FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, September 12, 2020

"*நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*

 "*நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


`நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்’ - என்பதுதானே நம் அனைவரின் ஆசை. ஆனால், ஒருவரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அவருடைய மனநிலை மட்டுமே. நாம் வாழ்க்கையில், இரண்டு வகையான மனிதர்களைச் சந்தித்திருப்போம். ஒரு பிரிவினர், தங்களுக்குக் கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். (இனிமையான சுவீட் கொடுத்து கொண்டாடுவார்கள்) மற்றொரு பிரிவினரோ, கடுமையான முயற்சியால் கிடைத்த வெற்றியைக்கூட கொண்டாட மாட்டார்கள். மாறாக, `இதைவிட இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்திருக்கலாமே’ என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதைத்தான், `மகிழ்ச்சி, துக்கம் இரண்டும் கிடைக்கும் வெற்றி என்பது அந்தந்த தருணங்களில் இல்லை; அது, நம் மனநிலையில் இருக்கிறது’ என்கிறார்கள் அறிஞர்கள். சுருக்கமாக, நமக்கு திருப்தியைத் தருவது பாசிட்டிவ் நேர்மறை எண்ணங்கள்தான்.

ஐம்புலன்களுக்கும் மகிழ்ச்சித்தரும் எவையும் நமது மனதை நேர்மறைத்தன்மைக்கு கொண்டுவரும் சக்திகள்.
"*நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*  
1.நமது வீடுகளில் வரவேற்க பாசிட்டிவ் வார்த்தைகள்! வருக வருக, ஆனந்தம் ஆனந்தம்,  மகிழ்ச்சி மகிழ்ச்சி  எல்லாம் நன்மைக்கே, ஓம் நமச்சிவாய, நமோ நாராயணா,  போன்ற வார்த்தைகளடங்கிய படங்களை வாசல் கேட், கதவு, வீட்டின் வாசல் முகப்பு போன்ற இடத்தில், கண்ணில் படும்படியாக மாட்டிவைக்கவும். அதனுடன் கலர்ஃபுல்லான சிறிது பிளாஸ்டிக் மலர்களைச் செருகிவைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இவைகள் நமது மனங்களையும் நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் மனநிலையையும் மகிழ்ச்சியாக மாற்றியமைக்கும் தன்மை கொண்டது.  
2.உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களையும் மலரும் நினைவுகளையும் போட்டோக்களாக, மகிழ்ச்சியான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம். அதை பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியான எண்ணங்கள் மனதில் தோன்றும். முகம் பார்க்கும் கண்ணாடி, தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம்,  போன்ற கண்ணாடி பொருட்களை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு மனநிலையை உருவாக்கும். கேட்ட சக்திகளை கண்ணாடி வெளிச்சம் ஓட ஓட விரட்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.  
3.பிடித்த நிறங்கள்:-வண்ண வண்ண நிறங்களில் அமைந்த கதவு மற்றும் சன்னல் திரைகள் உட்காரும் இறுக்கை மற்றும் மேஜை மற்றும் தரை விரிப்புக்கள். உடைகள் போன்றவற்றை உபயோகிப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
4. வாசனை புகை மற்றும் வாசனை திரவியங்கள் ... ஊதுபத்தி, சாம்பிராணி, பன்னீர், சந்தானம், ஜவ்வாது போன்றவைகளை உபயோகிப்பது மனதுக்கு புத்துணர்ச்சியை தரும்.
5. மணியடிக்கும் ஓசை, சீன (பிங் சுயி) தொங்கும் காற்று மணியோசை குச்சிகள் போன்றவற்றால் ஏற்படும் மெல்லிய மணியோசை மனதுக்கு சுகம் தரும் ஓசை, அதன் அதிர்வுகள் கெட்ட சக்திகளை ஓடச்செய்யும்.
6.ஒவ்வொரு அறையாக சென்று கைதட்டுதல் அல்லது குத்தடி குத்து, கும்மாங் குத்து, புடிச்சிக்கோ குத்து. போன்ற விளையாட்டுக்களை ஒவ்வோர் அறைகளிலும் விளையாடுவது கையை கையால் குத்துவது ஒரு யோகாசனமாகும் மகிழ்ச்சியாக கைகளை தட்டி ஓசையெழுப்பி விளையாடுவது துர் சக்திகளை விரட்டியடிக்கும் அதோடு நமது உடலின் சுரப்பிகளை சீராக இயக்கும் அற்புதமான யோகாசனமாகும்.  
7.வீட்டில் இசைக்கருவிகளை விரிசையாக காட்சிப்படுத்துவதும்... மங்களகரமானது, புல்லாங்குழல் ஸ்ரீ கிருஷ்ணன், கண்ணன், ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகவே கருதப்படும், எளிய இசைக்கருவிகளான புல்லாங்குழல், மவுத்தார்கண், ஜாலரா, சலங்கை, சங்கு, சோழிகள் "கடம்" மண் பானைகள், கஞ்சீரா, தப்பட்டை, மேளம், போகி மேளம், சில ஊதல்கள்,போன்ற  மிக அதிக விலையில்லாத இசைக்கருவிகளைகூட வாங்கி பூஜையறையில் வைப்பது நமக்கும் மற்றும் நமது வீட்டிற்கு வருகைதருவோர்களுக்கும் மகிழ்ச்சி தரும் பொருட்கள். ஆகவே நமது வீட்டின் சுற்றுச்சூழல் சுபமானதாக மாறிவிடும்.
8.சிலவகை நம்பிக்கைத்தரும் பொருட்களை, பிரமீடு, முத்து பவழம் போன்ற  நவரத்தின கற்கள், ஸ்படிக விநாயகர், சிரிக்கும் பொம்மை, தலையாட்டி பொம்மை, பணத்தவளை, உலோக காசுகள், சாமி டாலர், சந்தன கிண்ணம், குங்கும சிமிழ், போன்ற மேலும் பல்   பூஜையறையில் மற்றும் வரவேற்பறையில் வைப்பதும் நேர்மறை எண்ணங்களுக்கு வலிமை சேர்க்கும்.
9. உளர் திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, வேர்க்கடலை, மற்றும் ஆரஞ்சு மிட்டாய், இஞ்சி மிட்டாய், சிப்ஸ் மற்றும் பிஸ்கட்டுக்கள், போன்ற சாப்பிடக்கூடிய சிலவகை உணவுப்பொருட்களை சாப்பிடும் மேசையின் மீது அனைவரது பார்வையில் படுமாறு வரிசையாக வைக்கவேண்டும். இது வீட்டில் உள்ளவர்களுக்கு மனதளவில் ஒரு எழுச்சியை உண்டுபண்ணும் அதாவது உடலையும் மனதையும் சீராக வைக்க சில சுரப்பிகளை சுரக்கச்செய்யும் யுக்திகள்...  
10. உற்சாகம் தரும் பாடல்களை அடிக்கடிக் கேட்கலாம். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களாக இருந்தால், பக்தி பாடல்களைக் கேட்கலாம். நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்; எதிர்மறை எண்ணங்கள் நீங்க வழி ஏற்படுத்தித் தரும்.

11.வீட்டில் அணில், குருவிகள் சப்தம் மற்றும் குழவி(கெட்ட அதிர்வு இல்லாத வீட்டில்தான் குழவி வீடுகட்டும்) சப்தம் சிறப்பானது. பூனை, நாய், மீன்கள்...(ஆடு, மாடு, குதிரை) என செல்லப்பிராணிகளை வளர்ப்பது பாசிட்டிவ் எண்ணங்கள் வளர உதவும். செல்லப்பிராணிகளை அக்கறையோடு வளர்ப்பது, நம் கவலைகளை மறக்க உதவும். அலுவகப் பணி முடிந்து, எப்போது நம் செல்லப்பிராணியைப் பார்ப்போம் என ஏங்க வைக்கும். இது நம் மனநிலையை மேம்படுத்தும். உடனே உங்களுக்குப் பிடித்த செல்லப்பிராணியை, இப்போதே உங்கள் வீட்டின் புது உறுப்பினராக்குங்கள்.

12.வீட்டின் வாசல்பகுதி, வரவேற்பறை, பால்கனி அல்லது மொட்டைமாடியில் அழகான வாசனை மலர் செடிகளை வளர்க்கும் வாய்ப்பிருந்தால் உடனே அதைச் செய்யவும். இடம் இல்லை என்றால் ஜன்னல் ஓரங்களில்கூட பூந்தொட்டியை வளர்க்கலாம். தினசரி அதற்கு தண்ணீர் ஊற்றுவதையும் கவனிப்பதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அதன் வளர்ச்சி உங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதால், அதன் மூலம் உற்சாகம் பிறக்கும். தெய்வீக சுக்கிர சக்திக்கு உயிர் செடிகொடிகள் தரும் ஒருவித உந்து சக்த்தியால் எண்ணங்கள் சிறப்படைகிறது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்...

மேற்சொன்ன 12ம் உங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் வீடு லக்ஷ்மிகரமான இல்லம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

Thursday, August 29, 2019

வைஷாலியில் விநாயகர் :- வைஷாலி இது கிழக்குதில்லிப் பகுதியில் உத்திரப்பிரதேச எல்லையில் அமைந்த இடம்.

வைஷாலியில் விநாயகர் :- வைஷாலி இது கிழக்குதில்லிப் பகுதியில் உத்திரப்பிரதேச எல்லையில் அமைந்த இடம். பொதுவாக தில்லிநகருக்குள் மூச்சுமுட்டுமளவுக்கு தண்ணீர் காற்று என வாழ்க்கைக்கு அவசியமான அனைத்தும் சீர்கெட்டபோதுதான் மக்களுக்கு தில்லி நகரைவிட்டு வெளியில் அமைதியான ஒரு வீடு தூய்மையான நீர், நிலம் வேண்டும் என்று தோன்றியபோது கிடைத்த இடம்தான் தில்லி உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்த வைஷாலி நகரம். 

வைஷாலியில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழர்கள் அனைவரது வீட்டிலும் கண்திருஷ்டி பிள்ளையார் படம் வாசல் கதவின் மேற்பகுதியில் வரவேற்கும். 2000 ம் வருட வாக்கில் வைஷாலியில் எங்கும் விநாயகர் கோவில் பார்த்திருக்கமுடியாது. சிவன் கோவில் இருந்ததே தவிர பெயருக்கு ஒரு விநாயகர் சிலையைக்கூட பார்க்கமுடியாது.  ஒவ்வொருவரிடமும் பிள்ளையார் சதுர்த்தி வரும்போதுதான் பிள்ளையார் கோவில் இல்லை என்கிற நினைப்பே அனைவருக்கும் வரும். பிள்ளையார் சாதிருத்திக்கு மட்டும் சிவன்கோவிலில் ஒரு பெரிய மண் பிள்ளையார் இரண்டுநாளைக்கு தரிசனம்தந்துவிட்டு போவார். 

அப்படிப்பட்ட சூழலில்தான் வைஷாலியின் செக்டர் -2இல் திரு பட்டாபி மாமா அவர்களின் இல்லத்தில் ஒரு குட்டிப்  பிள்ளையார் விக்கிரகத்தை அவரது வீட்டு கேட்டின் தூண்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.  அதற்க்கு முக்கிய காரணமாக அவரின் வீட்டு எதிரில் இருந்த காலி வீட்டுமனையில் அவர்களது தெருவுக்கும் பக்கத்து தெருவுக்கும் இடையே அந்த காலிமனை ஒரு ஷாட் கட் பாதை வழியாகவே அமைந்துவிட்டதால் வீட்டு வாசலுக்கு எதிரில் மக்கள் சென்றுவரும் பாதை மைந்ததால் உருவான கேட்டுப்பிள்ளையார் உருவானார். அந்த பிள்ளையாருக்கு மற்றுமொரு கதையும் இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த கேட்டுப்பிள்ளையார் மூர்த்தி சிறிதாக இருந்தாலும் அவரின் கீர்த்தி அதிகம் ஆகவே அந்த விநாயகர்தான் வைஷாலி நகருக்கு முதலும் மூத்த விநாயகராக அமைய,  முக்கியமான விநாயகர் விசேஷங்களுக்கு அவர்களது வீட்டு வாசலில் இருக்கும் பிள்ளையாரை தரிசனம் செய்ய வைஷாலி நகர வாசிகளான நாங்களெல்லாம் கூட்டமாக கூடிவிடுவோம். அபிஷேகம் பூஜை முடியும்வரை அவரின் வீட்டு தெருவில் பாதியை நாங்களே ஆக்கிரமித்துக்கொள்வோம். எங்களைப்பார்த்த அந்த தெருவில் வசிக்கும் வடநாட்டுக்காரர்களும் கூட்டமாக கூடிவிடுவார்கள். 

அந்த கேட்டுப்பிள்ளையாரிடம் கேட்டு கேட்டுத்தான் சிவன் கோவில் கணபதி பிரசன்னமானார் ஆகவே அவரது பெயர் ஸ்ரீ பிரசன்ன கணபதியாகியது. வைஷாலி நகரில் சிவன் கோவிலுக்குள் பிரசன்னமான கணபதி  ஆரம்பத்திலிருந்தே எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தார். ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவிலில் பிரசன்னமானபோதே கிழக்கு முகமாக பெரிய மேடையமைத்து அமர்ந்துவிட்டார் அதோடு இல்லாமல் வைஷாலி நகருக்கு விநாயகர் கோவில் இல்லாமலிருந்தால் இந்த ஸ்ரீ பிரசன்ன கணபதி வந்த மகிழ்ச்சியை கொண்டாட நமது தென்னக மக்கள் கூட்டமாக திரண்டுவர சிவன் கோவிலின் வடநாட்டு பகதர்கள் எங்கே இத்தனிக் கூட்டமும் சிவன்கோவிலை அவர்களது கோவிலாக ஆக்கிரமித்துவிடுவார்களோ என்று  மிரண்டுபோனார்கள். ஆகவே மனதிற்கு வேண்டாதவர்களாக கால் பட்டால் குத்தம் கை பட்டால் குத்தம் என தொந்தரவுகள் தொடங்கியது. அதன் பயனாக சிறு சிறு சண்டைகள் என பெரிய மேடையில் கிழக்கு முகமாக இருந்த விநாயகர் அந்தஇடத்திலிருந்து எதிர்ப்புற மேற்குமுகமாக சற்று குனிந்து கும்பிடவேண்டிய நிலையில் ஒதுக்கப்பட்ட ஓர் இடத்தில் சென்று அமரவேண்டியதாகியது. 

மேற்குமுகமாக அமைர்ந்திருந்த ஸ்ரீ பிரசன்ன விநாயகர் அருள்பாவித்துக்கொண்டிருந்தார் இருந்தும் ஆவருக்கு செய்யும் அபிஷேகம் சிவன் கோவிலை சுற்றிவரும் பக்தர்களுக்கு இடைஞ்சலாக தரை வழுக்குகிறது ஆகவே விநாயகருக்கு அபிஷேகம் கூடாது என்று முட்டுக்கட்டை வைக்க அபிஷேக நீரை ஒரு வாளியில் சேர்த்து வெளியில் காட்டவேண்டிய சூழலில் தொடர்ந்து விநாயகர் அருள்பாலி த்துக்கொண்டிருந்தார்.

அப்படிப்பட்ட சூழலில்தான் விநாயகரின் தந்தை பெயரில் இருந்த திரு சங்கரன் அவர்கள் அரசு வருமானவரித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர், விநாயகரின் தம்பி பெயரில் இருந்த திரு செந்தில் (நாதன்) அவர்களும் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர், விநாயகரின் உறவினர்களது பெயர்கொண்ட திரு பட்டாபி மாமா, திரு முத்து மாமா, திரு ஹரிஹரன், திரு ரமேஷ், திரு ஐயப்பன்(இருவர்), திரு கங்காதரன், திரு கிருட்டிணன் போன்ற மேலும் பலரும் சேர்ந்து நமது ஸ்ரீ பிரசன்ன கணபதிக்கு ஒரு பெரிய கோவில் கோபுரம் உடனடியாக கட்டவேண்டும் என்று தீர்மானம் செய்தார்கள்.

கோவில் திருப்பணிக்கு நன்கொடை வாங்கிய கதையும் அதுவும் பாதி கோவில் கட்டுவதற்குள்ளாகவே மூச்சு முட்ட பாதி திருப்பணியில் நின்றுவிட ... தொடர்ந்து பெருமுயற்சி செய்து கோவில் கும்பாபிஷேகம் செய்யும் பொது யானையின் தலையில் கும்பம் வைத்து ஊர்வலமாக சென்றாலும் ... இந்திரன் யானையைக் கொண்டுவந்தாலும் வாயுபுத்திரனை மறக்கலாமா என்று பெரிய பலமான காத்துவீச யாககுண்டங்களுக்கு போடப்பட்ட மேற்க்கூரை பிய்த்துக்கொண்டு போக வருண பகவான் யாக குண்டலங்களுக்கு  மழையை பொழிய.... எத்தனையோ இடையூறுகளை சமாளித்து  கும்பாபிஷேகம் நடந்து முடிந்து... நிம்மதி பெருமூச்சு விட்டபோது... எந்த வித ஆரவாரமின்றி வைஷாலிக்கு மூன்றாவது ஸ்ரீ விஷ்ணு பிள்ளையார் பளிங்கு கல்லில் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் அருள்பாலிக்கத்தொடங்கினார். 

மேலும் கோவில் ஷேத்திர வரலாறு   தொடரும் நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.                  

*வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎂🎂🎂🎂🎂🎂🎂
*🙏🦚வணக்கம்🦚🙏*
*💖🎼இன்று வயலின் இசைக்களைஞ்சர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் பிறந்ததினம், 02-MAR சிறப்பு நிகழ்ச்சியாக   இன்று... வயலின் இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்... நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🎂🎂🎂🎂🎂🎂🎂
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*🎻🎼‘வயலின்’ என்றால் முதலில் நினைவுக்கு வருவது, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான். வயலின் இசையால், தனது ரசிகர்களை 61 ஆண்டுகளாக மெய்மறக்க வைத்து, அத்துறையில் முடிசூடாமன்னனாகத் திகழ்ந்த இவர், வயலினுக்கே பெருமை சேர்த்தவர் என்று கூறலாம். கர்நாடக இசை, மெல்லிசை, திரையிசை போன்ற பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து, தனது விரல் லாவகத்தினால் தனக்கே உரித்தான பாணியில் மக்களை மயக்கி, அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பத்மஸ்ரீ விருது’, ‘கலைமாமணி விருது’, ‘இசைபெரறிஞர் விருது’, ‘கர்நாடக இசைஞானி விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற குன்னக்குடி வைத்தியநாதன்*🎻🎼
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼🎻
*வா ராஜா வா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையமைப்பில் முதல் திரைப்படமும், முதல் திரைப்பாடல் இது கவிஞ்சர் கண்ணதாசன் இயற்றிய பாடல்... இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான் மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான் இறைவன் வாழுகின்றான்*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎻திரு. குன்னக்குடி வைத்தியநாதன்....*
*# வயலின் இசைக்கருவியில் பல புதுமைகளை செய்தார். இவரது வயலின் பேசும், பாடும்! கர்னாடக இசை, மெல்லிசை, திரைப்பட இசையோடு பறவைகள், மிருகங்களின் ஒலிகள், இயற்கையின் சப்தங்களையும் வயலினில் பிரதிபலித்தார்*🎻🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼🎻திருமலை தென்குமரி படத்தில் இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதன் அவருக்கு விருது கிடைத்தது..  பாடல்... மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி... சீர்காழி கோவிந்தராஜன் குரலில்...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏



🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎻திரு. குன்னக்குடி வைத்தியநாதன்...*
*# பிரபல தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து 3000-க்கும் மேற்பட்ட கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தினார். தோடி ராகம் வாசிப்பதில் நிகரற்றவர். தமிழ் பக்தி இசைக்குப் பெரும் தொண்டாற்றியவர்.*🎻💖
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼பாடல்:- சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா... இந்த பாடலின் ஆரம்பம் மட்டும் வயலின் அதன் பிறகு பாடல் முழுதும் வீணை வரும். பாடலின் படம் கந்தன் கருணை பாடலுக்கு இசை மகாதேவன் மற்றும் அவரோடு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களும் இணைந்து பட பாடல்களுக்கு வயலின் வாசித்திருக்கிறார்...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻 
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼🎻"கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவராசன் அந்த கதைசொல்ல வந்தேன் நான் சின்னராசன்"வா ராஜா வா படத்தில் மாமல்லபுரத்தின் சிறப்பு பற்றி அழ வள்ளியப்பா எழுதிய பாடல் (இசை குன்னக்குடி வைத்யநாதன்... பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி)*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎼🎻1983: அவரது சொந்தத் திரைப்படமான ‘தோடிராகம்’ என்னும் திரைப்படத்தைத் தயாரித்தார்.*

*1989: ‘இசைப்பேரறிஞர் விருது’ வழங்கப்பட்டது.*🎼🎻💖
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼தோடி ராகம் படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் இந்த பாடல் சூப்பர் ஹிட்.. பாடல்... கொட்டம்பட்டி ரொட்டிலே.. குட்டி போற சோக்கிலே...*🎻🎼💖
🙏👇👇👇👇👇🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎼🎻1993: சங்கீத நாடக அகாடமி மூலம் ‘சங்கீத் நாடக அகாடமி விருது’, மற்றும் ‘கர்நாடக இசைஞானி விருது’ பெற்றார்.*

*2005: ஷங்கர் அவர்களின் படமான ‘அந்நியன்’ திரைப்படத்தில், அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.*🎼🎻💖
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼கணீரென்ற இரண்டு குரல்களில் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ்.வரலக்ஷ்மி அம்மையார் குரலில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் ராஜா ராஜா சோழன் பட பாடல்... ஏடு தந்தானடி தில்லையிலே, ஏடு தந்தானடி தில்லையிலே, அதை, பாட வந்தேன் அவன், எல்லையிலே,*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼பழங்காலத்தில் தேங்காய்🥥 மூடிக்கு கச்சேரி என்று ஒரு வழக்கம் இருந்தது...🥥 கிருபானந்த வாரியார், பித்துக்குளி முருகதாஸ் போன்ற தெய்வ பக்தி பாடகர்களின் கச்சேரிக்கு பூரண கும்ப, மாலை மரியாதையும், ஸ்வாமி அர்ச்சனை தேங்கா பழம் பிரசாதம் தருவார்கள் அவ்வளவே. ஏதோ சில பணக்கார கோவிலில் மட்டுமே பிரசாதமும் அதோடு பணமுடிப்பும் இருக்கும்... பாடல்:- நாடறியும் நூறு மலை.. நானறிவேன் சுவாமிமலை..பித்துக்குளி முருகதாஸ்...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼திருவருள் திரைப்படத்தில் TMS அவர்கள் பாடிய பாடலுக்கு குன்னக்குடி அவர்களின் வயலின் இசை  அந்த பாடலை சிறப்பு செய்திருக்கும்... பாடல் உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏

🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼அகத்தியர் திரைப்படத்தில் குன்னக்குடி அவர்களின் இசையில் இந்த பாடலின் ஆரம்பமே வயலின்தான்... பாடல் நமச்சிவயம் என சொல்வோமே... நாராயணா என்று சொல்வோமே... சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டீ.ஆர் மகாலிங்கம்*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻 
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼🎻"பாடல்:- காவலுக்கு வேளுண்டு... ஆடலுக்கு மயிலுண்டு.. கோவிலுக்கு பொருளென்னடா குமரா.. " மனிதனும் தெய்வமாகலாம் என்ற படத்தில் கவிஞ்சர் கண்ணதாசன் பாடலுக்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன், பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்..🎻🎼💖*
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼குன்னக்குடி வைத்திய நாதன் இசையமைத்த பாடலாக நேற்று தெய்வம் திரைப்பட பாடல் போட்டு நிகழ்ச்சி பற்றி கூறியிருந்தேன் இன்று அதே பட பாடலுடன் சிறப்பு நிகழ்ச்சியை நிறைவு செய்கிறேன்.. பாடல்...திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*🙏🦚சுபம்🦚🙏*
*💖🎼மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் வயலின் இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்...*
*1.ஒற்றை வயலின் இசையில் பாடல்கள்..*

*2.இரட்டை வயலின் இசை பாடல்கள்...*

*3. குழு வயலின் இசை பாடல்கள்..*

*4.தேங்காய் கொட்டங்கச்சி விளையாட்டு வயலின் இசை பாடல்கள்...*

*நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏

FREE JOBS EARN FROM HOME