FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, March 19, 2015

விதியின் பிடியிலிருந்து எப்படி தப்புவது?

பாவம் என்பது நமது எண்ணங்களின் செயல்பாடுகளோ? என்று ஒரு சந்தேகம் வருகிறது. சற்று சிந்தித்துப்பார்த்தால் "நடந்துகொண்டிருக்கிற நான், 'கால் இடறி தரையில் வீழ்வேன்' என்று நமது மனதில் ஓர் எண்ணம் நம்மை தொடருமேயானால், நிச்சயம் நாம் தரையில் வீழ்வது உறுதி. ஆகவே செயல்களைவிட நமது எண்ணங்கள்தான் நமது  தலைவிதியை நிர்ணயிக்கிறதோ என்கிற ஆணித்தரமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறது. 

திருவள்ளுவரும் 113வது அதிகாரத்தில் ஊழ் என்று தனி அதிகாரமே தந்திருக்கிறார். மேலும் எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்று கூறியிருப்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் நமது எண்ணங்கள்தான் விதியை நிர்ணயிக்கிறது என்பது புரிகிறது.  

சரி மனிதப்பிறவி தமது எண்ணங்களின் பிரதி பிம்பங்களான விதியின் பிடியிலிருந்து எப்படி தப்புவது? நம்பிக்கையானது, நல்லது மற்றும்   ஏற்புடையது என ஏற்றுக்கொள்ளுதல் போன்ற இன்னும் பல்வேறு அர்த்தங்களை கொண்டது.  நல்லது அல்லாதவைகளையும்,  "நல்லதாக" பார்ப்பது கூட ஒரு வகையில் நம்பிக்கயின் வடிவங்கள்தான். உதாரணமாக நாம் சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது நமது காலடியில்,  எறும்பு போன்ற பல்வேறு சிறு  உயிரினங்கள் மிதிபட்டு இறக்கின்றன, அதற்க்கு நாம்  பாவம் செய்ததாக வருந்துவதைவிட, அவைகளின் அந்தப் பிறவியிலிருந்து விடுபட்டு , அதைவிட சற்று உயரிய மறு பிறவி பெறுவதற்கு  நம்மால் ஆனா ஒரு உதவியாக நினைப்பதுதான் சிறந்தது, ஏன் எனில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இன்னும் பல புராண இதிகாசங்களிலும், பல உயிர்கள் இறப்பது பாவ விமோச்சனமாகவும் அல்லது கீழ் உயிரினத்திலிருந்து  விமோசனம் பெற்று உயரிய உயிருனமாக மறு பிறவி எடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நமது எண்ணங்களை சிறப்பான எண்ணங்களாக மாற்றினால் நமது தலைவிதியும் மாறிவிடும் என்பது தெரிகிறது.  ஆகவே நமது சிந்தனைகளை நெறிப்படுத்திக் கொண்டு செயல்படுவோமேயானால்  நமது தலைவிதியும் (எப்பிரவியாயினும்) சிறப்பாகவே இருக்கும்.. 

"நீ எதை தூக்கி எரிகிராயோ அது உன்னிடம் திரும்ப வரும் - மகாபாரதம் ... ஆவகே நமது எண்ணங்கள் நல்லவைகளாக பிறருக்கு உதவுமேயானால் அது நமக்கும் நல்லதாகவே அமையும். 

வாழ்க்கை மீது விதிக்கப்பட்டிருக்கும் சில எதார்த்தங்களை ஒப்புக் கொள்ள மறுக்காதீர்கள். நம் முன்னோர் அப்படியான எதார்த்த நிகழ்வுகளை “விதி” என்று வகைப்படுத்தினார்கள். அதை மாற்ற முடியாது என்பதாலேதான் “விதியை மாற்ற முடியும்” எனச் சொல்லாமல் “விதியை மதியால் வெல்லலாம்” எனச் சொல்லித் தந்தனர்..

விதியென்று ஏதுமில்லைவேதங்கள் வாழ்க்கையில்லை... உடலுண்டு உள்ளமுண்டு. முன்னேறு மேலே மேலே.

நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து.....  

No comments:

FREE JOBS EARN FROM HOME