FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Sunday, April 5, 2015

கொழுக்கட்டை மந்தாரை :- பாட்டி சொன்னது:-


கொழுக்கட்டை மந்தாரை :- பாட்டி  சொன்னது:-   விநாயகருக்கும், குரு தட்ச்னாமூர்தி மற்றும் சநீஸ்வரபகவானுக்கும்   பிடித்த பூக்களில் இதுவும் ஒன்று.   இது பொதுவாக மஞ்சள் நிறமுள்ள பூக்களுடன்(சில இடங்களில் வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது) , பூக்களின் நடுவில் காப்பி கோட்டை நிறத்தில் கொழுக்கட்டையின் உள்ளே  இனிப்பு பூரணம் இருப்பது போலவே இந்த பூ அமைந்திருப்பதினால் இந்த பெயர் பெற்றிருக்குமோ?  முன்பெல்லாம் இதன் இலையை ஈர் குச்சியால் தைத்து சாப்பிடும் இலையாக பயன்படுத்தினார்கள் காலம் செல்ல செல்ல இந்த தாவரத்தை காண்பதே அரிதாகிப்போனது. (குறிப்பு:- அந்தி மந்தாரை என்பது வேறு வகை பூந்தாவரம், கொழுக்கட்டை மந்தாரை என்பது வேறு வகை தாவரம்) 
கொழுக்கட்டை மந்தாரை - இந்த மரத்திர்க்கு தனி மகத்துவம் உள்ளது. ஆன் மரம் மற்றும் பெண் மரம் என்று இருவித மரங்களாக காணப்படுகிறது. பெண் மந்தாரை மரம் அழகிய வண்ண பூக்களுடன் சிறு சிறு இலைகலைக்கொன்டதாகவும், ஆன் மந்தாரை மரம் பெரிய இலைகளைப் பெற்றிருக்கும் (இந்த ஆன் மந்தாரை  இலையைத்தான்  ஈர்க்குச்சியால் தைத்து சாப்பிடும் இலையாக பயன்படுத்துகிறார்கள்)  

மந்தாரையின் மருத்துவ குணம்:-இதன் இலையில் விளக்கெண்ணையை தடவி அந்த இலையை சூடான தணலில் வாட்டி,  கத்திக்குத்து அல்லது அடி பட்டு வீக்கம் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் சில மணி நேரங்களிலே வீக்கம் குறைந்து தசைகளுக்கு அடிபட்ட சுவடு தெரியாமல் வலி காணாமல் போகுமாம். ( சோழ மன்னர் காலத்தில் போதி சித்தர் என்று அழைக்கப்பட்ட ஒருவர் இந்த வைத்தியத்தை செய்ததாக குறிப்பு உள்ளது.) மந்தாரை மூல நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது, மந்தாரை இலையில் சாப்பாடு சாப்பிட்டால் குறிப்பாக தயிர் சாதம் பிசைந்து உண்டால் குடல் வியாதிகள் அனைத்தும் குணமாகும்.  மந்தாரையின் இலை, கிளை, வேர்,  மரப்பட்டை என அனைத்தும் பல்வேறுவிதங்களில் மருந்தாக பயன்படுகிறது.........நன்றிகளுடன் கோகி -என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.....

No comments:

FREE JOBS EARN FROM HOME