FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, December 16, 2015

"முட்டாள்களுக்கு" நான் வழிவிடுவதில்லை?????

நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் பிரதமரான சர் "வின்ஸ்டன் சர்ச்சில்" அவர்கள் ஒரு முறை,  ஓர் ஒற்றையடி பாலத்தை கடக்கமுயன்றார். அப்போது அதே ஒற்றையடி பாலத்தின் மறு முனையில் ஓர் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவரும் பாலத்தை கடக்க முயன்றார்.

செல்வந்தருக்கு வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி நன்கு தெரியும், தனது  பெயரைக்கூட சரியாக எழுத தெரியாத" சர்ச்சில்" படித்த பள்ளியிலேயே கடைசி மாணவன் என்பதால்....  பாலத்தை கடக்க முயன்ற செல்வந்தர் வின்ஸ்டன் சர்சினைப்பார்த்து "முட்டாள்களுக்கு" நான் வழிவிடுவதில்லை ஆகவே வழியைவிட்டு விலகி நில் என்றார். 

அதற்க்கு வின்ஸ்டன் சர்ச்சில் சமயோசிதமாக யோசித்து "முட்டாள்களுக்கு" - நான் வழிவிடுவதுண்டு" என்று கூறி,  வழிகேட்ட செல்வந்தரை முட்டாளாக்கினார்.  தனது பள்ளிப்படிப்பில் சரியாக கவனம் செலுத்தாத சர்ச்சில் பின்னாளில் சிறந்த பேச்சாளராகவும், இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்ற ஒரே பிரித்தானியப் பிரதமர் இவரே என்றும் பெயர் பெற்றார். 

ஆகவே நாம் எப்போதும் எதற்கும் (சமயோசிதமாக யோசித்து) சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி நமது சொல்லும் செயலும் இருக்குமாறு நம்மை நாமே பார்த்துக்கொள்ளப் பழகவேண்டும்.  (என்றும் நட்புடன்.....கோகி-ரேடியோ மார்கோனி)

No comments:

FREE JOBS EARN FROM HOME