FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, September 17, 2015

ஏமாறுவது தவறா? அல்லது ஏமாற்றுவது தவறா?

ஏமாறுவது தவறா? அல்லது ஏமாற்றுவது தவறா?

கண்ணுக்கு தெரியாத அளவில் மிக மெல்லிய இழையில் நெய்த புது ஆடை செய்துதருகிறோம் என்று இரண்டு நெசவாளர் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள், அரசரை சம்மதிக்கவைத்து எந்த வேலையும் செய்யாமல் பல காலமாக அரான்மனையின் விருந்தினராக ஏக போகங்களை அனுபவித்து வந்தனர்.

அரசர் அந்த இருவரையும் அவைக்கு அழைத்து, இனி பொறுமையாக இருக்கமுடியாது, ஆகவே நாளை நீங்கள் நெய்த ஆடையை அணிந்து நகர்வலம் வரப்போகிறேன், உடையை தயார் செய்து வையுங்கள் என்று கட்டளையிட்டார்.

அரசக் கட்டளையை கேட்ட அந்த இரண்டு ஏமாற்றுக் காரர்களுக்கு பயம் வந்துவிட்டது, சமாளித்துக்கொண்டு "அரசே நாங்கள் நெய்த அந்த சிறப்பு உடையானது நல்லவர்கள் கண்களுக்குத்தான் தெரியும், கெட்டவர்கள் கண்கள்க்குத் தெரியாது என்றனர். இதைக்கேட்ட அரசரோடு வீட்டிருந்த அவையிரருக்கும் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

ஆகவே அனைவரும் அரசர் அணியப்போகும் அந்த சிறப்பு உடையை பார்க்க ஆவலாக காத்திருந்தனர்......நீங்களும் நானும் எல்லோரும்தான் .... காத்திருக்கிறோம் .... இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு உடை மற்றும் நான் கேட்ட கேள்விக்கு விடை தெரிகிறதா? .."ஆம்" அல்லது "இல்லை" இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பதில் கூற முடியுமா? .. . நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. .........

No comments:

FREE JOBS EARN FROM HOME