FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 21, 2017

தோழ'மை' சக்தி தோற்றுப்போகுமா?

பணப்பெட்டி உங்களின் கையில் இருக்கிறது, அதன் சாவி இல்லையே என்று கலக்கமா?

ஒரு நிஜ சம்பவத்தை கூறுகிறேன்.. சில வருடங்களுக்கு முன்பு-என நினைக்கிறேன்.... அனைவரும் அலுவலகம் செல்லும் பரபரப்புமிகுந்த காலைநேரம்,  நான் உட்கார்ந்திருந்த அந்த தனியார் பேரூந்தில் இனிமையான பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது...." பாடல்:-வேலை வேலை வேலை மேல மேல வேலை ஆம்பளைக்கும் வேலைபொம்பளைக்கும் வேலை பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேலை..என்ற அவ்வை ஷண்முகியின் பட பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது  https://youtu.be/efx5qNSJDNI 

அன்று நான் அலுவலகம் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து, வழியில் ஒரு இடத்தில் சட்டென்று நின்றுவிட, பேரூந்து நின்ற இடத்தில் எந்த பேருந்து நிறுத்தமும் இல்லை, சுற்றுவட்டத்தில் வெகு தொலைவில் ஒரு சிறு வீடு தெரிந்தது, சாலையிலும்  யாரும் பேருந்தை நிறுத்தாதபோது, பேருந்து ஏன் நின்றது? பேரூந்தின் சன்னல் வழியே எட்டிப்பார்த்தேன், பேரூந்து ஏன் நின்றது என எனக்கு எதுவும் புரியவில்லை.  பேருந்தின் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் ஒலி செய்துகொண்டிருந்தார்,.... யாரையோ அழைக்கிறார் என்பது தெரிந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த அந்தப் பேரூந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் ஓசை சற்று ஒலி குறைக்கப்பட்டிருந்தது.....   "பாடி அழைத்தேன் உன்னை இதோ, தேடும் நெஞ்சம் வாராய் ..என் தேவி..பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை...என்ற ரசிகன் ஒரு ரசிகை படப்பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது https://youtu.be/pcWUqm8T-Pw 


வெகு தொலைவில் இருந்த அந்த வீட்டின் கதவு  ஒன்று திறக்கப்பட்டதும் அங்கிருந்து ஒருவர் பேரூந்தை நோக்கி ஓடி வந்தார்..... அப்போது பேரூந்தில் இருந்த அனைவரும் வாருங்கள் ஷர்மா ஜி என்று ஜன்னல் வழியாக கையை அசைத்து அழைத்தது எனக்கு பெரும் வியப்பைத் தந்தது. ஆகவே பேருந்தை நோக்கி ஓடி வரும் அவர் இந்த பேருந்துக்கு சொந்தக்காரரோ? அல்லது இந்த பேருந்தின் நிறுவனத்தில் பெரிய அதிகாரியோ? அல்லது மிகவும் பிரபலமான ஒருவராக இருப்பார், என்று நினைத்தேன்.  இப்போது அந்தப் பேரூந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் முடிவடைந்து வேறு ஒரு பாடல் ஒலிக்கத்தொடங்கியது .. வா வா வா வெண்ணிலா ஆ ஹா, உன் கண்கள் வெண்ணிலா, ஆ ஹா, என் நெஞ்சில் நீயும் இறங்கி, ஏதோ மாயம் செய்தாய் ஆ ஹா, என் அன்பே வா ஆ ஹா, என் அன்பே வா ஆ ஹா  https://youtu.be/J28_McaEl50 

அப்படி வேகமாக ஓடிவந்த அவர் பேருந்தில் ஏறியதும், முதலில் பேருந்து ஓட்டுனரை நலம் விசாரிக்க... தொடர்ந்து பேருந்தில் இருந்த அனைவரையும், முன் பின் தெரியாத என்னையும் சேர்த்து  நலம் விசாரித்து வணக்கம் கூறினார். மரியாதை நிமித்தம் நானும் வணக்கம் கூறி நன்றி தெரிவித்தேன். அப்போது அந்தப் பேரூந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் அடுத்தப் பாடலுக்கு தாவியிருந்தது .. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்.. https://youtu.be/JjRs0KjYzbo

அந்த நிறுத்தத்திலிருந்து கிளம்பிய பேரூந்து சிறிது தூரம் சென்றுகொண்டிருக்கும்போது நான் எனது அருகில் அமர்ந்திருந்தவரிடம்..... சற்றுமுன் ஓடிவந்து பேரூந்தில் ஏறினாரே "ஷர்மா ஜி"  அவர் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவரா? உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவரா? என கேட்டபோது.  அதற்கு எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் "அதெல்லாம் இல்லை, அவர் எந்த அலுவலகத்தில் வேலை செய்கிறார் என்றே தெரியாது, தினமும் இந்த நேர பேருந்தில் பயணம் செய்பவர். தினமும் நலம் விசாரிப்பவர்.  ஏதோ அவரை எங்களுக்கு பிடித்துவிட்டது, அப்படி தொடங்கி எங்களது நட்பு அறிமுகமானது, நாளடைவில் தொடர்ந்து நாங்கள் அவரின் இனிய நண்பரகளாகிவிட்டோம் என்றார். இப்போது என்னுடைய மனது "மயிண்ட்வாய்ஸ்" இந்தப் பாடலை முணுமுணுத்தது ..." என் பிரெண்ட போல யாரு மச்சான்.. அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான். .படம்: நண்பன்,  இசை: ஹாரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர்: விவேகா, பாடியவர்கள்: கிரிஷ், சுசித் சுரேசன். https://youtu.be/97G5LfyFrrI

பேரூந்தில்  அவசர அவசரமாக ஓடி வந்து ஏறிய "சர்மா ஜி" அனைவரையும் பார்த்து சப்தமாக பேசினார்  "இன்று காலையிலிருந்தே எனக்கு தலைவலியாக இருந்தது, எனவே பேருந்து வருவதற்கு முன்பாகவே சாலை ஓரம் காத்திருக்கமுடியவில்லை" ஆகவே பேருந்தை, சற்று காலதாமதமாக்கியதற்கு மன்னிக்கவும் என்று சொன்னவுடனே .... அந்தப்பெருந்திலிருந்த பலரது கைகளில் தலைவலி மாத்திரையும் தண்ணீர் பாட்டிலும் "சர்மா-ஜி" அவர்களை நோக்கி குவிந்ததைப்பார்த்த எனக்கு மேலும் வியப்பைத்தந்தது. அதோடு பேருந்து ஓட்டுநர் குரல்கொடுத்தார் "சர்மா-ஜி வண்டியை மருந்துக்கடையில் நிறுத்தவா?"  என்று கூறி  ... மேலும் எனது வியப்பை அதிகப்படுத்தினார்....  அந்தநேரத்திற்கு ஏற்றாற்போல் பேருந்தில் இந்தப்பாடல் ஒலித்தது....  நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது  https://youtu.be/g3k1BdS-t2Y 
       
எனக்கு மிகுந்த ஆச்சரியமும், அவரின் ஏராளமான நட்பு வட்டத்தைப்பார்த்து பொறாமையாகவும் இருந்தது.  அன்று நான் அது பற்றி யோசிக்க தொடங்கியதின் விளைவாக,  இன்று எனக்கு கடல் கடந்த நிலையிலும் ஏராளமான நட்பு வட்டங்கள் மேலும் மேலும் தொடர்ந்து பெருகிவருகிறது. அப்படிப்பட்ட ஏராளமான நட்பு வட்டத்தைப் பெற்று ஏதாவது பயனுள்ளதாக இருக்கவேண்டாமா? அப்படி மனம் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது இந்தப்பாடல் இனிமையாக ஒலித்தது.... "கோ" என்ற கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011 இல் வெளிவந்தபடத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல்  "கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு..https://youtu.be/700-GQQGm_k

அன்று அப்படி உருவான சிந்தனையில் ஒரு பகுதிதான், இலவச வேலைவாய்ப்பு சேவை என்கிற "FREE JOBS" G+ and Face Book ஜி+ குழுப்பக்கம் மற்றும் முகநூல் குழு  போன்ற உதவும் குழுக்கள் உருவானது ... இருந்தும் முக்கியமாக பொருளுதவி மற்றும் பணம், செலவு போன்ற எந்த செயல்களும் நட்பை முறிக்கும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.  என்னதான் கவனமாக இருந்தாலும், ஆர்வமிகுதியால் எனக்கு கிடைத்த சில நன்மைகள் மற்றவர்களுக்கும் கிடைக்கட்டும் என்கிறநோக்கில், சில  நண்பர்களுக்கு சொன்ன சில இலவச ஆலோசனையால் எனது மூக்கை நானே  உடைத்துக்கொண்ட அனுபவங்களும் உண்டு.  

உங்களின் தொடர்பில் இருக்கும் நட்பு வட்டத்தில் அனைவரிடமும் அவர்களின் அலுவலங்களில் இருக்கும் காலி இட வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை கேட்டு வாங்கி சேகரித்து அதை வேலை தேடும் புதிய முகங்களுக்கு இலவசமாக உதவினால்... உங்களின் நட்பு மேலும் மேலும் பெருகும் அல்லவா?. அப்படி உருவாகிய புதிய பல நட்புக்களின் மகிழ்ச்சியால், மேலும் மேலும் நமது வலிமை கூடும் அல்லவா? அப்படிப்பட்டவர்களின் ஏராளமான நட்பு வட்டம் விரிவடைவது, மிகப் பெரிய வரப்பிரசாதம்.  இப்படிப்பட்ட விசாலமான நட்புவட்டம் அமைவது எத்தனைபேருக்கு நடைமுறையில் சாத்தியமாகிறது?. 
நீங்கள் எந்த நாட்டில், எந்த அலுவலகத்தில் வேளையில் இருந்தாலும், உங்களது நிறுவனத்தில் இருக்கும் காலி வேலைவாய்ப்பு விவரங்களை இந்த FREE JOBS G+ மற்றும் FREE JOBS -Face-Book-group முகநூல் குழு பக்கங்களில் பதிவுசெய்தால் அல்லது தெரியப்படுத்தினால், அது புதியதாக படிப்பை முடித்துவிட்டு வேலைதேடுபவர்களுக்கும், தற்போதைய வேலையிலிருந்து மேலும் சிறப்பான வேறு ஒரு வேலை தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும் அல்லவா?... இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போது இந்தப்பாடல் எனது செவிகளுக்கு உணவளித்தது.... வாரணம் ஆயிரம் படப்பாடல் "அடியே கொல்லுதே! அழகோ அள்ளுதே! உலகம் சுருங்குதே! இருவரில் அடங்குதே! உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்....  https://youtu.be/oNTOpHEpGiA


உங்களின் தொடர்பில் இருக்கும் நட்பு வட்டத்தில், அனைவரிடமும் அவர்களின் அலுவலங்களில் இருக்கும் காலி இட வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை கேட்டு வாங்கி சேகரித்து அதை வேலை தேடும் புதிய முகங்களுக்கு இலவசமாக உதவினால்... காசா? பணமா? இலவசம்தானே..... ஒருமுறை இந்த FREE-JOBS G+ கூகுள் + குழு பக்கத்திற்கு வந்துதான் பாருங்களேன் இந்த முகவரியில் https://plus.google.com/communities/110765544331828488794
 FREE JOBS
இப்போது சொல்லுங்கள் உங்களைச்சுற்றி உங்களுக்கு தெரியாதவர்கள் என நிறைய மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் நீங்கள் உடனடியாக அனைவரையும் தெரிந்தவர்களாக நடப்பை ஏற்படுத்திக்கொள்ள, அவர்களோடு நலம்விசாரித்து பழக முயற்சிக்கவேண்டுமல்லவா????  மின்னலே படத்திலிருந்து பாடல் "ஓ மாமா மாமா மாமா மாம மாம மாமோமியா, ஓ SUNDAY MONDAY TUESDAY ஏழு நாளும் KEEP IT FREEயா, பிஸ்மில்லா பிஸ்மில்லா நம் வாழ்வை வாழ்வோம் PLAYFUL ஆ, ஊ லால்லா ஊ லால்லா இது WESTERN கானா கோபாலா, உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும் மின்சாரப் பாடலா" ... https://youtu.be/TpbFPbxi8Fk

ஏராளமான பணம் நிறைந்த பணப்பெட்டி உங்களின் கையில் இருக்கிறது, அதன் சாவி இல்லையே என்று கலக்கமா?  குரல் கொடுங்கள்... நலம் விசாரியுங்கள்... ஏராளமான நட்புக் கைகள் உங்களுக்காக உங்கள் பணப்பெட்டியின் சாவியை தேடிக் கொண்டுவந்து உங்கள் கையில் தருவார்கள்....  (ம் ம் ....உங்களது மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது... இருந்தாலும் கொஞ்சம் உண்மையை பேசுங்களேன்).... 
பாடல் .....கொஞ்சம் உளறிக் கொட்டவா? கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா? கொஞ்சம் வாயை மூடவா? கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?... பாடலின் படம்: "நான் ஈ" இசை: மரகதமணி பாடியவர்: விஜய் பிரகாஷ்... https://youtu.be/FWuAwZs13SI    

என்ன நண்பர்களே இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஏன் என்ற கேள்விஇங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்றஎண்ணம். கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை..... https://youtu.be/2wX5E6qlqdI 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்க்கோனி....புது தில்லியிலிருந்து.   

No comments:

FREE JOBS EARN FROM HOME