FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, April 25, 2013

பாட்டியும் பேத்தியும்

மசித்து பிசைந்த "மம்மு" சாதம்
எடுத்து ஊட்ட ஒரு தேக்கரண்டி போதும்
கட்டில் அருகே வந்து,
கண்டிப்பும் கட்டளையும் ஊட்டிவிட,
கண்களில் கண்ணீர் வரக்கண்டு...
காரம்தான் உரைத்ததோ என்று
ஒரு குவளை தண்ணீர் பருகத்தந்து
"சொன்ன பேச்சை கேட்கவேண்டும்
சமுத்தாக சாப்பிடவேண்டும்...என்ன? "
என அதிகார பரிமாறல்களோடு
பழுத்த பழத்திற்கு ஊட்டிவிடும் பிஞ்சுக் கைகள்
பாட்டியும் பேத்தியும்....... (கோகி)

Saturday, April 20, 2013

"கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்"

"கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" இது பழமொழி, தமிழ் திரைப்பட வரலாற்றில் கழுதையை மையமாக வைத்து " அக்ரஹாரத்தில் கழுதை மற்றும் பஞ்ச கல்யாணி என இரண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு எதிர்பார்த்த யோகம் கிடைக்காமல் போனது, கழுதைகளுள் பல வகைகள் உண்டு. அதில் அபூர்வ வகையைச் சார்ந்த கழுதைதான் வெள்ளை மூக்கு கானகக் கழுதை. இந்த வகை "வெள்ளை மூக்கு கானக கழுதைகள்" மிக விரைவாக ஓடிச்செல்லும் விலங்குகளில் இதுவும் ஒன்று. இந்த கழுதையின் சிறப்பம்சமே இதன் வேகம் தான். மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடையது. இவை எச்சரிக்கை உணர்வும், புத்திசாலித்தனமும் மிகுந்தவை. 

பதினொன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வசித்த சித்தர் ஒருவர் இவ்வகை கழுதைகளை ஆராய்ந்தார், "எப்படி இந்த வகை கழுதைகளுக்கு அத்தனை சக்தி கிடைக்கிறது என்று அந்த வகை கழுதைகள் மேயும் இடங்களுக்கு சென்று அவைகள் உண்ணும் தாவர புல் வகை மூலிகைகளை சேகரித்து அதன் மூலம் பல பலசாலிகளான வீரர்களை உருவாக்கியதாக ஒரு செய்தி உண்டு. அவர் கூறியதாக பிறரால் எழுதிய குறிப்புகளில் அப்படி அவர் காட்டில் தேடியபோது "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" என்கிற கூற்று பிறகு பழமொழியாக திரித்து பேசப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. கானக கழுதையில் பல வகைகள் உள்ளன. லடாக் பகுதியில் காணப்படும் வகை, கட்ச் பகுதியில் உள்ளதைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். அவ்வாறே காஷ்மீரில் காண்பது பிரிதொருவகை. இன்று இவ்வினம் ரான் பகுதியில் சுமார் ஐயாயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான ஒரு சரணாலயத்தில் மட்டுமே காணப்படுகிறது. நமது பொதி சுமக்கும் கழுதையின் மூதாதையர் இனம் தான் இந்த ஒயில்ட் ஆஸ் என்னும் கானக கழுதை. குறிப்பாக இந்த வகை வெள்ளை மூக்கு கானகக் கழுதை உருவத்தில் சற்று பெரியது. பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் உண்டு. முற்காலத்தில் நமது உள்ளூர் கழுதைகள் துணி மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் போதே இந்த கானகக் கழுதைகள் வடமேற்கு இந்தியப் பகுதியில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன என்று கூறப்பட்டுகிறது.

" எல்லாம் சரிங்க கடவுள் கழுதைக்கு ஏன் தலையில் கொம்பை படைக்கவில்லை?" 

அதற்க்கு மாறாகத்தான் கடவுள் கழுதைக்கு காலில் பலத்தைக் கொடுத்திருக்கிறார்,..... உதய் வாங்கியவர்களை கேட்டுப்பாருங்கள் அதன் பலம் என்ன வென்று தெரியும்.

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து....

சிங்கப்பூரில் தமிழில் சூப்பர் ஹிட் தீபாவளிப்பாடல் இது

{சிங்கப்பூரில் தமிழில் சூப்பர் ஹிட் தீபாவளிப்பாடல் இது}
தீபாவளி வந்தது ....
தோம் தோம் தனன தோம், தனன தோம்
தோம் தோம் தனன தோம், தனன தோம்
தீபாவளி வந்தது ....
...மனதினில் பொங்கும் புது உணர்ச்சி
எங்கும் நிறைந்தின்பம் தரும் மகிழ்ச்சி....
நன்றி...மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்களுடன்.. கோகி. http://youtu.be/OjM3JiIHwUg

செய்துவிடு இல்லையென்றால் இயலாமல் செத்துவிடுவாய் .......

செய்துவிடு இல்லையென்றால் இயலாமல் செத்துவிடுவாய் .......
Solomon Grundy,
Born on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
மனிதனே உன்னுடைய இறுதிக்காலம் அது மிக மிக குறுகியது ஒரு விழாழக்கிழமை அவனது உடல் நிலை சரியில்லாமல் போனது அதற்க்கு அடுத்தநாளே வெள்ளிக்கிழமை மிகவும் மோசமானதால், அடுத்த நாள் சனிக்கிழமை அன்று செத்துப்போனான் அதற்க்கு அடுத்தநாள் ஞாயிறு அன்றே புதைத்துவிட்டார்கள் ஆனால் மனிதனின் இளமைக்காலம் அந்த ஒரு திங்களில் பிறந்தான், அதன் அடுத்த வந்த வருடத்தின் ஒரு செவ்வாய்க்கிழமையில் பெயர் வைக்கப்பட்டு, நீண்ட பல வருடங்களுக்குப்பிறகு ஒரு புதன் கிழமை அவனுக்கு திருமணமானது ஆகா மனிதனே உன்னுடைய இளமைக்காலம் அது நீண்டது அப்போதே உன்னுடைய கடமைகளை செய்துவிடு ....இல்லையென்றால் இயலாமல் செத்துவிடுவாய் .......http://youtu.be/OHEKwGe1Xqg 

இயந்திரக்கோளாறு காரணமாக அந்த வானூர்தி நடுக்கடலில் விழுந்தது.....

தமிழகத்தில் அவள் ஒரு தமிழ் பேராசிரியையாக பணியாற்றியபோதும், அவளது படைப்புக்கள் அவளது பெயரை பறைசாற்றிக்கொண்டிருந்தன. அவளது பெயர் தமிழ் பத்திரிக்கைகளிலும், தமிழ் அவை/சபை மற்றும் தமிழ் மன்றங்களிலும், அரசிதழ்களிலும் (அரசின் மொழிபெயர்ப்பாளர்) சிறந்த மொழிப்பற்றுடயவர் என்று குறிப்பிட்டிருந்தது குறித்து அவளுக்கு மிகுந்த பெருமிதமும்கூட.

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் மற்றொரு நாட்டிலிருந்து வந்த அன்பு அழைப்பினை ஏற்று அங்கு உரையாட வான்வழிப்பயணம் மேற்க்கொண்டிருந்தபோதுதான் அந்த துயர சம்பவம் நடந்தேறியது. இயந்திரக்கோளாறு காரணமாக அந்த வானூர்தி நடுக்கடலில் விழுந்தது.....


மீட்பு நடவடிக்கயிளிருந்து விடுபட்டு தனது உற்றார் உறவினர்களின் வட்டத்திற்குள் இருந்த அவள் மௌனமாகவே இருந்தால், மிடுக்காக தோற்றமளிக்கும் அவள் அப்போது மிகவும் சோர்வுடன் காணப்பட்டால், அந்த முப்பது நாட்கள் அவளின் மனதில் மிகப்பெரிய மாற்றங்களை எர்ப்படுத்தியிருந்தது. சுற்றியிருந்த பத்திரிக்கை கூட்டமும் அவர்களின் புகைப்பட கருவிகள் கண்சிமிட்டியபடி இருந்தது. வாய்திறந்தால் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அவள் அன்று மௌனமாகவே இருந்தால், அந்த மௌனமான மொழிதான் தன்னைக் காப்பாற்றியது என்பது இவர்களுக்கு தெரிந்திருந்தால் இப்படி கேள்வி கேட்க்கமாட்டார்கள்.
வாழ்க்கைப்பயனத்திர்க்கு மொழி அவசியம் என்றாலும் மொழிதான் வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். இனி இதை உரியமுறையில் அனைவர்க்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற என்னாத்தில் தனது சுற்றமும் நட்பும் சூழ, இல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.

Friday, April 19, 2013

“வயோதிகம்" உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா

“வயோதிகம்" உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை” இந்த வரிகளை கேட்கும்போது தெம்பாகத்தான் இருக்கிறது ஆனால் யதார்த்தம் என்ன? முதியவர்களுக்குரிய தேவைகள் சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா? இயந்திரமயமாகிய வாழ்க்கை ஓட்டத்தில் இளையவர்கள் சிக்கியதால் முதியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரமாக இருக்காதே...http://youtu.be/vvfLzYCmfug

ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை.

உதவி பெற்றதற்கு நன்றி செலுத்துவது ஒரு சிறந்த கடமை. (முகநூளில் ரசித்த பகுதிக்கு ஒரு "LIKE-லைக்" போட்டு விருப்பம் தெரிவிப்பது போல)..... ஒரு சிறு புல்லைக் கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு, இத்தனை உணவும், உடையும் மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை. இவ்வாறு நன்றி கூறும் அடையாளமாகவே, நாம் உண்பதை அவனுக்கு முன் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். அவனுக்குக் காட்டி விட்டுப் பிறகு நாம் தான் உண்ணப் போகிறோம். நாம் பலவிதமான ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு அருள் செய்யும் ஆண்டவனுக்குத் திருவாபரணங்களையும், வஸ்திரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எல்லாருமே இவ்விதம் வீட்டில் பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக கோயில்கள் எழுந்தன. ஆதியில் மகரிஷிகள் மந்திர சக்தியால் எங்கும் நிறைந்த பரம்பொருளை சில விக்ரஹங்களில் விசேஷ சாந்நித்தியம் கொள்ளச்செய்தனர். அப்படிப்பட்ட மூர்த்திகளைச் சுற்றிக் கோயில்கள் எழுப்பப் பட்டுள்ளன. வீட்டில் பூஜை செய்கிறவர் உள்பட அனைவரும் கோயிலுக்குப் போவது என்று கட்டுப்பாடாகப் பழக்கம் வைத்துக் கொண்டால் தான் அங்கு பூஜைகள் குறைவின்றி நடக்கும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் புண்ணிய மொழி வழங்கும் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் கோயில் வழிபாடு நடக்கச் செய்ய வேண்டும். இதுதான் நம் முதல் கடமை. -நன்றி தினமலர் ஆன்மீக வகுப்பறை.
ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும், நம்பினோர்க்கு அருளும் முருகா... நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்.... அதை நான் கண்டு மகிழவேண்டும்....
பாடலை கண்ணதாசன் அவர்கள் எழுத கே. வி. மகாதேவன் அவர்கள் இசை அமைத்த "தேவரின் - துணைவன்" படத்திற்காக... http://youtu.be/zPsC1dtyGe

நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க

இன்று பிறந்தநாள், பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்.....HAPPY BIRTH DAY 2 U.... Wish you many happy returns of the day ... மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று நீங்களும், உங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்ப நபர்களும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... "நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே, நூறாண்டு காலம் வாழ்க "... http://youtu.be/i-jlk4dEFLY
பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்யும் போது, நூறாண்டு காலம் வாழ்க! என்று சொல்லி வாழ்த்துவர். இதற்குள் பெரிய அர்த்தம் புதைந்து கிடக்கிறது. மனிதர்களின் சராசரி வாழ்க்கையில் மனைவி, மக்களின் முன்னேற்றத்திலேயே 60 வயது வாழ்க்கை கழிந்து விடுகிறது. இந்த வயதில், உலக பந்தத்தில் இருந்து விடுபட்டு விட வேண்டும். எனவே இச்சமயத்தில், சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்துகிறார்கள். இதன்பிறகு கணவன், மனைவி இருவரும் பொறுப்புகளை தங்களுக்கு அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். எண்பது வயதுக்குள் இவர்கள் பக்குவமுதிர்ச்சியும் பெற்று விடுவார்கள். இதன் பிறகு நற்கதி அடைய கடவுள் இவர்களுக்கு வழிகாட்டுவார். எனவே சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். தொண்ணூறு வயது வரை வாழ்ந்தால் அவர்களைப் பிடித்த நவக்கிரக தோஷங்கள் அகன்று விடும் என்பார்கள். நூறு வயது வரை வாழும் வாய்ப்பு கிடைத்தால், கடவுளுடன் மனிதன் ஒன்றிப் போவான். சாப்பிடுவது, உறங்குவது, உணர்வது, பார்ப்பது, நடப்பது எல்லாமே இறைவனுக்குள் ஒடுங்கிப் போகும். அதாவது இவற்றை செய்யும் ஐம்புலன்களும் அடங்கிப் போகும். இப்படி இறைவனுக்குள் அடங்கிப் போகிறவர்கள் மீண்டும் பிறவியெடுக்கமாட்டார்கள் என்பது ஐதீகம். இதன் அடிப்படையில் தான் நூறாண்டு காலம் வாழ்க! என்று சொல்லி வாழ்த்துகிறார்கள் -நன்றி தினமலர் ஆன்மீக வகுப்பறை.

தை பூசம் அன்று பெங்களூர் ரமணி அம்மாள்

தை பூசம் அன்று பெங்களூர் ரமணி அம்மாள் அவர்களின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது, அதைக்கேட்ட ஒரு குழந்தை பாடுபவர் ஒளவை பாட்டி போன்று இருப்பவர்தானே என்று கேட்டனர். நான் அவரில்லை என்று கூறியதும்.... அவர் எப்படி இருப்பார் என்று கேட்டனர், உடனே இந்த திரைப் பாடல் ஞாபகம் வரவே, எனது கைப்பேசியில் இந்த பாடலை ஓடவிட்டு இதோ பாடிக்கொண்டிருப்பவர்தான் பெங்களூர் ரமணி அம்மாள் என்றேன்."பாடல் -குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்"  எதிர் வரும் சந்ததியினருக்கு சில திரைப்பாடல்கள் சரித்திர சான்றாக உள்ளது மகிழ்ச்சியான செய்தி. http://youtu.be/Vrv0Gv463Uw

குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள்

உங்களின் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள். காரணம் உயர் கல்வி படிப்பிற்கு தேவையான தொகை கிடைக்காதபோது நீண்ட நாட்கள் வங்கி கணக்கை வைத்திருந்த தகுதியின் அடிப்படையில் உங்களின் மகள்/மகனுக்கு அதே வங்கியில் உடனே கல்விக்கடன் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது 18 வயதிற்கு பிறகு உங்களின் மகள்/மகன் படிப்பு செலவுக்கு உங்களை சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை, அவர்களாகவே கல்விக்கடன் பெற்று அவர்களின் விருப்பப்படி படிக்க முடியும். அவர்களின் காலில் அவர்களே நிலைத்து நிற்கும் பொறுப்புள்ளவர்களாக உங்கள் பிள்ளைகளும் இப்படிப்பாடுவார்கள் "எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே". http://youtu.be/geYyN5_QYKg

குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெரும் கல்வி


#கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... மேல்நிலை படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்கவைகலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத்தொடங்கிவிடுகின்றனர். தற்போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவுகள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு

தீர்கமான முடிவோ சிந்தனை இல்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழலில்தான்..தற்போதைய கல்விக் கண்காட்சியிலும, மற்றும் பல நிறுவனங்களின் [Campus interview] கல்லூரியில் நேர்காணலின்போதும் அனைத்து மாணவர்களுக்கும் இதை எதிர்கொள்வது எப்படி என்பதை கூறிவருகிறேன். குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெரும் கல்வியாக கீழ்வரும் 5 பாடப்பிரிவுகள் உள்ளது குறிப்பிடத்தக...்கது.

1. வணிகவியல் (Commerce) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது-மேற்கொண்டு வேலையில் சம்பாதித்துக்கொண்டே படித்துக்கொள்ளலாம்) 5years course of BCOM-BL, or FICA, BCS...போன்றவை....

2. மருத்துவ செவிலியர் (Nursing) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது அல்லது பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும்)

3. கணினிக்கல்வி (Computer) (பல்வேறு விதமான கணினி சார்ந்த பட்டய மற்றும் உயர் பட்டப் படிப்புகள் )

4. ஆசிரியர் பயிற்சி.(Teachers Training)

5. சட்டக்கல்வி (Law) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் 5 ஆண்டு சட்டக் கல்வி அல்லது ஒரு சிறு சட்டம் சார்ந்த பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும், தனியார் பணியிடங்களில் அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்திருக்கும் கல்வி இது)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு http://youtu.be/qvCDPf1_Qeg

"EXCHANGE OFFER -ஒரு உண்மை உயிர்த்தெழுகிறது"

"EXCHANGE OFFER -ஒரு உண்மை உயிர்த்தெழுகிறது" பொறியியல் கவுன்சிலிங் முடித்து தான் ஆசைப்பட்ட கல்லூரியை தேர்வு செய்த திருப்தியுடன் வெளியே வந்தாள் கஸ்தூரி. ஆட்டோ ஓட்டி தன் மகளை பொறியியல் கல்லூரி வரைக்கும் கொண்...டு வந்த திருப்தியுடன் கந்தசாமியும் இருந்தார். ஆனாலும் இன்னும் நான்கு வருடங்களுக்கு செலவு செய்ய வேண்டிய தொகை ரொம்பவே பயமுறுத்தத்தான் செய்தது. கவுன்சிலிங் நடந்த ஹாலை விட்டு வெளியே நடந்து வந்து கொண்டிருந்த போது "எக்ஸ்கியூஸ்மீ" என்ற குரல் கேட்க இருவரும் திரும்பினர். அழைத்தது ஒரு பெண். "உங்களிடம் கொஞ்சம் பேசலாமா" என்று கேட்டுக்கொண்டே அருகிலிருந்த காருக்கு அருகில் அழைத்தாள். கந்தசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கஸ்தூரியை அழைத்துக் கொண்டு அருகில் சென்றார். தன்னை மதுமதி என்று அறிமுகம் செய்து கொண்ட அந்த பெண்மணி கந்தசாமியின் முழு பயொடேட்டாவையும் இவரிடமே சொல்ல இவருக்கு தூக்கி வாரிப் போட்டது.... ஆனாலும் அந்த பெண்மணி சொன்ன டீல் கந்தசாமிக்கு கொஞ்சம் கிறங்கடிக்கத்தான் செய்தது. கஸ்தூரி தேர்வு செய்திருந்த முதல் தர வரிசை கல்லூரியின் பிரதிநிதியான அந்த பெண்மணி சொன்ன டீல் என்ன தெரியுமா? தங்களுக்கு சொந்தமான புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த இன்னொரு கல்லூரியில் சேரும்படியும் அதற்கு பிரதிபலனாக நான்கு வருடங்களுக்கான மொத்த கல்விக் கட்டணத்தையும் கல்லூரியே ஏற்றுக் கொள்வதுடன் ஒரு கணிசமான தொகையும் கையில் தருவதாக சொன்னார்.

இங்கே விஷயத்துக்கு வருவோம். கஸ்தூரி முதலில் தேர்வு செய்த கல்லூரியில் அவள் தேர்வு செய்த பிரிவின் விலை சுமார் 12 லட்சம். அதனை அவள் சேராமல் விட்டு விட்டால் அந்த இடம் கல்லூரி கோட்டாவுக்கே போய் சேர்ந்து விடும். பின் அவர்கள் அதனை கவுன்சிலிங் முடிந்தவுடன் காலி இடமாக காட்டி இன்னும் அதிக விலைக்கு விற்று விடுவார்கள். ஆனால் இந்த நான்கு வருடங்களில் கஸ்தூரிக்கு அவர்கள் கட்டும் கட்டணம் சுமார் 4 லட்சம் என்றும் கையில் கொடுத்த தொகை 2லட்சம் என்றே வைத்துக் கொண்டாலும் கல்லூரி முதலாளிக்கு கிடைத்த லாபம் 7லட்சம் மற்றும் அதற்கு மேல். கஸ்தூரியும் ஒரு வழியாக எந்த செலவும் இல்லாமல் இந்த ஆண்டு இறுதியாண்டினை படித்துக்கொண்டிருக்கிறாள். பல்கலைக் கழக அளவில் தரவரிசையிலும் இடம் பிடித்திருக்கிறாள். இந்த EXCHANGE OFFER சூப்பரா இருக்கில்ல...........சட்டம் போட்டு தடுக்குர கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது......திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது........

நீங்கள் 6அடுக்கு அல்லது அதற்கும் மேற்ப்பட்ட, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் என்றால்

நீங்கள் 6அடுக்கு அல்லது அதற்கும் மேற்ப்பட்ட, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் என்றால் இது உங்களுக்கு மிகவும் பயன்படும். திடீரென்று அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவருக்கு மருத்துவ மற்றும் வேறுவித அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் மின் தூக்கியை பயன்படுத்தும்போது இடையில் பல இடங்கள் நின்று போகுமாறு ஏற்க்கனவே மின்தூக்கி விசைப்பலகையில் (LIFT SWITCH) சமிக்கைகள் தரப்பட்டிருந்தால் அவற்றை நீக்க, விசைப்பலகையின் ஏதாவது இரண்டு பொத்தான்களை உதாரணத்திற்கு என் 4 மற்றும் 6 ஆகிய பொத்தான்களை அழுத்திக்கொண்டு மூன்றாவதாக வேறு ஒரு என்னை, 2 அழுத்தினால் ரீசெட்(RESET) என்கிற முறையில் அனைத்து தளங்களிலும் நிற்கவேண்டிய சமிக்கைகள் நீக்கப்பட்டுவிடும். உடனே நீங்கள் செல்லவேண்டிய மாடி-குடியிருப்பு தளத்தின் என்னை மட்டும் அழுத்தினால் அந்த இடத்திற்கு மட்டும் மின்தூக்கி இயங்கும் . இதை அவசர கால உதவிக்குமட்டும் பயன்படுத்துங்கள் ....

அரசர் மெச்சிய பரிசு!


அரசர் மெச்சிய பரிசு!

அரசருக்கு பிறந்தநாள் என்பதால் மக்களிடையே பெரும் சந்தோஷம் நிரம்பியிருந்தது. அரசர் அளித்த அறுசுவை உணவை வயிறார உண்டு, அரசரை வாழ்த்த மக்கள் காத்திருந் தார்கள். அரசருக்குப் பரிசளிக்க தங்களால் இயன்ற பொருட்களை கொண்டு வந்திருந்தார்கள்.
அங்கு அரசர் வந்தார்...

... ஒவ்வொருவராக பரிசுகளை அளித்து வணங்கிச் சென்றனர். பிறகு அரசர் அவர்கள் அளித்த பரிசு பொருட்களை கண்ட பிறகு, மக்களைப் பார்த்து... "நீங்கள் அன்புடன் எனக்கு பரிசுகளை அளித்து கௌரவித்தீர்கள். நன்றி... அவற்றில் மிக மிகச் சிறந்த பரிசு ஒன்றைக் கண்டேன்" என்று நிறுத்தினார். இதைக் கேட்ட மக்களுக்கு ஆவலாக இருந்தது. ‘அந்த உயர்ந்த பரிசு எது? யார் அளித்திருப்பார்கள்?’ தங்களுக்குள் முணுமுணுத்தார்கள்.

"நான் கொடுத்த மாணிக்கக்கல்லாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் உலகில் அதைப்போல் வேறொன்றைக் காணமுடியாது" என்றான் மாணிக்க வியாபாரி.

இதைக் கேட்ட வைர வணிகரோ,"உலகின் தலைசிறந்த வைரம். அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. எனவே என்னுடையதுதான் சிறந்த பரிசாக இருக்க முடியும்" என்று கூறினார்.

அதற்கு நெசவாளி... "நான் அரும்பாடுபட்டு நெய்து அளித்த பட்டாடைகள் மேலை நாடுகளில் கூட கிடைக்காது. அதைத்தான் மன்னர் சொல்லி இருப்பார்" என்றார். இவர்கள் பேசுவதைக் கேட்ட பூக்காரி... "ஆடையோ, ஆபரணங்களோ அரசரைக் கவர்ந்திருக்க முடியாது. நான் புத்தம் புதிய மலர்களை வண்ணமிகு மாலையாக்கி அரசருக்கு அளித்தேன். வாசம் மிகுந்த மென்மையான மலர் மாலையை விடவும் சிறந்தது உண்டோ? இதைத்தான் அவர் குறிப்பிட்டிருக் கிறார்" என்றாள்.

இப்படி ஒருவருக்கொருவர் தாங்கள் அளித்த பரிசைத்தான் அரசர் மெச்சியிருக்கிறார் என்று பேசிக்கொண்டனர். இந்த சலசலப்பைக் கேட்ட பிறகு அரசரே பதில் கூற ஆரம்பித்தார். "எல்லா பரிசுகளும் சிறந்தவையே. இதில் என்னை மிகவும் கவர்ந்த பரிசு, காலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடியது. எல்லோருக்கும் பலன் தரக்கூடியது. அதுதான் இது..."என்று ஒரு சிறிய மரக் கன்றைக் காட்டினார்.

"பொன்னையும் பொருளையும் சேமிப்பதைவிட உயிருள்ள மரங்களையும் செடிகளையும் சேமிப்பதே புத்திசாலித்தனம்" என்று கூறி மரக்கன்றை பரிசளித்த விவசா யியை மெச்சி, அரசர் பரிசளித்துப் பாராட்டினார்.

"மாணவர்களுக்கு தன்நம்பிக்கையையும் சேர்த்து கற்ப்பிக்கும் சிறப்பான கல்வி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்"


"மாணவர்களுக்கு தன்நம்பிக்கையையும் சேர்த்து கற்ப்பிக்கும் சிறப்பான கல்வி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்" இன்றைய பார்வை.....சிங்கப்பூரிலிருந்து கோகி ....உலகளாவிய தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவிற்கு, ஏப்பரல் மாதம் முழுதும் சிங்கப்பூரில் தமிழ் மாதமாக கொண்டாடப்படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல... தினமும் பல தமிழ் மொழி இலக்கியம் சார்ந்த நிகழ்சிகள்...மாதம் முழுவதும் கொண்டாடப்படுவது ஒவொரு தமிழரும் பெருமைப்படக்கூடிய ஒன்று, நேற்றைய நிகச்சி ஒன்றில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, வலர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், தங்கமீன் வாசகர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் திரு ஞாநி அவர்களின் "திரைக்கதைப் பயிலரங்கப் பயிற்சி ஒன்றை சிங்கப்பூர் தமிழர்களுக்காக மிக மிகச்சிறப்பாக சிங்கப்பூரில் முன் எப்போதும் இல்லாத அளவில் நடைபெற்றது. ஆச்சரியம் என்னவென்றால் !!! இந்தப்பயிலரங்...கில் பள்ளிக்கூட மாணவ மாணவிகள் பெருமளவு பங்கேற்றது குறிப்பிடத்தகுந்த ஒன்று, உலகில் வேறெங்கும் காணாத ஒரு அதிசய ஆனந்தத்தை நான் அங்கே கண்டேன், பயிலரக்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்கள் வந்திருந்ததுடன் அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவருக்காக பயிலரங்கில் கலந்துகொண்டது, கற்பனைக்கும் எட்டாத ஒரு நிகழ்ச்சியாக எனக்கு தோன்றியது. சிங்கப்பூரில் ஆசிரியர்களும் ஒவ் ஒரு மாணவரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் தந்து அவர்களை ஊக்குவிப்பதைப்பார்க்கும்போது, சிங்கப்பூரின் கல்விக்கொள்கைகளையும், அங்கு பயிலும் மாணவர்களையும், தன்னலமற்ற ஆசிரியர்களையும் நினைத்துப்பார்க்கையில்... ஒவொரு தமிழரும் பாராட்டி பெருமைப்படக்கூடிய ஒன்றாக எனக்கு தோன்றுகிறது. http://youtu.be/VMmNLG7IvEE

என் வீட்டு தோட்டத்தில் காய்த்த ஒரே ஒரு வேண்டைக்காயாக இருந்தாலும் அதில் செய்யும் சாம்பாரின் மனமும் சுவையும் வேறு எந்த சாம்பாரிலும் கிடைப்பதில்லை,

இன்றைய பார்வை:- உலகளாவிய தாவரவியல் பூங்காவில், சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவும் "சிறந்த தாவரவியல் பூங்கா" என்கிற சிறப்பு மதிப்பை பெறுகிறது. இதை மேலும் சிறப்படயசெய்வது சிங்கப்பூரின் ஒவொரு குடிமக்களின் கடமையாகும். என்னுடைய தாத்தா (அப்பப்பா).... காலம் சென்ற திரு எஸ் .கிருஷ்ணா சுவாமி ஐயர் அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவின் உயர் அதிகாரியாக
Ooty (Nilgiri hills) Botanical garden superintendent இருந்தபோது (1925) பிரிடிஷ் அரசாங்க உதவியுடன் மலர் கண்காட்சியை மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டு உலக அளவில் பேசப்பட்டது. இன்றளவும் ஒவொரு ஆண்டும் நடக்கும் மலர் கண்காட்சிக்கு எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கென்று சிறப்பு அழைப்பு வருகிறது. என்னுடைய பாட்டி (அப்பம்மா) 1979 வரை தாத்தாவின் அரசாங்க ஓய்வூதியத்தைப் பெற்றுவந்தார். இயற்கையை நேசிக்க நாம் ஒவொரு நாளும் ஒரு சில மணி நேரமாவது ஒதுக்க வேண்டும், என் வீட்டு தோட்டத்தில் காய்த்த ஒரே ஒரு வேண்டைக்காயாக இருந்தாலும் அதில் செய்யும் சாம்பாரின் மனமும் சுவையும் வேறு எந்த சாம்பாரிலும் கிடைப்பதில்லை, தாவரங்களை நேசிக்க பழகுங்கள். தாவரங்கள் நமது அன்பை புரிந்துகொண்டு நம்மிடம் பேசும், அந்த உன்னதமான ஸ்பரிசத்தை உங்களாலும் உணரமுடியும். முயற்சி செய்யுங்கள் அதனால் கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காத சிறந்த மகிழ்ச்சி அது, அதை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும். http://youtu.be/cu-2yxYL06w

காக்கா பாட்டியிடமிருந்து வடையை திருடவில்லை. பாட்டிதான் தினமும் முதல் வடையை காக்கைக்கு வைப்பது வழக்கம்

காக்கா பாட்டியிடமிருந்து வடையை திருடவில்லை. பாட்டிதான் தினமும் முதல் வடையை காக்கைக்கு வைப்பது வழக்கம் ஆகவே அந்த கதையில் திருட்டு என்பது இல்லை ஆனால் தந்திர நரிதான் ஏமாற்றுகிறது என்றும்....எனவே ஏமாறுவதுதான் தவறு என்று கதை கருத்து கூறுகிறது...... http://youtu.be/sKvIu_iS3y0

25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி

திருமண வா‌ழ்‌க்கையை எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் 25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ந்த ஊ‌ர் செ‌ய்‌தியாள‌ர் ஒருவ‌ர், அவர்களைப் பே‌ட்டி‌க் க‌ண்டு ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ல் ‌பிரசு‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர்.

... நேராக அ‌ந்த த‌ம்ப‌திக‌ளிட‌ம் செ‌ன்று, 25ஆ‌ம் ‌திருமண நாளை‌ ஒ‌ற்றுமையாக‌க் கொ‌ண்டாடுவது எ‌ன்பது பெ‌ரிய ‌விஷய‌ம். இது உ‌ங்களா‌ல் எ‌ப்படி முடி‌ந்தது. உ‌ங்களது ‌திருமண வா‌ழ்‌‌வி‌ன் வெ‌ற்‌றி ரக‌சிய‌ம் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்டா‌ர்.

இ‌ந்த கே‌ள்‌வியை கே‌ட்டது‌ம், அ‌ந்த கணவ‌ரு‌க்கு தனது பழைய தே‌னிலவு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நினைவு‌க்கு வ‌ந்தது. "நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தே‌னிலவு‌க்காக ‌ஒரு ரம்மியமான மலைப்பகுதிக்கு செ‌‌ன்றோ‌ம். அ‌ங்கு எ‌ங்களது பயண‌ம் ‌சிற‌ப்பாக அமை‌ந்தது. அ‌ப்பகு‌தியை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்க நா‌ங்க‌ள் கு‌திரை ஏ‌ற்ற‌ம் செ‌ல்வது எ‌ன்று ‌தீ‌ர...்மா‌னி‌த்தோ‌ம். அத‌ற்காக இர‌ண்டு கு‌திரைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து, இருவரு‌ம் ஒ‌வ்வொரு கு‌‌திரை‌யி‌ல் ஏ‌றி‌க் கொ‌ண்டோ‌ம். எ‌னது கு‌திரை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. ஆனா‌ல் எ‌ன் மனை‌வி செ‌ன்ற கு‌திரை ‌மிகவு‌ம் குறு‌ம்பு‌த்தனமானதாக இரு‌ந்தது. ‌திடீரென ஒரு து‌ள்ள‌லி‌ல் எ‌ன் மனை‌வியை ‌அது கீழே‌த் த‌ள்‌ளியது. அவ‌ள் ‌‌கீழே இரு‌ந்து எழு‌ந்து சுதா‌ரி‌த்து‌க் கொ‌ண்டு அ‌ந்த கு‌திரை‌யி‌ன் ‌மீது ‌மீ‌ண்டு‌ம் ஏ‌றி அம‌ர்‌ந்து கொ‌ண்டு, "இதுதா‌ன் உன‌க்கு முத‌ல் முறை" எ‌ன்று அமை‌தியாக‌க் கூ‌றினா‌ள்.‌ சி‌றிது தூர‌ம் செ‌ன்றது‌ம் ‌மீ‌ண்டு‌ம் அ‌ந்த கு‌திரை அ‌வ்வாறே செ‌ய்தது. அ‌ப்போது‌ம் எ‌ன் மனை‌வி ‌மிக அமை‌தியாக எழு‌ந்து கு‌திரை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து கொ‌ண்டு "இதுதா‌ன் உன‌க்கு இர‌ண்டா‌ம் முறை" எ‌ன்று கூ‌றியவாறு பய‌ணி‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ள்.

மூ‌ன்றா‌ம் முறையு‌ம் கு‌திரை அ‌வ்வாறு செ‌ய்தது‌ம், அவ‌ள் வேகமாக அவளது கை‌த்து‌ப்பா‌க்‌கியை எடு‌த்து அ‌ந்த கு‌திரையை சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டா‌ள்!!!

இதை‌க் க‌ண்டு அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த என‌க்கு ‌மிகவு‌‌ம் கோப‌ம் வ‌ந்து‌வி‌ட்டது. நா‌ன் அவளை ‌தி‌ட்டினே‌ன். "ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்தா‌ய்? ‌நீ எ‌ன்ன மு‌ட்டாளா? ஒரு ‌வில‌ங்கை‌க் கொ‌ன்று‌வி‌ட்டாயே? அ‌றி‌வி‌ல்லையா?" எ‌ன்று கே‌ட்டே‌ன்.

அவ‌ள் ‌மிகவு‌ம் அமைதியாக எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்து, "இதுதா‌ன் உ‌ங்களு‌க்கு முத‌ல் முறை" எ‌ன்றா‌ள். அ‌வ்வளவுதா‌ன். அத‌ன்‌பிறகு எ‌ங்களது வா‌ழ்‌க்கை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ர் கணவ‌ர். !!!

புவியின் மேற்பகுதி அதன் சுழற்சியோடு கிழக்கு நோக்கி நகர்கிறது

இன்றைய பார்வையில்(18-4-2013)-புவியின் மேற்பகுதி அதன் சுழற்சியோடு கிழக்கு நோக்கி நகர்கிறது:- பூமியின் மேற்ப்பரப்பில் அமைந்துள்ள பாரைத்தட்டுகள் நகர்கின்றன என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்ற இரண்டு வாரங்களாக உலகின் பல பகுதிகளில் நடந்த பூமி அதிர்வுகள் மேலும் அதை உறுதிபடுத்தும்படி அமைந்துள்ளது. ஆசிய கண்டத்தின் பூமத்தியரேகைக்கு மேற்பகுதி மற்றும் கீழ் பகுதி என பல பாறை அடுக்குகளால் ஆனது என்றும், இதில் எந்த ஒரு பாறை தட்டும் நகரும்போது அதனால் ஏற்ப்படும் இடைவெளியை மற்றொரு பாறை தட்டு நகர்ந்து சரிசெய்யும் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் நில அதிர்வு உணரப்பட்டதும் அடுத்த சில வாரங்களில் ஆசிய பாறைத் தட்டுகளின் கிழக்கு பகுதியான இந்தோனேசியா அல்லது மேற்கு முனையான ஆப்கனிஸ்தான் மற்றும் வளைகுடா பாரைத்தட்டுகள் பகுதியில் எதிரொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, நேற்றைய ஈரான் பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட கடுமையான நில அதிர்வும் இன்று விடியற்காலையில் ஏற்ப்பட்ட இந்தோனேசியா நில அதிர்வும் அதை உறுதிப்படுத்தின.
"உலகே மாயம் வாழ்வே மாயம்" http://youtu.be/skjJMsSCosQ

Biscuit என்கிற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அகராதியில் "பிஸ்கோத்து"

Biscuit என்கிற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அகராதியில் "பிஸ்கோத்து" என்றிருந்தது... பிஸ்கோத்து. பள்ளிகூட நாட்களில் மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ்-தின்பண்ட வகையில் Britannia little hearts biscuit முதல் பத்து இடங்களுக்குள் வந்துவிடும். என் பாட்டி கதை சொல்லும்போது அந்தக்காலத்தில் (1890) பள்ளிக்கூடத்தில் "கண்ணன் தின்னும் பண்டம் எது? என்று கேட்க அதற்க்கு மாணவர்கள் "மிட்டாய்" , மம்மு-சாதம், வடை என பதில் சொல்ல அதற்க்கு ஆசிரியர், கண்ணன் தின்னும் பண்டம் "வெண்ணை" என சொல்லிக்கொடுப்பாரம்... இதைகேட்ட குழந்தையாக இருந்த எனக்கே சிரிப்பு வந்ததென்றால், வரும்காலத்து அதாவது பேரக் குழந்தைகள் கேட்கவே வேண்டாம்... "இதுகூட தெரியாதா" என நிச்சயம் கிண்டலடிப்பார்கள். http://www.youtube.com/watch?v=jDddCYusDRg&feature=share&list=SPF2514C5A53D7D360

“Double the volume of Business-Award -2002”

எனக்குமட்டும் யோசிக்க இன்னும் சிறிது நேரம் தாருங்கள், மேலும் சிறப்பாக செய்யமுடியும் என்றேன் "அதை சரியாக புறிந்துகொள்ளாத நிறுவனத்தின் உரிமையாளர் "வேலையை விட்டுவிட்டு உன் வீட்டிற்கு சென்று உட்கார்ந்து யோசி என்றார்" எனக்கு வந்த கோபத்தை செயலில் காட்டினேன்... அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு புரியும் படி ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 32மணிநேர உற்பத்தியாக்கி -லாபத்தை செயலில் செய்து காட்டியபோது அசந்த்துபோனார்கள்" நான் அவர்களிடம் சொன்னது நிறுவனம் எனக்கு சம்பளம் தரவில்லை நான்தான் நிறுவனத்திற்கு தருகிறேன் என்றேன், அதோடு நான்மட்டுமில்லாமல் என்னுடைய குழுவினரும் கூட அப்படித்தான் என்றேன் . "நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்" கோகி.... “Double the volume of Business-Award -2002” GoKi.

ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படுமாறு அமைந்தது மகிழ்ச்சியான ஒன்று.

அது 2004 பிப்ரவரி மாதம் எனது மகள்,மகன் இருவரும் ஒரே மாதத்தில் பிறந்தநாள் வரும், 4நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள் (24 & 28 பிப்)ஆகவே இருவருக்கும் சேர்ந்து ஒரே நாளில் (24 அல்லது 28 இல் ) பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பது வழக்கம். இரண்டு வாரத்திற்கு முன்பிருந்தே அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நான் என் மகளிடம் உனக்கு பரிசுப்பொருட்கள் வரும் பொது மகிழ்ச்சிதானே என்று கேட்க அவளும் ஆமாம் என்றால. இந்த வருடம் அதை சற்று மாற்றி நீ மற்றவருக்கு பரிசு தந்தாள் எப்படி, என்று கூற... நன்றாக இருக்கிறதே என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், இடையில் புகுந்த நான் நிறைய பேனா பென்சில் நோட்டு புத்தகம் போன்ற பொருட்களை வாங்கி எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரசு ஆரம்ப பள்ளிக்கு சென்று ஏழை மாணவ மாணவியருக்கு அந்த பொருட்களை தந்தாள் எப்படி என்று கேட்க, அதுவே சரி என்று முடிவானது. எனது மகளும் மகனும் அன்றிலிருந்தே சிறுக சிறுக பொருட்களை வாங்கி சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள், அருகே இருந்த பள்ளியைப்பற்றி விசாரித்தபோது 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் படிப்பதாக தெரிந்தது, எங்கே நம்முடைய பரிசுப்பொருட்கள் மிகவும் குறைவாக போதுமான அளவில் இருக்காதோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது நண்பர்களிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன் சரியாக இரண்டு நாட்கள் இருந்தபோது ஒரு லாரி நிறைய பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களுடன் புத்தகப்பை உட்பட வீட்டின் முப்பு வந்திறங்கியதைப் பார்த்ததும் எங்கள் அனைவருக்கும் ஆச்சிரியமாகிவிட்டது. இரண்டு முன்னணி வர்த்தக நிறுவனத்திலிருந்து வந்திருந்த அந்த பரிசுப் பொருட்களுடன் ஒரு கடிதமும் இருந்தது. அந்தக்கடிதத்தில் உங்கள் குழந்தைகள் அவர்களின் பிறந்தநாளை கொடாட வகுத்த திட்டங்கள் எங்களின் நிறுவனத்தை மிகவும் கவர்ந்தது, ஆவகே எண்களின் நிறுவனம் அவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு, அவர்கள் செய்யும் சேவையில் இந்த பரிசுப்பொருட்களையும் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது. அதற்க்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டு நிறுவனம் என்பது மாறி 4,5 என நிறுவனக்கள் போட்டி போட்டுக்கொண்டு அவகளின் விளம்பரத்திர்க்காவவும் பரிசுகளை குவிக்கத்தொடகினார்கள். எது எப்படியோ சிறு துளி பேரு வெள்ளம் போல ஒரு சிறிய எண்ணம் மிகப்பிரிய வரவேற்ப்பை பெற்றதோடு ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படுமாறு அமைந்தது மகிழ்ச்சியான ஒன்று.

உலக வர்த்தக வரலாற்றில், இரண்டே வாரங்களில் 25% அசுரவளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிற

இன்றைய பார்வையில், இது ஒரு ஆராய்ச்சியின் குட்டி (கொசுறு) உங்களுக்காக:- உலக வர்த்தக வரலாற்றில், இரண்டே வாரங்களில் 25% அசுரவளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிற (Mar-2013)ஜப்பானிய நாணய "என்" பல வர்த்தக ஆராய்ச்சி வல்லுனர்களின் கவனத்தை கவர்ந்திழுத்திருக்கிறது. ஜப்பானின் மிக அருகே இருக்கும் வடகொரியாவில் வன்மம் எந்தநேரமும் வெடிக்கலாம் (அங்கு இன்னும் இரண்டு நாளில் பிறந்தநாள் கொண்டாட்டம் வேறு பல விளைவுகளுக்கு அடிபோட்டுக்கொண்டிருக்கிறது) இப்படிப்பட்ட ஒரு கவலையான சூழ்நிலையில் மேலும் பல நாடுகளில் உலக வர்த்தகம் சரிந்திருக்கிற இந்த நேரத்தில், இப்படி ஒரு அபரிவிதமான ஜப்பான் பங்கு வர்த்தக வளர்ச்சி பலருக்கு மேலும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது. இன்னும் சில ஜோதிடம் சாஸ்திர வல்லுனர்கள், சூரியன் உதிக்கும்-சூரிய நாடான ஜப்பானுக்கு, சூரியன் தன்னாட்சி பெரும் சித்திரை மாதப்பிரப்பின் விளைவு இது என்கிறார்கள். இதைப்போலவே ஐரோப்பாவின் "யுரோ" நாணயத்தின் அசுர வளர்ச்சியையும், அங்கு ஏற்ப்பட்ட பொருளாதார சீர்கேட்டையும் பெற்ற வர்த்தக வரலாறு இப்போது இதையும் தனது வரலாற்றுப் பதிவில் பாதிக்கின்றது.."காசேதான் கடவுளப்பா" .. http://youtu.be/qHkjZ_ceV-c

இன்றைய உலகளாவிய பார்வையில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளித்திரை,

இன்றைய உலகளாவிய பார்வையில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளித்திரை, வளைகுடா நாடுகளில் வெள்ளிக்கிழமையும், மற்ற நாடுகளில் சனி ஞாயிறு வார விடுமுறைநாட்கள் என்பதால், சர்வதேச அளவில் திரை அரங்குகளும், சின்னத்திரை நிகழிச்யிலும், வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு திரைப்பட காட்சி என்பது தற்ப்போது நிச்சயமாகிவிட்ட ஒன்று. சில நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத ஆங்கில திரைப்படம் ஒன்றிற்கு வடகொரிய அரசு அனுமதி அளித்துள்ளது இன்று அங்கு அந்த திரைப்படம் திரையிடப்படுகிறது. ஒரு சிறந்த திரைப்படம் சமுதாயத்தை சீரடயச்செயும் என்றாலும் சில திரைப்படம் சமுதாயத்திற்கு சீர்கீடாகவும் உள்ளது. நான் சந்தித்த ஒரு பிரபல திரையரங்கு நிறுவனத்தின் மேலாளர் ஒருவரது திறமையும் பாராட்டவேண்டிய ஒன்று, அவர் ஒரு தமிழர் அல்ல, தமிழில் அவருக்கு வெறும் நான்கு சொற்களே (வணக்கம், வாருங்கள், சாப்பிட்டீர்களா, நன்றி) தெரியும் இருந்தும் அவருக்கு ஏராளமான தமிழ் பேசும் நபர்கள் இருக்கிறார்கள், தமிழ் பேசத்தெரியாத அவர் பல தமிழ் இலக்கிய கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மேலும் அவரிடம் ஆயிரக்கணக்கிலான ரசிகர்களின் மினஞ்சல் மற்றும் கைத்தொலைபேசி விவரங்களின் தொகுப்பை உருவாக்கி அதை சிறப்பாக பயன்படுத்திவருகிறார். ஒவ் ஒரு வார இறுதி விடுமுறை நாட்களுக்கு அவர் பணிபுரியும் திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படம் குறித்த விவரங்கள் மற்றும் அந்த திரையரங்கில் கூட்டமில்லாத நாட்களில் வழங்கப்படும் நுழைவுச்சீட்டின் தள்ளுபடி விவரங்களையும் தவறாமல் அனைவருக்கும் தெரிவித்துவருகிறார். நன்கு பிழைக்கத் தெரிந்தவர்....... தமிழர்கள் மற்ற மொழி, நாடு, இனத்தவர்களிடம் நட்புடன் நல்ல பெயர் பெற்றாலும், ஒரு தமிழனுக்கு மற்றொரு தமிழன்தான் எதிரி என்கிற அளவில் தமிழருக்கிடயில்தான் நட்புமுறை சிறப்பாக இல்லை என்று தோன்றுகிறது. http://youtu.be/HYVmsb7q7zc

"மிட்டாய் கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன், திறந்திருந்தால் வாங்கித்தரமாட்டேன்".....

"மிட்டாய் கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன், திறந்திருந்தால் வாங்கித்தரமாட்டேன்"......... 2003ல் நடந்த சம்பவம் இது. எப்போதும் என் மனைவி குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார், எனவே என் மகன், மகள் இருவரும் "அப்பா" செல்லம். அன்று வழக்கம்போல அலுவலகத்திலிருந்து வீடு வந்ததும் குழந்தைகள் இருவரும் ஓடிவந்து, அப்பா இன்று சின்னத்திரையின் விளம்பரத்தில் புதியதாக அறிமுகமான "லாலி பாப்" மிட்டாய் பற்றி கூறி..... அப்பா, அப்பா, (பிளீஸ்)தயவுசெய்து வாங்கித்தாருங்கள் என்றனர். கண்டதையும் வாங்கித்தந்து குழந்தைகளின் உடல் நலனை கெடுக்காதீர்கள் என்று மனைவி கோபித்துக்கொண்டார். ஆகவே இதற்க்கு ஒரு தீர்வு காண, குழந்தகளிருவரிடமும், நான் சொல்லப்போவதை கவனமாக கவனியுங்கள் "மிட்டாய் கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன், திறந்திருந்தால் வாங்கித்தரமாட்டேன்" என்றேன். அப்பா நீங்க எங்களை ஏமாத்தறீங்க என்று சிணுங்கிய குழந்தைகள், சிறிது நேரம் சென்றதும் இரு குழந்தைகளும் வேகமாக ஓடிவந்து அப்பா, அப்பா, கடை மூடி இருக்கிறது வாருங்கள் எங்களுக்கு மிட்டாய் வாங்கித்தாருங்கள் என்றனர்.
எனக்கு ஆச்சரியம், மூடியிருக்கும் கடையில் எப்படி வாங்குவது, இதை குழந்தைகளுக்கு பேசி புரியவைப்பதை விட, எதற்கும் நேரில் சென்று மூடிய கடையில் எதுவும் வாங்கமுடியாது என்று சொல்லி தப்பித்துக்கொள்ளவேண்டியதுதான், என நினைத்து அவர்களுடன் கடைக்கு சென்றேன். குழந்தைகள் ஒரு திறந்திருந்த மிட்டாய் கடையை காட்டி வாங்கித்தாருங்கள் என்றனர், ... நான் குழந்தைகளைப்பார்த்து "கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன்" என்றல்லாவா கூறியிருந்தேன். இங்கோ கடை திறந்திருப்பதால் வாங்கித்தரமுடியாது என்றேன். அதற்க்கு குழந்தைகள் அருகிலிருந்த மற்றொரு மூடிய கடையை காட்டி, கடை மூடியிருப்பதால் வாங்கித்தாருங்கள் என்று கூறினார். எனக்கு குழந்தைகளின் சாமர்த்தியத்தை நினைத்து வியந்து சிரித்துவிட்டேன். அகவே குழந்தைகள் சாமர்த்தியமாக, அவர்கள் நினைத்ததை சாதித்துக்கொண்டார்கள்.
பெரும்பாலும் பெற்ற பிள்ளைகள், பெற்றோர்களிடம் போட்டியிட்டு வெற்றிபெறும் "குழந்தைகளாகத்தான்" இருக்கிறார்கள். அதாவது சில காதலர்களும் அப்படித்தான் பெற்றவர்களை எதிர்த்து வெற்றிபெற்றதாக நினைக்கும் "குழந்தைகளாகத்தான்" இருக்கிறார்கள்.
ஒரு உண்மை சம்பவம் கதையானது என்பதைவிட, பல கதைகள் பல உண்மையை போதிக்கின்றன என்பதை புரிந்துகொள்வது சிறந்ததல்லாவா???????...... உறவுகள் தொடர்கதைஉணர்வுகள் சிறுகதை. ஒரு கதை இங்கு முடியலாம், முடிவிலும் ஒன்று தொடரலாம். இனி எல்லாம் சுகமே.... http://youtu.be/52lDnAYzCUk
.......நன்றிகளுடன் கோகி.

Thursday, March 28, 2013

என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்? யாரிடமும் தயாரான பதில் இல்லை,

திடீர் என கடவுள் உங்கள் முன்னம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்? யாரிடமும் தயாரான பதில் இல்லை, அனைவரும் யோசிக்க முனைந்தார்கள், அவர்களுக்கு தெரியும் "தொட்டதெல்லாம் பொன் ஆகவேண்டும் என்கிற வரம் பெற்ற கதை" ஒருவர் நன்கு யோசித்தபிறகு இப்படி கேட்டார் "மன சாந்தி" வேண்டும் என கேட்பேன் என்றார் ..அதாவது எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்றால் மனம் சாந்தி அடையாது என்கிற நோக்கில் அப்படி வரம் கேட்டார் .. அதற்கு கடவுள் சிரித்தபடியே வரம் தந்தேன் என்றார். அவரது சிரிப்பிற்கு காரணம் இருந்தது ...தேவை என்று ஒன்று இல்லாத "சாதுக்கள்" மற்றும் சில "ஞணிகள்" "சாந்தம்" நிறைந்த மனம் பெற்றவர்கள்.. சாதுக்கள் என்று அழைக்கப்படும் ஒருவர் சாலையோரம் நடந்து வந்துக்கொண்டிருந்தார். பார்பதற்கு எத்தனை நாட்கள் குளிக்காமல் இருந்திருப்பாரோ? அவ்வளவு தூசுக்கள் படிந்த உடலும் அழுக்கு உடைகளையும் அணிந்திருந்ததால், அவரின் அருகே செல்லக்கூட மக்கள் அஞ்சி, விலகி சென்றுக் கொண்டிருந்தனர், அவரின் கண்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக இருந்தது அதில் அவருக்கு, தனது வெளிப்புற தூய்மையின்மை மற்றும் தனது நிலையைப்பற்றிய எந்த நினைப்பும் இருக்கவில்லை, அடுத்தவேளை உணவு இருப்பிடம் போன்ற எந்த கவலையும் அவரிடம் இருக்கவில்லை. மொத்தத்தில் அவரின் மனம் சாந்தமாக... "மன சாந்தி நிறைந்தவராக" தெரிந்தார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் வரம் கேட்டபோது கடவுள் ஏன் சிரித்தபடியே "வரம் தந்தோம்' என்று கூறினாரே அதற்க்கான காரணம் இது தான் " தேவை என்று ஏதுமின்றி ஆசையை தொலைத்தாலே "சாந்தி" கிடைத்துவிடும். ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் இதை, எதற்கு கடவுளிடம் வேண்டி வரமாக பெறவேண்டுமா? http://youtu.be/TdA-ZCZ1omQ

Monday, March 25, 2013

அனுமதியில்ல என்று கூறிவிட்டார்கள் காரணம் "A" சான்று

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பி. பாரதிராஜா அவர்களின் பிறந்த தினம்;( born 17 July 1941). கிராமத்து மண்வாசனை நிறைந்த தமிழ் படங்களை தயாரித்தவர் என்ற பெயர் பெற்றவர். இவரின் முதல் திரைப்படம் "பதினாறு வயதினிலே" நானும் எனது நண்பர்களும் பலமுறை பார்த்திருக்கிறோம் இந்த படம் ஒரு சிறந்த படமாக பாரதிராஜா அவர்களுக்கு பெயரும் புகழும் தந்தது. மேலும் இவரின் தயாரிப்பில் எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் "முதல் மரியாதையை", "வேதம் புதிது", "கருத்தம்மா", "கிழக்கு சீமையிலே" போன்ற கிராமத்து படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறந்த திரைப்பட தயாரிப்பாளராக ஆறு முறை தேசிய திரைப்பட விருதையும், இரண்டு முறை தமிழக அரசின் திரைப்பட விருதையும் , நந்தி விருது, தெனிந்தியா திரைப்பட தயாரிப்பாளர் விருது போன்ற மேலும் பல விருதுகளையும் பெற்ற சிறந்த தயரிப்பாளும் இவரே , அவரின் தயாரிப்பில் பல நடிகர், நடிகைகளை அறிமுகமாகி பின்பு பிரபலமானவர்களும் உள்ளனர். அவர்களில் புதியவார்ப்புகள் படத்தின் முலம் அறிமுகமாகிய நடிகர் (முருங்கக்காய் புகழ்) பாக்யராஜ் அவர்களும் அந்த படமும் பாடலும் எனக்கு பிடிக்கும். என் வாழ்கையில் படம் பார்க்கசென்று பார்க்கமுடியாமல் திரும்ப நேர்ந்த படம். இந்த படம் வெளிவந்தபோது(1979) இந்த படம் திரையிடப்பட்ட சென்னை தேவி-(3-திரை) திரைஅரங்கில், நான் பார்பதற்கு சற்று ஒல்லியாக குள்ளமாக இருந்ததினால், தாவணி உடை அணிந்திருந்த என்னைவிட 4 வயது குறைந்த எனது தங்கையை பார்க்க அனுமதித்து எனக்கு பார்க்க அனுமதியில்ல என்று கூறிவிட்டார்கள் காரணம் "A" சான்று பெற்ற படமானதால் அப்போது என்னால் பார்க்கமுடியாமல் போனது, ஆறும் மாதத்திற்கு பிறகு ஒரு கிராமத்து கொட்டகை திரைஅரங்கில் வாடகை மிதிவண்டியில் நண்பர்களுடன் சென்று இந்த திரைப்படத்தை பார்த்தேன். அந்த படத்திலிருந்து இந்த அருமையான MARAKKAMUDIYAAபாடல்

இனிமையான பல நினைவுகளைக்கொண்ட ஓய்வுக்காலம்

"நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் ..."
இனிமையான பல நினைவுகளைக்கொண்ட ஓய்வுக்காலம், சிறிது ஏக்கமான இறுக்கத்தையும் தருகிறது என்பது எனது கருத்து. 2008-2009 கலீல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் பல நேரம் அவருடைய கிழக்கு டெல்லி உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்திருக்கும் அவருக்காக அவர் வாங்கிய இல்லத்தில் பேசிக் கொண்டிருப்போம், அவரும் அவரது மனைவி "அம்மையார்" அவர்களும் தெலுங்கில்தான் பேசிக்கொள்வார்கள். நானும் அம்மையார் அவர்களுடன் தெலுங்கிலும், GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் தமிழிலும் பேசுவோம். அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டின் தேர்தல் ஆணையராக பணியாற்றியதை பற்றி பெருமைப்படுவதாகவும் மேலும் அவருக்கு ஏற்ப்பட்ட இனிமையான அனுபவங்களைப்பற்றி பேசுவார், ஒரு தொகுதியில் 3500 க்கும் மேல் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவதற்காக அதிக சிரமப்பட்டதாக நினவுகூரினார், நாட்டின் பல முக்கிய பிரதமர்களுடன் பணியாற்றியது பற்றி அவரது அனுபவங்களை புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகளை வருடத்திற்கு ஒரு கோப்புக்கள் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார். முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்களுக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று மிகவும் விருப்பத்தோடு இருந்தார், அது முடியாமல் போன பொது மிகவும் வருந்தினார்(கண்கலங்கினார்). தற்போதும் தன்னைப்பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரக்கூடாது என்பதை ஒரு கொள்கையாக கடைப்பிடிக்கிறார். மனதளவில் ஏக்கங்கள் இருந்தும் கொள்கையை இன்னும் விடாது பிடித்துக்கொண்டிருக்கிறார். அவரின் மனதிற்கு ஆறுதலாகவும் சந்தோசம் தரும் வகையில், அவரின் இருப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்த ஒரு சில பள்ளிகளின் விழாக்களுக்கும், கோவில் மற்றும் சில பொது நல சங்கங்களின் விழாக்களுக்கும் தலைமை ஏற்கும் சேவைக்கு அன்புக்கட்டளையாக அடம்பிடித்து அழைத்து சென்றிருக்கிறோம். http://youtu.be/3euUGyKp7_4

காகிதத்தில் ஒட்டகம் செய்ய தெரியுமா?

பாடல் -"அவா அவா ஆத்துக்குள்ள ஆயிரம் இருக்கு... தெரியாதோ நோக்கு தெரியாதோ"....... " தெரியாது ஆனா தெரியும்" வாழ்க்கையில் இதை நன்கு புரிந்துக்கொண்டால் வேகமாக முன்னேறமுடியும், எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் இது, LKG என்னும் பாலர் பள்ளியில் படிக்கும் என்னுடைய அக்காவின் மகனிடம் நான் கற்ற பாடம் தான் என்னுடைய வாழ்கையில் நான் வேகமாக முன்னேற எனக்கு உதவியது. சுமார் 25 வருடத்திற்கு முன்பு என் அக்காவின் மகன் என்னிடம் ஓடி வந்து காகிதத்தில் ஒட்டகம் செய்து தருமாறு கேட்கவே நான் பல யோசனைக்குப்பின், எனக்கு கப்பல், விமானம் போன்ற இன்னும் சில காகிதத்தில் செய்யத்தெரியும் ஆனால் ஒட்டகம் செய்ய தெரியாது என்றேன், அதற்க்கு அவன் "என்ன மாமா, இதுகூட தெரியலையே" என்று கூறி காகிதத்தின் ஒரு பகுதியை கிழித்து அதை நீண்ட உயர வடிவில் சுருட்டி இது தான் ஒட்டகத்தின் கழுத்து நீண்டு இருக்கும், பிறகு தலை மற்றும் கால், உடல்... என்று காகிதங்களை சுருட்டி ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து... ஒட்டகம் இதுதான் என்றான்..மிக எளிமையான இது எனக்கு தெரிந்தும் தெரியவில்லை என்றோமே. அன்று எடுத்த முடிவுதான் எதுவும் தெரியும் என்று சமாளிப்பது எப்படி என்று பழகிக்கொண்டேன், அது என் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியது. பலருக்கு பலவிவரங்கள் தெரிந்திருக்கும் ஆனால் சரியான நேரத்தில் அதை பயன்படுத்திக்கொள்வது தெரியாது. உதாரணத்திற்கு வேலைவாய்ப்பின் நேர்காணலின் பொது கேட்கப்பட்ட சில கேள்விகள் "SIP பற்றி தெரியுமா அதில் அனுபவம் உள்ளத? " அந்த நேரத்தில் பதில் சொல்லமுடியாமல் பிறகு இது எனக்கு நன்கு தெரியுமே சரியான நேரத்தில் அதை சொல்லாமல் தவறவிட்டுவிட்டோமே என வருந்துவது. இப்போது சொல்லுங்கள் இன்று இந்த "பதிவு" உங்களுக்கும் உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். http://www.youtube.com/watch?v=NPN0vfxFYGw&feature=share&list=PL1F871F1F5D547425

எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா

a1951-52 ஆம் ஆண்டு பலரின் மனதை கொள்ளை அடித்துச்சென்ற பாடல், வானொலியில் இந்த பாட்டின் தட்டு தேய்ந்து போனதால் இந்தபாடலோடு மழை பெய்வதுபோல சத்தம் கேட்கும். இந்த பாடல் ஒலிக்காத அந்தகாலத்து வால்வு செட் ரேடியோ இல்லை எனலாம் "பாடல் " சம் சமா சம் சம்".... மேலும் தபால் நிலையத்தில் வருடத்திற்கு ஒருமுறை கட்டவேண்டிய ரேடியோ வரி, கட்டாத ரேடியோவை பறிமுதல் செய்ய வரும் அதிகாரியிடம் எங்கள் வீட்டில் ரேடியோ இல்லை... என்று மாட்டுக்கொட்டகையில் மறைத்து வைத்தவர்கள் ஏராளம்..இருந்தும் பக்கத்து வீட்டுகாரர்கள் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் ..... இது அந்தக்காலத்தில் 1975 வரையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்த சுவையான சம்பவம் இது. Vyjayanthimala & Shamshad - Chham Chhama Chham Chham - Bahar [1951] http://youtu.be/b0HA5h5Nc0k
நான் படித்த புத்தகத்தின் மீது எனக்கு அதிக காதல்
என் நாட்குறிப்பு புத்தகத்தை தவிர
மற்றவை இப்போது என்னிடம் இல்லை
என்னைவிட அதிக புத்தகக் காதல்
என் மாணவர்களிடம் இருந்ததினால்
http://youtu.be/41t6DNDIo50
ஹலோ நண்பா.. நான் பெங்களூரிலிருந்து பேசுறேன்...பணமும் பர்சும் தொலைந்த்துபோனதால ஊர் திரும்ப முடியல ஏதாவது ஹெல்ப் செய்யுடா....
அட கவலைப்படாதடா அக்கம் பக்கம் இருப்பவரிடம் "தமிழில்" தண்ணி வேணும்னு சப்தமா கேளு, ஊர் மக்கள் எல்லோரும் உனக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து இலவசமா பஸ் எத்தி அனுப்பிவச்சுடுவாங்க...... "ஆரோடும் மண்ணில் எங்கும் தேரோடும்.." http://youtu.be/i7wZg2jW2ag
J: சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே...
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்

சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே...
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா

கன்னி என் ஆசை காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என் ஆசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா

கண் ஜாடை பேசும் வெண்ணிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா..
என் கண்கள் தேடும் உண்மைதானே
சொல் நிலவே என்றேன்

AMR: வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்

J, AMR: ஆ.... http://www.youtube.com/watch?v=zpBvdajJ0Js&feature=share&list=PL3VMvdB6-Ua0dFgNye1OPcVrEEZWD7WZ7

1941-Dance http://www.youtube.com/watch?v=guNcA4P_7zI&feature=share&list=PL3VMvdB6-Ua0dFgNye1OPcVrEEZWD7WZ7வாழ்க்கையின் "ஆதாரம்" என்று எதைச் சொல்லலாம் ?
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல!
(சோதனைமேல்) http://youtu.be/gtzxeWqeejw
மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போயிட்டா....
துன்பப் படுற்வங்க எல்லாம்
அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட
முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே
கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு
யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?
தானாடவில்லையம்மா சதையாடுது - அது
http://youtu.be/aN_Q_mYuaJA
ஸ்ரீரங்கமோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ http://youtu.be/aN_Q_mYuaJA
சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்துவிட்டேன் http://youtu.be/h-mGG5XwQik

ஒரு சிப்பாயின் சீப்பான கருத்தும் சீறுமா?
...கொல்லப்பக்கம் போகதே கொட்டி கிடக்கு ஜாங்கிரி.....
சரி வாங்க ஒரு கோப்பை டீ சாப்பிடலாம்..... சாப்பிடலாமா

#மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்..
என் மவுனத்தை இசையாக மொழிப்பெயர்த்தாய்...
இளகாத என்நெஞ்சில் இடம் பிடித்தாய்,
இன்று என்"காதல்" தேருக்கு வடம்பிடித்தாய் ..... http://youtu.be/JxUUL9bUBDk
எங்கிருந்தோ வந்தான், இடைசாதி நான் என்றான், இங்கிவனை நான் பெறவே என்னதவம் செய்துவிட்டேன்.... கண்ணன் http://youtu.be/-2ZgZKVkOkg

எனது நாட்குறிப்பேட்டின் வாடாமலர்ப் பக்கங்கள்:-1987
"மனநிறைவான வாழ்க்கையை தேடுவதைவிட
வாழும் வாழ்கையில் மனநிறைவை பெற முயற்சித்தேன்.
சிறப்பான வேலை என்பதைவிட
செய்யும் வேலையே சிறப்பாக செய்தேன்
அது வேதனை போன்றதொரு சோதனை என்பது
புரிந்ததும்... தெரிந்தது
மனம் கரைந்ததும்... தெளிந்தது http://www.youtube.com/watch?v=1VKqj92W73k&feature=share&list=PLpg7WQR5RCCztT3u5tcLqjyhktTHC7kPb
தந்தையின் பணியிட மாற்றம் காரணமாக நான் ஒன்றாம் வகுப்பை இரண்டு முறை படித்தேன் (இரண்டு ஆண்டுகள்) காரணம் ஆங்கிலப்பள்ளியில் (KG +1) ஒன்றாம் வகுப்பை படித்து முடித்தவர்கள் தமிழ் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேரமுடியாது என்று கூறியதோடு என்னை முதல் வகுப்பில் சேர்த்துக்கொண்டார்கள் அப்போது எனக்கு ஆசிரியர்களாக இருந்த (1968)-காமாட்சி டீச்சர் மற்றும் பலராமன் சார், மிகச்சிறந்த ஆசிரியர்களான இவர்கள் தற்போது உயிருடன் இல்லை ஆனாலும் இவர்களின் பெயர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.... சென்னைக்கு அருகே கூடுவாஞ்சேரி அரசு இடைநிலைப்பள்ளியில் (நான் படித்தபோது 1முதல் 5 வகுப்புகள் மட்டுமே) இன்றளவும் அவர்களின் பெயர்களை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது ...... வெற்றிலை பாக்கு 2வாழைப்பழம் (2 பழங்களுக்கு மேல் வைக்க கூடாதாம்)அதோடு 4அனா-25பைசா தட்சிணை (பின் குறிப்பு:- தட்சிணை கூடாது என மறுக்கப்பட்டு திரும்பி வந்துவிட்டது. மேலும் இரண்டு வாழைப்பழத்தில் ஒன்றை தலைமை ஆசிரியர் என் கையில் தந்துவிட்டார்) இவைகள்தான் நான் பள்ளியில் சேரும்போது குரு தட்சிணையாக தந்தது இன்னமும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. (அம்மா எனக்கு மிட்டாய் வாங்க ஐந்து ஒரு பைசா நாணயமாக (5பைசா) தந்ததும் கூட ஞபகம் உள்ளது) என் கணக்கு படி ஐந்து பைசா என்றால் ஐந்து எண்ணிக்கை இருக்கவேண்டும் ...இரண்டு பைசா மற்றும் அரையணா-3பைசா இவைகள் ஒரு பைசா என்பது என் கணக்கு..... வீட்டிலிருந்து பள்ளிக்கு நான்கு மையில் தூரம் அக்காவின் கையை பிடித்துக்கொண்டு நடந்தே சென்ற அந்த நாட்கள்..... இன்றைய நிலையில் அடுத்த தெருவிலிருக்கும் பள்ளிக்கு பேருந்தில் செல்லவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது... இது ஓர் முன்னேற்றமா?.

HFCL-தாயாரிப்பின் நேர்காணல் பணி நிமித்தம் நான் அடிக்கடி செல்லும் இமாச்சல் "சிம்லாவின்" ஒரு பிரபல பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த பழைய சோறு எப்படி செய்வது என்பதை சொல்லிக்கொடுத்து செய்யச்சொல்லி சாப்பிட்ட ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன் என் நினைக்கிறேன் "என் மனைவி இதுகுறித்து இன்றளவும் கேலி செய்துக்கொண்டிருப்பார்கள்) "பழைய சோறு" உண்டு அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும்.

  • சுற்றுக்களை எண்ணிக்கொண்டு கேட்கவேண்டியதை மறந்துவிட்டு கோவிலுக்கு போவதால் என்ன பயன்? "பிள்ளையாரு கோவிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் புள்ளையாரு, இந்தப் புள்ளையாரு?" http://youtu.be/juVSazxOH8c
  • .காலையில் பத்திரிகை படிக்கும் கணவனை கோபித்துக்கொள்ளும் மனைவிக்கு, (கல்யாண) பத்திரிக்கையால் தனக்கு வாழ்க்கை வந்தது என்பதை மறந்துவிட்டால் எப்படி ? "வளர்ந்த கலை மறந்துவிட்டால் கேளடா கண்ணா.." http://youtu.be/5cmfqO-e020

  • சாகடித்து சென்ற உன்னை சாதாரணமாய் மறந்துவிட்டால், சர்வகாலமும் நீதான் நான். (மண்டையில் புகுந்ததா? ... இன்னும் வால் மட்டும் உள்ளே போகவில்லை ) "நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நீங்கிடாத துன்பம் பெருகுதே..." http://youtu.be/bqRlw-ZemL4
  • சில நேரம் சிலரின் முகத்தில் ஒருவித ஒளி வட்டம் தெரியும் பார்த்த அனுபவம் உண்டா (இது "ஹரிசாடு" போன்றவர்களும் பொருந்தும்)

  • மனதில் "மறதி" என்ற இருள் சூழ்ந்திருந்தால், "சுச்சு" போட்டதும் விளக்கு எரியாது!!!!!!. (YOU-TUBE...LIGHT) ....என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா .....http://youtu.be/WxGP-yQj7r0
    ஓடுவது சாக்கடையே ஆனாலும், அதில் மிதக்கும் வண்ண மலரைக்கண்டு ரசிக்க பழகவேண்டும்.
    இந்தியாவிற்கு மட்டுமல்ல "முகநூல்" ஒரு சர்வதேச புத்தகம் .. ஆழம் காணமுடியாத... மிக நீண்ட தொடர் இது
    "பொன்னான வாழ்வே மண்ணாகிப்போனால் துயரம் நிலைதானா" பலமுறை என் மணைவியிடம் இதுகுறித்து பேசியதுண்டு, தொட்டி நிறைய தண்ணீர் இருக்கும்போது சில வாளிகளே தேவைப்படுகிறது, ஆனால் ஒரு நாள் தொட்டி நிரப்ப மிசாரம் இல்லாதபோது, இரண்டு தொட்டி அளவுக்கு தண்ணீர் செலவானது. ஏழைகள் எப்போதும் ஏழையாகவும் இருக்க இந்த உதாரணம் சரியாக பொருந்தும், ....ஒரு நூறு ருபாய் தாளை ஒரு ஏழைக்கும், பணக்காரனுக்கும் தரப்பட்டபோது, ஏழை மிக மகிழ்ச்சியாக அதை செலவு செய்து, குடிப்பதற்கு சாராயமும், விலை குறைந்த (அழுகிய) காய்கறிகளுடன் பன்றியின் மாமிசமும், மனைவியிடம் தந்தது சமைக்க சொன்னான், குடித்துவிட்டு பன்றியின் மாமிசம் உண்டதில் அதுவும் மிக அதிக சூட்டில் வேகவிக்க போதிய வசதி ஏழையிடம் இல்லாததால் அதில் இருந்த சில கிருமிகள் அன்று இரவே அவனை மிகப்பிரிய நோயில் தல்லா, அவனது மனைவியின் தாலி சில ஆயிரங்களுக்கு அடகுவைக்கப்பட்டு உயிர் பிழைத்தான் , பணக்காரனோ அந்த நூறு பணத்தில் இரண்டு தரமான ஆப்பிள் பழத்தை தோல்சீவி உண்டான், வயறு நிரம்பாத சத்துள்ள உணவின் மகிமை அவனை உறங்கவிடாமல் (வயிறு நிறைய சாப்பிட்டால்தானே உறக்கம் வரும்) அவனது சில லட்சங்களை மேலும் பல லட்ச்சங்கலாக பெருக்கியது. "பாடலுடன்- கதையும், கருத்தும்" என்கிற நிகழ்ச்சிக்காக நான் எழுதிய வானொலி நிகழ்ச்சியின் ஒரு பகுதி இது. ....பாடல் "பொன்னான வாழ்வே மண்ணாகிப்போனால் துயரம் நிலைதானா" http://youtu.be/wBq_ecZbO9M
  •  
  • திரு ராஜேஷ் வைத்யாவின் வீணை நாதம்

    எங்கெங்கு காணினும் வீணையின் பாடல்கள்... பேசாம இதை வீணை வாரம் என்று கொண்டாடிடலாம். வீணை அழகாக பாடுவதை கேட்டதுண்டா? நான் வீணையின் ரசிகன்...வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா என்றால் அதற்க்கு பொருத்தமானவர், தற்போது புகழின் உச்சியில் இருக்கும் வீணை விற்பன்னர், கலைமாமணி "திரு .ராஜேஷ் வித்தியா" அவர்கள். இவரின் பெரியப்பா ஒரு இசைமேதை G.ராமநாதன் அவர்கள், அவரின் இசையில் உருவானதுதான் "தெய்வத்தின் தெய்வம்" படப்பாடல்கள் இந்தப் படத்தில் மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் அற்புதமான தெய்வீக வரிகளுக்குள் வீணை இசை பின்னிப் பிணைத்திருக்கும் "கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்" அசத்தலான வீணை விருந்துடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடல் தொடர்ந்து பாடல் முழுதும் வீணை இசைதான் ஆக்கிரமித்தாலும் "ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள் " என்று ஜானகி அவர்கள் ரொம்பவே உருக்கமாகப் பாடும்போது வட இந்தியக் இசைக் கருவியான ஷெனாய் இசை இடையில் வந்து மனதை எதோ செய்துவிடுகிறது...அப்படிப்பட்ட இசைமரபில் வந்தவர்தான் "ராஜேஷ் வைத்யா" என்ற இந்த வீணை இசைக் கலைஞர், மெய் சிலிர்க்க வீணையை வாசிப்பார். பாட்டின் ஸ்வரங்களை அழமாக உள் வாங்கி உருக்கமாக வீணையை மீட்டுவார். இவரின் கைகள் வீணையில் விளயடுவதைப்பார்க்க அருமையாக இருக்கும் அத்தனை இலகுவாக வேறு எவராலும் வாசிக்கமுடியுமா? சில வாரங்களுக்கு முன்பு இவரின் நேர்காணல் "பாட்டு தர்பார்" நிகழ்ச்சி ஒன்று சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டது. இவர் "விஷ்வ துளசி" என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். Kurai Ondrum Illai http://youtu.be/ufBJBjEO4F8
    Rajesh Vaidhya - திரு ராஜேஷ் வைத்யாவின் வீணை நாதம் என்னுள் இருக்கும் இசை நரம்புகளை என்னவோ செய்கிறது!!! இனிமை.. Thunbam Nergayil - Veena Art வித விதவிதமான வீணைகள் http://youtu.be/n9LXyg1gapE

    "பாப்பா பாட்டு பாடு" என் அழைக்க.... டி.ஆர்.பாப்பாவின்....

    சிந்துபைரவி ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான, சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல் தமிழர்களின் மனதில் வாழ்துகொண்டிருக்கும் ...இன்றைய இளையர்களும் கூட ரசித்து கேட்கும் பாடல். http://youtu.be/eoldjJS1OWI
    வெள்ளிக்கிழமை, அக்டோபர் 15, 2004, பழம்பெரும் திரைப்பட, மெல்லிசை இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மாரடைப்பால் காலமானார். அவருக்குவயது 81.

    சிறுவயது முதல் பாடல்களைப் பாடியபடி வளைய வந்த இவரை பார்க்கும் குடும்ப நண்பர்கள் அனைவரும் "பாப்பா பாட்டு பாடு" என் அழைக்க.... பின்னாளில் அதுவே இவருக்கு பிடித்த புனைப் பெயராக, அனைவராலும் அழைக்கப்பட்ட சிறந்த வெள்ளித்திரை மற்றும் AIR-வானொலி நிலைய இசைஅமைப்பாளர் என்ற பெயர்பெற்ற, சிவசங்கரன் என்ற இயற்பெயர் கொண்ட டி.ஆர்.பாப்பா அவர்கள் 1923ம் ஆண்டு பிறந்தவர். தனது தந்தை ராதாகிருஷ்ண பிள்ளை மற்றும் கும்பகோணம் வடிவேல் பிள்ளை ஆகியோரிடம் இசை கற்ற பாப்பா அவர்கள் 1965ம் ஆண்டு திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர்இசையமைத்துள்ளார்.
    சிந்துபைரவி ராகத்தில் அவர் இசையமைத்த சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல்தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் இன்றும் கூட ஒலித்துக் கொண்டுள்ளது.

    இவரது இரவும் பகலும் படம் மூலம்தான் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று புகழப்பட்ட ஜெய்சங்கர்திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். டி.ஆர்.பாப்பாவும், சீர்காழி கோவிந்தராஜனும் சேர்ந்து புகழ் பெற்ற பலமெல்லிசைப் பாடல்களை கொடுத்துள்ளனர்.

    சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான அபிராமி அந்தாதி பாடல் கேசட் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. திமுக தலைவர் கலைஞ்சர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் உருவான பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் பாப்பா.
    டி.ஆர்.பாப்பா, அவர்களின் இசையமைப்பில் TMS அவர்கள் பாடி உருவான இரவும் பகலும் படப் பாடல் இது
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
    அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
    அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    காதல் என்பது தேன் கூடு
    அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
    காதல் என்பது தேன் கூடு
    அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
    காலம் நினைத்தால் கைகூடும்
    அது கனவாய் போனால் மனம் வாடும்
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
    அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உயிருக்கு உருவம் கிடையாது
    அந்த உயிரின்றி எதுவும் நடவாது
    உயிருக்கு உருவம் கிடையாது
    அந்த உயிரின்றி எதுவும் நடவாது
    உருவத்தில் உண்மை தெரியாது
    என்றும் உலகத்தில் நேர்மை அழியாது
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
    அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    சிந்துபைரவி ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான, சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல் தமிழர்களின் மனதில் வாழ்துகொண்டிருக்கும் ...இன்றைய இளையர்களும் கூட ரசித்து கேட்கும் பாடல். http://youtu.be/eoldjJS1OWI

    அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா

    Mami : அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
    அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா … ஏன்னா
    அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
    அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
    அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
    அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
    அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவயை வாங்கிக்கிறா
    பட்டு பொடவயை வாங்கிக்கிறா
    அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
    அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
    Mama : அடுத்தாத்து சங்கதியெல்லம் நமக்கேண்டி
    அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி.. பட்டூ…
    அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி
    அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
    மூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதாண்டி
    சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கேதடி… பட்டூ
    புடவைக்கேதடி.
    அடுத்தாத்து சங்கதியெல்லம் நமக்கேண்டி
    Mami : உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு
    உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு
    Mama : பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
    பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
    Mami : நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு
    நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு
    எட்டுக்கல்லு ? போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு
    Mama : சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு
    சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு
    Mami : எப்போ இருந்தது இப்போ வர்ரதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு .. ம்,,கும்
    அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
    அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
    Mama : ஏட்டிக்கு போட்டி பேசாதடி பட்டூ..ஊ….
    Mami: பேசினா என்ன வைப்பேளா ஒரு குட்டு…ஊ…
    Mama : ஆத்திரம் வந்த பொல்லாதவண்டி கிட்டு..ஊ..
    Mami : என்னத்த செய்வேள்
    Mama : சொன்னத்த செய்வேன்
    Mami : வேரென்ன செய்வேள்
    Mama: அடக்கி வைப்பேன்
    Mami : அதுக்கும் மேலே
    Mama : ம்ம்….. பல்ல உடைப்பேன்
    Mami : ஆ…ஆ..ஆ.ஆ….
    அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
    அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
    Mama : பட்டூ.. அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி
    பட்டு நமக்கேண்டி , பட்டு நமக்கேண்டி
    MOVIE : ETHIRNEECHCHAL
    SINGER : TMS & P SUSHEELA
    MUSIC : MSV http://youtu.be/-gfOuldRWzU

    திரு. R D பர்மன்

    இன்று பிரபல இசை அமைப்பாளர்கள் வரிசையில் திரு. R D பர்மன் அவர்களின் பிறந்த தினம் (27-ஜூன்), ஏராளமான இந்தி திரைப்படப் பாடல்கள் இசை அமைத்திருந்தாலும்,  தமிழில் நிறை பாடலுக்கு இசைஅமைத்து பல பாடல்களை சூப்பர் ஹிட் பாடலாக தந்திருக்கிறார் அதில் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் பாடல் நடிகை நதியா அவர்கள் நடித்த -பாடல் -"நதியா நதியா நைல் நதியா" - இந்த பாடல் தமிழில் RD
    பர்மன் அவர்களுக்கு அமைந்த சூப்பர் ஹிட் பாடல் படம் *'பூ* மழை பொழிகிறது பொதுவாக கடல் கணக்கில் உள்ள பிடித்தவைகளிலிருந்து ஐந்து
    மட்டுமா..தேர்ந்தெடுக்க மனசே வரலை. எனக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரொம்பப் பிடிக்கும், யேசுதாஸ் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் திரை இசையில் தன் குரலால் என்னைக் கவர்ந்தவர், மயக்கியவர், இப்போதும் உருக வைப்பவர் ஹிந்தித் திரையுலப்  பாடகர் கிஷோர் குமார். அவர் அறுபது அல்லது அறுபத்தைந்துகளுக்குப் பின் பாடிய  பாடல்கள் அனைத்துமே அருமையான பாடல்கள் என்றாலும் ஹிந்தியின் கிரேட் R.D.பர்மன்
    இசையில் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் மனதை விட்டு அகலாதவை. லாக்கோ மே ஏக் 'சந்தாவோ சந்தா', புத்தா மில் கயா 'ராத்துக் கலி', ஜோஷீலா 'கிஸகா ரஸ்தா   தேகே..' கட்டி பதங் பாடல்கள், எதைச் சொல்ல, எதை விட....SD பர்மன் இசையில்   பிரேம் பூஜாரி 'ஃபூலோன்கே ரங்ஸே...' ஷர்மிலீயில் 'கில்தே ஹை குல் யஹான்...',
    லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் 'தாக்'கின் 'மேரே தில் மே ஆஜ் கியா ஹை',   பியா கா கர் 'யே ஜீவன் ஹை..' தோஸ்த் 'காடி புலாரி ஹை..' கல்யாண்ஜி ஆனந்த்ஜி   இசையில் ப்ளாக் மெயில் பாடல்...*"மேலும் அஜ்நபி, அபிமான், ஆந்தி, அந்தாஸ்,  அனாமிகா, அமர்ப்ரேம் பாடல்கள்...** நிறைய இருக்குங்க...  http://youtu.be/i7nhb4Fh_tE

    எஸ்.வி. *ரங்கா ராவ்*

    இன்று எஸ்.வி. *ரங்கா ராவ்* (03-July)அவர்களின் பிறந்த தினம், இவரைப்போன்ற சிறந்த குணச்சித்திர *நடிகரை, தமிழ் திரையில் இனி பார்ப்பது கடினம். அவரின் ஒவ்வொரு திரைப்படத்திலும் இவரின் நடிப்புதான் கதனாயகனைப்போன்று ஒரு தனி ஆளுகைத்தன்மையுடன் இருக்கும் ...அவர் நடித்த படப்பாடல்களில் அவருக்கு அதிக போரையும் புகழையும் தந்த பாடல் மாயாபஜார் -"கல்யாண சமையல் சாதம்", மற்றும் "கண்ணா கருமை நிறக்கண்ணா" *'முத்துக்கு முத்தாக' ஆகிய பாடல்கள் முத்தான பாடல்கள். இதுபோன்ற பல பாடல்கள் உள்ளது ...... (1963)நானும் ஒரு பெண், படப் பிடிப்பின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்குக்கு எம்.ஆர் .ராதா சரியான நேரத்தில் வந்து காத்திருந்து பொறுமை இழக்கின்ற நிலை. ரங்காராவ் ரொம்ப தாமதமாக உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே கமென்ட்  அடித்திருக்கிறார் " கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா கரெக்டா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு . ஒரு ஒழுங்கு இல்ல.படாத பாடு படுத்துறான்." ரங்கா ராவ் ரொம்ப மனம் புண்பட்டு இயக்குனரிடம் ''இன்றைக்கு விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி.
    ஷூட்டிங் வைத்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்துக்கொள்ளுங்கள் .எனக்கு உடம்பு சரியில்லை.ஆனால் அது பற்றி கவலையில்லை." என்று ரோசத்தோடு சொல்லி அதன் படியே நடித்துக்கொடுத்தாராம்....நானும் ஒரு பெண்ணில் மரணப் படுக்கையில் இருக்கும் ரங்காராவை " அத்தான்... ஒரே ஒரு கையெழுத்து போடு அத்தான்...." - ராதா படாத
    பாடு படுத்துவார். http://youtu.be/zapJyr8-p2g

    "பாலக்காடு உன்னி கிருஷ்ணன்"

    #திரையிசை மற்றும் கர்னாடக சங்கீத இசை புகழ் "பாலக்காடு உன்னி கிருஷ்ணன்" (P. Unnikrishnan)* அவரின் பிறந்த தினம் (born 9 July 1965). பாலக்காட்டில் பிறந்த இவர், தமிழகத்தின் -சென்னையில் படித்தவர். தனது 12 வயதிலிருந்தே சங்கீத வாழ்கையை தொடங்கியவர், மனம் உருக உருக பாடும் உன்னி கிருஷ்ணன் பாடல்கள் எல்லாம் மனதை வருடிக்கொடுக்கும் பாடல்களாகவே என்னால் உணரமுடிகிறது. இரண்டுமுறை
    அவரின் இசைக்கச்சேரிக்கு சென்றிருக்கிறேன், அவர் எப்போதும் ஜம்மென்று ஜிப்பா  போட்டுக்கொண்டு காட்சியளிப்பது அவருக்கென்றே அமைந்த ஒரு தனி சிறப்பு, அவரின் கர்நாடக இசைக்கச்சேரி ஆரம்பித்துவிட்டால் ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலிருந்து எழமுடியாதபடி அவரின் தெளிவான குரலின் இனிமையால் கட்டிப்போட்டுவிடுவார். உன்னி கிருஷ்ணன் அவர்களின் குரலில் ஒருவிதமான கெஞ்சல் தொனி எப்போதும் இருக்கும்.
    அவர் எந்தப் பாடலைப் பாடினாலும் தெய்வத்திடம் எதற்காகவோ இரங்கிக் கேட்பதுபோன்ற  ஓர் உணர்வு உண்டாகிறது. அவர் பாடும்போது, அவருடைய கைகள் ஒரு தேர்ந்த நாட்டியக் கலைஞரைப்போல் பாவம் காட்டுகின்றன, மனதை உருகவைக்கும் மகிழ்ச்சி, சோகம், அழுகை, அரற்றல், கிண்டல், துள்ளல், எதையும் அவரின் குரலிலேயே கொண்டுவந்துவிடக்கூடிய வித்தகர். அவரின் தெள்ளத்தெளிவான உச்சரிப்பு, காதுகளில் தேன் வந்து பாயுது என்று நம்மையும் பாட வைக்கும் குரல் ஜாலம் கொண்டவர். நாம் இன்று அவரின் பிறந்தநாளுக்காக, தேசிய விருதைப்பெற்றுத்தந்த அவர் பாடிய
    "என்னவளே அடி என்னவளே" A. R. ஹ்மான்<http://en.wikipedia.org/wiki/A._R._Rahman> இசையில்
    அமைந்த இந்த பாடலை கேட்போமா. http://youtu.be/E_vMpqTSXxM

    "தண்டம்"

    "தண்டம்" என திட்டுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்,... தமிழ் அகராதிப்படி "தண்டம்"-என்பது வரி, அபராதம் மற்றும் 'நுனியில் பருத்து உருண்டையாக இருக்கும் ஒரு கம்பு' அல்லது 'கோல்' (கோலாடக் குரங்காடும் என்பார்களே அந்தக் 'கோல்') அப்படிப்பட்ட இந்தக் கோலினால் அதற்க்கு எந்தப்பயனுமில்லை, அது யார் கையில் இருக்கிறதோ அவர் அதை பயன்படுத்திக்கொள்வார்....ஆகவேதான் 'தண்டம்" என திட்டுவதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்தினர். இதுவே ஒரு ஆயுதமாக மாறும்போது "தண்டாயுதம்" அது மிகவும் உறுதியானதாக இருக்கவேண்டும் என்பதால் இரும்பு, வெண்கலம், மற்றும் ஐம்பொன் போன்ற உலோகங்களினால் செய்யப்பட்டது . ...சரி சரி விஷயத்துக்கு வருவோம், இப்படிப்பட்ட "தண்டச்சோருகள்" அடிவாங்கியதால் கிடைக்கப்பெற்ற வாய்ப்புதான் ஒலிம்பிக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பாட்டு.... ராம் லட்சுமணன் படத்தில் இந்த வசனத்திற்கு பிறகுவரும் பாட்டு "அடடா எல்லாம் தண்டச்சோறு அடியாள் இங்கு எத்தனை பேரு அடடா எல்லாம் தண்டச்சோறு சும்மா எதுக்கு பந்தா அட கும்மாங்குத்து இந்தா." நான்தான் உங்கப்பண்டா, நல்லமுத்து பேரன்டா....... http://youtu.be/fKRO26_jvIs

    பாதிப் பேர் கழுதைகள்?

    ஆங்கில நாடக ஆசிரியரான ஷெரிடன், பார்லிமெண்டில் ஒருமுறை பேசியபோது,
    “”இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப் பேர் கழுதைகள்” என்றார்.
    “”நீ பேசியதை வாபஸ் வாங்கு” என்று உறுப்பினர்கள் கூச்சலிட்டார்கள்.
    ... கூச்சலை அடக்கி, ஷெரிடன் அமைதியாக, “”மன்னிக்க வேண்டும். இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப்பேர் கழுதைகள் அல்ல” என்றார்.
    இது ஒரு "ஆமாமில்ல" கருத்துக்கதை.... ஆமாவும் உண்டு இல்லையும் உண்டு ... பல சமயங்களில் இதை நான் விர்ப்பனையாளர் கூட்டத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். அவர்கள் எப்போதும் குறிப்பிட்ட சில காரணங்களால் இலக்கை அடையமுடியவில்லை என்று மற்ற துறையை சேர்ந்தவர்களை குறை கூறுவார்கள்... சாக்கு போக்கு சொல்லுவார்கள், ஆகவே கூட்டம் ஆரம்பமானதும் முதலில் இப்படி கூறுவேன் " எனது பனியின் இலக்கை அடயமுடியாமலும், மற்றவர்களை குறை கூறுபவனாக நான் இருந்தால், இந்த நிறுவனம் வெளியேற்றப்படவேண்டிய முதல் ஆளாக நான் ஆகிவிடுவேன். ஆனால் குறைகூற என்னிடம் ஏதும் இல்லை, ஆகவே இன்னமும் நான் இங்கு பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்...... இனி ஒவ்வொருவராக வந்து அவர்களின் குறைகளைக் கூறலாம்?

    மொழி

    தமிழகத்தில் அவள் ஒரு தமிழ் பேராசிரியையாக பணியாற்றியபோதும், அவளது படைப்புக்கள் அவளது பெயரை பறைசாற்றிக்கொண்டிருந்தன. அவளது பெயர் தமிழ் பத்திரிக்கைகளிலும், தமிழ் அவை/சபை மற்றும் தமிழ் மன்றங்களிலும், அரசிதழ்களிலும் (அரசின் மொழிபெயர்ப்பாளர்) சிறந்த மொழிப்பற்றுடயவர் என்று குறிப்பிட்டிருந்தது குறித்து அவளுக்கு மிகுந்த பெருமிதமும்கூட.

    புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் மற்றொரு நாட்டிலிருந்து வந்த அன்பு அழைப்பினை ஏற்று அங்கு உரையாட வான்வழிப்பயணம் மேற்க்கொண்டிருந்தபோதுதான் அந்த துயர சம்பவம் நடந்தேறியது. இயந்திரக்கோளாறு காரணமாக அந்த வானூர்தி நடுக்கடலில் விழுந்தது.....

    மீட்பு நடவடிக்கயிளிருந்து விடுபட்டு தனது உற்றார் உறவினர்களின் வட்டத்திற்குள் இருந்த அவள் மௌனமாகவே இருந்தால், மிடுக்காக தோற்றமளிக்கும் அவள் அப்போது மிகவும் சோர்வுடன் காணப்பட்டால், அந்த முப்பது நாட்கள் அவளின் மனதில் மிகப்பெரிய மாற்றங்களை எர்ப்படுத்தியிருந்தது. சுற்றியிருந்த பத்திரிக்கை கூட்டமும் அவர்களின் புகைப்பட கருவிகள் கண்சிமிட்டியபடி இருந்தது. வாய்திறந்தால் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அவள் அன்று மௌனமாகவே இருந்தால், அந்த மௌனமான மொழிதான் தன்னைக் காப்பாற்றியது என்பது இவர்களுக்கு தெரிந்திருந்தால் இப்படி கேள்வி கேட்க்கமாட்டார்கள். வாழ்க்கைப்பயனத்திர்க்கு மொழி அவசியம் என்றாலும் மொழிதான் வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். இனி இதை உரியமுறையில் அனைவர்க்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற என்னாத்தில் தனது சுற்றமும் நட்பும் சூழ, இல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.

    இதை அவசர கால உதவிக்குமட்டும் பயன்படுத்துங்கள் ....

    நீங்கள் 6அடுக்கு அல்லது அதற்கும் மேற்ப்பட்ட, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் என்றால் இது உங்களுக்கு மிகவும் பயன்படும். திடீரென்று அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவருக்கு மருத்துவ மற்றும் வேறுவித அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் மின் தூக்கியை பயன்படுத்தும்போது இடையில் பல இடங்கள் நின்று போகுமாறு ஏற்க்கனவே மின்தூக்கி விசைப்பலகையில் (LIFT SWITCH) சமிக்கைகள் தரப்பட்டிருந்தால் அவற்றை நீக்க, விசைப்பலகையின் ஏதாவது இரண்டு பொத்தான்களை உதாரணத்திற்கு என் 4 மற்றும் 6 ஆகிய பொத்தான்களை அழுத்திக்கொண்டு மூன்றாவதாக வேறு ஒரு என்னை, 2 அழுத்தினால் ரீசெட்(RESET) என்கிற முறையில் அனைத்து தளங்களிலும் நிற்கவேண்டிய சமிக்கைகள் நீக்கப்பட்டுவிடும். உடனே நீங்கள் செல்லவேண்டிய மாடி-குடியிருப்பு தளத்தின் என்னை மட்டும் அழுத்தினால் அந்த இடத்திற்கு மட்டும் மின்தூக்கி இயங்கும் . இதை அவசர கால உதவிக்குமட்டும் பயன்படுத்துங்கள் .... http://youtu.be/TvBS0Dl6g2E

    நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்

    உதவி பெற்றதற்கு நன்றி செலுத்துவது ஒரு சிறந்த கடமை. (முகநூளில் ரசித்த பகுதிக்கு ஒரு "LIKE-லைக்" போட்டு விருப்பம் தெரிவிப்பது போல)..... ஒரு சிறு புல்லைக் கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு, இத்தனை உணவும், உடையும் மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை. இவ்வாறு நன்றி கூறும் அடையாளமாகவே, நாம் உண்பதை அவனுக்கு முன் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். அவனுக்குக் காட்டி விட்டுப் பிறகு நாம் தான் உண்ணப் போகிறோம். நாம் பலவிதமான ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு அருள் செய்யும் ஆண்டவனுக்குத் திருவாபரணங்களையும், வஸ்திரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எல்லாருமே இவ்விதம் வீட்டில் பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக கோயில்கள் எழுந்தன. ஆதியில் மகரிஷிகள் மந்திர சக்தியால் எங்கும் நிறைந்த பரம்பொருளை சில விக்ரஹங்களில் விசேஷ சாந்நித்தியம் கொள்ளச்செய்தனர். அப்படிப்பட்ட மூர்த்திகளைச் சுற்றிக் கோயில்கள் எழுப்பப் பட்டுள்ளன. வீட்டில் பூஜை செய்கிறவர் உள்பட அனைவரும் கோயிலுக்குப் போவது என்று கட்டுப்பாடாகப் பழக்கம் வைத்துக் கொண்டால் தான் அங்கு பூஜைகள் குறைவின்றி நடக்கும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் புண்ணிய மொழி வழங்கும் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் கோயில் வழிபாடு நடக்கச் செய்ய வேண்டும். இதுதான் நம் முதல் கடமை. -நன்றி தினமலர் ஆன்மீக வகுப்பறை.
    ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும், நம்பினோர்க்கு அருளும் முருகா...
    நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்.... அதை நான் கண்டு மகிழவேண்டும்....
    பாடலை கண்ணதாசன் அவர்கள் எழுத கே. வி. மகாதேவன் அவர்கள் இசை அமைத்த "தேவரின் - துணைவன்" படத்திற்காக... http://youtu.be/zPsC1dtyGe0

    பிறந்தநாள் பரிசு

    அது 2004 பிப்ரவரி மாதம் எனது மகள்,மகன் இருவரும் ஒரே மாதத்தில் பிறந்தநாள் வரும், 4நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள் (24 & 28 பிப்)ஆகவே இருவருக்கும் சேர்ந்து ஒரே நாளில் (24 அல்லது 28 இல் ) பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பது வழக்கம். இரண்டு வாரத்திற்கு முன்பிருந்தே அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நான் என் மகளிடம் உனக்கு பரிசுப்பொருட்கள் வரும் பொது மகிழ்ச்சிதானே என்று கேட்க அவளும் ஆமாம் என்றால. இந்த வருடன் அதை சற்று மாற்றி நீ மற்றவருக்கு பரிசு தந்தாள் எப்படி, என்று கூற... நன்றாக இருக்கிறதே என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், இடையில் புகுந்த நான் நிறைய பேனா பென்சில் நோட்டு புத்தகம் போன்ற பொருட்களை வாங்கி எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரசு ஆரம்ப பள்ளிக்கு சென்று ஏழை மாணவ மாணவியருக்கு அந்த பொருட்களை தந்தாள் எப்படி என்று கேட்க, அதுவே சரி என்று முடிவானது. எனது மகளும் மகனும் அன்றிலிருந்தே சிறுக சிறுக பொருட்களை வாங்கி சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள், அருகே இருந்த பள்ளியைப்பற்றி விசாரித்தபோது 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் படிப்பதாக தெரிந்தது, எங்கே நம்முடைய பரிசுப்பொருட்கள் மிகவும் குறைவாக போதுமான அளவில் இருக்காதோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது நண்பர்களிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன் சரியாக இரண்டு நாட்கள் இருந்தபோது ஒரு லாரி நிறைய பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களுடன் புத்தகப்பை உட்பட வீட்டின் முப்பு வந்திறங்கியதைப் பார்த்ததும் எங்கள் அனைவருக்கும் ஆச்சிரியமாகிவிட்டது. இரண்டு முன்னணி வர்த்தக நிறுவனத்திலிருந்து வந்திருந்த அந்த பரிசுப் பொருட்களுடன் ஒரு கடிதமும் இருந்தது. அந்தக்கடிதத்தில் உங்கள் குழந்தைகள் அவர்களின் பிறந்தநாளை கொடாட வகுத்த திட்டங்கள் எங்களின் நிறுவனத்தை மிகவும் கவர்ந்தது, ஆவகே எண்களின் நிறுவனம் அவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு, அவர்கள் செய்யும் சேவையில் இந்த பரிசுப்பொருட்களையும் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது. அதற்க்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டு நிறுவனம் என்பது மாறி 4,5 என நிறுவனக்கள் போட்டி போட்டுக்கொண்டு அவகளின் விளம்பரத்திர்க்காவவும் பரிசுகளை குவிக்கத்தொடகினார்கள். எது எப்படியோ சிறு துளி பேரு வெள்ளம் போல ஒரு சிறிய எண்ணம் மிகப்பிரிய வரவேற்ப்பை பெற்றதோடு ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படுமாறு அமைந்தது மகிழ்ச்சியான ஒன்று.

    இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்.....HAPPY BIRTH DAY 2 U.... Wish you many happy returns of the day ... மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று நீங்களும், உங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்ப நபர்களும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... "நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே, நூறாண்டு காலம் வாழ்க "... http://youtu.be/i-jlk4dEFLY



    Saturday, March 9, 2013

    மலரும் நினைவுகள் :- "கூந்தல் கருப்பு, குங்குமம் சிகப்பு " இந்த பாட்டை கேட்டாலே எனக்கு அந்த நாள் (பள்ளிக்கூட நாட்கள்) ஞாபகங்கள்.... ,நானும் எனது நண்பனும் இப்படித்தான் எங்கு சென்றாலும் இணைந்தே செல்வோம்" அப்போது நாங்கள்(1976) உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது நடந்த இந்த இனிமையான சம்பவம்... நானும் எனது நண்பன் சுந்தர வடிவேல் இருவரும் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் 6,7 பெண்கள் (மாணவிகள்) வழியை மறைத்தபடி... பேசியபடியே நடந்துவர.. எங்களுக்கு பின்னால் வரவும் சங்கடம் (பெண்கள் பின்னாடி போறாங்க பார் என்பார்கள்) முந்தி செல்லவும் முடியாமல் தர்மசங்கடமாக இருந்தது.....ஒரு யோசனை தோன்ற சட்டேன்று...அங்கபாருடா.. தலை "சவுரிமுடி" பின்னல் பிரிந்துவிட்டது" என கூற எல்லா பெண்களும் தனது பின்னல் முடியை தடவிப்பார்க்க ... அதற்குள் என் நண்பன் அடடா எல்லாரும் "சவுரிமுடி" வச்சிருக்காங்க போளிருக்குடா என கூற... எல்லா பெண்களும் வேக்கப்பட்டுக்கொண்டே ஓர் ஓரமாக சென்று வழிவிட, நங்கள் வழி கிடைத்த சந்தோசத்தில் வேகமாக அவர்களை கடந்து முன்னே சென்றோம்... அதுமட்டுமின்றி அதன்பிறகு அந்த பெண்களின் கூட்டத்தை கண்டாலே எனது நண்பன் இந்த பாடலை சத்தமாக பாடி அவர்களை வேக்கப்படவைப்பதை நானும் ரசித்திருக்கிறேன்... இன்றும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த நினைவுகள் நெஞ்சில் நீங்க நினைவுகள்.... Koonthal Karuppu KV Mahadevan TMS P Susheela MGR கூந்தல் கருப்பு Song-கூந்தல் கருப்பு..http://youtu.be/7qv2K1Gd82c

    மலரும் நினைவுகள்:-நான் எப்படி நடிகர் சிவகுமார் அவர்களின் ரசிகனானேன் ?....அப்போது நான் ஏழாம் வகுப்பில் படித்துகொண்டிருந்தபோது நடந்த நிகழ்வு அது ... எனது வகுப்பில் படித்துகொண்டிருந்த மாணவர்கள் (மாணவிகளும் ) எம் ஜி ஆர் மற்றும் சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகர்களாக இருந்தார்கள், அத்துடன் அவர்களிடம் இருந்த வண்ண படங்களை என்னிடம் காட்டி, என்னிடம் அது...போல் இல்லை என்பதால் என்னை கேலி செய்துகொண்டிருந்தர்கள். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் நான் நடிகர் சிவகுமார் ரசிகன் என சொல்லிவிட்டேன்..... சற்று சப்தமாக கத்திவிட்டேன் போலிருக்கு, வகுப்பில் இருந்த அணைத்து மாணவ மாணவிகள் (என்வகுப்பில் மொத்தம் ஆருபத்தி ஏழு மாணவ மாணவிகள் ) என்பக்கம் திரும்ப... அன்று ஆரம்பித்ததுதான், ஒவ்வொரு முறையும் நடிகர் சிவகுமார் திரைப்படம் திரை இடப்படும்போதேல்லாம் வகுப்பில் நாந்தான் ஹீரோ "உங்கள் ஆளு இந்த படத்தில் சூப்பர் அல்லது சொதப்பிவிட்டார் என பல்வேறு விமரிசனங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கும்" அன்று ஆரம்பித்ததுதான் இன்றும் எனது மனைவியும் குழந்தைகளும் நடிகர் சிவகுமார் அவர்களின் படமோ பாட்டோ சின்னத்திரையில் வந்தாலேபோதும், என் பக்கம் ஒரு பார்வை பார்க்காமல் இருந்ததில்லை... அப்படிப்பட்ட திரைப்பட நடிகர் சிவகுமார் அவர்களா?, இன்று மிகபெரிய இலக்கியவாதியாக மேடைகளில் கலக்குகிறார்... அவரின் இலக்கிய பேச்சுக்களை கேட்கும்போது என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை... "நான் அவரின் தீவிர ரசிகன் என்பதில் தற்போதுதான் இன்னும் அதிக பெருமைபடுகிறேன்"

    மலரும் நினைவுகள்:-"ஓர் ஆயிரம் நிலவே வா ... ஓர்.. ஆயிரம் நிலவே வா... (என்ன துடிப்போ அவள் நிலை, நீ உணர மாட்டாயா)என் கல்லூரி நாட்களை நினைக்கும் பொது நிச்சயம் இந்த பாடல் ஞாபகம் வரும். ஏன் எனில் ஓர் கல்லூரி விழாவில் யார் ஆதிகநேரம் அறுவை செய்கிறார்களோ அவர்களுக்கு அறுவை மன்னன் பரிசு என்கிற பந்தயத்தில் நான் முதல் பரிசை பெற்றேன் . இதோ அந்த பாடல்... 1000நிலவே வா , 999நிலவே வா , 998நிலவே வா, 997நிலவே வா, 996நிலவே வா, 995நிலவே வா , .................மேடயிலேருந்து குண்டுகட்டாக எனை துக்கி கீழ் இறக்கிவிட்டார்கள் (பரிசையும் தந்துதான் இறக்கிவிட்டார்கள்) http://youtu.be/oHUsQGYEen4

    "நினைத்தாலே இனிக்கும்" மற்றும் "பிரியா" படப் பாடல் படமாக்கப்பட்ட இந்த இடத்தின் அருகேதான் நான் தங்கியுள்ள 21- அடுக்கு குடியிருப்பில் தற்போது எனது இருப்பிடம் உள்ளது , நான் தினமும் காலையில் உடர்ப்பயிற்சி செய்யும் இடம் இது (சிங்கப்பூரின் - சீன தோட்டம் மற்றும் அதன் அருகே அமைந்த ஜப்பான் தோட்டம்-(இங்கு 5 வித வண்ணத்தாமரை மற்றும் "இக்கிபானா"-உலகிலேயே அதிசய குட்டி மரங்களையும் இங்கு காணலாம் ) அருமையான இடத்தில் இருக்கிறாய் என்று எனது நண்பர்கள் கூறினாலும் எப்படாப்பா இந்த ப்ராஜெக்ட் வேலை முடியும் எப்ப நம்ம ஊர் போகப்போறோம் என்கிற ஏக்கம் உள்ளூர இருக்கும் "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா ?????????? http://youtu.be/5GA2rHlWYxE
    இந்த படம் திரையில் சிவக்குமார் முருகன் வேடத்தில் தோன்றியபோது எனக்கு முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பாட்டி ஒருவர் அவரது கன்னத்தில் போட்டுக்கொண்டு "முருகனே என் அப்பனே ' என்றார்... அப்போது அவர் அருகில் இருந்த ஒருவர், பாட்டி அது முருகன் இல்லை சிவகுமார் என்றார் அதற்க்கு அந்த பாட்டி "சிவா குமாரன்தான் முருகன்" என்று ஒரு போடு போட்டார். எனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை... சிலநேரங்களின் நான் நேரடியாக திரையை பார்ப்பதைவிட அதை பார்க்கும் முகங்களை பார்பதுண்டு... ஆஹா எத்தனை விதமான ரசனைகள் முகத்திற்கு முகம் வேறுபாடும்அந்த ரசனை ...நீங்களும் அதை நேரில் பார்த்தால்தான் உங்களுக்கு புரியும். 

    # Song-Kannan Oru Kai Kuzhanthai :- Movie:-Bhadrakali ,music composed by Maestro Ilaiyaraja,:- Sivakumar & Rani chandrakala இந்த "பத்ரகாளி" திரைப்படம் முடிந்த கையேடு படத்தின் கதாநாயகி ராணி சந்திரகலா மும்பை அருகே நடந்த ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார் ஆனாலும் இந்த படப் பாட்டில் அவர் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார், இந்த படம் சிவகுமாருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது, (115 நாட்கள் அரங்கு நிறைந்து ஓடிய படம் ) இந்த படத்தின் அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள். எல்லா பாடலும் எனக்கு பிடிக்கும் அதிலும் முக்கியமாக இந்த பாடல் (உன் அருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது- உன்மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ ) Song-Kannan Oru Kai Kuzhanthai :- Movie:-Bhadrakali ,music composed by Maestro Ilaiyaraja,:- Sivakumar & Rani chandrakala http://youtu.be/HrPSdzcsrsE
    மேலும் தவசி மற்றும் அருணாசலம் போன்ற படங்களில் நடித்த காலம்சென்ற(விமான விபத்தில் பலியானார்) நடிகை "சௌந்தர்யா" அவர்களின் பிறந்த தினமும் இன்று ஜூலை 17. அவரின் நினைவாக இந்த பாடல் " மாட்லாடு மாட்லாடு மல்லிகே என்று ஆரம்பிக்கும்... உறவினர்கள் சேர்ந்து பாடும்படி படமாக்கப்பட்ட கொண்டாட்டமான பாடல் இது http://youtu.be/X0bznnzTdno... விபத்தில் பலியானார் என்று குறிப்பிட்டிருப்பது மிகப் பொருத்தமான வார்த்தை ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற பொது நடந்த விமான விபத்து அது, இப்படி ஒரு சிறந்த நடிகை விமான விபத்தில் பலியானார் என்பது இவரை சார்தவருக்கு மட்டுமில்லை திரைத்துறைக்கும் இழப்புதான்.
    #"ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே Raathaiyin Nenjame " Movie:Kanimuthu papa, Music:TV Raju...Singer:P Susheela:-இந்த படம் 1972 இல் வெளிவந்தது, ராஜு அவர்கள்தான் இந்த பாடலை ஒரு ஹிந்தி படத்திலிருந்து "ஷர்மிலி (1971)" காப்பி அடித்தார் ."இந்த பாட்டு கணவன் மனைவிக்கு நடுவில் உள்ள புனிதமான உறவை பற்றிய பாடல் என்னக்கு மிகவும் பிடிக்கும், " ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே, ஆனந்த நினைவுகள் அன்று வந்த உறவிலே , வசந்த காலம் நேரில் வந்து வாழ்த்து கூறும் எங்களை .(ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே)..வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்...கோவிலை போலவே குடும்பத்தை போற்றுவேன் ..மலையிட்ட மன்னனோடு மனம் நிறைந்து வாழுவேன். ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே."

    தமிழ் திரைப்பட சரித்திரத்தில் முதன் முதலில் வில்லன் நடிகருக்கேன்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்ததென்றால் அது வில்லன் நடிகர் ஜெமினி பிக்சர்ஸ் -சந்திரலேகா - "ரஞ்சன்" அவர்களுக்குத்தான்..... "அவா ஊதினா இவா வருவா" என்கிற பிரபலமான வசனம் இன்றும் பேசப்படும் சிறந்த வில்லன் வசனமாகும். முதன் முதலில் தமிழில் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்ட தமிழ் படமும் இசை நடனமும் இதுவே. சந்திரலேகா"வில், எம்.கே.ராதா, ரஞ்சன் அனல் பறக்கும் கத்திச்சண்டை மற்றும் சந்திரலேகா திரைப்படம் ஒரே சமயம் 120 ஊர்களில் திரையிடப்பட்டது. 18,364 அடி நீளமுள்ள இந்தப்படம்( 3.5 மணி நேரத்திற்கும் மேல் அமர்ந்தது பார்க்கவேண்டிய பெரிய படம் ) மிகவும் விறுவிறுப்பாக ஓடிய படம். வில்லனுக்காகவே ஓடிய படங்களின் பெருமையில் அதன்பிறகு வந்த எம் ஆர் ராதா மற்றும் நம்பியார் அவர்களும் மேலும் அந்த வரிசையில் தற்போதைய நடிகர் "தகடு தகடு"சத்யராஜ் அவர்களுக்கும் உண்டு. http://youtu.be/jW-J8qU4cMA

    # கல்லையும் கரைக்கும் சங்கீதம்....பாடல்-" சிவசங்கரி.... சிவானந்தலகரி, சிவசங்கரி ...சந்த்ரகலாவதி ஈஸ்வரி" கண்டசாலாவின் இந்துஸ்தானிய சங்கீத பாடல் படம்;-(JAGADHALAP PRATHABAN) ஜகதலப் பிரதாபன் (இதன் தமிழ் பதிவு சீர்காழி பாடியதும் உண்டு. கண்டசாலாவின் குரல் இனிமையோடு வர...சீர்காழி உற்சாகம் குறையாத கணீர் குரலோடு. ஒரே பாடல் .. ஆனல் இருவித ரசனை.) .http://youtu.be/xq0l5yT818U இது பாடல் இல்லை சிறு இசைக்கச்சேரி கருணா அமிர்தமுளு புரியகு நிலுமா, மனசுக்கு சுகம்கா மகிமை சூப்பகா ...Please tune in to A9 Radio and listen this song now.. in broth version / voice of Seergazhi Govindarajan & Ghantasala....

    ♥கொன்றால் பாவம் திண்றால் தீரும்♥

    உங்களுக்கு இதைபற்றி...இதன் பொருள் என்ன என தெர்யும? தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் சொல்லுங்கள்.
    #
    என்னக்கு தெரிந்தது :- இந்த பழமொழி ஒரு கதையால் வந்தது. ஒருவர் பூனை ஒன்றை அறியாமல் கொன்றுவிட அதன் பாவத்தை போக்க அந்தனரிடம் சென்றான். அவரோ கொன்ற பாவம் தீர தங்கத்தால் ஒரு பூனை செய்து தானம் செய்யவேண்டும், அது முடியாது என்றால் வெள்ளியில் அல்லது சுவையான வெல்லத்தில் பூ...னை செய்து தானம் செய்யவேண்டும் என கூற...அவ்வாறே சுவையான வெல்லத்தில் பூனை செய்து தானம் செய்துவிட்டு உடனே அந்த பூனை வெல்லத்தை புடுங்கி தின்றுவிட்டார். அதாவது பூனை கொன்ற பாவம் அந்தணருக்கே, வெல்லம் தின்ற பவம் எனக்கு என கூறியதால் ... "கொன்றதால் பாவம் தின்றதால் போச்சு"


    # "யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
    இடையில் வந்த உரிமை என்றாய்...
    அதற்காக நான் வழக்காடுவேன்
    ...யாரும் உன்னை திருடி செல்ல
    பார்த்திருக்கும் தோழன் அல்ல
    உனக்காக நான் காவல் நிற்பேன்....
    எனது மனமும் எனது னினைவும்
    உனது வாசமே...

    நண்பனே எனது உயிர் நண்பனே

    நீண்ட நாள் உறவிது
    இன்று போல் என்றுமே தொடர்வது..

    எதிரியாக இருந்தாலும் நண்பனாக கருதுவது சிறந்த மனித பண்பு - ஒரு கடும் விஷம் உடைய கருந்தேள் தண்ணீரில் விழுந்துவிட்டது. அதைக்கண்ட குருநாதர், அதை தண்ணீரிலிருந்து காப்பாற்றியபோது "தேள் " அவரை கொட்டியது, இதைப்பார்த்த சிஷியன் குருவே தேள் கொட்டுகிறதே அதை ஏன் காப்பாற்றினீர்கள் என்றான், அதற்க்கு குரு சொன்னார் "தேளின் இயல்பு கொட்டுவது ..மனிதனின் இயல்பு ஆபத்தில் உதவுவது என்றார் மேலும் அவர் "எதிரியே ஆனாலும் நண்பனாய் பாவிப்பது சிறந்த மனிதனின் பண்பு என்றார்" http://youtu.be/TqB4aLfvF_4

    FREE JOBS EARN FROM HOME