FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, April 30, 2015

மகன்:- வாழ்ந்து முடித்தபிறகு -சொர்கத்திற்கு அனுப்பிவைக்கிறான்.
மகளோ:- வாழும்போதே  வீட்டை சொர்கமாக்குகிறாள்.
"பெண்ணைப் போற்றிடுவீர் ...பெண் மகவை பெற்றிடுவீர்" !!!!

விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்!
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து..

Friday, April 24, 2015

1990-வடஇந்தியாவின் ஒரு இராணுவ மையத்தில் தந்தியைப்(பெற்ற) தந்தையின் மனநிலை(பகுதி-14)

எனது நாட்குரிப்பெட்டின் வாடாமலர் பக்கங்கள்:-1990-வடஇந்தியாவின் ஒரு இராணுவ மையத்தில் தந்தியைப்(பெற்ற) தந்தையின் மனநிலை(பகுதி-14):-  தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் பல வசதிகள் பெற்றிருந்தாலும், 1989-90கலீல்  இந்திய வட எல்லைப்பகுதியில் அமைந்த இந்திய ராணுவ எல்லைப்படை  பயிற்சி மையத்தில், தொலைத் தொடர்பு சாதனங்கள் பயன்பாடு மிகமிக அரிதாகவே பயன்பாட்டில் இருந்தது (ரேடார் மற்றும் தந்தி தவிர மற்றவை). அப்போதெல்லாம்  XP/AT- கணினிகளை( நாங்கள் எருமைக் கணினி என்றுதான் அழைப்போம் அத்தனை மெதுவாக பணிபுரியும் கணினிவகைகள்)  வட  மாநிலத்தில் அமைந்திருந்த பல இராணுவ  மையங்களில் நிறுவுவதற்கு, இராணுவ வாகனத்தில் வெகுதூரம் பயணம்செய்து, கணினியை நிறுவியபிறகு(computer installation) அதை பயன்படுத்த தேவயான பயிற்சியையும்  தந்துவிட்டு திரும்பவேண்டும். ஒரு முறை ஜனவரி மாதத்தில் (நல்ல குளிர்... என் உதடுகள் தந்தியடித்தது)  கணினி பழுதாகிவிட்டது என்று கூறியதால் நானும் மற்றுமொரு, நிறுவனத்தின் பழுது பார்ப்பவரும் அந்த இராணுவ மையத்திற்கு சென்று பார்த்தபோது கணினி ஒளித்திரையின் ஒளியை (கருப்பு/வெள்ளை நிறத்தை) கூட்டிக் குறைக்கும் அமைப்பானை (monitor display adjustment knobs) மாற்றிவிட்டிருந்தமையால், கணினி ஒளித்திரையில் ஒன்றும் தெரியாமல்... கணினி பழுதாகிவிட்டது என்றனர்.  பிறகு  கணினி ஒளித்திரையை (Monitor) பயன்படுத்துவது எப்படி என்று பயிற்சியளித்துவிட்டு வந்தோம். அப்போது தமிழகத்தின் செஞ்சி பகுதியை சேர்ந்த ஒரு இராணுவ வீரருக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளது என்று  தந்திவந்ததை படித்த அவர் மகிழ்ச்சியில் கண்கலங்கினார், அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் .... தந்தியைப்(பெற்ற) தந்தை   இப்படி பாடியிருப்பார் "அன்பு வந்தது, என்னை ஆள வந்தது, சொந்தம் வந்தது,  தெய்வ சொர்க்கம் வந்தது ... http://youtu.be/hBKsdFah6q8 

Tuesday, April 21, 2015

வானொலிக் கதைகள் "அந்தநாள் ஞாபகம் - பள்ளிக்கூடம்"- Episode/பகுதி 21....

வானொலிக் கதைகள் "அந்தநாள் ஞாபகம் - பள்ளிக்கூடம்" Episode/பகுதி-21:-(வானொலிக்கு நான் எழுதிய கதையும் பாடல்களும் நிகழ்ச்சிப் பதிவுகளிலிருந்து) "அப்போதெல்லாம் 9-ம் வகுப்புக்கு வந்துவிட்டாலே எதோ ஒரு பரீட்சை பயம் வந்துவிடும்.  9ம்  மற்றும் 10ம் வகுப்பு அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெறக்கூடிய வகுப்பு அல்ல என்றும்,  அன்றய பாடங்களை அன்றே முழுவதும் படித்து ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும் இல்லையென்றால் பரிட்சையில் தோல்விதான் 9ம் வகுப்பைத் தாண்டுவது கடினம் என எனது வகுப்பாசிரியர் ஏதேதோ சொல்லி மிரட்டி வைத்திருந்தார்...

பாடல்:- ஏ பார் ஆப்பிள் - A for Apple.. B for Biscuit  https://youtu.be/PBLIgp1XhmI

(9-ம்  வகுப்பு அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெறக்கூடிய வகுப்பு அல்ல என்றும்,  வகுப்பாசிரியர் ஏதேதோ சொல்லி மிரட்டி வைத்திருந்தார்... அந்தக்காலத்தில் பல கிராமத்து மாணவ, மாணவியர்கள் 9-ம் வகுப்பில் தனது படிப்பை நிறுத்திவிட இதுவும் ஒரு காரணம் என்றும் கூறலாம்). பாடல்:- "படிப்புக்கும் ஒரு கும்பிடு"... படம் :-இரும்புத் திரை (1960), பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு, இசை : எஸ் வி வெங்கட்ராமன்  https://youtu.be/_k06MusuBeQ

அன்றைய தேர்வு முடிவுகளில் 9ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பிற்கு தேர்ச்சி  பெற்றிருந்த மகிழ்ச்சியில், புது வகுப்பில் புது பாடங்கள், புத்தகங்கள் என அன்றுதான் புதிதாக பிறந்தவன் போல ஒரு குதூகலம் மனதில் நிறைந்திருந்தது. பாடல் "வெற்றிமீது வெற்றிவந்து என்னைச்சேரும் அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் உம்மைச்சேரும்  https://youtu.be/kYSsx_BZOp8

எதிரில் நண்பன் வந்தான் அவனும் வெற்றிபெற்றிருப்பன் இருப்பினும் பொதுவாக இருக்கட்டுமே என்று "நண்பா, உனக்கு கிடைத்ததுதான் எனக்கும் கிடைத்தது என்று கூறினேன்" அதைக்கேட்ட  அவனது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.  தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டே  கடைத்தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம்.   பாடல்:- உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி - நெஞ்சில் தூங்கிக் கிடக்குது நீதி  https://youtu.be/boyVeLaj14Y

என் மனம் புதிய வகுப்பு,  புதிய புத்தகங்கள் என எதோ ஒரு  மகிழ்ச்சியான சிந்தனைகள் மனதில் ஓட, தொடர்ந்து கடைத்தேருவழியாக நடந்துகொண்டிருந்தோம். பாடல் "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை  https://youtu.be/FfE1rTqyC-Y 

வழியில் மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் என ஏராளமானவர்கள் ஒரு புத்தகக் கடைமுழுவதும் நிரம்பி வழிந்தார்கள். மனம் பரபரத்தது எனக்கும் புதிய புத்தகம் வாங்கவேண்டும் என்று ஆசைதான். புதுப்புத்தகத்தின் வாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும். இருப்பினும் எனது குடும்ப சூழ்நிலையில் பாதிவிலையில் அதிலும் அனைத்து புத்தகங்களும் ஒரே நேரத்தில் வாங்க முடியாத சூழ்நிலை.  
பாடல்:- நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,.. வாழ்ந்தே தீருவோம்!  https://youtu.be/NaItT2DZVXU

சிறிது நேரம் அந்தக் கடையில் நிரம்பிவழிந்த கூட்டத்தை பார்த்தபடி நண்பனும் நானும்  நின்றுகொண்டிருந்தோம். என் வயதுதான் இருக்கும், அந்த மாணவன் அவனது அப்பாவிடம் இந்த புத்தகம் வேண்டும்...அதுவும் வேண்டும் என்று தொடர்ந்து புது புது புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருந்தான்.  கூட்டத்தில் சிறிது இடைவெளி தெரிந்தது சற்றென்று நான் அந்தக் கடையின் கூட்டத்தினுள்  நுழைந்து, கடைக்காரரிடம் 10ம் வகுப்பு புத்தகங்களின் மொத்த விலை எவ்வளவு என்று கேட்டேன். அவர் காசு வைத்திருக்கிறாயா? இல்லையென்றால் பிறகு வா என்று கூறிவிட்டு வேறு ஒருவருக்கு புத்தகம் விற்க விலை கூறிக்கொண்டிருந்தார். பாடல்:- காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும்  இது தெரியுமாடா https://youtu.be/Hv6lb4ttBOI

எனது பரிதாப நிலையை அந்தக்கடையில் புத்தகம் வாங்கிக்கொண்டிருந்த மாணவனும் அவனது தந்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர். என்ன நினைத்தாரோ? அவர் என்னை அருகில் அழைத்தார். அவரது சட்டைப்பையிலிருந்து, அவர் வீட்டு முகவரி பதித்த அழைப்பு சீட்டு (visiting card) ஒன்றை என்னிடம் தந்து, நாளை வீட்டிற்கு வந்து அவரது மகனின் சென்ற ஆண்டு  படித்த 10ம் வகுப்பு புத்தகங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். சந்தோசத்தில் அவரது பாதங்களில் சாஸ்டாங்கமாக விழுந்து நன்றியை தெரிவிக்க மனம் நினைத்தாலும் கூட்ட நெரிச்சலில் முடியாதுபோனதால் அவரிடம் நின்றபடியே நன்றி கூறி,  அந்த மகிழ்ச்சியை தனது வீட்டிற்கும் தெரிவிக்க, நண்பனின் கையை பிடித்து அவனையும் வேகமாக தரதர வென்று இழுத்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன். பாடல்:- நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்திருந்தேன் .. https://youtu.be/NnOPdx7Gn24

மறுநாள் காலை விடியமாட்டேன் என்று அடம் பிடித்தது. அருகிலிருந்த கையடிக்குழாயில் காக்கா குளியல் முடித்து வீட்டிற்க்குள் நுழைந்தபோது அம்மாவும் காஞ்சி குடித்துவிட்டு வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எனக்கும் ஒரு கலயத்தில் கஞ்சியும் தொட்டுக்கொள்ள ஊறுகாயும் வைத்திருந்தார்கள். கஞ்சியை குடித்துவிட்டு, வீட்டை தாழ் போட்டுவிட்டு, வெளியில் செல்ல சொல்லிவிட்டு, அம்மா வேலைக்கு சென்றுவிட்டார். பாவம் அவர்களுக்குத்தான் பள்ளிக்கூடம் படிப்பறிவு என்பது கிடைக்காத கனியாகிவிட்டதால் தனது மகனாவது நன்கு படிக்கட்டும் என்று பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்கிறார்கள்.  பாடல்:-பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன், ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்,  https://youtu.be/_k06MusuBeQ   
விலாசத்தை கண்டுபிடித்து, தயங்கி தயங்கி வீட்டின் வெளியிலிருந்து ஐயா என்று குரல் கொடுத்தேன்.முதலில் நேற்றுபார்த்த அந்த மாணவன் வெளியில் வந்தான் என்னை பார்த்தபிறகு, அப்பா என்று கூறிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றுவிட்டான். சிறிது நேரத்தில் அந்த மாணவனின் "அப்பா" அவர்கள் வீட்டினுள்ளிருந்து வெளியில் வந்தார், என்னை வீட்டிற்குள் அழைத்தார், நான் வீட்டிற்குள் சென்றதும்  அங்கு ஏற்க்கனவே அனைத்து புத்தகங்களையும் தயாராக எடுத்து வைத்திருந்ததைக் கண்டேன். அங்கு எனக்கு தருவதற்காக அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைக் காட்டிய அவர், இதேபோல உன்னுடைய சென்ற ஆண்டு 9ம் வகுப்பு புத்தகங்களையும், நீயும் மற்றொரு மாணவனுக்கு இலவசமாக தரவேண்டும் என்று கட்டளையிட்டார். நானும் அதற்க்கு என்னுடைய மனப்பூர்வமான சம்மதத்தை தெரிவித்தேன். பாடல்:- மனிதனென்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம் வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம். https://youtu.be/6Eg20JQwGYY 

அனைத்துபுத்தகங்களும் புதியதுபோலவே அட்டை போடப்பட்டு அழகாக இருந்தது. அதை பார்த்தபோதே மனதில் ஒரு ஆர்வம் ஊற்றடுத்து ஓடியது. அனைத்து புத்தகங்களையும் சரி பாதியாக அடுக்கிப் பிரித்து, எனது இரு தோள்களில் சுமந்துகொண்டு "நன்றி ஐயா" என்று கூறி அங்கிருந்து விடைபெற்றேன்.  பாடல்:- பாட்டு வாழ்ந்து பார்க்கவேண்டும் உலகில் மனிதனாகவேண்டும்  https://youtu.be/YU-b1hNh0g0

மனது முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. புத்தகங்கள் இலவசமாக எனக்கு கிடைத்ததுபோல எனது  நண்பனுக்கும் கிடைக்கவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அப்போதுதான்  எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. என்னைப்போலவே பலருக்கும் இதுபோல இலவசமாக பாட புத்தகம் கிடைத்தால் இன்னும் பலமடங்கு மகிழ்ச்சி கிடைக்குமல்லவா என்கிற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு சென்று தோளில் சுமந்திருந்த புத்தகங்களை வைத்துவிட்டு, அங்கு இருந்த என்னுடைய 9ம் வகுப்பு பாட புத்தகங்களை எடுத்துக்கொண்டு, நண்பனையும் அதுபோலவே அவனது 9ம் வகுப்பு புத்தகங்களை எடுத்துக்கொண்டு நாங்களிருவரும் பள்ளிக்கூடம் நோக்கி ஓடினோம்.  பாடல்:-சிரித்துவாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே https://youtu.be/Ji4Qzh2cXD4
பள்ளியினுள் நுழைந்தவுடன் அங்கிருந்த 8ம் வகுப்பு தேறிய, 9ம் வகுப்புக்கு செல்ல இருக்கும் மாணவர்களை நோக்கி... உங்களுக்கு 9ம் வகுப்பு புத்தகங்கள் இலவசமாக வேண்டுமா? உங்களுடைய பழைய 8ம் வகுப்பு புத்தகங்களை தந்துவிட்டு இந்த 9ம் வகுப்பு புத்தகங்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்று குரல் கொடுத்தோம். அதைக்கேட்ட பல மாணவர்கள் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். சற்று நேரத்தில் 10ம் வகுப்பு மற்றும் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் அருமையான யோசனை என்று என்னை பாராட்டி அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்களின் சென்ற ஆண்டு புத்தகங்களை பெற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு புத்தகங்களை மாற்றிக்கொண்டிருந்தோம். சற்று தூரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்களும் இந்த கூடத்தை பார்த்துவிட்டு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள், மனதில் சற்று பயம் வந்தது இதோடு நிறுத்திவிடலாம, என்கிற எண்ணம் தோன்றியது அதற்குள் "என்ன இங்கு கூட்டம்" என்று அதட்டலோடு வகுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியர் அவர்களும் என்னை நெருங்கிவிட்டார்கள்.  பாடல்:- நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே ... நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை வளரும் முல்லைகளே https://youtu.be/D2kQOWCzcl4

விவரத்தைக் கேள்விப்பட்டதும், தலைமை ஆசிரியர் என்னை முதுகில் தட்டிக்கொடுத்து அருமையான பணியை செய்திருக்கிறாய் என்று பாராட்டியதோடு, பள்ளி நூலக ஆசிரியரை அழைத்து இந்த மாணவனுக்கு தேவையான இடவசதியை பள்ளி நூலகத்தில் செய்துகொடுக்குமாறு கட்டளையிட்டார். அதோடு பள்ளியின் முதல் நாள் காலை தொழுகை கூட்டத்தில் என்னை மேடைக்கு அழைத்து பள்ளியின் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் பாராட்டியதோடு, ஏழை மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டம் சிறப்பான ஒரு திட்டம் என்றும் இதை செயல் படுத்திய என்னை சிறந்த மாணவன் என்று பாராட்டியதோடு, இதை அனைத்துப்பள்ளிகளிலும் செயல்படுத்தும்படி பள்ளிக்கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதப்போவதாகவும் கூறினார்.   பாடல்:- நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி  https://youtu.be/XG_gSzVn1Ys

இப்போது உங்களுக்கும் அந்த மாணவன் யார் என்று தெரிந்திருக்கும். பின்னாளில் அதே பள்ளியில் மேல்நிலை வகுப்பில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பை பெற்றுத்தந்ததும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்தான். பாடல்:- வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமைய்யா ஏழைகள் உங்களை நம்பி....  https://youtu.be/7lIENBK-la4

(இரண்டு வருடம் பகுதிநேர ஆசிரியராக நான் படித்த அதே பள்ளியில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் என எனது நாட்குறிப்பு புத்தகத்தில் இது குறித்தும், அப்போது நடந்த பல சுவையான சம்பவங்களையும் எழுதி வைத்திருக்கிறேன்.)....  பாடல்:- மீண்டும் பள்ளிக்கு போகலாம் https://youtu.be/51sfVxD_wlE
ஒருவேளை இந்த திட்ட விவரங்கள் உங்களின் பள்ளியில் நடைமுறையில் இல்லையென்றால், அனைத்து ஏழை மாணவர்களின் பயனைக்கருத்தில் கொண்டு, நீங்களே முன்னின்று இந்த சேவைப்பணியை உங்களின் அருகாமையில் இருக்கும் பள்ளியில் தொடங்கிவைத்தால், நீங்கள் செய்த இந்த உதவி உங்களின் எதிர்கால சந்ததியினரின் சிறப்பான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம். "  பாடல்:-நல்ல நல்ல சேவை... நாட்டுக்கு தேவை... Film : Porter kanthan (1955) https://youtu.be/-Y4bCc135QY 

இப்படிக்கு, நன்றிகளுடன் கோகி என்னும் கோபால் கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.  
பாடல்:- எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்; என் பாடல் நான் பாட பலர் ஆடுவார், இனி என்னோடு யார் ஆடுவார் ??????  https://youtu.be/vo00ogHbydI

Episode-110. இன்றைய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா?

Episode-110. இன்றைய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? 
It wan an interview question… “A Thing, that is available only  in “Heaven”… how to get those Things? First you explain us what is your answer for this question, and how you will be getting such things from Heaven?    ஒரு நிருவனத்தின் வேலைவாய்ப்பு நேர்காணலின்போது கேட்கப்பட்ட கேள்வி அது? அந்த ஒரு பொருள் "சொர்க்கத்தில்" மட்டுமே கிடைக்கும் என்றால், அந்தப் பொருளை கொண்டுவருவதர்க்கான சாதனையை நீங்கள் செய்யவேண்டிய சூழலில்,  உங்களின் பதில் என்ன? என்ன செய்வீர்கள்?. எப்படி கொண்டுவருவீர்கள்? முதலில் இந்த கேள்விக்கான பதிலைக்கூருங்கள் என்றனர்? 

அது ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூருக்கு அருகேயுள்ள தார்ப்பாலைவனத்தில் (  இந்தியாவில் இருக்கும்  தார்ப்பாலைவனத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 200,000 km2 ஆகும்) அமையவிருக்கும் ஒரு பெரிய காற்றாலை மின் உற்பத்தி மற்றும்  சூரிய ஆற்றலை மின்சக்தியாக மாற்றி பெறக்கூடிய நிறுவனத்தின் திட்டப்பணியை மேற்கொள்ள திட்ட மேலாளருக்கான் நேர்காணல் தேர்வின்போதுதான் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது .  காரணம் திட்டப்பணி நடக்கவிருக்கும்  அந்த தார்ப்பாளைவனத்தில் சரியான சாலை வசதிகூட கிடையாது அப்படிப்பட்ட சவாலான பணியை ஏற்று செய்யக்கூடிய திட்ட மேலாளருக்கு எத்தகைய சூழலையும்  எதிர்கொண்டு சமாளிக்கும் திறமை இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர்.  

சாதிக்க குறிப்பிட்ட எல்லை என்று ஏதுமில்லை. உங்களின் சாதனையை பிறர் பயன்படுத்திக்கொண்டால் அதற்காக நீங்கள், வருத்தப்படவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு உங்களின் சாதனையை பயன்படுத்திக்கொள்ளமுடியுமே  தவிர, அவர்களால் சாதிக்கமுடியாது. ஆகவே சாதிக்க, சாமர்த்தியமும் மிக மிக முக்கியம். அதோடு அந்த அந்த நேர, கால, இடத்திற்கு ஏற்றார்போல, சமயோசிதமாகவும் சாமர்த்தியமாகவும் பதில் சொல்ல தெரிந்திருக்கவேண்டும்.  

உங்களின் பதில் "ஆம்/ முடியும்" என்று கூறுவீர்களானால், முதலில் ஒரு சில விவரங்களை நன்கு ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும். அதாவது சொர்க்கம் அது எங்கிருக்கிறது? எப்படி அங்கு செல்லமுடியும்? புராணங்களில் மனிதனின் இறப்பிற்கு பின்பு சொர்க்கம் செல்லலாம் என்று குறிப்பிட்டிருப்பதை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது. இறந்தபிறகு திரும்ப மனித உடலில் அதுவும் நமது அதே உடலுக்குள் திரும்ப முடியுமா? என்கிற பல கேள்விகளுக்கு விடையே இல்லை. அப்படிப்பட்ட சூழலில் உங்களின் பதில் சிறப்பானதாகவும், அந்த நேர, கால, இடத்திற்கு ஏற்றார்போல, சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகவும் பதில் சொல்ல தெரிந்திருக்கவேண்டியது அவசியம். 

சரி இப்போது இந்தக் கேள்விக்கான சாமர்த்தியமான பதில் என்ன என்று பார்ப்போம்?   

"நானே சென்று எடுத்துவருவதைவிட, யாரையாவது சொர்கத்திற்கு அனுப்பி எடுத்துவரச் செய்வேன் " என்று  சாமர்த்தியமாக பதில்கூறவேண்டும்.

மேலும் யாரும் பார்த்திராத அந்த பொருளை எடுத்துவருவது மிகவும் எளிது... நீங்கள் எந்த ஒரு புதுப் பொருளை எடுத்துவருகிரீர்களோ "அதுதான் அது", அதாவது சொர்கத்திலிருந்து பெறப்பட்ட பெருள் இதுதான் என்று எதோ ஒரு புதிய பொருளைக்காட்டி சாதித்துவிட்டாதாக கூறலாம். சந்தேகமிருந்தால் உடனே உங்களை சொர்கத்துக்கு அனுப்பி, இதை என்னால் நிருபிக்கமுடியும் என்று கூறினாலே போதும், உங்களது சாதனை ஏற்றுக்கொள்ளப்படும். .. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .....

ஆகவே, எவர் ஒருவர் எந்த ஒரு கடினமான சாதனைகளையும் தமது குழுவினர்களைக்கொண்டு செய்து முடிக்கும் எண்ணம் உடையவராக, தனது குழுவினர்களை நிர்வகிக்கத்தெரிந்த மற்றும் குழுவினர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவர்கள் மட்டுமே சிறந்த திட்ட மேலாளராக பணியாற்றத் தகுதிபெற்றவராவார். ஆகவே  குழுவிலிருக்கும் ஒருவரை அனுப்பி "சொர்க்கத்தில்" இருக்கும் அந்த பொருளை நாம் எளிதாக பெற்றுவிடமுடியும் என்று கூறவேண்டும். அதேநேரம் உங்களின் குழுவிலிருந்து எவரையும் இழக்கவோ அல்லது  பணியிலிருந்து வெளியேற்றவோ கூடாது. ஆகவே அனைவரையும் அரவணைத்து செல்லவேண்டிய கட்டாய சூழலில் நீங்கள் இருப்பதையும் நினைவில் வைத்திருக்கவேண்டும். 

அடுத்த நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம்!...
வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. 

Saturday, April 11, 2015

அச்சு வெல்லம் என்றாலே அதற்க்கு சரியான ஜோடி பச்சரிசி...


அச்சு வெல்லம் என்றாலே அதற்க்கு சரியான ஜோடி பச்சரிசி... 

# அச்சு வெல்லத்தோடு தேங்காய் சேர்த்து சாப்பிட உடல் குளுர்ச்சியடையும். வேர் கடலையுடன் சேர்த்து சாப்பிட உடல் சூடேறும். 

# தயிருடன் அச்சு வெல்லம் சேர்ந்து சாப்பிட உடல் சூட்டை கூட்டும், அதுபோல தயிருடன் உப்பு சேர்த்து சாப்பிட உடல் உஷ்ணம் குறையும். 

# இதெல்லாம் விட அச்சு வெல்லம் தயாரிக்கும்போது வெல்லத்துடன் உப்பை சேர்த்து காச்சுவார்கள், உப்பு வெல்லத்தை புளித்துப்போகாமல் காப்பதோடு, நீண்ட நாட்கள் கெடாமலும் காக்கும்.... இனிப்புடன் சிறிதளவு உப்பு சேரும்போது... இனிப்புத்தன்மை சற்று கூடுவதாக மற்றுமொரு ஆய்வு கூறுகிறது....

# அச்சுவேல்லமும் சின்ன வெங்காயமும் "டெங்கு" காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

"அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிர நாள்தான் ஹோய்........காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்"

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. 

விழிப்போமா?....நெஞ்சே உன் ஆசை என்ன....

விழிப்போமா?..... நெஞ்சே உன் ஆசை என்ன....

# ."அகத்துள் ஆமை புகுந்தால்"... என்பதை தவறாக திரித்துக் கூறப்பட்டு   “ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்.” என்கிற பழமொழியாக மாறியது. 

அகத்தில் ஆமை புகுதல் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் "அகம்" என்றால் உள்ளே அதாவது உள்ளத்தின் உள்ளே  அல்லது மனதினுள்ளே என்பதாக பொருள்படும்.  இங்கு ஆமை என்பது இல்லாமை, இயலாமை, முடியாமை, தெரியாமை, பொறாமை போன்ற இன்னும் பலவித ஆமைகளில், ஏதாவது ஒரு ஆமை மனதுக்குள் புகுந்துவிட்டாலே போதும்,  அவனது மனதோடு சேர்ந்து அவனும் கெட்டுப்போவான். 

கை இழந்த ஊனமுற்றவர்கள் கூட மாற்றுத்திரனாளிகலாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள், ஆனால் கை இருந்தும் நம்பிக்"கையை" இழப்பவர்களுக்குத்தான் பல ஆமைகள் மனதினுள் புக சிறந்த வழியாக அமைகிறது. அப்படி நம்பிக்கையை இழக்கும்போது...அதனுடன் அடங்காமை, அறியாமை, இயலாமை, இல்லாமை, கல்லாமை, தீண்டாமை, தெரியாமை, பொறாமை, முடியாமை, முயலாமை,  போன்ற இன்னும் பல ஆமைகள் மனதிற்குள் புகுந்துவிட்டாலே, அந்த "தற்கொலை" என்கிற கோழைத்தனம் வந்துவிடுகிறது ... எனது 50 வருட வாழ்க்கையில்,  பள்ளிப்பருவத்தில் என் வகுப்பு நண்பன் (20வயதில்- ஒருவன்) மற்றும் நான் இரண்டு வருடம் ஆசிரியராக பணியாற்றியபோதும் என் வகுப்பு மாற்றுத்திரனாளியான மாணவி ஒருவள் என....மேலும் சிலரின் "தற்கொலை" என்கிற கோழைத்தனத்தை போக்க நான் எடுத்த சில முயற்சிகளும் கூட தோல்வியில் முடிந்தபோது... விதி வென்றதா? என்கிற கேள்விக்கு இன்னமும் எனக்கு விடை கிடைக்கவில்லை. 

ஒன்றுமட்டும் நிச்சயம்... என்ன ஆனாலும் ஆகட்டும் ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற வைராக்கிய எண்ணங்களை மனதில் விதைத்து மிகப்பெரிய மரமாக வளர்த்துக்கொள்வதே சிறந்த வழி....அப்படிப்பட்ட வைராக்கியத்தை  இளம் வயதிலிருந்தே மனதில் விதைப்பது மேலும் சாலச் சிறந்தது. 

#....நெஞ்சே உன் ஆசை என்ன?  நீ நினைத்தால் ஆகாததென்ன,  இந்த பூமி, அந்த வானம், இடி மின்னலை தாங்குவதென்ன ........

விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்!
வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. 

Sunday, April 5, 2015

கொழுக்கட்டை மந்தாரை :- பாட்டி சொன்னது:-


கொழுக்கட்டை மந்தாரை :- பாட்டி  சொன்னது:-   விநாயகருக்கும், குரு தட்ச்னாமூர்தி மற்றும் சநீஸ்வரபகவானுக்கும்   பிடித்த பூக்களில் இதுவும் ஒன்று.   இது பொதுவாக மஞ்சள் நிறமுள்ள பூக்களுடன்(சில இடங்களில் வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது) , பூக்களின் நடுவில் காப்பி கோட்டை நிறத்தில் கொழுக்கட்டையின் உள்ளே  இனிப்பு பூரணம் இருப்பது போலவே இந்த பூ அமைந்திருப்பதினால் இந்த பெயர் பெற்றிருக்குமோ?  முன்பெல்லாம் இதன் இலையை ஈர் குச்சியால் தைத்து சாப்பிடும் இலையாக பயன்படுத்தினார்கள் காலம் செல்ல செல்ல இந்த தாவரத்தை காண்பதே அரிதாகிப்போனது. (குறிப்பு:- அந்தி மந்தாரை என்பது வேறு வகை பூந்தாவரம், கொழுக்கட்டை மந்தாரை என்பது வேறு வகை தாவரம்) 
கொழுக்கட்டை மந்தாரை - இந்த மரத்திர்க்கு தனி மகத்துவம் உள்ளது. ஆன் மரம் மற்றும் பெண் மரம் என்று இருவித மரங்களாக காணப்படுகிறது. பெண் மந்தாரை மரம் அழகிய வண்ண பூக்களுடன் சிறு சிறு இலைகலைக்கொன்டதாகவும், ஆன் மந்தாரை மரம் பெரிய இலைகளைப் பெற்றிருக்கும் (இந்த ஆன் மந்தாரை  இலையைத்தான்  ஈர்க்குச்சியால் தைத்து சாப்பிடும் இலையாக பயன்படுத்துகிறார்கள்)  

மந்தாரையின் மருத்துவ குணம்:-இதன் இலையில் விளக்கெண்ணையை தடவி அந்த இலையை சூடான தணலில் வாட்டி,  கத்திக்குத்து அல்லது அடி பட்டு வீக்கம் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் சில மணி நேரங்களிலே வீக்கம் குறைந்து தசைகளுக்கு அடிபட்ட சுவடு தெரியாமல் வலி காணாமல் போகுமாம். ( சோழ மன்னர் காலத்தில் போதி சித்தர் என்று அழைக்கப்பட்ட ஒருவர் இந்த வைத்தியத்தை செய்ததாக குறிப்பு உள்ளது.) மந்தாரை மூல நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது, மந்தாரை இலையில் சாப்பாடு சாப்பிட்டால் குறிப்பாக தயிர் சாதம் பிசைந்து உண்டால் குடல் வியாதிகள் அனைத்தும் குணமாகும்.  மந்தாரையின் இலை, கிளை, வேர்,  மரப்பட்டை என அனைத்தும் பல்வேறுவிதங்களில் மருந்தாக பயன்படுகிறது.........நன்றிகளுடன் கோகி -என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.....

FREE JOBS EARN FROM HOME