FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, January 20, 2017

வெறும் 4 பக்கங்களே கொண்ட புத்தகம் அது, பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா????

"வெறும் 4 பக்கங்களே கொண்ட புத்தகம் அது, பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா????

வாசகர் வட்டம் நிகழ்ச்சியில்  "நீங்களும் கதை எழுதலாம்" என்கிற தலைப்பில்.பேசிக்கொண்டிருந்தேன் ."தினமும் தூங்கப் போகும்போது ஒரு சிறு நோட்டுப்புத்தகத்தையும் அதோடு ஒரு பென்சில் ஒன்றையும் தயாராக உங்களின் படுக்கையின் தலையணைப்பகுதியில் வைத்துவிடுங்கள்... சரியாக விடியற்காலையில் உங்களது ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகளை, காலையில் எழுந்தவுடனே குறிப்பெடுத்து வைத்துவிடுங்கள். (குறிப்பெடுக்காவிட்டால் நீங்கள் கண்ட கனவு மறந்துபோகும்) அதன் பிறகு உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நீங்கள் எழுதிவைத்த குறிப்புக்களை ஒன்று கோர்த்து ஒரு கதையாக எழுதலாம் ... கதை எழுதுவதற்கு இதுவும் ஒரு எளியமுறை, இதைப்போலவே பிரபல எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களும் மற்றும் பல சிறந்த கதாசிரியர்களும் இப்படித்தான் தமது கனவுகளில் வந்த பல விவரங்களைக் கொண்டு சிறந்த படைப்புக்களைத் தந்திருக்கிறார்கள்... என தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ....  

"எனக்கும் கதை எழுதணும் ஆசையா இருக்கு!!! நான் ஒரு கதை  புத்தகம் எழுதணும்னா, அந்தப் புத்தகம் எத்தனை பக்கங்கள் கொண்டதாக இருக்கணும்.????." என்று கேட்ட அந்த இளம் வயது சிறுமியைப் பார்த்தபோது முதலில் சிரிப்புதான் வந்தது... இந்த அளவிலாவது தைரியமாக எழுதணும்... என்று தனது ஆசையை வெளிப்படுத்தியதே, ஒரு தொடக்கத்தின் பெரிய வெற்றிதான்...  அன்றய நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட அவரையே சிறந்த விமர்சகராக முன்னிறுத்தி .. "நீங்களும் கதை எழுதுவது எப்படி" என்று விரிவாக விலக்கிக் கூறினேன் ...

ஒரு கோவிலில் பூசாரி ஒருவரை தேடி வந்த  பக்தனிடம்,  பரிகார பூசை பற்றி கூறிக்கொண்டிருந்தபோது... பக்தன் கேட்டான் ..."சாமி எத்தனை பழம் வைத்து நெய்வேத்தியம் செய்யவேண்டும் என்று..."  

எத்தனை முறை பூசை செய்தால் எனக்கு நல்லது கிடைக்கும்..என்று கேட்காமல் ... பிரசாதம் தின்பதிலேயே குறியாக இருந்த அவனின் மனநிலையை புரிந்துகொண்ட அந்த பூசாரி சிரித்துக்கொண்டார்.....

அதுபோலத்தான் கதை எழுத எத்தனைப் பக்கங்கள் எழுதவேண்டும் என்று கேட்பது.........  இருந்தாலும் இன்றுவரை சாதனையாக ஒரு பழைய புத்தகம், அதுவும் 1970கலீல் வெறும் 4 பக்கங்களே கொண்ட புத்தகம் அது, பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா???? 

அப்படிப்பட்ட சாதனைப் புத்தகம்தான் "பழைய தமிழ் திரைப்பட பாடல் புத்தகம்"  
ஒரு காலத்துல நான்  பள்ளி கூடத்துல படிக்கும் போது, பள்ளி ஆண்டு விழாக்களில் பாட்டுப் போட்டியில், பாட்டு பாடணும்னா, அதுக்கு இருந்த ஒரே வரப்ரசாத புத்தகம்தான்  "திரைப்பட பாட்டு புத்தகம்தான்". என்னதான் மனப்பாடம் செய்திருந்தாலும், மேடையிலிருந்து கூட்டத்தைப் பார்த்த பதட்டத்தில் அது முடியாதுபோக, கையேடு எடுத்துச் சென்ற பாட்டுப்புத்தகத்தைப் பார்த்து பாடிவிட்டு வந்தது இன்னமும் எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது  

அப்போதெல்லாம் அந்தப் புத்தகத்தின் விலை வெறும் 20 பைசாவுக்கு கடைகளில் கிடைக்கும். சில சாலையோரம் இருக்கும் நடைபாதைக்கடையில் வெறும் 10 பைசாவிற்குக்கூட கிடைக்கும். வெறும் நான்கே பக்கம் கொண்ட அந்த புத்தகத்தில் திரைப்படப் பாடல்களோடு அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனமும் விளம்பரமும் இருக்கும்.  

தற்போது கணினியில், இணையம்/வலைத்தளம் என்று வந்துவிட்டதால், இந்தப்புத்தகங்களுக்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது.  இருந்தும் இன்றும் எங்காவது ஒரு மூலையில் பழைய புத்தகக் கடையில் அல்லது பழைய கால வீட்டின், அலமாரி அல்லது பரண்களின்  மேல் வைத்திருக்கும் பழைய தகர பெட்டிக்குள் அடைபட்டுக்கிடக்கலாம். 

பலலட்சம் பிரதிகளை விற்ற, வெறும் 4-பக்கங்களையுடைய, அந்தக்காலப் பழைய திரைப்படப்  பாடல்களைக் கொண்ட புத்தகங்களின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே காணலாம். 




அன்றய "நீங்களும் கதை எழுதலாம்"  நிகழ்ச்சி எங்கோ ஆரம்பித்து வேறெங்கோ சென்று முடிந்தது போல இருந்தது ....

என் மனம் இந்தப்பாடலை முணுமுணுத்தது ....
("எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்...
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது" ...)

நன்றிகளுடன்  கோகி-ரேடியோ மார்கோனி. 

No comments:

FREE JOBS EARN FROM HOME