FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, February 25, 2017

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- பகுதி-01 / 108 (Episodu-01 of 108)

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:-  பகுதி-01 / 108 (Episodu-01 of 108) என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்" (https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம்.  வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன்.   நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:-  நாதஸ்வரம்,  பகுதி-01 / 108 (Episodu-01 of 108):- 
பண்டைத் தமிழர்கள்,  இசைக்கருவிகளை, 1)தோல் கருவி, 2)நரம்புக்கருவி,  3)துளைக்கருவி,  4)கஞ்சக்கருவி என்று நான்கு வகைகளில் பிரித்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.  காலப் போக்கில் சில இசைக்கருவிகளும், இசைக்கலைஞ்சர்களும், இசைக் கலைகளும் வழக்கொழிந்து போவதற்கான சாத்தியங்களைத் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. அதேநேரத்தில், அப்படிப்பட்ட பண்டையகால இசைக்கருவிகளையும், நாட்டுப்புறக் கலைஞர்களும் தற்கால சூழலுக்கேற்ப தங்களது அற்புதக் கலைகளை உலகம் ரசிப்பதற்கு ஏதுவாக, தொழில்நுட்பப் புரட்சியில் பங்கேற்க, சினிமா, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை உரிய முறையில் பயன்படுத்தி பண்டைய இசைக்கருவிகளின் மேன்மையை உணர்ந்து, அக்கலைகளை ரசித்துணரும் தன்மையை, இனிவரும் தலைமுறையினர் பயனடையும் பட்சத்தில், பண்டைய இசைக்கருவிகளுக்கும், இசைக்கலைகளுக்கும் என்றும் அழிவில்லை!

பல்வேறுவிதமான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, பல இசைப்பிரியர்களின் மனங்களை விட்டு அகலாமல், அவர்களின் மனங்களில் ஆழமாக பதிந்துவிட்ட பாடல்களுக்கு சிறப்பு சேர்த்த இசைக்கருவிகள் பற்றிய நிகழ்ச்சி தொகுப்புப்பாக உருவானதுதான் இந்த திரைப்படப் பாடல்களில் இசைக்கருவிகளின் பங்கு என்கிற தொடர். இந்த இசைக்கருவிகளின் இசைத்தொகுப்புத் தொடரில், முதலில் நாதஸ்வரம், தவில் என்று தொடங்கி, மேள-தாளம், கடம், கஞ்சிரா, மிருதங்கம்,   தபேலா அல்லது தப்லா- தமிழில் இருமுக முழவு, தாரை தப்பட்டை, பறை, முரசு கொட்டல், வாடிப்பட்டி மேளம், உறுமி மேளம், ஜால்ரா, மோர்சிங் (யூத யாழ்), உடுக்கை, கிளுகிளுப்பை, டோலக்கு, சலங்கை, சல் சல் -டோலா,  மணி, மவுத்தார்கன், ஜலதரங்கம், தம்புரா, பியானோ, வயலின்-யாழ், புல்லாங்குழல், ஆர்மோனியம், புல் புல் தாரா- புல்புல் தாராங்,வயலின், வீணை, கிடார், சித்தார், ஷனாய்இசை,  சாக்ஸ்போன் இசை, ட்ரம் செட், மாண்டலின், மகுடி, உடுக்கை,  மேற்கத்திய சந்தூர் யாழிசை, மேற்கத்திய குழலிசை போன்ற மேலும் பல இசைக்கருவிகளின் இசையை தனித்தனியாக பிரித்து ரசித்து உணரக்கூடிய வகையில் அவைகளின் சிறப்புக்களைக் கொண்ட இசைப் பாடல்களை வரிசைப்படுத்தும் தொடர் இது.      

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:-  நாதஸ்வரம்,  பகுதி-01 / 108 (Episodu-01 of 108) 
நாதஸ்வரம் :-  நாதசுவரம் என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவது உண்டு.  இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால் அனைத்துவிதமான மங்கள சுப  நிகழ்ச்சிகளுக்கும் இந்த இசை இசைக்கப்படுவது வழக்கம்.  இந்த இசைக்கருவியின் இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது. பண்டைய கால வரலாற்றில் 17ம் நூற்றாண்டில்தான் இசைக்கருவிகளின் "நாதஸ்வரம்" பற்றிய குறிப்புகள் நமக்கு கிடைத்துள்ளது. இவ்வகை இசைக்கருவி "ஆச்சா"  என்கிற மரக்கட்டையில் செய்யப்படுகிறது. இந்த இசைக்கருவியின்  குறுகிய மேற்பகுதியில் "கொறுக்கைத் தட்டை" என்கிற "நாணல் புல்" ஒன்றை சுருட்டி, ஊதும் வகையில் பொருத்தப்படுகிறது இதைத் தான் "ஜீவ வளி-அழுத்த காற்று ஊதுதல்" என்பது மருவி "சீவாளி" என்ற பீப் பீ- ஊதல் பொருத்தப்பட்டு "நாதஸ்வர" இசைக்கருவியாக முழுமைப்பெறுகிறது. 

சாஸ்திரிய சங்கீத சாம்ராஜ்யத்தில் பிரபல நாதசுவரக் இசைக் கலைஞர்கள் வரிசையில்:- திரு. டி. என். ராஜரத்தினம் பிள்ளை, திரு நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், திரு.நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல், சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, திருவாரூர் சாமிநாதப் பிள்ளை, திரு வி. கே. கானமூர்த்தி போன்ற மேலும் பலர் பிரபலமான சாஸ்திரிய சங்கீத வாத்திய வித்துவான்களாகத் திகழ்ந்தனர். 
திரையிசையில் நாதஸ்வர இசைக்கருவியின் இசையால் பல திரைப்படப்பாடல்கள் பலரது மனங்களிலும், அன்றும், இன்றும், என்றும் அழியாத இடம்பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

நாதஸ்வரம்:-
பழைய திரைப்படப்பாடல்கள் வரிசையில்:-
1). பாடல்:- சிங்கார வேலனே தேவா....."  படம்: கொஞ்சும் சலங்கை, நடிகர்: திரூ.ஜெமினி கனேசன், சாவித்திரி, பாடியவர்: இசைக்குயில் எஸ்.ஜானகி, இசை: திரு. எஸ்.வி.சுப்பையா நாயுடு, நாதஸ்வரம்: திரு,காரைக்குறிச்சி அருனாசலம். https://youtu.be/AX0o-_EXA1I

2). பாடல்:- நலந்தானா…. நலந்தானா… உடலும் உள்ளமும் நலந்தானா ...." படம் - தில்லானா மோனாம்பாள், பாடியவர் - பி.சுசீலா இசை - கே.வி.மகாதேவன், நடிகர்: திரூ.சிவாஜி கணேசன் மற்றும்  பதமினி அவர்களுடன்... https://youtu.be/YoJBZYCZThg

3). பாடல்:- மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழவைப்பான் என்று…. ."  திரைப்பட: பாசமலர்,  பாடியவர்- தி எம் சௌந்தரராஜன், இயற்றியவர்-கவிஞ்ர் கண்ணதாசன், இசை எம் எஸ் விஸ்வநாதன், நடித்திருப்பவர், திரு.சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் ஜெமினிகணேசன் அவர்கள் https://youtu.be/9P8Hynotz1M

இடைக்கால திரைப்படப் பாடல்களின் வரிசையில்:-
4). பாடல்:- அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே…. ."  திரைப்பட: கோவில் புரா (1981) || மொழி: தமிழ் || இசை: இளையராஜா || பாடியவர்கள்: பிசுசீலா, உமா ரமணன், வலம்புரி சாமிநாதன். நடித்திருப்பவர், திரு.ராஜபகதூர், சரிதா, ஜெய்ஷ்ங்கர், ஹரிணிக்குமார், விஷ்ணுச்சக்ரவர்தி போன்றவர்கள்...  https://youtu.be/zX97xtTwtGY

5. பாடல்:- தலையைக் குனியும் தாமரையே,  படம் :-  ஒரு ஓடை நதியாகிறது ( Oru Oodia Nathiyaagirathu ),பாடியவர்:- திரு.S.P.பாலசுப்ரமணியம், ராஜேஷ்வரி அல்லது B.S.சசி ரேகா, இசை:- இசைஞானி இளையராஜா, இயக்குநர் : ஸ்ரீதர், நடிகர்கள்  : ரகுவரன், சுமலதா  https://youtu.be/a85uJh-1Ie4

தற்கால புதிய பாடல்களின் வரிசையில்:- 
6. பாடல் ரகசியமாய் ரகசியமாய்,  படம் : டும் டும் டும்  இசை : கார்த்திக் ராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார்,  பாடியவர்கள் : சதனா ஷர்கம் மற்றும் ஹரிஹரன் அவர்கள், நடிப்பு:- மாதவன், ஜோதிகா https://youtu.be/crw0T0gKL-k

7). பாடல் "காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்",  திரைப்படம் : கோச்சடையான், இசை : ஏ.ஆர்.ரஹ்மான், வரிகள்: வைரமுத்து, குரல்: லதா ரஜினிகாந்த்.  ஆஹா என்ன ஒரு மென்மையான பாடல்… காதல் கணவனை நோக்கி பாடும் குரலில் : லதா ரஜினிகாந்த். உருகி உருகி மனைவி பாடும் / கொடுக்கும் சத்தியங்கள். நடு நடுவில் வரும் நாதஸ்வரம் நல்ல தேர்வு. இதுவரைக் கேட்டதில், இந்த ஆல்பத்தின் பெஸ்ட் பாடல் இது தான். ...https://youtu.be/R5Wa9J3Whis


இந்தத்தொடரின் அடுத்த பகுதியில் நாம் ரசிக்க இருப்பது "உறுமி மேளம்"
"உறுமி மேளம்" என்ற வாத்தியக் கருவி பற்றிய சிறப்பு பகுதியையும், திரையிசையில் உறுமி மேளத்தின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவில் பங்குகொண்டு மகிழலாம். அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறும் உங்கள் நண்பன் கோகி-ரேடியோ மார்கோனி.
....மீண்டும் அடுத்த நிகழ்ச்சிப் பதிவில் சந்திப்போமா? நன்றி வணக்கம்....    

Thursday, February 16, 2017

Life: THE BEST COMPANION

Life: THE BEST COMPANION: Hi friends, When my children were kids, I used to visit my close relatives so that they could get good exposure. One of my relatives was ...

Monday, February 13, 2017

ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். ...

ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். ...

வானொலியில் நான் எழுதி வழங்கிய நிகழ்ச்சித் தொகுப்பை, புத்தகமாக........ பகுதி-100(Episode-100)- இன்றய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? 

....."மேலாளர்" பதவிக்காக நேர்காணல் தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் "TOILET-கழிவறை நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா" என்றார்.

இப்போது இந்த விளையாட்டின் பந்து உங்களிடம் உள்ளது. நேர்காணலுக்கு வந்திருப்பவர் நீங்கலாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.

# பொதுவாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் சொல்வதைக்கூட சுத்தகரிப்பு தொழிலாளி சரியாக செய்யமாட்டார். நீங்களோ இன்னமும் அந்த நிறுவனத்தில் சேரவில்லை ஆகவே உங்களுக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உதவமாட்டார்கள்.

# நீங்களாகவே கழிவறையை பெருக்கி சுத்தம் செய்தால் நீங்கள் அந்த பணிக்குத்தான் லாயக்கு என்று முத்திரை குத்தப்படலாம்.

# மேலாளர் பதவிக்கு வந்த என்னைப்பார்த்தா இப்படி சொன்னாய் என்று கோபித்துக்கொண்டு "சரிதான் போடா சொட்டத்தலையா" என்று திட்டிவிட்டு வந்துவிட்டாலும் நீங்கள் மேலாளர் பதவிக்கு லாயக்கு இல்லாதவர் என முத்திரை குத்தப்படும்.

# அப்படியென்றால்  இந்த கேள்விக்கான பதில் என்ன???? ஒரு .நிறுவனத்தின் மேலாளர் என்பவர் விரல் நுனியில் விவரங்களை (fingers edge information) வைத்திருக்க வேண்டமா?

ஒரு நிறுவனத்திற்கு தேவையான அனைத்துவித சேவைகளையும் பெறுவதற்கு தேவைப்படும் சேவை நிறுவன தொலைபேசி எண்கள், நபர், முகவரி, போன்ற அனைத்து தகவல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களே...  விரல்  நுனியில்  விவரங்கள் வைத்திருப்பவர் என்பவர்"

இப்போது நீங்கள் உங்களின் " விரல் நுனியில் உள்ள விவரங்களை" பயன்படுத்தி கழிவறை சுத்தகரிக்கும் நிறுவனத்தை அழைத்து சுத்தம் செய்யச்சொல்லி, பிறகு சுத்தமான கழிப்பிடத்தை அந்த நிறுவன உரிமையாளரிடம் காண்பித்து "சபாஷ் மிக அருமையாக செய்திருக்கிறாய்" என்று கூறும்போது.... கழிவறை சுத்தகரித்த நிறுவனத்தின் செலவு சீட்டை தந்து அதற்க்கான தொகையை செலுத்துமாறு கூறவேண்டும்.

பாடல்:-...."வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைகாரன் வெவகாரமான வேலைக்காரன்.. http://youtu.be/HlYJd-bLiPk "

அடுத்த நேர்காணல் விளையாட்டை நாளை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...

மேலும் இப்படிப்பட்ட பல அனுபவங்களை கீழ் காணும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் வாங்கி படித்துப்பாருங்கள்.  இதை நான் புத்தக வியாபாரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவங்கள் சிறந்த வழிவகைகளை கற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன். 

எனது அனுபவங்கள் உங்களுக்கு பயனுள்ளவகையில் அமைந்து, அந்தப்புத்தகம் சிறந்த பெயரையும் புகழையும் பெறுமேயானால் .... எனது முதுமைக்காலங்களில் எனது பெயரே எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும். அதாவது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது அனுபவக் கல்வி பயன்படும் என்கிற நோக்கில், அந்தக் கல்வி நிறுவனங்கள் என்னை அழைக்கும்போதெல்லாம் என் பெயர்தான் எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும் என்பது உங்களுக்கு புரிகிறதா?... 
வாய்ப்பிற்கு நன்றி ....
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்...
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் !
வணக்கம்... நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
Contact:- GK India-New Delhi-+91-9717236514, E_mail:-GOPALKRISHNAN64@GMAIL.COM

Saturday, February 11, 2017

சாபம் நீக்கியோன் சன்னிதிக்கு வாராய்!

சாபம் நீக்கியோன் சன்னிதிக்கு வாராய்!

"வெறும் சேவை செய்தாலே போதும்- சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும்" என்பது உங்களுக்குத் தெரியுமா? பல வரலாற்று உண்மைச் சம்பவங்களோடு அவற்றைத் தெரிந்துகொள்ள, தொடர்ந்து இந்தப்பதிவை படித்துப்பாருங்கள்.......


மனித பிறவி எடுத்த ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சில தோஷ்ங்கள் காணப்படுகின்றன. முற்ப்பிறவியில் செய்த தவறுகளால், பாவச்செயல்களினால் ஏற்பட்ட வினைதான் இப்படி தோஷங்களாக அமைந்துவிடுகிறது. அவற்றில் முதன்மையான தோஷம் ராகு-கேதுவினால் வரும் தோஷங்களாகும். அதாவது நிழலாக நமது ஆத்மாக்களின் பிறவிகளோடு தொடரும் தோஷங்கள். அப்படி நிழல் கிரகமான ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷ பரிகாரமாக பலவற்றையும் செய்வதைவிட மிகச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது... அது எப்படி என்பதை சில உண்மைச்சம்பவங்கள் மற்றும் சில வரலாற்று நிகழ்விலிருந்து விளக்கமாகக் கூறுகிறேன் கேளுங்கள்....

கர்ம வினைகளினால் ஏற்படும், பிதூர்தோஷம், களத்திர தோஷம், சர்ப்பதோஷம், புத்திர தோஷம் போன்ற முக்கிய தோஷங்களுக்கு நிழல் கிரகங்களான ராகு,கேதுக்களே காரணமாகின்றனர். ஏனென்றால் அவை நிழலாக நம்மைவிட்டு விலகாமல் நாம் செய்த கர்ம வினைகளினால் நம்மை துரத்துகின்றன. அப்படிப்பட்ட இருட்டு-நிழல் நம்மீது படர்வதினால், நமது உடலின் உருவம் மற்றவர்களை கவர்ந்திழுக்காமல் மங்களாகி விடுவதோடு, நமது எண்ணங்களும் இருட்டடிக்கப்படுகிறது. நமக்கு முன்னாள் எதோ ஒரு திரை நமது கண்களை மறைக்கும்போது அந்தத் திரையை விலக்காமல் நம்மால் எதையும் செய்யமுடிவதில்லை.  

ஜோதிடர்களின் கூற்றுப்படி, சர்ப தோஷம் என்பது என்னவென்றால் ஒருவரது ஜனன ஜாதக லக்னத்தில் ராகு, மற்றும் 7ஆம் இடத்தில் கேது. இல்லையென்றால், லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு. அல்லது 2இல் ராகு, 8இல் கேது அல்லது 8இல் ராகு, 2இல் கேது. அதாவது லக்னம், மற்றும் லக்கினத்திலிருந்து 1ஆம் இடம் 7ஆம் இடம், 2ஆம் இடம் 8ஆம் இடம் இதில் ராகுவோ கேதுவோ இருந்தால் அதற்குப் பெயர் சர்ப தோஷம்.

சர்பதோஷத்தினால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும். இதனால் சர்ப தோஷம் உள்ள ஒரு ஜாதகரோடு, மற்றொரு சர்ப தோஷம் கொண்ட ஜாதகரையும் சேர்க்கும் போது சில தோஷங்கள் நிவர்த்தியாகிறது. அதனால்தான், தோஷத்திற்கு தோஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம். 

மருத்துவத்துறை சிறப்பாக நடக்க மருத்துவ கிரகமான கேதுவின் அருள் வேண்டும். அவரது அருள்கடாட்சம் இல்லாமல் மருத்துவத்துறையில் முன்னேற முடியாது. மேலும் திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ராகு-கேது எல்லோருக்கும் கெடுதலை செய்துவிடுவதில்லை ஒரு சிலருக்கு அபரிதமான நன்மைகளையும் கொடுப்பார்கள். ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், அடிக்கடி பாம்பை பார்க்கநேரிட்டாலும், ராகு /கேது தோஷ பரிகாரம் செய்வது நல்லது. 
பரிகாரம்; 
@  திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் செய்யலாம்.மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிவன் உள்ளிட்ட (பாம்பு தொடர்பான) கோயில்களிலுக்கு சென்று வழிபாடும் மேற்கொள்ளலாம். நவகிரகத்தில் உள்ள ராகு/கேதுவுக்கும் விளக்கேற்றலாம்.   

(திருக்காளஹஸ்தி சென்றால் பாதாள விநாயகரையும், திருகாளத்தீஸ்வரரை தரிசிக்கும்போது   சிவலிங்கத்தோடு  இருக்கும் நாகதேவரையும், சிலந்தி மற்றும் யானை மற்றும் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் தங்கப் பல்லி ஆகையவைகளை அதற்குரிய  இத் தளத்தின் வரலாற்று முறைப்படி தரிசிக்கவேண்டும் என்பதை கவனத்தில் வையுங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில், உங்களைப்பிடித்த தோஷங்களை போக்கும் என்பதை நினைவில் வையுங்கள். எப்படிப்பட்ட புராதான திருக்கோவில்களாக இருந்தாலும், அந்தக் கோவிலின் / திருத்தலத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்த திருத்தலத்தின் வரையறுக்கப்பட்ட முறைப்படி தரிசனம் செய்தால் மட்டுமே முழுப்பலனையும் பெறமுடியும். ஆகவே கோவில் அலுவலகத்தை தொடர்புகொண்டு அல்லது அந்த திருக்கோவில் அர்ச்சகரை உரிய தட்சிணைகளை தந்து, முழுவிவரங்களையும் தெரிந்துகொண்டு, உரிய முறையில் தரிசனம் செய்யவேண்டும். அப்போதுதான் சரியான தரிசன பலன் நமக்கு கிடைக்கும்)

@  ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது தோஷம் பெற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவலாம்.ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு உதவலாம். பழைய பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவலாம். பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொறுப்பேற்கலாம் இதுவும் சிறந்த பரிகாரமாகும்.
@ இன்னொரு சிறந்த பரிகாரமாக ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தாய்வழி பாட்டன், பாட்டி-தகப்பன் வழி பட்டன், பாட்டி இவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்விப்பது சிறந்த பரிகாரமாகும். காரணம் ஜோதிட ரீதியாக ராகு,கேதுற்கு இவர்களே அதிபதி ஆவார்கள்.

@ நிழல் கிரகமான ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷ பரிகாரமாக பலவற்றையும் செய்வதைவிட மிகச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது......அதாவது " ஆலயம் செல்லும் பக்தராக குறைந்தது ஒருநாளாவது   "புட்டபர்த்தியில்" கால்கள் அந்த புண்ணிய பூமியில் படுமாறு அங்கு தங்கி சேவை செய்யவேண்டும். (சபிக்கப்பட்ட இடம் எப்படி புண்ணியபூமியானது என்பதற்கு ஒரு புராண சம்பவம் ஒன்று உண்டு) அப்படி சேவை செய்வதால் ராகு கேதுவின் தோஷங்கள் உங்களைவிட்டு விலகுவதை உங்களால் அனுபவப்பூர்வமாக உணரமுடியும்.  அது எப்படி என்பதை ஒரு வரலாற்று நிகழ்விலிருந்து விளக்கமாகக் கூறுகிறேன் கேளுங்கள்....

(இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் சித்திராவதி நதிக்கரையருகே அமைந்த ஒரு நகரம் "புட்டபர்த்தி" என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது. புட்டப்பருத்தியின் அசல் பெயர் "கொல்லபள்ளி"  என இருந்தது)

முன்னமோர் நாளினில் மூண்டசா பத்தினால் 
துன்னிய புற்று துயர்செய்த பர்த்தியைப்
பன்னகம் பூண்டவன் வாழ்கயி லாயமோ
மென்னகை நாரணன் மேவுவை குந்தமோ
என்னவே ஆக்கிய இன்முகன் சாயியின்
சன்னிதி தன்னைச் சடுதியில் சேர்ந்திட
உன்னை யழைத்தோம் உறங்குதல் ஆகுமோ
இன்னகை வாராய்! இசைந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-4)

பொருள்:-
பண்டைநாள் ஒன்றில் உண்டான சாபத்தால் புற்றுக்கள் மண்டிக் கிடந்து புட்டபர்த்தி மிகவும் துன்பமடைந்தது. அப்படிப்பட்ட இடத்தை, இது நாகங்களை அணிந்த சிவன் வாழும் கைலாசமோ, இனிய நகை பூண்ட நாராயணன் வசிக்கும் வைகுண்டமோ என்னும்படி ஆக்கிவிட்டான் சாயி! அவனுடைய சன்னிதிக்கு விரைவாகப் போய் அடையலாம் வா என்று நாங்கள் உன்னை அழைத்தோம். இனிய நகை பூத்தவளே! இசைந்து எங்களோடு வருவாயாக. (அருஞ்சொற்பொருள்: பன்னகம் - பாம்பு.)

இன்று புட்டபர்த்தி என்று அறியப்படுமிடம் பண்டைக்காலத்தில் கொல்லபள்ளி (பசுக்கூட்டம் நிறைந்த இடம்) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இங்கு முழுவதும் பசுக்களும் இடையர்களும் நிறைந்திருந்தனர்.

ஒருநாள் அந்தக் கிராமத்தின் இடையன் ஒருவன், காட்டில் பசுக்களை மேய்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான். அதில் ஒரே ஒரு பசுவின் மடியில் பால் இல்லை என்பதை கவனித்து ஆச்சரியம் அடைந்தான். இது தொடர்ந்து நடந்தது. ஒருநாள் அந்தப் பசுவைப் பின்தொடர்ந்து சென்று எப்படிப் பால் திருடுபோகிறது என்றறியத் தீர்மானித்தான். இதையறியாத பசு வழக்கம்போல ஒரு பாம்புப் புற்றின் அருகில் சென்றது. அதிலிருந்து ஒரு பாம்பு வெளிவந்து, பசுவின் பின்னங்கால்களைச் சுற்றிக்கொண்டு அதன் மடியிலிருந்த பாலைக் குடித்தது. பசுவுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை.

இடையனுக்குக் கோபம் கண்மண் தெரியாமல் பொத்துக்கொண்டு வந்தது. அந்தப் பாம்பு தெய்வீகமானதாக இருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றவில்லை. ஒரு பெரிய கல் ஒன்றை எடுத்துப் பாம்பின்மேல் எறிந்தான். ரத்தம் சிதறிக் கல்லைக் கறையாக்கியது. பாம்பும் இறந்துபோனது.

ஒரு பாம்பை அடித்தால் புற்றீசல் போல பல பாம்புகள் வெளிவரும் என்பது கூற்று. எனவே இந்தச் சம்பவத்துக்குப் பின் கொல்லபள்ளியில் இடையர் குடும்பங்களும், பசுக்களும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன. பார்க்குமிடமெல்லாம் பாம்புப் புற்றுகள் வளரத் தொடங்கின. அந்த இடையனால் கொல்லப்பட்ட பாம்பின் சாபமே கொல்லபள்ளி கிராமம் அழியக் காரணம் என்று மக்கள் நம்பினர். அந்த கிராமத்தின் பெயர் ‘புட்டவர்த்தினி’ (புற்றுக்கள் செழித்து வளரும் இடம்) என்றாயிற்று.

பாம்பின் ரத்தம் படித்த அந்தக் கல்லை எடுத்துச் சென்று அதற்கு ‘கோபாலஸ்வாமி’ என்று பெயரிட்டு அதைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். (கோபாலன் என்றால் பசுக்களைக் காப்பவன், அதாவது இடையன், என்றுதானே பொருள்). தமது குலத்தைச் சேர்ந்தவன் செய்த தவறை மன்னிக்கப் பிரார்த்தனை செய்தனர். மெல்லப் பெயர் மாறி ‘புட்டபர்த்தி’ என்று ஆனது.

அதே கிராமத்தில் ரத்னாகர வம்சத்தில் வந்த கொண்டமராஜு கிருஷ்ணனின் தேவியான சத்யபாமாவுக்கு ஒரு கோவில் ஏற்படுத்தினார். மிகுந்த பக்திமானான கொண்டமராஜுவின் பேரனாக அவதரித்த அவதாரப் புருஷனால் புட்டபர்த்தியின் சாபம் முழுவதுமாக நீங்கப்பெற்று, இன்று உலகம் போற்றும் தெய்வத் திருத்தலமாக விளங்குகிறது.

ஒருமுறை ஸ்ரீ சத்ய சாய் பகவான் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். பாதையில் ஒரு பாம்பு குறுக்கே ஓடியது. ஓட்டுனர் வண்டியை பிரேக் போடாமல் பாம்பின் மேல் வண்டியை ஏற்றிவிட்டான். புட்டப்பர்த்தி வந்ததும் பகவான் வாகனத்திலிருந்து இறங்கினார். நேரே தனது அறைக்குச் சென்றார். ஓட்டுனரை கூப்பிட்டு அனுப்பினார். ஓட்டுனர் வந்தவுடன் தனது மேலங்கியை கழற்றி ஓட்டுனருக்குக் காட்டினார். முதுகிலே டயரின் தடம் பதிந்திருந்தது. பகவான் "பார் அந்தப் பாம்பின் மேல் நீ காரை ஏற்றவில்லை என் முதுகின் மேல் ஏற்றிவிட்டாய்' என்றார். ஓட்டுனருக்கு வியர்த்தது. கையும் காலும் ஓடவில்லை. "இனிமேல் இம்மாதிரியாக நடந்து கொள்ளாதே' என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இன்னொரு முறை சித்திராவதி நதிக்கு அக்கரையிலிருந்து ஒரு குடும்பம் அவதார புருஷரான ஸ்ரீ சாயிபாபாவை பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் இரண்டு நாட்கள் புட்டபர்த்தியில் தங்கியிருந்து. பகவானிடம் விடை பெற்று, தங்கள் ஊருக்குப் புறப்பட ஆயத்தமானார்கள் அப்போது. பகவான் சத்யசாயிபாபா அவர்களை அழைத்து அவர்களிடம்  "நீங்கள் மாட்டு வண்டியில் தானே வந்தீர்கள்' என்று கேட்டார். ஆம் என்ற பதில் வருவதற்கு முன்பே சத்யா சாயி பகவான் தொடர்ந்து பேசினார்  "நீங்கள் மொத்தம நான்கு பெரியவர்களும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றீர்கள்'. சித்திராவதி நதிப்படுக்கை மணலாக இருக்கிறது. ஆற்றைக்  கடந்த பிறகு நீங்கள் வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள். அதற்கு முன் வண்டியில் ஏறினால் மாடு மிகவும் கஷ்டப்படும். மாட்டைக் கஷ்டப்படுத்தாதீர்கள்" என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். எங்கோ இருக்கின்ற மாட்டுக்காக அவதார புருஷரின் இதயம் எவ்வளவு கனிகிறது என்று பாருங்கள் என்று ஒரு பக்தர் கூறியதைக்  கேட்ட ஸ்ரீ சத்யா சாயி பகவான், அவரை அழைத்து 'இறைவனிடம் அடிபணியும் அனைத்து ஜீவராசிகளின் மனதை என்னால் புரிந்துகொள்ளமுடியும். வண்டியை இழுத்து வந்து மாடுகளின் கஷ்டத்தையும், வந்திருந்த அந்தக் குடும்பத்தினரின் குடும்ப தோஷ கஷ்டங்களும் தீர, அவர்களின் காலடி இந்தப் புட்டபர்த்தியில் படவேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட சாப விமோச்சனமாக இருந்ததால் அப்படி கூறி அனுப்பினேன்' என்கிறார்.   

நாம் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்,  சில சாஸ்திர சம்பிரதாயங்களால் நமக்கு நன்மை கிடைக்கும் என்றால் அவற்றின்மீது நம்பிக்கை வைப்பதால் தவறு ஏதும் இல்லையே? ஆகவே சாமி சொல்லோ அல்லது ஆசாமி சொல்லோ நமக்குத் தேவை, நாம் நமது கெட்ட கர்ம வினைகளிலிருந்து விடுதலை பெற்று சிறப்படையவேண்டும், எனவே தோஷ பரிகாரம் என்பதை செய்வதில் தவறு என்று ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நம்பிக்கையோடு  முயற்சி செய்து பாருங்கள், முடியாது என்று ஏதும் இல்லை. ஆகவே நம்பிக்கையோடு செய்யும் எல்லா செயலும் நமக்கு நல்லவைகளை தரும் என்று நம்புவோம்..... 
  
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.  

Monday, February 6, 2017

எந்த தேர்வாகிலும், தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண் எடுக்கவும்....

எந்த தேர்வாகிலும், தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் அவர் சொன்ன ‘6 R’-களை அதாவது Read, Remember, Reproduce, Refer, Rectify, Revise ஆகிய சூட்சுமங்களை அனைவரும் மிகுந்த கவனத்தோடு குறிப்பெடுத்துக்கொண்டனர்.....

ஒருமுறை படி, அதை ஒன்பதுமுறை திரும்பத் திரும்ப எழுதிப்பார், எழுதியதை உன் நினைவில் பதிந்ததா என்பதை சோதித்துப்பார், விடுபட்டுப்போன குறை நிறைகளைத் திருத்திக்கொண்டு... நீ படித்து தெரிந்துகொண்டதை முகம்பார்க்கும் கண்ணாடி முன்பு நின்று உனக்கு நீயே பாடம் நடத்தி ஒப்பிட்டுப்பார் ... இனி நீ எந்த தேர்வையும் எழுத சென்றுவா ... வென்றுவா ... அனைத்திலும் வெற்றிவாகை சூடிவா ....... (கோகி).


பாடலைக் கேட்டு உள்ளம் மகிழ்வோம், உவகையில் நிறைவோம்!!!!
"சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை - மகனே
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை- இந்த
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா ...."
    

Friday, February 3, 2017

...ஆகவே, கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?...

...ஆகவே, கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?...
நிறுவனர்:- நீங்க எந்த வேலைக்காக விண்ணப்பம் செய்த்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? 

விண்ணப்பதாரர்:- "தெரியும்... அலுவலக மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்து, தற்போது அதற்கான நேர்காணல் தேர்விற்கு வந்திருக்கிறேன்" ...

நிறுவனர்:- உங்களது தலைமையின் கீழ் உள்ள ஒருவர், நீங்கள் கூறும் எந்த வேலையும் செய்யமாட்டேன்,  என்று 'அடம்' பிடிக்கிறார் என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? 

விண்ணப்பதாரர்:- அவரை நேரில் அழைத்து, அதற்கான காரணத்தை தெரிந்துகொண்டு, அதை நிவர்த்திசெய்து, அவரை சிறப்பாக செயல்படுமாறு வழிநடத்துவேன். 

நிறுவனர்:- அதன்பிறகும் அவர் உங்களது பேச்சை கேட்கவில்லை என்றால், என்ன செய்வீர்கள்?


விண்ணப்பதாரர்:- அவரை கண்டித்து வேலையை செய்ய நிர்பந்திப்பேன்.

நிறுவனர்:- அதன்பிறகும், அவர் உங்களது கட்டளையை மதிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

விண்ணப்பதாரர்:- எனது கட்டளையை மதிக்காத அவரை வேலையிலிருந்து நீக்குவதற்காக உங்களிடம் முறையிடுவேன்...

நிறுவனர்:- என்னிடம் முறையிடுவதற்கு உங்களை நான் எதற்க்காக மேலாளராக தேர்வுசெய்யவேண்டும் ... ஆகவே நீங்கள் வேறு வேலைக்கு முயற்சிசெய்யுங்கள்... நீங்கள் போகலாம்....
xxxxxxxxxxxxxx-------xxxxxxxxxxxxxxxxxx-----xxxxxxxxxxxxxxxxx

ஆகவே அதிகாரியின் கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?... என்று தெரிந்துகொள்ளவேண்டுமா?

நீங்கள் ஒரு சிறந்த நிர்வாக அதிகாரி என்றால் முதலில் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களது கட்டளைக்கு அடிபணிந்து உங்களுடன் பணியாற்றும் உங்களது குழுவிலிருப்பவர்கள் அனைவரும்  உங்களோடு சேர்ந்த ஒரு அங்கத்தினர் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். 

அப்படி உங்களது குழுவின் அங்கத்தினராக இருக்கும் எவரையும், உங்களது ஆணையை மதிக்கவில்லை என்று வேலையிலிருந்து நீக்கவேண்டும் என்றால், அது உங்களுக்குத்தான் பெரிய இழப்பு. ஆகவே, முதலில் நீங்கள்தான் அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற்றப்படவேண்டியவர்,  காரணம் நீங்கள் நிர்வாக அதிகாரியாக இருக்கத் தகுதியற்றவராகிறீர்கள்.  

உதாரணமாக ... உங்களது அங்கத்தின் கைவிரல்,  உங்களது பேச்சைக் கேட்க்காமல் எரியும் விளக்கில் கைவிரலை வைத்தால் அது விரலுக்கு ஏற்படும் கேடு அல்ல,  விரல் பேச்சைக்கேட்காமல் போனதற்குத் உங்களது தலை தான் காரணம், அதாவது தலைமை வகிக்கும் மூளைதான் காரணம். அந்த மூளைக்கு அனுபவமோ அறிவோ இல்லை என்பதாகப் பொருள். 

ஆகவே உங்களது ஆணைக்கு அடிபணியாதவரை வேலையிலிருந்து நீக்குவது என்பது,  உங்களது விரலை / கையை நீங்களே வெட்டிக்கொள்வதற்குச் சமம். 

அப்படியென்றால் ஆணைக்கு அடிபணியாதவரை எப்படித்தான் திருத்தி வழிக்கு கொண்டுவருவது என்றால் அதற்குப் பலவழிகள் உள்ளது....

வருகை தாருங்கள்.. எளிமையான, அருமையான, அனுபவப்பூர்வமான வழியில், திறமையாக செயல்படுவது எப்படி என்பதை எனது வலைப்பூவிற்குள் வலம்வந்து, எனது பதிவுகளை படித்துப் பயன்பெறுங்கள்.  
உங்களது அன்பான வருகைக்கு "http://gopalkrishnaniyer.blogspot.in" என்கின்ற இணையப்பக்கத்தின் முகவரியை சொடுக்கினால், எனது வலைதளத்தின் வரவேற்பறைக்கதவு திறக்கும்.   
....அப்போது நான் ஆந்திர மாநிலத்தின் ரேணிகுண்டா-திருப்பதி விமான தளம் அமைக்கும் திட்டப்பணியில் இருந்த நேரம்... என்னுடைய திட்டப் பணிக்குழுவில் ஒரு இளம் பொறியியல் பட்டதாரி மிகவும் மிடுக்கான தோற்றத்துடன்,  கலெக்டெர் ஒருவரது சிறப்பு சிபாரிசின் பெயரில் புதிதாக வேளையில் சேர்ந்தார்.

வேளையில் சேர்ந்த அன்றே அவர் தனக்கு இப்படிப்பட்ட வேலைகள் மட்டுமே செய்யப்பிடிக்கும் என்று பட்டியலிட்டு தந்தபோதுதான்... புரிந்தது  "இவரைப் பற்றி நன்கு தெரிந்துதான் எனது தலைமையின் திட்டப்பனிக் குழுவில் சேர்த்திருக்கிறார்கள் என்று" 

முதல் இரண்டு நாட்கள் .. திட்டப்பணிமனையை சுற்றிப்பார்த்து உங்களுக்கு என்ன புரிந்தது, அல்லது புரியவில்லை என்பதைக் கூறுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டேன். சுற்றுவட்டார மொழியான தெலுங்கு மொழியிலேயே பேசினார், அதிலும் அவருக்கான பிடிவாதம் தெரிந்தது..... (நான் பல இடங்களுக்கு  சென்று பணியாற்றியதால் எனக்கு 7 மொழிகள் பேசுவது என்பது கட்டாயமாக எனது மண்டையில் புகுத்தப்பட்டிருந்தது..... இருந்தும் சங்கீத ராகங்களில் எனக்கிருந்த ஈடுபாட்டால் தியாகராய கீர்த்தனைகளை அர்த்தம் புரிந்து ரசித்திட மூன்றேமாதங்களில்  நான் மிகவும் விரும்பி கற்றுக்கொண்ட தெலுங்குமொழி, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பெயர்ப்பலகையை படிக்கவும் மேலும் பல இடங்களில் தெலுங்கு மொழி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.)      

மூன்றாம்நாள் என்னிடம் வந்த அவர்,  எந்த அளவுகளையும் குறிப்பெடுத்துக்கொள்ளாமல்,  வெறும் வாய் வார்த்தையால் அளந்துக்கொண்டிருந்தார்.  ஒரு சிறு வேலையைத் தந்து அதை செய்யுமாறு  கூறி அனுப்பிவைத்தேன் ... அது தனக்கு பிடிக்கவில்லை "அதை செய்யமுடியாது" என்று கூறி போன வேகத்தில் திரும்பிவந்துவிட்டார்.  திட்டக் குழுவினர்களோடு இணையாமல் தனித்தே இருந்ததால் எந்த வேலையையும் அவரால் செய்யமுடியவில்லை.... அதோடு எதற்க்காக செய்யவேண்டும் என்கிற இறுமாப்போடு இருந்தார். 

திட்டப்பணியிடத்தில் பொருட்களைவைக்கும் ஒரு "குடோன்" பட்டறை ஒன்று இருந்தது அதில் எனது கட்டளைக்கு அடிபணியாத அந்த இளம் பொறியாளருக்கு ஒரு மேஜை நாற்காலி போட்டு அங்கு அவருக்கு எந்த வேளையும் தராமல் வெட்டியாக  உட்காரவைத்துவிட்டேன். 

ஒரு 10 நாட்களாக கூட அவரால் வெட்டியாக உட்கார்ந்து பொழுதை போக்கமுடியவில்லை. அதற்க்கு அடுத்தநாள் என்னிடம் வந்த அவர்... மன்னிப்பு கேட்டதோடு, எந்த வேலையாக இருந்தாலும் செய்யத்தயார்...!!! என்று வழிக்கு வந்தார்... அன்று அந்த பொறியியல் பட்டதாரி செய்யத் தொடங்கிய முதல் வேலை "எடுபுடி-சிமெண்ட் கலவையை தூக்கும் சித்தாளு வேலை"...

அதை அவர் கஷ்டப்பட்டு செய்யவில்லை, இஷ்டப்பட்டுதான் செய்தார்.. என்பது பிறகு ஒரு நேரத்தில் அதேநபர் புதுதில்லி T3 விமானநிலைய திட்டப்பணியில்.... நான் விப்ரோவின் சார்பில் பணியிலிருந்தபோது, அவர்  ஜி எம் ஆர்(GMR) நிறுவனத்தில் அதிகாரியாக என்னை சந்தித்தபோது... மெழுகாக மனம் உருகிவிட்டார்..... இன்றளவும் எனது தொடர்பிலிருக்கிறார்...   

ஆக...திருவள்ளுவரின் கூற்றான  "அவர் நான நன்னயம் செய்துவிடில்.."  நன்றாக வேலைசெய்தது. 

என் கட்டளைக்கு அடிபணியாதவர்களிடம் " ஒழுங்காக நான் சொல்வதைக்கேட்டு வேலை செய், இல்லையென்றால் வேலையை விட்டு போய்விடு" என்று கோபமாக சண்டை போட்டிருக்க முடியும். சிலர் நம்மை கோபமூட்டி கொதிப்படையச்செய்ய முயற்சிப்பார்கள், அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை சரியாக எதிர்கொள்ளாதவர்கள் தோல்வியடைகிறார்கள். அவர்களது கோபமான சண்டையால் பெயரையும் மதிப்பையும் இழக்கநேரிடுகிறது.  உதாரணமாக கோபமான ஒரு நாய் நமது எதிரே வந்து குறைக்கிறது என்றால், நாமும் அதற்க்கு எதிராக நாயைப்போல் குறைக்கும்போது, நாய்க்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருவரும் ஒன்று என்ற நிலைக்கு தள்ளப்படுவோம்.   ஆகவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அமைதியாக எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் என்பது, சிறந்த அனுபவமாக கருதப்படுகிறது.  

இது ஒரு சிறு உதாரணம்தான், இதைப்போல் பல் நேரங்களில் பல அனுபவங்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்திருக்கிறது... பலநேரங்களில் முரடர்கள் கூட பொட்டிப்பாம்பாக என் கட்டளைக்கு  அடங்கி அடிபணிந்து வேலைசெய்திருக்கிறார்கள். ... அவை அனைத்துமே "ஆடற மாட்டை ஆடி கறக்கணும், பாடற மாட்டை பாடிதான் கறக்கணும்" என்கிற நமது முன்னோர்களின் கூற்றைத்தான் நாம் சரியான வகையில் பயன்படுத்திக்கொள்வதில், நமது திறமையை நாம் உணரமுடியும். 

மேலும் இப்படிப்பட்ட பல அனுபவங்களை கீழ் காணும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் வாங்கி படித்துப்பாருங்கள்.  இதை நான் புத்தக வியாபாரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவங்கள் சிறந்த வழிவகைகளை கற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன். 
எனது அனுபவங்கள் உங்களுக்கு பயனுள்ளவகையில் அமைந்து, அந்தப்புத்தகம் சிறந்த பெயரையும் புகழையும் பெறுமேயானால் .... எனது முதுமைக்காலங்களில் எனது பெயரே எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும். அதாவது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது அனுபவக் கல்வி பயன்படும் என்கிற நோக்கில், அந்தக் கல்வி நிறுவனங்கள் என்னை அழைக்கும்போதெல்லாம் என் பெயர்தான் எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும் என்பது உங்களுக்கு புரிகிறதா?... 
வானொலி நிகழ்ச்சிக்காக நான் எழுதி வழங்கியதை புத்தகமாக "கோகிலாவின் 108 நேர்காணல் அனுபவங்கள்" 

அன்பு நேயர்களே நண்பர்களே, இன்றய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? வாருங்கள் நிகழ்ச்சிக்கு செல்வோம்... 

பாடல்:- போடச்சொன்னா ...... போட்டுக்கறேன் ...... போதும்வரை ......... கன்னத்திலே..பாடலின் திரைப்படம்:- பூவா தலையா (1969) பாடலை இயற்றியவர் கண்ணதாசன், பாடலை பாடியவர் TMS, இசை MSV.

வாய்ப்பிற்கு நன்றி 
மீண்டும் சந்திப்போம்
இப்படிக்கு  கோகி-ரேடியோ மார்கோனி. 


FREE JOBS EARN FROM HOME