FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Monday, March 25, 2013

"பாப்பா பாட்டு பாடு" என் அழைக்க.... டி.ஆர்.பாப்பாவின்....

சிந்துபைரவி ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான, சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல் தமிழர்களின் மனதில் வாழ்துகொண்டிருக்கும் ...இன்றைய இளையர்களும் கூட ரசித்து கேட்கும் பாடல். http://youtu.be/eoldjJS1OWI
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 15, 2004, பழம்பெரும் திரைப்பட, மெல்லிசை இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மாரடைப்பால் காலமானார். அவருக்குவயது 81.

சிறுவயது முதல் பாடல்களைப் பாடியபடி வளைய வந்த இவரை பார்க்கும் குடும்ப நண்பர்கள் அனைவரும் "பாப்பா பாட்டு பாடு" என் அழைக்க.... பின்னாளில் அதுவே இவருக்கு பிடித்த புனைப் பெயராக, அனைவராலும் அழைக்கப்பட்ட சிறந்த வெள்ளித்திரை மற்றும் AIR-வானொலி நிலைய இசைஅமைப்பாளர் என்ற பெயர்பெற்ற, சிவசங்கரன் என்ற இயற்பெயர் கொண்ட டி.ஆர்.பாப்பா அவர்கள் 1923ம் ஆண்டு பிறந்தவர். தனது தந்தை ராதாகிருஷ்ண பிள்ளை மற்றும் கும்பகோணம் வடிவேல் பிள்ளை ஆகியோரிடம் இசை கற்ற பாப்பா அவர்கள் 1965ம் ஆண்டு திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர்இசையமைத்துள்ளார்.
சிந்துபைரவி ராகத்தில் அவர் இசையமைத்த சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல்தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் இன்றும் கூட ஒலித்துக் கொண்டுள்ளது.

இவரது இரவும் பகலும் படம் மூலம்தான் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று புகழப்பட்ட ஜெய்சங்கர்திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். டி.ஆர்.பாப்பாவும், சீர்காழி கோவிந்தராஜனும் சேர்ந்து புகழ் பெற்ற பலமெல்லிசைப் பாடல்களை கொடுத்துள்ளனர்.

சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான அபிராமி அந்தாதி பாடல் கேசட் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. திமுக தலைவர் கலைஞ்சர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் உருவான பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் பாப்பா.
டி.ஆர்.பாப்பா, அவர்களின் இசையமைப்பில் TMS அவர்கள் பாடி உருவான இரவும் பகலும் படப் பாடல் இது
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
காதல் என்பது தேன் கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
காதல் என்பது தேன் கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
அது கனவாய் போனால் மனம் வாடும்
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
உயிருக்கு உருவம் கிடையாது
அந்த உயிரின்றி எதுவும் நடவாது
உயிருக்கு உருவம் கிடையாது
அந்த உயிரின்றி எதுவும் நடவாது
உருவத்தில் உண்மை தெரியாது
என்றும் உலகத்தில் நேர்மை அழியாது
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
சிந்துபைரவி ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான, சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல் தமிழர்களின் மனதில் வாழ்துகொண்டிருக்கும் ...இன்றைய இளையர்களும் கூட ரசித்து கேட்கும் பாடல். http://youtu.be/eoldjJS1OWI

No comments:

FREE JOBS EARN FROM HOME