FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, November 6, 2014

கதாநாயகி பாடும்போது "கால்" போடாமலும், கதாநாயகன் பாடும்போது "கால்" போட்டு பாடும்படி பாடலை அமைத்திருப்பார்

பாடலில் கவிஞ்சரின் கைவண்ணம்:- "கதாநாயகி பாடும்போது  "கால்" போடாமலும், கதாநாயகன் பாடும்போது  "கால்" போட்டு பாடும்படி பாடலை அமைத்திருப்பார்" 

கதாநாயகி (பெண் குரல்) பாடும்போது "கால்" போடாமல் பாடுவார் அதாவது...."முத்துக்களே" பெண்கள்.. "தித்திப்பதே" கன்னம்
கதாநாயகன் (ஆன் குரல்) பாடும்போது "கால்" போட்டு பாடுவார் "முத்துக்களோ" கண்கள் "தித்திப்பதோ" கன்னம்
.... படம்: நெஞ்சிருக்கும் வரை

முத்துக்களே பெண்கள்.. தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
(முத்துக்களோ கண்கள்)

படித்த பாடம் என்ன
உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப்பூவை சூடத் துடிப்பதென்ன
(முத்துக்களே பெண்கள்)

கன்னிப்பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலில் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன
(முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன
உன் கைகள் மாலையாவதென்ன
வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன
(முத்துக்களே)

படம்: நெஞ்சிருக்கும் வரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா
http://www.youtube.com/watch?v=0wBsn4F__A4&feature=share&list=PL86A6B8FDD708251D

No comments:

FREE JOBS EARN FROM HOME