FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 19, 2013

என் வீட்டு தோட்டத்தில் காய்த்த ஒரே ஒரு வேண்டைக்காயாக இருந்தாலும் அதில் செய்யும் சாம்பாரின் மனமும் சுவையும் வேறு எந்த சாம்பாரிலும் கிடைப்பதில்லை,

இன்றைய பார்வை:- உலகளாவிய தாவரவியல் பூங்காவில், சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவும் "சிறந்த தாவரவியல் பூங்கா" என்கிற சிறப்பு மதிப்பை பெறுகிறது. இதை மேலும் சிறப்படயசெய்வது சிங்கப்பூரின் ஒவொரு குடிமக்களின் கடமையாகும். என்னுடைய தாத்தா (அப்பப்பா).... காலம் சென்ற திரு எஸ் .கிருஷ்ணா சுவாமி ஐயர் அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவின் உயர் அதிகாரியாக
Ooty (Nilgiri hills) Botanical garden superintendent இருந்தபோது (1925) பிரிடிஷ் அரசாங்க உதவியுடன் மலர் கண்காட்சியை மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டு உலக அளவில் பேசப்பட்டது. இன்றளவும் ஒவொரு ஆண்டும் நடக்கும் மலர் கண்காட்சிக்கு எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கென்று சிறப்பு அழைப்பு வருகிறது. என்னுடைய பாட்டி (அப்பம்மா) 1979 வரை தாத்தாவின் அரசாங்க ஓய்வூதியத்தைப் பெற்றுவந்தார். இயற்கையை நேசிக்க நாம் ஒவொரு நாளும் ஒரு சில மணி நேரமாவது ஒதுக்க வேண்டும், என் வீட்டு தோட்டத்தில் காய்த்த ஒரே ஒரு வேண்டைக்காயாக இருந்தாலும் அதில் செய்யும் சாம்பாரின் மனமும் சுவையும் வேறு எந்த சாம்பாரிலும் கிடைப்பதில்லை, தாவரங்களை நேசிக்க பழகுங்கள். தாவரங்கள் நமது அன்பை புரிந்துகொண்டு நம்மிடம் பேசும், அந்த உன்னதமான ஸ்பரிசத்தை உங்களாலும் உணரமுடியும். முயற்சி செய்யுங்கள் அதனால் கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காத சிறந்த மகிழ்ச்சி அது, அதை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும். http://youtu.be/cu-2yxYL06w

No comments:

FREE JOBS EARN FROM HOME