FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, February 22, 2018

விடியற்காலை உத்திராகாண்ட் மலைப்பகுதி... சாலையின் ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம், இருட்டாக இருந்தது கடும் குளிர் வேறு...கரணம் தப்பினாலும் மரணம்....

விடியற்காலை உத்திராகாண்ட் மலைப்பகுதி... சாலையின் ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம்,  இருட்டாக இருந்தது  கடும் குளிர் வேறு... கடும் பனிப்பொழிவின் காரணமாக சாலைவழி சரியாக தெரியவில்லை. வாகனத்தின் சிறு தவறும் ...கரணம்  தப்பினாலும் மரணம்....

உத்திராகாண்ட் மாநிலத்தின் மிக முக்கியமான உற்பத்தியில் மின்சார உற்பத்தி உள்ளது அதற்க்கு முக்கிய காரணமாக விளங்கும் மலைப்பகுதி. அதன் நடுவில் ஓடும் அலக் நந்தா ஆற்றில் அணைகட்டி மின்சாரம் தயாரிக்கும் மிக எளிய செயலாக இருந்தாலும் அது ஒரு சவாலான பனி. எத்தனையோ தகவல் தொழில்நுட்ப வசதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இருந்தாலும் பலநேரம் திடீரென்று ஏற்படும் காட்டாற்று வெள்ளம் அந்த அணைகளை உடைத்துக்கொண்டு ஓடும் அபாயமும் உண்டு. ஒவ்வொரு வருடமும் பல கிராமங்களை அடியோடு வெள்ளத்தில் அடித்து எடுத்துக்கொண்டு ஓடி கங்கை நதியோடு கலந்துவிடும். 

மத்திய அரசு உத்திராக்காண்ட் மலைப்பகுதியில் கிட்டத்தட்ட 35 அணைகள் கட்ட அனுமதியளித்துள்ளது அதில் இதுவரை 11 அணைகள் கட்டிமுடிக்கப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது அந்த 11 அணைகளில் கோஹ்ரா அணை மட்டும் மிக மிக அபாயகரமான அணைக்கட்டு ஆகும். அந்த அணைக்கட்டு மதகுகளை முழுமையாக திறந்துவிட 15 நிமிடங்கள் ஆகும் ஆனால் காட்டாற்று வெள்ளம் வரும்போது சில நொடிகளில் அந்த அணையை உடைத்தெறிந்துவிட்டு சென்றுவிடும். 

இப்போது நான் என் கதைக்கு வருகிறேன்.... நான் தற்போது உத்திராக்கண்ட் மாநில திட்டப்பணியில் இருக்கிறேன். அன்று ஞாயிறு விடுமுறை நாள் விடியற்  காலை 4.10 மணி இருக்கும். நல்ல தூக்கத்தில் இருந்த   நான் எனது தொலைபேசி  சிணுங்கிய  சப்தம்  கேட்டு எழுந்திருக்க வேண்டியதானது. மறுமுனையில்  பதட்டமாக அந்த ராச்சஸ மின்மோட்டார் இயந்திரத்தின் 2ம் பாக இயந்திரம்  சரிவர இயங்கவில்லை  உடனே வாருங்கள் என்ற அழைப்பை கேட்டு மனம்  கலக்கமானது. 

நிறுவனத்தின் கெஸ்ட்  ஹவுஸிலிருந்து (Guest House) தங்கும் விடுதியிலிருந்து தொழிற்சாலை அமைந்திருக்கும் இடம் ஒரு 2 கிலோமீட்டர் தூரம்தான் ஆனால் அங்கு செல்ல வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை மிகவும் அபாயகரமான பாதை. நான் எனது பாக்டரி  நோக்கி கிளம்பி... உத்திராகாண்ட் மலைப்பகுதி இருட்டாக இருந்தது...கடும் குளிர் வேறு, உதவி என்று கூப்பிட்டாலும் யாருக்கும் கேட்க்காத சாலையில் ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம் வேறு அதுவோ மலைப்பாதை... கரணம்  தப்பினாலும் மரணம் நிச்சயம். அன்று அன்று ஜனவரி மாத குளிர் காலம்வேறு எங்கும் பனிப்பொழிவால் சாலை சரிவர தெரியவில்லை தனியாக காரை ஒட்டிச் செல்வதால் காரின் விளக்கு 2அடி தூரத்திற்கு மட்டுமே வெளிச்சம் காட்டியது, அந்தளவில் பனிமூட்டம் இருந்தது. 

அப்படிப்பட்ட சூழலில் காரை வேகமாக செலுத்தமுடியாமல் மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்வதைப்போல சென்றதால் என்ன நடக்குமோ என்கிற பயம்.  உடனே பாபாவை மனதில் நினைத்து all is well என்கிற எனது பிரார்த்தனையுடன் மெல்ல மெல்ல தொழிற்சாலையை  அடைந்தபோது அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த அந்த ராட்சத இயந்திரத்தின் அருகே பணியிலிருந்தார்கள் விவரத்தை  கேட்டு இயந்திரத்தை சோதித்தபோது பெரியதாக கவலைப்படுமாறு எந்த பழுதும்  இல்லை என்பது தெரிந்தபோது (பாபாவின் அருள்) மனம் நிம்மதியடைந்தது. 

அந்த இயந்திரம் பழுதாகியிருந்தால் நிறுவனத்திற்கு ஒரு நாளுக்கு ஒரு சில லட்சம் வீதம் நஷ்ட்டம் ஏற்படும். அந்த ராட்சத இயந்திரத்தின் ஒரு இயந்திரம் பழுதானால் மாற்று  இயந்திரம் தானாக  செயல்படும். அப்படியிருந்தும்  சிலநேரம்  இயந்திர  பொறியாளர், அவர்களோடு இயந்திரத்தை பராமரிக்கும் கான்ட்ராக்ட்டர்கள் இருந்தும் ஏதும் செய்ய முடியாமல்  போகும்  வாய்ப்பு  உண்டு. 

ஒரு சிறிய  பிரார்த்தனை   நினைப்பில்  நமக்கு யானை பலத்தை தரக்கூடியது  பகவான் பாபாவின் மீது கொண்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் என்னை எப்போதும் வழிநடத்தி செல்கிறது.  

நிம்மதி பெருமூச்சு  விட்டு அந்த விடியற்காலை ஒரு கப்  "டி" குடிக்க நினைவு வந்தபோது....  சுட  சுட குளிருக்கு  இதமாக சுக்கு காபியுடன் நம்ம ஊரை சேர்ந்த எனது அலுவலக பணியாள் என் முன்னே வந்தார்.  

ஜெய் சாயிராம். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

Tuesday, February 13, 2018

சிவபூஜையில் கரடி

சிவபூஜையில் கரடி:-

தூக்கம் களைந்து விழிப்பு வந்ததும் காலைக்கடன்களை முடித்து சற்று வெளியில் வந்து பார்த்தபோது இன்னமும் கதிரவன் எழுந்திருக்கவில்லை. நேற்று பெய்த மழையில் இன்றய காலை நேரம் சில்லென்ற ஈரமான தரை, மிகவும் சில்லென்ற காற்று உடலுக்கு சிலிர்ப்பூட்டியது. வெகுதூரத்தில் சிவன்கோவிலின் பாடல்கள் காற்றில் ஒலித்துக்கொண்டிருந்தது.  இன்று இரவு சிவராத்திரி விஷேசம் என்பது ஞாபகம் வந்தத்த்து. 

வேகா வேகமாக குளித்து உடைகளை உடுத்தி கைத்தொலைப்பேசியில் வாட்சப் விவரங்களில் சற்று காக்காய் குளியலைப்போல சில பதிவுகளை படித்தும் எழுதியும் ஒரு அரை மணிநேரம் ஆனதும் இன்று இரவு சிவராத்திரி விஷேசம் என்பது ஞாபகம் வர அருகிலிருந்த சிவன் கோவிலுக்கு செல்கின்ற வழியில் இருந்த வில்வமரத்திலிருந்து வில்வதளங்களை பறித்துக்கொண்டு மலைப்பாதை வழியிலிருந்த நாகவல்லி நீலநிற புஷ்பங்களை பறித்து எடுத்துக்கொண்டு கோவிலையடைந்தபோது என்னோடு தொழிற்சாலையில் பணியாற்றும் மற்றொரு நபரும் வந்திருந்தார். 

இருவரும்  கோவிலின் உள்ளே சென்றபோது கோவில் பூசாரி எங்களைப்பார்த்ததும் வேகமாக என் அருகே வந்து வாருங்கள் இந்த சொம்பில் நீர் எடுத்துக்கொண்டு வாருங்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம் என்று கூறி கோவிலின் உள்ளே அழைத்துச்சென்றார். அந்தக் கோவில் எங்களது தொழிலக நிறுவனத்துக்கு சொந்தமான கோவில். அதோடு கோவில் பூசாரிக்கு மாத சம்பளமும்  நிறுவனமே வழங்குகிறது.

கிட்டத்தட்ட அரைமணிநேரம் அவர் எங்களுக்கு இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் எழுந்து நில்லுங்கள் என்று  சிவ லிங்கத்திற்கான அபிஷேகம் அர்ச்சனை பூஜை என ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத மந்திரங்களோடு ஒரு குட்டி யோகாசன பயிற்சி தருவதைப்போல பல பூஜை அர்ச்சனை செய்யச்சொன்னார், இடையில் அவரது வாயில் எதோ இருந்ததை (பாண் மசாலா என நினைக்கிறேன்) சற்று தூரத்திலிருந்த சன்னல் வழியாக தூ தூ என துப்பிவிட்டு வந்தார். என்னுடன் வந்திருந்த நண்பர் மெல்ல என்னிடம் இது என்ன பூஜையில் தூ தூ என்று கிசுகிசுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து அவர் மந்திரங்களைக்கூறி அதற்க்கு எங்களை வில்வதளத்தால் பூஜை செய்யச்சொன்னார். இடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வர மறுமுனையில் சற்று கோபமாக பேசுகிறார்கள் என நினைத்தேன் காரணம் பூசாரியும் சற்று காரசாரமாக இடை இடையே சில  திட்டு வார்த்தைகளையும் பிரயோகித்தார். என்னோடு இருந்தவர் மறுபடியும் கிசுகிசுத்தார் இதென்ன பூஜையின் இடையில் கரடி அதைவேறு கெட்டவார்த்தையில் திட்டுவேறு என்று முனகினார். சற்று நேரத்தில் பால்காரர் ஒருவர் பால் கொண்டுவர இன்று இதை கொண்டுவர இத்தனை நேரமா என்கிறார். இறுதியாக ஆரத்தி பாடலோடு சிவலிங்க பூசை முடிந்தது. 

பூசாரிக்கு தட்சிணையை தந்துவிட்டு கோவிலின் வெளியில் இருந்த திண்ணைபோன்ற உட்காரும் இடத்தில் ஒரு செய்தித்தாளை விரித்து இருவரும் உட்க்கார்ந்தோம். என்னுடன் இருந்தவர் இது சரியில்லை இப்படியா தூ என்று எச்சில் துப்புவது கேட்ட வார்த்தையில் திட்டுக்கள் வேறு இப்படியா பூசை செய்வது என்று மீண்டும் பேச்சை தொடங்கினார். 

நானும் சற்று யோசனையில் இருந்தபோது எனது உள்மனம் அதான் "மைண்ட் வாய்ஸ்" என்னோடு பேசியது இன்று இந்தநேரத்தில் கோவிலில் இருக்கும் நீங்கள் இருவரும் மற்றும் அந்த கோவில் பூசாரி இந்த மூவரில் யார் சிறந்த பக்தர் என்று உனக்கு தெரியுமா? என்று கேட்டது. 

அதிலென்ன சந்தேகம் நான் பக்தியோடுதான் கோவிலுக்கு வந்தேன் என்றேன். அதற்க்கு என் "மைண்ட் வாய்ஸ்" சொன்னது யார் முதல்நிலை பக்தர் என்று கேட்டது. அதற்க்கு நானும் பூசாரி தூ தூ என்று துப்பினார் என்று கூறும் என்னோடு வந்திருக்கும் எனது அலுவலக நண்பரின் மனநிலையில் அவர் பக்தியோடு இல்லை என்பதாக தெரிகிறது. அவர் கிசு கிசு என்று சொன்ன சில செயல்களோடு பூசாரியும் நடந்து கொண்ட விதம் பார்க்கும்போது பூசாரியும் பக்தி சிரத்தையோடு இல்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆவகே இதை அனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டு பூசை செய்த நானே முதல் நிலை பக்தனாக இருப்பேன் என்றேன்.

இதைக்கேட்ட எனது  "மைண்ட் வாய்ஸ்" சிரித்தது. பிறகு சொன்னது இந்த இடத்தில் இருக்கும் நீங்கள் மூவரில், பூசாரி மட்டுமே முதல் நிலை பக்தர் என்று கூறியது. இதைக்கேட்ட எனக்கு ஆச்சரியமாக இருந்ததால் அது எப்படி என்று கேட்டேன்.  அதற்க்கு என்  "மைண்ட் வாய்ஸ்" சொன்னது நீ வேண்டுமானால் பூசாரி பூசையின்போது துப்பியது மற்றும் திட்டியது என அவரது நடவடிக்கைகளைப்பற்றி அவரிடம் விளக்கம் கேட்டுப்பாரேன் உனக்கே புரியும் என்றது. 

இது சரி என்று தோன்றியதால் அவரிடம் சென்று இது பற்றி( இது=பூசாரி பூசையின்போது துப்பியது மற்றும் திட்டியது)கேட்டதும். பூசாரி சற்று திடுக்கிட்டு போனார் அதோடு நிற்காமல் "நானா அப்படியெல்லாம் செய்தேன் இருக்காதே" என்று சொன்னதைக்கேட்ட என்னுடன் இருந்த கிசு கிசு பார்ட்டிக்கு கோபம் வந்து காச்சு மூச்சென்று கத்திவிட்டார். பிறகு அவரை சமாதானம் செய்யவேண்டியாதாகப் போனது. இதையெல்லாம் பார்த்த கோவில் பூசாரி நான் அப்படி செய்தது எனக்கே தெரியவில்லை அப்படி உங்களது மனம் புண்படும்படி நடந்துகொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்கிறார். 

அந்தநேரம் என் "மைண்ட் வாய்ஸ்" சொன்னது... உங்கள் மூவரில் பூசாரி மட்டுமே முதல் நிலை பக்தர் என்பதை இப்போதாவது ஒத்துக்கொள்கிறீர்களா? என்று சொன்னதும் சற்று நிதானமாக யோசிக்கத்தொடங்கினேன்.  

அசரீரி ஒலித்தது என்று பழைய கதைகளில் சொல்வதை கேட்டிருப்போம் அது வேறு ஒன்றுமில்லை அது நமது மனதின் ஓசைதான் அதைத்தான் தற்போது நாம் "மைண்ட் வாய்ஸ்" என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வம் வாழ்கிறான். அந்த தெய்வம் எங்கே வாழ்கிறார்  என்றால் மனிதனின் மனங்களில் வாழ்கிறார். அந்த மனம் சொல்லும் செயலைத்தான் ஒவ்வொரு மனிதனும் செய்கிறான். செய்துகொண்டிருக்கிறேன் அப்படி நமது மனதை ஆட்கொண்டு இயக்குபவர்தான் தெய்வம். அப்படியென்றால் நம் மனதின் பேச்சுக்கள் தான் தெய்வ வாக்கு அல்லது தெய்வத்தின் அசரீரி வாக்கு மற்றும் இன்றய சூழலுக்கேற்ப நமது  "மைண்ட் வாய்ஸ்".     

ஆகவே கோவில் பூசாரியின் மனம் முழுவதும் ஆண்டவனின் சேவையில் இருந்தது ஆனால் அவரது செய்கைகள் மட்டும் அவரது எண்ணங்களுக்கு எட்டாத அனிச்சை செயலாக மட்டுமே இருந்திருக்கிறது.   என்பது புரிந்தபோது மீண்டும் கோவிலுக்குள்ளே சென்று தவறுகளுக்கு மன்னிப்பைக்கேட்டு மானசீகமாக சிவனிடம் வேண்டிக்கொண்டு எனது அன்றய பணிகளை செய்ய அலுவலகம் புறப்பட்டேன்.  

பலர் அவர்கள் பேசும்போது சில கெட்டவார்த்தைகளை பேச்சின் நடுவில் நுழைத்து பேசுவார்கள். ஒரு முறை அப்படிப்பட்டவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒன்று, இரண்டு, மூன்று... என்று அவர் பேசி முடிக்கும்வரை எண்ணி மொத்தம் 20 முறை அந்த கெட்ட வார்த்தையை உனது பேச்சின் இடையில் நீ உபயோகித்தாய் என்று சொன்னபோது.  நானா அப்படி அந்த கேட்ட வார்த்தையை சொன்னேன் இருக்காது என்கிறார். பிறகு ஒருமுறை அவர் பேச்சை அவருக்கே பதிவுசெய்து போட்டுக்காட்டினேன். ஆகவே அவர் என்ன பேசுகிறார் எப்படி அந்த வார்த்தையை உபயோகித்து பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அந்தஅளவில் அவரது செய்கை அனிச்சை செயலாக இருந்திருக்கிறது என்பதை அவர் உணர்ந்தபோது  மிகவும் வருந்தினார். 

இப்போது சொல்லுங்கள் கோவிலுக்கு போகிறவர்கள் எல்லோரும் பக்திமான்களா? கோவிலுக்கு சென்று வந்த எத்தனைபேருக்கு மனநிம்மதி கிடைத்தது. ஆகவே முதலில் கோவிலுக்கு எப்படிப்பட்ட மனநிலையில் போகவேண்டும் என்று தெரிந்துகொள்வது எத்தனை முக்கியம் என்பதை மேற்கண்ட ஒரு சிறு உதாரணத்தில் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். ஆகவே கோவிலுக்கு போகவே சாமி கும்பிடவே..... மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்சப்புள்ளையாட்டம் அது வெளுத்திருக்கணும் வெளுத்திருக்கணும் மல்லிகைப்பூவாக.

மீண்டும் அடுத்தப்பதிவில் சிந்திப்போம்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி 

FREE JOBS EARN FROM HOME