FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, March 8, 2013

யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி

&2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
&நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
... அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
&பொருத்தமான பாடல்கள் கொண்ட குட்டி வானொலி கதைகள் ...தாங்களே முன்வந்து கேட்டதற்கு எனது நன்றிகள்
&என்னிடம் தயாராக உள்ள கதைகளின் நடுவில் உள்ள பழைய பாடல்களை மாற்றி சற்று புதிய பாடல்களை பொருத்தி சரிசெய்து அனுப்பிவைக்கிறேன்.
&ஒரு இந்திய விவசாயியும் பாகிஸ்தான் விவசாயியும் சந்தித்துக் கொண்டார்கள்..

இந்தியர் தன் வயலைச் சுற்றிக் காட்டினார்..

பாகிஸ்தானி சொன்னார்.. என்னுடைய வயலை காரில் சுற்றிப் பார்க்க ஒரு முழுநாள் தேவைப்படும்..

இந்தியர் சொன்னார்..

" என்கிட்டேயும் அது மாதிரி ஒரு ஓட்டைக் கார் இருந்தது. பழைய இரும்புக்கு
போட்டுட்டேன்,,!*(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&மன்மோகன் சிங்கும், ஒபாமாவும்
பாரில் அருகருகே அமர்ந்து உள்ளனர். அப்போது ஒரு நபர் அந்த பாருக்கு வருகிறார்.

சிப்பந்தியிடம் அவர்கள் மன்மோகன் சிங்கும், ஒபாமாவும் தானே என்று கேட்கிறார்.

"ஆம்! அவர்கள்தான்!" என்றார் சிப்பந்தி.

உடனே அந்த நபர் அவர்களிடம் சென்று "ஹலோ! இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்றார்.

மன்மோகன் சிங் & ஒபாமா : "நாங்கள் மூன்றாம் உலகப் போரைப் பற்றி விவாதிக்கிறோம்."

அந்த நபர், "ஒ! உண்மையாகவா? என்ன நடக்கப் போகிறது? " என்று கேட்கிறார்.

மன்மோகன் சிங்: "நல்லது! நாங்கள் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களையும், ஒரு சைக்கிள்
ரிப்பேர் செய்கிறவரையும் கொல்லப் போகிறோம்"

உடனே அந்த நபர் மிகவும் ஆச்சரியத்துடன் "என்னது ஒரு சைக்கிள் ரிப்பேர் செய்பவரா?" என்று கேட்கிறார்.

மன்மோகன் சிங் ஒபாமா ஐப் பார்த்து, "பார்த்தீர்கள? நான் அப்பவே சொன்னேன், ஒருவரும் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களைப் பற்றி கவலைப் படமாட்டார்கள்! நாம் திட்டமிட்டபடி இதை செய்து முடித்துவிடுவோம்"
நான் படித்ததில் பிடித்த நகைச்சுவை இது. .....

$ ஒரு ஆப்பிரிக்கன், ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி மூவரும் மெக்சிகோவில் பயணம் செய்த போது ஒரு மெக்சிகனை ஏதோ ஒரு காரணத்துக்காக கொன்று விட்டனர்.அவர்கள் மூவருக்கும் மின்சார நாற்காலி மரண தண்டனை அளிக்கப்பட்டது.

ஆப்பிரிக்கன் ' நான் ஒரு டென்டிஸ்ட். நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் .என்னை விட்டுவிடுங்கள் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

இந்தியன் ' நான் ஒரு டாக்டர் . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது .. சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

பாகிஸ்தானி ' நான் ஒரு எலெக்ட்ரிகல் இஞ்சினியர்.. . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன்...அதற்கு முன் ஒரு விஷயம்..அங்கே பாருங்கள் நீங்கள் ஒயரை மாற்றி கனெக்சன் கொடுத்துள்ளீர்கள்..அந்த கருப்பு ஒயரையும் சிவப்பு ஒயரையும் இடம் மாற்றினால் தான் மின்சாரம் பாயும்.'....... மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

&ஒரு பாகிஸ்தானிய மாணவன் அமெரிக்க பள்ளி ஒன்றில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

ஆசிரியர்: உன் பெயர் என்ன?

மாணவன்: அஹமத்

ஆசிரியர்: தவறு. இப்பொழுது நீ அமெரிக்காவில் இருக்கிறாய். எனவே இன்றிலிருந்து உன் பெயர் ஜானி. சரியா...

பாகிஸ்தானிய மாணவன் யோசித்தபடியே வீட்டுக்கு சென்றான். வீட்டில் அவனது தாய் 'முதல் நாள் வகுப்பு எப்படி இருந்தது?' என்று கேட்டார்.

மாணவன்: ஓ....நன்றாகவே சென்றது. இன்றிலிருந்து நான் ஒரு அமெரிக்கன். என் பெயர் இனி ஜானி.

பையனின் தந்தையும் தாயும் இஸ்லாத்தை அடி பிறழாமல் பின் பற்றுபவர்கள். எனவே கிறித்தவ பெயரை வைக்கக் கூடாது என்று போதித்தனர். பையன் கேட்பதாக இல்லை. எனவே இவ்வாறு சொன்னதற்காக பையனை திருத்துவதற்காக அவனை அடித்து விட்டனர். அடி வாங்கிய மறு நாள் அதே யோசனையோடு பள்ளியினுள் நுழைந்தான் அஹமத். இவன் யோசனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்த ஆசிரியர் 'என்ன ஆச்சு உனக்கு ஜானி?' என்று கேட்டார்.

பையன் பொறுமையாக சொன்னான் "அமெரிக்கனாக மாறிய என்னை இரண்டு பாகிஸ்தானிகள் அடித்து விடடனர்"

&கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இபோ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???....
& அப்பா : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?
மகன் : அம்மா அடிச்சிட்டாங்கப்பா...
அப்பா: சீ ..சீ...இதுக்கெல்லாமாடா அழுவாங்க?
மகன் : அட போங்கப்பா நீங்க எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க என்னால முடியல

& சுதா: ஏன் அந்த கிளி ஜோசியக்காரர் வந்தாலே எல்லோரும் கதவை சாத்திக்கிறாங்க?
மகா: அவர் எல்லோரும் பயந்து சாகுறமாதிரி ‘கிலி' ஜோசியம் சொல்லுவாராம் அதான்....

$கமலா: கல்யாணம் வேண்டாம்னு சொன்ன நீ உடனே கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொல்றியே எப்படி?
விமலா: உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கம்மியா இருக்காம். டாக்டர் சத்தானதா சமைச்சு சாப்பிடச் சொன்னார். அதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன்....

& பெண்: டாக்டர் என்னோட கணவர் தினமும் தூக்கத்தில என்னைய திட்டுறாரு.
டாக்டர்: முழிச்சிட்டு இருக்கிறப்ப செய்ய முடியாததை
தூங்கும்போதாவது செய்யட்டுமே விடுங்க !..

&டாக்டர் : இன்னையில இருந்து உங்களுக்கு புது சிகிச்சையை அறிமுகம் செய்யப்போறோம்.
நோயாளி : புது சிகிச்சை இருக்கட்டும் டாக்டர். முதல்ல அந்த புது நர்ஸை அறிமுகப்படுத்துங்க !..

&பப்பு - அப்பா, உங்களால இருட்டுல கையெழுத்துப் போட முடியாதுன்னு சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்க.
அப்பா - யார் சொன்னா, எப்படிப்பட்ட அமாவாசை இருட்டிலேயும் சூப்பரா கையெழுத்துப் போடுவேன் தெரியுமா.. எங்க போடனும் சொல்லு..
பப்பு - என்னோட பிராகரஸ் ரிப்போர்ட்ல தான்...!

&நோயாளி : ஆபரேசனுக்கு முன்னாடி டாக்டர் ஏன் நெத்தியில கோடு போட்டார்?
நர்ஸ் : டாக்டர் எந்த வேலை செஞ்சாலும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிப்பார் அதான்....

&ஒருவர் : அந்த டாக்டர் ஆபரேசன் பண்றப்ப கூட மயக்க மருந்து யூஸ் பண்ணமாட்டார்.
மற்றவர் : பரவாயில்லையே !
ஒருவர் : அட நீ வேற ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடியே பீஸ் எவ்வளவுன்னு சொல்லிடுவாரு அதுலையே நோயாளி மயங்கிடுவாங்க....

&மச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்!!!??.........

நானா ....எப்படிடா??!!....

இப்பவோ......அப்பவோன்னு இருந்த என் மாமனார்கிட்ட நீ எழுதின ஒரு ஜோக்க படிச்சு காட்டினேண்டா......அவ்வளவுதான் பொட்டுன்னு போயி சேர்ந்துட்டாருடா.....அப்புறம் அவருடைய சொத்தெல்லாம் எனக்கு வந்துடுச்சில்ல??!!!.

&கட்சித் தொண்டர்கள்கிட்டே ‘மனு’ வாங்கிய
தலைவர், ஏன் கோபப்பட்டாராம்?

&யாரோ ஒரு தொண்டர், பசங்களோட வீட்டு பாடத்தை செய்து கொடுக்க சொல்லி மனுவாக கொடுத்துட்டாராம்…அதான்!
உன் பேரு என்னம்மா?

"சனியாத்தா"

உன் புருஷன் பேரு என்னம்மா?

"சனியப்பன்"

உன் பெரிய பையன் பேரு?

"பாத சனி"

உன் சின்ன பையன் பேரு?

"அஷ்ட சனி"

உன் ஊரு பேரு?

"சனியாசிகுப்பம்"

உன் புருஷன் என்ன வேலை செய்கிறார்?

"சனிஸ்வரர் கோயில் வாசலில் சம்சா விற்கிறார்"!!!!!!!??......

சென்சஸ் எடுப்பவர் : அட... ச்சே...ராசி பலன்லே ..ஏழரை ஆரம்பம்னு போட்ருந்தான்...நான் நம்பலை....ஆரமபிசிடுச்சுடா..சாமி...

&ஒரு பேருந்து விபத்து!
பயணிகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தனர். கைகால்கள் இழந்தவர்களின் அலறல்.

"கண்டக்டர் என்னப்பா ஆனான்?"

பரபரப்போடு கண்டக்டரை அக்கறையோடு தேடிக்கொண்டிருந்தார் ஒருவர்.
"பாவம், கண்டக்டர் இவருக்கு ரொம்ப பழக்கமான ஆள் போலிருக்கு!" என்று நினைத்த சிலர், சற்று தொலைவில் ஒரு மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கண்டக்டரை அவருக்கு சுட்டிக்காட்டினார்கள்.

பரபரப்போடு அவரை நோக்கி ஓடினார் அந்த ஆசாமி.
உடைந்துபோய் ரத்தம் வழிந்துகொண்டிருந்த தன் மூக்கைப் பொத்தியவாறு உட்கார்ந்திருந்த கண்டக்டரை நெருங்கினார் அவர்.

"என்னப்பா...இங்கேயா இருக்கறே.....ஆனது ஆயிப்போச்சு...நடக்கவேண்டியதைப் பார்க்கணுமுல்ல....எனக்கு வரவேண்டிய சில்லறை பாக்கி 15ரூபா அம்பது காசைக் குடுத்துடுப்பா!.....நான் வேற பஸ்சுல போய்க்கறேன்!"

&என்னதான் ரகசியமோ இதயத்திலே...
நினைத்தால் எனக்கே சிரிப்புவரும் சமயத்திலே

&விழியிலே மணி விழியினில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களின் பொன்னும் மின்னும்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
ம்ஹும்.. ம்ஹும்..:
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீயும் ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்

&கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாம் அதிசயம் ஆனந்தம் ..காற்றினிலே வரும் கீதம்....

No comments:

FREE JOBS EARN FROM HOME