FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, December 18, 2015

கடவுள் ....ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல் செய்துள்ளார் என்றார்...

கடவுள் ....ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல் செய்துள்ளார் என்றார்...
பழைய நினைவுகள் ...எனது அம்மா அழைப்பது கேட்டதும் இதோ வந்துவிட்டேன்... என்று கூறி எதோ படம் வரைந்துகொண்டிருந்தேன் என நினைக்கிறேன்... அம்மா பூஜை அறையில் இருந்தார்... " இந்தாடா ஓடிப்போய் பூஜைக்கு 2 வாழைப்பழம் வாங்கி வந்து தாடா" என்றார், வீட்டிலிருந்து கடைத்தெருவிற்கு ஒரு 600 மீட்டர் தூரம் இருக்கும், நான் எனது வலது காலை உதைத்து, வாயால் வண்டியை கிளப்பி, கடையை நோக்கி ஓடினேன்.................... 

சரியாக 2 வாழைப்பத்துடன் திரும்பும் வழியில் ஒரு குரங்கு என் கையைப் பிடித்து தொங்க ஆரம்பித்து.... எனது கையில் வைத்திருக்கும் வாழைப்பழத்தை பிடுங்க முயற்சித்தது. பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சட்டேன்று வாழைப்பழத்தோடு இரண்டு கையையும் உயர தூக்கி பிடித்து, மற்றொரு கையால்  ஒரு வாழைப்பழத்தை மட்டும் பிய்த்து அதன் முத்தத்திற்கு முன்னே நீட்டியதும், குரங்கு அந்த ஒரு பழத்தை பெற்றுக்கொண்டு ஓடிவிட்டது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் பலே நல்ல வேலை செய்தாய் எங்கே அந்த குரங்கிற்கு பயப்படாமல் ஒரு பழத்தை தந்து மற்றொரு பழத்தை சாமர்த்தியமாக பறிபோகாமல் தடுத்துவிட்டாயே. நல்ல பையன் என்றார்.   

மீதமிருந்த ஒரு பழத்துடன் வீட்டிற்கு வந்ததும், அம்மா கோபித்துக்கொண்டார். "எண்டா குரங்கிடம் சண்டைபோட்டுவிட்டு வந்திருக்கியே, பேசாம பழத்தை தூக்கி எறிந்துவிட்டு ஓடி வந்திருக்கவேண்டியதானே என்று என்னை கடிந்துக்கொண்டதோடு எனது கையில் இருந்த குரங்கு கீறலுக்கு மருந்து போட்டார். 

அந்த ஒரு பழத்தைவைத்து சாமிக்கு நெய்வேத்தியம் செய்தார். சரியாக பூஜை முடிந்த சமயம் பார்த்து வீட்டின் பின் புற மதில் சுவரில் அந்த குரங்கு உட்கார்ந்து இருந்ததைப் பார்த்த நான் அம்மாவிடம் "அம்மா இதக் குரங்குதான் என் கையிலிருந்த பழத்தை  பிடுங்கியது என்றேன்" 

சற்றும் யோசிக்காமல் அம்மா நெய்வேத்தியம் செய்த அந்த ஒரு வாழைப்பழத்தை வீட்டின் பின்புற சுவற்றின்மீது உட்கார்ந்திருக்கும் குரங்கிடம் தந்தார், குரங்கும் அதை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டது. இதைபார்த்த எனக்கு கோபம் வந்ததால் முகத்தை  உம் மென்று வைத்துக் கொண்டு அமைதியாக எனது அறைக்கு சென்று உட்கார்ந்துவிட்டேன். 

எனக்குப் பின்னால் வந்த என் அம்மா மெல்ல என்னை அணைத்தபடி பேசினார்.... என்ன பேசியிருப்பார்? உங்களால் சரியாக யூகிக்க முடிகிறதா என்று பார்க்கலாம்...   என்ன சொன்னார் என்று அடுத்தப் பதிவில் தொடரும்...   அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

என் செல்ல கண்ணில்லையா, அம்மா சொல்வதைக் சமத்தாக கேளு....முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும், நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான். இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள். 

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம். பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.

கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிடச் செய்தார்.

நோய்களை பரப்பும் இவ்வகை வாழைப்பழங்கள் உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.

மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது. மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குப் போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது. இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.

எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன. பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும். செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும். 

இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

இப்ப நீயே சொல்லு, கடவுள் ஆஞ்சநேயர் வடிவில் வந்து நம்மை காப்பற்றியுள்ளார். அந்த பழம் நாம் தின்பதற்கு இல்லை என்பதை நமக்கு சொல்லி நம்மை காப்பாற்றியிருக்கிறார் என்றார்...... 


பாடல்:- பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா...!!! https://youtu.be/KDNSM0RyUa8 

ஆகவே எச்சரிக்கையாக இருங்கள். வாழைப்பழம் வாங்கும்போது பார்த்து வாங்குங்கள்! நண்பர்களே.... 
விழித்திருங்கள், 
செழித்திருங்கள்... 
நட்புடன் ரேடியோ -கோகி.   

No comments:

FREE JOBS EARN FROM HOME