FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, February 16, 2017

Life: THE BEST COMPANION

Life: THE BEST COMPANION: Hi friends, When my children were kids, I used to visit my close relatives so that they could get good exposure. One of my relatives was ...

Monday, February 13, 2017

ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். ...

ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். ...

வானொலியில் நான் எழுதி வழங்கிய நிகழ்ச்சித் தொகுப்பை, புத்தகமாக........ பகுதி-100(Episode-100)- இன்றய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? 

....."மேலாளர்" பதவிக்காக நேர்காணல் தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் "TOILET-கழிவறை நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா" என்றார்.

இப்போது இந்த விளையாட்டின் பந்து உங்களிடம் உள்ளது. நேர்காணலுக்கு வந்திருப்பவர் நீங்கலாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.

# பொதுவாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் சொல்வதைக்கூட சுத்தகரிப்பு தொழிலாளி சரியாக செய்யமாட்டார். நீங்களோ இன்னமும் அந்த நிறுவனத்தில் சேரவில்லை ஆகவே உங்களுக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உதவமாட்டார்கள்.

# நீங்களாகவே கழிவறையை பெருக்கி சுத்தம் செய்தால் நீங்கள் அந்த பணிக்குத்தான் லாயக்கு என்று முத்திரை குத்தப்படலாம்.

# மேலாளர் பதவிக்கு வந்த என்னைப்பார்த்தா இப்படி சொன்னாய் என்று கோபித்துக்கொண்டு "சரிதான் போடா சொட்டத்தலையா" என்று திட்டிவிட்டு வந்துவிட்டாலும் நீங்கள் மேலாளர் பதவிக்கு லாயக்கு இல்லாதவர் என முத்திரை குத்தப்படும்.

# அப்படியென்றால்  இந்த கேள்விக்கான பதில் என்ன???? ஒரு .நிறுவனத்தின் மேலாளர் என்பவர் விரல் நுனியில் விவரங்களை (fingers edge information) வைத்திருக்க வேண்டமா?

ஒரு நிறுவனத்திற்கு தேவையான அனைத்துவித சேவைகளையும் பெறுவதற்கு தேவைப்படும் சேவை நிறுவன தொலைபேசி எண்கள், நபர், முகவரி, போன்ற அனைத்து தகவல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களே...  விரல்  நுனியில்  விவரங்கள் வைத்திருப்பவர் என்பவர்"

இப்போது நீங்கள் உங்களின் " விரல் நுனியில் உள்ள விவரங்களை" பயன்படுத்தி கழிவறை சுத்தகரிக்கும் நிறுவனத்தை அழைத்து சுத்தம் செய்யச்சொல்லி, பிறகு சுத்தமான கழிப்பிடத்தை அந்த நிறுவன உரிமையாளரிடம் காண்பித்து "சபாஷ் மிக அருமையாக செய்திருக்கிறாய்" என்று கூறும்போது.... கழிவறை சுத்தகரித்த நிறுவனத்தின் செலவு சீட்டை தந்து அதற்க்கான தொகையை செலுத்துமாறு கூறவேண்டும்.

பாடல்:-...."வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைகாரன் வெவகாரமான வேலைக்காரன்.. http://youtu.be/HlYJd-bLiPk "

அடுத்த நேர்காணல் விளையாட்டை நாளை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...

மேலும் இப்படிப்பட்ட பல அனுபவங்களை கீழ் காணும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் வாங்கி படித்துப்பாருங்கள்.  இதை நான் புத்தக வியாபாரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவங்கள் சிறந்த வழிவகைகளை கற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன். 

எனது அனுபவங்கள் உங்களுக்கு பயனுள்ளவகையில் அமைந்து, அந்தப்புத்தகம் சிறந்த பெயரையும் புகழையும் பெறுமேயானால் .... எனது முதுமைக்காலங்களில் எனது பெயரே எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும். அதாவது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது அனுபவக் கல்வி பயன்படும் என்கிற நோக்கில், அந்தக் கல்வி நிறுவனங்கள் என்னை அழைக்கும்போதெல்லாம் என் பெயர்தான் எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும் என்பது உங்களுக்கு புரிகிறதா?... 
வாய்ப்பிற்கு நன்றி ....
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்...
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் !
வணக்கம்... நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
Contact:- GK India-New Delhi-+91-9717236514, E_mail:-GOPALKRISHNAN64@GMAIL.COM

Saturday, February 11, 2017

சாபம் நீக்கியோன் சன்னிதிக்கு வாராய்!

சாபம் நீக்கியோன் சன்னிதிக்கு வாராய்!

"வெறும் சேவை செய்தாலே போதும்- சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும்" என்பது உங்களுக்குத் தெரியுமா? பல வரலாற்று உண்மைச் சம்பவங்களோடு அவற்றைத் தெரிந்துகொள்ள, தொடர்ந்து இந்தப்பதிவை படித்துப்பாருங்கள்.......


மனித பிறவி எடுத்த ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சில தோஷ்ங்கள் காணப்படுகின்றன. முற்ப்பிறவியில் செய்த தவறுகளால், பாவச்செயல்களினால் ஏற்பட்ட வினைதான் இப்படி தோஷங்களாக அமைந்துவிடுகிறது. அவற்றில் முதன்மையான தோஷம் ராகு-கேதுவினால் வரும் தோஷங்களாகும். அதாவது நிழலாக நமது ஆத்மாக்களின் பிறவிகளோடு தொடரும் தோஷங்கள். அப்படி நிழல் கிரகமான ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷ பரிகாரமாக பலவற்றையும் செய்வதைவிட மிகச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது... அது எப்படி என்பதை சில உண்மைச்சம்பவங்கள் மற்றும் சில வரலாற்று நிகழ்விலிருந்து விளக்கமாகக் கூறுகிறேன் கேளுங்கள்....

கர்ம வினைகளினால் ஏற்படும், பிதூர்தோஷம், களத்திர தோஷம், சர்ப்பதோஷம், புத்திர தோஷம் போன்ற முக்கிய தோஷங்களுக்கு நிழல் கிரகங்களான ராகு,கேதுக்களே காரணமாகின்றனர். ஏனென்றால் அவை நிழலாக நம்மைவிட்டு விலகாமல் நாம் செய்த கர்ம வினைகளினால் நம்மை துரத்துகின்றன. அப்படிப்பட்ட இருட்டு-நிழல் நம்மீது படர்வதினால், நமது உடலின் உருவம் மற்றவர்களை கவர்ந்திழுக்காமல் மங்களாகி விடுவதோடு, நமது எண்ணங்களும் இருட்டடிக்கப்படுகிறது. நமக்கு முன்னாள் எதோ ஒரு திரை நமது கண்களை மறைக்கும்போது அந்தத் திரையை விலக்காமல் நம்மால் எதையும் செய்யமுடிவதில்லை.  

ஜோதிடர்களின் கூற்றுப்படி, சர்ப தோஷம் என்பது என்னவென்றால் ஒருவரது ஜனன ஜாதக லக்னத்தில் ராகு, மற்றும் 7ஆம் இடத்தில் கேது. இல்லையென்றால், லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு. அல்லது 2இல் ராகு, 8இல் கேது அல்லது 8இல் ராகு, 2இல் கேது. அதாவது லக்னம், மற்றும் லக்கினத்திலிருந்து 1ஆம் இடம் 7ஆம் இடம், 2ஆம் இடம் 8ஆம் இடம் இதில் ராகுவோ கேதுவோ இருந்தால் அதற்குப் பெயர் சர்ப தோஷம்.

சர்பதோஷத்தினால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும். இதனால் சர்ப தோஷம் உள்ள ஒரு ஜாதகரோடு, மற்றொரு சர்ப தோஷம் கொண்ட ஜாதகரையும் சேர்க்கும் போது சில தோஷங்கள் நிவர்த்தியாகிறது. அதனால்தான், தோஷத்திற்கு தோஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம். 

மருத்துவத்துறை சிறப்பாக நடக்க மருத்துவ கிரகமான கேதுவின் அருள் வேண்டும். அவரது அருள்கடாட்சம் இல்லாமல் மருத்துவத்துறையில் முன்னேற முடியாது. மேலும் திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ராகு-கேது எல்லோருக்கும் கெடுதலை செய்துவிடுவதில்லை ஒரு சிலருக்கு அபரிதமான நன்மைகளையும் கொடுப்பார்கள். ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், அடிக்கடி பாம்பை பார்க்கநேரிட்டாலும், ராகு /கேது தோஷ பரிகாரம் செய்வது நல்லது. 
பரிகாரம்; 
@  திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் செய்யலாம்.மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிவன் உள்ளிட்ட (பாம்பு தொடர்பான) கோயில்களிலுக்கு சென்று வழிபாடும் மேற்கொள்ளலாம். நவகிரகத்தில் உள்ள ராகு/கேதுவுக்கும் விளக்கேற்றலாம்.   

(திருக்காளஹஸ்தி சென்றால் பாதாள விநாயகரையும், திருகாளத்தீஸ்வரரை தரிசிக்கும்போது   சிவலிங்கத்தோடு  இருக்கும் நாகதேவரையும், சிலந்தி மற்றும் யானை மற்றும் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் தங்கப் பல்லி ஆகையவைகளை அதற்குரிய  இத் தளத்தின் வரலாற்று முறைப்படி தரிசிக்கவேண்டும் என்பதை கவனத்தில் வையுங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில், உங்களைப்பிடித்த தோஷங்களை போக்கும் என்பதை நினைவில் வையுங்கள். எப்படிப்பட்ட புராதான திருக்கோவில்களாக இருந்தாலும், அந்தக் கோவிலின் / திருத்தலத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்த திருத்தலத்தின் வரையறுக்கப்பட்ட முறைப்படி தரிசனம் செய்தால் மட்டுமே முழுப்பலனையும் பெறமுடியும். ஆகவே கோவில் அலுவலகத்தை தொடர்புகொண்டு அல்லது அந்த திருக்கோவில் அர்ச்சகரை உரிய தட்சிணைகளை தந்து, முழுவிவரங்களையும் தெரிந்துகொண்டு, உரிய முறையில் தரிசனம் செய்யவேண்டும். அப்போதுதான் சரியான தரிசன பலன் நமக்கு கிடைக்கும்)

@  ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது தோஷம் பெற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவலாம்.ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு உதவலாம். பழைய பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவலாம். பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொறுப்பேற்கலாம் இதுவும் சிறந்த பரிகாரமாகும்.
@ இன்னொரு சிறந்த பரிகாரமாக ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தாய்வழி பாட்டன், பாட்டி-தகப்பன் வழி பட்டன், பாட்டி இவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்விப்பது சிறந்த பரிகாரமாகும். காரணம் ஜோதிட ரீதியாக ராகு,கேதுற்கு இவர்களே அதிபதி ஆவார்கள்.

@ நிழல் கிரகமான ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷ பரிகாரமாக பலவற்றையும் செய்வதைவிட மிகச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது......அதாவது " ஆலயம் செல்லும் பக்தராக குறைந்தது ஒருநாளாவது   "புட்டபர்த்தியில்" கால்கள் அந்த புண்ணிய பூமியில் படுமாறு அங்கு தங்கி சேவை செய்யவேண்டும். (சபிக்கப்பட்ட இடம் எப்படி புண்ணியபூமியானது என்பதற்கு ஒரு புராண சம்பவம் ஒன்று உண்டு) அப்படி சேவை செய்வதால் ராகு கேதுவின் தோஷங்கள் உங்களைவிட்டு விலகுவதை உங்களால் அனுபவப்பூர்வமாக உணரமுடியும்.  அது எப்படி என்பதை ஒரு வரலாற்று நிகழ்விலிருந்து விளக்கமாகக் கூறுகிறேன் கேளுங்கள்....

(இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் சித்திராவதி நதிக்கரையருகே அமைந்த ஒரு நகரம் "புட்டபர்த்தி" என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது. புட்டப்பருத்தியின் அசல் பெயர் "கொல்லபள்ளி"  என இருந்தது)

முன்னமோர் நாளினில் மூண்டசா பத்தினால் 
துன்னிய புற்று துயர்செய்த பர்த்தியைப்
பன்னகம் பூண்டவன் வாழ்கயி லாயமோ
மென்னகை நாரணன் மேவுவை குந்தமோ
என்னவே ஆக்கிய இன்முகன் சாயியின்
சன்னிதி தன்னைச் சடுதியில் சேர்ந்திட
உன்னை யழைத்தோம் உறங்குதல் ஆகுமோ
இன்னகை வாராய்! இசைந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-4)

பொருள்:-
பண்டைநாள் ஒன்றில் உண்டான சாபத்தால் புற்றுக்கள் மண்டிக் கிடந்து புட்டபர்த்தி மிகவும் துன்பமடைந்தது. அப்படிப்பட்ட இடத்தை, இது நாகங்களை அணிந்த சிவன் வாழும் கைலாசமோ, இனிய நகை பூண்ட நாராயணன் வசிக்கும் வைகுண்டமோ என்னும்படி ஆக்கிவிட்டான் சாயி! அவனுடைய சன்னிதிக்கு விரைவாகப் போய் அடையலாம் வா என்று நாங்கள் உன்னை அழைத்தோம். இனிய நகை பூத்தவளே! இசைந்து எங்களோடு வருவாயாக. (அருஞ்சொற்பொருள்: பன்னகம் - பாம்பு.)

இன்று புட்டபர்த்தி என்று அறியப்படுமிடம் பண்டைக்காலத்தில் கொல்லபள்ளி (பசுக்கூட்டம் நிறைந்த இடம்) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இங்கு முழுவதும் பசுக்களும் இடையர்களும் நிறைந்திருந்தனர்.

ஒருநாள் அந்தக் கிராமத்தின் இடையன் ஒருவன், காட்டில் பசுக்களை மேய்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான். அதில் ஒரே ஒரு பசுவின் மடியில் பால் இல்லை என்பதை கவனித்து ஆச்சரியம் அடைந்தான். இது தொடர்ந்து நடந்தது. ஒருநாள் அந்தப் பசுவைப் பின்தொடர்ந்து சென்று எப்படிப் பால் திருடுபோகிறது என்றறியத் தீர்மானித்தான். இதையறியாத பசு வழக்கம்போல ஒரு பாம்புப் புற்றின் அருகில் சென்றது. அதிலிருந்து ஒரு பாம்பு வெளிவந்து, பசுவின் பின்னங்கால்களைச் சுற்றிக்கொண்டு அதன் மடியிலிருந்த பாலைக் குடித்தது. பசுவுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை.

இடையனுக்குக் கோபம் கண்மண் தெரியாமல் பொத்துக்கொண்டு வந்தது. அந்தப் பாம்பு தெய்வீகமானதாக இருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றவில்லை. ஒரு பெரிய கல் ஒன்றை எடுத்துப் பாம்பின்மேல் எறிந்தான். ரத்தம் சிதறிக் கல்லைக் கறையாக்கியது. பாம்பும் இறந்துபோனது.

ஒரு பாம்பை அடித்தால் புற்றீசல் போல பல பாம்புகள் வெளிவரும் என்பது கூற்று. எனவே இந்தச் சம்பவத்துக்குப் பின் கொல்லபள்ளியில் இடையர் குடும்பங்களும், பசுக்களும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன. பார்க்குமிடமெல்லாம் பாம்புப் புற்றுகள் வளரத் தொடங்கின. அந்த இடையனால் கொல்லப்பட்ட பாம்பின் சாபமே கொல்லபள்ளி கிராமம் அழியக் காரணம் என்று மக்கள் நம்பினர். அந்த கிராமத்தின் பெயர் ‘புட்டவர்த்தினி’ (புற்றுக்கள் செழித்து வளரும் இடம்) என்றாயிற்று.

பாம்பின் ரத்தம் படித்த அந்தக் கல்லை எடுத்துச் சென்று அதற்கு ‘கோபாலஸ்வாமி’ என்று பெயரிட்டு அதைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். (கோபாலன் என்றால் பசுக்களைக் காப்பவன், அதாவது இடையன், என்றுதானே பொருள்). தமது குலத்தைச் சேர்ந்தவன் செய்த தவறை மன்னிக்கப் பிரார்த்தனை செய்தனர். மெல்லப் பெயர் மாறி ‘புட்டபர்த்தி’ என்று ஆனது.

அதே கிராமத்தில் ரத்னாகர வம்சத்தில் வந்த கொண்டமராஜு கிருஷ்ணனின் தேவியான சத்யபாமாவுக்கு ஒரு கோவில் ஏற்படுத்தினார். மிகுந்த பக்திமானான கொண்டமராஜுவின் பேரனாக அவதரித்த அவதாரப் புருஷனால் புட்டபர்த்தியின் சாபம் முழுவதுமாக நீங்கப்பெற்று, இன்று உலகம் போற்றும் தெய்வத் திருத்தலமாக விளங்குகிறது.

ஒருமுறை ஸ்ரீ சத்ய சாய் பகவான் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். பாதையில் ஒரு பாம்பு குறுக்கே ஓடியது. ஓட்டுனர் வண்டியை பிரேக் போடாமல் பாம்பின் மேல் வண்டியை ஏற்றிவிட்டான். புட்டப்பர்த்தி வந்ததும் பகவான் வாகனத்திலிருந்து இறங்கினார். நேரே தனது அறைக்குச் சென்றார். ஓட்டுனரை கூப்பிட்டு அனுப்பினார். ஓட்டுனர் வந்தவுடன் தனது மேலங்கியை கழற்றி ஓட்டுனருக்குக் காட்டினார். முதுகிலே டயரின் தடம் பதிந்திருந்தது. பகவான் "பார் அந்தப் பாம்பின் மேல் நீ காரை ஏற்றவில்லை என் முதுகின் மேல் ஏற்றிவிட்டாய்' என்றார். ஓட்டுனருக்கு வியர்த்தது. கையும் காலும் ஓடவில்லை. "இனிமேல் இம்மாதிரியாக நடந்து கொள்ளாதே' என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இன்னொரு முறை சித்திராவதி நதிக்கு அக்கரையிலிருந்து ஒரு குடும்பம் அவதார புருஷரான ஸ்ரீ சாயிபாபாவை பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் இரண்டு நாட்கள் புட்டபர்த்தியில் தங்கியிருந்து. பகவானிடம் விடை பெற்று, தங்கள் ஊருக்குப் புறப்பட ஆயத்தமானார்கள் அப்போது. பகவான் சத்யசாயிபாபா அவர்களை அழைத்து அவர்களிடம்  "நீங்கள் மாட்டு வண்டியில் தானே வந்தீர்கள்' என்று கேட்டார். ஆம் என்ற பதில் வருவதற்கு முன்பே சத்யா சாயி பகவான் தொடர்ந்து பேசினார்  "நீங்கள் மொத்தம நான்கு பெரியவர்களும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றீர்கள்'. சித்திராவதி நதிப்படுக்கை மணலாக இருக்கிறது. ஆற்றைக்  கடந்த பிறகு நீங்கள் வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள். அதற்கு முன் வண்டியில் ஏறினால் மாடு மிகவும் கஷ்டப்படும். மாட்டைக் கஷ்டப்படுத்தாதீர்கள்" என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். எங்கோ இருக்கின்ற மாட்டுக்காக அவதார புருஷரின் இதயம் எவ்வளவு கனிகிறது என்று பாருங்கள் என்று ஒரு பக்தர் கூறியதைக்  கேட்ட ஸ்ரீ சத்யா சாயி பகவான், அவரை அழைத்து 'இறைவனிடம் அடிபணியும் அனைத்து ஜீவராசிகளின் மனதை என்னால் புரிந்துகொள்ளமுடியும். வண்டியை இழுத்து வந்து மாடுகளின் கஷ்டத்தையும், வந்திருந்த அந்தக் குடும்பத்தினரின் குடும்ப தோஷ கஷ்டங்களும் தீர, அவர்களின் காலடி இந்தப் புட்டபர்த்தியில் படவேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட சாப விமோச்சனமாக இருந்ததால் அப்படி கூறி அனுப்பினேன்' என்கிறார்.   

நாம் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்,  சில சாஸ்திர சம்பிரதாயங்களால் நமக்கு நன்மை கிடைக்கும் என்றால் அவற்றின்மீது நம்பிக்கை வைப்பதால் தவறு ஏதும் இல்லையே? ஆகவே சாமி சொல்லோ அல்லது ஆசாமி சொல்லோ நமக்குத் தேவை, நாம் நமது கெட்ட கர்ம வினைகளிலிருந்து விடுதலை பெற்று சிறப்படையவேண்டும், எனவே தோஷ பரிகாரம் என்பதை செய்வதில் தவறு என்று ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நம்பிக்கையோடு  முயற்சி செய்து பாருங்கள், முடியாது என்று ஏதும் இல்லை. ஆகவே நம்பிக்கையோடு செய்யும் எல்லா செயலும் நமக்கு நல்லவைகளை தரும் என்று நம்புவோம்..... 
  
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.  

Monday, February 6, 2017

எந்த தேர்வாகிலும், தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண் எடுக்கவும்....

எந்த தேர்வாகிலும், தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் அவர் சொன்ன ‘6 R’-களை அதாவது Read, Remember, Reproduce, Refer, Rectify, Revise ஆகிய சூட்சுமங்களை அனைவரும் மிகுந்த கவனத்தோடு குறிப்பெடுத்துக்கொண்டனர்.....

ஒருமுறை படி, அதை ஒன்பதுமுறை திரும்பத் திரும்ப எழுதிப்பார், எழுதியதை உன் நினைவில் பதிந்ததா என்பதை சோதித்துப்பார், விடுபட்டுப்போன குறை நிறைகளைத் திருத்திக்கொண்டு... நீ படித்து தெரிந்துகொண்டதை முகம்பார்க்கும் கண்ணாடி முன்பு நின்று உனக்கு நீயே பாடம் நடத்தி ஒப்பிட்டுப்பார் ... இனி நீ எந்த தேர்வையும் எழுத சென்றுவா ... வென்றுவா ... அனைத்திலும் வெற்றிவாகை சூடிவா ....... (கோகி).


பாடலைக் கேட்டு உள்ளம் மகிழ்வோம், உவகையில் நிறைவோம்!!!!
"சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை - மகனே
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை- இந்த
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா ...."
    

Friday, February 3, 2017

...ஆகவே, கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?...

...ஆகவே, கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?...
நிறுவனர்:- நீங்க எந்த வேலைக்காக விண்ணப்பம் செய்த்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? 

விண்ணப்பதாரர்:- "தெரியும்... அலுவலக மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்து, தற்போது அதற்கான நேர்காணல் தேர்விற்கு வந்திருக்கிறேன்" ...

நிறுவனர்:- உங்களது தலைமையின் கீழ் உள்ள ஒருவர், நீங்கள் கூறும் எந்த வேலையும் செய்யமாட்டேன்,  என்று 'அடம்' பிடிக்கிறார் என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? 

விண்ணப்பதாரர்:- அவரை நேரில் அழைத்து, அதற்கான காரணத்தை தெரிந்துகொண்டு, அதை நிவர்த்திசெய்து, அவரை சிறப்பாக செயல்படுமாறு வழிநடத்துவேன். 

நிறுவனர்:- அதன்பிறகும் அவர் உங்களது பேச்சை கேட்கவில்லை என்றால், என்ன செய்வீர்கள்?


விண்ணப்பதாரர்:- அவரை கண்டித்து வேலையை செய்ய நிர்பந்திப்பேன்.

நிறுவனர்:- அதன்பிறகும், அவர் உங்களது கட்டளையை மதிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

விண்ணப்பதாரர்:- எனது கட்டளையை மதிக்காத அவரை வேலையிலிருந்து நீக்குவதற்காக உங்களிடம் முறையிடுவேன்...

நிறுவனர்:- என்னிடம் முறையிடுவதற்கு உங்களை நான் எதற்க்காக மேலாளராக தேர்வுசெய்யவேண்டும் ... ஆகவே நீங்கள் வேறு வேலைக்கு முயற்சிசெய்யுங்கள்... நீங்கள் போகலாம்....
xxxxxxxxxxxxxx-------xxxxxxxxxxxxxxxxxx-----xxxxxxxxxxxxxxxxx

ஆகவே அதிகாரியின் கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?... என்று தெரிந்துகொள்ளவேண்டுமா?

நீங்கள் ஒரு சிறந்த நிர்வாக அதிகாரி என்றால் முதலில் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களது கட்டளைக்கு அடிபணிந்து உங்களுடன் பணியாற்றும் உங்களது குழுவிலிருப்பவர்கள் அனைவரும்  உங்களோடு சேர்ந்த ஒரு அங்கத்தினர் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். 

அப்படி உங்களது குழுவின் அங்கத்தினராக இருக்கும் எவரையும், உங்களது ஆணையை மதிக்கவில்லை என்று வேலையிலிருந்து நீக்கவேண்டும் என்றால், அது உங்களுக்குத்தான் பெரிய இழப்பு. ஆகவே, முதலில் நீங்கள்தான் அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற்றப்படவேண்டியவர்,  காரணம் நீங்கள் நிர்வாக அதிகாரியாக இருக்கத் தகுதியற்றவராகிறீர்கள்.  

உதாரணமாக ... உங்களது அங்கத்தின் கைவிரல்,  உங்களது பேச்சைக் கேட்க்காமல் எரியும் விளக்கில் கைவிரலை வைத்தால் அது விரலுக்கு ஏற்படும் கேடு அல்ல,  விரல் பேச்சைக்கேட்காமல் போனதற்குத் உங்களது தலை தான் காரணம், அதாவது தலைமை வகிக்கும் மூளைதான் காரணம். அந்த மூளைக்கு அனுபவமோ அறிவோ இல்லை என்பதாகப் பொருள். 

ஆகவே உங்களது ஆணைக்கு அடிபணியாதவரை வேலையிலிருந்து நீக்குவது என்பது,  உங்களது விரலை / கையை நீங்களே வெட்டிக்கொள்வதற்குச் சமம். 

அப்படியென்றால் ஆணைக்கு அடிபணியாதவரை எப்படித்தான் திருத்தி வழிக்கு கொண்டுவருவது என்றால் அதற்குப் பலவழிகள் உள்ளது....

வருகை தாருங்கள்.. எளிமையான, அருமையான, அனுபவப்பூர்வமான வழியில், திறமையாக செயல்படுவது எப்படி என்பதை எனது வலைப்பூவிற்குள் வலம்வந்து, எனது பதிவுகளை படித்துப் பயன்பெறுங்கள்.  
உங்களது அன்பான வருகைக்கு "http://gopalkrishnaniyer.blogspot.in" என்கின்ற இணையப்பக்கத்தின் முகவரியை சொடுக்கினால், எனது வலைதளத்தின் வரவேற்பறைக்கதவு திறக்கும்.   
....அப்போது நான் ஆந்திர மாநிலத்தின் ரேணிகுண்டா-திருப்பதி விமான தளம் அமைக்கும் திட்டப்பணியில் இருந்த நேரம்... என்னுடைய திட்டப் பணிக்குழுவில் ஒரு இளம் பொறியியல் பட்டதாரி மிகவும் மிடுக்கான தோற்றத்துடன்,  கலெக்டெர் ஒருவரது சிறப்பு சிபாரிசின் பெயரில் புதிதாக வேளையில் சேர்ந்தார்.

வேளையில் சேர்ந்த அன்றே அவர் தனக்கு இப்படிப்பட்ட வேலைகள் மட்டுமே செய்யப்பிடிக்கும் என்று பட்டியலிட்டு தந்தபோதுதான்... புரிந்தது  "இவரைப் பற்றி நன்கு தெரிந்துதான் எனது தலைமையின் திட்டப்பனிக் குழுவில் சேர்த்திருக்கிறார்கள் என்று" 

முதல் இரண்டு நாட்கள் .. திட்டப்பணிமனையை சுற்றிப்பார்த்து உங்களுக்கு என்ன புரிந்தது, அல்லது புரியவில்லை என்பதைக் கூறுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டேன். சுற்றுவட்டார மொழியான தெலுங்கு மொழியிலேயே பேசினார், அதிலும் அவருக்கான பிடிவாதம் தெரிந்தது..... (நான் பல இடங்களுக்கு  சென்று பணியாற்றியதால் எனக்கு 7 மொழிகள் பேசுவது என்பது கட்டாயமாக எனது மண்டையில் புகுத்தப்பட்டிருந்தது..... இருந்தும் சங்கீத ராகங்களில் எனக்கிருந்த ஈடுபாட்டால் தியாகராய கீர்த்தனைகளை அர்த்தம் புரிந்து ரசித்திட மூன்றேமாதங்களில்  நான் மிகவும் விரும்பி கற்றுக்கொண்ட தெலுங்குமொழி, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பெயர்ப்பலகையை படிக்கவும் மேலும் பல இடங்களில் தெலுங்கு மொழி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.)      

மூன்றாம்நாள் என்னிடம் வந்த அவர்,  எந்த அளவுகளையும் குறிப்பெடுத்துக்கொள்ளாமல்,  வெறும் வாய் வார்த்தையால் அளந்துக்கொண்டிருந்தார்.  ஒரு சிறு வேலையைத் தந்து அதை செய்யுமாறு  கூறி அனுப்பிவைத்தேன் ... அது தனக்கு பிடிக்கவில்லை "அதை செய்யமுடியாது" என்று கூறி போன வேகத்தில் திரும்பிவந்துவிட்டார்.  திட்டக் குழுவினர்களோடு இணையாமல் தனித்தே இருந்ததால் எந்த வேலையையும் அவரால் செய்யமுடியவில்லை.... அதோடு எதற்க்காக செய்யவேண்டும் என்கிற இறுமாப்போடு இருந்தார். 

திட்டப்பணியிடத்தில் பொருட்களைவைக்கும் ஒரு "குடோன்" பட்டறை ஒன்று இருந்தது அதில் எனது கட்டளைக்கு அடிபணியாத அந்த இளம் பொறியாளருக்கு ஒரு மேஜை நாற்காலி போட்டு அங்கு அவருக்கு எந்த வேளையும் தராமல் வெட்டியாக  உட்காரவைத்துவிட்டேன். 

ஒரு 10 நாட்களாக கூட அவரால் வெட்டியாக உட்கார்ந்து பொழுதை போக்கமுடியவில்லை. அதற்க்கு அடுத்தநாள் என்னிடம் வந்த அவர்... மன்னிப்பு கேட்டதோடு, எந்த வேலையாக இருந்தாலும் செய்யத்தயார்...!!! என்று வழிக்கு வந்தார்... அன்று அந்த பொறியியல் பட்டதாரி செய்யத் தொடங்கிய முதல் வேலை "எடுபுடி-சிமெண்ட் கலவையை தூக்கும் சித்தாளு வேலை"...

அதை அவர் கஷ்டப்பட்டு செய்யவில்லை, இஷ்டப்பட்டுதான் செய்தார்.. என்பது பிறகு ஒரு நேரத்தில் அதேநபர் புதுதில்லி T3 விமானநிலைய திட்டப்பணியில்.... நான் விப்ரோவின் சார்பில் பணியிலிருந்தபோது, அவர்  ஜி எம் ஆர்(GMR) நிறுவனத்தில் அதிகாரியாக என்னை சந்தித்தபோது... மெழுகாக மனம் உருகிவிட்டார்..... இன்றளவும் எனது தொடர்பிலிருக்கிறார்...   

ஆக...திருவள்ளுவரின் கூற்றான  "அவர் நான நன்னயம் செய்துவிடில்.."  நன்றாக வேலைசெய்தது. 

என் கட்டளைக்கு அடிபணியாதவர்களிடம் " ஒழுங்காக நான் சொல்வதைக்கேட்டு வேலை செய், இல்லையென்றால் வேலையை விட்டு போய்விடு" என்று கோபமாக சண்டை போட்டிருக்க முடியும். சிலர் நம்மை கோபமூட்டி கொதிப்படையச்செய்ய முயற்சிப்பார்கள், அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை சரியாக எதிர்கொள்ளாதவர்கள் தோல்வியடைகிறார்கள். அவர்களது கோபமான சண்டையால் பெயரையும் மதிப்பையும் இழக்கநேரிடுகிறது.  உதாரணமாக கோபமான ஒரு நாய் நமது எதிரே வந்து குறைக்கிறது என்றால், நாமும் அதற்க்கு எதிராக நாயைப்போல் குறைக்கும்போது, நாய்க்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருவரும் ஒன்று என்ற நிலைக்கு தள்ளப்படுவோம்.   ஆகவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அமைதியாக எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் என்பது, சிறந்த அனுபவமாக கருதப்படுகிறது.  

இது ஒரு சிறு உதாரணம்தான், இதைப்போல் பல் நேரங்களில் பல அனுபவங்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்திருக்கிறது... பலநேரங்களில் முரடர்கள் கூட பொட்டிப்பாம்பாக என் கட்டளைக்கு  அடங்கி அடிபணிந்து வேலைசெய்திருக்கிறார்கள். ... அவை அனைத்துமே "ஆடற மாட்டை ஆடி கறக்கணும், பாடற மாட்டை பாடிதான் கறக்கணும்" என்கிற நமது முன்னோர்களின் கூற்றைத்தான் நாம் சரியான வகையில் பயன்படுத்திக்கொள்வதில், நமது திறமையை நாம் உணரமுடியும். 

மேலும் இப்படிப்பட்ட பல அனுபவங்களை கீழ் காணும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் வாங்கி படித்துப்பாருங்கள்.  இதை நான் புத்தக வியாபாரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவங்கள் சிறந்த வழிவகைகளை கற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன். 
எனது அனுபவங்கள் உங்களுக்கு பயனுள்ளவகையில் அமைந்து, அந்தப்புத்தகம் சிறந்த பெயரையும் புகழையும் பெறுமேயானால் .... எனது முதுமைக்காலங்களில் எனது பெயரே எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும். அதாவது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது அனுபவக் கல்வி பயன்படும் என்கிற நோக்கில், அந்தக் கல்வி நிறுவனங்கள் என்னை அழைக்கும்போதெல்லாம் என் பெயர்தான் எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும் என்பது உங்களுக்கு புரிகிறதா?... 
வானொலி நிகழ்ச்சிக்காக நான் எழுதி வழங்கியதை புத்தகமாக "கோகிலாவின் 108 நேர்காணல் அனுபவங்கள்" 

அன்பு நேயர்களே நண்பர்களே, இன்றய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? வாருங்கள் நிகழ்ச்சிக்கு செல்வோம்... 

பாடல்:- போடச்சொன்னா ...... போட்டுக்கறேன் ...... போதும்வரை ......... கன்னத்திலே..பாடலின் திரைப்படம்:- பூவா தலையா (1969) பாடலை இயற்றியவர் கண்ணதாசன், பாடலை பாடியவர் TMS, இசை MSV.

வாய்ப்பிற்கு நன்றி 
மீண்டும் சந்திப்போம்
இப்படிக்கு  கோகி-ரேடியோ மார்கோனி. 


Thursday, January 26, 2017

ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது... ....

ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது...  

ஒரு நாள் குருகுலத்தில் "ஜென்" குருக்களில் முதன்மையானவர் என்று கூறப்படுகிறது "கன்பூசியஸ்" என்ற குருவானவர், தன்னுடைய மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் எழுந்து சில அறிவுரைகளைக் கேட்டான்.

‘"ஒருவரது ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், எது எது தேவை?’.

‘ஆட்சி சிறப்பாக அமைய மூன்று விஷயங்கள் முக்கியம். 
முதல் தேவை.. போதிய உணவு இருப்பு. 
இரண்டாவது மக்களின் பாதுகாப்புக்கு பலமான ராணுவம். மூன்றாவது, மக்களின் நம்பிக்கையை அரசு பெற்றிருக்க வேண்டும். 

இந்த மூன்றிலும் தன்னிறைவு பெற்றிருப்பதே சிறப்பான அரசு  நிர்வாகம்’ என்றார் குரு.

மாணாக்களிடமிருந்து மீண்டும் கேள்வி.. ‘இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை விட வேண்டும் என்றால், முதலில் விட வேண்டியது எது?’

குரு :- ‘ராணுவம்’

மாணவர் :- ‘இரண்டாவதாக ஒன்றை விட வேண்டும் என்றால்..?’

குரு :- ‘உணவு இருப்பு’

மாணவர்கள் அனைவருக்குமே ஆச்சரியம்.!!! சாப்பிடாமல் எப்படி????.... அவர்களின் ஆச்சரியத்தைக் கண்ட குரு,  அதற்கான விளக்கத்தை அளிக்க முன்வந்தார்.

‘மாணவர்களே! உணவு இல்லையென்றால் பஞ்சம் ஏற்படும். மக்கள் மடிய நேரிடும். மனித சமுதாயத்திற்கு இதுபோன்ற நிலை பலமுறை வந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் மனித சமுதாயம் அதில் இருந்து மீண்டிருக்கிறது. ஆனால் ஒரு அரசின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால், அந்த நாட்டின் நிலை அதோகதியாகிவிடும்’ என்றார் கன்பூசியஸ்- குரு.

மாணவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். 

குருவின் அறிவுரை மாணவர்களின் மண்டைக்குள் புகுந்துவிட்டது..., 
ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது...   ஓட்டுப்போட்ட  உங்களுக்குத் புரிந்ததா? 

"வால் மட்டும்... இன்னும் உள்ளே நுழையவில்லை"

..... கோகி-ரேடியோ-மார்கோனி..... 

Friday, January 20, 2017

வெறும் 4 பக்கங்களே கொண்ட புத்தகம் அது, பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா????

"வெறும் 4 பக்கங்களே கொண்ட புத்தகம் அது, பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா????

வாசகர் வட்டம் நிகழ்ச்சியில்  "நீங்களும் கதை எழுதலாம்" என்கிற தலைப்பில்.பேசிக்கொண்டிருந்தேன் ."தினமும் தூங்கப் போகும்போது ஒரு சிறு நோட்டுப்புத்தகத்தையும் அதோடு ஒரு பென்சில் ஒன்றையும் தயாராக உங்களின் படுக்கையின் தலையணைப்பகுதியில் வைத்துவிடுங்கள்... சரியாக விடியற்காலையில் உங்களது ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகளை, காலையில் எழுந்தவுடனே குறிப்பெடுத்து வைத்துவிடுங்கள். (குறிப்பெடுக்காவிட்டால் நீங்கள் கண்ட கனவு மறந்துபோகும்) அதன் பிறகு உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நீங்கள் எழுதிவைத்த குறிப்புக்களை ஒன்று கோர்த்து ஒரு கதையாக எழுதலாம் ... கதை எழுதுவதற்கு இதுவும் ஒரு எளியமுறை, இதைப்போலவே பிரபல எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களும் மற்றும் பல சிறந்த கதாசிரியர்களும் இப்படித்தான் தமது கனவுகளில் வந்த பல விவரங்களைக் கொண்டு சிறந்த படைப்புக்களைத் தந்திருக்கிறார்கள்... என தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ....  

"எனக்கும் கதை எழுதணும் ஆசையா இருக்கு!!! நான் ஒரு கதை  புத்தகம் எழுதணும்னா, அந்தப் புத்தகம் எத்தனை பக்கங்கள் கொண்டதாக இருக்கணும்.????." என்று கேட்ட அந்த இளம் வயது சிறுமியைப் பார்த்தபோது முதலில் சிரிப்புதான் வந்தது... இந்த அளவிலாவது தைரியமாக எழுதணும்... என்று தனது ஆசையை வெளிப்படுத்தியதே, ஒரு தொடக்கத்தின் பெரிய வெற்றிதான்...  அன்றய நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட அவரையே சிறந்த விமர்சகராக முன்னிறுத்தி .. "நீங்களும் கதை எழுதுவது எப்படி" என்று விரிவாக விலக்கிக் கூறினேன் ...

ஒரு கோவிலில் பூசாரி ஒருவரை தேடி வந்த  பக்தனிடம்,  பரிகார பூசை பற்றி கூறிக்கொண்டிருந்தபோது... பக்தன் கேட்டான் ..."சாமி எத்தனை பழம் வைத்து நெய்வேத்தியம் செய்யவேண்டும் என்று..."  

எத்தனை முறை பூசை செய்தால் எனக்கு நல்லது கிடைக்கும்..என்று கேட்காமல் ... பிரசாதம் தின்பதிலேயே குறியாக இருந்த அவனின் மனநிலையை புரிந்துகொண்ட அந்த பூசாரி சிரித்துக்கொண்டார்.....

அதுபோலத்தான் கதை எழுத எத்தனைப் பக்கங்கள் எழுதவேண்டும் என்று கேட்பது.........  இருந்தாலும் இன்றுவரை சாதனையாக ஒரு பழைய புத்தகம், அதுவும் 1970கலீல் வெறும் 4 பக்கங்களே கொண்ட புத்தகம் அது, பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா???? 

அப்படிப்பட்ட சாதனைப் புத்தகம்தான் "பழைய தமிழ் திரைப்பட பாடல் புத்தகம்"  
ஒரு காலத்துல நான்  பள்ளி கூடத்துல படிக்கும் போது, பள்ளி ஆண்டு விழாக்களில் பாட்டுப் போட்டியில், பாட்டு பாடணும்னா, அதுக்கு இருந்த ஒரே வரப்ரசாத புத்தகம்தான்  "திரைப்பட பாட்டு புத்தகம்தான்". என்னதான் மனப்பாடம் செய்திருந்தாலும், மேடையிலிருந்து கூட்டத்தைப் பார்த்த பதட்டத்தில் அது முடியாதுபோக, கையேடு எடுத்துச் சென்ற பாட்டுப்புத்தகத்தைப் பார்த்து பாடிவிட்டு வந்தது இன்னமும் எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது  

அப்போதெல்லாம் அந்தப் புத்தகத்தின் விலை வெறும் 20 பைசாவுக்கு கடைகளில் கிடைக்கும். சில சாலையோரம் இருக்கும் நடைபாதைக்கடையில் வெறும் 10 பைசாவிற்குக்கூட கிடைக்கும். வெறும் நான்கே பக்கம் கொண்ட அந்த புத்தகத்தில் திரைப்படப் பாடல்களோடு அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனமும் விளம்பரமும் இருக்கும்.  

தற்போது கணினியில், இணையம்/வலைத்தளம் என்று வந்துவிட்டதால், இந்தப்புத்தகங்களுக்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது.  இருந்தும் இன்றும் எங்காவது ஒரு மூலையில் பழைய புத்தகக் கடையில் அல்லது பழைய கால வீட்டின், அலமாரி அல்லது பரண்களின்  மேல் வைத்திருக்கும் பழைய தகர பெட்டிக்குள் அடைபட்டுக்கிடக்கலாம். 

பலலட்சம் பிரதிகளை விற்ற, வெறும் 4-பக்கங்களையுடைய, அந்தக்காலப் பழைய திரைப்படப்  பாடல்களைக் கொண்ட புத்தகங்களின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே காணலாம். 




அன்றய "நீங்களும் கதை எழுதலாம்"  நிகழ்ச்சி எங்கோ ஆரம்பித்து வேறெங்கோ சென்று முடிந்தது போல இருந்தது ....

என் மனம் இந்தப்பாடலை முணுமுணுத்தது ....
("எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்...
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது" ...)

நன்றிகளுடன்  கோகி-ரேடியோ மார்கோனி. 

Friday, January 13, 2017

"மாட்டுப்பொங்கல் வாழ்த்து" சொல்லி "மாடல்ல மற்றை யவை" என்று கல்விச்செல்வத்தின் அருமையை புரியவைப்பார் ...


ஞாபகம் வருதே! ...:- நான் பள்ளியில் படிக்கும்போது எனது ஆங்கில ஆசிரியர் கேள்வி கேட்டு விடை தெரியாமல் எழுந்துநிற்கும் மாணவர்களுக்கு "மாட்டுப்பொங்கல் வாழ்த்து" சொல்லி "மாடல்ல மற்றை யவை" என்று கல்விச்செல்வத்தின் அருமையை புரியவைப்பார் ... அதோடு கேள்விக்கு விடைதெரியாமல் "நிற்க அதற்குத் தக" என்று தமிழ்த் திருக்குறளை எடுத்துக்காட்டாக வைத்து ஆங்கில ஆசிரியர் இலைமறைக்காயாகத் திட்டுவார்... அப்போது தெரியவில்லை... இப்போது அதை நினைத்து ரசிக்கமுடிகிறது.  நன்றி கோகி-LAW.

Tuesday, January 3, 2017

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) 5.4 நாமதான் முதல் இடமா????



2016ம் வருட முடிவில்,  உலக நாடுகளின் GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில்  (Gross Domestic Product)   5.4%.... நாமதான் முதல் இடமா? ...  

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வருகிற 2017ம் ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு ... 

இது சரியா?  நம்ம பிரதமர் என்ன சொல்லப் போகிறார் என்பது வரும் பிப்ரவரி மாத பட்ஜெட் வரவுசெலவு கணக்கிற்குப் பிறகு தெரியுமா???


UNESCO-யுனஸ்கோ நிறுவனத்தின் தகவலின்படி உலகளவில் மொத்தம் 44,000+ பதிவுசெய்யப்பட்ட  FM/AM பண்பலை அலைவரிசை மற்றும் இணையவழி & சமுதாய வானொலிநிலையங்கள் இருப்பதாகவும், இதில் FM/AM பண்பலை அலைவரிசையில் 85% சதவீதத்தினர் 25வயதிலிருந்து 54 வயதுடைய ரசிகர்கள் வானொலி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்கின்றனர் என்று ஒரு புள்ளிவிவரத்தை தந்திருக்கிறார்கள். உலகளவில் விவசாயிகள்தான் அதிகம் வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

இந்தியாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குறைந்த அலைவரிசை கொண்ட கல்லூரி வானொலி நிலையங்கள் செயல்படுவதாகவும் புள்ளிவிவரம் தந்திருக்கிறார்கள்.        

2016 ம் வருடத்தில் உலகத்திலேயே மிக அதிக ரசிகர்களைக்கொண்ட வானொலியாக "சுவீடன் நாட்டின் - வெர்ஜிஸ் பி-2" என்கிற வானொலி முதலிடம் பிடிக்கிறது.  தொடர்ந்து இந்தவருடமும் லண்டன் BBC-Radio வானொலி நிலையம் உலகளவில்  9ம் இடத்தில் உள்ளது.  இதே பி பி சி லண்டன் தமிழோசை வானொலி, உலகிலேயே மிக அதிக தமிழ் ரசிகர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்க்கு அடுத்த இடத்தில் தமிழகத்தின் ரெயின்போ-(வானவில்) பண்பலை வானொலி மிக அதிக தமிழ் ரசிகர்களைக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

2016 ம் வருடத்தில் இந்தியாவில் மிக அதிகமானவர்கள் கேட்ட ஒரு வானொலி நிகழ்ச்சியாக  "இந்தியாவின்-மன்கிபாத்" என்கிற பாரதப் பிரதமரின் வானொலி நிகழ்ச்சியாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

ஆதாரம் UNESCO. ORG


Thursday, December 8, 2016

இந்த வருடமும் தமிழை ஓரம்கட்டிய தேர்வாணையம்.....!!!!-"சொல்லாதே யாரும் கேட்டால்"..

"சொல்லாதே யாரும் கேட்டால்".....

உயர்கல்வியில் தமிழை ஓரம்கட்டிய மத்தியத் தேர்வாணையம்.....!!!! 
ஐ. ஏ .எஸ்  என்ற இந்திய அரசின் சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வெழுதியவர்களில், ஒரு மாநில மொழியில் தேர்வை எழுத குறைந்தபட்சம் 25 நபர்கூட தேறவில்லை என்றால், அந்த மாநிலத்தில் தாய்மொழிக் கல்வியே இல்லையோ? என்கிற சந்தேகம் எழுகிறது. இந்த அப்பட்டமான உண்மையை இந்தவருடமும் இந்திய மத்திய தேர்வாணையம் அம்பலப்படுத்தியிருக்கிறது. 

தற்போது திசம்பர் 3ம்-திகதி முதல் நடந்துகொண்டிருக்கும் ஐ. ஏ .எஸ்  என்ற இந்திய அரசின் சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வில்,  தமிழ்நாட்டில் பட்டப்படிப்புவரை தமிழ் மொழியில் படித்து,  தமிழில் ஐ. ஏ .எஸ் இறுதித் தேர்வை எழுத குறைந்தது 25 நபர்கள்கூட தேறவில்லை  என்கிற அவலநிலை தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ளது. தமிழை தாய்மொழியாகக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பலர் ஆங்கில வழியில் இந்தத் தேர்வை எழுதி வெற்றிபெறுகிறார்கள். தமிழ்மொழியல்லாத வேறுபல மாநிலங்களில் வசிப்பவர்கள், அவர்களின் அந்தந்த மாநில மொழியில் இந்த தேர்வை எழுதி வெற்றிபெறுகிறார்கள். பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சிசெய்தவர்கள்... தமிழகத்தின், தமிழ்வழிக்கல்வியின் மேம்பாட்டுக்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.... 

"உரிமையோ உரிமை என்று ஊர் எங்கும் மேடை போட்டால் 
கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன?????" 

"சொல்லாதே யாரும் கேட்டால் ... எல்லோரும் தாங்கமாட்டார்....."

Friday, October 14, 2016

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை ! வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !

சந்தேகமும், பயமுமே ஒரு மனிதனின் மிகப்பெரிய பலவீனங்கள், அப்படிப்பட்ட ப..ல..வீ..ன..ங்க..ளை நெருங்கவிடாமல் காத்துக்கொள்ளும் மனிதன், நொடிப்பொழுதில் தீர்க்கமான முடிவுடன் எதையும் சமாளிக்கும் பண்பை பெறுவதோடு மிக எளிதில் சாதிக்கும் வல்லமையைப்பெறுகிறான். இதற்க்கு ஒரு உதாரணம்தான் இந்த பதிவு.

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூ...ர...மோ.... அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "குவளையில் உள்ள தண்ணீரை அந்த கையடிக் குழாய் / பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் குவளையில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்." 

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !
 நன்றி .... நட்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.

Thursday, October 6, 2016

ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க... திருக்குறள் பயிற்சி, 300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க...


பெரு மதிப்பிற்குரிய திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை - தமிழம்.பண்பலை) அவர்களுக்கு, பணிவான வணக்கங்களுடன்...  

திருக்குறள் பயிற்சி பற்றிய உங்களது சேவை மிகவும் பாராட்டத்தக்கது, தமிழகம் அல்லாத பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மூன்றாம் தலைமுறையினரிடையே திருக்குறளை பயிற்றுவிக்க மிகவும் எளிய முறையை உருவாக்கி தமிழ் தாய்மொழியை தழைத்திடச் செய்த அறிய செயலை பாராட்டும் உள்ளங்கள் பல. 

மேலும்  "திருக்குறள் படித்தல் - (ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்)" http://win.tamilnool.net/tkl300/index.html ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க... திருக்குறள் பயிற்சி, 300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க...என்கிற இனைய வலைப்பக்கத்தை, புது தில்லியின் வைசாலி (தமிழ்) வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

நன்றிகளுடன்
கோபால் கிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி 
புது தில்லியிலிருந்து. 



திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை - தமிழம்.பண்பலை) :-
  
ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க... திருக்குறள் பயிற்சி, 300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க...

http://win.tamilnool.net/tkl300/index.html

கடந்த இரண்டு திங்களாக திருக்குறளை மாணவர்கள் நெஞ்சில் பதிய வைக்கிற ஒரு பயிற்சிக் கட்டகம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து இயங்கினேன். திரு பழனிச்சாமி சேரிபாளையம் தமிழாசிரியர், திரு.கல்லை அருட்செல்வன் திரு பல்லடம் முத்துக்குமரன் திரு. அய்யாசாமி, திரு கணேசன் போன்ற நண்பர்களின் உதவியோடு, 1330 திருக்குறளையும் ஆய்வு செய்து மாணவர்கள் எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய திருக்குறளை வரிசைப்படுத்தி, அதிலுள்ள கடினச் சொற்களுக்கு
உரிய பொருளை அருகில் இணைத்து, படவடிவக்கோப்புகள் உருவாக்கி, மாணவர்களுக்குக் கொடுத்து ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 300 குறள்களுக்கான இசை வடிவை வெட்டி ஒட்டி இணைத்து அதனை இணைய பக்கமாக உருவாக்கி திரு கார்த்திக் உதவியுடன் தமிழம் இணையதளத்தில் இணைத்து, மாணவர்கள் கற்க உதவுகிற கட்டகத்தை இணையத்தில் இணைத்துள்ளேன்.

http://win.tamilnool.net/tkl300/index.html

இந்தப் பயிற்சிக் கட்டகத்தைப் பயன்படுத்துவது எப்படி ?

1) பொது மக்கள் நாள் ஒரு பக்கமாக படித்து உள்வாங்கலாம். 

2) மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு பக்கங்கள் எனக் 
காட்டி அவர்களையே உரை எழுத ஊக்குவிக்கலாம். 

3) ஒரு முழுநாளை இதற்காக ஒதுக்கி விருப்பம் உடைய நண்பர்களை இணைத்து 21 பக்கங்களையும் இசைத்துக் காட்டி, பக்கங்களைக் கொடுத்து, அவர்களையே உரை கூற வைத்து, திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தலாம். 

இணையத்தில் பார்த்து இது தொடர்பாக இயங்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கான அனைத்து உதவிகளும் செய்ய அணியமாக உள்ளேன். 

நம் மக்களும், மழலையர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் வரலாற்றைச் சொல்லுகிற திருக்குறளைப் படித்து உணர்ந்து உள்வாங்கித் தம் வாழ்முறையைச் செப்பமுற அமைத்துக் கொள்ள வழி வகுப்போம். 

அன்புடன் 
பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை - தமிழம்.பண்பலை 
மின்னஞ்சல் :- pollachinasan@gmail.com 
http://win.tamilnool.net/tkl300/index.html

Friday, September 23, 2016

அருள்வாக்கு:- ஸ்ரீ ஆதி சங்கரரும்... ஸ்ரீ முத்துச்வாமி தீட்சதரும் ....

அருள்வாக்கு:- ஸ்ரீ ஆதி சங்கரரும்... ஸ்ரீ முத்துச்வாமி தீட்சதரும் ....

"பக்த ப்ரஹாலாதா" திரைப் படத்தில் வரும் - "லக்ஷ்மி  வல்லபா" என்ற பாடலைக் கேட்க்கும் பொது....https://youtu.be/KQGocOpsn2w

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய....லக்ஷ்மி- கனகதாரா அஷ்டோத்தரத்தில்......"ஸ்ரீ சங்கர சரிததத்தின் ஐந்தாவது பகுதியியும்" நாம் பார்க்கும்போது மஹாவிஷ்ணுவுக்கே உரிய அசாதாரண நாமாவளியான "புருஷோத்தமன்" என்பதைச் சொல்லி அவருடைய  சக்தியாக மஹாலக்ஷ்மி தாயார்  இருப்பதை "புருஷோத்தம வல்லபாயை" என்று வரும் ...ஸ்ரீ  லக்ஷ்மி- கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடி முடித்ததுதான் தாமஸம்! மஹாலக்ஷ்மி தாயார்  அந்தக் குடிசையைச் சுற்றிப் பாழாயிருந்த அத்ருதி முழுக்க ஸ்வர்ணத்தாலான (தங்கத்தினாலான) நெல்லிக் கனிகளாகவே, ஒரு முகூர்த்த  காலம் மழையாக வர்ஷித்துவிட்டாள்!  அங்கு தங்க நெல்லிக்கனிகள் பளபளவென்று ஒரு பெரிய மலையைப் போன்று மழையாக கொட்டித் தீர்ந்தது..... ஸ்ரீ ஆதி சங்கரர் ஏன் அப்படி லக்ஷ்மி- கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினார் என்றால்.....


ஆதிசங்கரர் சிறுவராக இருக்கும்போது உஞ்சவிருத்தி எனப்படும் பிட்சாவிதி தர்மத்தை கடைபிடித்துவந்தார்.  ஒருநாளைக்கு ஒரு வீட்டின் முன் போய் நின்று, "பவதி பிக்ஷசூந்தேஹி" என்று சொல்லவேண்டும். ஏதாவது பிட்சை போட்டால் அதைமட்டுமே உண்ணவேண்டும். வேறெதையும் கேட்கக்கூடாது. ஒருவேளை மட்டும்தான்.... அந்த ஒருவேளையிலும்கூட மும்முறை மட்டுமே குரல் கொடுக்கவேண்டும். பிட்சை போடவில்லை யென்றால் அன்று பசியுடன் இருக்கவேண்டியதுதான். அவ்வாறு வீட்டின்முன்னால் சென்று குரல் கொடுத்தார். 

அந்த வீட்டுக்காரர்கள் பரம ஏழைகள். அன்று ஏகாதசி விரதம் முடித்து துவாதசி விரதத்தை நெல்லிக்கனியை உண்டு, பூர்த்தி செய்யவேண்டும். அதற்கான ஒரு நெல்லிக்கனி மட்டுமே அந்த வீட்டில் அன்று இருந்தது. அதுவும் ஒரு பக்கம் சற்று அழுகலான நெல்லிக்கனி அது..... அப்படிப்பட்ட அந்த நெல்லிக்கனியை அன்று  உண்ணவில்லையானால் விரதபங்கம் ஏற்படும்

ஆதிசங்கரர் குரல் கொடுத்தபோது அந்த வீட்டு அம்மாள் எதை பிட்சையாகப்  போடுவது என்று தெரியாமல் திகைத்தாள். இரண்டு முறை குரல் கொடுத்தாகிவிட்டது. மூன்றாவது குரலுடன் போய்விடுவார். அப்படியாகினால் ஓர் இளம் சன்னியாசியைப் பசியுடன் திருப்பியனுப்பிய பாவம் நேரிடும்.  ஆகவே அந்த ஒரு நெல்லிக்கனியை ஸ்ரீ ஆதிசங்கரருக்குப் பிட்சையாகப் போட்டுவிட்டாள். 

இதனைக் கண்ட ஆதிசங்கரர், அந்தப் பெண்மணியின் நிலைமை குறித்து மனம் கசிந்துருகி ஸ்ரீலட்சுமியிடம் வேண்டி 'கனகதாரா' என்னும் துதியைச் செய்தார். அவர் அந்தப் பாடலைப் பூர்த்தி செய்தபோது அங்கு பொன்மழையாகக் கொட்டியது.

அவதாரக் குழந்தைக்குப் போட்ட ஒரு அழுகல் நெல்லி பழம் அனந்த கோடி மடங்கு தங்கப் பழங்களாகத் திரும்பின!

முதலில் ப்ராம்மண ஸ்த்ரீ கண்ணீர்  தாரைத் தாரையைக் கொட்டினாள். அதைப் பார்த்து ஆசார்யாளின் வாக்கிலிருந்து ஸ்தோத்ர தாரை கொட்டிற்று. அதைக் கேட்டு லக்ஷ்மி கனகதாரையைக் கொட்டி விட்டாள்.

அப்படி அவரின் தவத்திரு மனதிலிருந்து எழுந்த உணர்ச்சிப்பிழம்பாகக் கொட்டிய ஸ்தோத்ரத்துக்குக் "கனகதாரா ஸ்தோத்ரம்" என்றே பேர் ஏற்பட்டது. ' (கனகதாரா) ஸ்தவம்' என்றும் சொல்வார்கள். ஸ்தவம் என்றாலும் ஸ்தோத்ரந்தான்.

இதைப்போலவே பிரபல கர்னாடக சங்கீத மகா வித்வான் ஸ்ரீ ஸ்ரீ முத்துச்வாமி தீட்சிதர் (அவர் வாழ்ந்த காலம் -March 24, 1775 – October 21, 1835) அவர்கள் சங்கீதத்தையே தவமாய் தவமிருந்து வாழ்ந்த வித்துவான் அவர்களின் மனதிலிருந்து எழுந்த உணர்ச்சிப்பிழம்பாகக் கொட்டிய ஸ்தோத்திரமும் "ஸ்ரீ லலித்தா சஹஸ்ரநாமம் மற்றும் "ஸ்ரீ வரலக்ஷ்மி ஸ்தோத்திரம்" என்று போற்றப்படுகிறது. 

சங்கீத மகா வித்வான் ஸ்ரீ ஸ்ரீ முத்துச்வாமி தீட்சிதர்,.. இவர் திருவாரூரில் வாழ்ந்த சமயத்தில்தான் திருமகளின் திருவருளைப் பெரும் சம்பவம் அவர் வாழ்வில் நடந்தது.... அதற்குக் காரணம் அவர் மனைவியின் ஆசை. அந்த ஆசைக்கு காரணம்... அக்கம்பக்கத்து சூழல்.... பொருள் வேண்டிப் பாடுவோர் பலர் இருந்த காலம் அது. இறைவன் அருள் வேண்டி மட்டும் பாடிய பாவாணர்களில் ஒருவர் முத்துச்வாமி தீட்சிதர்.... அவரது மனைவிக்கு நகைகள் மீது ஆசை உண்டாயிற்று. தஞ்சை மன்னனைப் பார்த்து பேட்டி கொண்டால் நிறைய சன்மானமும்  பணமும் கிடைக்குமென்று யோசனையும் தெரிவித்தாள். தீட்சிதரும் தங்கமகளை போற்றிடும் பாடல் ஒன்றை 'லலிதா' ராகத்தில் பாடினார் - "ஹிரண்மயீம் லக்ஷ்மீம்". .........
அன்று இரவு கனக மகள்,.... சர்வாபரண பூஷிதையாய் தீட்சிதரின் மனைவிக்கு தரிசனம் கொடுத்தாள். ஆபரணங்கள் அனைத்தையும் கொடுத்து, இவை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று திகட்டும் படியாக கேட்டாள்.... தீட்சிதரின் மனைவி, அந்த சந்தோஷ செய்தியை அவரின் கணவரான முத்துச்வாமி  தீக்ஷதரிடம் தெரிவித்தாள். அதோடு இனி எனக்கு ஆபரணங்கள் மீது ஆசையே இல்லை என்று கூறினாள்.!!!!! 

இதைக் கேட்டு மகிழ்ந்த தீட்சிதர், தன்னைப் பெருமை படுத்திய வரலட்சுமியை போற்றி, நன்றி கூறி, மற்றொரு துதியைப் பாடினார் - "ஸ்ரீ வரலக்ஷ்மி ஸ்தோத்திரம்" - செல்வங்களை அளிப்பவளும் அழகிய பத்ம பாதங்களையுடையவளும் ரசனைக்கு இருப்பிடமான அம்மா வரலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம்.... மகிழ்வான புன்னகையும் மங்களமான பொன் நகையும் என் இல்லத்தில் சேர்ந்திருக்க அருள்வாயாக......... 

இப்படி அவர்களது அருள் வாக்குகளை நாமும் கேட்டதினால், நம்முடைய இல்லங்களிலும்..... மகிழ்வான புன்னகையும், மங்களமான பொன் நகைகளும் நிறைந்திருக்கும் அருள் கிடைக்கட்டும்..... 

இப்படிக்கு, 
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி

FREE JOBS EARN FROM HOME