என்ன நடந்தது தெரிந்துகொள்ள மேலும் ஒரு முயற்சி என மூன்று முறை... அதற்குமேல் ஆராய்வதற்கு நேரமில்லாமல் ஓடி ஓடி உழைத்து குடும்ப பொறுப்பு...வயதாகிப்போனதால் மனதுக்கிருந்த தைரியமும், சக்தியும் உடலுக்கு இல்லை... ஆனால் ஒன்று நிச்சயம் ஒவொருவரின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட உணர்வுகளின் நினைவுகள் ஆத்மாக்களுக்கு உண்டு ஆனால் ஆத்துமாக்கள் மீண்டும் பிறவி எடுக்கும்போது அவர்களின் புனர் ஜென்ம நினைவுகள் மங்கிவிடுகிறது அதாவது மறந்து போகும், ஏதோ ஒரு சிலர் மட்டும் புனர் ஜென்ம நினைவுகளை பெற்றிருக்கிறார்கள்.  நன்றிகளுடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன் ரேடியோ மார்கோனி.   

Saturday, January 10, 2015

அடுத்த சில நாட்களில் இந்திய வட மேற்கு எல்லைப்பகுதியில் ஒரு பூகம்பம் நிகழ சாத்தியக்கூறுகள் உள்ளது.

12-05-2015 12.30am இன்று நேபாளம் மற்றும் சீனா,  ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பாக, தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களிலும் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது. இன்றைய இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “பூகம்பத்துக்குப் பிறகான பூமியின் ஊடாக சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறை கிட்டத்தட்ட 6 மீட்டர்கள் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வு” 

“பூகம்பம் காரணமாக பாறைகள் பூமிக்கு அடியில் இடப்பெயர்வு கண்டுள்ளதால் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் குறித்து ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் டேனியல் ஜக்ஸா கூறும்போது, மேலும் ஒரு சுனாமி வருவதற்கான சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்தார், அதாவது ஆசியப்பாரைத்தட்டு ஆஸ்திரேலிய பாரைத்தட்டான சுண்ணாம்பு பாறைக்கடியில் மிகப்பெரிய அழுத்தத்தால் தொடர்ந்து அழுத்திக்கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் ஆசியப்பாரைத்தட்டு பசிபிக் கடல்பகுதியில் ஒரு பிளவை சந்திக்கக்கூடிய சூழல் எப்போதுவேண்டுமானாலும் ஏற்ப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு பிளவு ஏற்ப்ப்படும்போது இந்திய மதுரம் இந்தோனேசிய பசிபிக் கடல்பகுதியில் மிகப்பெரிய சுனாமி பேராலை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள். 

25-Apr-2015. Massive 7.5 Magnitude Earthquake in Nepal, Tremors Across Northern India.

சற்றுமுன் 25-ஏப்பரல்-2015 11.50 அளவில்  புது  தில்லி அதன் சுற்றுப்பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் 7.5 அளவில் இருக்கும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது  நான் ஏற்க்கனெவே குறிப்பிட்டபடி பூகம்பம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை சென்ற மாதம் (மார்ச் மாதம்) வரும் என்று எதிர்ப்பார்த்தேன் ... விவரங்களுக்கு எனது வலைபூவில் ....
அடுத்த சில நாட்களில் இந்திய வட மேற்கு எல்லைப்பகுதியில் ஒரு பூகம்பம் நிகழ சாத்தியக்கூறுகள் உள்ளது. ....இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவின் மேற்கு கடலோரப்பகுதியின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.4 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று 10-01-2015 காலை 4.29 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், கடலோரப்பகுதியின் வடக்கு பகுதியில் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதாவது தென் கெழக்கு ஆசிய நிலப்பரப்பின் மேல் தட்டு சில அடிகள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது தெளிவாகத்தெரிகிறது, இதேபோல 1994 வருடம் இந்தோனேசியாவில் 6.2 புள்ளிகளாக நினலடுக்கம் பதிவானபோது, அடுத்த சில நாட்களில் இந்தியாவில்  உத்திரப்பிரதேசத்தின் வடக்கு பகுதியில் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.  ஆகவே அடுத்த சில நாட்களுக்குள் இந்தியாவின் வடபகுதியிலோ அல்லது வட கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலோ ஒரு பூகம்பம் நிகழ சாத்தியக்கூறுகள் உள்ளது.... இதற்க்கு முக்கியக்காரணம் ஆசியாவின் பூமத்தியரேகைக்கு கீழ் பகுதியில் அமைந்த பூமியின் மேல் உள்ள பாறைத்தட்டு கிழக்கு நோக்கி நகர்கிறது என்பதை சென்ற 10 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கிறது (இது குறித்து பலவிவரங்களை என்னுடைய Blogspot இணையப்பக்க பதிவில் காணலாம்) .. மேலும் நடக்கப்போவதை பொறுத்திருந்து பார்ப்போம் ..... ஆலோசகர் - கோகி 


24 மார்ச் மாதம் 2015. இந்திய தலைநகரான கிழக்கு தில்லியிலிருந்து சுமார் 49 கி மி தூரத்தில் அமைந்திருக்கும் உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் நேற்று மாலையில் 7 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகி இருந்தது.அடுத்த சில மணிநேரங்களிலேயே இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு 11.42 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சேத விவரம் ஏதும் ஏற்படவில்லை. [ஆஸ்திரேலியா  மற்றும் ஆசிய பூமி மேல்பரப்பு தட்டுக்கள்  ஒன்றன்மீது ஒன்று அமைந்திருக்கிறது,  இந்த தட்டுக்களின் எல்லை (முனை) இந்தியப்பெருங்கடலின் அடியில் உள்ளது. (குறிப்பாக :- ஆசியத்தட்டு கீழும் ஆஸ்திரேலியாவின் சுண்ணாம்பு பாறை தட்டுகள் மேல்புறமும் அழுத்தம் ஏற்ப்பட்டு நகர்ந்ததினால் ஏற்ப்பட்ட விளைவுதான் 00:58:53 நேரம் டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் தென் இந்திய சுனாமியாக மாறியது. இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து,ந்தோனேசியாமலேசியாஇலங்கைந்தியாமாலைதீவுகள்ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர். அதோடு பல வருடங்களாக ஆசியத்தட்டு கீழ்நோக்கி நகர்கிறது ஆகவே தென் இந்தியப்பகுதி சிறிது சிறிதாக கடலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கிறது. )] 

#டக்னா, மார்ச் 23-தென் அமெரிக்க நாடான பெரு மற்றும் சிலி எல்லைப்பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
பெருவின் தெற்குப்பகுதியில் உள்ள டக்னா நகரம் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நகரமான டக்னாவில் 2,50,000 மக்கள் வசிக்கின்றனர். சிலி நாட்டில் இருந்து 35 கி.மீ. தொலைவில் டக்னா உள்ள நிலையில், சிலியின் புட்ரே நகரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், பூமிக்கடியில் 128.1 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலநடுக்கத்தின் தாக்கம் டக்னா நகரத்திலிருந்து 105 கி.மீ. தூரம் வரையிலும், சிலியில் உள்ள மிகப்பெரிய நகரமான அரிக்கா மற்றும் புட்ரே ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது. எனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

#19 March 2015 12:53 AM IST இந்தோனேசியாவின் மலுக்கா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்தது.
ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகள் பதிவான இந்த நிலநடுக்கம், அந்த நாட்டின் கோடா டெர்னேட் நகருக்கு வடமேற்குக் கடல் பகுதியில், 41 கி.மீ. ஆழத்தில், செவ்வாய்க்கிழமை ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்தது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
புவித் தட்டுகள் ஒன்றோடு ஒன்று உராயும் "நெருப்பு வளையம்' என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
கடந்த 2004-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமிக்கு இந்தோனேசியாவில் 1.7 லட்சம் பேரும், இந்தியப் பெருங்கடல் நாடுகள் பலவற்றில் ஆயிரக்கணக்கானோரும் பலியாகினர் என்பது நினைவுகூரத் தக்கது.

# டோக்கியோ, பிப். 23-2015 ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.  கிழக்கு ஜப்பானில் உள்ள ஹோன்ஷூ கடற்பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மிதமான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று கூறியுள்ளது. இப்பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

# February 11-2015 02:43 PM IST..அந்தமானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை.



#புதுடெல்லி, பிப்.2-2015 மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 85 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை

Sunday, December 7, 2014

வெற்றிலை சாறு "எபோலா" வைரஸ்சுக்கு எதிராக செயல்பட்டு....

வெற்றிலை சாறு "எபோலா" வைரஸ்சுக்கு எதிராக செயல்பட்டு அந்த வைரஸ்ஸை தாக்கி அழிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா ஒரு மூலிகைகளின் சொர்க்கம் என்கிற இரகசியம் இந்தியர்களைத்தவிர, உலகின் பிற நாட்டவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

இராமயணத்தில் வெற்றிலை:- அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது சீதையை தேடிப்போன அனுமன் சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டதும் ஸ்ரீ ராமனை பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதிப்பது வழக்கம். அனுமன் சேவித்த போது சீதைக்கு அட்சதையோ புஷ்பமோ கிடைக்கவில்லை. ஆனால் அருகில் தடவிய போது வெற்றிலை இலைகள் கிடைக்க அதனையே அனுமன் தலை மீது தூவ அனுமனும் அந்த வெற்றிலைகளை ஒரு நூலில் கோர்த்து சீதையிடம் கொடுத்து தனக்கு மாலையாக அணிவிக்குமாறு கேட்டு அதை கழுத்தில் அணிந்ததாகவும் அதன் காரணமே அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

FREE JOBS EARN FROM HOME