FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, February 22, 2018

விடியற்காலை உத்திராகாண்ட் மலைப்பகுதி... சாலையின் ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம், இருட்டாக இருந்தது கடும் குளிர் வேறு...கரணம் தப்பினாலும் மரணம்....

விடியற்காலை உத்திராகாண்ட் மலைப்பகுதி... சாலையின் ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம்,  இருட்டாக இருந்தது  கடும் குளிர் வேறு... கடும் பனிப்பொழிவின் காரணமாக சாலைவழி சரியாக தெரியவில்லை. வாகனத்தின் சிறு தவறும் ...கரணம்  தப்பினாலும் மரணம்....

உத்திராகாண்ட் மாநிலத்தின் மிக முக்கியமான உற்பத்தியில் மின்சார உற்பத்தி உள்ளது அதற்க்கு முக்கிய காரணமாக விளங்கும் மலைப்பகுதி. அதன் நடுவில் ஓடும் அலக் நந்தா ஆற்றில் அணைகட்டி மின்சாரம் தயாரிக்கும் மிக எளிய செயலாக இருந்தாலும் அது ஒரு சவாலான பனி. எத்தனையோ தகவல் தொழில்நுட்ப வசதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இருந்தாலும் பலநேரம் திடீரென்று ஏற்படும் காட்டாற்று வெள்ளம் அந்த அணைகளை உடைத்துக்கொண்டு ஓடும் அபாயமும் உண்டு. ஒவ்வொரு வருடமும் பல கிராமங்களை அடியோடு வெள்ளத்தில் அடித்து எடுத்துக்கொண்டு ஓடி கங்கை நதியோடு கலந்துவிடும். 

மத்திய அரசு உத்திராக்காண்ட் மலைப்பகுதியில் கிட்டத்தட்ட 35 அணைகள் கட்ட அனுமதியளித்துள்ளது அதில் இதுவரை 11 அணைகள் கட்டிமுடிக்கப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது அந்த 11 அணைகளில் கோஹ்ரா அணை மட்டும் மிக மிக அபாயகரமான அணைக்கட்டு ஆகும். அந்த அணைக்கட்டு மதகுகளை முழுமையாக திறந்துவிட 15 நிமிடங்கள் ஆகும் ஆனால் காட்டாற்று வெள்ளம் வரும்போது சில நொடிகளில் அந்த அணையை உடைத்தெறிந்துவிட்டு சென்றுவிடும். 

இப்போது நான் என் கதைக்கு வருகிறேன்.... நான் தற்போது உத்திராக்கண்ட் மாநில திட்டப்பணியில் இருக்கிறேன். அன்று ஞாயிறு விடுமுறை நாள் விடியற்  காலை 4.10 மணி இருக்கும். நல்ல தூக்கத்தில் இருந்த   நான் எனது தொலைபேசி  சிணுங்கிய  சப்தம்  கேட்டு எழுந்திருக்க வேண்டியதானது. மறுமுனையில்  பதட்டமாக அந்த ராச்சஸ மின்மோட்டார் இயந்திரத்தின் 2ம் பாக இயந்திரம்  சரிவர இயங்கவில்லை  உடனே வாருங்கள் என்ற அழைப்பை கேட்டு மனம்  கலக்கமானது. 

நிறுவனத்தின் கெஸ்ட்  ஹவுஸிலிருந்து (Guest House) தங்கும் விடுதியிலிருந்து தொழிற்சாலை அமைந்திருக்கும் இடம் ஒரு 2 கிலோமீட்டர் தூரம்தான் ஆனால் அங்கு செல்ல வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை மிகவும் அபாயகரமான பாதை. நான் எனது பாக்டரி  நோக்கி கிளம்பி... உத்திராகாண்ட் மலைப்பகுதி இருட்டாக இருந்தது...கடும் குளிர் வேறு, உதவி என்று கூப்பிட்டாலும் யாருக்கும் கேட்க்காத சாலையில் ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம் வேறு அதுவோ மலைப்பாதை... கரணம்  தப்பினாலும் மரணம் நிச்சயம். அன்று அன்று ஜனவரி மாத குளிர் காலம்வேறு எங்கும் பனிப்பொழிவால் சாலை சரிவர தெரியவில்லை தனியாக காரை ஒட்டிச் செல்வதால் காரின் விளக்கு 2அடி தூரத்திற்கு மட்டுமே வெளிச்சம் காட்டியது, அந்தளவில் பனிமூட்டம் இருந்தது. 

அப்படிப்பட்ட சூழலில் காரை வேகமாக செலுத்தமுடியாமல் மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்வதைப்போல சென்றதால் என்ன நடக்குமோ என்கிற பயம்.  உடனே பாபாவை மனதில் நினைத்து all is well என்கிற எனது பிரார்த்தனையுடன் மெல்ல மெல்ல தொழிற்சாலையை  அடைந்தபோது அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த அந்த ராட்சத இயந்திரத்தின் அருகே பணியிலிருந்தார்கள் விவரத்தை  கேட்டு இயந்திரத்தை சோதித்தபோது பெரியதாக கவலைப்படுமாறு எந்த பழுதும்  இல்லை என்பது தெரிந்தபோது (பாபாவின் அருள்) மனம் நிம்மதியடைந்தது. 

அந்த இயந்திரம் பழுதாகியிருந்தால் நிறுவனத்திற்கு ஒரு நாளுக்கு ஒரு சில லட்சம் வீதம் நஷ்ட்டம் ஏற்படும். அந்த ராட்சத இயந்திரத்தின் ஒரு இயந்திரம் பழுதானால் மாற்று  இயந்திரம் தானாக  செயல்படும். அப்படியிருந்தும்  சிலநேரம்  இயந்திர  பொறியாளர், அவர்களோடு இயந்திரத்தை பராமரிக்கும் கான்ட்ராக்ட்டர்கள் இருந்தும் ஏதும் செய்ய முடியாமல்  போகும்  வாய்ப்பு  உண்டு. 

ஒரு சிறிய  பிரார்த்தனை   நினைப்பில்  நமக்கு யானை பலத்தை தரக்கூடியது  பகவான் பாபாவின் மீது கொண்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் என்னை எப்போதும் வழிநடத்தி செல்கிறது.  

நிம்மதி பெருமூச்சு  விட்டு அந்த விடியற்காலை ஒரு கப்  "டி" குடிக்க நினைவு வந்தபோது....  சுட  சுட குளிருக்கு  இதமாக சுக்கு காபியுடன் நம்ம ஊரை சேர்ந்த எனது அலுவலக பணியாள் என் முன்னே வந்தார்.  

ஜெய் சாயிராம். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

No comments:

FREE JOBS EARN FROM HOME