மாதக்கடைசி பணத் தட்டுப்பாடு, ATM-வரை சென்று பணம் எடுக்க முடியாத சூழ்நிலை, திடீர் என நண்பர்கள் கூட்டம் வீட்டிற்கு வருகை தர, வேறு வழியில்லாமல் பாலில் தண்ணீர் ஊற்றி, காப்பி கலக்கமுடியாமல் எங்கே கண்டுபிடித்துவிடுவார்களோ, என்று அனைவருக்கும் சுடச் சுட ஏலக்காய் மணக்க தேநீர் "டி" பருகத்தந்தோம். அனைவரும் கிளம்பும்போது ஒரு நண்பர் மட்டும் என்னை தனியாக அழைத்து "பாலும் தண்ணி அதில் போட்ட "டீ"யும் தண்ணி, உங்கள் வீட்டில் தண்ணிக்கு பஞ்சமில்லை என நினைக்கிறேன் என்று கூறியதோடு, நிலைமையை புரிந்துகொண்டதாகவும் கூறினார்....
நீங்கள் பாலில் தண்ணீர் சேர்த்திருப்பது பிறருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதன் சுவை காட்டிக்கொடுத்துவிடும். அதுபோல உங்களிடம் நல்ல விஷயங்கள் குறைய குறைய உங்களது செயல் அதனை காட்டிக்கொடுத்துவிடும்.....கோகி ...
No comments:
Post a Comment