FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 24, 2015

1990-வடஇந்தியாவின் ஒரு இராணுவ மையத்தில் தந்தியைப்(பெற்ற) தந்தையின் மனநிலை(பகுதி-14)

எனது நாட்குரிப்பெட்டின் வாடாமலர் பக்கங்கள்:-1990-வடஇந்தியாவின் ஒரு இராணுவ மையத்தில் தந்தியைப்(பெற்ற) தந்தையின் மனநிலை(பகுதி-14):-  தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் பல வசதிகள் பெற்றிருந்தாலும், 1989-90கலீல்  இந்திய வட எல்லைப்பகுதியில் அமைந்த இந்திய ராணுவ எல்லைப்படை  பயிற்சி மையத்தில், தொலைத் தொடர்பு சாதனங்கள் பயன்பாடு மிகமிக அரிதாகவே பயன்பாட்டில் இருந்தது (ரேடார் மற்றும் தந்தி தவிர மற்றவை). அப்போதெல்லாம்  XP/AT- கணினிகளை( நாங்கள் எருமைக் கணினி என்றுதான் அழைப்போம் அத்தனை மெதுவாக பணிபுரியும் கணினிவகைகள்)  வட  மாநிலத்தில் அமைந்திருந்த பல இராணுவ  மையங்களில் நிறுவுவதற்கு, இராணுவ வாகனத்தில் வெகுதூரம் பயணம்செய்து, கணினியை நிறுவியபிறகு(computer installation) அதை பயன்படுத்த தேவயான பயிற்சியையும்  தந்துவிட்டு திரும்பவேண்டும். ஒரு முறை ஜனவரி மாதத்தில் (நல்ல குளிர்... என் உதடுகள் தந்தியடித்தது)  கணினி பழுதாகிவிட்டது என்று கூறியதால் நானும் மற்றுமொரு, நிறுவனத்தின் பழுது பார்ப்பவரும் அந்த இராணுவ மையத்திற்கு சென்று பார்த்தபோது கணினி ஒளித்திரையின் ஒளியை (கருப்பு/வெள்ளை நிறத்தை) கூட்டிக் குறைக்கும் அமைப்பானை (monitor display adjustment knobs) மாற்றிவிட்டிருந்தமையால், கணினி ஒளித்திரையில் ஒன்றும் தெரியாமல்... கணினி பழுதாகிவிட்டது என்றனர்.  பிறகு  கணினி ஒளித்திரையை (Monitor) பயன்படுத்துவது எப்படி என்று பயிற்சியளித்துவிட்டு வந்தோம். அப்போது தமிழகத்தின் செஞ்சி பகுதியை சேர்ந்த ஒரு இராணுவ வீரருக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளது என்று  தந்திவந்ததை படித்த அவர் மகிழ்ச்சியில் கண்கலங்கினார், அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் .... தந்தியைப்(பெற்ற) தந்தை   இப்படி பாடியிருப்பார் "அன்பு வந்தது, என்னை ஆள வந்தது, சொந்தம் வந்தது,  தெய்வ சொர்க்கம் வந்தது ... http://youtu.be/hBKsdFah6q8 

No comments:

FREE JOBS EARN FROM HOME